Tuesday 28 January 2020

*மாபெரும் மனித சங்கிலி போராட்டம்*..

*மாபெரும் மனித சங்கிலி போராட்டம்*..


கூத்தாநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களுக்கு ஒர் அன்பு வேண்டுகோள்...

நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.

எதிர்வரும் 30.01.2020 *வியாழன் மாலை 4.00 மணி முதல் 5.30 மணி வரை*
பாசிச மத்திய அரசு கொண்டு வந்துள்ள CAA, NRC, NPR. சட்டங்களை எதிர்த்து மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக *மாநிலம் தழுவிய மனித சங்கிலி போராட்டம்* நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக கூத்தாநல்லூரில் அனைத்து ஜமாத்தார்கள், இயக்கங்கள், அமைப்புகள், கட்சிகள், ஜமாத்துல் உலமா சபை, சகோதர சமுதாய அமைப்புகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளும் மனித சங்கிலி போராட்டம்...

கூத்தாநல்லூர் ரேடியோ பார்க் தபால் நிலையத்தி விருந்து துவங்கி பெரிய கடைத்தெரு, மேலக்கடைத்தெரு, ARரோடு , தாலுக்கா அலுவலகம், லெட்சுமாங்குடி நஸ்ரின் சர்வீஸ் ஸ்டேசன், போலீஸ் ஸ்டேசன் திருவாரூர் மெயின் ரோடு புது நகராட்சி வழியாக ராவுத்தர் கல்லூரி வரை தொடராக மனித சங்கிலி அமைத்திட முடிவு செய்யப்பட்டுள்ளதால் அனைவரும் ஒன்றிணைந்து கைகோர்த்து கலந்து கொண்டு நமது எதிர்ப்பினை வலிமையாக பதிவு செய்திட அன்போடு அழைக்கின்றோம்.

*குறிப்பு* :

அந்தந்த பகுதியில் உள்ளவர்கள் மேல் குறிப்பிட்டுள்ள பகுதிகளில் இணைந்து கொள்ள அழைக்கிறோம்.

அழைப்பது.....

மக்கள் ஒற்றுமை மேடை &
ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு .
திருவாரூர் மாவட்டம்.
ஒருங்கிணைந்த கூத்தாநல்லூர் ஜமாத் .

No comments:

Post a Comment