Wednesday 29 January 2020

எச். ராஜா எந்த ஆதாரம் கொண்டு இப்படி எதற்கெடுத்தாலும் முஸ்லிம்கள் மீது பழி போடுகிறார்? இவர் என்ன சட்டத்துக்கு உட்பட்டவரா? அல்லது அப்பாற்பட்டவரா?

ஒருவர் ஏதோ காரணத்திற்காக கொல்லப்படுகிறார். உடனே அவரைக் கொன்றது இஸ்லாமியர்கள் என்று எச். ராஜா அறிக்கை வெளியிடுகிறார். அடுத்த சில மணித்துளிகளில் கொன்றவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல என்பதை காவல்துறை விளக்குகிறது.
இப்படியான சம்பவங்கள் பல முறை நடந்துள்ளன. எச். ராஜா எந்த ஆதாரம் கொண்டு இப்படி எதற்கெடுத்தாலும் முஸ்லிம்கள் மீது பழி போடுகிறார்?
இவர் என்ன சட்டத்துக்கு உட்பட்டவரா? அல்லது அப்பாற்பட்டவரா?
இவர் என்ன சொன்னாலும் சட்டம் கண்டு கொள்ளாதா?
ஒரு சமூகத்தை தொடர்ந்து பழி சுமத்தி எப்படியாவது வம்புக்கிழுத்து கலவரத்தை கட்டவிழ்த்து விட வேண்டுமென்று முயற்சிக்கும் இந்த கொடியவரை சட்டம் என்ன செய்யப் போகிறது?
ஊரில் உள்ள திருடன், ரவுடி, அயோக்கியன், காமுகன் என்று எல்லோரையும் கட்சியில் இணைத்துக் கொண்டு தினமும் சந்தி சிரிப்பது இவர் கட்சிதானே?
எல்லாம் தெரிந்தும் முஸ்லிம்கள் மீது பழி போடும் இவர் சட்டத்தால் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அதற்கு முஸ்லிம் சமூகம் உடனே அவர் மீது வழக்கு தொடுக்க வேண்டும்.
#பகிர்வு

No comments:

Post a Comment