Wednesday 22 January 2020

பெரியாரல் பயனடைந்த 90 சதவிகித தலைமுறைகளில் நீங்களும் நானும் ஒருவராகத்தான் இருப்போம்..

*தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பை தவிர்த்தோ ஆதரித்தோ எதிர்த்தோ* எப்படி வேண்டுமானாலும் பாருங்கள் அது அவரவர்கள் உரிமை...ஆனால்

பெரியாரல் பயனடைந்த
90 சதவிகித தலைமுறைகளில் நீங்களும் நானும் ஒருவராகத்தான் இருப்போம்..

கடவுள் மறுப்பு கொள்கை மட்டுமல்லாமல் பல்வேறு சமூக நலனுக்காக வாழ்நாள் முழுவதும்
போராடிய பெரியாரையும்..அதன் வழிவந்த திமுக அதிமுக வினரையும் தான் கடவுள் நம்பிக்கைவுள்ள எல்லா மற்ற எல்லா மதத்தினரும் / மக்களும் மதிப்பதற்கும்...

கடந்த 50 ஆண்டுகால தமிழக தேர்தலில்களில் திராவிட கொள்கை கொண்ட திமுக அதிமுகவினர்களுக்கே 80 % தமிழக மக்கள் மாறி மாறி வாக்களிப்பதற்கு காரணம்....

பெரியார் சிந்தனைகளும் போராட்டங்களும் அப்படிபட்டது...

* மூடநம்பிக்கை எதிர்த்து
* சாதி வேறுபாடுகளை எதிர்த்து..
* ஆலய #மறுப்பை எதிர்த்து...
* குலக்கல்வியை எதிர்த்து..
* குலத்தொழிலை எதிர்த்து...
* தீண்டாமையை எதிர்த்து..

* பெண் கல்வி மறுப்பை எதிர்த்து...
* குழந்தை திருமணம் எதிர்த்து...
* விதவைகள் * மறுமணம் ஆதரித்து...
* கலப்பு திருமணத்தினை ஆதரித்து...
* பிறப்பால் ஏற்றத்தாழ்வை கண்டித்து...
* இந்தி திணிப்பை எதிர்த்து...

* அடக்குமுறைகளை எதிர்த்து...
* ஆதிக்க சக்திகளை எதிர்த்து...
* பெண்கள் சொத்துரிமைக்காக
* தமிழ் மொழி எழுச்சிககாக
* தாழ்த்தப்பட்ட மக்களுக்காக....
* அரசியல் முரண்பாடுகளை எதிர்த்து..

பெரியார் தன் கடைசி மூச்சு வரை அயராது ஓயாது போராடினார்...
மக்களுக்கு தங்களது உரிமைகளை பெற்று தர போராடி வென்றவர்
தந்தை பெரியார் அவர்கள்...

இன்று தந்தை பெரியாரை யார் அவமதித்தாலும்...அவர்களை தமிழக மககள் புறம் தள்ளுவார்கள் என்பதினை பெரியாரை எதிர்ப்பதாக நினைத்து கொண்டு தமிழகத்தில் யார் அரசியல் செய்ய நினைத்தாலும் அதிகாரம் செய்ய நினைத்தாலும் அவர்கள் தோல்வியைத்தான் தழுவுவார்கள்....

ஆயிரம் ஆண்டு அடிமைத்தனத்தில் இருந்து மக்களை மீட்டெடுத்து சுயமரியாதையாக வாழ வழி செய்தவர் தந்தை பெரியார் அவர்கள்..

ஆகவே பெரியாரை எதிர்ப்பவர்களை விட பெரியாரால் பயனடைந்த இந்த தமிழ் சமூகத்தினை சேர்ந்தவர்கள் 90 சதவிகிதம் இருக்கின்றார்கள்...

குறிப்பாக தமிழக பெண்கள் பெரியாரின் வரலாறை படித்து தங்களின் அடுத்த தலைமுறைக்கும் சொல்லி தந்து அவர்களையும் விழிப்புணர்வு கொண்ட தலைமுறைகளாக வளர்க்க வேண்டும்.

அதுவே குலத்தொழிலை சட்டமாக்கி தமிழகத்தினை கொத்தடிமைகளாக நினைத்தவர்களை வீழ்த்தி ...இன்று நம்மை அனைத்து சமூகதளத்திலும் தமிழ் மக்களை உயர்த்திய தந்தை பெரியாருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாகும்...

Jp..Madurai..
9789120134


Sent from my iPhone

No comments:

Post a Comment