Monday 20 January 2020

முஸ்லிம் சமூகத்தில் ஆர்எஸ்எஸ் ஊடுருவியுள்ளது,

கவனம் தேவை....!

முஸ்லிம் சமூகத்தில் ஆர்எஸ்எஸ் ஊடுருவியுள்ளது, ஆர்எஸ்எஸ் க்காக வேலை பார்க்கின்ற ஆட்கள் முஸ்லிம் அமைப்புகளின் நிரம்பி இருக்கிறார்கள் என்ற நடிகர் பிரகாஷ்ராஜின் கருத்தையும்......

மிரட்டி,அச்சுறுத்தி, அடித்து துன்புறுத்தி வேதனை கொடுமைகள் நிகழ்த்தி, சிலரை ஆசைவார்த்தை காண்பித்து உளவுத்துறைக்காக முஸ்லிம் இளைஞர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள் என்ற சேலம் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் அவர்களுடைய கருத்தையும் அவ்வளவு எளிதாக நம்மால் கடந்து போக முடியவில்லை...

தேசத்தில் நாசவேலை செய்வதற்காக முஸ்லிம்களை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்த டிஎஸ்பி தேவேந்திர சிங் டெல்லியில் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் அதனை தொடர்ந்து அவரது கடந்த கால நடவடிக்கைகளை மூடி மறைக்கப்படும் செயல்பாடுகளை வைத்துத்தான் பியூஸ் மனுஷ் மேலும் சொல்கிறார் காஷ்மீர் அப்சல்குரு தொடங்கி கன்னியாகுமரி வரைக்கும் உளவுத்துறையின் கை வரிசை நீளுகிறது என சதித் திட்டங்களை போட்டு உடைக்கிறார்..

இந்தக் கருத்துக்கள் எல்லாம் போகிறபோக்கில் காற்றோடு காற்றாக கலந்து போகின்ற வார்த்தைகளோ விஷயங்களோ அல்ல. நடிகர் பிரகாஷ்ராஜூம் சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷூம் முஸ்லிம் சமுதாயத்தின் செவிப்பறையை கிழித்தெறியும் விதமாக அபாய சங்கை சத்தமாகவே ஊதியிருக்கிறார்கள்..

நம்முடைய விரலை எடுத்து நம்முடைய கண்ணை குத்தும் பாசிசத்தின் பலியாடுகளாக முஸ்லிம் சமூகத்தின் இளைஞர்களை மாற்றி வருகின்ற கவலையான நிகழ்வுகளை நினைக்கும்போது நெஞ்சம் எல்லாம் வெடித்து விம்முகிறது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள். விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில இளைஞர்களையும் கூட கோடாரி காம்புகள் என்று சொல்லவும் முடியாது தூற்றவும் முடியாது . இவர்கள் உளவுத்துறையின் பலியாடுகள்..

என்ன செய்வது..?
யாரை குற்றம் சொல்ல..?
முஸ்லிம்கள் தேசத்தின் பலியாடுகள்...

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் ஒருபோதும் முஸ்லிம் சமுதாயத்தின் விடயத்தில் மாறப்போவதில்லை.
‌இந்திய அளவில் காங்கிரஸ் அரசு அமைந்தாலும் பிஜேபி அரசு அமைந்திருந்தாலும் எந்த அரசு அமைந்தாலும் அந்த அரசை இயக்குகின்ற உந்து சக்திகளாக அச்சாணி களாக இருப்பவைகள் உளவு அமைப்புகள். அந்த உறவு அமைப்புகள் 90 சதவீதம் முஸ்லிம் வெறுப்பால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் துரதிஷ்டமான உண்மை. முஸ்லிம் வெறுப்பு மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான சிந்தனையாளர்களால் தான் எம்முடைய தேசத்தின் வழிகாட்டும் அதிகார மையம் அமைந்துள்ளதை நினைக்கும்போது உள்ளபடியே வேதனையளிக்கிறது.

இவைகளெல்லாம் அவர்களுடைய நீண்டகால செயல்திட்டம். நாடு விடுதலை அடைந்து மதச்சார்பற்ற ஜனநாயக அரசு பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களுடைய தலைமையில் அமைந்த நேரத்தில் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் தொடங்கிவைத்த தொடக்கப்புள்ளி தான் இன்று வரை நீண்டு கொண்டே வருகிறது..ஆட்சி காங்கிரசுடன் இருக்கலாம் ஆனால் அட்டூழியம் செய்வது உளவு அமைப்புகள் தானே...

முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் விழிப்புணர்வோடு பயணிக்க வேண்டிய காலகட்டம் இது.!
எந்த சதிக்கும் பலியாகாமல் அமைப்பாய் திரண்டு தேசத்தின் இறையாண்மையை காக்கும் ஜனநாயக போராளிகளாக களமாடுவதில் மட்டுமே நம்முடைய கவனத்தை செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம்..
இஸ்லாமிய இளைஞர்களும் முஸ்லிம் அமைப்புகளின் தலைமையும் அபாயத்தை உணர்ந்து. சமூகத்திற்கு சரியான வழிகாட்டுதலையும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வையும் நெறிப்படுத்த வேண்டிய கட்டாய கடமையும் உரிமையும் அமைப்புகளின் தலைமைக்கு உண்டு.

சமுதாயத்தை நெறிப்படுத்த வேண்டிய கடமை முஸ்லிம் அமைப்புகளின் தலைமைக்கு உண்டு என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்..

பார்ப்பன பாசிசத்தின் எந்தச் சூழ்ச்சிக்கும் பலியாகாமல் தேசம்காப்போம்.!
அமைப்பாய்த் திரள்வோம்..!!

- புளியங்குடி சே செய்யது அலி

No comments:

Post a Comment