Monday 24 June 2024

மதுக்கூரில் மதுக்கடை திறக்க மனிதநேய மக்கள் கட்சி எதிர்ப்பு -

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மதுக்கூரில் மதுக்கடை திறக்க மனிதநேய மக்கள் கட்சி எதிர்ப்பு - காவல்நிலையத்தில் புகார் மனு அளிப்பு!

மதுக்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிக்குள் மீண்டும் டாஸ்மாக்.பழயை அம்மா சந்தை, மருத்துவமனை, காவல்நிலையம், குடியிருப்பு பகுதிகள்,100 மீட்டர்க்குள் பள்ளிகூடம் என மக்கள் அதிகம் பயன்படுத்தும் மிக முக்கிய பகுதியாக இருக்க கூடிய இடத்தில் டாஸ்மாக் அமைப்பதற்கான முயற்சியில் சிலர் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதன் தகவலை அறிந்து இன்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் காவல்நிலையம் சென்று, டாஸ்மாக் அமைய எதிர்ப்பு தெரிவித்து புகார் மனு அளிக்கப்பட்டது. 

அப்புகாரில், "மதுக்கூர் பகுதிகுள் மதுபானகடைய அமைய கூடாது, 100 மீட்டர்க்குள் அரசு பள்ளிகூடம் உள்ளது,மருத்துவமனை, காவல்நிலையம் என இதனை எல்லாம் கவனித்தில் கொண்டு, அரசும், காவல்துறையும், டாஸ்மாக் அனுமதிக்க கூடாது என்றும், மேலும் அமைக்கப்பட்டால், திறக்கப்படும் நாள் அன்றே பொது மக்களை திரட்டி "டாஸ்மாக் பூட்டு போடும் போராட்டம்" நடத்தப்படும் என்று அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது, செய்தி மேலிட கவனத்திற்கு செல்ல கூடிய வகையில், பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்று, பேட்டி அளிக்கப்பட்டது

இந்த நிகழ்வில், மமக மாவட்ட தலைவர் ஃபவாஸ், தமுமுக பேரூர் கழக செயலாளர் ஜெகபர் அலி, மமக மாவட்ட துனை செயலாளர் Er.இலியாஸ், தமுமுக மாவட்ட துனை செயலாளர் புரோஸ்கான், பேரூர் கழக பொருளாளர் முகமது சேக் ராவுத்தர், பேரூர் கழக துனை தலைவர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் அணி நிர்வாகிகள், SMI சகோதரர்கள் கழக கட்சி உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தமுமுக மமக
தகவல் தொழில்நுட்ப அணி
மதுக்கூர் பேரூர் கழகம்
தஞ்சை தெற்கு.

No comments:

Post a Comment