Monday 24 June 2024

வலிமையான சமூகம் என்பது எண்ணிக்கையை கொண்டு தீர்மானிக்கப்படுவதில்லை.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


உங்கள் கனிவான உள்ளத்திற்கு 
அன்பான சலாம்.

வலிமையான சமூகம் என்பது எண்ணிக்கையை கொண்டு தீர்மானிக்கப்படுவதில்லை. 
அச்சமுகம் வெளிப்படுத்தும் அறிவார்ந்த அல்லது திறன் சார்ந்த செயல்பாட்டின் வெளிப்படுதலை கொண்டே அவை தீர்மானிக்கப்படுகின்றன. 
6 நூற்றாண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்று பின்புலத்தில் 
ஆட்சி அதிகாரமிக்க சமூகமாக இருந்த முஸ்லிம் சமூகம் 
விடுதலைப் பெற்ற அரை நூற்றாண்டிற்குள் அத்தனை பெரிய வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. 
கிட்டத்தட்ட எல்லா துறைகளில் இருந்தும் முழுமையாக வெளியேற்றப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். 
இதனால் அதிகார வன்முறை, 
அரசியல் வன்முறை, 
என்று பல்வேறு வன்முறைகளுக்கு இந்தச் சமூகம் இறையாகி இருக்கிறது. 
இவற்றில் எல்லாம் பேரிழப்பையும் பெருத்த அவமானத்தையும் தேடி தந்தது 
ஊடக வன்முறைதான். 
சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் மீது 
இந்திய அளவில் நிகழ்த்தப்பட்ட ஊடக வன்முறையால் 
அளவிட முடியாத இழப்பையும் அவமானத்தையும் இந்த சமூகம் சந்தித்திருக்கிறது. 
இத்தகைய பெருத்த சமூக அவமதிப்புக்கு காரணம் 
ஊடகத்துறையில் 
கடந்த அறை நூற்றாண்டில் முஸ்லிம் சமூகம் எந்தவித பங்களிப்பையும் செய்யாமல் விட்டு வைத்ததுதான் முதன்மை காரணம். 
அதிகார, அரசியல், கார்ப்பரேட் சட்டைகளுக்குள் மட்டுமே இருந்து இயங்கும் நிலையில் இருக்கும் ஊடகத்தால் இத்தனை பெரிய வன்முறையை ஒரு சமூகத்தின் மீது நிகழ்த்த முடியும் என்றால்! 
வளர்ந்து வரும் உலகின் வியக்கத்தக்க அதிசயமாக உருவெடுத்துக் கொண்டிருக்கும் 
டிஜிட்டல் ஊடகம் சாமானியன் ஒவ்வொருவருக்கும் கைக்குள் வந்து அமர்ந்து கொண்டு 
அது தன் விளையாட்டை துவக்கினால் 
இன்னும் பெரும் வீழ்ச்சியையும் இழிவையும் இந்த சமூகம் சந்திக்க நேரிடும் என்பதை உணர்ந்ததன் அடிப்படையில் 
அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய வலிமையான ஊடகமாக திகழப்போகும் 
டிஜிட்டல் ஊடக துறையில் இஸ்லாமியர்களின் பங்களிப்பை, 
தமிழர்களின் பங்களிப்பை வலிமையாக உருவாக்கும் கண்ணோட்டத்தோடு 
கடந்த 2022 ஆம் ஆண்டு அபுதாபி அய்மான் சங்கம் 
Digital journalism என்ற தனித்த பாடத்திட்டத்துடன் கூடிய வகுப்பை தொடங்கியது. 
கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட டிஜிட்டல் ஊடக துறையில் 
எழுதவும், இயங்கவும் ஆற்றலுடைய வல்லுனர்களை உருவாக்கி விட்டிருக்கிறது. 
இப்போது இதோ மூன்றாவது ஆண்டின் தொடக்க விழா 
9 ஜூன் 2024 ஞாயிறு இரவு 8  மணிக்கு இணையவழியில் நடைபெற இருக்கிறது. 
அபுதாபி அய்மான் சங்க நிர்வாகிகள், 
ஊடகத் துறை சார்ந்த வல்லுநர்கள், 
பேராசிரியர்கள் 
பயிற்சி பெற்ற டிஜிட்டல் மீடியா வகுப்பின் பங்கேற்பாளர்கள் என எல்லோரும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் உங்களையும் கலந்து சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம். 
நிகழ்ச்சியில் இணைந்திடும் 
Google meet 
இணைப்பு இத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. 

அபுதாபி அய்மான் சங்கம் நடத்தும் 
Digital journalism 
இரண்டாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் 
மூன்றாம் ஆண்டு தொடக்க விழா.
Sunday, 9 Jun  •  8:00 – 9:30 pm
Google Meet joining info
Video call link: https://meet.google.com/eqj-ugcp-dvu

No comments:

Post a Comment