Wednesday 19 February 2014

மாதா சிலை கண் திறந்தது உண்மையா?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மாதா சிலை கண் திறந்தது உண்மையா?
- சிந்திப்பார்களா மக்கள்?

#சென்னை பெரம்பூர் லூர்து மாதா கோவிலில் உள்ள மாதா சிலை திடீரென்று கண் திறந்தது என்று சொல்லி ஒரு செய்தியை பரப்பிவிட்டு வழக்கம்போல கிறித்தவ மதத்திற்கு ஆள் பிடிக்கும் வேலையில் இறங்கியுள்ளனர் அதன் போதகர்கள்.

இப்படி இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி, பொய்யையும், பித்தலாட்டத்தையும் மூலதனமாகக் கொண்டு தங்களது மதத்திற்கு ஆள் பிடிப்பதுதான் இவர்களது வழமை.

அந்த வரிசையில்,
குருடர்கள் பார்க்கிறார்கள்…
செவிடர்கள் கேட்கின்றார்கள்…
ஊமைகள் பேசுகின்றார்கள்…
சப்பானியர்கள் நடக்கின்றார்கள்…..
செத்தப் பிணங்கள் எல்லாம் உயிரோடு எழும்பி நடக்கின்றது….
மாதாவின் சிலையில் இருந்து சப்தம் வந்தது….
#மாதா சிலை கண் சிமிட்டியது….
மாதாவின் வாய் அசைந்தது….
புனித தோமையரின் உடல் முழுவதும் அழுகினாலும் அவரது கை மட்டும் அழுகாமல் அப்படியே உள்ளது….

#இயேசு சிலையிலிருந்து புனித நீர் வழிகின்றது என்று இவர்களது பொய்கள் நீண்டு கொண்டே போகின்றன.

இதற்கும் பகுத்தறிவுக்கும் துளியளவும் சம்பந்தமில்லை என்பதையும், மக்களை மடையர்களாக்கும் இவர்களது பொய், பித்தலாட்டங்களையும் அடுக்கடுக்கான ஆதாரங்களுடனும், அறிவுப்பூர்வமான வாதங்களுடனும் தோலுரித்துக்காட்டுகின்றது இன்றைய தினம் ஒரு தகவல்…

வீடியோ காண:http://thowheedvideo.com/dinam_oru_thagaval_bayan/


Paramakudi Thoufeeq

No comments:

Post a Comment