Sunday 19 April 2020

ஒரு நாடோடி சமூகத்தின் முதல் பெண் ஐ. ஏ. எஸ்

ஒரு நாடோடி சமூகத்தின்
முதல் பெண் ஐ. ஏ. எஸ்..

ஒரு பக்கம் அரச பயங்கரவாதம்
மறு பக்கம் பாலியல் அச்சுறுத்தல்..
இரண்டையும் எதிர்கொண்டு தனது சமூகத்தின் வலிகளுக்கு மருந்து போடும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார் ரஹனா பசீர்..

காஷ்மீர் மாநிலத்தில் தங்களது வசிப்பிடங்களை இழந்து பூஞ்ச் எல்லையில் ஸல்வார் கிராமத்தில் கூடாரங்களில் நாடோடிகளாக வசிக்கும் குஜ்ஜார் பிரிவினரின் நம்பிக்கை நட்சத்திரம் ரஹ்னா பசீர்..

காலங்காலமாக குஜ்ஜார் சமூகம் அனுபவித்து வரும் கொடுமைகளையும், அடிப்படை மருத்துவ வசதிகள் இல்லாமல் முகாம்களில் படும் அவஸ்தைகளை கண்டு வளர்ந்த ரஹ்னா ஒரு மருத்துவர் ஆக வேண்டும் எனும் லட்சியத்துடன் படித்து 2016 ல் குஜ்ஜார் சமூகத்தின் முதல் பெண் மருத்துவர் ஆக தேர்ச்சி பெற்றார்..
தொடர்ந்து தணியாத ஆர்வம் காரணமாக சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் முயற்சியில் ஈடுபட்டு 2017 ல் தவறினாலும், மீண்டும் 2018 ல் எழுதி அகில இந்திய அளவில் 186 வது ராங்க் எடுத்து குஜ்ஜார் சமூகத்தின் முதல் பெண் ஜஏஎஸ் எனும் சாதனை படைத்துள்ளார்..

உடல் வலியை மறக்கடித்த
உள்ள வலிமை...
Colachel Azheem

No comments:

Post a Comment