Sunday 19 April 2020

நேற்று தேசதுரோகி.. இன்று மக்கள் தியாகி..

நேற்று தேசதுரோகி..
இன்று மக்கள் தியாகி..
CAA போராட்டங்களின்போது அரசுக்கு எதிராக நாடகம் போட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கர்நாடக மாநிலம் பிதார் நகரில் உள்ள இஸ்லாமிய பள்ளிக்கூடம் மீது தேசதுரோக வழக்கு பதியப்பட்டது. அதன் ஆசிரியர்,மாணவரின் பெற்றோர் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டு நீண்ட நாட்களுக்குபின் ஜாமீனில் வெளிவந்தனர்.
தற்போது அந்த பள்ளிக்கூடம் உள்ளூர் அரசு நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க கொரோனா தனிமைப்படுத்தல் முகாமாக மாறியுள்ளது. தற்போது 193 பேர் இங்கு தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு 3 வேளை உணவு பள்ளிக்கூடத்தின் சார்பில் வழங்கப்படுகிறது.மேலும் 500 அறைகள் தயார் நிலையில் உள்ளது. தன்னை தாக்கினாலும் மக்களை தாங்குவோம் என்ற இந்த முஸ்லிம் பள்ளிக்கூடத்தின் மனிதாபிமான செயல் மக்களால் வியப்பாக பார்க்கப்படுகிறது...
Lakshmanan SK..

No comments:

Post a Comment