Sunday 24 November 2013

ஒரு தாய் குரங்கின் போராட்டம்...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த உலகில் வாழ்ந்து முடிப்பதற்குள் எத்தனை எத்தனை போராட்டங்கள்??

ஒரு குரங்கு கருவறையை விட்டு வேலையே வந்த உடன் ஒரு நாய் அதனை துக்கி செல்ல முயர்ச்சிக்கும்போது ஒரு தாய் குரங்கின் போராட்டம்...

ஆனால் இங்கு மனிதர்களோ பிறந்த தன குழந்தை பெண்ணாக இருந்தால் தூக்கி யரிய தயங்குவதில்லை...

இதுவா மனிதம் கடந்த நேசம்??? விலங்குகள் எவ்வளவோ மேல்..
 


விமானி(PILOT) தொழுவதற்காக விரிக்கபட்டிருக்கும் முசல்லா...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

விமானத்தின் கட்டுபாட்டு பகுதியில் விமானி(PILOT) தொழுவதற்காக விரிக்கபட்டிருக்கும் முசல்லா... 

மண்ணில் நடந்தாலும், விண்ணில் பறந்தாலும் இறைவனை தொழுவதற்கு மனம் வந்து விட்டால் அதை நிறை வெற்றும் எண்ணம் மட்டும்தான் நமது உள்ளத்தில் இருக்கும்... 

இறைவனை நினைவு கூர்வதினால் அவர்களுடைய நெஞ்சங்கள் அமைதி அடைகின்றனர்.
.

Saturday 23 November 2013

நீங்கள் வாங்கிய மருந்து உண்மையானதா போலியானதா

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,



நீங்கள் வாங்கிய மருந்து உண்மையானதா போலியானதா என்று தெரிந்து கொள்ளவேண்டுமா?

நீங்கள் வாங்கும் அனைத்து மருந்துக்களுக்கு பின்னால் ஒரு பிரத்தியேக 9 இலக்க எண் இருக்கும் அதை 9901099010 என்ற எண்ணுக்கு மெஸேஜ் செய்யவும்.

10 விநாடிகளில் மருந்தின் batch எண்ணும் மருந்து தயாரித்த நிறுவனத்தின் விவரங்களும் கிடைக்கும், இதன் மூலம் உறுதி செய்துகொள்ளலாம்...

(இதனை மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்கள்)




Sunday 17 November 2013

வேட்டையாடும் காவி ஏவல்துறை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,



முஸ்லிமாக பிறந்த காரணத்தால் பள்ளி செல்லும் பாலகனையும் சோதனை என்ற பெயரில் வேட்டையாடும் காவி ஏவல்துறை

கொலைவெறியுடன் ஆயுதங்களுடன் அலையும் காவி வெறி நாய்களுக்கு காவலனாய் சேவகம் செய்யும் காக்கி கேவலத்துறை

ஒரு பெண் ஆண்களுக்கு இமாமத் செய்ய முடியாது

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

 இது இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஒன்றாகும் .ஒரு பெண் பல பெண்களுக்கு இமாமாக தொழுகை நடத்த முடியும். ஆனால் ஒரு பெண் ஆண்களுக்கு இமாமத் செய்ய முடியாது 

வாழ்க ஜனநாயகம் (?) 28 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட கொலைகாரிக்கு ஜாமீன்.....!!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

வாழ்க ஜனநாயகம் (?) 28 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட கொலைகாரிக்கு ஜாமீன்.....!!

குஜராத் நரோடா பாட்டியா படுகொலை வழக்கில் 28 ஆண்டுகள் தண்டனை பெற்ற குஜராத் முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானிக்கு 3 மாதம் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு குஜராத் அமைச்சரவையில் பெண்கள் மற்றும்
குழந்தைகள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தவர் மாயா கோட்னானி.

இவர் 2002 ஆம் ஆண்டு மோடியின் அரசில் எம்.எல்.ஏவாக
இருந்தார். அப்போது நடந்த இனப்படுகொலையில் நரோடா பாட்டியா படுகொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணையில் 34 பெண்கள் 33 குழந்தைகள் உட்பட மொத்தம் 97 பேர்களின் படுகொலையில் முக்கிய பங்கு வகித்தது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமானதால் 28 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார்.

2002 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலையில் முன்னணியில் நின்று களப்பணியாற்றியதற்கு வெகுமதியாக 2007 அமைச்சரவையில் அவருக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள்
நல்வாழ்வுத்துறை அமைச்சகம் ஒதுக்கப்பட்டது என மோடிக்கு எதிராக
விமர்சனங்கள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது மாயா கோட்னானிக்கு 3 மாதம் மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

நாளை சிறையிலிருந்து மாயா கோட்னானி ஜாமீல் வெளியாகிறார். இவர் ஒரு மருத்துவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சங்கை ரிதுவான் :

பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்து குற்றம் நிரூபிக்கப்பட்ட கொலைகாரிக்கு முறைப்படி மரண தண்டனை விதித்திருக்க வேண்டும்.

அப்படி செய்யாமல் 28 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது.
அப்படியிருந்தும் அந்த கொலைகாரிக்கு ஜாமீன் வழங்கங்கப்பட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் அப்துல் நாசர் மதானி மீது இன்றுவரை எந்த ஒரு குற்றமும் நிரூபிக்கப்படவில்லை.

வெறும் சந்தேக கைதியாக இருக்கும் நிலையில்...

உடல்நிலை மிக மோசமாக உள்ளது. இருந்தும் கூட மருத்துவ சிகிச்சைக்காக கூட ஜாமீனில் விட மனமில்லை..

வாழ்க ஜனநாயகம்.

நன்றி : Ban RSS Save ou nation & முஹம்மது நிஹால்

யார் இந்த சச்சின் : தமிழர்களே சிந்திப்பீர்....!!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

யார் இந்த சச்சின் : தமிழர்களே சிந்திப்பீர்....!!

யார் இந்த சச்சின் தென்டுல்கர் ?

ஏன் இந்த நபருக்கு இவ்வளவு மரியாதை ?

இவர் என்ன இந்தியாவின் முதல் குடிமகனா ?


ஏன் இவருக்கு கவுரவ எம்.பி. பதவி ?

நாட்டின் வளர்ச்சிக்கு ஏதேனும் பாடுபட்டாரா ?

இவரும் நம்மைப்போல் ஒரு சாதாரண இந்தியக் குடிமகன்தான்...பிறகு ஏன் இவருக்கு பாரத ரத்னா விருதிற்கு பரிந்துரை ?

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏதேனும் பங்களிப்பு செய்தாரா ?

கிரிக்கெட் விளையாடினார் என்பதற்கா ?

அப்படி அவர் நம் நாட்டிற்காக செய்தது என்ன?

முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.இவர் கிரிக்கெட் விளையாடி சாதனை புரிந்ததர்க்கும் , நம் நாட்டிற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.

ஏனெனில் , BCCI என்பது இந்திய அரசின் நிறுவனம் இல்லை.அது தனியார் நிறுவனங்களின் உதவியுடன் இயங்கும் ஓர் தனியார் விளையாட்டு அணி மட்டுமே.

ஆக ஒரு தனியார் அணியின் விளையாட்டு வீரர் ஒருவருக்குத்தான் இந்திய அரசு, நாட்டின் உயர்ந்த விருதினை கொடுக்க முயல்கிறது .

நாட்டிற்காக இதுவரை ஒரு ரூபாய் கூட செலவு செய்யாத இவருக்கு , மக்களின் வரிப்பணத்திலிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை அரசு இவருக்கு பரிசுப்பொருளாக கொடுத்துக்கொண்டிருக்கிறது.

இந்திய தேசியக்கொடி பொரித்த தலைக்கவசத்தை அணிந்து விளையாடி சம்பாதித்தது மட்டுமல்லாமல் விளம்பரங்களின் மூலமும் சம்பாதித்து அப்பணத்தையெல்லாம் வெளிநாடுகளில் முதலீடு செய்து கொண்டிருக்கிறார் இவர்.
இதன்மூலம் இந்தியாவிற்கு கிடைக்க வேண்டிய வரிப்பணம் வேறு நாட்டிற்கு போய்ச்சேர்கிறது.

இவர் ஏதோ தன் உயிரை பணையம் வைத்து நாட்டிற்கு உழைத்ததை போல,இவரைத்தான் கிரிக்கெட்டின் கடவுள் (?) என்று விபச்சார ஊடகங்களும், சிந்திக்கும் தன்மையற்ற இவரின் ரசிகர்களும் தலைமேல் தூக்கிவைத்தக்கொண்டு கொண்டாடிருப்பவர்கள் இனியாவது திருந்துவார்களா..?

இந்தியர் என்பதைத்தவிர இவரால் நாட்டிற்கு எள்ளலவும் நன்மையில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.!!


ஆக்கம் - விக்கிரவாண்டி-பக்கம்

Monday 4 November 2013

சிறப்பாக நடைபெற்ற துபாய் மண்டல தேரா கிளையின் இஸ்லாமிய நிகழ்ச்சி.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

1-11-2013 அன்று வெள்ளிக்கிழமை இரவு 8:30, மணியளவில் துபாய் தேரா கிளையின் சார்பாக இஸ்லாமிய சொற்பொழிவு நடைப்பெற்றது சகோதரர் A.S.இப்ராஹீம் அவர்கள் நபி [ஸல்] அவர்களின் எச்சரிக்கை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்,தனது உரையில் இணைவைப்பின் தீங்கைப் பற்றி நபி [ஸல்] அவர்கள் கூறிய எச்சரிக்கைகளை எடுத்துரைத்தார்இந்நிகழ்வில் திரளான சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயன் அடைந்தார்கள்.எல்லாப் புகழும் இறைவனுக்கே!       
  



அன்புடன் 

முஹைதீன் 
 0503762170.


Saturday 2 November 2013

யார் இந்தத் “தல”

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

யார் இந்தத் “தல”

‘நம் பிள்ளைகளுக்குப் பல் முளைக்கும் முன்பே இந்த சினிமா மீசை முளைக்க வைத்து விட்டது.

இந்த அழுக்குத் திரை சலவை செய்யப்படுமா? இல்லையெனில்… மக்களைச் சுருள வைக்கும்

சினிமாவை குடித்து, உண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் வைரமுத்துவின் வைர வரிகள். சினிமா என்ற சாக்கடையில் புரண்டு கொண்டிருக்கும் ஒருவரால் கூட சினிமாவுக்கு நற்சான்றிதழ் கொடுக்க முடியவிலை.

செவ்வாய் கிரகத்துக்கு இடம்பெயர்ந்து சென்றாலும் இந்தத் “தமிழன்” முதலில் அங்கு திரையைத்தான் கட்டுவன்.

‘நிச்சயமாக கண், காது, இதயம் இவைகள், ஒவ்வொன்றும் மறுமையில் விசாரிக்கப்படும்’ (அல் குர்ஆன்: 17:36)

எந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் நுழைந்து, தனது கடின நடிப்பால் முன்னேறி, தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது நடிப்பால் உருவாக்கி, அவர்கள் மனத்தில் ‘தல’ யானவர்தான், அஜீத் குமார்.

தெலுங்குத் திரைப்படத்தில், துணைக் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து, தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட முன்னணி நடிகர்களுள் ஒருவர் என்று முத்திரைப் பதித்த அவர், ‘அல்டிமேட் ஸ்டார்’ என்றும் அழைக்கப்படுகிறார். குழந்தை நட்சத்திரமாக இருந்து, நடிகையாக வளர்ந்தத, பேபி ஷாலினியை மணமுடித்தார்.

பிறப்பு: மே 1, 1971
பிறப்பிடம்: ஹைதராபாத், ஆந்திர பிரதேசம், இந்தியா
பணி: நடிகர், கார் பந்தய வீரர்
நாட்டுரிமை: இந்தியன்

சினிமா உலகைப் பொறுத்த வரையில் ஒரு படம் ஹிட் கொடுத்து விட்டால், சம்பளத்தை உயர்த்திக் கொள்வது திரை நட்சத்திரங்களுக்கு வழக்கமாகிப் போய்விட்டது. அதுமட்டுமின்றி சில நடிகர்கள் சம்பளத்துடன் சில ஏரியாக்களின் விநியோக உரிமையும் வாங்கிக் கொள்கிறார்கள். இதற்கு தமிழ் சினிமாவும் விதிவிலக்கல்ல.

சரி உங்கள் அபிமான திரை நட்சத்திரங்களின் (ஒரு படத்திற்கான) சம்பள விவரங்களை பார்ப்போம்.

அஜித் – 15 கோடி ரூபாய்
விஜய் – 15 கோடி ரூபாய்
சூர்யா – 15 கோடி ரூபாய் + தெலுங்கு உரிமை
விக்ரம் – 10 கோடி ரூபாய்
கார்த்தி – 10 கோடி ரூபாய் + தெலுங்கு உரிமை
தனுஷ் – 5 முதல் 7 கோடி ரூபாய்
சிம்பு – 5 கோடி ரூபாய் + சென்னை விநியோக உரிமை
விஷால் – 3 கோடி ரூபாய்
ஆர்யா – 2 கோடி ரூபாய்
ஜீவா – 1.50 கோடி ரூபாய்

இனி சூப்பர் ஸ்டார், உலகநாயகன் ஆகியோரின் சம்பள விவரங்களை பார்ப்போம். ஆசியாவிலேயே ஜாக்கிசானுக்கு அடுத்ததாக அதிக சம்பளம் வாங்கும் ஒரே நடிகர் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். இவர் ‘எந்திரன்’ படத்தில் நடிப்பதற்கு 24 கோடி ரூபாயும், படத்தின் லாபத்தில் ஒரு பங்கும் சம்பளமாக பேசப்பட்டதாம். உலக நாயகனுக்கு எப்படியும் 20 கோடி ரூபாய் சம்பளமாக இருக்கும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

பாருங்கள் இந்தக் கானொளியில் - பாவம் இந்த இளைஞர்கள்!


https://www.facebook.com/photo.php?v=254300008056221&set=vb.100004286701261&type=2&theater



திருக்குமரி விடுதலைப்போரில் கலந்து கொண்ட முஸ்லிம்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மறைக்கப்பட்ட முஸ்லிம் தியாகம்
============================
கடந்த 1956 நவம்பர் முதல் தேதி குமரி மாவட்டம் கேரளாவிலிருந்து பிரிந்து தாய் தமிழகத்தோடு இணைந்த நாளை குமரி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

திருக்குமரி விடுதலைப்போரில் கலந்து கொண்ட முன்னணி முஸ்லிம்கள் முன்னாள் எம்.பி. கோட்டார் ஏ.ஏ.ரசாக், கல்குளம் தொகுதி முன்னாள் எம்.எல்.எ. டாக்டர். சூரங்குடி நூர்முகமது, கோட்டார் எம்.கே.பாவா, குளச்சல் ஹாஜி.முகமது கான், குளச்சல் பாச்சல் முஹைதீன், குளச்சல் முஹமது இஸ்மாயில், தக்கலை முன்னாள் நகர்மன்ற் தலைவர் ஹமீது, திருவை காந்தி வீடு அஹ்மதுகண் ம்ற்றும் புதுக்கடை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தேங்கை பீர்முஹமது உள்ளிட்டவர்களை நினைவு கூர்வோம்