Monday 1 April 2024

உங்கள் ஓட்டை யாருக்கும் போடுங்கள் அது உங்கள் Cஉங்கள் ஓட்டை யாருக்கும் போடுங்கள் அது உங்கள் உரிமை.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்கள் ஓட்டை யாருக்கும் போடுங்கள் அது உங்கள்

உரிமை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், இந்த ஆட்சி மீண்டும் வந்தால் நம்மை காப்பாற்ற மேலும் ஐந்து வருடம் காத்திருக்க வேண்டும். அந்த ஐந்தாம் வருட முடிவில் ஒரு வேளை நமக்கான ஓட்டு உரிமையை நாம் இழந்திருப்பதில் ஆச்சர்யம் இல்லை.

அரசியல் சாணக்கியர்கள், வரலாற்று ஆசிரியர்கள், தொழிலதிபர்கள், மூத்த பத்திரிக்கையாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் அத்துனை பேர் அறிவு கூற்றின்படி சொல்வதை நாம் கேற்காமல் உள்ளூர் கோடாங்கிகளின் பேச்சை கேட்டு உரிமை இழந்து உணர்வை இழக்க வேண்டாம். அது உங்கள் உரிமை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், இந்த ஆட்சி மீண்டும் வந்தால் நம்மை காப்பாற்ற மேலும் ஐந்து வருடம் காத்திருக்க வேண்டும். அந்த ஐந்தாம் வருட முடிவில் ஒரு வேளை நமக்கான ஓட்டு உரிமையை நாம் இழந்திருப்பதில் ஆச்சர்யம் இல்லை.

அரசியல் சாணக்கியர்கள், வரலாற்று ஆசிரியர்கள், தொழிலதிபர்கள், மூத்த பத்திரிக்கையாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் அத்துனை பேர் அறிவு கூற்றின்படி சொல்வதை நாம் கேற்காமல் உள்ளூர் கோடாங்கிகளின் பேச்சை கேட்டு உரிமை இழந்து உணர்வை இழக்க வேண்டாம்.

#இறந்து_கிடந்த_உடல்_மீட்பு...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

#இறந்து_கிடந்த_உடல்_மீட்பு...

இராமநாதபுரம் மாவட்டம் காரேந்தன் ஊரைச் சேர்ந்த #பாண்டி வயது 45 என்பவர்  இடையார் வலசை NH சாலையில்  மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

தகவல் அறிந்து
இரவு 11.30 மணிக்கு காவல்துறை உதவியிடன் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு
#தமுமுக_ஆம்புலன்ஸ் மூலம் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  இறந்த உடலைக் கொண்டு  சேர்க்கப்பட்டது.

தகவல்...
தமுமுக மருத்துவ சேவை அணி,

இராமநாதபுரம் மத்திய மாவட்டம்.

Sunday 31 March 2024

நபி (ஸல்) அவர்கள் பாராட்டிய நபித்தோழர்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நபி (ஸல்) அவர்கள் பாராட்டிய  நபித்தோழர்கள்

                                  (1)

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறுதி தூதராக அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். அவர்களை இறுதி தூதராக தேர்ந்தெடுத்ததற்கு முன்னரே அவர்களின் குணம், பழக்க வழக்கங்கள் அனைத்தும் மற்றவர்கள் பாராட்டி கூறும் அளவிற்கு தான் அவர்கள் நடந்து கொண்டார்கள்.

நபிகள் நாயகத்தின் மனைவி கதீஜாவே நபிகள் நாயகம் அவர்களுக்கு வியாபாரத்தில் இருந்த விசுவாசம், நியாயமான கட்டமைப்பு, வாக்குறுதியில் நேர்மை என அனைத்தும் பார்த்து தான் மணமுடித்து கொண்டார்கள். அதேப் போன்று நபிகள் நாயகம் வாழ்ந்த காலத்திலே வாழ்ந்த பல நபித்தோழர்களை நபி (ஸல்) அவர்கள் பாராட்டி இருக்கிறார்கள். அந்த இனிமையான தருணங்களை பார்போம்..

உமர் (ரலி) கண்டு சைத்தான் விரண்டோடுதல்

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், தனது மனைவி மற்றும் மனைவியின் சகத் தோழிகள் சகஜமாக பேசி சிரித்துக் கொண்டிருக்க உமர் (ரலி) அவர்கள் முகமன் கூறி உள்ளே வர அனைத்து பெண்களும் அலறியபடி ஓடிவிட்டனர். உடனே உமர் (ரலி) அவர்கள் என்னவென்று கேட்க உங்களைப் பார்த்துதான் அனைவரும் பயந்தபடி ஓடிவிட்டனர். என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக, நீர் ஒரு தெருவில் நடந்து வந்தால் சைத்தான் அடுத்த தெருவில் ஓடி விடுவான் என்று தனக்கு கொடுக்காத மரியாதையை உமர் (ரலி) அவர்களுக்கு கொடுத்தார்கள்.

(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதரிடம் (அவர்களின் மனைவிமார்களான) குறைஷிப் பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம் (ஜீவனாம்சத் தொகையை) அதிகமாகத் தரும்படி தம் குரல்களை உயர்த்தி கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார்கள். உமர் (ரலி) அனுமதி கேட்டபோது அப்பெண்கள் அவரச அவசரமாகத் தங்கள் பர்தாக்களை அணிந்தபடி எழுந்தனர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தபடியே உமர் (ரலி) அவர்களுக்கு (உள்ளே வர) அனுமதி கொடுத்தார்கள்.

உமர் (ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! தங்களை ஆயுள் முழுதும் அல்லாஹ் சிரித்தபடி (மகிழ்ச்சியாக) இருக்கச் செய்வானாக’ என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘என்னிடமிருந்த இந்தப் பெண்களைக் கண்டு நான் வியப்படைகிறேன்.

(என்னிடம் சகஜமாக அமர்ந்திருந்தவர்கள்) உங்கள் குரலைக் கேட்டவுடன் அவரச அவசரமாகப் பர்தா அணிந்தார்களே’ என்றார்கள். உமர் (ரலி), ‘எனக்கு அஞ்சுவதை விட அதிகமாக அஞ்சத் தாங்கள் தாம் தகுதியுடையவர்கள் இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறிவிட்டு, (அப்பெண்களை நோக்கி) ‘தமக்குத் தாமே பகைவர்களாகிவிட்ட பெண்களே! அல்லாஹ்வின் தூதருக்கு அஞ்சாமல் எனக்கா நீங்கள் அஞ்சுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள்.

அதற்கு அந்தப் பெண்கள், ‘ஆம், அல்லாஹ்வின் தூதருடன் ஒப்பிடும்போது நீங்கள் கடின சித்தமுடையவராகவும், அதிகக் கடுமை காட்டக் கூடியவராகவும் இருக்கிறீர்கள்’ என்று பதிலளித்தார்கள். (அப்போது) இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (உமரே!) நீங்கள் ஒரு பாதையில் சென்று கொண்டிருக்கையில் உங்களை ஷைத்தான் கண்டால் உங்களுடைய பாதையல்லாத வேறொரு பாதையில் தான் அவன் செல்வான்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி)
நூல் : புகாரி-3294 

அபூஉபைதா பின் ஜர்ராஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்புகள்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு சமுதாயத்திற்கும் (அதன்) நம்பிக்கைக்குரியவர் ஒருவர் உண்டு. சமுதாயமே!, நம்முடைய நம்பிக்கைக்குரியவர் அபூஉபைதா இப்னு ஜர்ராஹ் அவர்கள் தாம்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி-3744 

நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்த நம்பிக்கையாளர் அபூஉபைதா (ரலி)

நபி (ஸல்) அவர்கள் நஜ்ரான் வாசிகளிடம், ‘நம்பகத்தன்மையில் முறையோடு நடந்து கொள்ளும் நம்பிக்கையாளர் (அமீன்) ஒருவரை உங்களுக்கு நிச்சயம் நான் அனுப்புவேன்’ என்று கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் (பலர் அந்த ‘அமீன்’ என்னும் சிறப்பு தமக்கு கிட்டாதா என) பேராவல் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூஉபைதா (ரலி) அவர்களை அனுப்பி வைத்தார்கள்.

அறிவிப்பவர் : ஹுதைஃபா (ரலி)
நூல் : புகாரி-3745 


தனியார் கல்விக் கூடங்களில் சேர்ந்து படிக்க - ஒர் அரிய வாய்ப்பு.,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

தனியார் கல்விக் கூடங்களில் சேர்ந்து படிக்க    வசதியற்றவர்கள்...  
வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்கும்...   

ஒர் அரிய வாய்ப்பு., 

தேவையுள்ளவர்கள் முயற்சிகள் செய்யலாம். 
அரசு உதவிகளையும் பெறலாம்.

அல்லாஹ் போதுமானவன்

Thursday 28 March 2024

தியாகதுருகத்தில் தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

29.03.2024

தியாகதுருகத்தில் தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு...

தொழிலாளி குடும்பத்துக்கு அரசு வேலையும் நிவாரணமும் தமிழக அரசு அளிக்க வேண்டும்..

மனிதநேய மக்கள் கட்சி கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் கோரிக்கை....


கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் பேருந்து நிலையம் அருகில் மக்கள் அதிகமாக கூட்டமாக இருக்கும் இடத்தில் அபாயகரமாக தாறுமாறாக பேருந்தை ஓட்டி வந்ததன் விளைவாக...

 தியாகதுருகம் சந்தைமேடு பகுதியை சேர்ந்த சேட்டு என்கிற தொழிலாளி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டிருந்தார் இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்துவிட்டார்...

இந்நிகழ்வுஅந்தப் பகுதியில் மிகுந்த பதட்டத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது மிகுந்த ஏழ்மையான கறிக்கடை  தொழிலாளியான இவரது வருமானத்தை நம்பி அவர் குடும்பம் இருந்துள்ளது. மிகுந்த கஷ்டமான குடும்பம்...

குர்ஆனில் துஆக்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

குர்ஆனில் துஆக்கள்
தொடர் 17

رَّبِّ زِدْنِىْ عِلْمًا‏ 

“இறைவா! 
கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!”

அல்குர்ஆன் : 20:114

 رَبِّ انْصُرْنِىْ بِمَا كَذَّبُوْنِ‏ 

“என் இறைவா! 
என்னை இவர்கள் பொய்ப்படுத்துகின்ற காரணத்தினால் எனக்கு நீ உதவி புரிவாயாக!” 

அல்குர்ஆன் : 23:39

رَبِّ فَلَا تَجْعَلْنِىْ فِى الْقَوْمِ الظّٰلِمِيْنَ

“என் இறைவனே! 
என்னை அநியாயக்காரர்களின் சமூகத்துடன் என்னைச் சேர்த்து வைக்காதிருப்பாயாக”.

அல்குர்ஆன் : 23:94

நாளும் ஓர் நல்லதொரு துஆ (பிரார்த்தனை)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நாளும் ஓர் நல்லதொரு துஆ (பிரார்த்தனை)
             
ஹிஜ்ரி 1445 , ரமலான்  பிறை 18
      
(29-03-2024 , வெள்ளிக்கிழ‌மை)

    அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.                                                     
                               அல்லாஹும்ம சல்லி அலா முஹம்மதின், வ அலா ஆலி முஹம்மதின்,
கமா சல்லைத்த அலா இப்ராஹீம, வ அலா ஆலி இப்ராஹீம
இன்னக்க ஹமீதுன் மஜீத்.

அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின், வ அலா ஆலி முஹம்மதின்
கமா பாரக்த்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம
இன்னக்க ஹமீதுன் மஜீத்.

லா இலாஹ இல்லா அன்த்த சுப்ஹானக்க இன்னீ குன்த்து மினழ் ழாலிமீன் ...
 
அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி ...

பிஸ்மில்லாஹில்லதீ லா யளுர்ரு மஅஸ்மிஹி ஷைஉன்ஃபில் அர்ளி வலா ஃபஸ்ஸமாஇ வஹீவஸ்ஸமீஉல்அலீம்.

யா முகல்லியல் குலூப் தப்பித் கல்பி அலா தீனிக்.  

(யா அல்லாஹ் உள்ளங்களை புரட்டுபவனே
உன்னுடைய தீனின் மீது என் உள்ளத்தை உறுதிப்படுத்துவாயாக )

யா அவ்வலல் அவ்வலீன்
யா ஆகிரல் ஆகிரீன்
யா தல் குவ்வதின் மதீன்
யா ராஹிமல் மஸாகீன்
யா அர்ஹமர்  ராஹிமின்...

அல்லாஹும்ம மர்ஹம்னீ பி ரஹ்மத்திகா அர்ஹமர்ராஹிமீன்.

(யா அல்லாஹ் உன் பேரருளைக்கொண்டு என் மீது கிருபை செய்வாயாக)

ரப்பானா ஆத்தினா fபித்துன்யா ஹஸனத்தன் வfபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகீனா அதாபந் நார்

யா அல்லாஹ், இவ்வுலகிலும் மறுமையிலும் எங்களுக்கு நல்லதையே அருள்பாலிப்பாயாக, நரக நெருப்பின் தண்டனையை விட்டும் காத்தருள்வாயாக.

வகீனா அதாபல் கப்ர்

யா அல்லாஹ்!
மண்ணறையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

வகீனா அதாபுல் ஹஸ்ர்

யா அல்லாஹ்!
இறுதிநாளின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

வகீனா அதாபுல் fபக்ர்

யா அல்லாஹ்!
வறுமையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

வகீனா அதாபுல் மீஸான்

யா அல்லாஹ்!
மீஸான் தராஸின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

வகீனா அதாபுல் கர்ழ்

யா அல்லாஹ்!
"கடன் தொல்லையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

வகீனா அதாபுல் மர்ழ்

யா அல்லாஹ்!
நோய்களின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

வகீனா அதாபுல் ஆfபாத்

யா அல்லாஹ்!
பேராபத்துகளின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

வகீனா அதாபுல் சக்ராத்

யா அல்லாஹ்!
மரண அவஸ்தையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

வகீனா அதாபல் மௌத்

யா அல்லாஹ்!
மௌத்தின்போதான தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

வகீனா அதாபுல் fபித்னத்துல் மஸீஹித் தஜ்ஜால்

யா அல்லாஹ்!
தஜ்ஜாலின் வழிகெட்ட தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

வகீனா அதாபந் நார்

யா அல்லாஹ்!
நரக நெருப்பின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக...

யா அல்லாஹ்! 
மீண்டும் உயிர் தந்து அதிகாலை தொழுகையை நிறைவேற்ற வாய்ப்பளித்த அல்லாஹ்வே உன்னைப் போற்றிப் புகழ்கின்றோம்

இரட்சகனே எங்கள் தலைவரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களுடையகுடும்பத்தாரின் மீதும் ஸலவாத்தும் சலாமும் அருள்வாயாக!

ஏக இறைவனே! இந்தக் காலை நேரத்தை எங்களுக்கு அருள்வளமிக்க காலைநேரமாகஆக்கிஅருள்வாயாக!

யா அல்லாஹ்! 
 நன்மையின் பால் நெருக்கமானதாகவும்,  தீங்குகளை விட்டு தூரமானதாகவும்,  நஷ்டமற்ற,கைசேதப்படாத,நலன்கள் தடுக்கப்படாத காலை நேரமாக எங்களுக்கு ஆக்குவாயாக! 

யா அல்லாஹ்! 
இறைவனே எங்களுக்கு இன்றைய தினத்தின் ஆரம்பத்தை இணக்கமானதாகவும் மத்தியத்தை வெற்றியாகவும் இறுதியை லாபகரமானதாகவும்,வெற்றிகரமானதாகவும் ஆக்குவாயாக!

யா அல்லாஹ்! 
 இறைவனே எங்களுடைய காலை நேரத்தை உன்னிடமிருந்து திருப்தியான காலை நேரமாக்கி வைப்பாயாக!

யா அல்லாஹ்! 
 விதிகளின் தீங்கை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக! 

யா அல்லாஹ்! 
குற்றங்களைக் கொண்டு எங்களைத் தண்டிக்காதிருப்பாயாக! 

யா அல்லாஹ்! 
 சிறப்பு மிக்கவனே! அருள் மிகுந்தவனே! இரட்சகனே! எங்களுக்கு இக்காலை நேரத்தை நல்லடியார்களின் காலை நேரமாக்கியருள்வாயாக!

யா அல்லாஹ்! 
 மாலை நேரத்தை எங்களுக்கு தியானிப்பவர்களின் மாலை நேரமாக்கியருள்வாயாக!

யா அல்லாஹ்! 
எங்கள் உள்ளங்களை அச்சமுள்ள உள்ளங்களாக ஆக்குவாயாக!

யா அல்லாஹ்! 
 எங்கள் உடல்களை  வழிப்படுபவர்களின் உடல்களாக ஆக்குவாயாக!

யா அல்லாஹ்! 
 எங்கள் அனுஷ்டானங்களை பயபக்தியுடையவர்களின் அனுஷ்டானங்களாக்குவாயாக!

யா அல்லாஹ்! 
 எங்களுடைய நாவுகளை தியானிப்பவர்களின் நாவுகளாக ஆக்குவாயாக!

யா அல்லாஹ்! 
கவனமின்றி இருப்போரின்  தூக்கத்திலிருந்து எங்களை எழுப்புவாயாக!

யா அல்லாஹ்! 
 நல்லடியார்களின் பிரார்த்தனையில் எங்களையும் சேர்த்து வைப்பாயாக!

யா அல்லாஹ்! 
சர்வலோகங்களின் இரட்சகனே!
 சுவர்க்கத்தை எங்களுக்கு அருள்வாயாக!

யா அல்லாஹ்! 
 சலாத்தும் சலாமும் எங்கள் தலைவரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களின் வமிசத்தினர் மீதும், அவர்களின் தோழர்கள் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!

யா அல்லாஹ்! 
 சகல புகழுரையும் சர்வலோக இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானதாகும்.

யா அல்லாஹ்! 
எங்கள் கண்மணி நாயகம் முஹம்மது ﷺ அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தாரின் மீதும் அனைத்து நபித்தோழர்களின் மீதும் உன் அருளை புரிவாயாக!

 யா அல்லாஹ்! 
எங்கள் துஆவை ஏற்றுக் கொண்டு எங்களை நரகிலிருந்து பாதுகாத்து உயர்ந்த சொர்க்கத்தை அருள்வாயாக..

யா அல்லாஹ்! 
உன் கருணையினால் எங்களின் துஆக்களை ஏற்றுக்கொள்வாயாக!

யா அல்லாஹ்!
இன்றைய நாளை எங்களுக்குப் பலன் உள்ள நாளாக ஆக்குவாயாக ...

யா அல்லாஹ்! 
உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியையும் கேட்கிறோம்.

யா அல்லாஹ்! 
எங்களது ஹலாலான துஆக்களை கபூல் செய்வாயாக...!!!!

ஸல்லல்லாஹு அலா முஹம்மதின் வஅலா  ஆலி முஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி

வல் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.....

ஏப்ரல் 19, தமிழக மக்கள் அனைவரும் வாக்களிக்கும் நாள்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

29.03.2024

ஏப்ரல் 19, தமிழக மக்கள் அனைவரும் வாக்களிக்கும் நாள். 

பாராளுமன்றத் தேர்தல் ஐந்தாண்டுக்கு ஒரு முறைதான்.
 எல்லோரும் இந்திய நாட்டு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும், நம்மில்  545 பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டும் நமக்காக, நம் அனைவரின் குரலாக , நம் அனைவரையும் பாதுகாக்கும் கேடயமாக , நாமே வாக்களித்து தேர்ந்தேடுத்து அனுப்பும் சக்தி, ஆற்றல், வாக்கு நம் ஒவ்வொருவரின் கையில்தான் இருக்கிறது. 

 கடந்த பத்தாண்டு காலம் பிஜேபியின் இருண்ட ஆட்சிக் காலம் .

முகலாயர்களை, ஆங்கிலேயர்களை எல்லாம் மிஞ்சி, நம் நாட்டை அடிமைப் படுத்த நினைத்த துரோகிகளின் ஆட்சிக் காலம்.

 வரலாற்றில் வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படையில் பல மொழி, பல நிறம் உள்ள மக்கள் ஒற்றுமையாக உருவாக்கிய இந்த இந்திய தேசத்தை சுரண்டி, நம் ஒவ்வொரு இந்தியரையும் ஏமாற்றிய ஒரு அயோக்கிய, காமவெறி பிடித்த, பணத்தாசை கொண்ட ஒரு கும்பல்தான் ‌பிஜேபி கும்பல் .


 இவர்களை ஆட்சியிலிருந்து விரட்டா விட்டால் நம் தேசம் நாசமாகி விடும் .

 இந்திய தேசத்தின் ஒவ்வொரு மாநில மக்களும் இந்த பிஜேபியை, இந்த பெருமை பிடித்த மனிதப் பேய்களை அழிக்க, 

 வாக்களியுங்கள் இந்தியா கூட்டணிக்கு , இதுவே நம் இந்திய தேசம் காக்கும் கூட்டணி. 

 இதுவே நம் இந்திய அரசியல் சாசனத்தை பாதுகாக்கும் கூட்டணி. 

 வாக்களிப்பீர்! 

 நம் எதிர்காலம் நம் கையில் இருக்கிறது 

 எனவே இந்தியா கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களை வெற்றி பெறச் செய்வீர்! 

 நாம் இந்தியர்கள்! நாமே ரத்தம் சிந்தி சுதந்திர இந்தியாவை உருவாக்கியவர்கள்! 
 
பிஜேபி கூட்டணி துரோகிகளிடமிருந்து மீட்போம் நம் இந்திய தேசத்தை! 
 வளர்ப்போம் நம் தொப்புள் கொடி பாசத்தை! 
 
ஜெய் ஹிந்த்! 

நடைப் பயிற்சியின் முக்கியம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்......

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நடைப் பயிற்சியின் முக்கியம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்......

Bioclock என்றால் என்ன?

நாம் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் அதிகாலை 4.00 மணிக்கு அலாரம் செட் பண்ணிவிட்டு தூங்கி விடுவோம். ஆனால் அலாரம் அடிப்பதற்கு முன் எழுந்து விடுவோம். இது தான் Bioclock. 

நமக்கு தெரிந்த வட்டத்தில் எல்லோரும்
60 - 70 வயதில் இறந்து விடுகிறார்கள். எனவே நாமும் 60-70 வயதில் இறந்து விடுவோம். 

50 வயதில் எல்லா நோய்களும் வந்து விடும் என்று நம்பி நமது Bioclock இல் செட் செய்துவிடுகிறோம். 

அதனால்தானோ என்னவோ 50 வயதில் நோய் வருகிறது.
70 வயதில் செத்து விடுகிறோம். நமக்கு தெரியாமலே நமது Bioclock ஐ தவறாக செட் செய்து விடுறோம். 

ஜப்பானில் பெரும்பாலோனார் 100 வயது வாழ்கிறார்கள். அவர்களது Bioclock அப்படி செட் செய்யப் பட்டுள்ளது. 

எனவே நண்பர்களே, 

1. நாம்  குறைந்தது 100 வயது வரை வாழ்வோம் என்று Bioclock ஐ மாற்றி அமைப்போம். 

2. நமக்கு இந்த சின்ன வயதில் (40 இலிருந்து 60 வயதுக்குள்) எந்த நோயும் வர வாய்ப்பே இல்லை என நம்புவோம். 

3. டை அடியுங்கள் (முடி இருந்தால் 😂). இளமையாக தோற்றம் அளியுங்கள் . வயதான தோற்றத்தை அனுமதிக்காதீர்கள். 

4. சுறுசுறுப்பாக இருங்கள். வாக்கிங்  போங்கள். 

5. வயதாக வயதாக ஆரோக்கியம் கூடும் என்று நம்புங்கள். (அது தான் உண்மை). 

6. எல்லாத்துக்கும் இந்த மனசு தான் காரணம். Never, ever allow the bioclock set your ending. 

எண்ணங்களே வாழ்க்கை.

முதுமை பாதத்திலிருந்து மேல் நோக்கித் தொடங்குகிறது!

 உங்கள் கால்களை செயல்பாட்டிலும் & வலுவாக வைத்திருங்கள் !! 
Keep your Legs Active and Strong !!!

 தினசரி வயதாகிக்கொண்டே இருக்கும்போது, ​​நம் கால்கள் எப்போதும் சுறுசுறுப்பாகவும் வலுவாகவும் இருக்க வேண்டும். நாம் தொடர்ந்து  வயதாகும்போது, ​​நம் தலைமுடி நரைத்து (அல்லது) சருமம் தளர்ந்து (அல்லது) முகத்தில் சுருக்கங்கள் வருவதற்கு நாம் பயப்படக்கூடாது.

நீண்ட ஆயுளின் அறிகுறிகளில், பிரபலமான அமெரிக்க பத்திரிகை "வருமுன் தடுப்பு" (prevention) மூலம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, வலுவான கால் தசைகள்  அனைத்திற்கும் மேலே மிக முக்கியமான மற்றும் இன்றியமையாத ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளன. தயவுசெய்து தினமும் நடந்து செல்லுங்கள்.

உங்கள் கால்களை இரண்டு வாரங்களுக்கு அசைக்கவில்லை என்றால், உங்கள் உண்மையான கால் வலிமை 10 வருடங்கள் குறையும். 
நடந்து செல்லுங்கள்.

டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வு, முதியவர்கள் மற்றும் இளைஞர்கள், இரண்டு வாரங்கள் செயலற்ற நிலையில் இருந்தால்  கால் தசை வலிமை மூன்றில் ஒரு பங்கு பலவீனமடையலாம் என்கிறது. இது 20-30 வருடங்கள் முதுமையடைவதற்கு சமம் !!
 எனவே, நடந்து செல்லுங்கள்.

கால் தசைகள் பலவீனமடைவதால், நாம் மறுவாழ்வு மற்றும் உடற்பயிற்சிகள் செய்தாலும், மீட்க நீண்டகாலம் பிடிக்கும். நடங்கள். அதனால், நடைபயிற்சி போன்ற வழக்கமான உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது.

 நமது முழு உடல் எடை/ சுமையை கால்களே தாங்குகிறது. 
கால்கள் ஒரு வகையான தூண்கள், மனித உடலின் முழு எடையையும் தாங்கும். 
தினமும் நடைபயிற்சி.
 
சுவாரஸ்யமாக, ஒரு நபரின் எலும்புகளில் 50% & தசைகளில் 50%, இரண்டு கால்களிலும் உள்ளன. 
நடந்து செல்லுங்கள் 

மனித உடலின் மிகப்பெரிய மற்றும் வலுவான மூட்டுகள் மற்றும் எலும்புகளும் கால்களில் உள்ளன.

 10,000 அடிகள் / நாள்
  வலுவான எலும்புகள், வலுவான தசைகள் மற்றும் நெகிழ்வான மூட்டுகள் உடலின் 
இரும்பு முக்கோணத்தை உருவாக்கி
  மனித உடலைச் சுமக்கிறது. 

ஒருவரின் வாழ்க்கையில் 70% மனித செயல்பாடு மற்றும் ஆற்றல் எரித்தல்(burning the calories) இரண்டு கால்களால் செய்யப்படுகிறது. இது உங்களுக்கு தெரியுமா?
 ஒரு நபர் இளமையாக இருக்கும்போது, ​​அவருடைய/ *தொடைகள் 800 கிலோ எடையுள்ள ஒரு சிறிய காரைத் தூக்கும் வலிமை கொண்டவை. 
*கால் உடல் நடமாட்டத்தின்(locomotion) மையம் *.

 இரண்டு கால்களும் சேர்ந்து மனித உடலின் 50% நரம்புகளையும், 50% இரத்தக் குழாய்களையும், 50% இரத்தத்தையும் அவற்றின் வழியே பாய்கிறது. இது உடலை இணைக்கும் மிகப்பெரிய சுழற்சி நெட்வொர்க். *எனவே தினமும் நடந்து செல்லுங்கள்.

 கால்கள் மட்டும் ஆரோக்கியமாக இருக்கும்போது, ​​இரத்த ஓட்டத்தின் வளமையான மின்னோட்டம் சீராக செல்லும். எனவே வலுவான கால் தசைகள் உள்ளவர்கள் கண்டிப்பாக வலுவான இதயத்தைக் கொண்டிருப்பார்கள். 

ஒருவரது வயது, பாதத்தில் இருந்து மேல் நோக்கித் தொடங்குகிறது. ஒரு நபர் இளமையில் இருப்பது போலல்லாமல் வயதாகும்போது, ​​மூளை மற்றும் கால்களுக்கு இடையே நடைபெறும் ஆணைகள் பரிமாற்றத்தின் துல்லியம் மற்றும் வேகம் குறைகிறது.
தயவுசெய்து நடந்து செல்லுங்கள்

 கூடுதலாக, எலும்பின் உரமான கால்சியம் என்று அழைக்கப்படுவது விரைவில் அல்லது பின்னர் காலப்போக்கில் இழக்கப்படும், இதனால் வயதானவர்கள் எலும்பு முறிவுகளுக்கு ஆளாகிறார்கள்.
 நடங்கள்.

வயதானவர்களில் எலும்பு முறிவுகள் தொடர்ச்சியான சிக்கல்களைத் தூண்டும், குறிப்பாக மூளை த்ரோம்போசிஸ் போன்ற ஆபத்தான நோய்கள். 

பொதுவாக  வயதான நோயாளிகளில் 15%,  தொடை எலும்பு முறிவு ஏற்பட்ட ஒரு வருடத்திற்குள்  இறந்துவிடுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? 
தவறாமல் தினமும் நடந்து செல்லுங்கள் 

▪️ *கால்களுக்கு உடற்பயிற்சி செய்வது, 60 வயதிற்கு பிறகும் கூட தாமதமல்ல. * நம் கால்கள் படிப்படியாக வயதாகிவிட்டாலும், நம் கால்களுக்கு உடற்பயிற்சி செய்வது வாழ்நாள் முழுவதும் வேலை. 

10,000 அடிகள் நடக்க
 எப்பொழுதும் கால்களை அடிக்கடி வலுப்படுத்துவதன் மூலம், ஒருவர் மேலும் வயதானதை தடுக்கலாம் அல்லது குறைக்கலாம். 

365 நாட்கள் நடைபயிற்சி 
உங்கள் கால்களுக்கு போதுமான உடற்பயிற்சி கிடைப்பதற்கும், உங்கள் கால் தசைகள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதற்கும் தயவுசெய்து தினமும் குறைந்தது 30-40 நிமிடங்கள் நடக்க வேண்டும். 

இந்த முக்கியமான தகவலை உங்கள் 40 வயது கடந்த நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர வேண்டும், ஏனெனில் ஒவ்வொருவரும் தினமும் வயதாகி வருகிறார்கள்

#வெந்தயத்தில் டீயா? தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்*

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

#வெந்தயத்தில் டீயா? தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்*

ஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் தான் மேம்படுத்த உதவுகிறது. பலருக்கும் வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும் என்று தான் தெரியும். ஆனால் அதையும் தாண்டி, வெந்தயத்தில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்…
 

அதற்கு வெந்தயத்தை சமையலில் சேர்ப்பதோடு மட்டுமின்றி, அதைக் கொண்டு டீ தயாரித்துக் குடிக்கவும் செய்யலாம். உங்களுக்கு வெந்தய டீ எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். மேலும் வெந்தய டீயைக் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து உங்களது அன்றாட உணவில் அதை சேர்த்து நன்மைப் பெறுங்கள்.

வெந்தய டீ தயாரிப்பது எப்படி?

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து மூடி வைத்து 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

பின் அதை வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து, சூடாகவோ அல்லது குளிர்ச்சியான நிலையிலோ குடியுங்கள்.

இப்போது வெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் காண்போம்.

 

நன்மை 1

மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி மற்றும் பிடிப்புக்களை சந்திப்பார்கள். இந்த சமயத்தில் வெந்தய டீயைக் குடித்தால், வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

நன்மை 2

பூப்படையும் வயதில் உள்ள சிறுமிகள் வெந்தய டீயைக் குடிப்பது நல்லது. இதனால் மார்பகங்களின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் இந்த டீ நீர் தேக்கத்தைத் தூண்டுவதோடு, வளர்ச்சி ஹார்மோன்களையும் ஊக்குவிக்கும்.

நன்மை 3

ஒருவர் தினமும் வெந்தய டீயை குடித்து வந்தால், தற்போது நிறைய பேர் சந்திக்கும் சர்க்கரை நோய் மற்றும் டைப்-2 சர்க்கரை நோயின் தாக்கத்தைத் தடுக்கலாம்.

நன்மை 4

கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளதா? அதைத் தவிர்க்க தினமும் வெந்தய டீ குடியுங்கள். இதனால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை குறைவதோடு, இரத்த சர்க்கரை அளவும் குறையும்

நன்மை 5

வெந்தய டீ மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படும். ஆகவே மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் இருக்க நினைப்பவர்கள், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள்.

 

நன்மை 6

வெந்தய டீ உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுத்து, உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

நன்மை 7

குடல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீ குடியுங்கள். இது கழிவுகளை உடலில் இருந்து எளிதில் வெளியேற்றும்.

நன்மை 8

உலகில் இதய நோயால் அவஸ்தைப்படுவோரின் எண்ணிக்கை அதிகம். இத்தகைய இதய நோயின் தாக்கத்தைத் தடுக்க வேண்டுமெனில், தினமும் ஒரு கப் வெந்தய டீ குடியுங்கள்.

நன்மை 9

வைட்டமின் பி1 குறைபாட்டினால் ஏற்படும் பெரி பெரி நோயின் தாக்கத்தை வெந்தய டீ குறைக்க உதவும். ஆகவே அன்றாட டயட்டில் வெந்தய டீயை தவறாமல் சேர்த்து வாருங்கள்.

நன்மை 10

பிரசவத்தை நெருங்கும் கர்ப்பிணிப் பெண்கள் வெந்தய டீயைக் குடித்தால், அது பிரசவ வலியைத் தூண்டுவதோடு, எளிதில் பிரசவம் நடக்கவும் உதவி புரியும்.

நன்மை 11

ஆண்கள் மற்றும் பெண்கள் தினமும் வெந்தய டீ குடிப்பதன் மூலும், அவர்களின் பாலியல் வாழ்க்கை சிறக்கும். ஏனெனில் இந்த டீ உடலின் பாலுணர்ச்சியைத் தூண்டி, உறவில் சிறப்பாக ஈடுபட உதவும்.

நன்மை 12

வெந்தய டீயில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இதை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தொடர்ந்து குடித்து வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதோடு, தாய்ப்பாலில் சத்துக்களும் அதிகரிக்கும்.

நன்மை 13

வெந்தய டீயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஏராளமாக அடங்கியுள்ளது. ஆகவே மூட்டு வலி, முழங்கால் வலி உள்ளவர்கள், வெந்தய டீயைக் குடித்து வந்தால், இந்த பிரச்சனையில் இருந்து முழுவதுமாக தடுக்கலாம்.

நன்மை 14

வெந்தயம் மிகச்சிறந்த சளி கரைப்பான். ஆகவே உங்களுக்கு சைனஸ் மற்றும் சளித் தொல்லை அதிகம் இருந்தால், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

 

நன்மை 15

வெந்தயம் சிறுநீர் பெருக்கியாக செயல்படும். ஒருவர் தினமும் பலமுறை சிறுநீர் கழிப்பதன் மூலம், இரத்தத்தில் உள்ள கசடுகள் வெளியேறும். வெந்தய டீயைக் குடித்தால், அடிக்கடி சிறுநீரைக் கழிக்கலாம்.

நன்மை 16

காய்ச்சல் அடிக்கும் போது, கண்ட மாத்திரைகளைப் போடாமல், ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள். இதனால் காய்ச்சல் உடனே குறைந்துவிடும்.

நன்மை 17

வெந்தய டீ பொடுகைப் போக்கும். அதற்கு தலைக்கு ஷாம்பு போட்டு முடியை அலசிய பின், இந்த வெந்தய டீயால் தலைமுடியை அலசி, பின் கண்டிஷனர் பயன்படுத்துங்கள். இப்படி செய்வதால் பொடுகு போய்விடும்.

நன்மை 18

வெந்தய டீ தொண்டைப் புண்ணை குணப்படுத்தும். அதற்கு வெந்தய டீயை சூடாக குடிக்க வேண்டும்.

நன்மை 19

வாய் புண் அல்லது வாய் அல்சர் உள்ளதா? அப்படியெனில் தினமும் வெந்தய டீயால் வாயைக் கொப்பளியுங்கள். இப்படி தினமும் வாய் புண் போகும் வரை செய்யுங்கள்.

நன்மை 20

வெந்தய டீ வாய் துர்நாற்ற பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். அதிலும் வெந்தய டீயை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால், உடல் துர்நாற்ற பிரச்சனை நீங்கும்.