Tuesday 10 September 2024

அஸ்ஸாமில், இஸ்லாமியர்களுக்கு அடுத்த அச்சுறுத்தல்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அஸ்ஸாமில், இஸ்லாமியர்களுக்கு அடுத்த அச்சுறுத்தல்
➖➖➖➖
 சட்டமன்றத்தில் தொழுகை இடைவேளை ரத்து - 87 வருட பழக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்த பாஜக அரசு!
➖➖➖➖
 அஸ்ஸாம் சட்டமன்றத்தில் இஸ்லாமிய உறுப்பினர்கள் நமாஸ் செய்வதற்காக வெள்ளிக்கிழமைகளில் விடப்படும் 2 மணிநேர இடைவேளையை ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறார், முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா.

காலனித்துவ கால நடைமுறைகளை கைவிடுவதாகவும், நாடாளுமன்றத்தின் திறனை (Productivity) அதிகரிப்பதற்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக, விளக்கமளித்துள்ளார்.

அஸ்ஸாம் சட்டமன்றத்தில் வெள்ளிக்கிழமைகளில் இஸ்லாமிய உறுப்பினர்கள் நமாஸ் செய்வதற்காக காலை 11 மணிக்கு இடைவேளை விட்டு, பின்னர் மதிய உணவுக்குப் பிறகு விவாதங்களைத் தொடங்குவது நீண்டகாலமாக பின்பற்றப்படும் வழக்கமாகும். இந்த நடைமுறை 1937-ல் முஸ்லிம் லீக் கட்சியின் சையது சாதுல்லாவால் ( பிரிட்டிஷ் இந்தியாவின் அஸ்ஸாம் மாகாண பிரதமராக இருந்தவர்) அறிமுகப்படுத்தப்பட்டது.

தொழுகை இடைவேளையை ரத்து செய்ததை 'வரலாற்று சிறப்புமிக்க முடிவு' எனப் பெருமைகொள்ளும் அஸ்ஸாம் முதல்வர், இதற்கு உறுதுணையாக இருந்ததற்காக சபாநாயகர் பிஸ்வஜித் டைமேரி மற்றும் பிற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டமன்றம் எந்தவித மதரீதியான சலுகைகளும் இல்லாமல் இயங்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

அஸ்ஸாம் சட்டமன்றத்தில் நேற்று, `அஸ்ஸாம் ரத்து மசோதா, 2024' நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, அஸ்ஸாம் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டம், 1935-ஐ ரத்து செய்ததுள்ளது.
➖➖➖➖
30.08.2024

https://www.vikatan.com/government-and-politics/assam-assembly-ends-87-year-old-practice-of-2-hour-jumma-break

ரயில்வே துறையில் தொழில்நுட்பம் அல்லாத பிரிவில் 11,558 காலிப்பணியிடங்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 13.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மிஸ் பண்ணிடாதீங்க; அற்புதமான வாய்ப்பு: ரயில்வேயில் 11,558 காலிப்பணியிடம் அறிவிப்பு.

ரயில்வே துறையில் தொழில்நுட்பம் அல்லாத பிரிவில் 11,558 காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 13.

ரயில்வே துறையில் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத பிரிவின் கீழ் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தற்போது தொழில்நுட்பம் சாராத, முதுநிலை அலுவலர் பிரிவில் (graduate-level posts) 8,113 பணியிடங்கள், இளநிலை அலுவலர் பிரிவில் (undergraduate-level posts) 3,445 பணியிடங்கள் என மொத்தம் 11,558 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

டிகிரி முடித்தவர்களுக்கு காலியிடங்கள்
* டிக்கெட் மேற்பார்வையாளர் - 1,736,
* சரக்கு ரயில் மேலாளர் - 3,144,

* ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டண்ட் மற்றும் டைப்பிஸ்ட் - 1,507,

* சீனியர் கிளார்க் மற்றும் தட்டச்சர்- 732

12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு காலியிடங்கள்!
* கமர்ஷியல் கம் டிக்கெட் கிளார்க்- 2,022,
* கணக்கு எழுத்தர் மற்றும் டைப்பிஸ்ட்- 361,

* ஜூனியர் கிளார்க் மற்றும் டைப்பிஸ்ட்- 990,

கல்வி தகுதிகள் என்ன?
* வணிக தலைமை - டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரயில் மேனேஜர், ஜூனியர் அக்கவுண்டண்ட் அஸ்சிஸ்டண்ட் டைபிஸ்ட் , சீனியர் கிளர்க் ஆகிய பணியிடங்களுக்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்து இருக்க வேண்டும்.
* சீனியர் கிளர்க், கமர்ஷியல், அக்கவுண்ட்ஸ் கிளர்க், ஜூனியர் கிளர்க், ரயில் கிளர்க் ஆகிய பணியிடங்களுக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டைப்பிஸ்ட் பணிக்கு தட்டச்சு திறன் அவசியம்.

வயது வரம்பு
* டிகிரி முடித்தவர்களுக்கு காலியிடங்களுக்கு 18 முதல் 39 வயதிற்குள் இருக்க வேண்டும்.
* இளநிலை அலுவலர் பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி
* முதுநிலை அலுவலர் பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு செப்டம்பர் 14 தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 13.
* இளநிலை அலுவலர் பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு செப்டம்பர் 21ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 20.

விண்ணப்ப கட்டணம்
* விண்ணப்ப கட்டணம் ரூ.500. எஸ்.சி, எஸ்.டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், சிறுபான்மையினர் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு கட்டணம் ரூ.250.

உணவு முறைப் பழக்கம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

உணவு முறைப் பழக்கம்
~~~~~~~~

இரவில் சீக்கிரமே சாப்பிடச் சொல்கிறார்களே ஏன் தெரியுமா....?

 இன்றைய பரபரப்பான காலக்கட்டத்தில் அலுவலகம், தொழில்,   வேலை, வணிகம், குடும்பம்   என நிறைய கடமைகள் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றன.

இதையெல்லாம் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து சேருவதற்குள் தாமதமாகி விடுகிறது. 

எனினும்  இரவு நாம் உண்ணும் உணவை முடிந்த வரை சீக்கிரம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். 

அப்படி இரவில் சீக்கிரம் உணவை உண்பதால் ஏற்படும் பயன்களைப் பற்றித்தான்  இந்தப் பதிவு


இரவில் சீக்கிரமாக உணவு சாப்பிடுவதால் அதை சரி செய்ய உடலுறுப்புகளுக்கு போதுமான நேரம் கிடைக்கும். 

இதனால் செரிமான அமைப்பு சுமூகமாக செயல்பட வழிவகுக்கும். 

ஆனால் பலரும் இரவில் தாமதமாக உண்பதால் செரிமான உறுப்புகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். 

இதனால் இரவு உணவு செரிமானமாக தாமதமாகும்.

இரவு தாமதமாக உண்பதன் மூலம் தூக்கம் தடைப்படும்.

உணவை ஜீரணிக்க உறுப்புகள் அதிக நேரம் எடுத்துக்கொள்வதால் தூக்கம் நிச்சயம் தடைப்படும். 

இதுவே உணவை நேரத்தோடு உண்ணும்போது சீக்கிரமே ஜீரணமாகி நல்ல ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகுக்கும்.

இரவு தூங்கும் போது உடல் இயற்கையாகவே புத்துணர்ச்சி பெறுவதற்கான செயல்பாட்டில் ஈடுபடும். 

ஆனால் இரவு தாமதமாக சாப்பிடுவதால் உடலில் உள்ள ஆற்றல் முழுவதுமே உணவை ஜீரணிக்கவே செலவாகிவிடும்.

இதனால் அடுத்த நாள் மந்தமான, சோர்வான உணர்வை கொடுக்கும்.

சீக்கிரம் சாப்பிடுவதன் மூலம் சீக்கிரம் ஜீரணம் ஆகிவிடுவதால், அடுத்த நாள் எந்த மந்தத்தன்மையும் இல்லாமல் புத்துணர்ச்சியுடன் செயலாற்றலாம்.

உணவிலிருந்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உடலுக்குப் போதுமான நேரம் கிடைக்க வேண்டும்.

இரவு உணவை முன்கூட்டியே உண்பதால் அதிக நேரம் கிடைக்கும். 

இதனால் உணவிலிருந்து ஊட்டச்சத்துகளை உறிஞ்சும் வேலை சுறுசுறுப்பாக நடைபெறும்.

அதேசமயம் உணவை தாமதமாக உண்ணும் போது இந்த செயல்முறையும் தாமதமாகும்.

தூங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு அதிக உணவை எடுத்துக்கொண்டால் உடலில் சக்கரையை அதிகரிக்கும்.

இது நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

இரவு நேரமே உண்பதால் சீக்கிரம் செரிமானம் ஆவதன் காரணமாக இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

வளர்சிதை மாற்றத்தில் கோளாறுகள் ஏற்படுவதையும் தடுக்கும்.

உடலின் மொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

வளர்சிதை மாற்றத்தின் செயல்பாடு இரவு நேரங்களிலும் மாலை நேரங்களிலும் குறைந்து விடும்.

இதனால் இரவு தாமதமாக உண்பதால் அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படாமல் கொழுப்பாக உடலில் சேர்ந்துவிடும். 

இதனால் உடல் எடை அதிகரிக்கும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இரவில் உணவை சீக்கிரம் உண்ண வேண்டியது மிகவும் அவசியமாகும்!

இரவு நேரம் குடும்பத்துடன் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டால் தாமதமாக சாப்பிடும் பழக்கம் மாறிவிடும்.

நிறைவாக உணவை மருந்தாக்குவோம்..! மருந்தை உணவாக்க வேண்டாம்...!

                                     ~ அமுதம் புக்ஸ்

முக்கிய அவசர உதவி எண்கள்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நமது ஒவ்வொரு கைபேசியுலும் (Mobile phone),  கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கிய அவசர உதவி எண்கள்!

1.அவசர உதவி அனைத்திற்கும் — 112

2.வங்கித் திருட்டு உதவிக்கு — 9840814100

3.மனிதஉரிமைகள் ஆணையம் — 044-22410377

4.மாநகரபேருந்தில அத்துமீறல் — 09383337639

5.போலீஸ் SMS — 9500099100

6.போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS — 9840983832

7.போக்குவரத்து விதிமீறல் SMS — 98400 00103

8.போலீஸ் — 100

9.தீயணைப்புத்துறை — 101

10.போக்குவரத்து விதிமீறல — 103

11.விபத்து — 100, 103

12. ஆம்புலன்ஸ் — 102, 108

13.பெண்களுக்கான அவசர உதவி – 1091

14.குழந்தைகளுக்கான அவசர உதவி – 1098

15. அவசர காலம் மற்றும் விபத்து — 1099

16.முதியோர்களுக்கான அவசர உதவி — 1253

17.தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி - 1033

18.கடலோர பகுதி அவசர உதவி — 1093

19. ரத்த வங்கி அவசர உதவி — 1910

20.கண் வங்கி அவசர உதவி — 1919

21.விலங்குகள் பாதுகாப்பு — 044 -22354959/22300666

22.நமது அலைபேசியில் 112 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும். நமது அலைபேசி லாக்கில் (Locked) இருந்தாலும் இந்த எண்கள் மட்டும் இயங்கும். இது அனைத்திற்குமான அவசர உதவி எண் .

பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு — 93833 37639

பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு Toll Free No :- 180011400, 94454 64748, 72999 98002, 72000 18001, 044- 28592828

மனரீதியாக பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599

வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424

ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044- 25353999 / 90031 61710 / 99625 00500

ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் — 044-24749002 / 26744445

சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற எண்ணிற்கு SMS - 95000 99100

இதனை அனைவருக்கும் பகிருங்கள், நன்றி!

Monday 9 September 2024

அல்குா்ஆனை ஓதுங்கள் " அரபுக் கவிதைகள் பாடுவதை தவிருங்கள்*...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

ரபீவுல் அவ்வல் 
சிந்தனைகள் 05*

அல்குா்ஆனை ஓதுங்கள்
 " அரபுக் கவிதைகள் பாடுவதை தவிருங்கள்*...

அல்லாஹ்வின் அருள்மறையான அல்குர் ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதினால். அதற்கு ஒரு நன்மை உண்டு. 
ஒரு நன்மை என்பது, அது போன்ற பத்து மடங்காகும். 
 "அலிஃப், லாம், மீம்" என்பதை ஒரு எழுத்து என்று கூறமாட்டேன்.
 எனினும் அலிஃப் என்பது ஒரு எழுத்து, 'லாம்' என்பது ஒரு எழுத்து. மீம்" என்பதை ஒரு எழுத்த ஆகும். 
 மூன்றும் மூன்று எழுத்துகளாகும். அம்மூன்றையும் ஒருவர் ஓதினால் ஒவ்வொன்றுக்கும் பத்து நன்மைகள் விதம் முப்பது நன்மைகளைப் பெறுவார் "

 நபிமொழி ஜாமிவுத் திர்மதீ:2910

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ مُغِيرَةَ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَنَا فَرَطُكُمْ عَلَى الْحَوْضِ، لَيُرْفَعَنَّ إِلَىَّ رِجَالٌ مِنْكُمْ حَتَّى إِذَا أَهْوَيْتُ لأُنَاوِلَهُمُ اخْتُلِجُوا دُونِي فَأَقُولُ أَىْ رَبِّ أَصْحَابِي. يَقُولُ لاَ تَدْرِي مَا أَحْدَثُوا بَعْدَكَ "".
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

நான் உங்களுக்கு முன்பே (மறுமை நாளில் அல்கவ்ஸர் ') தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். 

அப்போது உங்களில் சிலர் என்னிடம் கொண்டுவரப்படுவார்கள். 
நான் அவர்களுக்கு (தடாகத்திலிருந்து தண்ணீர்) வழங்க முற்படும்போது அவர்கள் என்னிடமிருந்து விலக்கிவைக்கப்படுவார்கள். 

உடனே நான், 'என் இறைவா! இவர்கள் என் தோழர்கள்' என்று கூறுவேன். 
அதற்கு அல்லாஹ், 'இவர்கள் உமக்குப் பின்னால் (புதிது புதிதாக) என்னென்ன (குழப்பங்களை) உருவாக்கினார்கள் என்று உமக்குத் தெரியாது' என்று கூறுவான்....

நபிமொழி புகாரி 7049.

நிச்சயமாக ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடு,
ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில்தான் கொண்டு சோ்க்கும் 
நபிமொழி சுனனுந் நஸாயீ 1560

அத் தக்வா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி புளியங்குடி
அத் தக்வா இஸ்லாமிய பயிலகம்

நபி (ஸல்) அவர்களின் குணநலங்கள் 1

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

திருக்குர்ஆன் 3:159

நபி (ஸல்) அவர்களின் குணநலங்கள் 1

இங்கு உயர்ந்தோன் அல்லாஹ்,
தன் தூதருக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் தான் செய்த பேருதவியைச்
சொல்லிக் காட்டுகின்றான். இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் சமுதாயத்தாரிடம் -அதாவது தாம் கட்டளையிட்டதைப் பின்பற்றி, தடை விதித்ததைக் கைவிட்ட மக்களிடம்- இளகிய
உள்ளத்தோடும் கனிவான பேச்சோடும்
நடந்துகொண்டார்கள். இது அவர்களுக்கு இறைவன் செய்த மாபெரும் உதவியாகும்.

நளினம் நிறைந்த நபி

இதையே, "(நபியே) நீர் அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நடந்துகொண்டீர்" என
இந்த வசனம் (3:159) கூறுகின்றது.

அதாவது அல்லாஹ்வின் அருள்
உமக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் இல்லாமல் இருந்திருக்குமாயின், அவர்களிடம் நீர் எவ்வாறு நளினமாக நடந்துகொண்டிருப்பீர் என அந்த
வசனம் கேட்கின்றது.

ஹசன் அல்பசரி (ரஹ்) அவர்கள்
கூறியதாவது: இதுதான் முஹம்மத்
(ஸல்) அவர்களின் இயல்பான குணமாகும். இந்தக் குணத்துடனேயே அவர்களை அல்லாஹ் தூதராக அனுப்பி வைத்தான்.

மற்றொரு வசனத்தில் அல்லாஹ்
கூறுகின்றான்: உங்களில் இருந்தே ஒருதூதர் உங்களிடம் வந்துள்ளார். நீங்கள் சிரமப்படுவது அவருக்குப் பாரமாக இருக்கும். அவர் உங்கள் மேல் அதிக அக்கறை உள்ளவர்; இறைநம்பிக்கையாளர்கள் மேல் அதிகப் பரிவும் கருணையும் கொண்டவர். (9:128)

(தொடரும் இன்ஷா அல்லாஹ்)

(நன்றி: தஃப்ஸீர் இப்னு கஸீர், பாகம் 2, வெளியீடு ரஹ்மத் பதிப்பகம், சென்னை 4)

எட்டு வருடங்களாக தாயகம் செல்ல முடியாத கண்ணனை தாயகம் அனுப்பி வைத்த ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் அதற்கு முழுவதுமாய் உதவிய ஒற்றை தமிழர்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

எட்டு வருடங்களாக தாயகம் செல்ல முடியாத கண்ணனை தாயகம் அனுப்பி வைத்த ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் அதற்கு முழுவதுமாய் உதவிய ஒற்றை தமிழர்

▪️கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்த கண்ணன் கடந்து 8 ஆண்டுகளுக்கு முன்னால் சவுதி அரேபியா ரியாத் வந்துள்ளார் , ரியாத்தில் பல்வேறு பணிகளை செய்தவர் இறுதியாக ஓட்டுனர் பணியை செய்திருக்கிறார் , அதன் காரணமாக பெரும் தொகையை சாலை விதிமுறை மீறல் தண்டத் தொகையாக பெற்று தாயகம் செல்ல முடியாமல் எட்டு ஆண்டுகளாக தவித்துள்ளார்.. 

▪️இந்த நிலையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு சர்க்கரை நோய்க்கு சுயமாக மருந்து எடுத்த நிலையில் இடது காலும் கையும் செயலிழந்து ஒரு நாள் முழுவதும் அறையில் யாரும் பார்க்காத நிலையில் கிடந்து , சிலரின் உதவியால் அடுத்த நாள் மருத்துவமனை சென்று சிகிச்சை பெற முற்பட்ட நிலையில் அவருடைய ஆவணம் அனைத்தும் காலாவதி ஆகிய நிலையில் உரிமையாளரிடமிருந்து ஓடி வந்தவர் என்ற வழக்கு பின்னணியும் இருந்ததால் மருத்துவமனையில் முதல் கட்ட சிகிச்சையோடு  வெளியேற்றப்பட்ட நிலையில் பொதுமக்கள் கூடும் பூங்காவில் கேட்பாரற்று கிடந்திருக்கிறார்.. 

▪️இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் முன்னாள் நிர்வாகி மகன் அப்துல் ரஹ்மான் மூலமாக மாநில  தலைமை நிலைய செயலாளர் மாயவரம் அமீன் அவர்களை தொடர்பு கொள்ள அவர் ரியாத் மண்டல தலைவர் மீமிசல் நூர் முகமது அவர்களிடம் தகவலை தெரிவிக்க மண்டல சமூக நலத்துறை செயலாளர் கொடிப்பள்ளம் சாதிக் பாட்சா அவர்களையும் துணைச் செயலாளர் காட்டுவா அஜ்மீ ஆகியோரை இந்த சிரமம் மிக்க பணியில் முடுக்கி விட அனைவரும் இரவு பகல் பார்க்காமல் கடந்த ஒரு வார காலமாக இவருக்கு எக்ஸிட் அடிக்க சாலை விதிமுறைகளை மீறிய தண்டத் தொகையை அடைக்க பல்வேறு வழிகளில் மிகுந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் முயற்சித்து நேற்று இரவு சவுதி அரேபியாவில் இருந்து செல்ல எக்ஸிட் என்னும் ஆவணத்தை பெற்றனர்.

▪️ அதனைத் தொடர்ந்து நேற்று 4-9-2024 புதன்கிழமை இலங்கை விமான மூலம் பத்தா கிளை நிர்வாகி காரைக்குடி அம்ஸத் இப்ராஹிம் அவர்கள் பயண துணையுடன் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டார்.. 

▪️இந்த ஒப்பற்ற பணிக்கு ரியாதில் வாழும் ஒரு தமிழர் முழு உதவியும் செய்தார் என்பது மிகுந்த போற்றுதலுக்கும் நன்றிக்கும் உரிய மனித மீட்பு செயலாகும்.. 

▪️மேலும் நான் பல ஆண்டு கழித்து செல்வதால் எனது மகளுக்கு மொபைல் வாங்கி கொடுக்க வேண்டும் எனவே அதையும் வாங்கித் தருமாறு கேட்டுக் கொண்டார் , அதையும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.

▪️மேலும் பாதிக்கப்பட்ட கண்ணனை மீட்க பலரும் பல்வேறு வகையில் உதவ முன் வந்தார்கள் என்பது மிகுந்த பாராட்டுதலுக்கும் நன்றிக்கும் உரியது

▪️கண்ணன் தங்கி இருந்த இடங்களில் அவருக்கு உணவு உள்ளிட்ட இயற்கை தேவைகளை நிறைவேற்ற உதவிய RT தமிழ் உணவக ரஷாக் அஷ்ரஃப் உள்ளிட்ட நண்பர்களும் ஊழியர்களும் பத்தா கிளை பாஷா, இலங்கை லெப்பை, ஹசன் சுளை கிளை செயலாளர் நீடூர் சாதிக் மேலும் மருத்துவர் ரீதியாக உதவிய மரு. அப்துல் ஜலீல் விமான டிக்கெட் வகையில் உதவிய பக்தா கிளை செயலாளர். ரமீஷ் , ஆடிட்டர் சாஜித், அம்ஜத் உள்ளிட்ட அனைத்து மக்களும் உறுதுணையாக இருந்தார்கள் என்றால் அது மிகை இல்லை. இதற்கு உதவிய அனைவருக்கும் இதய அடி ஆழத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் ..

▪️ கடல் கடந்து கண்ணீரும் கம்பளையுமாய் குடும்பத்தை தொடர்பு கொள்ள முடியாமல் பொது பூங்காவில் படுத்து நோயோடு அவதிப்பட்ட கண்ணனை மிகுந்த சிரமத்தோடு பலரின் தியாக ஒத்துழைப்போடு தாயகம் அனுப்பி வைத்த ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் அமைப்பிற்கு குடும்பத்தினரும் நண்பர்களும் அவர் மீது கரிசனை காட்டிய மக்களும் மிகுந்த பாராட்டுக்களையும் , நன்றிகளையும் கண்ணீர் மல்க நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்... 

▪️இதுபோன்ற கடல் கடந்த மனிதம் காக்கும் செயல் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியது , 
பிறர் நலன் பேணுவது தான் இஸ்லாம் என்பதை தனது செயல்பாட்டின் மூலம் உணர்த்தியதும் , தமிழர் என்ற இனமுண்டு தனியே அவருக்கு குணமுண்டு என்ற சொல்லை மெய்ப்பிக்கும்  இது போன்ற மனிதநேய சேவைகளை தொடர வாருங்கள் கரங்களை கோர்த்து அறங்களை காப்போம்... 

என்றென்றும் மனிதநேய சேவையில்..

இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்(IWF)
சமூக நலத்துறை 
மத்திய மண்டலம்
ரியாத் - சவுதி அரேபியா

வக்ப் திருத்தச் சட்டம் 2024

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


வக்ப் திருத்தச் சட்டம் 

அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின்
ஓர் அதிமுக்கிய அவசர அறிவிப்பு

வக்ஃப் திருத்த மசோதாவை எதிர்த்து நாடாளுமன்றக் கூட்டு நடவடிக்கை (JPC) குழுவிற்குக் கடிதம் அனுப்புவதற்கான கடைசித் தேதி செப்டம்பர் 13, 2024 என்பதை அகிலஇந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறது. 

இன்னும் சில நாட்களே உள்ளன. 

நாடு முழுவதும் உள்ள மக்களின் கருத்து விரைவில் JPCயை சென்றடைய வேண்டும். 

எனவே JPC க்கு மின்னஞ்சல்
 அனுப்ப அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தினால் தயாரிக்கப்பட்ட தமிழ், உருது மற்றும் ஆங்கிலம் ஆகிய  மொழிகளில் விளக்க வீடியோக்களின் இணைப்பு சுட்டி மற்றும் QR குறியீடு தரப்பட்டுள்ளது. 

அதிக எண்ணிக்கையில் நமது எதிர்ப்பு   நாடாளுமன்றக் கூட்டு நடவடிக்கை (JPC) குழுவிற்குச் செல்ல இதனைப் பரப்புவீர்

கண்ணியத்திற்குரிய இமாம்கள் வரும் ஜூம்ஆவில் இது குறித்து விழிப்புணர்வு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்

எதிர்ப்பைப் பதிவு செய்ய இணையதளச் சுட்டி


🔗Portal link to send letter to JPC:- 
Portal : https://tinyurl.com/is-no-waqf-amendment

*Video Tutorial Tamil:- https://youtube.com/shorts/4G7gvLXbNds?si=ayv8m71iVlAuMCOp

*Video Tutorial Urdu:- https://tinyurl.com/is-no-waqf-amendment-video

*Video Tutorial English:- https://youtube.com/shorts/p4Qfsnh9gTk?si=30VrZ458pHiE5tQA

📞Help 
 9429690784, 9429693133, 9065720887

————————————
எதிர்ப்பை பதிவு செய்ய மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:

jpcwaqf-lss@sansad.nic.in

is.no.waqfamendment002@gmail.com

மின்னஞ்சல் வாசகம்;

Dear Members of the Joint Parliamentary Committee,

I strongly oppose the Waqf Amendment Bill. It violates fundamental rights, Islamic charity laws, and established judicial principles while introducing significant operational inefficiencies.

If adopted, this bill will transfer a majority of the control of Waqf properties to the government, reduce these properties through reclassification, and establish an opaque, biased, and inefficient structure for managing Waqf assets.

Such legislation erodes public trust in the Constitution. I urge you to revoke this bill immediately.

Sincerely,

(உங்கள் பெயர், முகவரி)

Sunday 8 September 2024

மின்னூல் (E-book) தோன்றிய வரலாறு மற்றும் தமிழில் மின்னூல் உருவாக்கம்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மின்னூல் (E-book) தோன்றிய வரலாறு மற்றும் தமிழில் மின்னூல் உருவாக்கம். 

மின்னூல்கள், அல்லது E-books, இன்றைய நவீன உலகில் நூலகங்களை உட்பொதிக்கும் ஒரு சாதனமாக மாறியுள்ளன. மின்னூல் என்ற சொல் "Electronic Book" என்பதற்குரிய சுருக்கமாகும். மின்னூல்களின் தோற்றம் கடந்த சில தசாப்தங்களில் இடம்பெற்றுள்ள ஒரு மிகப்பெரிய மாற்றமாகக் கருதப்படுகிறது. 

மின்னூல்களின் ஆரம்பகால வரலாற்றை நோக்கும்போது, 1971ஆம் ஆண்டு, மைக்கேல் ஹார்ட் என்ற மாணவர் அமெரிக்காவில் இங்கிலாந்தின் பிரம்மாண்டப் புத்தகமான "Declaration of Independence" வின் மின்னீட்டையை உருவாக்கியதை காணலாம். இதுவே உலகின் முதலாவது மின்னூலாகப் பார்க்கப்படுகிறது. இது 'ப்ராஜெக்ட் குத்தென்பர்க்' (Project Gutenberg) என்னும் மாபெரும் மின்னூல் நூலகத்திற்கான அடித்தளமாக மாறியது.

இதனைத் தொடர்ந்து 1990களின் பிற்பகுதியில், இணையதளத்தின் வளர்ச்சியால் மின்னூல்களின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது. 1998ஆம் ஆண்டு, "SoftBook" மற்றும் "Rocket eBook" என்னும் மின்னூல் வாசிப்புப் பொறிகள் அறிமுகமாகின. இவை மின்னூல்கள் வெளியீடு மற்றும் வாசிப்பு முறையில் புதுமைகளை ஏற்படுத்தின. மின்னூல் வாசிப்பில் மாற்றத்தை ஏற்படுத்திய மற்றொரு முக்கியமான படியாக 2007 ஆம் ஆண்டில் அமேசான் நிறுவனம் அறிமுகம் செய்த "Kindle" சாதனம் குறிப்பிடத்தக்கது.

தமிழ் மின்னூல்கள் உருவாக்கம் மற்றும் வளர்ச்சியில் பலரும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளனர். அதில் முக்கியமாக மின்னூல் பதிப்பகங்கள் மற்றும் தமிழ் மின்னூல்களை உருவாக்கும் நிறுவனங்கள் காணப்படுகின்றன. தமிழில் மின்னூல்கள் பெருக வரம்பற்ற புத்தகக்களஞ்சியங்களை உருவாக்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. 

'கி.வா. ஜகந்நாதன்' (Ki. Vaa. Jagannathan) போன்ற எழுத்தாளர்கள் தமிழின் முதல் மின்னூல்களை வெளியிட்டனர். 2000களின் முற்பகுதியில், 'தமிழ் இணையம்' போன்ற அமைப்புகள் தமிழ் மின்னூல்கள் மற்றும் தமிழ் மின்னூல்களின் பிரச்சாரத்தில் முன்னிலை வகித்தன. இணையவழி தமிழ் நூல்களைக் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு விரிவாகக் கொண்டு செல்லும் நோக்கில் "தமிழ் இணையக் கல்விக்கழகம்" (Tamil Virtual Academy) போன்ற அமைப்புகள் மின்னூல்கள் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளன.

தமிழில் மின்னூல்களை உருவாக்கும் பதிப்பகங்களும் அதிகரித்தன. 'தமிழ் இணையம்', 'தமிழ் விக்கிபீடியா' போன்றவை மின்னூல் துறை வளர்ச்சிக்கு மாபெரும் பங்களிப்புச் செய்துள்ளன. குறிப்பாக, "தமிழ் மின்னூல்கள்" (Tamil E-books) என்ற இயக்கம் தமிழின் இலக்கியங்கள், கலை மற்றும் பண்பாட்டுத்தொட்டில்களில் புதிய அத்தியாயங்களைத் தொகுத்து, அவற்றை உலகெங்கும் பரப்ப வழிவகுத்துள்ளது.

மொத்தத்தில், மின்னூல்கள் தமிழ் வாசகர்களுக்கு புத்தகங்களை எளிதாகக் கையாளவும், இலக்கியத்தை விரிவாகப் படிக்கவும் ஒரு மிக முக்கியமான வாய்ப்பாக மாறியுள்ளது. தமிழில் மின்னூல் பதிப்புகள் தொடர்ந்து வளர்ந்து, உலகின் எந்த மூலையிலும் தமிழ்நூல்கள் எளிதில் கிடைக்கும் நவீன மூலமாக உருவாகியிருக்கின்றன.

social community development studies இணையவழி இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு. 2024

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

செப்டம்பர் 16 முதல் வகுப்புகள் ஆரம்பிக்கின்றன. 

இறைவனின் திருப்பெயரால்

கண்ணியத்துக்குரிய இமாம்கள் மற்றும் அரபிக் கல்லூரி மாணவ மாணவியருக்காக 
Hira skill development Academy  
நடத்தும்  social community development studies 
இணையவழி 
இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு. 
இன்ஷா அல்லாஹ் செப்டம்பர் 16 2024 முதல் திங்கள் - வெள்ளி வரை 
தினமும் இரவு 8.30 - 9.30 மணி.  
ஓராண்டு சான்றிதழ் கல்வி மற்றும் பயிற்சி வகுப்பில் இணைய விரும்புவோர் தொடர்புகொள்ளுங்கள். 

இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்காக 
கடந்த 4 ஆண்டுகளாக திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வரும் பேராசிரியர் 
முஹம்மது அஸ்கர் அவர்களால் 
எதிர்கால சமூகத்தின் முன்னோடியாக திகழும் இமாம்கள் மற்றும் மார்க்க அறிஞர்களுக்காக இவ்வகுப்பு நடத்தப்படவிருக்கிறது. 
ஏற்கனவே 
Digital journalism, Digital Designing class, 
Education consultant trainers program 
போன்ற வகுப்புகளை தொடர்ந்து நடத்திவரும் சூழலில், 
தற்போது 
இமாம்கள், அரபிக் கல்லூரியில் பயின்று வரும் ஆலிம் மாணவர்கள் மற்றும் ஆலிமாக்களுக்காக  
Social Community development Studies 
என்ற இணைய வழி படிப்பினை ஓராண்டு சான்றிதழ் கல்வியாக வழங்கவிருக்கிறோம். 

முஸ்லிம் சமுதாயத்தின் மேம்பாட்டிற்காகவும், 
இஸ்லாமிய மார்க்க பணிக்காகவும் வாழ்நாள் முழுவதும் உழைக்கும் நமது ஆலிம் பெருமக்களுக்கு 
மார்க்க கல்வியுடன், சமூக, சமுதாய மேம்பாட்டுக்கான அனைத்து திறன்களும் இருக்க வேண்டியது 
காலத்தின் தேவையாக இருக்கிறது. 
அந்த வகையில் அரசமைப்பு, சட்டம், ஊடகம், தொழில்நுட்பம், உயர்கல்வி, மருத்துவம், உளவியல், வணிகம், தலைமைத்துவம், நிர்வாகம், மொழி என்று 50 தலைப்புகளில் சமூகத்தின் அனைத்துத் துறைகளை பற்றியும் தினசரி வகுப்பில் கற்றுக் கொடுப்பதுடன் 
உரிய பயிற்சியும் வழங்கவிருக்கிறோம். 
இந்த வகுப்பில் ஒவ்வொரு துறை சார்ந்த அதிகாரிகளும், பேராசிரியர்களும், நிபுணர்களும் பங்கேற்று வகுப்புகளை நடத்தவிருக்கிறார்கள். 
குறிப்பிட்ட இடங்கள் மட்டுமே நிரப்பப்படவிருக்கிறது. 
இந்தத் திறன்மேம்பாட்டு வகுப்பில் 
ஓராண்டு முழுமையாக கலந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்கிறோம். 
Admission contact 
Dr. M. Mohamed Askar 
Project Director 
Hira skill development Academy 
9080475780