Monday 9 September 2024

அல்குா்ஆனை ஓதுங்கள் " அரபுக் கவிதைகள் பாடுவதை தவிருங்கள்*...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

ரபீவுல் அவ்வல் 
சிந்தனைகள் 05*

அல்குா்ஆனை ஓதுங்கள்
 " அரபுக் கவிதைகள் பாடுவதை தவிருங்கள்*...

அல்லாஹ்வின் அருள்மறையான அல்குர் ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதினால். அதற்கு ஒரு நன்மை உண்டு. 
ஒரு நன்மை என்பது, அது போன்ற பத்து மடங்காகும். 
 "அலிஃப், லாம், மீம்" என்பதை ஒரு எழுத்து என்று கூறமாட்டேன்.
 எனினும் அலிஃப் என்பது ஒரு எழுத்து, 'லாம்' என்பது ஒரு எழுத்து. மீம்" என்பதை ஒரு எழுத்த ஆகும். 
 மூன்றும் மூன்று எழுத்துகளாகும். அம்மூன்றையும் ஒருவர் ஓதினால் ஒவ்வொன்றுக்கும் பத்து நன்மைகள் விதம் முப்பது நன்மைகளைப் பெறுவார் "

 நபிமொழி ஜாமிவுத் திர்மதீ:2910

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ مُغِيرَةَ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَنَا فَرَطُكُمْ عَلَى الْحَوْضِ، لَيُرْفَعَنَّ إِلَىَّ رِجَالٌ مِنْكُمْ حَتَّى إِذَا أَهْوَيْتُ لأُنَاوِلَهُمُ اخْتُلِجُوا دُونِي فَأَقُولُ أَىْ رَبِّ أَصْحَابِي. يَقُولُ لاَ تَدْرِي مَا أَحْدَثُوا بَعْدَكَ "".
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

நான் உங்களுக்கு முன்பே (மறுமை நாளில் அல்கவ்ஸர் ') தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். 

அப்போது உங்களில் சிலர் என்னிடம் கொண்டுவரப்படுவார்கள். 
நான் அவர்களுக்கு (தடாகத்திலிருந்து தண்ணீர்) வழங்க முற்படும்போது அவர்கள் என்னிடமிருந்து விலக்கிவைக்கப்படுவார்கள். 

உடனே நான், 'என் இறைவா! இவர்கள் என் தோழர்கள்' என்று கூறுவேன். 
அதற்கு அல்லாஹ், 'இவர்கள் உமக்குப் பின்னால் (புதிது புதிதாக) என்னென்ன (குழப்பங்களை) உருவாக்கினார்கள் என்று உமக்குத் தெரியாது' என்று கூறுவான்....

நபிமொழி புகாரி 7049.

நிச்சயமாக ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடு,
ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில்தான் கொண்டு சோ்க்கும் 
நபிமொழி சுனனுந் நஸாயீ 1560

அத் தக்வா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி புளியங்குடி
அத் தக்வா இஸ்லாமிய பயிலகம்

No comments:

Post a Comment