Thursday 5 September 2024

அல்லாஹ்வே! உன்னால் முடியாதது என்று எதுவுமில்லை.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்ஹம்துலில்லாஹ்!  வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்!

ஆட்சி அதிகாரம் எல்லாம் தன் கையில் வைத்துள்ளவனே! வல்ல அல்லாஹ்வே! உன்னால்   முடியாதது என்று எதுவுமில்லை.

சுட்டெரிக்கும் நெருப்பை இப்ராஹிம் நபி
அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்காக
குளிரவைத்தவனே!
ஆர்ப்பரிக்கும் ஆழ் கடலை நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைக்காப்பாற்ற
இரண்டாகப் பிளக்க வைத்தவனே!

எலும்புகள் மிகவும் பலவீனமடைந்து
தலைமுடி நரைத்த நிலையில்,  "மலடி யான என் மனைவியின் மூலம் எனக்கு ஒரு வாரிசை தா " என மனமுருகி கேட்ட நபி
ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு 
குழந்தைச் செல்வத்தை வழங்கியவனே!
ஃதவ்ர் குகையில் எங்கள் கண்மணி நபிகள் நாயகம்ﷺ அவர்களைக் காத்தவனே!
ஆட்சி அதிகாரங்களை அவர்களுக்கு வழங்கி  இப்பூமியில் ஒரு முன்மாதிரி சமுதாயத்தை உருவாக்கியவனே!

உன்னால் முடியாதது என்று எதுவுமே இல்லை.
உலகெங்கும் வாழும் முஸ்லிம்களின் துன்பங்களை நீக்குவாயாக!
அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் அவர்களுக்கான உரிமைகள் கிடைக்க நல்லுதவி செய்வாயாக!
நீதி என்பதை உலகில் நிலைப்பெறச் செய்திடுவாயாக!

பொருளாதார சிக்கலினால் தங்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற இயலாமல் தவிப்போருக்கு உதவி செய்வாயாக!
எங்களின் பாவங்களை மன்னித்தருள்வாயாக!ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!

No comments:

Post a Comment