Saturday 12 April 2014

அஜ்மான் இந்தியன் இஸ்லாஹி சென்டர் சார்பாக மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் 11-04-2014 – வெள்ளிக்கிழமை
(UAE-நேரம்) இரவு 07.00 மணி முதல் 08.15 மணி வரை  அஜ்மான் இந்தியன் இஸ்லாஹி சென்டர் சார்பாக ( INDIAN ISLAHI CENTER ) மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் .

அதில் சகோதரர் A.S.இபுராகிம் - பரமக்குடி அன்னை ஆயிஷா அறக்கட்டளை துபாய் கிளை தலைவர் சொர்க்கத்திற்கு உண்டான எழிய வழி என்ற தலைப்பில் அல்லாஹ்வும், அல்லாஹுவுடைய தூதர் முஹம்மது நபி (ஸல் ) சொன்ன கட்டளைகள் என்ன என்பதை அறிந்து அதன் பிரகாரம் நடக்க வேண்டும் எனவும் மேலும் சிறிய செயல்களாக இருந்தாலும் பெரிய செயல்களாக இருந்தாலும் அல்லாஹ்வும், அல்லாஹுவுடைய தூதர் முஹம்மது நபி (ஸல் ) கூறியிருக்கின்றார்களா என பார்த்து நம்முடைய வாழ்க்கையை அமைத்து கொள்ளவேண்டும் என அறிவுரை கூறபட்டது. 

இது ஏரளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்!

No comments:

Post a Comment