Sunday 6 April 2014

சமுதாய உறவுகள் இணையும் நாள் விரைவில் வரும் இறைவன் நாடினால்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

தன்னுடைய குடும்பம்,வேலையெல்லாம் விட்டுவிட்டு சுயநலம் பாராமல் சமுதாய நலனுக்காக தமுமுக,மமக தொண்டர்கள் மயிலாடுதுறை மண்ணிலே களமாடிகொண்டு இருகிறார்கள்.ஆனால் நேற்று வரை தோழனாய் இருந்து இன்று இயக்க வெறியால் வசைபாட இங்கே வந்து எமது தொண்டர்களின் மனதை வேதனை படுத்திய சகோதர்களே!இதயம் கனக்கிறது, ஒரு rss செய்து இருந்தால் வலித்து இருக்காது ! ஒரு பிஜேபி,செய்து இருந்தால் வலித்து இருக்காது!ஆனால் மார்க்கம் பேசிய வாயால் கீழ்த்தரமான வார்த்தைகளை பேசியாதல் எமது சமுதாய தொண்டன் வேதனை அடைகிறான் உறவே ..தங்களின் நேர்வழிக்கு இறைவனிடம் பிரார்த்திக்குறேன் மிகுந்த மன வேதனையோடு..இயக்க உறவுகளே கவலைபடாதீர்கள் அபுசுபியான் கூட இஸ்லாத்திற்கு மாறிய வரலாறு உண்டு ..நிலைமை மாறும் சமுதாய உறவுகள் இணையும் நாள் விரைவில் வரும் இறைவன் நாடினால்.

2:286. அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”

தமுமுக மாநில மாணவர் அணி செயலாளர் ...
முஹம்மது சர்வத்கான்

No comments:

Post a Comment