Tuesday 2 April 2024

கருணையாளனே ! பரக்கத் நிறைந்த ரமளான்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்ஹம்துலில்லாஹ் ! வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ் !

கருணையாளனே ! பரக்கத் நிறைந்த ரமளான் மாதத்தில் உன்னை வணங்கவும் நோன்பு நோற்கவும் வாய்ப்பளித்த வல்லோனே ! உன்னைப்  போற்றுகின்றேன். புகழ்கின்றேன். துதிக்கின்றேன். உனது திருத்தூதர் நபிகளார் முஹம்மத் (ஸல்) அவர்கள்மீது ஸலவாத்தும் சொல்கின்றேன்.

இறைவா !
வருங்காலத்திலும் நாங்கள் ஐங்காலத் தொழுகைகளை தொழுது வணங்கிட எங்களுக்கு அருள்புரிவாயாக !
மகிழ்ச்சிகரமான இந்நந்நாளில் உன் அருள் வளங்களை எங்களுக்கு வழங்குவாயாக ! மகிழ்ச்சியைத் தருவாயாக !

யா அல்லாஹ் ! 
எங்கள் இல்லத்தை நலன்களும், வளங்களும்
நிறைந்த இல்லமாக 
ஆக்குவாயாக !
யா அல்லாஹ் !
எங்கள் இல்லத்தை
நேர்வழியும், இறைஅச்சமும்
நிறைந்த இல்லமாக 
ஆக்குவாயாக !

யா அல்லாஹ் !
எங்கள் இல்லத்தை
ஆரோக்கியமும் பாதுகாப்பும்
நிறைந்த இல்லமாக 
ஆக்குவாயாக !
யா அல்லாஹ் !
எங்கள் இல்லத்தை
மகிழ்ச்சியும், குதூகலமும்
நிறைந்த இல்லமாக
ஆக்குவாயாக !

யா அல்லாஹ் !
எங்கள் இல்லத்தை
உன் கருணையும், மன்னிப்பும்
நிறைந்த இல்லமாக
ஆக்குவாயாக !
யா அல்லாஹ் !
எங்கள் இல்லத்தை
தஸ்பீஹும், இஸ்திஃபாரும்
நிறைந்த இல்லமாக 
ஆக்குவாயாக !

யா அல்லாஹ் !
எங்கள் இல்லத்தை
அமைதியும், நிம்மதியும்
நிறைந்த இல்லமாக
ஆக்குவாயாக !
யா அல்லாஹ் !  எங்களின் துஆவை ஏற்று கபுல் செய்வாயாக ! எங்கள் மனங்களுக்கு அமைதியை நல்குவாயாக ! ஆமீன் ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் !

முபாரக்கான லைத்துல்கத்ர் இரவாக இருக்க வாய்ப்பு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


அல்ஹம்துலில்லாஹ் ! வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ் !

யா அல்லாஹ் !
முபாரக்கான லைத்துல்கத்ர் இரவாக இருக்க வாய்ப்புள்ள ஒற்றப்படையுள்ள நாள் ஸஹர்  நேரத்தில் கேட்கிறோம்.

" அல்லாஹும்ம இன்னக்க அஃபுவுன் துஹிப்புல் அஃப்வ ஃப’ஃபு அன்னீ "

அல்லாஹ்வே !
நீ மன்னிப்பவன். 
மன்னிப்பதையே
விரும்புபவன். 
எனவே என்னுடைய பாவங்களை
மன்னித்தருள்வாயாக !

அல்லாஹ்வே !
நீ மன்னிப்பவன். மன்னிப்பதையே விரும்புபவன். 
எனவே என்னுடைய
மனைவி, என் சந்ததியினரின் பாவங்களை
மன்னித்தருள்வாயாக !

அல்லாஹ்வே !
நீ மன்னிப்பவன். மன்னிப்பதையே விரும்புபவன். 
எனவே என்னுடைய
பெற்றோர்களின் பாவங்களையும் அவர்களின் பெற்றோர்களின் பாவங்களையும்
மன்னித்தருள்வாயாக !

அல்லாஹ்வே !
நீ மன்னிப்பவன். மன்னிப்பதையே விரும்புபவன்.
எனவே என்னுடைய 
சகோதர, சகோதரிகளின்
பாவங்களையும்
அவர்கள் சந்ததியினரின் பாவங்களையும்
மன்னித்தருள்வாயாக !

அல்லாஹ்வே !
நீ மன்னிப்பவன். மன்னிப்பதையே விரும்புபவன்.
எனவே என்னுடைய
பெற்றோர்களுடன் பிறந்த சகோதர சகோதரிகளின் பாவங்களையும்
அவர்களின் சந்ததியினரின் பாவங்களையும்
மன்னித்தருள்வாயாக !

அல்லாஹ்வே !
நீ மன்னிப்பவன்
மன்னிப்பதையே
விரும்புபவன். 
எங்களுடைய பாவங்களை மன்னிப்பாயாக ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் !

என் தற்போதைய நிலை என்ன? என் பழைய காலத்தின் நிலை என்ன,?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

உடலில் இரத்த ஓட்டம் வேகமாக இருக்கும் காலமெல்லாம் மனிதனின் வேகமும் அதிகரிக்கும்.

அதன் வேகம் குறைந்து, நாடி நரம்புகள் தளர்ந்து விட்டால், மனிதன் அப்போது தான் யோசிக்கின்றான்.. 

என் தற்போதைய நிலை என்ன? என் பழைய காலத்தின் நிலை என்ன,?

என்னவெல்லாம் ஆட்டம் போட்டேன்.? எப்படியெல்லாமோ வாழ்ந்தேனே..? 

எவ்வளவு பேர்களின் உபதேசங்களை புறந்தள்ளியுள்ளேன்.?

யாரின் பேச்சிக்கும் முகம் கொடுக்க வில்லையே,..! என கவலையில் உளருவான்.. கண்ணீர் மல்க மருகுவான்..

ஆம்... மனிதா. அந்நேரம் நீ கவலைப்படுகையில்
 உன் வாழ்வின் இறுதி நேரமும் இறைவனால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருக்கும்..!

உன்னோடு உள்ளவர்களும் உன்னை விட்டு போயிருப்பர்..!!

அப்போது உனக்கு அருகில் உன்னை தேற்றவோ, ஆறுதல் அளிக்கவோ, உபதேசிப்பவரோ எவரும் இருக்க மாட்டார்..,

இது தான் சரியான நேரம். நாம் திருந்துவதற்கு. என்று அப்போது முடிவெடுக்காதே..

இப்பொழுதே... இந்த புனிதமிகு மாதத்தின் இறுதிக் கட்டத்திலே... நான் மாறப் போகின்றேன்.. 

என்னை என் இறைவன் பால் முழுமையாக ஓப்படைக்க போகின்றேன். என்ற முடிவை எடு..

கருணையாளனின் மன்னிப்பை பெற ஓடு... 

அழுது கண்ணீர் துளிகளை சிந்திவிடு. பாவமன்னிப்பை கேளு..

யா! அல்லாஹ்!  நீ மன்னிக்கக் கூடியவன். மன்னிப்பை விரும்புபவன்.  என்னை நீ மன்னிப்பாயாக!

சிறிது நேர மாற்றம் வேண்டாம் இறைவா..

என்னுள் முழுமையான மாற்றத்தைத் தா.. என மனமுறுகி பிரார்த்திப்போம்.
அவன் அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பவன். மகத்தான கருணையாளன்..

பெற்றோர்களே...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

பெற்றோர்களே...

இறைவனது செல்வ வளங்களையும் பேரருள் பொக்கிஷங்களையும் எளிதாகப் பெற்றுத்தரும் கருணை மிகுந்த கடைசி 10 நாட்களின் துஆக்களில் உங்கள் பிள்ளைகளுக்காக இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

என் இறைவனே... என் பிள்ளைகளின் அறிவையும்  உள்ளத்தையும் உணவையும் ஹலாலாக்கி வைப்பாயாக.  

என் இறைவனே... உன் தீனுக்காக,இந்த உம்மத்துக்காக, உழைத்த, தியாகம் செய்த, முன்னோர்கள் அனைவரின் மீதும் மிகுந்த மரியாதையை என் பிள்ளைகளின் மனதில் விதைப்பாயாக.

என் இறைவனே.... எந்த ஒரு மனிதனுடைய மானத்துக்கும் உயிருக்கும் பொருளுக்கும் சிறு தீங்கு கூட செய்துவிடாமல் என் பிள்ளைகளை வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பாயாக.    

என் இறைவனே... எங்களுடன் வாழும் அனைத்து சமூக மக்களின் மத நம்பிக்கைகளை வழிபாட்டுத் தளங்களை கண்ணியமாக கருதும் மனப்பாங்கை என் பிள்ளைகளின் மனதில் விதைப்பாயாக.

என் இறைவனே... உன் நினைவிலும் உன் நிழலிலும் என் பிள்ளைகளின் அறிவை பேராற்றல் படுத்துவாயாக.    

என் இறைவனே... கல்வியைத் தாண்டி அறிவைத் தாண்டி மகத்துவமிக்க ஞானத்தின் வாயிலை என் பிள்ளைகளுக்கு திறந்து விடுவாயாக.    

என் இறைவனே... என் பிள்ளைகளுக்கு, உன் படைப்புகளின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தி அதன் இரகசியங்களை ஆராய்ச்சி செய்யும் ஸாலிஹான பிள்ளைகளாக ஆக்குவாயாக. 

என் இறைவனே.... உன்னுடைய தீனிலும்,உன்னுடைய படைப்புகள் குறித்த அறிவிலும் இதுவரை எந்த மனிதனுக்கும் வழங்கிடாத ஞானத்தை என் பிள்ளைகளுக்கு வழங்குவாயாக.  

என் இறைவனே... பெருகிவரும் நீரழிவுநோய் புற்றுநோய் சிறுநீரக செயலிழப்பு போன்ற நோய்களுக்கான எளிமையான இயற்கை மருந்தை கண்டறியும் ஞானத்தை என் பிள்ளைகளுக்குத் தருவாயாக.

நம்புங்க மக்களே. 🥹தேர்தல் ஆணையம் என்பது மிகவும் நேர்மையாக நடுநிலையோடு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

1.  பாஜக வுடன் டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் செய்த அன்றே அக்கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் ஆணை.

2.  பாஜக வுடன் டாக்டர் ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் கூட்டணி அமைத்து ஒப்பந்தம் செய்த அன்றே அக்கட்சிக்கு மாம்பழம் சின்னம்  தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

3.  பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு.

4.  நடிகர் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கேட்டு உச்ச நீதிமன்றம் வரை சென்றும் மறுப்பு.

5.  தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள வை.கோ. வின் ம.தி.மு.க. வுக்கு பம்பரம் சின்னம் கேட்டு இதுவரை வழங்கப்படாத நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதற்காக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

6.  தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் கேட்டு இதுவரை ஒதுக்கீடு செய்யப்படாமல் இழுத்தடிப்பு.

இதிலிருந்து சகலமானவர்களுக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், இந்திய தேர்தல் ஆணையம் என்பது மிகவும் நேர்மையாக நடுநிலையோடு நடந்து கொள்கிறது. 

நம்புங்க மக்களே. 🥹

தேர்தல் ஆணையமே இருக்காது..

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

தேர்தல் ஆணையமே இருக்காது...

தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் குழுவில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெற்றிருந்தனர்.

 இப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிலாக பிரதமர் நியமனம் செய்யும் ஓர் ஒன்றிய அமைச்சர், குழுவில் இடம் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 கடந்த தேர்தல் நடந்தபோது தேர்தல் ஆணையராக இருந்தவர் அசோக் லவாசா. அவர் திடீரென ராஜினாமா செய்தார். 

இவர் 2019 தேர்தலின்போது மோடியும், அமித்ஷாவும் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தெரிவித்தார். 

மற்ற இரண்டு ஆணையர்கள் மோடியும் அமித்ஷாவும் குற்றவாளிகள் இல்லை என்று எழுதினர்.  

அந்த பின்னணியில் லவாசா ராஜினாமா செய்தார். 

வேறு வழியில்லாமல் தான் ராஜினாமா செய்ததாக பின்னர் அவர் கூறினார். 

லவாசா ராஜினாமா செய்த பிறகு அவரை மோடி அரசு வேட்டையாடத் தொடங்கியது. 

அவர் மனைவி நடத்தி வந்த நிறுவனத்தை வருமான வரித்துறை சோதனை செய்தது.

 மகளது நிறுவனத்தையும் விட்டுவைக்கவில்லை.

 அவரது சகோதரி வேலை செய்த நிறுவனத்தை சோதனையிட்டனர்.

 ஐஏஎஸ் அதிகாரியான அவரது மகனை பழிவாங்கும் வகையில் இடமாற்றம் செய்தனர்.

 சமீபத்தில் அருண் கோயல் என்கிற தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்தார். 

ஐஏஎஸ் அதிகாரியான அவரது நியமனத்தில் ஏற்கனவே உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது.

 ஆனால் அவர் நேர்மையானவர் என்று கூறி நியமனம் செய்யப்பட்டவர். 

தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறபோதே புதிதாக இரண்டு தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்கிறார்கள். 

மோடி மீண்டும் வெற்றி  பெற்றுவிட்டால் தேர்தல் என்பதே இருக்காது.

தேர்தல் ஆணையமே இருக்காது.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் நடந்த சிபிஎம் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில்  சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் பேசியதில் இருந்து...

நன்றி தீக்கதிர் நாளிதழ்

மறுமையில் இழப்பை ஏற்படுத்தும் காரியம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மறுமையில் இழப்பை ஏற்படுத்தும் காரியம்

நபி (ஸல்) அவர்கள் மூன்று நபர்களிடம் மறுமையில் அல்லாஹ் பேசவுமாட்டான்; பார்க்கவுமாட்டான்; தூய்மைப்படுத்தவுமாட்டான் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு” என்று மூன்று முறை கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! நஷ்டத்திற்கும் இழப்புக்கும் உரிய அவர்கள் யார் என்று கேட்டேன் தமது ஆடையை (கணுக்காலுக்குக் கீழே இறக்கிக் கட்டியவர் (செய்த உதவியை) சொல்லிக் காட்டுபவர், (அவர் எதை வழங்கினாலும் அதைச் சொல்லிக் காட்டாமல் இருக்க மாட்டார் பொய்ச் சத்தியம் செய்து விற்பன செய்பவர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல்: முஸ்லிம்-171

எதிர்கால வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

எதிர்கால வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்....

(பஷீர் அஹமது (Basheer Ahamed, London)அவர்களின் பயனுள்ள பதிவு)

எனது  அன்பு  இஸ்லாமிய  வாலிபர்களே  இளைஞர்களே   உங்களுக்கு  தான்  இந்த  செய்தி  :--

1970 முதல்   தமிழ்நாட்டின்  முஸ்லீம்  மக்கள்  அரபு நாடுகளாகிய   துபாய்  அபுதாபி  சார்ஜா   மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் , சவூதிஅரேபியா   பஹ்ரைன்   ஓமன்    கத்தார்  குவைத்து   போன்ற  நாடுகளுக்கு  ஆரம்ப  காலம்  முதல்  கடந்த  சில  ஆண்டுகள் வரை  பிழைப்பு  தேடி  போனவர்கள்  அதில்  நன்றாக  சம்பாதித்து  வெற்றி  கண்டவர்கள் பலர்   , வீணா  போனவர்களும்  சிலர் உண்டு  

தற்போது  சவூதிஅரேபியா  வின்  மற்றும் அரபு  நாடுகளில்   வேலை  வாய்ப்பு மிகவும் குறைந்து  வருகின்றது   இது  யாவரும்  அறிந்ததே  

அரபு  நாடுகளுக்கு  மாற்றாக    வேறு  பல  இஸ்லாமிய நாடுகள்  அதிக  பெட்ரோல் வளம்  மிக்க  நாடுகளும்   உள்ளது  பலர்  இதனை  அறியாமல்  இருக்கலாம்    

தற்போது  அதில்  சில நாடுகளை  அறிந்து  கொள்ளுங்கள்  :--

அஜர்பெயிஜான்  -  97%  முஸ்லீமகள் 

கஜகஸ்தான்  - 70% முஸ்லீம்கள் 

உஜ்பெகிஸ்தான்  - 96% முஸ்லீமகள் 

துருக்மேனிஸ்தான்  - 89% முஸ்லீம்கள் 

இந்த  நாடுகள்  அதிக  எண்ணெய் வளம் (பெட்ரோல் ) உள்ள  செழிப்பான நாடுகள்  இந்த  நாடுகள்  பல  காலமாக  ரஷ்யாவின்  ஆதிக்கத்தில்  இருந்தது   தற்போது  சுதந்திர  நாடாக  (மக்கள்  குடியரசாக ) இருக்கிறது  

நிறைய  வேலை  வாய்ப்புகளும்   சுதந்திரமான  நாடுகள்  (அரபு  நாடுகள் போன்று  அடக்கு  முறை  இங்கே  கிடையாது )  

குறைவான  மக்கள் தொகையும்  அதிக  வளமும்  உள்ள   , நாகரீகமான  மென்மையான  மனிதர்கள்  வாழும்  நாடுகள் 

இனிமேல்  வரும்  , வளரும்  முஸ்லீம்  சமுதாயமக்களும்  , மற்ற  இந்திய  ஏழை  சமுதாய  மக்களும்   நமது  இந்திய  நாட்டில் வேலை  வாய்ப்பு  கிடைக்காதவர்களும்  இது  போன்ற  வளமான  நாடுகளுக்கு  சென்று  வேலை  வாய்பினை  பெற  முயற்ச்சி  செய்யலாம் .

முன்பு   நமது  முஸ்லீம் சமுதாய  மக்கள் போதிய   கல்வி  அறிவு  பெறாமலும்  , கல்வி அறிவு  பெற்றிருந்தாலும்  போதிய  திறமையை  வளர்த்து  கொள்ளாமல்  அரபு  நாடுகளுக்கு  கக்கூஸ்  கழுவ  , ரோடு போட  , ஒட்டகம்  ஆடு  மேய்க்க , பலதியாவில்  ரோட்டில்  குப்பை  கூட்ட  போனது  போல்  போகாமல் 

போதிய  கல்வியும்   திறமையும்  வளர்த்து  கொண்டு  இது  போன்ற  புதிய  நாடுகளுக்கு  சென்றால்   நல்ல  வேலை  வாய்ப்புகளை  பெறலாம்  

இந்த  நாடுகளில்   மக்கள்  நாகரீகமானவர்கள்  மென்மையானவர்கள் அழகானவர்கள்   , மனிதர்களை மதிக்க  கூடியவர்கள்    சூது வாது அறியாதவர்கள் 

இந்த  நாடுகளுக்கு  செல்லும்  திருமணம்  ஆகாத  இளம்  வயதினர்கள்   அந்த  நாடுகளிலேயே   திருமணம்  செய்து  கொண்டு   அங்கேயே  செட்டில்  ஆகி  விடலாம்   

இந்திய  பாஸ்போர்ட்டை   வைத்து  கொண்டு  ஆன் லைனில்  வருடா  வருடம்   பதிவு  செய்ய வேண்டிய  அவசியம்  இருக்காது  

மேலும்  விபரம்  தேவை  உள்ளவர்கள்  அந்த  அந்த  நாடுகளின்   அரசாங்க  வைப் சைட்டில் விரிவான  தகவலை  பெறலாம்  .

குறிப்பு  :- 

உங்களுக்கு   தேவையான  எல்லா  நாட்டு  இமிகிரேஷன்  தகவல்களும்  அந்த  அந்த  நாட்டின்  அரசாங்க  வைப் சைட்டில்  உள்ளது.

நன்றியுடன்....பகிர்ந்து...
                                ✍️  மதுரை.,இஸ்மாயில்.

சீர் வரிசையும் வரதட்சணையே

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இறைச்செய்தி மட்டுமே இறை மார்க்கம்

                                  (460)

வரதட்சணை

சீர் வரிசையும் வரதட்சணையே

பெண் வீட்டாரிடமிருந்து பணம் வாங்குவது மட்டுமே வரதட்சணை என்றும் டிவி ஃபிரிட்ஜ் பாத்திர பண்டங்கள் என பொருளாக வாங்கினால் இது வரதட்சணை இல்லை என்றும் பலர் கருதுகின்றனர். இது தவறாகும்.

பெண்வீட்டாரிடமிருந்து பணமாக வாங்கினாலும் பொருளாக வாங்கினாலும் வாங்கப்படும் அனைத்தும் வரதட்சணையாகும். பெண்வீட்டார் கடைகளில் பணத்தை கொடுத்துத் தான் இந்தப் பொருட்களை வாங்குகின்றனர்.

திருமணம் முடிந்து பெண்ணை கணவனின் வீட்டுக்கு அனுப்பும் போது வீட்டுக்குத் தேவையான பொருட்களை பெண்வீட்டார் கொடுத்து அனுப்புகின்றனர். இது நடைமுறையில் சீர்வரிசை என்று சொல்லப்படுகின்றது. மணப்பெண் வசதியாக வாழ வேண்டும் என்பதற்காகத் தான் சீர்வரிசை வழங்கப்படுகின்றது. இதில் என்ன தவறு உள்ளது? என்று சிலர் கேட்கின்றனர்.

தன் வீட்டுக்கும் தன் மனைவிக்கும் தேவையான பொருளை வாங்கித் தருவது கணவனின் கடமை. இது பெண்ணின் கடமையல்ல. கணவன் சம்பாத்தியத்தில் அவன் வாங்கித் தந்தப் பொருட்களை பாதுகாப்பது தான் மனைவியின் கடமை. மேலும் இந்த சீர்வரிசைப் பொருட்களை மனைவி மட்டுமின்றி இவனும் பயன்படுத்துகிறான். எனவே இது தெளிவான வரதட்சணையாகும்.

சிந்திக்க தூண்டும் ஹதீஸ்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

சிந்திக்க தூண்டும் ஹதீஸ்கள்

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு செய்திகளை காலத்திற்கேற்ப கூறியிருக்கிறார்கள். அவ்வாறு சொல்லப்பட்ட செய்திகளில் சிலவை நம்மை சிந்திக்க வைக்கின்றது. அவற்றை காண்போம்.

நெகிழ்வூட்டும் அறவுரைகள்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர்.

1. ஆரோக்கியம்.

2. ஓய்வு

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி-6412 

மனிதன் இந்த இரண்டு விஷயங்களில் அலட்சியம் செய்து தன்னை மிகுந்த இழப்பீட்டுக்கு உள்ளாக்குகின்றான். அவ்வாறு செய்வதால் தனது உடல் நிலை மிகவும் பாதிக்கப்படுவதாக ஆய்வு அறிக்கை சொல்கிறது. இப்பேற்பட்ட செய்தியை 1400 வருடங்களுக்கு முன் அல்லாஹ்வின் தூதர் தங்களது உம்மத்தார்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

பல் துலக்குதல் பற்றிய அறிவுரைகள்

நான் உங்களுக்கு அதிகமாக அறிவுறுத்துகிற விஷயம் என்னவெனில் பல் துலக்குதல் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘என் சமுதாயத்திற்குச் சிரமமாகி விடும் என்று இல்லாவிட்டால் ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்குமாறு நான் கட்டளையிட்டிருப்பேன்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி-887 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பல்துலக்குவது பற்றி நான் உங்களிடம் (திரும்பத் திரும்ப) பல முறை வலியுறுத்தியுள்ளேன்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி-888 

நபி (ஸல்) அவர்கள் இரவில் (உறங்கி) எழுந்ததும் பல் துலக்குவார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி-889

நடைபாதைகளிலும் நிழல்(உள்ள இடங்)களிலும் மலம் கழிப்பதற்கு வந்துள்ள தடை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சாபத்திற்குரிய இரு செயல்களைத் தவிர்த்து விடுங்கள் என்று கூறினார்கள். மக்கள், சாபத்திற்குரிய அவ்விரு செயல்கள் என்ன, அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள். அதற்கு, மக்களின் நடைபாதையில், அல்லது அவர்களின் (ஓய்விடங்களான) நிழல்களில் மலம் கழிப்பதுதான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம்-448 

அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி-5678 

தாடி வளர்ப்பதால் ஏற்படும் பயன்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள். தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி-5892 

முஃமினான ஆண்கள் தங்கள் தாடிகளை வளர்த்து இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மிகவும் வலியுறுத்தி கூறியிருக்கிறார்கள். தாடி வளர்ப்பதனால் பெறக்கூடிய நன்மைகள் ஏராளம் என இன்றைய விஞ்ஞானம் கூறுகிறது.

உறங்கியெழுந்ததும் மூக்கை கழுவுதல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உறங்கியெழுந்ததும் (தமது மூக்கிற்குள் நீர் செலுத்தி) மூன்று முறை மூக்குச் சிந்தட்டும். ஏனெனில், இரவில் ஷைத்தான் அவரது உள்மூக்கில் தங்குகிறான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம்-403

நாய்களை கொள்ளுமாறு வந்த உத்தரவு

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஆரம்பத்தில்) நாய்களைக் கொல்லுமாறு உத்தரவிட்டார்கள். பின்னர் மக்களுக்கும், நாய்களுக்கும் என்ன நேர்ந்தது (அவர்கள் நாய்களை ஏன் கொல்ல வேண்டும்)? என்று கேட்டார்கள். பின்னர் வேட்டை நாய்களுக்கும், கால்நடைகளின் பாதுகாப்பிற்காக வைத்திருக்கும் நாய்களுக்கும் அனுமதியளித்தார்கள். மேலும் பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் ஏழு தடவை (தண்ணீரால்) கழுவிக் கொள்ளுங்கள். எட்டாவது தடவை மண்ணிட்டுக் கழுவுங்கள் என்று கூறினார்கள்.

யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் கால்நடைகளின் பாதுகாப்பிற்காக,வேட்டையாடுவதற்காக, விவசாயப் பண்ணைகளைப் பாதுகாப்பதற்காக வைத்திருக்கும் நாய்களுக்கு அனுமதியளித்தார்கள் என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அல்முகஃப்பல் (ரலி)
நூல் : முஸ்லிம்-473 

ஒரு மனிதன் இவ்வுலகில் சுயமரியாதையோடும், சுகாதாரத்தோடும், மக்களுக்கு என்றென்றும் நன்மை தரக்கூடிய ஏராளமான செய்திகளை அல்லாஹ்வின் தூதர் அவர்கள் நல்லுபதேசங்களாக நமக்கு அறிவுரை கூறியுள்ளார். அதனை நம் வாழ்வில் தவறாது கடைபிடிக்க வேண்டும்.

இதுப்போன்ற இன்னும் ஏராளமான நபிகளாரின் பொன்மொழிகள் நம்மை சிந்திக்க தூண்டுகின்றன. அவை யாவும் இன்றளவும் நமக்கு நன்மை பயக்கவும் செய்கின்றன. அது போன்ற நன்மைகளை செய்யும் நன்மக்களாக நாம் மாற வேண்டும் என்று அல்லாஹ்விடத்தில் பிரார்த்தித்து என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்