Sunday 8 September 2024

social community development studies இணையவழி இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு. 2024

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

செப்டம்பர் 16 முதல் வகுப்புகள் ஆரம்பிக்கின்றன. 

இறைவனின் திருப்பெயரால்

கண்ணியத்துக்குரிய இமாம்கள் மற்றும் அரபிக் கல்லூரி மாணவ மாணவியருக்காக 
Hira skill development Academy  
நடத்தும்  social community development studies 
இணையவழி 
இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு. 
இன்ஷா அல்லாஹ் செப்டம்பர் 16 2024 முதல் திங்கள் - வெள்ளி வரை 
தினமும் இரவு 8.30 - 9.30 மணி.  
ஓராண்டு சான்றிதழ் கல்வி மற்றும் பயிற்சி வகுப்பில் இணைய விரும்புவோர் தொடர்புகொள்ளுங்கள். 

இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்காக 
கடந்த 4 ஆண்டுகளாக திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வரும் பேராசிரியர் 
முஹம்மது அஸ்கர் அவர்களால் 
எதிர்கால சமூகத்தின் முன்னோடியாக திகழும் இமாம்கள் மற்றும் மார்க்க அறிஞர்களுக்காக இவ்வகுப்பு நடத்தப்படவிருக்கிறது. 
ஏற்கனவே 
Digital journalism, Digital Designing class, 
Education consultant trainers program 
போன்ற வகுப்புகளை தொடர்ந்து நடத்திவரும் சூழலில், 
தற்போது 
இமாம்கள், அரபிக் கல்லூரியில் பயின்று வரும் ஆலிம் மாணவர்கள் மற்றும் ஆலிமாக்களுக்காக  
Social Community development Studies 
என்ற இணைய வழி படிப்பினை ஓராண்டு சான்றிதழ் கல்வியாக வழங்கவிருக்கிறோம். 

முஸ்லிம் சமுதாயத்தின் மேம்பாட்டிற்காகவும், 
இஸ்லாமிய மார்க்க பணிக்காகவும் வாழ்நாள் முழுவதும் உழைக்கும் நமது ஆலிம் பெருமக்களுக்கு 
மார்க்க கல்வியுடன், சமூக, சமுதாய மேம்பாட்டுக்கான அனைத்து திறன்களும் இருக்க வேண்டியது 
காலத்தின் தேவையாக இருக்கிறது. 
அந்த வகையில் அரசமைப்பு, சட்டம், ஊடகம், தொழில்நுட்பம், உயர்கல்வி, மருத்துவம், உளவியல், வணிகம், தலைமைத்துவம், நிர்வாகம், மொழி என்று 50 தலைப்புகளில் சமூகத்தின் அனைத்துத் துறைகளை பற்றியும் தினசரி வகுப்பில் கற்றுக் கொடுப்பதுடன் 
உரிய பயிற்சியும் வழங்கவிருக்கிறோம். 
இந்த வகுப்பில் ஒவ்வொரு துறை சார்ந்த அதிகாரிகளும், பேராசிரியர்களும், நிபுணர்களும் பங்கேற்று வகுப்புகளை நடத்தவிருக்கிறார்கள். 
குறிப்பிட்ட இடங்கள் மட்டுமே நிரப்பப்படவிருக்கிறது. 
இந்தத் திறன்மேம்பாட்டு வகுப்பில் 
ஓராண்டு முழுமையாக கலந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்கிறோம். 
Admission contact 
Dr. M. Mohamed Askar 
Project Director 
Hira skill development Academy 
9080475780

#இணையதளவானொலி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

#இணையதளவானொலி

#Webradio

#internetradio

#internetradiostation
#NesamMedia

Online Media Service

இணைய தள வானொலி என்பது ஆன்ட்ராய்ட் மொபைல்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் மிகுந்த வரவேற்பை பரவலாகப் பெற்று வருகிறது.

உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் அனைத்து பகுதிகளிலும் பரவலாக கேட்க முடியும் என்பதாலும்,கிராமங்கள் தொடங்கி பெரு நகரங்கள் வரை அனைவரும் இணைய தொழில்நுட்பங்களை பயன்படுத்தத் தொடங்கிவிட்டதாலும் இணைய தள வானொலியை தொடங்கி வர்த்தக ரீதியாக வெற்றி பெறுவதற்கான சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட நகரத்தையோ அல்லது ஒரு மாவட்டத்தையோ மையமாக வைத்து இணைய தள வானொலி நிகழ்ச்சிகளை வழங்கலாம்.

ஆன்மீகம்,இலக்கியம்,கல்வி,பொழுதுபோக்கு,வர்த்தகம்,சமூக மேம்பாடு,மகளீர் குழந்தைகள் நலம்,அறிவியல்,தொழில் நுட்பம்,மரபு,பண்பாடு,கலை என பல தரப்பட்ட பயனுள்ள நிகழ்ச்சிகளை இணைய வானொலிகள் முலமாக வழங்கலாம்.

வளரும் கலைஞர்களை,சிறு தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கலாம்.

மக்களுக்கு மன ஆறுதல் தருவதில் வானொலிக்கு நிகரான வேறொரு ஊடகம் இல்லை.

வருவாய் வாய்ப்பு :

நிகழ்ச்சிகளுக்கிடையே வர்த்தக
விளம்பரங்களை ஒலிபரப்பி வணிக வளர்ச்சி மேம்படுவதற்கு 
இணைய வானொலியை சிறப்பாக பயன்படுத்த முடியும்.

சிறுதொழில் முனைவோரை சந்தித்து அவர்களின் உற்பத்திப் பொருட்களின் தனிச்சிறப்புகளைப் பற்றி வானொலியில் விளக்கமாக பேசி உள்ளூர் வணிகத்தை வளர்க்கவும்,உலகலாவிய அளவில் தொழில் முனைவோரை அறிமுகப்படுத்தவும் வானொலியை பயன்படுத்தலாம்.

இணைய வானொலி தேவையானவை :

மிகச் சிறிய முதலீட்டில் இணைய தள வானொலிக்கான தொழில்நுட்பம் சார்ந்த தேவைகள் அனைத்தையும் நாம் உருவாக்கிக்கொள்ள முடியும்.

நமது வானொலி தனக்குரிய பிரத்யேக அங்கீகாரத்தை பெறுவதற்கு ஒரு "பிராண்ட்  "
பெயரை உருவாக்க வேண்டும்.

அதற்காக நம் இணைய வானொலி ஊடகத்திற்காக 
1.ஒரு இணைய தளம்,
2.ஒரு ஆன்ட்ராய்டு செயலி,
3.இணைய வானொலி சர்வர்,
4.கணிணியில் நேரலை வழங்கும் மென்பொருள்,
5.மொபைல் மூலம் நேரலை செய்வதற்கான மொபைல் செயலி,
6.ஒலிப்பதிவு செய்வதற்கான தரமான மென்பொருள்
 
ஆகியவை தேவை.

அனைத்து தொழில்நுட்பங்களையும் உருவாக்க எங்களை அழைக்கவும்.

Play Store Link :

https://play.google.com/store/apps/de...

நேசம் மீடியா

செல் & வாட்ஸப் :
+91 8668103301

மின்னஞ்சல் : 
nesammedia@gmail.com


Published By :
Nesam Media Works,
Karaikal.
Cell : +91 8668103301
email : nesammedia@gmail.com
website : www.nesammedia.com
online Media : www.nesaganam.com

http://www.magiizhchifm.com/

Android App : Nesaganam
FaceBook: https://www.facebook.com/people/நேசம் மீடியா ஒர்க்ஸ்
https://twitter.com/MediaNesam?s=09

Thursday 5 September 2024

அல்லாஹ்வே! உன்னால் முடியாதது என்று எதுவுமில்லை.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்ஹம்துலில்லாஹ்!  வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்!

ஆட்சி அதிகாரம் எல்லாம் தன் கையில் வைத்துள்ளவனே! வல்ல அல்லாஹ்வே! உன்னால்   முடியாதது என்று எதுவுமில்லை.

சுட்டெரிக்கும் நெருப்பை இப்ராஹிம் நபி
அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்காக
குளிரவைத்தவனே!
ஆர்ப்பரிக்கும் ஆழ் கடலை நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைக்காப்பாற்ற
இரண்டாகப் பிளக்க வைத்தவனே!

எலும்புகள் மிகவும் பலவீனமடைந்து
தலைமுடி நரைத்த நிலையில்,  "மலடி யான என் மனைவியின் மூலம் எனக்கு ஒரு வாரிசை தா " என மனமுருகி கேட்ட நபி
ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு 
குழந்தைச் செல்வத்தை வழங்கியவனே!
ஃதவ்ர் குகையில் எங்கள் கண்மணி நபிகள் நாயகம்ﷺ அவர்களைக் காத்தவனே!
ஆட்சி அதிகாரங்களை அவர்களுக்கு வழங்கி  இப்பூமியில் ஒரு முன்மாதிரி சமுதாயத்தை உருவாக்கியவனே!

உன்னால் முடியாதது என்று எதுவுமே இல்லை.
உலகெங்கும் வாழும் முஸ்லிம்களின் துன்பங்களை நீக்குவாயாக!
அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் அவர்களுக்கான உரிமைகள் கிடைக்க நல்லுதவி செய்வாயாக!
நீதி என்பதை உலகில் நிலைப்பெறச் செய்திடுவாயாக!

பொருளாதார சிக்கலினால் தங்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற இயலாமல் தவிப்போருக்கு உதவி செய்வாயாக!
எங்களின் பாவங்களை மன்னித்தருள்வாயாக!ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!

திருமணத்தில் ஓதப்படுகின்ற "அல்லாஹும்ம அல்லிஃப்" துஆ பற்றிய விளக்கம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

திருமணத்தில் ஓதப்படுகின்ற "அல்லாஹும்ம அல்லிஃப்" துஆ பற்றிய விளக்கம்

https://youtu.be/eYRGbM-ob8s  

Thursday 15 August 2024

இனி இயற்கை பேரிடர்கள் அதிகரிக்கத்தான் செய்யும்.

இனி இயற்கை பேரிடர்கள் அதிகரிக்கத்தான் செய்யும். பூமியின் காலநிலை கைமீறிப் போய்விட்டது.  

பேரிடர் மேலாண்மையில் ஈடுபடும் முஸ்லிம் அமைப்புகளுக்கு இனிவரும் காலங்களில் உயிரியல் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் வல்லுநர்கள் அதிகமாகத் தேவைப்படுவார்கள். 

இந்த  உயிரியல் வல்லுநர்களால் வயநாட்டில் நடைபெற்றது போன்ற சம்பவங்களின் மீட்பு பணிகளில் மிக நுட்பமாக செயல்பட்டு உயிர்களை விரைவாக காப்பாற்ற முடியும்.

உயிரியளவியல் (Biometric) தடயவியல் (Forensic) GPS போன்ற நவீன தொழில்நுட்பங்களின் கூட்டு உதவிகளுடன் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டவர்களை மிகத்துல்லியமாக கண்டறிந்து காப்பாற்றிட முடியும். 

அதேபோல பூமிக்குள் புதைந்துபோன உடல்களையும்  எளிதாக கண்டறிந்துவிட முடியும். நிலச்சரிவுகளை கூட யானைகளும் பறவைகளும் கணிப்பது போன்று ஏறக்குறைய கணித்திட முடியும். 

எவ்வளவு பெரிய பேரிடர் ஏற்பட்டாலும் தன் உயிரை துச்சமென கருதி மீட்புப் பணிகளில் களம் குதிக்கும் ஆன்மிகப் பயிற்சிபெற்ற ஆயிரக்கணக்கான சகோதரர்கள் முஸ்லிம் அமைப்புகளில் இருக்கின்றனர்.  

ஆனால் இதுபோன்ற பேரிடர்களில் மீட்புப் பணிகளை மரபணு மற்றும் உயிரியல் தொழில்நுட்ப உதவிகளுடன் மேற்கொள்ளும் வல்லுநர்கள் நம்மிடம் ஏறக்குறைய இல்லை.

Molecular Biology, Bioinformatics, Genetics,Forensic Biology, Remote Sensing, Artificial Intelligence, Data Science, Networking, Geoinformatics போன்ற உயிரி புவி மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களில் கூட்டாக ஆராய்ச்சி மேற்கொள்ளும் வல்லுனர்களின் பங்களிப்பு இருந்தால் ஆயிரக்கணக்கான உயிர்களை எளிதாக மீட்க பாதுகாக்க முடியும். 

இன்றைய உலகின் அதிநவீன ஆயுதமாக கருதப்படும் இந்த உயிரியல் அறிவையும் ஆராய்ச்சியாளர்களையும் வைத்துதான் மொசாத் போன்ற தீய சக்திகள் உலகம் முழுவதும் தங்களது எதிர்ப்பாளர்களை குறிவைத்து கொலை செய்கிறனர். 

இந்த உயிரியல் அறிவையும் ஆராய்ச்சியையும் மனித உயிர்களை காப்பாற்றும் ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு நாம் பயன்படுத்திட வேண்டும். 

இப்படிப்பட்ட உயிரியல் வல்லுநர்கள் அல்லாஹ்வின் அன்பிற்குரியவர்களாக உயர்ந்து நிற்பார்கள்.மேலும் இவர்கள் நம் நாட்டின் மதிப்புமிக்க சொத்துக்களாகவும் மாறிப்போவார்கள்.

பேரிடர் காலத்துக்கு மட்டும் என்றில்லை இனிவரும் காலத்துக்கு உயிர்களைக் காக்கும் உயிரியல் வல்லுநர்களைத் தான் முஸ்லிம் சமூகம் அதிகம் உருவாக்க வேண்டும்.

பரமக்குடியில் 78th சுதந்திர தின நிகழ்ச்சி



பரமக்குடியில் 78th சுதந்திர தின நிகழ்ச்சி: 15.08.2024 

இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் பரமக்குடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந்திய நாட்டின் 78வது சுதந்திர தின நிகழ்ச்சி பரமக்குடி சிறுவர் பூங்கா அருகில் நடைபெற்றது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக இராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர் சேக் அப்துல்லா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தக்வா மதரஸா சிறுவர்கள் தேசியக் கீதம் பாடினர். மேலும் மதரஸா சிறுவர்களின் சுதந்திர தின உரை மற்றும் சுதந்திர சிறப்பு பாடல்  ஆகியன நடந்தது.

மாவட்ட இஸ்லாமிய பிரச்சார பேரவை செயலாளர் பொறியாளர் சாதிக் பாட்சா மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அப்துல் காதர், நகர தலைவர் முகம்மது சஜித்,  நகர் தமுமுக செயலாளர் நல்ல இப்ராஹீம்,மமக செயலாளர் சர்க்கரைக் கனி, பொருளாளர் அப்துல்லா, MTS செயலாளர் அப்துல் அஜீஸ், தெற்கு பள்ளி வார்டு செயலாளர் ரஹீம், இப்ராகிம் ஷா, நவாஸ் கான் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தக்வா பள்ளிவாசல் இமாம் தாஹிர் சைஃபுதீன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

வக்ஃப் திருத்த மசோதா 2024 நன்மைகள் மற்றும் ஆபத்துகள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

வக்ஃப் திருத்த மசோதா 2024 நன்மைகள் மற்றும் ஆபத்துகள்' என்ற தலைப்பில், மஹாராஷ்டிர மாநில வக்ஃப் வாரியத்தின் ஓய்வுபெற்ற தலைமை நிர்வாக அதிகாரி ஷேக் அப்துல் ரவுஃப் ஊடகவியலாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் வழங்கிய ஒரு பவர் பாயிண்ட் சிம்போசியத்தின் போது.... புதிய வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவின் மறைக்கப்பட்ட ஆபத்துகள் ஐந்து முக்கியமான உட்பிரிவுகளில் மறைக்கப்பட்டுள்ளதாக அப்துல் ரவூஃப் கூறினார். 

அதில், புதிய சட்டத்திருத்த்தில்... CWC (Central Waqf Council) எனும் மத்திய வஃக்ப் சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை அளவு தற்போதுள்ள 14-ல் இருந்து 21 உறுப்பினர்களாகவும், மேலும் ஒரு தலைவர் சேர்த்து... ஆக மொத்தம் 22 ஆக அதிகரிப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், புதிய சட்டத்திருத்தப்படி... CWC-யில்... 10 முஸ்லிம்கள் மட்டுமே இருப்பார்கள் என்றும்... அந்த 10 முஸ்லிம்களில்தான் இரண்டு முஸ்லிம் பெண்களும் இருக்க வேண்டும் என்றும். மீதமுள்ளவர்கள் 12 பேர்... அரசு நியமனம் என்பதால்... அவர்கள் முஸ்லிம்களாகவோ அல்லது முஸ்லிமல்லாதவர்களாகவோ இருக்கலாம் எனவும்... ஆக... முஸ்லிம் அல்லாதவர்கள் குறைந்தபட்சம் 2 பேர் முதல் அதிகபட்சம் 12 ஆக இருக்கலாம் எனவும்... இதனால்... சென்ட்ரல் வக்ஃப் கவுன்சிலில் மொத்தம் உள்ள 22 பேரில் 12 பேர் முஸ்லிம் அல்லாதவர்கள் மெஜாரிட்டி ஆக இருக்க முடியும்” என்றார்.

அடுத்து 11 பேர் கொண்ட ஸ்டேட் வக்ஃப் போர்ட் (SWB) பற்றி பார்க்கலாம்.  

“மாநில வக்ஃப் வாரியங்கள் இப்போது புதிய சட்டத்திருத்தப்படி, முஸ்லீம் அல்லாத ஒருவரை அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) வைத்திருக்க முடியும். அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்படும், வாரியத்தின் தலைவர், 2 எம்பி மற்றும் 2 எம்எல்ஏ இனிமேல் முஸ்லிம்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை;  பொதுப்பிரிவிலிருந்து இருக்கலாம்' என்பதால்.. ஒவ்வொரு வாரிய குழுவிலும் உள்ள முஸலிம் அல்லாதவர்கள் எண்ணிக்கை 6 ஆகிவிடும். முஸ்லிம்களின் எண்ணிக்கையோ... முத்தவல்லி, மத அறிஞர் மற்றும் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் மூவர் என்று 5 ஆக குறைந்து விடுகிறது. 

இப்படியாக... முஸ்லிம்களின் மத விவகாரங்களை தலைமை தாங்கி நிர்வாகம் செய்வோரில்.... பெரும்பான்மை முஸ்லிம் அல்லாதவர்களை கொண்டு வாரியம் நிரப்பப்பட முடியும்,” என்றார்.

லிங்க் : https://timesofindia.indiatimes.com/city/nagpur/new-waqf-act-to-reduce-muslim-members-on-central-council/articleshow/112435180.cms

அவ்ளோதான்... முடிஞ்சதா வக்ஃப் கதை..?! 

முதல் நாள் அன்றே சொன்னேன்... இது....
#முஸ்லிம்களின்_சொத்துகளை_திருடும்_சட்டம் என்று..!

"முஸ்லிம் அல்லாதவர்கள் நியமனம்" என்கிற இடங்களில் நிச்சயமாக பாஜக ஆளும் ஒன்றிய & மாநில அரசுகள்... ஒருபோதும் கிறிஸ்துவர்களையோ, சீக்கியர்களையோ, ஜைனர்களையோ, பெளத்தர்களையோ, பார்சிகளையோ, நாத்திகர்களையோ, இந்துக்களையோ... நியமிக்காது. RSS-பாஜகவின் சங்கிளை மட்டுத்தான் அங்கே நியமிக்கும்..! இதை... 100% உறுதியாக கூறுகிறேன். இதன்மூலம்... வக்ஃப் போர்டுகள் இனி... "சங்கி போர்டாக" மாறிவிடும். 

அதன் பிறகு... "இந்த 500 ஆண்டுகால முஸ்லிம்களின் பள்ளிவாசல் வக்ஃப் சொத்து இல்லை. வக்ஃப் சொத்து என்று கூற எந்த ஆதாரமும் எங்களிடம் இல்லை..." என்று வக்ஃப் வாரி... ஸாரி...ஸாரி... "சங்கி வாரியம்" கலெக்டரிடம் கூறிவிட்டால்.... அடுத்த நொடியே நூறு புல்டோசர்கள் அங்கே வந்து... "சட்டப்படியான அரசு நடவடிக்கை" மூலம்... அது தரை மட்டமாக இடிக்கப்பட்டு விடும். 

ர(த்)த யாத்திரை, கலவரம், கரசேவை, ஆட்சிக்கலைப்பு,  இந்திய தொல்லியல் துறையின் அகழ்வாராய்ச்சி, ஊடக கருத்துருவாக்க கட்டமைப்பு மற்றும் திணிப்பு, ஹை கோர்ட்டு கட்ட பஞ்சாயத்து தீர்ப்பு, சுப்ரீம் கோர்ட்டு நில(பண்ட)மாற்று தீர்ப்பு, ஜட்ஜ்களுக்கு  நியமன எம்பி பதவி, கவனர் பதவி, வெளிநாட்டு தூதர் பதவி... இதெல்லாம் இனிமேல் தேவையே இல்லை சகோ.

பாபர் மஸ்ஜித் என்கிற 460 ஆண்டுகால வக்ஃப் சொத்தை திருட சங்கிகள் 70 வருடம் அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு சட்டவிரோதமாக போராடியது போல... இனி போராடத் தேவை இல்லை. வெறும்... 7 நிமிஷம் போதும். இனி அவ்ர்கள் விரும்பும் முஸ்லிம்களின் நிலமெல்லாம்... வேண்டிய மஸ்ஜித் கட்டிடங்கள் எல்லாம் இனி அவர்களுக்கே சொந்தமாகி விடும்.

பச்சோந்தி சீமானும்............! #பலியாகும் தம்பிகளும்.......!

பச்சோந்தி சீமானும்............!
#பலியாகும் தம்பிகளும்.......!
  
                         ✍️ S.M.S.மதார்.
                               05.08.2023.

எனது இருபதாண்டுகால அரசியல் அனுபவத்தில், அதுவும் வரலாற்று மாணவன் என்ற (கூடுதல்) அடிப்படையில்.., எத்தனையோ அரசியல் கட்சிகளையும், அதன் தலைவர்களையும் & தொண்டர்களையும் முழுமையாகக் கள ஆய்வு செய்ததுண்டு.

அந்த அடிப்படையில், 100 சதவீதம் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் எந்தக் கட்சியும் & தலைவனும் அரசியலுக்கு வரவில்லை என்றாலும்..., கொஞ்சமாவது கொள்கைகளும், உண்மைகளுமாவது கொண்டிருப்பார்கள்.

ஆனால்.....!

🎯 முழுக்க முழுக்கப் பொய்களாலும், போலி நம்பிக்கைகளாலும், சூழ்ச்சிகளாலும் (RSS செயல்திட்டத்தாலும்) கட்டமைக்கப்பட்ட "நாதக" கட்சியையும், அதன் அதிபரான சீமானையும்.., எதைச் சொன்னாலும் சிந்தித்துப் பார்க்காமல் கைத்தட்டி & விசிலடித்து ஏற்றுக் கொள்ளும் தொண்டர்களையும் பற்றி.., இந்தச் சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இதைப் பதிவு செய்கின்றேன்.

🚫 #நாத ஆரம்ப வரலாறும்.....!
🚫 #RSS பங்களிப்பும்......!

"நாம் தமிழர் கட்சி" என்றப் பெயரில் முதன்முதலில் உருவாக்கியவர் "தினத்தந்தி" அதிபர் (மறைந்த) ஐயா. சி.பா.ஆதித்தனார் அவர்கள்.

🎯 செயல்படாமல், அவர் பெயரில் இருந்து வந்த அந்தக் கட்சியை, ஐயா ஆதித்தனார் குடும்பத்தில் பேசி.., சீமானுக்குச் சிபாரிசு செய்து பெற்றுக் கொடுத்தவர் யாரென்றுச் சொன்னால் "RSS & பாஜக" வின் தமிழக திட்ட வடிவமைப்பாளர் "குருமூர்த்தி".

RSS..., சீமானுக்காக அந்தக் கட்சியைப் பெற்றுத் தர வேண்டிய அவசியம் என்ன..? இந்த ஒன்றைச் சிந்தித்தாலே  நாம் தமிழர் கட்சி "எதற்காக & யாருக்காக உருவாக்கப்பட்டது" என்ற உண்மை வரலாறு தெளிவாக விளங்கும். 

இன்றைக்குச் சீமானுக்காகக் கொடி பிடிக்கும் சிறுபான்மைச் சமூகத்தவர்களும்.., தமிழ்ப் பற்றாளர்களும் முதலில் சிந்தித்துப் பார்க்க வேண்டும். "ஆரிய & பார்ப்பண குருமூர்த்திக்கும்", தமிழ் தேசியத்திற்கும் ஏதாவது சம்பந்தமுண்டா....? என்று. 

🚫 #திமுக எதிர்ப்பே.....!
🚫 #நாதக நாடித் துடிப்பு....!

தென்னிந்தியாவில் கர்நாடகம் வரை காலூன்றியப் பாஜக, அடுத்த எல்லையான  தமிழகத்திற்குள் அடியெடுத்து வைக்கக் கூட முடியாமல், அடித்து விரட்டப்படுவதற்கு என்ன காரணம்...? 

🎯 இங்குப் பெரியாரியச் சிந்தனைகளும், திராவிடச் சித்தாந்தங்களும், இதை அடிப்படையாகக் கொண்ட "திமுக" வின் ஆழமான அடித்தளமும் ஆகும்.

🎯 இந்த அடிப்படைகளை விட்டும், தமிழக மக்களைத் திசை திருப்பினால்தான்.., பாஜக அடியெடுத்து வைக்க முடியும் & ஆட்சிக்கு வர முடியுமே தவிர...,

🎯 மோடியைப் புகழ்ந்தோ, இந்துத்துவக் கொள்கைகளைச் சொல்லியோ அல்லது மதக் கலவரத்தைத் தூண்டியோ.., ஒருபோதும் தமிழகத்தில் "பாஜக" ஆட்சிக்கு வரவே முடியாது என்ற உண்மையை உணர்ந்த RSS.., அதற்காகக் "குருமூர்த்தி" மூலம் புதிய  செயல்திட்டத்தை வகுத்தது.

🎯 "திமுக" வை தூக்கிச் சுமக்கும் தமிழ்ப் பற்றாளர்களையும்.., சிறுபான்மைச் சமூகத்தவர்களையும் (முஸ்லீம் & கிறிஸ்தவர்களையும்) "திமுக" விலிருந்து அகற்றினால் மட்டுமே, "திமுக" வை பலவீனப்படுத்தினால் மட்டுமே.., தமிழகத்தில் "பாஜக" வினால்  காலூன்ற முடியும் என்ற RSS செயல்திட்டத்தின் அடிப்படையில்..,

🎯 தமிழ் தேசியம், ஈழ விடுதலை, தமிழ்நாட்டை தமிழன்தான் ஆள வேண்டும் என்று சொல்லித் தமிழ்ப் பற்றாளர்களையும்...,

🎯 சிறைவாசிகள் விடுதலை, குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு, மோடி எதிர்ப்பு என்று காட்டிக் கொண்டு முஸ்லீம்களையும் & கிறிஸ்தவர் நலனுக்காகப் பேசுவதாகக் காட்டிக் கொண்டு கிறிஸ்தவர்களையும்..,

🎯 "திமுக" வை விட்டு அகற்றித், தன் வலைக்குள் விழ வைக்க உருவாக்கப்பட்டதுதான் "நாம் தமிழர் கட்சி". அதற்காகக் கூலிக்கு அமர்த்தப்பட்டவர்தான் "செந்தமிழன் சீமானாக" மாற்றப்பட்டக் கிறிஸ்தவ சைமன்.

இந்த உண்மையை மறைத்து, பாஜக வை எதிர்ப்பது போல் பாசாங்கு செய்து, திமுக வெறுப்பை மக்கள் மனதில், குறிப்பாக இளைஞர்களிடம் விதைத்து வருகிறார் சீமான்.

🚫 #சீமானின் விரக்தியும்....!
🚫 #இன்றையப் பிரச்சினையும்....!

"நாதக" உருவாகி 13 ஆண்டுகளாகி விட்டப் போதிலும், தங்கள் கனவுகள் நனவாகிடவில்லையே என்ற "நாக்பூரின்" (RSS) கோபம், சீமான் மீது காட்டப்பட.., இனிமேல் "எழும்புத் துண்டுகள் விழுவது நிறுத்தப்படுமோ" என்ற விரக்தியின் வெளிப்பாடே "திமுக & காங்கிரசுக்கு ஓட்டுப்  போடும் முஸ்லீம்களும் & கிறிஸ்தவர்களும் "சாத்தானின் பிள்ளைகள்" என்று "சைமனை" பேசத் தூண்டியுள்ளது. 

அதனால்தான் திமுக வில் அதிகமமாக அங்கம்  வகிக்கும் இந்துக்களைப் பற்றிப் பேசாமல், முஸ்லீம்களையும் & கிறிஸ்தவர்களையும் பற்றி மட்டுமே பேசி இருக்கின்றார். (அதிலும் குறிப்பாக "திமுக" வுக்கு தொடர்ந்து வாக்களிக்கும் குறிப்பிட்ட ஒரு ஜாதியைப் பற்றிப் பேசியிருந்தால், மறுபடியும் பேச சீமாண்டிக்கு நாக்கு இதுக்காது என்பது வேறு விஷயம்)

அது மட்டுமல்ல...,

🎯 தற்போது தொடர்ச்சியாக மணிப்பூர் பழங்குடியினப் படுகொலைகள், அரியானா முஸ்லீம் படுகொலைகள், இரண்டு நாள் முன்பு மோடியின் பெயரால் ரயிலில் 3 முஸ்லீம் படுகொலைகள் என்று, தொடர்சியாக நடந்து வரும் பாஜகவின் இனப்படுகொலைகளைப் பற்றி, அதிகம் விவாதிக்கப்படாமல் திசைதிருப்பவே, சீமான் (தேர்தல் அல்லாத) இந்த நேரத்தில் பேசியிருப்பதும் தெளிவாகத் தெரிகிறது.

🎯 எப்பொழுதும் முதலில் மோடியை எதிர்ப்பது போன்று பேச்சை ஆரம்பித்து, திமுக & காங்கிரஸை மட்டுமே கடுமையாக எதிர்க்கும் சீமான்....,

🎯 கடந்த 10 ஆண்டுகளாக  (2011 & 2016) தனக்கு ஓட்டுப் போடாமல் தொடர்ந்து தமிழக ஆட்சியில் அதிமுக வையும், மத்திய ஆட்சியில் (2014 & 2019) பாஜக வையும் மக்கள் தேர்ந்தெடுத்து, நாட்டைக் குட்டிச்சுவராக்கினார்களே.., அது பற்றி ஏன் சீமான் வாயே திறப்பதில்லை..?

🎯 ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டுச் சிறைத் தண்டனைப் பெற்ற  அதிமுக வுக்கும்..., 9 ஆண்டுகாலமாய் நாட்டைச் சுரண்டி, விலைவாசியை ஏற்றி, அதானி  & அம்பானிகளை மட்டும் வளர்த்து, மதவெறியால் நாட்டைச் சீரழிக்கும் பாஜக வுக்கும்.., ஓட்டுப் போட்ட மக்களைப் பற்றி மட்டும் ஏன் கருத்துச் சொல்லத் தோன்றவில்லை..? அவர்கள் என்ன "தேவனின் பிள்ளைகளா"...?

இதிலிருந்தே சீமானின் உருவாக்கமும் &  உள்நோக்கமும் மக்களுக்கு விளங்காதா...?. அதனால்தானே சீமானின் பேச்சிற்குக் கூட்டம் கூடுமளவிற்கு, ஓட்டுகள் விழுவதில்லை. 

ஏன் என்று நாதக தொண்டர்களே..! நீங்கள் இப்பொழுதாவது சிந்திக்க மாட்டீர்களா....?

🚫 #சீமானும்.....!
🚫 #அதிமுக விசுவாசமும்.......!

விடுதலைப் புலிகளின் தலைவன் பிரபாகரனைக் கொள்கைத் தலைவனாக ஏற்று, ஈழ விடுதலைக்காக கட்சி நடத்துவதாகச் சொல்லி, காசு பார்க்கும் சீமான்.

🎯 விடுதலைப் புலிகளுக்கு எதிராகச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, ஈழ விடுதலைக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட ஜெயலலிதாவை, 2011 தேர்தலில் ஆதரித்தது ஏன்...? "இலை மலர்ந்தால் ஈழம் மலரும்" என்று அதிமுக வுக்கு வாக்குகள் சேகரித்தது ஏன்..?

🎯 டான்ஸி நில வழக்கில் ஜெயலலிதாவை ஊழல்வாதியாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தர்மபுரியில் 3 அப்பாவி தமிழக மாணவிகளை எரித்துக் கொன்ற கொலைகாரர்களை (அதிமுக வினரே ஆதரிக்க முன்வராதப்போது) அவர்கள் தவறே செய்யவில்லையென்று சீமான் ஆதரித்துப் பேசியது ஏன்...? (வீடியோ ஆதாரம் உள்ளது)

🎯 ஊழலைக் கடுமையாக  எதிர்ப்பதாகக் காட்டும் சீமான், ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டுச் சிறை சென்று வந்த "சசிகலா"வை, யாருமே சென்று சந்திக்காதப் போது, முதன்முதலில் தேடிச் சென்று சந்தித்தது ஏன்...? 

🎯 எடப்பாடி பழனிச்சாமி, முழுமையாக மாநில உரிமையையும் & தமிழக நலனையும்.., மத்திய பாஜக அரசிடம் அடகு வைத்து.., ஊழலுடன் கூடிய மிகவும்  மோசமான ஆட்சி செய்தபோதும், அந்த ஆட்சியை..., அண்ணன் "எடப்பாடி பழனிச்சாமி" நன்றாகத்தான் ஆட்சி செய்து வருகின்றார் என்று தேர்தல் நெருங்கும் சமயத்தில் புகழ்ந்தது ஏன்...? நன்றாக ஆட்சி செய்தால் அவருடன் கூட்டுச் சேர்ந்து மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கலாமே..., தனித்து நின்றது ஏன்...?

🎯 எடப்பாடி பழனிச்சாமியையும், சசிகலாவையும் ஒன்று சேர்த்து, (அதிமுக வை மீண்டும் பலமாக்க) இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதாக, சீமானே ஒத்துக் கொண்டது ஏன்...? அதிமுக பலம் பெற்றால், அதிமுக வை எதிர்த்து, (தனித்து) நிற்கும் நம்மால் ஆட்சியைப் பிடிக்க முடியாதே என்ற எண்ணம் சீமானுக்கு வராதது ஏன்...?

🎯 இதிலிருந்தே தெளிவாகத் தெரியவில்லையா...? திமுகவைப் போன்றே அதிமுக வை எதிர்ப்பதாகக் காட்டிக் கொண்டு.., அதிமுக வை பலமாக்க முயற்சி செய்வதும்.., ஆனாலும் அதிமுக வுடன் கூட்டுச் சேர்ந்தால் திமுக ஓட்டுக்களைப் பிரிக்க முடியாது என்பதால்.., தனித்து நின்று ஓட்டுக்களைப் பிரிப்பதுந்தான்,  சீமானுக்குக் கொடுக்கப்பட்ட வேலை என்று. அதன்மூலம் பாஜக & அதிமுக கூட்டணியை ஆட்சியில் ஏற்றுவது. இதுதான் RSS, சீமானுக்கு கொடுத்த அசைன்மெண்ட். அதைக் கச்சிதமாக நிறைவேற்றி வருகிறார் சீமான்.

🚫 #சீமானும்....!
🚫 #பாஜக பற்றும்.......!

🎯குஜராத்தை ஆண்ட மோடி, அந்த மாநிலத்தை சிறப்பாக ஆட்சி செய்ததோடு, அந்த மாநிலத்தின் 1 லட்சம் கோடி கடனை அடைத்தார். மேலும் 1 லட்சம் கோடியை உலக வங்கியில் முதலீடு செய்தார் என்று முற்றிலும் "பொய்யானத் தகவலைச்" சொல்லி, மோடியை நேரடியாகப் புகழ்ந்தது.

🎯மஹாராஷ்டிராவில் பாஜக சார்பில் போட்டியிட்ட "தமிழ்ச் செல்வனை" ஆதரித்துப் பிரச்சாரம் செய்தது.., அவர் ஒரு தமிழன் என்றடிப்படையில் பிரச்சாரம் செய்ததாகச் சொன்னது. ஆனால் அவரை எதிர்த்துக் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட "கணேஷ்குமாரும்" தமிழர் என்ற உண்மையை மறைத்தது.

🎯 பாஜகவின் குருமூர்த்தி, K.T.ராகவன், H. ராஜா, வானதி MLA, பொன்னார் என்று பாஜக நிர்வாகிகளைத் தேடித்தேடிப் போய்ச் சந்தித்தது. அவர்களுடன் தொடர்ந்து நட்புடன் இருந்து வருவது.

🎯 பாஜக ராகவன் , பெண் கட்சி நிர்வாகியோடு "பலான" செய்கையில் ஈடுபட்டதை, எல்லோரும் கண்டித்தப் போது (பாஜக வே அவரைக் கட்சியை விட்டு விலக்கிய போது) சீமான் அவருக்கு ஆதரவாக முட்டுக் கொடுத்தது.

இவை எல்லாம் தெளிவாகச் சொல்லும் சீமான், பாஜகவை அரியணை ஏற்ற வந்த RSS ன் அடியாள் என்று.

அடுத்த முக்கியமான ஒன்று..,

🚫 #தேர்தல் செலவும்....!
🚫 #வருகின்ற வழியும்......?

இதுவரை சீமான்.., இரு பாராளுமன்ற, இரண்டு சட்டமன்ற & இரு உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில், எந்தப் பெரியக் கட்சிகளின் தயவும் இன்றித், தனித்து நிற்பதாகப் பெருமை பேசும் "நாதக" தம்பிகளே....!

ஓட்டுக்கு நீங்கள் பணம் கொடுக்கவில்லையென்றாலும்.., பொதுக் கூட்ட மேடை, ஒலி & ஒளி செட்டிங், வண்டி வாடகை, நோட்டிஸ் & போஸ்டர், பிரச்சாரத்திற்கு அண்ணன் சீமான் வர & தங்க சொகுசு ஹோட்டல் என்று இதற்கெல்லாம் செலவு செய்ய எங்கிருந்து நிதி வருகின்றது...?

தொண்டர்கள் ஐம்பது, நூறு என்று போடும் மொத்தச் சில்லரைகளைக் கொண்டு ஒரு சட்டமன்றத் தொகுதிக்காவது செலவு செய்ய முடியுமா...?

ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஆகக் குறைந்த செலவு "ஒரு கோடி" என்று வைத்துக் கொண்டாலும், ஒரு தேர்தலில் தமிழகத்தின் 234 தொகுதிக்கும், 234 கோடி செலவாகுமே...? எங்கிருந்து இவ்வளவு கோடி, ஒவ்வொரு தேர்தலுக்கும் வருகின்றது என்று என்றாவது சிந்தித்தது உண்டா...?

🎯 நிதி வரும் வழியை யோசித்தாலே, சீமானை இயக்குவது யார்...? சீமான் தனித்து நின்று ஓட்டுக்களைப் பிரிப்பதால் யாருக்கு லாபம் என்ற "உண்மை" புலப்படுமே.

உதாரணத்திற்கு ஒன்று...,

🎯 கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் "கோவை தெற்கில்...,"

📌பாஜக - வானதி MLA  வாங்கிய 
ஓட்டு - 53,209.

📌மநீம - கமல்ஹாசன் வாங்கிய
ஓட்டு 51,481.

📌நாதக - அப்துல் வஹாப் வாங்கிய 
ஓட்டு 4,300.

இப்பொழுதாவது புரிகிறதா...? முஸ்லீம்களைக் கொண்டே பாஜக வை வெற்றிப் பெற வைக்க வடக்கில் உவைசியும் & தமிழகத்தில் சீமானும்.., RSS & பாஜக வால் உருவாக்கப்பட்ட எட்டப்பர்கள் என்று.

🚫 #சீமானும்.....!
🚫 #கொள்கை முரண்பாடுகளும்.....!

🎯 ஈழவிடுதலைப் போரில் அதிகமாக ஆண்கள் கொல்லப்பட்டதால், ஈழப் பெண்கள் வாழ்க்கை கிடைக்காமல் இருக்கின்றனர். அவர்களுக்கு வாழ்வு கொடுக்க "நாதக" தம்பிகள் முன்வர வேண்டுமென்றால்.., நான் ஒரு ஈழப் பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டுமென்றுச் சொல்லி.., "யாழ்மதி" என்ற ஈழப் பெண்ணுடன் உலகம் முழுக்கச் சுற்றி, உலக நாடுகளில் உள்ள ஈழ ஆதரவாளர்களிடம் முடிந்தளவு சுருட்டி விட்டு, யாழ்மதியையும் கழட்டி விட்டு, கடைசியில் "தெலுங்கினத்தைச் சேர்ந்த (விடுதலைப் புலிகளுக்கு எதிராகத், தமிழக சட்டமன்றச் சபாநாயகராக இருந்து தீர்மானம் நிறைவேற்றியக்) காளிமுத்துவின் மகளைத் திருமணம் செய்தது ஏன்...? எதற்காக...?

(திருமணம் என்பது சீமானின் தனிப்பட்ட உரிமையாக இருந்தாலும், அதை தன் கட்சிக் கொள்கையாக முன்வைத்ததோடு, யாழ்மதி என்ற ஈழப் பெண்ணோடு சுற்றி, சுருட்டிக், கழட்டிவிட்டதோடு, தான் எதிர்க்கும் தெலுங்கினத்தைச் சேர்ந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து.., தெலுங்கு & தமிழ் கலப்பின வாரிசைப் பெற்றார் என்றால், சீமானுடைய கொள்கையில் சீமானுக்கே உறுதியில்லை எனும்பொழுது.., தம்பிகள் மட்டும் தலையில் தூக்கிக் கொண்டாடுவது ஏன்...?)

🎯 "தடுப்பூசி" என்பது கார்ப்பரேட்களின் உலகளாவிய சதி என்று மேடைதோறும் முழங்கியவர்.., தன் மகனுக்கு மட்டும் தடுப்பூசியை போட்டதோடு., செய்தியாளர்கள் இதுபற்றிக் கேட்டதும், அது தம்பிகள் வந்து "அண்ணே இந்த விஷயத்தில் தலையிடாதீங்கன்னு" சொல்லிப் போட்டுட்டு வந்துட்டாங்கன்னு, வெக்கமே இல்லாமல் சொல்லுகிறார் என்றால், அந்தப் புள்ளைக்கு சீமான் தகப்பனா..? இல்லை.....?

🎯 உள்நாட்டுக் காங்கேயம் காளை, ராஜபாளையம் நாய் இதையெல்லாமல் இல்லாமல் ஆக்கி, வெளிநாட்டு விலங்குகளை இறக்குமதி செய்வது கார்ப்பரேட் சதி என்று இன்றைக்கு வரைக்கும் கொதிக்கும் சீமான்.., தன் வீட்டில் மட்டும் ஜெர்மன் நாய், ஆஸ்திரேலியா கிளி என்று வளர்ப்பது ஏன்...?

🎯 தன் மனைவி வழியாகக் கிடைத்தச் சொத்துக்கள் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ், பண்ணை வீடுகள் & தோப்புகள் என்று கோடி கோடியாகக் குவிந்திருந்தும்.., ECR பங்களாவில் பவிசாகக் குடித்தனம் & சொகுசு கார் என்று Luxury ஆக வாழ்வதை மறைத்து.., சுந்தர் C, கலைப்புலி தானு என்று பல நண்பர்களிடம் "பிச்சை" எடுத்துத்தான் வாழ்வதாகச் சொல்வது ஏன்..? இன்னும் யாரை ஏமாற்றிக் காசு பறிக்க....?

🎯 அலகு குத்துவது, தீ மிதிப்பதைக் காட்டுமிராண்டித்தனம் என்று சொன்னவர், தற்போது அது வீரத்தின் அடையாளம் என்று மாற்றிப் பேசுவது ஏன்..?

🚫 #செந்தமிழன் சீமானும்.....!
🚫 #கோமாளித்தனங்களும்....!

🎯தமிழ்நாட்டில், தான் ஆட்சிக்கு வந்தால் 50,000 பட்டாலியன்களை உருவாக்கி, இலங்கையை எதிர்த்துப் போரிட்டுக் "கச்சத் தீவை" மீட்பதாக மேடைதோறும் சொல்கிறார். தமிழக காவல்துறை, இன்னொரு மாநிலத்திற்குப் போகவே அங்குள்ள DGP யின் அனுமதி வாங்க வேண்டும். அப்படி இருக்க.., (இந்திய அரசு & ராணுவம் இல்லாமல்)  இன்னொரு நாட்டுடன் போர் தொடுக்கும் அதிகாரம், "மாநில அரசுக்கு" இருக்கிறதா என்றக் குறைந்தப்பட்ச அறிவில்லாமல் உளருவதைக் கூட, நம்பிக் கைத்தட்டி ரசிக்கிறது தம்பிக் கூட்டம்.

🚫 தான் லெட்டர் கொடுத்தால், சுவிட்சர்லாந்து நாடு விசா கொடுப்பதாக அள்ளி விடுகிறார். இந்திய நாட்டின் பிரதமரே லட்டர் கொடுத்தால் கூட விசா வழங்க முடியாது, அதற்கென்று சில நடைமுறைகள் உள்ளது என்ற அறிவில்லாமல்...!

🚫 தான் ஆட்சிக்கு வந்தால், உலக வங்கியிடம், தமிழ்நாடு அரசு வாங்கியக் கடனுக்கும், தனக்கும் சம்பந்தமில்லை., நீ கொடுத்த ஸ்டாலின் கிட்ட, எடப்பாடி கிட்டப் போய் கேள் என்று சொல்லி விட்டு.., தனக்கு இப்போது 50 ஆயிரம் கோடி கொடு, அதற்கு நான் பொறுப்பு என்று சொல்வேன் என்கிறார். ஏண்டா உலக வங்கி என்ன, உங்க ஊரு சிட்பண்ட் கம்பெனின்னு நினைச்சியா..., நீ சொன்னவுடன் கேட்பதற்கு...? அவன் ஸ்டாலினை நம்பியா கடன் கொடுத்தான். தமிழக அரசை நம்பிக் கூட அவன் கடன் கொடுக்கவில்லை. இந்திய அரசின் கீழ் உள்ள மாநில அரசாங்கம் என்ற அடிப்படையிலேயே உலக வங்கிக் கடன் கொடுத்துள்ளது. கடனை அடைக்க வில்லை என்றால், தமிழக அரசின் சொத்துக்கள் ஐப்தி செய்யப்பட்டு,  தமிழக அரசு திவாலானாதாக அறிவித்து, உன் (கனவு) ஆட்சியே கவிழ்ந்திடுமே கூமுட்டை..., அதுக் கூட தெரியாமல்...? என்னத்தச் சொல்ல..?

🚫 #சைமனும் (சீமானும்)....!
🚫 #சிந்தியப் பொய்களும்....!

ஈழத்திற்குச் சென்று, பிரபாகரனோடு கூட்டத்தோடு கூட்டமாக வெறும் 5 நிமிஷமே நின்று விட்டு வந்து..., பிரபாகரனும் & ஒட்டு மொத்தப் புலிகளும் கொல்லப்பட்டப் பிறகு.., பொதுவெளிக்கு வந்து சீமான் அள்ளி விடும் பொய்களுக்கு ஒரு அளவே கிடையாது. 

🎯 இட்லிக்குள் கறி.., ஆமைக் கறி சமைத்துப் பிரபாகரன் பரிமாறியது.., AK 87 எடுத்து சாதாரணமாகச் சுட்டது & அதைப் பார்த்துப் புலிகளே வியந்தது.., ஈழத்துக்  காட்டுக்குள் சிங்கள ராணுவ அச்சமின்றி சர்வ சாதாரணமாகச் சுற்றித் திரிந்தது & சீமானின் வீரத்தைக் கண்டு பிரபாகரன் வியந்தது.., சீமான் கோபித்துக் கொள்வார் என்று, சீமான் முன் வைத்து ஆங்கிலத்தில் பேச பிரபாகரன் அஞ்சியது.., சீமான் சாப்பிடுவதை இரண்டு பேர் குறிப்பெடுத்தது.., ஆமை ஓட்டைப் படகாகப் பயன்படுத்தியது...., இப்படி சீமான் தினந்தோறும் அள்ளிவிடும் கதைகள், தினத்தந்தியின் "கன்னீத்தீவு" எபிசோடையே மிஞ்சிவிடும்

🎯 சீன ராணுவத்தின் ஊடுருவலுக்கு எதிராக சீன செயலிகளான Tiktok ஐ மத்திய அரசு தடை செய்ததை.., ஏழரை கோடிப் பேர் Tiktok ல் தன்னைப் பாலோ பண்ணுவதால் மத்திய அரசாங்கம் தடை செய்தது என்று வெட்கமே இல்லாமல் புளுகியது.

🎯 Whatsapp பார்வேர்ட் ஆப்ஷனை 5 பேருக்கு மேல் அனுப்ப முடியாமல் தடை செய்ததும், தனக்காக என்று இன்டர்நேஷனல் அளவுக்குப் புளுகியது.

இப்படி கொஞ்சம்கூட கூச்சம், வெக்கம் இல்லாமல் "பொய்" பேசும் ஒருவனைத் தலைவனாக ஏற்று.., ஒரு கூட்டம் கொண்டாடுகிறது என்று சொன்னால், ஆச்சர்யமாக இருக்கிறது. அதேநேரத்தில் அவர்களின் அறிவீனத்தின் அபாயத்தை எண்ணிக் கவலை கொள்ளவும் வேண்டியிருக்கிறது.

🚫 #திராவிடத்தால் வீழ்ந்தோமா......?
🚫 #திராவிடத்தால் வாழ்ந்தோமா....?

இது பற்றி விரிவாகவே பல ஆதாரத்தைச் சுட்டிக்காட்டி எழுதலாம். ஆனால் மிக சுருக்கமாக...,

இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட, ஒப்பிட்டு பார்க்கவே முடியாத அளவுக்கு  மிக வேகமாக, முன்னேறிய மாநிலமாக (கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், ஊட்டச்சத்து, தொழில் துறை, பெண்கள் முன்னேற்றம், சாலை வசதிகள், இன்னும் பல அடிப்படை வசதிகள் என்று எல்லவற்றிலும்....,) தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது என்பதை விட, முதன்மை மாநிலமாக விளங்குதிறது என்பதே உண்மை. அதற்கு ஒரேயொரு உதாரணம்...,

🎯 இந்தியாவிலேயே அதிகமான (71)  மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. அதிலும் குறிப்பாக 38 அரசு மருத்துவக் கல்லூரிகள். அதிலும் Top 5 மருத்துவக் கல்லூரிகளிலும் தமிழகம்தான் முதலிடம். வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற வளர்ச்சி கிடையவே கிடையாது.

இந்த ஒன்றே போதும். "திராவிடத்தால் வாழ்ந்தோம்" என்று.

இறுதியாக......,

🚫 #பச்சோந்தி சீமானும்.....!
🚫 #பலியாகும் தம்பிகளும்......!

பச்சோந்தி மரத்திற்கு மரம் நிறத்தை மாற்றிக் கொள்வது போல..., 

சீமான்........!

🎯காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திக, அதிமுக, தேமுதிக, "RSS ஸ்பான்சர் நாதக" என்று அடிக்கடி  கட்சியையும்.., 

🎯கிறிஸ்தவம், கடவுள் மறுப்பு, தமிழ் மதம் என்று மதத்தையும்...,

🎯 தனது வசதிக்கும், வரும் வருமானத்திற்கும் ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு..., இடத்திற்குத் தகுந்தாற்போல் & முன்னுக்குப் பின் முரணாகப் பேசிக் கொண்டு திரிவது (சீமானுடைய) இயல்பான பச்சோந்திக் குணமாகும்.

🎯 வடநாட்டைப் போல் தமிழ் நாட்டை மதவெறி கொண்டு  வீழ்த்த முடியாமல் போனதற்குத் தமிழ்நாடு "பகுத்தறிவு" மாநிலமாக இருப்பதுதான் காரணம்.  அதற்குக் காரணமான பெரியாரியச் சிந்தனைகளையும், திராவிட சித்தாந்தங்களையும், அதைத் தாங்கி நிற்கும் "திமுக" வையும் வீழ்த்த.., RSS கையிலெடுத்த ஆயுதமே "தமிழ் தேசியம்" என்ற மடைமாற்றமும்...,  "திராவிடத்தால் வீழ்ந்தோம்" என்றப் பொய்ப் பிரச்சாரமும்.....!

🎯 அதற்குப் பேச்சாற்றல் நிறைந்த, காசுக்காக எப்படி வேண்டுமானாலும் தன்னை மாற்றிக் கொள்ளக்கூடிய சீமானைக் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டு வருகின்றது RSS & BJP.

🎯 இந்தச் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளாமலும்.., போதிய அரசியல் அனுபவம் இல்லாததாலும்.., நரம்பு புடைக்க உணர்ச்சி வேகத்தில் கத்தும் சீமானுடைய பேச்சை நம்பி..., இளைஞர்கள் செல்கின்றனர். தங்களுடைய அரசியல் வாழ்வை மட்டுமல்ல.., எதிர்கால தமிழக நலனையும் பாழாக்கி வருகின்றனர்.

🎯ஆனாலும் போதிய அரசியல் அனுபவம் பெற்றவுடன், சீமானின் பச்சோந்திக் குணத்தைப் புரிந்து கொண்டு, "நாதக" வை விட்டு கூட்டங் கூட்டமாக வெளியேறுவது ஓரளவுக்கு நிம்மதியைத் தருகின்றது.

(குறிப்பு : மேலே குறிப்பிட்ட அனைத்தும் ஆதாரப்பூர்வமானதும், சீமான் தன் வாயாலேயே அவ்வப்போது வெளிப்படுத்திய வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் எழுதப்பட்டதுமாகும்.)

💐 நன்றி.

Tuesday 13 August 2024

ஹஜ்கமிட்டி வழியாக 2025 ஹஜ் பயணம் வின்னப்பித்தல் அரசு தேதி அறிவிப்பு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,



Thursday 4 July 2024

புதிய குற்றவியல் சட்டங்களால் பெரும் குழப்பம்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

புதிய குற்றவியல் சட்டங்களால் பெரும் குழப்பம்!

மாற்றியமைக்கப்பட்ட  பாரதிய நியாய சன்ஹிதா, ,பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா, பாரதிய சக்ஸயா சன்ஹிதா ஆகிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வரும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

ஆங்கிலேயர் காலத்துச் சட்டங்களை அகற்றி இன்றைய காலச் சூழலுக்கு ஏற்ப புதிய சட்டங்களை உருவாக்குவோம் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. அதன்படி இந்த 3 சட்டங்களை ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினார்கள்.

சில விடயங்கள் வரவேற்கக்கூடியவை என்றாலும், புதிய சட்டத்தின் 90 சதவீத பிரிவுகள், ஏற்கெனவே இருக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டங்களின் இருப்பவையே. 10 சதவீதம் தான் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டங்கள் 140 கோடி மக்களையும் பாதிக்கும்  என்கின்றனர் சட்ட வல்லுநர்கள். நிர்வாக ரீதியாக இந்தச் சட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல் இருக்கிறது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

புதிய சட்டங்களின் கீழும், ஏற்கெனவே உள்ள இந்திய தண்டனைச் சட்டங்களின் கீழும் விசாரணை நடைபெறும். இதனால் குழப்பம் ஏற்படும். வழக்குரைஞர்கள் எந்தச் சட்டத்தை எந்த வழக்குக்குக் கையாள வேண்டும் என்ற பெரும் குழப்பம் ஏற்படும்.

காவல் துறை, நீதித்துறைக்கும்  40 விழுக்காடு சுமை அதிகரிக்கும். சட்டம் ஒழுங்கு இதனால் மேம்படுமா? வாய்ப்பு இல்லை. மக்கள் குரல் ஒடுக்கப்படும் என்பது மனித உரிமை ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன் மக்கள் ‘பிரஜை’ என்று அழைக்கப்பட்டனர். பிரஜைகளுக்கு தனி உரிமை கிடையாது, அரசு சொல்வதை கேட்க வேண்டும். 1950 க்குப் பிறகு பிரஜைகள் குடிமக்களாக மாறினர். அரசாங்கத்தை தேர்வு செய்வது குடிமக்கள். 

இந்த சட்டங்களை பொறுத்தவரை, குடிமக்களிடம் இருந்து அதிகாரத்தைப் பறிக்கவும், அரசியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்பது எதிர்க்கட்சிகளின் சந்தேகம். இந்த சந்தேகத்தைப் போக்காமல் சட்டத்தை உடனே அமல்படுத்துவது ஆபத்தையும் குழப்பத்தையுமே ஏற்படுத்தும்.

ஆங்கிலேயே ஆட்சியில் அடிமைப்பட்டிருந்தோம், தற்போது சுதேசி சட்டம் கொண்டு வருகிறோம் என்கின்றனர். ஆனால் இந்தியில் சட்டங்களின் பெயர்களை வைத்ததின் மூலம் மற்ற மொழி பேசுவோரை அடிமைப்படுத்தும் முயற்சியா? என்ற கேள்வி எழுகிறது.

இந்திய அரசியல் சாசனத்தின் 348 வது பிரிவில், இந்தியாவின் சட்டங்கள் ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும் என்று உள்ளது. சட்டப்பிரிவுகளை ஆங்கிலத்தில் வைத்துவிட்டு, பெயரை மட்டும் இந்தியில் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன?

இதை எதிர்த்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் சட்டத்தை எழுதிவிட்டு பெயரை மட்டும் இந்தியில் ஏன் வைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இந்திய தண்டனைச் சட்டத்தில் பிரிவு எண்களை மாற்றியிருக்கிறார்கள். பழைய சட்டம் மற்றும் புதிய சட்டத்தின் பிரிவு எண்கள் வெவ்வேறாக இருக்கிறது. இதனால் நீதிமன்றத்தில் ஏற்படும் குழப்பம் தவிர்க்க முடியாதது.