Thursday 31 March 2011

கோட்டார் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நாகர்கோவில், 22/03/2011  நாகர்கோவில் சவுராஷ்டிரா தெருவை சேர்ந்தவர் பிரகாஷ்(23). இவர் சென்னையில் உள்ள ஒரு சூப்பர் மார்கெட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரும் இடலாக்குடி சந்திதெருவை சேர்ந்த ஷப்னா(23) என்பவரும் கடந்த 3 வருடமாக காதலித்து வந்தனர்.
இந்த விவகாரம் ஷப்னாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. ஷப்னாவிற்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிலையில் காதலர்கள் இருவரும் நேற்று வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தனர். பின்னர் மாலையில் கோட்டார் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இருவரது பெற்றோரையும் போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ஷப்னா காதலனுடன் தான் செல்வேன் என ஒரே முடிவில் இருந்தார்.
இதையடுத்து இருவரும் காவல் நிலையத்தில் வைத்தே மாலைமாற்றிக் கொண்டனர். பின்னர் இருவரையும் போலீசார் அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment