Monday 7 October 2013

உணர்வாய் உன்னை! என்ற ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்: - துபாய்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

உணர்வாய் உன்னைஎன்ற ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்:

உணர்வாய் உன்னை! என்ற ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் அக்டோபர் 11-ம் தேதி மதியம் 02.45 மணி முதல் இரவு 09.00 மணி வரை துபாய் முஹைஸ்னா பகுதியிலுள்ள BUDS PUBLIC SCHOOL ஆடிட்டோரியத்தில் நடைபெற உள்ளது.

ஏற்கனவே அபுதாபி, துபாய், ஷார்ஜா, ரியாத், தம்மாம், சிங்கப்பூர், குவைத், பஹ்ரைன், மஸ்கட் மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் நடத்தப்பட்டு மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த பயிற்சி முகாம் மீண்டும் துபாயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மனிதவள மேம்பாட்டு ஆலோசகர் ஹூசைன் பாஷா அவர்கள் பயிற்சியளிக்கிறார்.

முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பயிற்சி முகாமில் கலந்துக் கொள்ள விரும்புபவர்கள் 055 8622770, 050 9595216, 050 2933713 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு info@unarvaiunnai.com என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளலாம்.

பயிற்சி குறிப்பேடுகள், கையேடு மற்றும் சிற்றுண்டி இலவசமாக வழங்கப்பட உள்ளது.


Thanks & Regards

Prem Naseer
Dubai - U.A.E.
Mobile : +971-558622770
E-mail   :  premnaser@eim.ae



பேய், பிசாசு உண்டா - 1

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


மனித வாழ்வில் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தெளிவான தீர்வை அளிக்கும் வாழ்க்கை நெறியே இஸ்லாம். இதனை உணராத காரணத்தினால் தான் இன்று முஸ்லிம் சமுதாயம் தடம் புரண்டு சென்று கொண்டிருக்கிறது.

வணக்க வழிபாடுகளை மாத்திரம் சொல்லித் தருவதே இஸ்லாம் என்று சிலர் கருதுகின்றனர். மற்றும் சிலர் அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றை மாத்திரமே இஸ்லாம் சொல்லித் தருகிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். புறச்செயல்களை மாத்திரம் ஒழுங்கு படுத்தும் மார்க்கம் என்பர் வேறு சிலர். புறச்செயல்களைப் புறம் தள்ளிவிட்டு அகத்தை மட்டும் சுத்தம் செய்வதே இஸ்லாம் என்பர் இன்னும் சிலர். வெளிப்படையாக இவ்வாறு இவர்கள் கூறாவிடினும் தங்கள் நடவடிக்கைகள் மூலம் இவ்வாறு பிரகடனப்படுத்தி வருகின்றனர்.

பலரும் பலவிதமாக இஸ்லாத்திற்கு வடிவம் கொடுக்க முயன்றாலும், மனித வாழ்வின் அனைத்துப் பிரச்சனைகளிலும் தலையிட்டு தக்க தீர்வை வழங்குவதே இஸ்லாம். மனிதனது செயல்களில் மட்டுமன்றி அவனது நம்பிக்கையிலும் எண்ணத்திலும் கூட இஸ்லாம் தலையிடுகிறது. எவற்றைச் செய்யலாம் எவற்றைச் செய்யலாகாது என்பதை இஸ்லாம் விளக்குவது போலவே, எவற்றை நம்பலாம் எவற்றை நம்பலாகாது என்பதையும் இஸ்லாம் விளக்கமாக எடுத்துரைக்கின்றது. செயல்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட சற்று அதிகமாகவே எண்ணத்திற்கு முக்கியத்துவம் தருகின்றது.

செய்ய வேண்டியவைகளைச் செய்யாமலிருப்பதும், செய்யக் கூடாதவைகளைச் செய்வதும் எப்படிக் குற்றமோ அது போலவே நம்ப வேண்டியவைகளை நம்பாமலிருப்பதும் நம்பக் கூடாதவற்றை நம்புவதும் குற்றமே. இதன் காரணமாகவே பேய் பிசாசுகள் என்று மக்களால் நம்பப்படும் விசித்திரமான படைப்பைப் பற்றி இஸ்லாமிய அடிப்படையில் நாம் ஆராயும் அவசியம் ஏற்படுகிறது.

பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்

பெண் என்றால் பேயும் இரங்கும்
நோய்க்கும் பார்க்க வேண்டும்; பேய்க்கும் பார்க்க வேண்டும்

என்றெல்லாம் தமிழகத்தில் வழங்கும் பழமொழிகள், தமிழர்களின் உள்ளங்களில் பேய்களுக்கு இருக்கும் இடத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

உலகின் பல பகுதிகளில் பேய்களின் நடமாட்டம் உண்டு எனினும் தமிழகத்தில் இவற்றின் நடமாட்டம் மிக அதிகம். எண்ணிலடங்காத பேய்கள் உலா வருவதால் அவற்றின் பெயர்களும் தன்மைகளும் மிகத்துல்லியமாக வித்தியாசப்பட்டுள்ளதை தமிழகத்தில் காண முடியும்.

நள்ளிரவில் கதவைத் தட்டும் பேய்களும் உள்ளன. வீடுகளில் கல்லெறிந்து விட்டு மாயமாய் மறைந்திடும் பேய்களும் உள்ளன. பழிவாங்கும் பேய்கள்; இரத்தம் குடிக்கும் பேய்கள்; இளைஞர்களை மாத்திரமே தப்பு செய்வதற்காக அழைக்கும் மோகினிப் பேய்கள், வேண்டியவர்களுக்கு உதவி செய்யும் பேய்கள் என்றெல்லாம் பேய்களில் பல வகைகள் உள்ளன. இல்லறத்தில் தோல்வியடைந்து இலக்கின்றி அலையும் பேய்களும் உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக மனிதன் மீது மேலாடுகின்ற மகாசக்தி  படைத்த பேய்களும் உள்ளன.

பிசாசுகள், மோகினி, இரத்தக் காட்டேரி, கொள்ளிவாய்ப் பிசாசு என்பது போன்ற செல்லப் பெயர்களும் பேய்களுக்கு உள்ளன. பேய்களுக்கு தமிழகத்தில் இருக்கும் வெல்வாக்குக்கு இவை சான்றுகள்.

பேய் வீடு, பேய் மாளிகை என்றெல்லாம் பேய்களைக் கதாநாயகர்களாக்கி பி.டி. சாமி போன்றவர்கள் தமிழகத்தில் பிழைப்பு நடத்த முடிகின்றதென்றால் பேய் சமாச்சாரங்களை வெளியிட்டு தமிழகப் பத்திரிகைகள் பல சமூகத் தொண்டாற்ற (?) முடிகிறது என்றால் பேய்களின் ஆதிக்கத்தை அளவிட வேறு அளவுகோல் எதுவும் தேவையில்லை.

அஞ்சி அஞ்சிச் சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே வஞ்சனைப் பேய்களென்பர்; துஞ்சுது முகட்டிலென்பார்; அந்த மரத்திலென்பார்; இந்தக் குளத்திலென்பார் என்று நெஞ்சு பொறுக்காமல் சில பேர் குமுறினாலும் சில சுயமரியாதையுள்ள பெரியார்கள் பேய்களுக்கெதிராக கடும் பிரச்சாரம் செய்தாலும் பேய் விசுவாசிகளின் நம்பிக்கையை அசைக்க முடியவில்லை.

மற்றவர்கள் பேய்களைப் பற்றி எப்படி வேண்டுமானாலும் நம்பிவிட்டுப் போகட்டும்! முஸ்லிம்கள் இது பற்றி எத்தகைய முடிவுக்கு வரவேண்டும் என்பதையும் பேய்களை நம்புவதனால் ஏற்படும் சாதக பாதகங்களையும் அவற்றை மறுப்பதால் ஏற்படும் சாதக பாதகங்களையும் திருக்குர்ஆன் வெளிச்சத்தில், திருநபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் துணையுடன் ஆராய்வோம்.

மனிதன் மரணித்த பிறகு அவனது உயிர் (ஆவி) எங்கே செல்கிறது? என்ன செய்கிறது? என்ற வினாக்களுக்கு விடை கண்டால் பேய்கள் உண்டா? என்ற வினாவுக்கும் விடை கிடைக்கும். ஏனெனில் இறந்தவர்களின் ஆவிகள் இவ்வுலகுக்குத் திரும்பி வந்து சுற்றிக் கொண்டிருக்கின்றன என்ற நம்பிக்கை தான் பேய்களைப் பற்றிய நம்பிக்கையின் அடிப்படை.

இறந்தவர்களது ஆவிகளின் நிலை என்ன? என்பதை முதலில் காண்போம். அதன் பிறகு பேய்களின் ஆதரவாளர்கள் எழுப்பும் வினாக்களையும் ஆராய்வோம்.

உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
(அல்குர்ஆன் 39:42)

பேய்-பிசாசுகள்  கிடையாது என்பதற்கு திருக்குர்ஆனின் இந்த ஒரு வசனமே போதிய சான்றாக அமைந்துள்ளதை சிந்திப்பவர்களால் அறிய முடியும். இறந்து விட்ட மனிதர்களின் ஆவிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் (தனது கைவசத்தில்) வைத்திருப்பதாக தெளிவாகவே இங்கே இறைவன் குறிப்பிடுகிறான். இறைவனது கைவசத்திலேயே ஆவிகள் இருப்பதாக இறைவன் தெளிவாக அறிவித்த பின்னர் அவனது கட்டுப்பாட்டை உடைத்தெறிந்து விட்டு ஆவிகள் தப்பித்து வந்து விடுகின்றன என்று ஒரு முஸ்லிம் நம்ப முடியாது.

பேய்கள் இருப்பதாக நம்புபவர்கள் இறைவனது இந்த வசனத்தை மறுத்தவர்களாவார்கள்; அல்லது இறைவனது கட்டுப்பாடு வலுவற்றது என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்கள். இரண்டில் எதை ஏற்றாலும் அவர்கள் இஸ்லாமிய வட்டத்திலிருந்து தாங்களாகவே வெளியேறி விடுகின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஒரு பிரார்த்தனை இந்த வசனத்திற்கு விளக்கமாக அமைந்துள்ளதைக் காணுங்கள்.

உங்களில் யாரேனும் படுக்கைக்குச் சென்றால், என் இறைவா! உன் திருப்பெயராலேயே திரும்பவும் எழுவேன் (உறக்கத்தில்) எனது உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அற்கு நீ அருள் புரிந்திடு! அதை நீ திரும்ப அனுப்பினால் உனது நல்லடியார்களை நீ பாதுகாப்பது போல் எனது உயிரையும் நீ பாதுகாத்து விடு என்று கூறட்டும்.

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் புகாரி, முஸ்லிம் ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது.

திருக்குர்ஆனின் 39:42 வசனம் கூறும் அதே கருத்தை இந்த நபிமொழியும் கூறுகின்றது. உறக்க நிலையிலும், மரணித்த பின்னரும் மனிதர்களின் ஆவிகள் இறைவனது கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன என்று அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் இரண்டாவது கருத்துக்கு இடமில்லாத வகையில் அறிவித்து விட்ட பின் பேய்களிருப்பதாக ஒரு முஸ்லிம் எப்படி நம்ப முடியும்? பேய்களை நம்புபவன், எப்படி இறைவனையும் இறைத் தூதரையும் நம்பியவனாக முடியும்?

இந்த இரண்டு சான்றுகளே பேய்களை மறுக்கப் போதுமானவை என்றாலும் அதிக விளக்கத்துக்காக மேலும் பல சான்றுகளையும் காண்போம்.

ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்கள்


Sunday 6 October 2013

பெண்ணின் நிர்வாண நடனத்தை கண்டு ரசித்த பாஜ தலைவர்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

கர்நாடகாவில் பெண்ணின் நிர்வாண நடனத்தை கண்டு ரசித்த பா.ஜ. தலைவர்கள் ரகசிய கேமராவில் பதிவு செய்து டிவி.யில் ஒளிபரப்பு செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம் பீதர் நகரில் உள்ள விடுதியில் பெண் ஒருவர் நிர்வாணமாக நடனமாடிய நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று வெளியிடபட்டது. இந்த நடன நிகழ்ச்சியில் பீதர் மாவட்டத்தை சேர்ந்த பாஜ முன்னாள் மாவட்ட செயலாளர் பாபுவாலி, பாஜ பிரமுகர் பி.எஸ். குதிரே, 4 பெண்கள் உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் அமர்ந்து ரசிப்பதுபோல் கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த காட்சி டிவி.யில் ஒளிபரப்பானதும் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நிர்வாண நடனமாடிய பெண் தனது முகத்தை மூடியபடி தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில், ��பீதரை சேர்ந்த பாஜ பிரமுகர்கள் பாபுவாலி, பி.எஸ்.குதிரே ஆகியோர் ஐதராபாத்துக்கு வந்து என்னை நிர்வாண நடனம் ஆட வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தினர். இதற்கு உம்னாபாத் தொகுதி எம்.எல்.ஏ. ராஜசேகர் பாட்டீலும் உடந்தையாக இருந்தார்என்று குற்றச்சாட்டினார். அவரின் பேட்டி மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து பாஜவின் மாநில பொதுசெயலாளர் ரகுநாத்மால் காபூரே அளித்த பேட்டியில், “நிர்வாண நடன நிகழ்ச்சியில் பாஜ.வினர் பங்கேற்றுள்ள விவகாரம் கவனத்துக்கு வந்துள்ளது. 

பீதர் மாவட்ட போலீஸ் எஸ்.பி., தியாகராஜன் கூறுகையில், “நிர்வாண நடனம் குறித்து எனக்கு எந்த தகவலும் இதுவரை வரவில்லை. இருந்தாலும், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காட்சிகளை வரவழைத்து அதை தீவிரமாக ஆய்வு செய்து அதில் இடம் பெற்றுள்ளவர்கள் மற்றும் இதை தனியார் தொலைகாட்சிக்கு கொடுத்தவர்கள் மீது விசாரணை நடத்தப்படும். அத்துடன், நிர்வாண நடனமாடியவர் தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கைது செய்யப்படுவார்என்றார்.




Saturday 5 October 2013

திருமண பத்திரிக்கை - யார் பொறுப்பு??










இங்கே இருக்குது சமத்துவம்...!





அன்புச் சகோதர, சகோதரிகளே...! 20, 21ஆம் நூற்றாண்டில்தான் பலவிதமான விஞ்ஞான கண்டுபிடிப்புகள் உலகுக்குக் கிடைத்தன. இதன் வாயிலாக மின்சாரம் முதல் கம்ப்யூட்டர் வரை கண்டுபிடிக்கப்பட்டு இன்று நமக்கு அது தவிர்க்க இயலாததாகிவிட்டது. தொலைதொடர்பு, போக்குவரத்து போன்றவற்றின் மூலம் இன்று உலகம் விரல் நுனியில் சுருங்கிவிட்டது. எந்தத் தொலைவிலுள்ள மனிதனும் உலகின் மற்றொரு மூலையிலுள்ள மனிதனை தொடர்புகொண்டு மருத்துவம், வியாபாரம், கல்வி உட்பட அனைத்துத் துறைகளிலும் பயனடைய முடிகிறது.
அதேநேரத்தில், இன்றுவரை நமது இந்தியத் திருநாட்டில் பல கிராமங்களிலும் ஒரு சாரார் மட்டும் ஏனோ மற்றவர்களிடமிருந்து தனித்து விடப் பட்டுள்ளனர். அவர்கள்தான் இந்து மதத்தினரால் தாழ்ந்த ஜாதியினர் என்று அழைக்கப்படும் தலித்துகள். தலித்துகள் இந்தியாவையே ஆளத் தகுதிபெறும் அளவுக்கு பெரும்பான்மையினர். ஆனால் அவர்களின் நிலையோ மிகவும் பரிதாபத்திற்குரியது. எப்படியெனில், இன்று அவர்கள் சில இடங்களில் வீட்டில் வளர்க்கப்படும் பிராணிகளை விட கீழ்த்தரமாக நடத்தப்படுகின்றார்கள். மேல்சாதியினர் வசிக்கும் இடங்கள் வழியாக தலித்கள் செல்லும்போது செருப்பைக் கையில் தூக்கிக்கொண்டுதான் செல்லவேண்டும். சில இடங்களில் செல்லவே முடியாது.
தாழ்த்தப்பட்ட ஒருவன் இறந்துவிட்டால் அவனது பிணத்தை எரிக்கவோ அல்லது புதைக்கவோ இந்த மேல்சாதி மக்கள் வசிக்கும் பகுதிகள் வழியாக கொண்டுசெல்லவே முடியாது. பல மைல் தூரங்கள் தேவையில்லாமல் சுற்றிச் சென்றுதான் கொண்டு செல்லவேண்டும். ஐந்தறிவு கொண்ட நாய் ஒன்று மேல்சாதிக் காரனின் வீட்டில் நுழையலாம்... அங்குள்ள பாத்திரத்தில் வாய் வைக்கலாம்... அவர்களின் தெரு வழியாக இஷ்டத்துக்கு வலம் வரலாம்... ஆனால், இதே காரியங்களை இவர்களால் தாழ்த்தப்பட்ட ஒருவன் செய்தால் இவர்களின் வீடும், பாத்திரமும் உடலும் தீட்டுப்பட்டுவிடும்...! அந்தோ பரிதாபம்...!!!
மேல்சாதியினர் என்று கூறிக்கொள்வோரின் வீட்டுப் பெண்ணையோ அல்லது ஆணையோ இவர்களால் தாழ்த்தப்பட்ட ஒரு ஆணோ, பெண்ணோ நேசித்துவிட்டாலே போதும்... அவர்களுக்கு மொட்டை அடித்து, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, சக மனிதர்கள் முன் கேவலப்படுத்தப்படுவார்கள். ஏன்...? அவர்களுடைய உயிர் கூட பறிக்கப்பட்டுவிடும். இது நமது இந்தியாவில் இன்றும் சர்வ சாதாரணமாக நடந்து வருபவை. அது மட்டுமல்ல! தாழ்த்தப்பட்ட இந்துப் பெண் ஒருத்தி மேல்சாதிக்காரனால் மானபங்கப் படுத்தப்பட்டாலோ, கொல்லப்பட்டாலோ அதற்கு சாட்சியே இல்லாமல் ஆக்கி, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து விடுகின்றனர். பரிதாபம்... பரிதாபம்... இந்திய அரசியல் சாசனச் சட்டத்தைத் தொகுத்துத்தந்த பெருமை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் தலைவர் டாக்டர் அம்பேத்கரைச் சாரும். ஆனால் அவரது சமுதாயமோ திக்குத் தெரியாத காட்டில் உள்ளது. இதற்கெல்லாம் காரணம்... இந்த மக்கள் அண்ணல் அம்பேத்கர் மீது உயிரையே வைத்திருந்தபோதிலும் அவர் காட்டிய பாதையில் அடியெடுத்துச் செல்லாததுதான்!
கல்வி கற்பி! ஒன்று சேர்!! புரட்சி செய்!!! என்றார் அண்ணல் அம்பேத்கர். ஆனால் இந்த மக்கள் மற்றவர்களைப் போல கல்வி கற்க இயலவில்லை. காரணம் பொருளாதாரம். தலைமுறை தலைமுறையாக ஆளும் வர்க்கத்திற்கு கூலி வேலை செய்வதும், கிடைப்பதை வைத்துக்கொண்டு சடங்கு, சம்பிரதாயங்கள் என்று செலவழித்துவிட்டு கடனாளியாகி, மீண்டும் அவர்களிடமே கையேந்திக் கொண்டு நிற்பதும்தான்! பல்லாண்டு காலங்களாக பல தலைவர்களும் முயற்சி செய்தபோதிலும் இந்தக் கொடுமைகளுக்கு இன்றும் தீர்வு இல்லை. இது எந்த அளவுக்குச் சென்றுள்ளது என்றால், மனிதனின் மலத்தை மனிதனையே தின்ன வைத்துள்ள அநியாயம்... அக்கிரமம்... இன்று இவர்களால் தாழ்த்தப்பட்ட ஒருவனுக்கு ஏற்பட்டுள்ளது. அனைவரும் வெட்கித் தலைகுனியவேண்டிய விஷயமல்லவா இது...? மேலவலவு, கொடியங்குளம், வாசாத்தி போன்ற கிராமங்களின் வரிசையில் இன்னும் எத்தனை எத்தனை கிராமங்களோ...!
ஜாதிகள் இல்லையடி பாப்பா...' இது பிஞ்சுக் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுக்கப்படும் பாட்டு. ஆனால், இதைக் கற்பதற்கு பள்ளியில் சேர வேண்டுமானால் தனது ஜாதியைச் சொல்லித்தான் சேர வேண்டியதிருக்கிறது.
முன்னேறுவதற்கு முயலும் இந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு அதில் கிடைத்த பலன் பூஜ்யமே! பல தலைவர்கள் வந்தார்கள்... சென்றார்கள்... அவர்களால் தங்கள் சமுதாயத்திற்காகக் குரல் கொடுக்கவும், சில சலுகைகளைப் பெற்றுத்தரவும் முடிந்ததே தவிர, அம்மக்கள் சக மனிதர்களுடன் சரி சமமாகப் பழகும் உரிமையை, தலைமைத்துவத்தை வாங்கிக் கொடுக்க முடியவில்லை, கொடுக்கவும் முடியாது. அரசாங்கமும் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அவை அனைத்துமே வீணாகியதுதான் மிச்சம்.
ஏனென்றால், இது நாட்டின் கொள்கை அல்ல! அவர்கள் சார்ந்துள்ள மதத்தின் கொள்கை. அன்றாட காரியங்கள் முதல் அவ்வப்போது நடக்கும் மதச் சடங்குகள், நல்ல நிகழ்ச்சிகள் அனைத்திலும் தலித்துகள் ஜாதியின் பெயரால் ஒதுக்கப்பட்டனர். இதில் வேடிக்கை என்னவென்றால், எது எதுவெல்லாம் மனித சமுதாயத்திற்கு தீங்கு தருமோ, பாவமான காரியமோ, அந்த அனைத்திலும் ஜாதி வேறுபாடுகள் எங்கோ பறந்துவிட்டன.
உதாரணமாக, தியேட்டரில் சினிமா பார்க்கும் ஒரு மேல்சாதிக்காரன் தன் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருப்பவன் என்ன ஜாதி என்று பார்ப்பதில்லை. மதுக்கடைகளில் மது அருந்துபவர்கள் ஜாதிப் பாகுபாடு இல்லாமல் கிண்ணங்களை மோதவிட்டு மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்வதைப் பார்க்கிறோம். விபச்சாரம் செய்யும் ஆணும், பெண்ணும் தங்களுக்குள் என்ன ஜாதி என்று கேட்டுக்கொள்வதில்லை. ஆனால் இதுவே நல்ல காரியங்களில் காணவே முடிவதில்லை. ஆகா... என்னே சமத்துவம்...!!! இந்த இழிவுகளிலிருந்தெல்லாம் நீங்கி, சமத்துவம் பெறலாம் என்று கிறிஸ்துவ மதத்தில் இணைவோரும் கூட அங்கே தலித் கிறிஸ்துவன் என்ற அடையாளத்துடனேயே வாழவேண்டியுள்ளது. 
எல்லாம் சரிதான்! சமத்துவத்துக்கு வேறு என்னதான் வழி என்று நீங்கள் கேட்கிறீர்களா...திருச்சி பெல் தொழிலாளர் மாநாட்டில் தந்தை பெரியார் உரையாற்றும் போது, எங்கு சென்றாலும் உங்களை இந்த ஜாதிப்பாகுபாடு விடாது! இந்த இன இழிவு நீங்க இஸ்லாம் ஒன்றுதான் நன்மருந்து என்று அவர் முழங்கினார். கொடிக்கால்பாளையத்தில், தாழ்த்தப்பட்டவராக இருந்தவர் கொடிக்கால் செல்லப்பா. இவர் ஒரு கம்யூனிஸ்ட்வாதியாக இருந்தபோதிலும், தான் இருக்கும் மதத்திலிருந்துகொண்டு ஒருபோதும் ஜாதி இழிவை விட்டு அகல இயலாது என்ற நிலையில் இன்று கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் என்ற பெயரில் இன்று தானும் தலை நிமிர்ந்து நடப்பதோடு, தன்னைச் சார்ந்த சக மக்களைப் பார்த்துபுறப்படு நீயும் இஸ்லாத்தை நோக்கி! என்று புத்தகம் மூலம் அறைகூவல் விடுத்துக் கொண்டிருக்கிறார். 
அரசியல்வாதியாகவும், பிரபல பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியராகவும் இருந்த அடியார் என்பவர், இஸ்லாம் தவிர்த்து வேறு எதுவாலும், எவராலும் தம் சமுதாயத்தை உயர்வடையச் செய்ய முடியாது என்கிற நிலையில், நான் காதலிக்கும் இஸ்லாம் என்ற புத்தகத்தை தன் சமுதாயத்திற்குத் தந்த கையோடு தன் வாழ்வையும் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் அமைத்துக் கொண்டார். இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல், இங்குள்ள ஜாதிவெறி போல நிற வெறியும், இனவெறியும் தலைவிரித்தாடும் அமெரிக்காவில் கறுப்பர் வெள்ளையர் என்ற வேற்றுமையால் தாங்க முடியாத பாதிப்பிற்குள்ளான கறுப்பர் இன கிறிஸ்துவராக இருந்த மால்கம் எக்ஸ், குத்துச்சண்டையில் உலக ஹெவிவெய்ட் சாம்பியனாக வலம் வந்தும் நிற இழிவால் தொடர்ந்து பாதிக்கப்பட்ட க்ளேசியஸ் கிளே என்ற முஹம்மத் அலி க்ளேயும் இஸ்லாம் ஒன்றுதான் ஜாதி, இன, நிற, மொழி வேறுபாடற்ற மார்க்கம் என்று உணர்ந்துகொண்டு தங்களை சமத்துவ இஸ்லாமிய மார்க்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இவையெல்லாம், வேறு மதங்களிரிருந்து சத்திய இஸ்லாமிய மார்க்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்களின் நிலை. சரி, இந்த ஜாதி, இன, நிற, மொழி வேறுபாடுகளைக் களைய இஸ்லாம் என்னதான் கூறுகிறது என்று அறிய ஆவலா? உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான வழிகாட்டியாக உள்ள திருக்குர்ஆன் என்ன கூறுகிறது என்று பாருங்கள்:
ஓ மனிதர்களே...! உங்கள் இறைவனுக்கு பயந்துகொள்ளுங்கள். அவன் உங்களனை வரையும் ஒரே ஆத்மாவிரிருந்தே படைத்தான். அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் அவ்விருவரிலிருந்து அனேக ஆண்களையும், பெண்களையும் (உலகில்) பரவச்செய்தான். ஆகவே இறைவனுக்கு பயந்துகொள்ளுங்கள்..... (திருக்குர்ஆன் 4:1)
உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்பது பிறப்பினால் ஏற்படுவதல்ல, அவரவர் செய்யும் நல்ல தீய செயல்களைக் கொண்டே ஒருவன் உயர்ந்தவன் அல்லது தாழ்ந்தவன் என்று பிரிக்கப்படுவான் என்று உலகப் பொதுமறை திருக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்:
மனிதர்களே...! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிரிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆகவே) நிச்சயமாக உங்களில் எவர் (தம் செயல்கள் விஷயத்தில் இறைவனுக்கு) மிகவும் பயபக்தி உடையவரோ அவரே அல்லாஹ்விடம் உங்களில் மிகவும் கண்ணியமானவர். (திருக்குர்ஆன் 49:13)
அது மட்டுமல்ல! ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் செய்யப்படும் சடங்கு சம்பிரதாயங்கள், மூட நம்பிக்கைகள் அனைத்தையும் தவிர்த்து, எந்தத் தேவையுமற்ற ஒரே இறைவனை வணங்கி வழிபட இதோ திருக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்:

(
இறைவனின் தூதரே...!) நீர் கூறும்...! இறைவன் ஒருவனே...! இறைவன் (எவரிடத்தும்) எந்தத் தேவையுமற்றவன்...! அவன் (யாரையும்) பெறவும் இல்லை....! (எவராலும்) பெறப்படவும் இல்லை...! அன்றியும் அவனுக்கு நிகராக எவருமில்லை...!!! (திருக்குர்ஆன் 112:1 4) .
இன்று இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் யாரும் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்ல! சில தலைமுறைகளுக்கு முன் இதுபோன்ற ஜாதி இழிவுகளிரிருந்து விடுதலை பெற முடிவு செய்து அதனடிப்படையில் தங்களை மாற்றிக்கொண்டவர்கள் தான் இன்றைய முஸ்லிம்களில் பெரும்பாலோர். ஒரு சிறிய அளவு முஸ்லிம்கள், இஸ்லாமிய மார்க்கத்தில் உள்ள விஞ்ஞான உண்மைகள், அறிவுப்பூர்வமான தத்துவங்கள்... இன்னும் இதுபோன்ற பல காரணங்களால் கவரப்பட்டு சத்திய இஸ்லாமிய மார்க்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள். அது மட்டுமல்ல! இஸ்லாம் மார்க்கத்தில் உள்ள முக்கிய வழிபாடுகளான தொழுகை, ஹஜ் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்... ஒரு நாளைக்கு 5 வேளை கூட்டுத் தொழுகை நடத்தப்படுகிறது. நேற்றுவரை வேறு வேறு ஜாதிகளில் இருந்து கொண்டு ஒருவரையொருவர் சிறிதும் நெருங்காமல் வாழ்ந்துவந்த மக்கள் இன்று முஸ்லிம்களாக ஓரணியில் நின்று தோளோடு தோள் நின்று தொழும் காட்சியை நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.
ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்து இஸ்லாமிய மார்க்கத்தைத் தழுவியவன் சற்று முந்திவந்து, உயர்ஜாதியிலிருந்து இஸ்லாமிய மார்க்கத்தைத் தழுவியவன் தாமதமாக வந்தால், பிந்தி வந்தவன் பின் வரிசையில்தான் நின்றாக வேண்டும். முந்தி வந்த சகோதரனின் கால் பிந்தியவனின் தலைமீது படும். நாட்டின் பிரதமராக இருந்தாலும், அவர் பிந்தி வந்தால் பின் வரிசையில்தான் நின்றாக வேண்டும். நான் பிரதமரல்லவா என்று முன் வரிசையில் மற்றவரை ஒதுக்கிவிட்டுச் செல்ல முடியாது. அதுபோலவருடந்தோறும் சவூதி அரேபியாவில் புனித மக்கா நகரத்தில் உள்ள இறை ஆலயமான கஃபாவில் ஹஜ் என்ற வணக்கம் நடைபெறுகிறது. பல நாடுகளைச் சார்ந்த, பல மொழி, இன, நிற வேறுபாடுகளைக் கொண்ட சுமார் 35 லட்சம் பேர் ஒரே உடையில், ஒரே இடத்தில் ஒன்று கூடும் அந்த நாளில் அனைவரும் எந்த வித்தியாசமான குறுகிய எண்ணமும் இன்றி, இரண்டறக் கலந்து வலம் வரும் அந்தக் காட்சியைப் பார்ப்போர், இஸ்லாமிய மார்க்கத்தில் இந்தக் குறுகிய வேறுபாடுகளுக்கு எந்த இடமும் இல்லை என்று சத்தியமிட்டுக் கூறுவர்.

1430
வருடங்களுக்கு முன்பு, இன்று நாம் காணும் இந்த வேறுபாடுகளை விட மோசமான பாகுபாடுகள் நிலவி வந்தன. இப்போதாவது இந்த தலித் மக்கள் தங்களது சுய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள ஓரளவாவது வாய்ப்புள்ளது.
ஆனால் அன்றைய அரபு சமுதாயத்தில் கறுப்பு இன மக்கள் அடிமைகளாக தனது முழு வாழ்வையும் இழந்து, மாட்டையும்விட கேவலமாக நடத்தப்பட்ட காலம் அது! அந்தப் பொழுதில்தான் இறுதி இறைத்தூதர் நபிகள் நாயகம் (முஹம்மது நபி) அவர்கள் மூலமாக உலகப் பொதுமறை திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்டு, அதனடிப்படையில் ஒரு மாபெரும் சமூகப் புரட்சியையே ஏற்படுத்தியது. அந்தப் புரட்சி இரண்டு விதமாக நடத்திக் காட்டப்பட்டது.
ஒன்று : இன்று கம்யூனிஸவாதிகளால் தோழர்களே! என்று அழைக்கப்படும் அந்தப் பதம் 1430 வருடங்களுக்கு முன்பே இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களால் மன உவப்புடன் செயல்படுத்திக் காட்டப்பட்டது.
அடுத்தது : ஒரு காலத்தில் பல புரட்சிகளையும், புதுமைகளையும், தத்துவங்களையும் பேச்சிலும், எழுத்திலும் காட்டி தங்களுக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கிய பல தலைவர்களுக்கு இன்று பொன்னாலும், வெள்ளி மற்றும் வெண்கலத்தாலும், பாறையாலும் சிலை வடித்து வழிபாடுகள் நடத்தப் படுகின்றன.
ஆனால், தான் சொன்னதைச் செய்து காட்டியவர்... செய்ததை மட்டுமே சொன்ன ஒரே தலைவர்... ஒரு அறிவுப்பூர்வமான மார்க்கத்தை உலக மக்களுக்கு விளக்கிக்காட்ட வந்த உத்தமர்... அப்பேற்பட்ட நபிகள் நாயகம் அவர்கள், தான் வரும்போது மக்கள் தனக்காக எழுந்து நிற்பதையே தடுத்து நிறுத்திக் காட்டியவர்... காலில் விழுவதைக் கண்டித்தவர்...
தற்போது மொத்த உலகில் நான்கில் ஒருவரால் பின்பற்றப்படும் நபிகள் நாயகம் அவர்களுக்கு உலகின் எந்த மூலையிலும் ஒரு சிறு சிலை கூட கிடையாது என்பது மாபெரும் புரட்சிதானே...? (சில வருடங்களுக்கு முன்னர் உலகின் பல உயர்ந்த தலைவர்களை மதிக்கும் நோக்கத்தில் அமெரிக்காவில் நிறுவப்பட்ட சிலைகளின் வரிசையில் நபிகள் நாயகம் அவர்களுக்கும் ஒரு சிலை வைத்தனர். பொதுவாகவே, இது சந்தோஷப்பட வேண்டிய ஒன்று. ஆனால் நபிகள் நாயகம் அவர்களால் உருவாக்கப் பட்ட இந்த முஸ்லிம் சமுதாயம், நபிகள் நாயகத்துக்கு வைக்கப்பட்ட சிலையை அகற்றச் சொல்லி உலகம் முழுவதும் கொந்தளித்தது. முடிவில் அந்தச் சிலையும் அகற்றப்பட்டது. இந்தப் புரட்சியை எங்காவது காட்ட முடியுமா?
வெறும் பேச்சளவில் மட்டும் புரட்சி பேசாமல் செயல்படுத்தியும் காட்டினார்கள் நபிகள் நாயகம் அவர்கள்! அனைத்து மக்களையும் தொழுகைக்கு அழைக்கும் அழைப்போசையை (பாங்கு) முழங்கிட அன்றை அரபு சமுதாயத்திலேயே மகா மட்டமாகக் கருதப்பட்ட கறுப்பர் இன அடிமையான பிலால் என்ற ஒரு தோழரையே நபிகள் நாயகம் அவர்கள் நியமித்தார்கள். இதன் காரணமாக, அதுவரை அவரை அடிமையாகப் பார்த்துக்கொண்டிருந்த அரபு மக்கள் அன்று முதல் அவரை தலைவர் என்று அழைக்கத் துவங்கிவிட்டனர். இதுதான் இஸ்லாம் செயல்படுத்திக் காட்டும் சமத்துவம்.
எனவே, உயர்வுக்கு வழிவகுக்கும் சாதி, இன, நிற, மொழி மற்றும் இன்னபிற வேறுபாடுகள், மூட நம்பிக்கைகளை ஒழிக்கும் சத்திய இஸ்லாமிய மார்க்கத்தின்பால் உங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளுங்கள்...! சமத்துவம் காணுங்கள்...!! வெற்றி பெருங்கள்...!!! படைத்த இறைவன் நம் அனைவருக்கும் கிருபை செய்வாராக...!

நன்றி : சமூக நல்லிணக்க மையம் (CESH)

துபாய் சோனாப்பூரில் நடைப்பெற்ற தியாகம் செய்வோம் வாருங்கள் இஸ்லாமிய நிகழ்ச்சி .

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

துபாய்  04:10:13 வெள்ளிக் கிழமை அஷர் தொழுகைக்குப் பின் இஸ்லாமிய சொற்பொழிவு நடைப்பெற்றது, நிகழ்ச்சிக்கு தமுமுக தலைவர் அதிரை அப்துல் ஹமீத் தலைமை தாங்கினார், IPP பொறுப்பாளர் அதிரை அப்துல் காதர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்,இந்நிகழ்ச்சியில் சகோதரர் குணங்குடி முஹைதீன் இஸ்லாம் கூறும் மனிதநேயம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்,அதைத்தொடர்ந்து சகோதரர் A.S.இப்ராஹிம் அவர்கள் குர்பானியின் சட்டங்கள் என்ற தலைப்பிலும் உரைநிகழ்த்தினார்,
மஹ்ரிப் தொழுகைக்குப் பின் சகோதரர் நாசர் அலிகான் அவர்கள் முஸ்லிம்கள் அன்றும் இன்றும் என்ற தலைப்பிலும் உரைநிகழ்த்தினார் இந்நிகழ்ச்சியில் சோனாப்பூர் பலுதியா கேம்ப் சகோதரர்கள் திரளாக கலந்துக் கொண்டு பயன் அடைந்தார்கள். அமர்வு  நடைப்பெற பலுதியா கேம்ப் சகோதரர்கள் கடையநல்லூர்  அப்துல்ஹமீத்,பாதுஷா,அலி,முஹைதீன்,முஹம்மத்,மேலப்பாளையத்தைச் சார்ந்த காஜா உள்ளிட்ட சகோதரரர்கள் சிறப்பாக பணியாற்றினார்கள்,
எல்லாப்புகழும் இறைவனுக்கே!

அன்புடன்,  முஹைதீன்,

New era in Islamic finance

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

Patrick Michael and Mustafa Al Zarooni / 6 October 2013

Shaikh Mohammed, Shaikh Hamdan, Shaikh Maktoum, Shaikh Majid, other Shaikhs and business leaders at the ceremony in Dubai on Saturday. — Wam
 1/3 
An ambitious initiative to transform Dubai into the world capital of Islamic economy was launched on Saturday by b Vice-President and Prime Minister of the UAE and Ruler of DubaiThe timely initiative, led by a high-level task force, comes as the thriving global Islamic finance market is forecast to expand from $1.6 trillion in assets to between $2 trillion and $3 trillion by 2015.
The task force, the Higher Committee for the Development of Islamic Economy, has been given six months to draw up the strategy and 36 months to implement the blueprint with 46 strategic initiatives.
Shaikh Mohammed revealed seven of these initiatives at the launch of the ‘Dubai — Capital of Islamic Economy’ initiative in the presence of Shaikh Hamdan bin Mohammed bin Rashid Al Maktoum, Crown Prince of Dubai and Chairman of the Dubai Executive Council; and Shaikh Maktoum bin Mohammed bin Rashid Al Maktoum, Deputy Ruler of Dubai and Chairman of Dubai Media Incorporated (DMI).
“The continued developments and changes in the global economy increase the need to constantly diversify the structure of our national economy. Our firm principle in the UAE is not to rely on one single economic resource or sector. The Islamic economy is not new to us. In fact we have accumulated considerable expertise in this field and our aim is the global arena,” said Shaikh Mohammed.
“In the UAE, we excel at the public-private sector partnership, where both sectors work as one team. Therefore, I am optimistic about the success of the Islamic economy sector and about placing Dubai on the international economic map as the global destination of choice that provides Islamic products, finance and services as well as raising the standards for the management and quality of this sector to new levels.
“Our aim from all economic initiatives we launch is to improve the quality of life and providing opportunities that ensure a prosperous future for coming generations,” added Shaikh Mohammed.
He directed all stakeholders to coordinate their efforts in light of the strategic plan for developing the Islamic economy sector and to support this sector by continuously launching strategic initiatives and programmes.
Mohammed Abdullah Al gergawi (centre) speaking at the ceremony. — Wam
The ceremony was attended by Federal National Council Chairman Mohammed Ahmed Al Murr, Dubai Culture and Arts Authority Chairman Shaikh Majid bin Mohammed bin Rashid Al Maktoum, Chief of Dubai Police Lt. General Dhahi Khalfan Tamim as well as a number of ministers, heads and directors of government departments, leaders of the business community and media representatives.
Shaikh Hamdan bin Mohammed said: “The strategic plan for developing the Islamic economy sector is a road map for the future which sets the frameworks for uniting the efforts of various institutions and parties operating in this sector in line with the vision of Shaikh Mohammed to position Dubai as the global capital of the Islamic economy.”
“When Shaikh Mohammed specified the goal, he wanted an Islamic economy sector with a global vision and with local human resources to serve our national economic interests. His vision was to turn Dubai into the future global capital of the Islamic economy,” he added.
“The vision is clear. The determination is high. The leadership is decisive. The operational teams are ready, and the obstacles ahead will be met by exceptional people,” said Shaikh Hamdan.
The Higher Committee for the Development of Islamic Economy has been formed under the patronage of Dubai Crown Prince Shaikh Hamdan.
The second quarter of 2014 will see the establishment of an Islamic Governance Centre in Dubai with other initiatives being:
— Establishing Dubai as the hub for sukuks or Islamic bonds and all Islamic financial services;
— Establishing the emirate as a trusted name and solution provider to the $4 trillion global halal food industry and its hub with an accreditation centre;
— Drawing a legal framework with legislative and regulatory bodies for the Islamic market. Currently, Dubai’s sukuk market attracts Dh46 billion and plans to reach Dh60 billion in the next three years;
— Promote Dubai’s position as a centre for family tourism;
— Be the pioneer of the Islamic digital economy, which will promote Dubai as an oasis and incubator for the development of electronic programmes, applications and games, a platform for Islamic e-Commerce, a global centre for Islamic media, and a pioneering and incubating environment for the Islamic digital economy;
— Cement Dubai’s position as a centre for Islamic design and architecture, a global destination for showcasing and trading of various types of Islamic arts, and a global centre for design, display and retail of conservative fashion and;
— Be the world-class centre for Islamic economy standards and certification.
“Islamic banking is not just for Muslims but for all. It will transcend religious and political differences,” Mohammed Abdullah Al Gergawi, Minister for Cabinet Affairs, told Khaleej Times on the sidelines of the conference.
“Islamic finance conforms to the principles of the Holy Quran which forbids the use of interest but allows Muslims to make use of financial products such as sukuks and takaful, or insurance, without fear of breaking religious laws.
“It is ethical and everyone can benefit from it,” said Al Gergawi. “It will also help build relationships between Islamic and non-Islamic economies.”
According to Eisa Kazim, Governor of the Dubai International Financial Centre, the total GDP of the world’s Islamic nations stands at $8 trillion.
The Dubai initiative will also help meet the needs of the global $1 trillion Awaqf market as also the re-takaful market that is worth $11 billion globally by establishing re-takaful companies.
At the eighth World Islamic Economic Forum in Malaysia in 2012, deals worth an estimated £5.8 billion ($9.2 billion) were struck. Now Dubai is set to host its Islamic Economy Summit in November immediately after London hosts the ninth forum — the first time the event has been held outside the Muslim world.
The top 20 Islamic banks in the Gulf region have grown some 20 per cent in the past 18 months compared with the nine per cent growth of conventional banks, as per a recent report. Across the entire supply chain of the Islamic banking industry, there are strong and positive growth vibes.
The sale of Islamic bonds, for example, rose exponentially to $5.7 billion as at May 2012, compared with only $500 million during the first five months of 2011.

The strategic plan “will not only diversify the national economy, but also enhance it by adding a new vital sector that will further enrich Dubai’s outstanding reputation in the economic field and establish it as the global capital of the Islamic economy,” said Shaikh Hamdan. -news@khaleejtimes.com

Personality Development Workshop Invitation

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,