Thursday, 14 March 2024

சங்கைமிகு ரமளானின் பொதுவாக கேட்க வேண்டிய துஆ !

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

சங்கைமிகு ரமளானின் பொதுவாக கேட்க வேண்டிய துஆ !

யா அல்லாஹ் !
எங்களது தாய் தந்தை இவர்களின் பாவங்களை மன்னிப்பாயாக !
யா ரஹ்மானே !
எங்களது கணவன், மனைவி, குழந்தைகள், சகோதரர், சகோதரிகள், அன்பானவர்கள், உற்றார், உறவினர்கள், உலக முஸ்லிம்கள், முஃமின்கள் அனைவரின் பாவங்களையும் மன்னிப்பாயாக !
யா அல்லாஹ் !
எங்களது உறவுகளை கொண்டோ செல்வத்தை கொண்டோ, எங்களை சோதித்து விடாதே !

யா ரஹ்மானே !
பொய், புறம், கோபம், பொறாமை இன்னும் சண்டை சச்சரவுகளை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக !
யா அல்லாஹ் !
எங்களது சொல்லாலோ, செயலாலோ, பிறர் மனதை கஷ்டம் கொடுத்திருந்தால்
அதற்கு பகரமாக அவை அனைத்தையும் அவர்களுக்கு நன்மைகளாக்கி தருவாயாக !

யா ரஹ்மானே !
நாங்கள் தெரிந்தோ, தெரியாமலோ, அறிந்தோ, அறியாமலோ, வேண்டுமென்றோ, திட்டமிட்டோ, மறைமுகமாகவோ
வெளிப்படையாகவோ, ரகசியமாகவோ, பகிரங்கமாகவோ, சிறிதோ, பெரிதோ, எப்பேற்பட்ட
பாவங்களையும் உனது கருணை பார்வையால் மன்னித்து, மேலும் பாவங்கள் செய்யாதவாறு எங்கள் நஃப்ஸை பாதுகாப்பாயாக !
யா அல்லாஹ் !
ரமலான் உடைய அருட்கொடைகளையும், பரக்கத்துகளையும் எங்களுக்கு நிறைவாக தந்தருள்வாயாக !

யா ரஹ்மானே !
இந்த ரமளானில் லைலத்துல் கத்ர் இரவை பெறக்கூடிய பாக்கியத்தை எங்களுக்கு தந்தருள்வயாக !
யா அல்லாஹ் !
ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜை நிறைவேற்றக் கூடிய பாக்கியத்தை எங்களிக்குத் தந்தருள்வாயாக !

யா ரஹ்மானே !
எங்கள் மீது உன்னுடைய கிருபையையும் அருள் மழையையும் பொழிவாயாக ! மேலும் ஹலாலான ரிஜ்க்கை தந்தருள்வாயாக !

யா அல்லாஹ் !
எங்களது உணவு, உடை, இருப்பிடம் அனைத்தையும் ஹலாலானவையாக தந்தருள்வாயாக !
யா ரஹ்மானே !
எங்களுக்கும், எங்களுடன் இருப்பவர்களுக்கும் பரக்கத் செய்வாயாக !

யா அல்லாஹ் !
நாங்கள் கேட்பதற்கு முன்பாக எங்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பாயாக ! மற்றவர்களின் தேவைகளையும் நிறைவேற்றி வைப்பாயாக ! மற்றவர்களின் பால் தேவையாக்குவதை விட்டும் எங்களை நீ பாதுகாப்பாயாக !

யா ரஹ்மானே !
எங்களை அனைத்து வித கஷ்டங்களில் இருந்தும், வேதனையிலிருந்தும், விபத்துகளிலிருந்தும், விஷஜந்துக்களிலிருந்தும், அபாயங்களிலிருந்தும், இயற்கை சீரழிவிளிருந்தும், ஜின் மற்றும் ஷைத்தானின் கெட்டஊசலாட்டங்களிலிருந்தும், வறுமையிலிருந்தும், கடனிலிருந்தும், பலாய் முஸீபத்துகளிலிருந்தும், எதிர்பாராதமரணத்திலிருந்தும், கண் திருஷ்டியிலிருந்தும் எங்களை பாதுகாப்பாயாக !

யா அல்லாஹ் !
எங்கள் நாவில் எப்பொழுதும் கலிமாவை மொழியச் செய்வாயாக !
யா ரஹ்மானே !
முழுமையான ஈமானையும் முழுமையான நேர்வழியையும் தந்தருள்வாயாக !

யா அல்லாஹ் !
பெருமானார் (ஸல்) அவர்கள் விரும்பிய வழி முறையில் எங்களை வாழச்செய்வாயாக !
யா ரஹ்மானே !
பெருமனார் (ஸல்) அவர்களின் சுன்னத்தான வழிமுறையில் எங்களை வாழச் செய்வாயாக !

யா அல்லாஹ் !
இஸ்லாமிய சட்டத்தின்படி முழுமையான வழி முறையில் எங்களை வாழச் செய்வாயாக !
யா ரஹ்மானே !
முழுமையான பர்தா எனும் ஹிஜாப் அணிந்திடும் முறையில் பெண்களை வாழச் செய்வாயாக !

யா அல்லாஹ் !
இறையச்சத்தையும் பேணுதலையும் எங்களுக்கு தந்தருள்வாயாக !
யா ரஹ்மானே !
உள்ளங்களை புரட்டக் கூடியவனே ! எங்கள் உள்ளங்களை உன் மீது திருப்புவாயாக ! கண் இமைக்கும் நொடிப் பொழுதில் கூட எங்களை விட்டு பிரிந்து எங்களை தனிமைப்படுத்தி விடாதே !

யா அல்லாஹ் !
மார்க்கத்திற்காக உயிரை இழக்கும் அளவுக்கு துணிவையும், மரணத் தருவாயில் கலிமாவை மொழியும் பாக்கியத்தையும் தந்தருள்வாயாக !
யா ரஹ்மானே !
நாங்கள் செல்லுமிடம் எங்கும் வெற்றியை தந்து எங்களது எதிரிகளை நீ தோற்கடிப்பாயாக !

யா அல்லாஹ் !
எங்களை உனக்கு நெருக்கமானவர்களாக, உனக்கு பிரியமானவர்களாக மாற்றுவாயாக !
யா ரஹ்மானே !
உன்னுடைய பிரியத்தை எங்களுடைய உள்ளங்களில் நிலைத்திருக்கச் செய்வாயாக !

யா அல்லாஹ் !
தஜ்ஜாலுடைய குழப்பங்கள், ஷைத்தான் மற்றும் மனோ தீங்குகளை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக !
யா ரஹ்மானே !
மரண வேதனையிலிருந்தும், கப்ரின் அதாபிலிருந்தும் எங்களை பாதுகாப்பாயாக !

யா அல்லாஹ் !
எங்களின் கபுர்களில் முன்கர் நக்கீர் உடைய கேள்வி கணக்கை எங்களுக்கு இலேசாக்கி வைப்பாயாக !
யா ரஹ்மானே !
கியாமத்_நாளில் வெப்பத்தை விட்டும், நரக நெருப்பை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக !

யா அல்லாஹ் !
கியாமத் நாளின் இழிவுகளை விட்டு என்னையும், மூஃமீனான ஆண், பெண் அனைவரையும் பாதுகாப்பாயாக !
யா ரஹ்மானே !
கியாமத் நாளில் உன்னுடைய அர்ஷின் நிழலில் எங்களுக்கு இடமளிப்பாயாக !

யா ரஹ்மானே !
கியாமத் நாளில் உன்னை தரிசிக்க கூடிய பாக்கியத்தை எங்களுக்கு தந்தருள்வாயாக !
யா அல்லாஹ் !
மறுமை நாளில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிந்துரையை எங்களுக்கு தந்தருள்வாயாக !

யா ரஹ்மானே !
மறுமையில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நெருக்கத்தை எங்களுக்கு தந்தருள்வாயாக !
யா அல்லாஹ் !
மறுமை நாளில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொற்கரத்தால் ஹவ்ளுள் கவ்தர் தண்ணீரை எங்களுக்கு புகட்டுவாயாக !

யா ரஹ்மானே !
எங்களின் அமல்களின் பட்டோலையை எங்களுடைய வலது கையில் கொடுப்பாயாக !
யா அல்லாஹ் !
ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தை மின்னல் வேகத்தில் கடக்கச் செய்வாயாக !

யா ரஹ்மானே !
மறுமை நாளில் எங்களை நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்ப்பாயாக !
யா அல்லாஹ் !
மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயர்ந்த சுவர்க்கத்தில் எங்களை நுழையச் செய்வாயாக !

யா ரஹ்மானே !
உலக முஃமின்கள் அனைவரையும் முடிவு நாள் வரை பாதுகாப்பாயாக !
யா அல்லாஹ் !
உனது மகத்துவம் தெரியாத மாற்று மத சகோதர, சகோதரிகளுக்கு நேரான ஹிதாயத்தை வழங்குவாயாக !

யா ரஹ்மானே !
யாரெல்லாம் எங்களிடம் துஆ செய்ய கோரினார்களோ அவர்களது ஹலாலான துஆக்களை கபூல் செய்வாயாக !
யா அல்லாஹ் !
உன்னுடைய அருளை கொண்டு எங்களுடைய அனைத்து பாவத்தையும் மன்னித்து எங்களது ஹலாலான துஆக்களை கபூல் செய்வாயாக ! யா ரஹ்மானே !
ஆமீன் ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் !


மீண்டும் உயிர் தந்து ஸஹர் செய்ய வாய்ப்பளித்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் !

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மீண்டும் உயிர் தந்து ஸஹர் செய்ய வாய்ப்பளித்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் !

ஸலாமும் ஸலவாத்தும் 
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் உண்டாவதாக !

ஏகனே ! அல்லாஹ்வே !
எங்களுக்கு பிள்ளை செல்வத்தை வழங்கிய உனக்கு நன்றி !
" லகல் ஹம்து வலக்கஷ் ஷுக்ரு "

யா அல்லாஹ் ! 
எங்கள் பிள்ளைகளின்  எதிர்காலத்தை உன்னிடம் ஒப்படைக்கிறோம்.
அவர்களின் வாழ்நாட்களை நீட்டித்து அதில் பரக்கத் செய்வாயாக !
அவர்களுக்கு தன்னிறைவான வாழ்வாதரங்களை வழங்கி அதில் பரக்கத் செய்வாயாக !

அவர்களை நல்லறங்களில் ஈடுபடுபவர்களாக ஆக்குவாயாக !
குர்ஆனை இதயத்தில் பாதுகாப்பவர்களாக ஆக்குவாயாக !
அவர்களுக்கு மகிழ்ச்சியான மன நிறைவான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பாயாக !

இரட்சகனே ! 
அவர்களைப் பாதுகாப்பாயாக ! அவர்களின் குறைகளை வெளிப்படுத்தாமல் மறைப்பாயாக !
அவர்களுக்கு நேரிய  பாதையைக் காட்டுவாயாக !
அவர்களை கண்ணியமாக வாழ வைத்து, அவர்களின் மீது உன் அன்பைப் பொழிவாயாக !
அவர்களுடன் இருப்பாயாக !

கருணையாளனே !
எங்கள் உள்ளம் பதைபதைத்து எங்களை அழவைக்கும் எந்தத் தீங்கும் துன்பங்களும் விபத்துகளும் நோய்களும் அவர்களை அணுகாமல் பாதுகாப்பாயாக ! 
யா அல்லாஹ் ! அவர்கள் பெற்றோர்களாகிய எங்களின் மீது அன்பு செலுத்துபவர்களாக, முதுமையில் எங்களை பார்த்துக் கொள்ளக் கூடியவர்களாக, எங்கள் மீது பரிவு பாசம் காட்டக் கூடியவர்களாக, ஆக்கி அருள் புரிவாயாக ! ஆமீன் ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் !

குழந்தைத் திருமணதடைச்சட்டம்,2006

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

குழந்தைத் திருமணதடைச்சட்டம்,2006

இந்த சட்டம் தொடங்குவதற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ நடத்தப்பட்ட ஒவ்வொரு குழந்தைத் திருமணமும், திருமண சமயத்தில் குழந்தையாக இருந்து, ஒப்பந்தத்தில் ஈடுபடுகின்ற தரப்பின் விருப்பத்தின் பேரில் ரத்து செய்யக்கூடியதாக இருக்கும். 

முந்தைய சட்டங்களில் இருந்த குறைபாடுகளை சரி செய்வதற்காக, 2006 ஆம் ஆண்டு குழந்தைத் திருமண தடைச் சட்டத்தின் விதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. அது, 1929 ஆம் ஆண்டு குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்துக்கு மாற்றாக, நவம்பர் 1, 2007 இல் நடைமுறைக்கு வந்தது. 1978 ஆம் ஆண்டு இந்த சட்டத்தில் பெண்களின் சட்டப்பூர்வ திருமண வயதை 15 இல் இருந்து 18 வயதாகவும், ஆண்களுக்கு 18 இல் இருந்து 21 வயதாகவும் உயர்த்துகின்ற திருத்தம் செய்யப்பட்டது. 

பெண் அல்லது பையனுக்கு சட்டப்பூர்வ வயதை விடக் குறைவாக, அதாவது பெண்ணுக்கு 18 வயதுக்கு கீழ் அல்லது பையனுக்கு 21 வயதுக்குக் கீழ் உள்ள திருமணத்தை, குழந்தைத் திருமணம் என குழந்தைத் திருமண தடைச் சட்டம் வரையறுக்கிறது. 

இந்த சட்டத்தின் விதிகள் குழந்தைத் திருமணத்தைத் தடை செய்கின்றன, பாதிக்கப்பட்டவருக்கு பாதுகாப்பையும், நிவாரணத்தையும் வழங்குகின்றன, மேலும் அத்தகைய திருமணத்துக்கு உடந்தையாக இருக்கின்ற, ஊக்குவிக்கின்ற அல்லது நடத்தி வைப்பவர்களுக்கான தண்டனையை அதிகரிக்கின்றன. 

மேலும் இந்த சட்டமானது, நடவடிக்கை எடுப்பது மூலம் குழந்தைத் திருமணத்தைத் தடுத்து, திறமையாக வழக்குத் தொடுப்பதற்காக ஆதாரங்களை சேகரிக்கவும், குழந்தைத் திருமணத்தை ஊக்குவிக்கவோ அல்லது உதவி செய்யவோ அல்லது திருமண சடங்கு நடத்த அனுமதிக்கவோ வேண்டாம் என்று உள்ளூர்வாசிகளுக்கு ஆலோசனை கூறுவதற்கும், 
குழந்தைத் திருமணத் தடுப்பு அதிகாரிகளை நியமிக்குமாறும் அறிவுறுத்துகிறது. 

அவர்களின் கடமைகளில், இத்தகைய குழந்தைத் திருமணத்தின் தீமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவது, இந்தப் பிரச்சினையை சமூகத்துக்கு உணர்த்துவது, அரசு வழி காட்டக் கூடிய நேரத்தில், குறிப்பிட்ட கால இடைவெளியில் பலன்கள் மற்றும் புள்ளி விவரங்களை அளித்தல் ஆகியவை அடங்குகின்றன.

* திருமணம் நடைபெறும் சமயத்தில் குழந்தையாக இருந்த திருமணத்தின் ஒரு ஒப்பந்த தரப்பு மட்டுமே, ரத்து செய்கின்ற உத்தரவு மூலம் அந்த குழந்தைத் திருமணத்தை ரத்து செய்வதற்கான மனுவை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்.

* மனு தாக்கல் செய்யும் நேரத்தில், அந்த மனுதாரர் ஒரு மைனராக இருந்தால், குழந்தைத் திருமணத் தடுப்பு அதிகாரியிடம் அவருடைய பாதுகாவலர் அல்லது அவருடைய பிரதிநிதியால் மனு தாக்கல் செய்யப்படலாம்.

* இந்தப் பிரிவின் கீழ் வழங்கப்படும் மனுவை எந்த நேரத்திலும், ஆனால் மனுவைத் தாக்கல் செய்கின்ற குழந்தை மேஜர் ஆகி இரண்டு வருடங்கள் பூர்த்தியடைவற்கு முன்பாகத் தாக்கல் செய்யலாம்.

* இந்தப் பிரிவின் கீழ் ஒரு ரத்து செய்யும் உத்தரவை வழங்கும் வேளையில், மாவட்ட நீதிமன்றம் மற்றொரு தரப்புக்கு, அவருடைய பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு, ஒருவேளை இருக்கும் பட்சத்தில், அடுத்த தரப்பிடம் இருந்து திருமணம் நடைபெறும் சமயத்தில் அவர்கள் பெற்றுக் கொண்ட பணம், விலையுர்ந்த பொருட்கள், ஆபரணங்கள் மற்றும் பிற பரிசுப் பொருட்களை அல்லது அந்த விலையுயர்ந்த பொருட்கள், ஆபரணங்கள், பிற பரிசுப்பொருட்கள் மற்றும் பணத்துக்கு இணையான தொகையைத் திருப்பிக் கொடுக்குமாறு, அந்த திருமணத்தின் இரண்டு தரப்பு அல்லது அவர்களின் பெற்றோர் அல்லது அவர்களுடைய பாதுகாவலர்களுக்கு அறிவுறுத்துகின்ற ஆணையைப் பிறப்பிக்கும்.

* குழந்தைத் திருமண ஒப்பந்தத்தில் ஈடுபடுகின்ற 18 வயதுக்கு மேற்பட்ட ஆணாக உள்ள ஒருவருக்கு இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கக் கூடிய சிறைத்தண்டனையுடன் கடுங்காவல், அல்லது ஒரு இலட்ச ருபாய் வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

* எந்த ஒரு குழந்தைத் திருமணத்தை செய்து கொள்கின்ற, நடத்துகின்ற, வழிநடத்துகின்ற அல்லது உடந்தையாக இருக்கும் நபருக்கு, அந்தத் திருமணம் ஒரு குழந்தைத் திருமணம் அல்ல என அவர் நினைத்தார் என்பதற்கான காரணங்களை அவர் நிரூபிக்கத் தவறும் பட்சத்தில், இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கக் கூடிய கடுங்காவல் தண்டனை மற்றும் ஒரு இலட்ச ருபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

* குழந்தைத் திருமணத்தில் ஒரு குழந்தை ஈடுபடும் போது, அந்தத் திருமணத்தை ஊக்குவிக்கின்ற அல்லது அந்தச் சடங்கு நடைபெற அனுமதிக்கின்ற, அல்லது குழந்தைத் திருமணத்தில் கலந்து கொள்ளுதல் அல்லது பங்கெடுத்தல் உள்ளிட்ட வேண்டுமென்றே

அதைத் தடுக்கத் தவறுகின்ற, பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர் அல்லது வேறு ஏதேனும் நபர் அல்லது வேறு ஏதேனும் நிலை, சட்டரீதியாக அல்லது சட்டத்துக்கு முரணாக, ஒரு நிறுவனத்தின் உறுப்பினர் எவரேனும் அல்லது நபர்களின் சங்கம் உள்ளிட்ட குழந்தை மீது அதிகாரம் கொண்ட எந்த ஒரு நபருக்கும், இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கக் கூடிய கடுங்காவல் தண்டனையும், மேலும் ஒரு இலட்ச ரூபாய் வரை அதிகரிக்கக் கூடிய அபராதமும் விதிக்கப்படும்.

ஓடும் ரயிலில் இருந்து விழுந்து வாலிபர் பலி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

 13/03/2024 . அன்று சென்னையில் இருந்து மதுரையை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்ந்த சகோதரர் மீரா உசேன் அவர்கள் பயணம்  சென்று கொண்டு இருந்தார்கள் ரயில் விருதாச்சலம் அருகில் வரும் போது நிலை தடுமாறி விழுந்து சம்பவ இடத்திலே உயிரிழந்து விட்டார்கள் என்ற தகவலை 14/03/2024 கடலூர் வடக்கு மாவட்ட தமுமுக துணைச் செயலாளர் காதர் ஷரீப் அவர்களுக்கு தகவல் தெரிவித்தேன் பேரில் உடனடியாக மாவட்ட தலைவர் V.M ஷேக் தாவூத் அவர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து அவர்களின் ஆலோசனையின் படி மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் வியாகத் அலி மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர் அலாவுதீன் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் நெய்வேலி S . அமீர் பாச்சா  விருதாச்சலம் நகர தலைவர் அன்வர் மற்றும்  இலியாஸ் அவர்களுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக ரயில்வே காவல் நிலையம் சென்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அதனுடைய நகலை எடுத்துக் கொண்டு விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு சென்று உடல் கூறு ஆய்வு முடித்து  தேவகோட்டை நகர தமுமுக நிர்வாகிகளிடமும் மீரா உசேன் தந்தையிடம் ஜனாஸா ஒப்படைக்கப்பட்டது இதற்காக உழைத்த அனைவருக்கும்

 ஜசக்கல்லாஹ் ஹைர்

 நெய்வேலி S . அமிர் பாச்சா 
 தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் கடலூர் மாவட்டம் வடக்கு

நடைப் பயிற்சியின் முக்கியம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நடைப் பயிற்சியின் முக்கியம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்......

Bioclock என்றால் என்ன?

நாம் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் அதிகாலை 4.00 மணிக்கு அலாரம் செட் பண்ணிவிட்டு தூங்கி விடுவோம். ஆனால் அலாரம் அடிப்பதற்கு முன் எழுந்து விடுவோம். இது தான் Bioclock. 

நமக்கு தெரிந்த வட்டத்தில் எல்லோரும்
60 - 70 வயதில் இறந்து விடுகிறார்கள். எனவே நாமும் 60-70 வயதில் இறந்து விடுவோம். 

50 வயதில் எல்லா நோய்களும் வந்து விடும் என்று நம்பி நமது Bioclock இல் செட் செய்துவிடுகிறோம். 

அதனால்தானோ என்னவோ 50 வயதில் நோய் வருகிறது.
70 வயதில் செத்து விடுகிறோம். நமக்கு தெரியாமலே நமது Bioclock ஐ தவறாக செட் செய்து விடுறோம். 

ஜப்பானில் பெரும்பாலோனார் 100 வயது வாழ்கிறார்கள். அவர்களது Bioclock அப்படி செட் செய்யப் பட்டுள்ளது. 

எனவே நண்பர்களே, 

1. நாம்  குறைந்தது 100 வயது வரை வாழ்வோம் என்று Bioclock ஐ மாற்றி அமைப்போம். 

2. நமக்கு இந்த சின்ன வயதில் (40 இலிருந்து 60 வயதுக்குள்) எந்த நோயும் வர வாய்ப்பே இல்லை என நம்புவோம். 

3. டை அடியுங்கள் (முடி இருந்தால் 😂). இளமையாக தோற்றம் அளியுங்கள் . வயதான தோற்றத்தை அனுமதிக்காதீர்கள். 

4. சுறுசுறுப்பாக இருங்கள். வாக்கிங்  போங்கள். 

5. வயதாக வயதாக ஆரோக்கியம் கூடும் என்று நம்புங்கள். (அது தான் உண்மை). 

6. எல்லாத்துக்கும் இந்த மனசு தான் காரணம். Never, ever allow the bioclock set your ending. 

எண்ணங்களே வாழ்க்கை.

முதுமை பாதத்திலிருந்து மேல் நோக்கித் தொடங்குகிறது!

 உங்கள் கால்களை செயல்பாட்டிலும் & வலுவாக வைத்திருங்கள் !! 
Keep your Legs Active and Strong !!!

 தினசரி வயதாகிக்கொண்டே இருக்கும்போது, ​​நம் கால்கள் எப்போதும் சுறுசுறுப்பாகவும் வலுவாகவும் இருக்க வேண்டும். நாம் தொடர்ந்து  வயதாகும்போது, ​​நம் தலைமுடி நரைத்து (அல்லது) சருமம் தளர்ந்து (அல்லது) முகத்தில் சுருக்கங்கள் வருவதற்கு நாம் பயப்படக்கூடாது.

நீண்ட ஆயுளின் அறிகுறிகளில், பிரபலமான அமெரிக்க பத்திரிகை "வருமுன் தடுப்பு" (prevention) மூலம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, வலுவான கால் தசைகள்  அனைத்திற்கும் மேலே மிக முக்கியமான மற்றும் இன்றியமையாத ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளன. தயவுசெய்து தினமும் நடந்து செல்லுங்கள்.

உங்கள் கால்களை இரண்டு வாரங்களுக்கு அசைக்கவில்லை என்றால், உங்கள் உண்மையான கால் வலிமை 10 வருடங்கள் குறையும். 
நடந்து செல்லுங்கள்.

டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வு, முதியவர்கள் மற்றும் இளைஞர்கள், இரண்டு வாரங்கள் செயலற்ற நிலையில் இருந்தால்  கால் தசை வலிமை மூன்றில் ஒரு பங்கு பலவீனமடையலாம் என்கிறது. இது 20-30 வருடங்கள் முதுமையடைவதற்கு சமம் !!
 எனவே, நடந்து செல்லுங்கள்.

கால் தசைகள் பலவீனமடைவதால், நாம் மறுவாழ்வு மற்றும் உடற்பயிற்சிகள் செய்தாலும், மீட்க நீண்டகாலம் பிடிக்கும். நடங்கள். அதனால், நடைபயிற்சி போன்ற வழக்கமான உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது.

 நமது முழு உடல் எடை/ சுமையை கால்களே தாங்குகிறது. 
கால்கள் ஒரு வகையான தூண்கள், மனித உடலின் முழு எடையையும் தாங்கும். 
தினமும் நடைபயிற்சி.
 
சுவாரஸ்யமாக, ஒரு நபரின் எலும்புகளில் 50% & தசைகளில் 50%, இரண்டு கால்களிலும் உள்ளன. 
நடந்து செல்லுங்கள் 

மனித உடலின் மிகப்பெரிய மற்றும் வலுவான மூட்டுகள் மற்றும் எலும்புகளும் கால்களில் உள்ளன.

 10,000 அடிகள் / நாள்
  வலுவான எலும்புகள், வலுவான தசைகள் மற்றும் நெகிழ்வான மூட்டுகள் உடலின் 
இரும்பு முக்கோணத்தை உருவாக்கி
  மனித உடலைச் சுமக்கிறது. 

ஒருவரின் வாழ்க்கையில் 70% மனித செயல்பாடு மற்றும் ஆற்றல் எரித்தல்(burning the calories) இரண்டு கால்களால் செய்யப்படுகிறது. இது உங்களுக்கு தெரியுமா?
 ஒரு நபர் இளமையாக இருக்கும்போது, ​​அவருடைய/ *தொடைகள் 800 கிலோ எடையுள்ள ஒரு சிறிய காரைத் தூக்கும் வலிமை கொண்டவை. 
*கால் உடல் நடமாட்டத்தின்(locomotion) மையம் *.

 இரண்டு கால்களும் சேர்ந்து மனித உடலின் 50% நரம்புகளையும், 50% இரத்தக் குழாய்களையும், 50% இரத்தத்தையும் அவற்றின் வழியே பாய்கிறது. இது உடலை இணைக்கும் மிகப்பெரிய சுழற்சி நெட்வொர்க். *எனவே தினமும் நடந்து செல்லுங்கள்.

 கால்கள் மட்டும் ஆரோக்கியமாக இருக்கும்போது, ​​இரத்த ஓட்டத்தின் வளமையான மின்னோட்டம் சீராக செல்லும். எனவே வலுவான கால் தசைகள் உள்ளவர்கள் கண்டிப்பாக வலுவான இதயத்தைக் கொண்டிருப்பார்கள். 

ஒருவரது வயது, பாதத்தில் இருந்து மேல் நோக்கித் தொடங்குகிறது. ஒரு நபர் இளமையில் இருப்பது போலல்லாமல் வயதாகும்போது, ​​மூளை மற்றும் கால்களுக்கு இடையே நடைபெறும் ஆணைகள் பரிமாற்றத்தின் துல்லியம் மற்றும் வேகம் குறைகிறது.
தயவுசெய்து நடந்து செல்லுங்கள்

 கூடுதலாக, எலும்பின் உரமான கால்சியம் என்று அழைக்கப்படுவது விரைவில் அல்லது பின்னர் காலப்போக்கில் இழக்கப்படும், இதனால் வயதானவர்கள் எலும்பு முறிவுகளுக்கு ஆளாகிறார்கள்.
 நடங்கள்.

வயதானவர்களில் எலும்பு முறிவுகள் தொடர்ச்சியான சிக்கல்களைத் தூண்டும், குறிப்பாக மூளை த்ரோம்போசிஸ் போன்ற ஆபத்தான நோய்கள். 

பொதுவாக  வயதான நோயாளிகளில் 15%,  தொடை எலும்பு முறிவு ஏற்பட்ட ஒரு வருடத்திற்குள்  இறந்துவிடுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? 
தவறாமல் தினமும் நடந்து செல்லுங்கள் 

▪️ *கால்களுக்கு உடற்பயிற்சி செய்வது, 60 வயதிற்கு பிறகும் கூட தாமதமல்ல. * நம் கால்கள் படிப்படியாக வயதாகிவிட்டாலும், நம் கால்களுக்கு உடற்பயிற்சி செய்வது வாழ்நாள் முழுவதும் வேலை. 

10,000 அடிகள் நடக்க
 எப்பொழுதும் கால்களை அடிக்கடி வலுப்படுத்துவதன் மூலம், ஒருவர் மேலும் வயதானதை தடுக்கலாம் அல்லது குறைக்கலாம். 

365 நாட்கள் நடைபயிற்சி 
உங்கள் கால்களுக்கு போதுமான உடற்பயிற்சி கிடைப்பதற்கும், உங்கள் கால் தசைகள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதற்கும் தயவுசெய்து தினமும் குறைந்தது 30-40 நிமிடங்கள் நடக்க வேண்டும். 

இந்த முக்கியமான தகவலை உங்கள் 40 வயது கடந்த நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர வேண்டும், ஏனெனில் ஒவ்வொருவரும் தினமும் வயதாகி வருகிறார்கள்

தமிழ்நாட்டிலேயே B.A. டிபென்ஸ் என்னும் படிப்பு உள்ளது

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


முடிந்த வரை அதிகம் ஷேர் பன்னுங்க நம்ம புள்ளைங்க எதிர்காலத்திற்கு

தமிழ்நாட்டிலேயே வெறும் 05 கல்லூரிகளில் மட்டுமே B.A. டிபென்ஸ் என்னும் படிப்பு உள்ளது. இதைப் படித்தால் Group of 1 examல் எளிதில் வெற்றியடைந்து Sub Registrar, RTO, DSP, நகராட்சி கமிஷனர் போன்ற நல்ல வேலைகளில் சேரலாம்...

சென்னையிலுள்ள CMI ல் B.Sc. Maths or Physics பயின்றால் உங்களுக்கு மாதம் ரூ. 5000/- உதவித் தொகையும், மேலும் கூடுதலாக வருடத்திற்கு ரூ. 20,000/- உங்களுக்குத் தேவையான பாட சம்மந்தமான பொருட்கள் வாங்குவதற்கும், ஆகமொத்தம் ஒரு வருடத்திற்கு ரூ.65,000/- உதவித் தொகை கிடைக்கும். #அக்ரி(விவசாயம்) பாடம் பயில விரும்புபவர்கள் திருச்சி அருகிலுள்ள கல்லூரிகளில் சேர முயல்வது நன்மையளிக்கும். ஏனெனில், இக்கல்லூரிகளில் #டொனேஷன் கிடையாது.

திருவாரூரில் மத்திய பல்கலைக் கழகம் (Central University) உள்ளது. இதில் பயிற்சிக் கட்டணம் மிகவும் குறைவு. மேலும், இப் பல்கலையில் பயின்றால், மேற்படிப்பிற்காக நீங்கள் வெளிநாடுகளில் உள்ள யூனிவர்ஸிடி சென்றால் எவ்வித நுழைவுத் தேர்வும் எழுத வேண்டியதில்லை...

படியுங்கள்....பகிருங்கள் ..

தற்போது 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு உபயோகப்படும்

நீதிபதி சந்திர சூட் வேண்டுகோள்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


நீதிபதி சந்திர சூட் வேண்டுகோள்.

இந்திய அரசியலமைப்பை, இந்திய ஜனநாயகத்தை காப்பாற்ற நாங்கள் எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்கிறோம், ஆனால் இதற்கு உங்களின் ஒத்துழைப்பும் மிக அவசியம், மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தெருவில் இறங்கி தங்கள் உரிமைகளை அரசிடம் கேட்க வேண்டும், இந்த சர்வாதிகார அரசாங்கம்.  மக்களை பயமுறுத்துவார்கள், மிரட்டுவார்கள் ஆனால் நீங்கள் பயப்பட வேண்டாம், தைரியமாக இருங்கள், அரசாங்கத்திடம் கணக்கு கேளுங்கள், நான் உங்களுடன் இருக்கிறேன்

- டி.ஒய்.சந்திரசூட் (தலைமை நீதிபதி)

நாம் தமிழர் கட்சி வேண்டாம்! நடிகர் சீமானும் வேண்டாம்! மக்களே! வெளியேறுங்கள்! கட்சியை களைத்து விடுங்கள்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நாம் தமிழர் கட்சி வேண்டாம்! நடிகர் சீமானும் வேண்டாம்! மக்களே! வெளியேறுங்கள்! கட்சியை களைத்து விடுங்கள்! 

 "காரணமும், ஆதாரமும்" 

 இறைவன் எங்கே! நிச்சயம் ஒருவன் இருக்கிறான், அவனை இந்த மனித குலம் தேடுகிறது, நம்புகிறது. 

 அந்த இறைவன்தான் சொல்கிறான் 

 168 . "ஓ மனித குலமே! நேர்மையான முறையில் சம்பாதித்த அழகிய உணவை ( உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவை) இந்த பூமியிலிருந்து உண்ணுங்கள். அந்த ஷைத்தானின் அடிச்சுவடுகளை (அதாவது தகாத முறையில் சம்பாதித்த கெட்ட உணவை அதாவது உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவை இந்த பூமியிலிருந்து உண்ணுவது, உண்ணச் செய்வது) இதை பின்பற்றாதீர்கள்.
 நிச்சயமாக அவனே உங்களுக்கு பகிரங்கமான விரோதியாவான். 

 169 . இவன் உங்களுக்கு கட்டளையிடுவதெல்லாம், கெட்ட பேச்சு, அறுவறுப்பான செயல் இன்னும் நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள் அப்படியிருக்க, அந்த ஒரே இறைவனாகிய அல்லாஹ்வுக்கு எதிராக இல்லாத பொல்லாத தையெல்லாம் உங்களை பேச வைப்பான்.  

 170 . இதோ அல்லாஹ் இறக்கி வைத்துள்ள இந்த குர்ஆன் வேதத்தை பின்பற்றுங்கள் என்று இவர்களிடம் சொல்லப்பட்டால், நாங்கள் எங்கள் மூதாதையர்கள்  எப்படி வாழக் கண்டோமோ அதையே நாங்கள் பின்பற்றுவோம் என்று சொல்வார்கள். இவர்களுடைய மூதாதையர்கள் எதையும் சிந்திக்காதவர்களாக நேர்மையான முறையில் வாழாதவர்களாக இருந்தாலுமா ? பின்பற்றுவார்கள். 

 171 . இவ்வாறு ஒரே இறைவனின் வழிகாட்டுதலை நிராகரிப்பவர்களுக்கு உதாரணம் கால்நடைகளுக்கு அதை மேய்ப்பவன் என்னதான் உபதேசம் செய்தாலும் அவைகளுக்கு கூப்பிடுவதும், கத்துவதும் மட்டும்தான் கேட்கும் புரியும் அதைப் போலத்தான் இவர்களும்.
இத்தகைய நிராகரிப்பாளர்களுக்கு  என்னதான் நல்ல உபதேசமும், நேர்மையான வாழ்வும் காட்டினாலும், செவிடர்களாகவும், ஊமைகளாகவும், குருடர்களாகவும்தான் இருப்பார்கள் அதாவது இவர்கள் சிந்தனை செய்யவே மாட்டார்கள்.

 இறைவேதம் குர்ஆன் 2 : 168 - 171). 

 இது 
 அழிக்க முடியாத, தீமைகளுக்கு அப்பாற்பட்ட  இறை பேச்சு, அதுவே நம் வாழ்வின் வெற்றிக்கான மூச்சு.

Wednesday, 13 March 2024

Rahul sir Heartfelt Appreciation for Your Courageous Act / ராகுல் சார் - உங்கள் துணிச்சலான செயலுக்கு மனமார்ந்த பாராட்டுகள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

Heartfelt Appreciation for Your Courageous Act

Dear Rahul Sir,

I hope this message finds you in good health and high spirits. I am writing to express my deepest appreciation for the remarkable act of compassion and courage you recently demonstrated.

When confronted with the distressing situation involving the women from the backward class of Madhya Pradesh's Bundelkhand,  The simple yet profound gesture of taking the sandals they were holding and placing them on their feet speaks volumes about your empathy and commitment to justice.

Your willingness to confront and challenge the injustices and discrimination faced by marginalized communities is commendable. By taking a stand against such atrocities committed in the name of religion, you have not only shown incredible bravery but also exemplified true leadership.

Please know that your actions have not gone unnoticed. You have our unwavering support and admiration as you continue to fight for equality, dignity, and human rights for all. May you always find the strength and courage to persevere in your noble endeavors.

Thank you, Rahul Sir, for your tireless efforts and dedication to making the world a better place for everyone. May you be blessed abundantly for your selfless work.

With heartfelt gratitude and respect,





உங்கள் துணிச்சலான செயலுக்கு மனமார்ந்த பாராட்டுகள்

அன்புள்ள ராகுல் சார்,

இந்தச் செய்தி உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்துடனும் உற்சாகத்துடனும் இருக்கும் என நம்புகிறேன். நீங்கள் சமீபத்தில் வெளிப்படுத்திய கருணை மற்றும் தைரியத்தின் குறிப்பிடத்தக்க செயலுக்கு எனது ஆழ்ந்த பாராட்டுகளைத் தெரிவிக்க எழுதுகிறேன்.

மத்தியப் பிரதேசத்தின் பண்டேல்கண்டின் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்கள் சம்பந்தப்பட்ட துயரமான சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது, அவர்கள் வைத்திருந்த செருப்பை எடுத்து, காலில் வைத்துக்கொள்ளும் எளிமையான ஆனால் ஆழமான சைகை, உங்கள் பச்சாதாபத்தையும் நீதிக்கான அர்ப்பணிப்பையும் பறைசாற்றுகிறது.

ஓரங்கட்டப்பட்ட சமூகங்கள் எதிர்கொள்ளும் அநீதிகள் மற்றும் பாகுபாடுகளை எதிர்கொள்வதற்கும் சவால் விடுவதற்கும் உங்கள் விருப்பம் பாராட்டுக்குரியது. மதத்தின் பெயரால் இழைக்கப்படும் இத்தகைய அட்டூழியங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததன் மூலம், நீங்கள் அசாத்தியமான துணிச்சலை மட்டும் காட்டாமல், உண்மையான தலைமைத்துவத்தையும் காட்டியுள்ளீர்கள்.

உங்கள் செயல்கள் கவனிக்கப்படாமல் போகவில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். அனைவருக்கும் சமத்துவம், கண்ணியம் மற்றும் மனித உரிமைகளுக்காக நீங்கள் தொடர்ந்து போராடி வருவதால், எங்களின் அசைக்க முடியாத ஆதரவும் பாராட்டும் உங்களுக்கு உள்ளது. உங்கள் உன்னத முயற்சிகளில் விடாமுயற்சியுடன் இருக்க உங்களுக்கு எப்போதும் வலிமையும் தைரியமும் கிடைக்கட்டும்.

அனைவருக்கும் நன்றி, ராகுல் ஐயா, உங்கள் அயராத முயற்சிகளுக்கும், உலகை அனைவருக்கும் சிறந்த இடமாக மாற்றும் அர்ப்பணிப்புக்கும். உங்களது தன்னலமற்ற பணிக்காக நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.

மனமார்ந்த நன்றியுடனும் மரியாதையுடனும்,

A.S.Ibrahim 

குடியுரிமை பெறுவதற்கு மதம் ஒரு காரணியாக முன்வைக்கப்படுவதால் இச்சட்டத்திற்கு எதிர்ப்பும் உள்ளது.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


CAA-வை அமலுக்கு கொண்டு வந்தது ஒன்றிய அரசு!

குடியுரிமை திருத்தச் சட்டம் என்றால் என்ன?

▪️ 2014 டிசம்பருக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் புலம்பெயர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள்,. சமணர்கள், பொளத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வழிசெய்கிறது

▪️ எனினும், மேற்கண்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் குடியேறிய இஸ்லாமியர்களுக்கு இத்தகுதி தரப்படவில்லை

எதிர்ப்பு ஏன்?

▪️ குடியுரிமை பெறுவதற்கு மதம் ஒரு காரணியாக முன்வைக்கப்படுவதால் இச்சட்டத்திற்கு எதிர்ப்பும் உள்ளது. 

▪️ கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் அகதிகளாக வசித்துவரும் இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது

▪️ எனினும், அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் வங்கதேசத்தில் இருந்து குடியேறிய இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கவும் எதிர்ப்பு நிலவுகிறது. தங்களது மாநிலத்தில் வங்காளிகள் ஆதிக்கம் அதிகரிக்கும் என அவர்கள் கூறுகின்றனர்