Tuesday 25 January 2011

சிந்திக்க வைத்த சிறப்பு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
இறைவனின் கிருபையால் ஜனவரி 21 -2011அன்று துபை சலஹுதீன் சாலையில் உள்ள கல்ப் ஏர் பில்டிங்கில்  மார்க்கத்தை அறிந்துக்கொள்வோம் என்ற தலைப்பில் இஸ்லாமிய சொற்பொழிவு நடைப்பெற்றது,
நிகழ்விற்கு மூத்த சகோதரர் கீழை ஜமீல் அவர்கள் தலைமை  தாங்கினார்கள், சகோதரர் கோவை அய்யூப் அவர்கள் சிறப்புரையற்றினார்கள், தனது உரையில் மார்க்கத்தை அறிந்துகொள்வதற்கு நபித்தோழர்களும் நபித்தோழியர்களும் கொண்டிருந்த ஆர்வத்தையும் இன்றைய சமுதாய மக்கள் மத்தியிலே இருக்கக்கூடிய ஆர்வக்குறைவையும் எடுத்துரைத்து சிந்திக்கவைத்தார்கள். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் துபை மண்டலம் மற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலமும் இணைந்து நடத்திய இந்நிகழ்வில் துபை மண்டல தமுமுக தலைவர் சகோ.மதுக்கூர் அப்துல் காதர் உள்பட மண்டல நிர்வாகிகளும், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மண்டல செயலாளர் சகோ.இப்ராஹீம், சகோ.அதிரை ஜமால், பொறையார் ஜகரிய்யா உள்பட ஏகத்துவ சகோதரர்கள் கொட்டும் மழையையும் மீறி பெரும் திரளான அளவில் கலந்து கொண்டு சிறப்பித்து பயனடைந்தார்கள். எல்லாஹ் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.



          




No comments:

Post a Comment