Saturday 2 November 2019

Imam s இமாம்கள் வரலாறு

இமாம்கள் வரலாறு. இமாம் அபூ ஹனீஃபா(ரஹ்). இமாம் மாலிக் (ரஹ்). இமாம் அஹ்மத் ...


https://www.google.com/url?sa=t&source=web&cd=16&ved=2ahUKEwislIuqh8zlAhXVh1wKHZySCi8QFjAPegQIAxAB&url=http%3A%2F%2Fuinlibrary.weebly.com%2Fuploads%2F9%2F4%2F3%2F5%2F94358035%2F%25E0%25AE%2587%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D_%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AE%25B2%25E0%25AE%25BE%25E0%25AE%25B1%25E0%25AF%2581.pdf&usg=AOvVaw0t-V1EILyoKna3MAMEQh9W

Traveling of Imam Bukhari

Traveling of Imam Bukhari

 

Bukhara to Balagh    600km     بخارى  الى  بلغ

Balagh to Marw   800km           بلغ الى مرو          

Marw to Nyshaburi 140km       مروالى نيشابوري

Nysahaburi to Ray 760km      نيشابوري الى راي

Ray to Wasit 985km                   راي الى وسط

Wasit to Basra 365kmوسط الىبصرة

Basra to Kufa 390kmبصرةالى كوفة

Kufa to Baghdad 164kmكوفة الىبغداد

Baghdad to Al Madina Al Munawwarah 1530km  بغدادالى المدينة المنوّرة

Al Madina to Makkah Al Mukarramah 435kmالمدينة المنوّرةالى مكّة المكرّمة

Makkah Al Mukarramah to Jeddah 70kmمكّة المكرّمة الى جدة

Jeddah to Al Bahran 130kmجدةالى بحرين

Al Bahran to Al Fustat 1080kmبحرين الىالفسطاط

Al Fustat to Asqalan 500kmالفسطاطالى عسقلان

Asqalan to Qaisariya 114kmعسقلانالى قيصر

Qaisariya to Dimasq 400kmقيصر الىدمشقي

Dimasq to Baghdad 915kmدمشقيالى بغداد

Baghdad to Bukhara بغداد الى بخارى

 

இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்..!

இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்..!

ஷாபிஈ இமாமின் பெயரால் அல்லது ஷாபிஈ மத்ஹபின் பெயரால் இப்படி தான் செய்ய வேண்டும் என்று சொல்லக் கூடிய நல்லுள்ளம் படைத்தவர்களுக்கு இது ஒரு நற் செய்தியாக அமையட்டுமாக! குர்ஆன் அல்லது ஹதீஸிலிருந்து ஆதாரம் காட்டினாலும், இல்லை நாங்கள் ஷாஃபி மத்ஹபு, அந்த மத்ஹபின் அடிப்படையில் தான் அமல்களை நடை முறைப்படுத்துவோம். என்று பிடிவாதம் பிடிக்க கூடியவர்கள் பின் வரும் இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களின் சொற்களை நடைமுறைப்படுத்துவார்களா ? அல்லது இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களையும் "வஹாபி" பட்டியலில் சேர்த்து விடுவார்களா ?

அவர்கள் சொன்ன சில சட்டங்களை பார்ப்பதற்கு முன், இமாம் அவர்களால் முன் வைக்கப்பட்ட சொந்த கருத்துக்களை கவனிப்போம்.

  1. "என்னுடைய கிதாபுகளில் நபிகளாருக்கு மாற்றமான செய்திகளை நீங்கள் பெற்றுக் கொண்டால் நான் சொன்னதை விட்டு விட்டு, நபிகளார் சொன்னதையே சொல்லுங்கள். (கிதாபுல் மஜ்மூஃ பாகம் 1 பக்கம் 63)
  2. "ஹதீஸ் ஸஹீஹானால் அதுவே என் மத்ஹபாகும்.
    (கிதாபுஷ்ஷஅரானி பாகம் 1 பக்கம் 57 )
  3. நபிகளாரை தொட்டும் வந்த செய்திகளே எனது சொல்லாகும். அதை என்னிடமிருந்து நீங்கள் கேட்கவில்லையானாலும் சரியே ! (இப்னு அபீ ஹாதிம் பக்கம் 93,94)
  4. நான் ஏதாவது ஒன்றை சொல்லி நான் சொன்னதற்கு மாற்றமாக நபிகளாரின் வழிமுறை இருந்தால், நபிகளாரின் சொல் மிக ஏற்றமானதாகும். ஆகவே என்னை பின்பற்ற வேண்டாம். (இப்னு அபி ஹாதிம் பக்கம் 93)
  5. நான் சொன்ன ஒவ்வொரு தீர்ப்புக்கும் மாற்றமாக ஹதீஸ் கலை வல்லுனர்களிடம்,நபிகளாரின் ஹதீஸ் தரிப்பட்டு விட்டால் நான் சொன்ன தீர்ப்பை விட்டும் இவ்வுலகிலும், மறுவுலகிலும் நான் மீளக்கூடியவனாக உள்ளேன்.(இஃலாமுல் முவக்கிஈன் பாகம் 2 பக்கம் 363)
  6. நான் சொன்னதற்கு மாற்றமாக நபிகளாரின் ஹதீஸ் தரிப்பட்டு விட்டதை நீங்கள் கண்டால் என்னுடைய சிந்தனை போய் விட்டது என்பதை (மக்களே) நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்."( ஆதாபுஷ் ஷாபிஈ பக்கம் 93)
  7. யாராவது ஒருவருக்கு நபிகளாரை தொட்டும் ஒரு ஸூன்னத் (வழிமுறை) தெளிவானால் அதை யாருடைய சொல்லுக்காக வேண்டியும் விடுவது ஹலாலாக மாட்டாது. என்பது முஸ்லி்ம்கள். அனைவரும் ஏகோபித்த முடிவாகும். ( ஈகாழு ஹிமமி உலில் அப்ஸார் பாகம் 1 பக்கம் 103)

மேற்குறிப்பிடப்பட்டுள்ள இமாம் ஷாபி (ரஹ்) அவர்களின் கூற்றுக்களைப் பார்க்கும் போது உண்மையிலேயே அவர்கள் இந்த இஸ்லாமிய மார்க்கத்தை துாயவடிவில் உள்ளதை உள்ளபடி விளங்க வேண்டும் என்பதில் எவ்வாறு கவனம் செலுத்தியுள்ளார்கள்என்பதை தெட்டத் தெளிவாக விளங்க முடிகின்றது.

இது இவ்வாறு இருக்க போலி சடங்குகளை எல்லாம் இமாம் ஷாபிஈ இமாமின் மீது, அல்லது ஷாபிஈ மத்ஹபின் மீது சுமத்தாட்டுவது தான் மிக வேதனைக்குறிய விடயமாகும்.

எனது கருத்துக்களை விட ஹதீஸிற்குதான் அதி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று இமாம் அவர்களே சொல்லியிருப்பது உங்களுக்கு போதாதா ? ஏன் வரட்டு பிடிவாதம் பிடிக்கிறீர்கள்.

ஷாபிஈ இமாம் அவர்கள் சட்ட ரீதியாக சொன்ன தீர்ப்புகளை அலசுவோம்.!

ஜூம்ஆவுக்கு ஒரு பாங்கு ?
ஜூம்ஆடைய தினத்தில் இமாம் பள்ளியில் நுழைந்து அவர் குத்பா பிரசங்கம் செய்யுமிடத்தில் உட்காரும் போது அதான் சொல்லப்படுவதையே நான் விரும்புகிறேன். அவ்வாறே இமாம் உட்கார்ந்தால் முஅத்தின் அதான் சொல்ல ஆரம்பிப்பார். அதான் முடிந்தவுடன் இமாம் பிரசங்கம் நடத்துவார்.

மேலும் ஜூம்ஆடைய அதானை பொருத்தவரை நபிகளாரின் காலத்திலும், அபூபக்ர் (ரலி) உமர் (ரலி) அவர்களின் காலத்திலும் இமாம் மிம்பரில் உட்கார்ந்த பின்பே அதான் சொல்லப்பட்டது

பிறகு உஸ்மான் (ரலி) காலத்தில் மக்கள் தொகை அதிகமான போது, இரண்டாவது அதான் சொல்ல ஏவப்பட்டது. தொடர்ந்தும் அவ்வாறே இருந்தது.

மேலும் அதாஃ என்ற தாபிஈ உஸ்மான் அவர்கள் தான் இந்த அதானை ஏற்படுத்தினார்கள் என்பதை மறுத்து முஆவியா தான் இதை ஏற்ப்படுத்தினார் என்று கூறுபவராக இருந்தார். அவை எவ்வாறு இருந்தாலும் நபியவர்களின் காலத்தில் காணப்பட்ட விடயமே (ஒரு அதானே) எனக்கு மிக விருப்பமானதாகும்.
கிதாபுல் உம்மு பாகம் 1 பக்கம் 224

ஐவேளை தொழுகையின் பின் து ஆ…

தொழுது முடித்தபின் இமாமும், மஃமூம்களும் அமைதியாக திக்ரு செய்வதை நான் தேர்ந்தெடுக்கின்றேன்.ஆனால் மஃமூம்கள் அந்த இமாமிடமிருந்து (திக்ருகளை, துஆக்களை) கற்றுக்கொள்வதாக இருந்தால் மாத்திரம் இமாம்சத்தமிட்டு கூறலாம். மஃமூம்கள் (திக்ருகளை, துஆக்களை) கற்றுக்கொண்டு விட்டதாக அறிந்தால் இமாம் அமைதியாக ஓதுவார். ஏனெனில் அல்லாஹ் குர்ஆனில் "உங்களுடைய பிரார்த்தனையை சப்தமிட்டு செய்யாதீர்"என்று குறிப்பிட்டுள்ளான். அதாவது அல்லாஹ் துஆவை அதிகமாக அறிந்தவன். எனவே சப்தமிட்டு செய்யவும் வேண்டாம், இன்னும் உங்களுக்கு கேட்காத அளவிற்கு இரகசியமாகவும் செய்யவும் வேண்டாம்.
கிதாபுல் உம்மு பாகம் 1 பக்கம் 150

ஜனாஸாவின் கைகளை எவ்வாறு வைப்பது…?
இறுதியாக மைய்யித்தை கழுவியதன் பின் அம்மைய்யித்தின் இரு கைகளையும் மடித்து விரிக்கப்பட வேண்டும். பின்பு அவ்விரு கைகளையும் நீட்டி வைக்கப்பட்டு விலாப்புறத்துடன் சேர்த்து வைக்கப்படவேண்டும்.
கிதாபுல் உம்மு பாகம் 1 பக்கம் 321

மரண வீட்டாருக்கு உணவு…?
மைய்யித்தின் வீட்டில் அயலவர்கள் அல்லது அவர்களின் உறவினர்கள் மரணமாகியவரின் குடும்பத்தாருக்கு அன்றை நாள் பகலிலும், இரவிலும், அவர்களுக்கு போதுமான உணவை தயாரித்துக் கொடுப்பதை நான் விரும்புகிறேன்.ஏனெனில் அது சுன்னத்தாகும்.
கிதாபுல் உம்மு பாகம் 1 பக்கம் 317

மரண வீட்டில் (கத்த) சாப்பாடு…?
நான் துக்கச் சாப்பாட்டை வெறுக்கிறேன்.அது ஒரு கூட்டம் அவர்களுக்காக அழவில்லையானாலும் சரியே ! ஏனெனில் அது (துக்கச்சாப்பாடு) கவலையை புதுபிக்கின்றது. மேலும் வீண் செலவுகளை ஏற்ப்படுத்துகின்றது.
கிதாபுல் உம்மு பாகம் 1 பக்கம் 318

கப்ரை எந்த அளவு உயர்த்த வேண்டும்…?
நான் விரும்புவதெல்லாம் நிலமட்டத்திலிருந்து ஒரு சாண் அளவு கப்ரை உயர்த்துவதாகும்.அல்லது அது போன்ற அளவு உயர்த்துவதாகும்.
கிதாபுல் உம்மு பாகம் 1 பக்கம் 316, 322.

கப்ரை சமப்படுத்துதல்…?
கப்ரை சமப்படுத்தி வைக்க வேண்டும் அவ்வாறு தான் நபியவர்கள் தனது மகன் இப்றாகீமுடைய கப்ரை சமப்படுத்தி அதன் மீது (அடையாளத்திற்கு) கல் ஒன்றை வைத்தார்கள். என்ற செய்தி எங்களுக்கு கிடைத்தது.
கிதாபுல் உம்மு பாகம் 1 பக்கம் 311, 322.

நபியவர்களின் கப்ரு…?
நான் நபியவர்களின் கப்ரையும், அபூ பக்ர் (ரலி) உமர் (ரலி) அவர்களின் கப்ருகளை சமப்படுத்திய நிலையிலேயே தான் நான் கண்டேன். என்று காஸிமிப்னு முஹம்மத் சொன்ன செய்தி எங்களுக்கு கிடைத்தது.
கிதாபுல் உம்மு பாகம் 1 பக்கம் 311,

முக்கோண வடிவ கப்ரு…?
கப்ரை முக்கோண வடிவில் வைக்க வேண்டும் என்று சிலா் கூறுகின்றனர். ஆனால் முஹாஜிரீன்கள், அன்சாரிகளின் கப்ருகள் எங்களிடத்தில் சமப்படுத்தப்பட்டதாகவே இருக்கின்றன. எனவே நில மட்டத்திலிருந்து ஒரு சாண் அளவு கப்ரு உயர்த்தப்பட வேண்டும்.
கிதாபுல் உம்மு பாகம் 1 பக்கம் 311,

கப்ரை கட்டுவதும், பூசுவதும்…?
கப்ருகள் கட்டப்படாமல் இருப்பதையும், பூசப்படாமல் இருப்பதையும் நான் விரும்புகிறேன். ஏனெனில் அப்படி செய்வது ஆடம்பரத்திற்கும்.அழகு படுத்தலுக்கும் ஒப்பாகி விடும்.இன்னும் மரணம் என்பது அவ்விரண்டிற்கும் உரிய இடமில்லை. மேலும் முஹாஜிரீன்கள், அன்சாரிகளின் கப்ருகள் நிறந்தீட்பபட்டதாக நான் காணவில்லை.
கிதாபுல் உம்மு பாகம் 1 பக்கம் 316,

மதிப்புக்குரிய மௌலவிமார்களே ! இலங்கை நாட்டில் சுமார் 1200 வருடங்களாக ஷாபிஈ மத்ஹபை அடிப்படையாக கொண்டு தான் சட்டமும் தீர்ப்பும் வழங்கப்படுகிறது என்று சொல்லிக் கொண்டிருக்கும் உங்களுக்கு இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் சொல்லிக் காட்டிய இப்படியான சட்டங்கள் தெரியுமா ? அல்லது தெரிந்தும் பொதுமக்களுக்கு சொல்லாமல் மறைத்து விட்டீர்களா ? 1437 வருடங்களாக இருந்து வரும் குர்ஆன், மற்றும் ஹதீஸ் என்ற கொள்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதனால் அவைகளை தொடர்ந்து படித்து வருகிறோம். ஷாபிஈ மத்ஹபினர் என்று சொல்லிக் கொள்ளும் நீங்கள் இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களின் கிதாபான உம்முவை படித்திருக்கிறீர்களா ? அதில் சொல்லப்பட்ட சட்டங்களை மக்களுக்கு தெளிவு படுத்தியுள்ளீர்களா ? அல்லது சும்மா வெறுமனே நாங்கள் ஷாபி மத்ஹபு என்று மழுப்புகிறீர்களா ?

உண்மையாக நீங்கள் ஷாபிஈ இமாமை விரும்பக்கூடியவர்களாக இருந்தால், இந்த செய்திகளை ஒரு தரம் உறுதி செய்து விட்டு உடனே நீங்கள் முதலில் நடைமுறைப்படுத்துவதோடு, பொதுமக்களுக்கும் எத்தி வையுங்கள்.

அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !

நீங்கள் சொல்கிறீர்களோ இல்லையோ இன்ஷா அல்லாஹ் இப்படியான தெளிவுகளை நாங்கள் மக்களுக்கு எடுத்துக் காட்டி அவர்கள் செய்து கொண்டிருக்கும் மார்க்க ரீதியான தவறுகளை சுட்டிக்காட்ட உள்ளோம். மேலும் இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களால் சொல்லப்பட்ட இப்படியான சட்டங்கள் தொடா்பான செய்திகள் பாகம்,மற்றும் பக்கங்களோடு, உங்களுக்கும் பொது மக்களுக்கும் தொடர்ந்தும் எடுத்துக் காட்ட உள்ளோம்.

தொழுகைகாக இகாமத் சொல்லப்பட்டால்

*அல்லாஹ்வின் பெயரால்...*

*நாள் : 02-11-2019*

*"தொழுகைகாக இகாமத் சொல்லப்பட்டால் அவசரமாக செல்லாதீர்கள்! நிதானத்துடன் செல்லுங்கள். உங்களுக்குக் கிடைத்த வ(ரக்அத்)தை இமாமுடன் தொழுங்கள்; தவறிப்போனதை பின்னர் எழுந்து நிறைவு செய்துகொள்ளுங்கள். ஏனெனில், உங்களில் ஒருவர் தொழுகையை நாடி செல்லும்பொழுது அவர் தொழுகையில் இருப்பதாகவே கருதப்படுகிறார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*

*🗣அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)*

*📚நூல்:முஸ்லிம்-1054*

*ஆட்டிஸம் குழந்தைகளிடத்தில் கவனிக்க வேண்டிய எச்சரிக்கை அறிகுறிகள்

*ஆட்டிஸம் குழந்தைகளிடத்தில் கவனிக்க வேண்டிய எச்சரிக்கை அறிகுறிகள்*

ஆட்டிஸம் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தை பொதுவாக தனிமையை விரும்பும் என்பதால், பெற்றோர் தங்கள் குழந்தை மிகவும் சமர்த்து என எண்ணி, அறிகுறிகளைப் புறக்கணிக்க கூடும்.

எல்லோரையும் விட பெற்றோருக்குத் தான் தங்கள் குழந்தையின் வளர்ச்சி மற்றும் நடவடிக்கைகள் குறித்து மிக நன்றாகத் தெரிந்திருக்கும். தங்கள் குழந்தையின் வளர்ச்சியில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டாலோ, ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ, அதை உடனடியாக மருத்துவரின் கவனத்துக்குக் கொண்டு சென்று தெளிவு பெற வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் வளர்ச்சி மைல்கற்களை அடைவதில் சற்றே வித்தியாசங்கள் இருப்பது சகஜம் தான்.

ஆனால், பொதுவாக, "தானாக சரியாகி விடும்", ''பொறுத்திருந்து பார்க்கலாம்", போன்ற வாசகங்களைக் கேட்டு தாமதிக்காமல் சந்தேகத்தைத் தெளிவு செய்வது மிகவும் நல்லது. ஏனெனில், குழந்தைப் பருவத்திலேயே கண்டு பிடிக்கப்படும் இவ்வித குறைபாடுகளுக்கு தாமதிக்காமல், சரியான நேரத்தில் ஆரம்பக்கட்ட சிகிச்சை மேற்கொண்டால், அதனால் ஏற்படும் நன்மைகள் அதிகம். ஆட்டிஸத்தை 2 வயதுக்கு முன் கண்டறிவது கடினம்.

ஆனால், 12-18 மாதங்களிலேயே இதன் அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். ஆட்டிஸம் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தை பொதுவாக தனிமையை விரும்பும் என்பதால், பெற்றோர் தங்கள் குழந்தை மிகவும் சமர்த்து என எண்ணி, அறிகுறிகளைப் புறக்கணிக்கக் கூடும். ஆகவே, பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டிய ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறிகளைப் பற்றி பார்ப்போம்.

1. தாய் பாலூட்டும் போது, குழந்தை தாயின் கண்களைப் பார்க்காது.

2. முகம் பார்த்து சிரிக்காது.

3. பெயரைச் சொல்லி அழைக்கும் போது திரும்பிப் பார்க்காது.

4. கண்ணில் படும் பொருட்களை ஆர்வமாகப் பின்தொடர்ந்து செல்லாது.

5. டாட்டா காட்டி கையசைக்காது.

6. பிறர் கட்டியணைத்தாலும், எந்தவொரு உணர்ச்சியையும் காட்டாது.

7. பிறர் செய்யும் முகபாவனைகள் மற்றும் செயல்பாடுகளை திரும்பச் செய்து பார்க்காது.

8. பிறரின் கவனத்தை ஈர்க்கும்படி எதுவும் செய்யாது (தூக்கச் சொல்லாது, ஒலி எழுப்பித் தன்னைப் பார்க்க வைக்காது)

9. மற்றவர்களுடன் விளையாட எத்தனிக்காது.

10. பிறரிடம் சைகையில் பேச எந்த முயற்சியும் செய்யாது.

ஆரம்பக்கட்ட முக்கிய அறிகுறிகள் :

1. ஆறு மாதம்: மகிழ்ச்சியை வெளிப்படுத்தி சிரிக்காமல் இருப்பது.

2. ஒன்பது மாதம்: ஒலியை ஏற்படுத்தி பிறருடன் சிரித்து விளையாடாமல் இருப்பது முகபாவனைகள் செய்யாமல் இருப்பது.

3. 12 மாதம்: 1) பெயர் சொல்லி அழைத்தால் திரும்பிப் பார்க்காதது.

2) மழலைப் பேச்சு பேசாமல் இருத்தல்.

4. 16 மாதம்: கொஞ்சம் கூட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருப்பது.

5. 24 மாதம்: அர்த்தமுள்ள இரண்டு வார்த்தைச் சொற்றொடர்களை தானே உருவாக்கிப் பயன்படுத்தத் தெரியாமல் இருத்தல்.

மேலே பார்த்த வளர்ச்சி மைல்கற்களில் தாமதம் ஏற்பட்டால், உடனே குழந்தையை மனநல வல்லுநரிடம் ஆய்வுக்கு அழைத்துச் செல்வது மிகவும் அவசியம். ஒருசில அறிகுறிகளை வைத்து குழந்தைக்கு ஆட்டிஸம் உண்டு எனக் கணித்து விட முடியாது. பல அறிகுறிகள் ஒருசேர இருந்து குழந்தையின் பேசும் திறன், சமூகத்திறன், கல்வித்திறன், விளையாட்டு, தினசரி செயல்பாடுகள் போன்றவற்றைப் பாதிக்கும் போது தான் அது ஆட்டிஸமாக இருக்கக் கூடும்.

தேர்ச்சி பெற்ற வல்லுநர் பரிசோதித்து பார்த்தப் பின்னர் குழந்தைக்கு பல்வேறு விதமான ஆய்வுகள் செய்யப்படும். அதன் பிறகே, குழந்தைக்கு ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பல குழந்தைகளின் அறிவுத்திறன் (மினி) சராசரி மற்றும் சராசரிக்கு மேலே கூட இருக்கும். இவர்கள் கணித கணக்கீடுகள், வரைகலை, இசைத்திறன் நினைவாற்றல் போன்ற விஷயங்களில் அபார சக்தியுடன் இருப்பார்கள்

பகிர்வு

டெங்கு காய்ச்சல் என்பது என்ன?* *டெங்கு எப்படிப் பரவுகிறது

@@# *டெங்கு காய்ச்சல் என்பது என்ன?*
*டெங்கு எப்படிப் பரவுகிறது?*@@


``டெங்கு என்பது ஒரு வகையான வைரஸ் காய்ச்சல். டென்-1 (DENV-1), டென்-2 (DENV-2), டென்-3 (DENV-3), டென்-4 (DENV-4) என டெங்குவில் 4 வகைகள் உள்ளன.

டெங்கு எப்படிப் பரவுகிறது?

நல்ல தண்ணீரில் உருவாகக்கூடிய `ஏடிஸ் ஏஜிப்தி' (Aedes Aegypti) என்ற ஒரு வகை கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. `ஏடிஸ்' கொசுக்கள் மூன்று வாரங்களுக்குமேல் உயிர்வாழும். பகல் நேரங்களில் மட்டுமே கடிக்கும். உடல் மற்றும் கால்களில் கறுப்பு மற்றும் வெள்ளைநிறப் புள்ளிகள் கொண்ட உடலமைப்பைக் கொண்டுள்ளதால், இவை `புலிக்கொசுக்கள்' என்றும் அழைக்கப்படுகின்றன.

`ஏடிஸ் ஏஜிப்தி' கொசுக்கள் எப்படி நோயைப் பரப்புகின்றன?

``வீடுகளில் சரியாக மூடப்படாத டிரம்கள், தண்ணீர் பிடிப்பதற்காக பைப்லைன்கள் அருகே தோண்டப்பட்ட குழிகள், மொட்டைமாடிகளில் போட்டுவைத்திருக்கும் உபயோகமற்ற பொருள்கள், காலிமனைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் கப்கள், பயனற்ற பொருள்கள், வீடுகளில் சரியாக மூடப்படாத தரைத் தொட்டிகள் (சம்ப்), மேல்நிலைத் தொட்டிகள், டயர்கள், பயன்படுத்தாத உடைந்த சிமென்ட் தொட்டிகள், நீண்டகாலமாகக் கழுவப்படாத தொட்டிகள் போன்றவற்றில் தேங்கியிருக்கும் நல்ல தண்ணீரில் `ஏடிஸ்' கொசுக்கள் முட்டையிட்டுப் பெருகுகின்றன. இது டெங்கு பாதிப்புள்ளவர்களைக் கடித்துவிட்டு மற்றவர்களைக் கடிக்கும்போது ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுகிறது.

எத்தனை நாள்களில் `ஏடிஸ்' கொசு வளர்ச்சியடையும்?

```ஏடிஸ்' கொசுக்கள் தண்ணீரில் முட்டையிட்டு கொசுப்புழு, கூட்டுப்புழு பருவம் வரை வளர 7 முதல் 10 நாள்களாகும். இந்தக் கொசுக்களின் முட்டைகள் ஓராண்டுவரையிலும் அழியாமல் இருக்கும். மழைக்காலங்களில் நல்ல நீர் தேங்கியிருக்கும் இடங்களில் இந்த முட்டைகள் உயிர்பெற்று நோயைப் பரப்பும்.

`ஏடிஸ்' கொசுவின் வளர்ச்சியை எப்படித் தடுக்கலாம்?

கொசுக்கள் உருவாகும் இடங்களை அழித்து சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொண்டால் மட்டுமே இந்தக் கொசுக்களின் வளர்ச்சியைத் தடுக்க முடியும்.''

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்னென்ன?

`காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, வயிற்று வலி, கண்ணுக்குப் பின்புறம் வலி, எலும்பு வலி ஆகியவை டெங்கு காய்ச்சலின் முக்கியமான அறிகுறிகளாகும்.

காய்ச்சல் வந்த பிறகு என்ன செய்ய வேண்டும்?

காய்ச்சல் அறிகுறி தெரிந்தவுடன் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். மருத்துவரால் மட்டுமே தேவையான மருத்துவப் பரிசோதனை செய்து, `இது டெங்கு காய்ச்சலா' அல்லது `பிற காய்ச்சலா' என்பதைக் கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க முடியும்.

டெங்கு காய்ச்சலை கண்டறிய என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படுகின்றன?

``ஆரம்ப அறிகுறிகள் அனைத்தும் வைரஸ் காய்ச்சல்களில் காணப்படும் பொதுவான குணங்கள் என்பதால் உடனே நோயை உறுதி செய்ய இயலாது. காய்ச்சல் 3 நாள்களுக்கு மேல் நீடித்தால், உடனே மருத்துவமனைக்குச் சென்று, என்.எஸ்.ஐ ஆண்டிஜன் (NS1 Ag), டெங்கு ஐ.ஜி.எம். (Dengue IgM ) அல்லது டெங்கு ஐ.ஜி.ஜி (Dengue IGG) உள்ளிட்ட ரத்தப்பரிசோதனைகளை செய்துகொள்ளவேண்டும்.

பொதுவாக ஒருவருக்கு ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை சுமார் 3 லட்சம் வரை இருக்கும். டெங்கு காய்ச்சல் வந்தவருக்கு தட்டணுக்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் கீழே குறைந்துவிடலாம். எனவே, ப்ளேட்லெட் (Platelet) என்னும் ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை மற்றும் ரத்தத்தின் நீர்ப்பளவு (Heamatocrit) உள்ளிட்ட பரிசோதனைகளையும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் 2 அல்லது 3 நாள்கள் தொடர்ந்து செய்துகொள்ளவேண்டும்.";

டெங்குவுக்கு எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது?

``டெங்கு காய்ச்சலுக்கு எனத் தனி சிகிச்சை எதுவும் இல்லை. காய்ச்சலைக் கட்டுப்படுத்த பாராசிட்டமால் (Paracetomol) மாத்திரையும், உடல் வலியைப் போக்க உதவும் மாத்திரைகளும் தரப்படும். சிலருக்கு மட்டுமே `அதிர்ச்சி நிலை' (Dengue Shock Syndrome) ஏற்படும். அதற்கு குளுக்கோஸ் மற்றும் சலைன் (Dextrose Saline) தேவையான அளவுக்கு ஏற்றப்பட வேண்டும். வைரஸ் பாதிப்பால், ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டேவரும். தட்டணுக்கள் குறைந்தவர்களுக்கு அதை ஈடுகட்ட நரம்பு மூலமாக தட்டணுக்கள் கொண்ட ரத்தம் செலுத்தப்பட வேண்டும். உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். கொசுவலைப் பாதுகாப்புக்குள் வைத்துச் சிகிச்சை அளிக்க வேண்டும். டெங்கு ஐ.ஜி.எம்., ஹெமெட்டோ கிரீட் மற்றும் தட்டணுக்கள் பரிசோதனைகளின் மூலம் டெங்கு குணமாகிவிட்டதா என்று அறியலாம்.

வீட்டிலேயே டெங்குவுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளலாமா?

டெங்கு காய்ச்சலைப் பொறுத்தவரை மருத்துவக் கண்காணிப்பில் இருப்பது மிகவும் நல்லது. டெங்கு பாதிப்புக்கு உள்ளாகிறவர்களில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான நபர்களுக்கு ரத்தக்கசிவு நோய் மற்றும் `டெங்கு ஷாக் சிண்ட்ரோம்' ஏற்படலாம். அதாவது, தட்டணுக்கள் குறைந்து, நுரையீரல் கூடு பகுதியில் நீர் தேங்கும்போது `டெங்கு ஷாக் சிண்ட்ரோம்' வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. அந்தத் தருணத்தில் உயிரிழப்பு ஏற்படும் ஆபத்து உண்டு. எனவே மருத்துவக் கண்காணிப்பிலிருந்து, உரிய நேரத்தில் உரிய மருந்துகள் எடுத்துக்கொள்வதன் மூலம் இந்த நிலை ஏற்படாமல் காப்பாற்ற முடியும். சுய சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் காய்ச்சல் வந்தவுடனேயே மருத்துவரை அணுகுவதே பாதுகாப்பானது.

டெங்கு காய்ச்சல் வந்து குணமாகிவிட்ட ஒருவருக்கு மீண்டும் வருமா?

நிச்சயமாக வரலாம். ஆனால், ஏற்கெனவே வந்த வைரஸ் பாதிப்பு மீண்டும் வராது. டெங்குவில் டென்-1 (DENV-1), டென்-2 (DENV-2), டென்-3 (DENV-3), டென்-4 (DENV-4) என 4 வகை வைரஸ்கள் உள்ளன.

மீண்டும் காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகள் என்னென்ன?

டெங்கு காய்ச்சல் வந்து குணமாகிவிட்டவரை `ஏடிஸ்' கொசு கடித்தால் மீண்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இரண்டாவது முறை வரும் டெங்கு முன்பு வந்ததைவிடத் தீவிரமாக இருக்கும்.

டெங்கு காய்ச்சல் வந்து குணமடைந்தவர் மீண்டும் டெங்கு பாதிப்பிற்கு உள்ளாகாமல் இருக்க என்ன செய்யலாம்?

டெங்கு காய்ச்சல் வந்து குணமடைந்தவர் தொடர்ந்து 3 முதல் 5 நாள்கள் வரை ஓய்வில் இருக்கவேண்டும். நீர்ச்சத்து நிறைந்த கஞ்சி, இளநீர், பழச்சாறு போன்றவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் உடற்பயிற்சிகள், யோகாசனங்கள் செய்யலாம். மீண்டும் டெங்கு தொற்றுள்ள கொசு கடிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். நம்மைச் சுற்றியுள்ள இடத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை?

காய்ச்சல் வந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்லவேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி ரத்தப் பரிசோதனைகள் செய்துகொள்ளவேண்டும். மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துக் கடைகளுக்குச் சென்று தாமாகவே மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

Friday 1 November 2019

#வாழ்க்கையை_நேசியுங்கள்

உலகமே வியந்து பொறாமைப் பட்ட உச்ச நிலையைத் தொட்ட ஆப்பிள் நிறுவனத்தின் அதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ் உடல்நலம் குன்றி 56 வயதில் இந்த உலகை விட்டு பிரிவதற்கு முன்பாக சொன்ன செய்தி:

வர்த்தக உலகில் வெற்றியின் உச்சம் தொட்டேன். மற்றவர் பார்வையில் என் வாழ்க்கை வெற்றிக்கு உதாரணமாகக் காட்டப்பட்டது.
நோயுற்று படுக்கையில் இருக்கும் இப்போது என் முழு வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கிறேன். பெற்ற புகழும், செல்வமும் அதனால் அடைந்த பெருமையும் இப்போது எனக்கு அர்த்தமற்றதாகத் தோன்றுகிறது.

உங்கள் காரை ஓட்ட யாரையாவது நியமிக்கலாம். உங்களுக்காக சம்பாதிக்க எத்தனை பேரை வேண்டுமானாலும் நியமிக்கலாம். ஆனால் உங்கள் நோயையும் அதனால் சந்திக்கும் வலிகளையும் ஏற்றுக் கொள்ள யாரையும் நியமிக்க முடியாது.
எந்தப் பொருள் தொலைந்தாலும் மீண்டும் தேடிவிட முடியும். ஆனால் வாழ்க்கை தொலைந்து விட்டால் திரும்ப கிடைக்கவே கிடைக்காது.

வாழ்க்கை எனும் நாடக மேடையில் இப்போது நீங்கள் எந்த காட்சியில் நடித்துக் கொண்டிருந்தாலும் நாடகம் முழுமையாக முடியும் என்று சொல்ல முடியாது. நடுவிலேயே எப்போது வேண்டுமானாலும் திரை விழலாம்.
நாம் பக்குவமடையும் போதுதான் சில விஷயங்கள் புரியும். முப்பது ரூபாய் கடிகாரமும் சரி, மூன்று லட்சம் ரூபாய் கடிகாரமும் சரி ஒரே நேரம்தான் காட்டும்.

செலவழிக்க வாய்ப்பு இல்லாதபோது உங்கள் மணிபர்சில் நூறு ரூபாய் இருந்தாலும் ஒன்றுதான். ஒரு கோடி இருந்தாலும் ஒன்றுதான். நீங்கள் தனிமையான பிறகு 300 சதுர அடி வீட்டில் வசிப்பதும், 30,000 சதுர அடி பங்களாவில் வசிப்பதும் ஒன்றுதான்.

ஆகவே உங்களைச் சுற்றிலும் இருக்கும் அனைவரிடமும் அன்புடன் பேசிப் பழகுங்கள். அதுதான் உண்மையான மகிழ்ச்சி !

#வாழ்க்கையை_நேசியுங்கள்--------!
குழு நண்பர்களுக்கு சிறு வேண்டுகோள் மனம் இருந்தால் இதை பகிருங்கள் ஒரு செல்வந்தர் மனம் மாறினாலும் பத்து குடும்பங்களுக்கு உதவியாயிருக்கும் நன்றி நண்பா

3 ஏக்கர் நிலத்தில் கபுரஸ்தான் இலவசமாக

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசலில் கபரஸ்தான் இல்லாத இடங்களில் வக்ஃபுக்கு சொந்தமான இடங்களில் 3 ஏக்கர் நிலத்தில் கபுரஸ்தான் இலவசமாக பெற்று கொள்ள தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது



எந்தப் பள்ளிவாசலுக்க கபரஸ்தான் இல்லையோ அந்த பள்ளிவாசல் மிகச்சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்

ஏராளமான வக்பு இடங்கள் பயன்படுத்தப்படாமல் பல நபர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது எனவே தேவையான பள்ளி நிர்வாகம் எந்த பள்ளி நிர்வாகத்தில் இடம் இருக்கிறதோ அவர்களைஅணுகி கபரஸ்தான் அமைத்திட ஒரு ஏக்கர் முதல் 3 ஏக்கர் வரை பெறலாம்




எனவே ஜமாத்தார்கள் மிக துரிதமாக செயல்பட வேண்டும்.

*சொர்க்கம் செல்ல சுலபமான வழி

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
*🌸السلام عليكم و رحمة الله و بركاته🌸*
♥️••*´¨`*•.☆••☆.•*´¨`*••♥️
*சொர்க்கம் செல்ல சுலபமான வழி❗* •────•──────────•────•
அல்லாஹ் சொல்கிறான்:
ஒரு மனிதன் பிறருக்கு செய்த தீங்கை, பாதிப்புக்குள்ளானவர் மன்னிக்காதவரை அல்லாஹ்வும் மன்னிப்பதில்லை'. அதே நேரத்தில், 'சக மனிதர்கள் செய்த தீமையை மன்னித்து விட்டால் அதற்கு பிரதியாக இரட்டிப்பாக கூலியைத் தருகிறேன்' என்று இறைவன் கூறுகின்றான்.

பிறரின் குறைகளை மறைப்பதும், பிறரின் தீமைகளை மன்னிப்பதும் சொர்க்கம் செல்ல சுலபமான வழி என்பதை இதன்மூலம் நாம் அறியலாம்.

அதுபோல, 'பிறரை உயர்வாக கருதும் எண்ணம் சொர்க்கத்தை பெற்றுத் தரும்'. இதற்கு உதாரணமாய் ஒரு நிகழ்வு:

ஒருமுறை நபிகள் (ஸல்) தோழர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது, 'நான் இப்போது உங்களுக்கு இறைவனால் சொர்க்கவாதி என்று அறிவிக்கப்பட்டவரை அடையாளம் காட்டவா?' என்று வினவினார்கள். தோழர்கள் ஆவலுடன் தொடர்ந்து கேட்டனர்.

'இப்போது ஒருவர் நம்மை கடந்து செல்வார், அவர்தான் அல்லாஹ்வால் பொருந்திக் கொள்ளப்பட்ட நல்லடியார்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது ஒருவர் இடது கையில் தன் காலணிகளை பிடித்தவராக 'ஒளு' (அங்க சுத்தம்) செய்த தண்ணீர் தாடியிலிருந்து வழிந்தோடிய வண்ணம் அந்த கூட்டத்தை கடந்து சென்றார்.

நபித்தோழர்களில் ஒருவருக்கு, 'எந்த நல்ல செயலின் காரணமாக இத்தகைய உயர்ந்த அந்தஸ்த்தை அவர் பெற்றார்' என்பதை அறிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டது.

அவரிடம் சென்று, 'உங்களுடன் இரண்டொரு நாட்கள் தங்க வேண்டும் அனுமதி தருவீர்களா?' என்று கேட்டார். அவர் சம்மதம் தெரிவித்த பின்னர் அவருடன் தங்கி அவரது அன்றாட நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வந்தார்.

அப்போது அவரிடம் எந்த விதமான சிறப்பான நற்செயல்களையும் அவரால் கண்டுகொள்ள முடியவில்லை.

எனவே அவரிடமே கேட்டார், 'நாங்கள் செய்வது போன்று தான் தொழுகை மற்றும் அன்றாட கடமைகளைத்தான் நீங்கள் நிறைவேற்றுகிறீர்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'நீங்கள் சொர்க்கவாதி' என்பதாக சொன்னார்கள். அத்தகைய உயர்ந்த அந்தஸ்த்தை பெறுவதற்கு நீங்கள் என்ன நற்செயல்களைச் செய்கிறீர்கள்? என்று அறிந்துகொள்ளவே உங்களுடன் தங்கினேன்' என்றார்.

அதற்கு அவர், 'நான் எல்லோரையும் போலத்தான் எனது கடமைகளைச் செய்கிறேன். ஆனால் என்னிடம் ஒரு குணம் உண்டு. எந்த சகோதர மனிதனையும் என் மனதளவில்கூட தாழ்வாக என்றுமே எண்ணுவதில்லை. ஒருவேளை அது தான் எனக்கு சிறப்பை பெற்றுதந்திருக்கலாம் என்று எண்ணுகிறேன்' என்று பதில் கூறினார்.

மார்க்கத்தைக் கடைபிடிப்பது, வெளித்தோற்றத்தில் அல்ல; உள்ளடக்கத்தினால்.

நபித்தோழர் அபூபக்ர் (Raliyallahu Anhu) அணிந்து வந்த முழு நீள அங்கி, தலைப்பாகையைத் தான் எதிரி அபூஜஹ்லும் அணிந்து வந்தான்.

அப்துல்லாஹ் பின் மஸ்வூது (Raliyallahu Anhu) அவர்களின் தாடி போலவே உமய்யா பின் ஃகலஃபின் தாடியும் நீளமாக இருந்தது.

ஃகாலிது (Raliyallahu Anhu) அவர்களின் வாள் உருவான அதே இரும்பினால் உத்பாவின் வாளும் உருவானது.

மார்க்கத்தைக் கடைபிடிப்பது, வெளித்தோற்றத்தில் அல்ல; உள்ளடக்கத்தினால்.

முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தமது உள்ளத்தை சுட்டிக்காட்டிக் கூறினார்கள்: "தக்வா- இறையச்சம் இங்கிருக்கிறது." என்றார்கள்.