Friday 28 June 2024

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை; எதிர்க்கட்சிகள் முழக்கம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை; எதிர்க்கட்சிகள்  முழக்கம்

புது தில்லி, ஜூன்.27-
18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர்  துவங்கியதையடுத்து நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு அவர்கள் இன்று உரையாற்றினார்.
நாட்டின் முன்னேற்றம், அரசின் கொள்கைகள், முந்தைய ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து உரையாற்றிய குடியரசு தலைவர் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்  அமல்படுத்தப்பட்ட அவசரநிலை பிரகடனம் என்பது ஒரு கருப்பு நாள் என கூறினார் அதை எதிர்த்து எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதோடு முந்தைய பாஜக அரசின் தவறான கொள்கைகள், நீட் முறைகேடு, மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிறச்சனைகள் குறித்து  முழக்கங்களை எழுப்பினர்.

நீட் மற்றும் நெட் போட்டி தேர்வுகளின் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - ஜனாதிபதி அறிவிப்பு

நீட் மற்றும் நெட் போட்டி தேர்வுகளின்  வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - ஜனாதிபதி அறிவிப்பு 

புது தில்லி, ஜூன் 27 :-  
அண்மையில் நடைபெற்ற நீட் மற்றும் நெட் தேசிய தகுதி தேர்வுகளின் வினாத்தாள் கசிந்த விவாகரத்தில், நாடாளுமன்றத்தில்  ஜனாதிபதி பேசும்போது, அதில் முழுமையான விசாரணை செய்து, தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உறுதியளித்துள்ளது என்று கூறியுள்ளார்

ஏழு பழக்கங்கள் சொர்க்கத்தை உமக்கு இலகுவாக பெற்றுத்தரும்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

ஏழு பழக்கங்கள் சொர்க்கத்தை உமக்கு இலகுவாக பெற்றுத்தரும்

1. தஹஜ்ஜத்

தஹஜ்ஜத் ஒருவருக்கு சிறப்பையும் மேன்மையையும் பெற்றுத் தரக்கூடியதாக இருக்கிறது . நிச்சயமாக தஹஜ்ஜத் எளிதில் பதிலளிக்கப் படக்கூடியதாகவும் நம்மை அல்லாஹ்வின் பக்கம் நெருங்க வைக்கக் கூடியதாகவும் இருக்கிறது .

2. அதிகாலையில் குர்ஆனை ஓதுங்கள் .

கண்கள் உலகைக் காண்பதற்கு முன்பு இறை வசனங்களை காண்பது சிறந்தது . குர்ஆனை முழு புரிதலுடன் படிப்பது மேன்மையானது . ஒவ்வொரு நாளும் குறைந்தது சில வசனங்களையாவது ஓதி வாருங்கள் .

3. ஃபஜ்ருடைய 2 ரக்அத் சுன்னத்

 ஃபஜ்ர் தொழுகையின் இந்த முன் இரண்டு ரக்அத்கள் உலகம் மற்றும் அதில் உள்ள அனைத்தையும் விட சிறந்தது . கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் , அந்த இரண்டு ரக்காத்துகள் உங்களை இந்த உலகில் உள்ள செல்வந்தர்களுக்கெல்லாம் மேலான செல்வந்தராக மாற்றக்கூடியது .

4. லுஹா தொழுகை

ஏனெனில் வாழ்வாதாரத்துக்கான திறவுகோல் லுஹா தொழுகையில் உள்ளது . நிச்சயமாக லுஹா தொழுகை உங்களுக்கு வாழ்வாதாரத்தையும் மன அமைதியையும் பெற்றுத் தருவதற்கு சக்தி வாய்ந்த சிறந்த வழியாக அமையும் .

5. தினமும் சிறிய அளவேனும் தர்மம் செய்யுங்கள்

தர்மம் செய்வதை விரும்புபவர்களை அல்லாஹ் நேசிக்கிறான் , மேலும் வானவர்கள் ஒவ்வொரு நாளும் தர்மம் செய்பவர்களுக்காக எப்போதும் பிரார்த்தனை செய்கிறார்கள் . நிச்சயமாக நீங்கள் கொடுக்கும் தர்மம் அல்லாஹ்வினால் பல மடங்கு கூலியாக உங்களுக்கு திருப்பி கொடுக்கப்படும் .

6. எப்பொழுதும் உளூ உடன் இருக்க முயற்சி செய்யுங்கள்

 ஃபஜ்ரு தொழுகையின் போது
பிலால் ( ரலி ) யிடம் நபி ( ஸல் ) அவர்கள் , ' பிலாலே ! இஸ்லாத்தில் இணைந்த பின் நீர் செய்த சிறந்த செயல் பற்றிக் கூறுவீராக ! ஏனெனில் உமது செருப்புச் சப்தத்தை சொர்க்கத்தில் நான் கேட்டேன் ' என்றார்கள் . அதற்கு பிலால் ( ரலி ) ' இரவிலோ , பகலிலோ நான் உளூச் செய்தால் அந்த உளூவின் மூலம் தொழ வேண்டும் என்று நான் நாடியதைத் தொழாமல் இருந்ததில்லை . இது தான் நான் செய்த செயல்களில் சிறந்த செயல் ' என்று பதிலளித்தார்கள் .

அறிவிப்பவர் : அபூஹுரைரா ( ரலி ) . நூல்கள் : புகாரி 1149 , முஸ்லிம் 4497

7. தினசரி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருங்கள்

 பாவமன்னிப்பு கேட்பதன் மூலமே பெரும்பாலான பிரச்சனை தீர்ந்துவிடும் . பாவங்கள் மன்னிக்கப்படும் . மேலும் அது நிச்சயமாக நம்மை எப்போதும் நேர்மறையாக சிந்திக்கவும் நாள் முழுவதும் மகிழ்ச்சியாகவும் இருக்க வைக்கும் .

ஜும்ஆ பாங்கு கூறப்பட்டால் வியாபாரம் கூடாது!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

ஜும்ஆ பாங்கு கூறப்பட்டால் வியாபாரம் கூடாது!

ஜும்ஆ நேரத்தில் வியாபாரத்தை நிறுத்தாமல் முஸ்லிமல்லாத நபர்கள் மூலமோ ஜும்ஆ கடமையாகாத பெண்கள் மற்றும் சிறுவர்கள் மூலமோ வியாபாரத்தை தொடர்ந்து கொண்டு தாங்கள் மட்டும் தொழுகைக்கு வந்து விடுகின்றனர். இதுவே அல்லாஹ் நம்மிடம் எதிர்பார்ப்பது என்றும் இவர்கள் கருதுகின்றனர்.

ஆனால் இந்தக் கருத்து முற்றிலும் தவறாகும். இது குறித்து அல்லாஹ் கூறுவது இது தான்.

நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக்கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டுவிடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

திருக்குர்ஆன் 62:9,10

பாங்கு சொல்லப்பட்டவுடன் தொழுகைக்கு விரைந்து வாருங்கள் என்று மட்டும் அல்லாஹ் கூறினால் மற்றவர் மூலம் நம் வியாபாரத்தை நடத்தச் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்ய முகாந்திரம் உண்டு. ஆனால், அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டுவிடுங்கள் என்று இரண்டு கட்டளைகளை அல்லாஹ் விதிக்கிறான். அல்லாஹ்வை நினைப்பதற்கு விரைவது ஒரு கட்டளை. வியாபாரத்தை விட்டுவிடுவது மற்றொரு கட்டளை. இரண்டையும் நாம் கடைப்பிடிப்பது கடமையாகும். மற்றவர் மூலம் கூட அந்த நேரத்தில் வியாபாரம் செய்யக் கூடாது.

மேலும் தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான். தொழுகை முடிக்கப்பட்ட பிறகு தான் பொருளீட்ட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். தொழுகை முடிக்கப்படும் முன்னர் நமது வியாபார நிறுவனம் இயங்கினால் அப்போது நாம் பொருளீட்டுவதாகத் தான் பொருள்.

ஜும்ஆவுக்கு பாங்கு சொன்னது முதல் தொழுகை முடியும் வரை தொழுகைக்கு விரையவும் வேண்டும். எல்லாவிதமான வியாபாரத்தையும் நிறுத்திக் கொள்ளவும் வேண்டும்.

நான் வியாபாரம் செய்யவில்லையே; எனது நிறுவனத்தில் மற்றவர்கள் தானே வியாபாரம் செய்தார்கள் என்று கூறும் காரணம் ஷைத்தானின் ஊசலாட்டமாகும். இதில் இறையச்சம் சிறிதும் இல்லை. மனசாட்சிக்கும் உலக நடைமுறைக்கும் இது எதிரானதாகும்.

நம்முடைய நிறுவனத்தில் மற்றவர்கள் செய்த வியாபாரம் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபத்துக்கும் வருமானத்துக்கும் நான் வரி செலுத்த மாட்டேன் என்று அரசாங்கத்திடம் இது போல் கூறுவார்களா? கூறினால் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளுமா? அல்லது அந்த வருமானம் எங்களுடையது அல்ல எனக் கூறுவார்களா?

நாம் இல்லாத போது நம்முடைய ஊழியர் நம் அனுமதியுடன் கலப்படமோ மோசடியோ செய்தால் அதை நான் செய்யவில்லை என்று கூறுவதை யாருடைய மனசாட்சியாவது ஒப்புக் கொள்ளுமா?

நாமே செய்வதும் நம்முடைய அனுமதியின் பேரிலும் உத்தரவின் பேரிலும் மற்றவர் செய்யும் காரியங்களும் நாம் செய்ததாகத் தான் பொருள். நமக்குச் சொந்தமான நிறுவனத்தில் மற்றவர்களை வைத்து நடத்தும் வியாபாரமும் நாம் செய்ததாகத் தான் அர்த்தம்.

எனவே முற்றிலுமாக வியாபாரத்தை ஜும்ஆ பாங்கு முதல் ஜும்ஆ தொழுகை முடியும் வரை நிறுத்தியாக வேண்டும்.

ஏன் இந்த அரசியலை மட்டும் பாரதிய ஜனதா ஒருபோதும் பேசுவதில்லை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு சாதி சங்கங்களும் தங்களுடைய சுவற்றில் ஒட்டி வைத்து பேச வேண்டியது இதைத்தான், இந்தியாவின் உள்ள 12 பொதுத்துறை வங்கிகளில் மட்டும் உள்ள மிக உயர்ந்த பதவியான ஜெனரல் மேனேஜர் பதவி 814 இருக்கிறது, அதில் வெறும் 16 பேர் தான் OBC மக்கள், 

27% இட ஒதுக்கீட்டின்படி 219 OBC மக்கள் அந்த பதவியில் இருந்திருக்க வேண்டும்,ஆனால் நிலை என்ன, இந்தியாவின் மக்கள் தொகையில் சுமார் 56 % ( சுமார் 80 கோடிக்கு மேல்) உள்ள மக்கள் கூட்டத்திலிருந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இதுதான் நிலை. 

எஸ்சி எஸ்டி மக்களின் நிலையும் அதேதான்.. 

இது வங்கிகள் என்ற ஒரே ஒரு பொதுத்துறையில் மட்டும் உள்ள கணக்கு, இந்தியாவில்  எத்தனை பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கின்றன, அப்போ எத்தனை ஆயிரம் உயர்ந்த பதவிகளை நம் மக்கள் இத்தனை ஆண்டுகளாக இழந்து கொண்டிருக்கிறார்கள்? 

இந்த அரசியல் உரிய முறையில் முக்கியத்துவம் பற்றி பேசப்பட்டிருந்தால் நம் மக்கள் எவ்வளவு பேர் உயர்ந்த பதவிகளுக்கு சென்று அவர்களின் தலைமுறைகளும் வாழ்க்கை தரமும் மேம்பட்டிருக்கும், 

ஏன் இந்த அரசியலை மட்டும் பாரதிய ஜனதா ஒருபோதும் பேசுவதில்லை, இட ஒதுக்கீடு ஓபிசி எஸ்சி எஸ்டி என்று சொன்னாலே பிரிவினைவாதம் என்று நரேந்திர மோடி வரைக்கும் கதருவது ஏன்? அப்போ அவன் பேசும் அரசியல் யாருக்கானது, இந்த பல்லாயிரக்கணக்கான உயர் பதவிகளை சுரண்டி கொழுத்திருக்கும் பார்ப்பன உயர் வகுப்பிற்கான அரசியல் அது. ஆனால் அவன் கட்சிதான் நம் எல்லா சாதி சங்கங்களையும் முதலில் வந்து பார்க்கிறான், அவன் அணிந்திருக்கும் முகமூடி இந்து மதம், நாம் இத்தனை ஆயிரம் பதவிகளை இழந்தும் சொரணை அற்று கிடப்பது அந்த மகுடிக்குத்தான். நாம் எப்போது விழித்துக் கொள்வது நம் சாதி சங்கங்கள் எப்போது இந்த அரசியலை பேசுவது?..

Wednesday 26 June 2024

இருசக்கர வாகனங்களை ஓட்டும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை..


இருசக்கர வாகனங்களை ஓட்டும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...

பல ஆயிரங்கள் 
கொடுத்து வாங்கும் பைக்கை முறையாக பராமரிக்காவிட்டால், பாக்கெட்டில் இருக்கும் பணத்துக்கு பங்கம் வந்துவிடும். வாரத்தில், மாதத்தில் சில மணி நேரங்களை ஒதுக்கினாலே பைக் எந்த பிரச்னையும் கொடுக்காது. செலவும் வைக்காது. அதுபற்றிய பராமரிப்பு விவரம் இங்கே.... 

#வாரம் ஒருமுறை சுத்தம்: (cleaning)

வாரம் ஒருமுறையாவது பைக்கை சுத்தம் செய்வது அவசியம். சர்வீஸ் ஸ்டேஷன் சென்றுதான் வாட்டர் சர்வீஸ் செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லாதது. பைக்கில் சேறு படிந்திருந்தால், வீட்டிலேயே தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யுங்கள். அப்போதுதான் இன்ஜின், கியர்பாக்ஸ், சஸ்பென்ஷன்ஸ் போன்றவற்றில் ஆயில் லீக் இருக்கிறதா என்பதை கவனிக்க முடியும். பேட்டரியில் டிஸ்டில்டு வாட்டர் அளவு சரியாக இருக்கிறதா என பார்க்க வேண்டும். இரண்டு வீல்களிலும் காற்று சரியான அளவு இருக்கிறதா என்பதையும் சோதிக்க வேண்டும். இது, மைலேஜ் டிராப் ஆகாமல் இருக்க உதவும்.

* செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
* https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

#இன்ஜின் ஆயில்Engine oil):

ஆயிலின் மசகு (lubrication) தன்மைதான் இன்ஜினை அதிகம் சூடாக்காமலும், உராய்வில் தேய்ந்து போகாமலும் காக்கிறது. எனவே, வாகன தயாரிப்பாளர் பரிந்துரைக்கும் குறிப்பிட்ட கி.மீ தூரம் அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை (எது முந்துகிறதோ அதன்படி) இன்ஜின் ஆயில் மாற்றுவது இன்ஜினின் ஆயுளை நீட்டிக்கும். பரிந்துரைத்த கிரேடு ஆயில் பயன்படுத்துவது முக்கியம். ஆயில் குறைந்துவிட்டது என்பதால், வேறு ஏதாவது ஆயிலை ஊற்றுவது தவறு.

#எலெக்ட்ரிக்கல்: (Electrical):

முடிந்தவரை மழையில் நனையாமல், வெயிலில் காயாமல் பைக்கை பாதுகாத்தால் எலெக்ட்ரிக்கல், பெயின்ட் போன்றவற்றில் பிரச்னை வராது. ஹெட்லைட் பல்பை அதிக வெளிச்சம் தருவதுபோல மாற்றுவதாக இருந்தால் அல்லது அதிக சத்தம் தரும் ஹாரன் பொருத்துவதாக இருந்தால், குறிப்பிட்ட வாட்ஸ் அளவுள்ளதுதான் பொருத்த வேண்டும். மாற்றிப் பொருத்தினால், எலெக்டரிக்கல் பாகங்கள் பாதிப்பதுடன், எலெக்ட்ரிக் ரெகுலேட்டரும் சேதமாகும். எனவே, எலெக்டரிக்கல் விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டும்.

#ஏர் ஃபில்ட்:டர் (Air filter):

ஏர் ஃபில்ட்டர் அவசியம் கவனிக்க வேண்டிய முக்கியமான பாகம். இன்ஜினுக்குள் செல்லும் காற்றை சுத்தமாக்கி அனுப்பும் வேலையை செய்யும் இது சேதம் அடைந்திருந்தாலோ அல்லது நீண்ட நாள் பயன்படுத்தியதால் தூசு அதிகம் சேர்ந்திருந்தாலோ பிரச்னைதான். காற்றில் உள்ள தூசு இன்ஜினுக்குள் சென்றால், சிலிண்டரில் ஸ்க்ராட்ச் ஏற்படும். இதனால், இன்ஜின் விரைவாக தேயும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையாவது ஏர் ஃபில்ட்டரை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஏர் ஃபில்ட்டரையே மாற்றுவது அவசியம்.

* செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
* https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

செல்ஃப் ஸ்டார்ட் இருக்கிறதா?(self start):

காலையில், முதல் தடவையாக பைக்கை ஸ்டார்ட் செய்யும்போது, கிக் ஸ்டார்ட் செய்வதுதான் சிறந்தது. ஏனெனில், இரவு முழுவதும் சும்மா நின்றிருந்த இன்ஜின் குளிர்ந்திருக்கும். அப்போது செல்ஃப் ஸ்டார்ட் செய்தால், உடனே ஸ்டார்ட் ஆகாது. அதனால், சிலமுறை கிக் செய்துவிட்டு செல்ஃப் பயன்படுத்தலாம் அல்லது கிக் ஸ்டார்ட்டையே பயன்படுத்தலாம். இதனால், பேட்டரி, செல்ஃப் மோட்டார் ஆயுள் நீடிக்கும். மேலும், செல்ஃப் ஸ்டார்ட்டரை ஒருமுறை பயன்படுத்தும்போது, பேட்டரியின் பெருமளவு சக்தி செலவாகிறது.

அது மீண்டும் சார்ஜ் ஆவதற்கு, குறைந்தது 20 கி.மீ தூரமாவது பயணிக்க வேண்டும். அதனால், குறைவான தூரம் பயணிப்பவர்கள் அடிக்கடி செல்ஃப் ஸ்டார்ட் பயன்படுத்துவதில் கவனம் கொள்வது நல்லது. அதேபோல், காலையில் ஸ்டார்ட் செய்தபிறகு, ஒருசில நிமிடங்களாவது ஆயில் இன்ஜின் முழுவதும் பரவ ஐடிலிங்கில் ஓட அனுமதியுங்கள். ஆக்ஸிலரேட்டரை முறுக்காதீர்கள். அப்படி செய்தால், இன்ஜின் பாதிக்கப்படும்.

#செயின் ஸ்பிராக்கெட்: (chain sprocket):

இன்ஜினையும், வீலையும் இணைக்கும் செயின் ஸ்பிராக்கெட், மிக முக்கியமான பாகம். இதன் செயின் அதிக இறுக்கமாகவோ அல்லது மிக தளர்வாகவோ இருக்கக்கூடாது. ஓட ஓட தேயும் செயினை மாதம் ஒருமுறை சோதித்து அட்ஜஸ்ட் செய்வது அவசியம். செயினில் தூசு இருந்தால் சுத்தம் செய்து, ஆயில் விட்டு பராமரிப்பது நீண்ட நாள் உழைக்க வழிவகுக்கும். நேக்கட் பைக் சிலவற்றில் செயின் வெளியே தெரியும்படி இருக்கும்.

இதில், ஆயிலுக்கு பதில் ஸ்ப்ரே பயன்படுத்த வேண்டும். மேலும், ஸ்பிராக்கெட்டில் இருக்கும் பற்கள் தேய்ந்துபோகாமல் இருக்கிறதா என கவனிப்பதும் அவசியம். அட்ஜஸ்ட் செய்ய முடியாத அளவுக்கு தேய்ந்திருந்தால் செயின் ஸ்பிராக்கெட்டை மாற்றி விடுவது நல்லது. பொதுவாக, செயின் ஸ்பிராக்கெட் 30,000 முதல் 35000 கி.மீ வரைதான் உழைக்கும்.

#வீல்:

சரியான காற்றழுத்தத்தை எப்போதும் கடைபிடித்தால் வீல் பெண்ட் ஆகாமல் இருக்கும். வீல் பஞ்சர் ஆனது தெரியாமல் பைக்கை ஓட்டும்போதுதான் பெரும்பாலும் வீல் பெண்ட் ஆகிறது. அலாய் வீல் சுலபத்தில் பெண்ட் ஆகாது என்றாலும், பெண்ட் ஆனால் சரிசெய்ய முடியாது. ஸ்போக் வீலை சரி செய்யலாம் என்றாலும், கவனமாக இருப்பது நல்லது, பெண்ட் ஆன வீலுடன் வாகனத்தை ஓட்டினால் செயின் ஸ்பிராக்கெட் பாதிக்கப்படும். டயர் ஏறுக்கு மாறாக தேயும். பைக்கின் பெர்ஃபாமென்ஸ், செயல்பாடு என ஓட்டுமொத்தமாக பாதிக்கும்.

#கார்புரேட்டர்:

காற்றும், பெட்ரோலும் கலக்கும் இடம் கார்புரேட்டர். இதில், பல ஸ்க்ரூ&க்கள் இருக்கும். சில சமயங்களில் பைக் ஸ்டார்ட் ஆகவில்லை என்றால், இதில் இருக்கும் ஏதாவது ஒரு ஸ்க்ரூவை திருக்குவது சிலருக்கு பழக்கமாக இருக்கிறது. அப்படி செய்யவே கூடாது. ஏனெனில், காற்றும், பெட்ரோலும் என்ன விகிதத்தில் கலக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப, இந்த ஸ்க்ரூ&க்கள் அட்ஜஸ்ட் செய்யப்பட்டிருக்கும். இதில், ஏதாவது ஒன்றை திருகினால், ஏறுக்குமாறாக மாறிவிடும்.
இதில், கைவைக்காமல் சுத்தமாக பராமரிப்பது மட்டுமே சிறந்தது. இதில் உள்ள சோக்கை அதிகாலை நேரத்தில் ஸ்டார்ட் செய்யும்போது அல்லது ஸ்டார்ட்டிங் டிரபுள் இருக்கும் போது மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்ற சமயத்தில் சோக் ஆன் ஆகி இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு ஓட்டுவது நல்லது. ஏனெனில், சோக் அமைப்பு அதிக பெட்ரோல், குறைவான காற்று இன்ஜினுக்கு செல்வதுபோல வடிவமைக்கப்பட்டது. கவனிக்காமல் ஓட்டினால், டேங்க்கில் இருக்கும் பெட்ரோல் காலியாகிவிடும்.

#டயர்:

பொதுவாக, இருசக்கர வாகனங்களின் டயர்கள் 35,000 கி.மீ முதல் 40,000 கி.மீ தூரம் வரை மட்டுமே உழைக்கும். சில பைக்குளில் 20 ஆயிரம் கி.மீ.லேயே மாற்ற வேண்டிவரும். அடிக்கடி பஞ்சர் ஆவதுதான் டயர் பலவீனமடைந்து விட்டது என்பதற்கான அறிகுறி. டயர்களின் பட்டன் தேய்ந்து சமதளமாக டயர் மாறும்வரை ஓட்டுவது ஆபத்து.

பட்டன்களின் ஆழம் குறைந்ததுமே மாற்றிவிடுவதுதான் பாதுகாப்பு. ஏனெனில், வளைவுகளில், மணற்பாங்கான சாலைகளில், வழுக்கும் தன்மைகொண்ட இடங்களில் தேய்ந்துபோன டயர் வாகனத்தை ஸ்கிட் ஆக்கிவிடும். மேலும், பிரேக் பிடிக்கும்போது ஸ்கிட் ஆவதுடன், பைக் தாறுமாறாக வளைந்து, நெளிந்து சுழல்வதும் நடக்கும். அதேபோல், குறிப்பிட்ட தூரத்தில் பைக் நிற்காது. எனவே, டயர் விஷயத்தில் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

#கிளட்ச்:

கிளட்ச் லீவரை கியர் மாற்றுவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கும்போது கிளட்ச் லீவரை லேசாக பிடித்துக்கொள்ளும் பழக்கம் பலருக்கு உண்டு. இது, நல்லதல்ல. இதன்மூலம், இன்ஜினில் இருந்து கிடைக்கும் சக்தி முழுமையாக வீலுக்கு செல்லாமல் விரயகுமாகும். இதனால், மைலேஜ் பெருமளவு குறையும்.

கிளட்ச் பிளேட் தேய்மானம் ஆகும். இதற்கு ஏற்ப லீவர் கேபிள் அட்ஜஸ்ட் செய்யப்பட வேண்டியது அவசியமாகிவிடும். இதை மாதம் ஒருமுறை செக் செய்வது நல்லது. தேய்ந்துபோன கிளட்ச்சை தொடர்ந்து பயன்படுத்துவது பெட்ரோல் விரயத்துக்கு வழி வகுப்பதுடன், கியர்பாக்ஸை பாதித்து, செலவை எகிற வைத்துவிடும். மேலும், டிராஃபிக் சமயங்களில் நம்மை தள்ளாட வைத்துவிடும்.

#ஸ்பார்க் பிளக்:

இன்ஜின் இயங்க மிக முக்கியமான பாகம் ஸ்பார்க் பிளக். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்யும்போது தவறாமல் இதையும் மெக்கானிக் சோதித்து பார்ப்பார் என்றாலும், அதை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது. சரியாக தீப்பொறி வராத ஸ்பார்க் பிளக்கால் பைக்கின் பெர்ஃபாமென்ஸ் பாதிக்கப்படுவதுடன், பெட்ரோலும் வீணாகும். மேலும், எப்போதும் ஒரு ஸ்பேர் ஸ்பார்க் பிளக் உங்கள் பைக்கிலேயே வைத்திருங்கள். 50 ரூபாய் முதல் 100 ரூபாய் விலை கொண்ட இது பழுதடைந்தால், நடுரோட்டில் நிற்க வேண்டியது வரும். இரீடியம் ஸ்பார்க் பிளக் என்னும் வகை ஒன்று உண்டு. இது விலை அதிகம் என்றாலும், நீண்ட நாள் உழைப்பதுடன் சீராக இயங்கி நல்ல பெர்ஃபாமென்ஸ் அளிக்கும்.

#பிரேக்:

பிரேக்கில் கால் வைத்துக் கொண்டே அல்லது பிரேக் லீவரை பிடித்தவாறு பைக் ஓட்டுவது தவறு. அப்படி ஓட்டினால், பிரேக் பேட் விரைவில் தேய்ந்து போகும். மேலும், பிரேக்கை அழுத்தியவாறு ஓட்டுவதால், அதிக வெப்பம் உருவாகும். இதனால், பிரேக் ட்ரம் தேய்ந்து விடுவதுடன், மைலேஜூம் கணிசமாக குறையும். எனவே, தேவை ஏற்படும்போது மட்டுமே பிரேக் பெடலில் கால் வைப்பதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

மேலும், இன்ஜினும் ஒரு பிரேக்தான் என்பது பலருக்கு புரிவது இல்லை. அவசரமாக பிரேக் பயன்படுத்தும்போது, கிளட்ச்சையும் பயன்படுத்துவது தவறு. கிளட்ச் பிடிக்கவில்லை என்றால், இன்ஜின் ஆஃப் அகி விடாதா என கேள்வி எழும். கிளட்ச்சையும் சேர்த்து பிடிக்கும்போது, பைக் ஸ்டெபிளிட்டி பாதிக்கப்படும். மேலும், பைக் நிற்கும் தூரமும் அதிகரிக்கும். கிளட்ச் பிடிக்கவில்லை என்றால், இன்ஜினும், வீலும் நேராக இணைந்திருக்கும். ஆக்ஸிலரேட்டர் குறைவதும் பிரேக் பெடல் அழுத்தப்படுவதும் ஒரே சமயத்தில் நிகழும்போது, நீங்கள் திட்டமிட்ட தூரத்துக்கு முன்பாகவே பைக் நின்றுவிடும்.

அதேபோல், முன்&பின் இரு பிரேக்குகளையும் ஒரே சமயத்தில் பயன்படுத்துவதும் அவசியம். டிஸ்க் பிரேக்கை பொறுத்தவரை அதில் நாமாக செய்ய எதுவும் இல்லை. அதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்றால், பிரேக் ஃப்ளுயிட் லெவல் சரியாக இருக்கிறதா என்பதை மட்டும் கவனிக்க வேண்டும். அளவு குறைந்தால், உடனே சர்வீஸ் சென்டருக்கு கொண்டுசெல்வது நல்லது. அதேபோல், பிரேக் டிஸ்க்கில் சேறு படியாமல் சுத்தமாக பராமரித்து வரவேண்டியது அவசியம்.

#சஸ்பென்ஷன்: (suspension):

வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் எடையை ஏற்றினால், முதலில் பாதிக்கப்படுவது சஸ்பென்ஷன்தான். சஸ்பென்ஷன் பழுதடைந்தால், பைக்கின் பெர்ஃபாமென்ஸ், பிரேக், செயல்பாடு, மைலேஜ் என அனைத்துமே பாதிக்கும். மேலும், சஸ்பென்ஷன் சரியாக இயங்கவில்லை என்றால் கழுத்து வலி, முதுகு வலி, கை வலி வர வாய்ப்பு உண்டு. எனவே, சஸ்பென்ஷன் விஷயத்தில் அலட்சியம் காட்டாமல், உடனுக்குடன் சரிசெய்வது நல்லது.

ஷாக் அப்ஸார்பரை பொறுத்தவரை ரீ&கண்டிஷன் செய்து பொருத்த கூடாது. புதிதாக மாற்றுவதே நல்லது. முன்பக்க ஃபோர்க் சஸ்பென்ஷன் பழுதடைந்து ஆயில் கசிந்தால் உடனே சரிசெய்வதுதான் நல்லது. ஏனெனில், அதில் உள்ள ஆயில் முழுவதும் வெளியேறி ஆயில் இல்லாத நிலையில் இயங்கினால், ஃபோர்க் வளைந்துவிடும். ஃபோர்க்கை சரிசெய்வது என்பது நன்றாக இருந்த கையை உடைத்து மாவுக்கட்டு போடுவது போன்றதுதான்.

டாக்டர் (MBBS) படிக்க இஸ்லாமியர்களால் நிர்வகிக்கப்படும் மருத்துவ கல்லூரிகள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

டாக்டர் (MBBS) படிக்க இஸ்லாமியர்களால் நிர்வகிக்கப்படும் மருத்துவ கல்லூரிகள் (Medical College) பட்டியல்......
(பலரின் வேண்டுகோளுக்கு இணங்க)

குறிப்பாக பெண் பிள்ளைகளை MBBS படிக்க வைக்க முஸ்லீம்களால் நிர்வகிக்கப்படும், மருத்துவ கல்லூரிகளில் சேர்க்க பல பெற்றோர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களுக்காக அதன் விபரங்களை இப்போது பார்ப்போம்.....

தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களால் நிர்வகிக்கப்படும் ஒரு மருத்துவ கல்லூரி கூட கிடையாது. எனவே கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானாவில் தான் படிக்க வைக்க வேண்டும்.....

      கேரளாவில்  இஸ்லாமியர்களால்
                       நிர்வகிக்கப்படும் 
                மருத்துவ கல்லூரிகள்

1. கொல்லம் - AZEEZIA INSTITUTE OF MEDICAL SCIENCES AND RESEARCH
2. கோழிக்கோடு - KMCT MEDICAL COLLEGE
3. பாலக்காடு - KARUNA MEDICAL COLLEGE
4. மலப்புரம் - MES ACADEMY OF MEDICAL SCIENCES
5. வயநாடு - DM WAYANAD INSTITUTE OF MEDICAL SCIENCE
6. தொடுப்புழா (இடுக்கி மாவட்டம்) - AL-AZHAR MEDICAL COLLEGE AND SUPER SPECIALTY HOSPITAL
7. கன்னூர் - KANNUR MEDICAL COLLEGE
:+:
    கர்நாடகாவில் இஸ்லாமியர்களால்
                       நிர்வகிக்கப்படும் 
                மருத்துவ கல்லூரிகள்

1. பிஜாபூர் - AL-AMEEN MEDICAL COLLEGE
2. குல்பர்கா - KHAJA BANDANAWAZ UNIVERSITY
3. மங்களூர் - KANACHUR INSTITUTE OF MEDICAL SCIENCES
4. மங்களூர் - YENEPOYA MEDICAL COLLEGE
:+:
     ஆந்திராவில் இஸ்லாமியர்களால்
                        நிர்வகிக்கப்படும்
                  மருத்துவ கல்லூரிகள்

1. விஜயவாடா - NIMRA INSTITUTE OF MEDICAL SCIENCES
2. கடப்பா - FATIMA INSTITUTE OF MEDICAL SCIENCE
:+:
தெலுங்கானாவில் இஸ்லாமியர்களால்                    நிர்வகிக்கப்படும் 
                மருத்துவ கல்லூரிகள்

1. ஹைதராபாத் - SHADAN INSTITUTE OF MEDICAL SCIENCE, 
2. ஹைதராபாத் - DECCAN COLLEGE OF MEDICAL SCIENCE, 
3. மொய்னாபாத் - AYAAN INSTITUTE OF MEDICAL SCIENCES, 
4. அஜீஸ் நகர் - DR VIZARATH RASOOL KHAN (VRK) WOMEN’S MEDICAL COLLEGE
:+:
தமிழக முஸ்லீம்களிடையே மருத்துவ கல்வி பற்றி போதிய விழிப்புணர்வு இல்லை. எனவே இங்கு ஒரு மருத்துவ கல்லூரி கூட, முஸ்லீம்களால் துவக்கப்பட வில்லை. 

மருத்துவ கல்வி மட்டுமில்லை, IAS/IPS/IFS/IES போன்ற உயர் அரசு பதவி, IIT/NIT/IIM/IISc போன்ற உயர் கல்வி நிலையங்களில் படிப்பது என உயர்கல்வியை பற்றிய, விழிப்புணர்வு தமிழக முஸ்லீம்களிடம், போதிய அளவு  இல்லை....

இவற்றையெல்லாம் உருவாக்க மாநில அளவில் ஒருங்கிணைந்த கல்வி கட்டமைப்பு கூட தமிழக முஸ்லீம்களிடம் இல்லை...

இந்து என்ற பெயரில் பாஜகவின் காலை கழுவும் பிற்படுத்தப்பட்ட இடைநிலை சாதிகளே...!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்து என்ற பெயரில் பாஜகவின் காலை கழுவும் பிற்படுத்தப்பட்ட இடைநிலை சாதிகளே...!

விபி.சிங் ஆட்சி எப்படி கவிழ்ந்தது தெரியுமா...?

இந்தியாவின் அரசு அனைத்து பணிகளிலும் பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் 
என்பதால்
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அதாவது இந்துக்களுக்கு உரிய பணி இடங்களை ஒதுக்க வேண்டும் எனக் கூறி மண்டல் கமிசனின் பரிந்துரையின்படி

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 
27 சதவீத 
இட ஒதுக்கீடு வழங்க சட்டமியற்றினார்.

அது எப்படி கால காலமாக பார்ப்பனர்களுக்கு அடிமையாய் இருக்கும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அதாவது இந்துக்கள் பார்ப்பனர்களுக்கு சரிசமமாய் வருவதா....? 

என உங்கள் ஆர்எஸ்எஸ், பாஜக கும்பலுக்கு தூக்கம் கெட்டது.

இந்த விபி.சிங் ஆட்சியே நமது ஆதரவில் தான் நடைபெறுகிறது.
எனவே நமது ஆதரவை விலக்கி, இந்த ஆட்சியை கலைத்து விட்டால்,

பிற்படுத்தப்பட்ட மக்கள் அதாவது இந்துக்கள் பெறவிருக்கும் உரிமையை தடுத்து விடலாம் எனத் திட்டமிட்டது.

ஆனால் நேரடியாக இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதாய் கூறி ஆட்சியை கலைத்தால் மக்களிடம் அம்பலப்படுவோம் என்பதால் வேறு ஒரு திட்டத்திற்கு தயாரானது பார்ப்பன சங்கி கூட்டம்.

அப்போது அத்வானி கழிவறையில் அமர்ந்திருந்த போது அவரின் சாணி ரொப்பிய மூளையில் உதித்த யோசனை தான் ரதயாத்திரை திட்டம்.

ராமனுக்கு கோவில் கட்டுகிறேன் என்ற பெயரில் நாடெங்கும் ரதயாத்திரை நடத்தி கலவரங்களை நிகழ்த்தினால்,

சனநாயகவாதியான விபி.சிங் எப்படியும் ரதயாத்திரைக்கு தடை விதிப்பார்.
ரதயாத்திரைக்கு தடை விதித்ததையே காரணமாக கூறி, 

விபி.சிங் ஆட்சிக்கு வழங்கப்பட்டு வந்த ஆதரவை நீக்கி ஆட்சியை கவிழ்க்கலாம் என திட்டமிட்டது பார்ப்பன 
சங்கிக்கூட்டம்.

அதை அப்படியே நடைமுறை படித்தி ஆட்சியையும் கவிழ்த்தது.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தங்களுக்கு பிடிக்காததால் தான் விபி்.சிங் ஆட்சியை ரதயாத்திரை என்ற பெயரில் கவிழ்த்தோம் என அத்வானியே பின்னர் தான் எழுதிய ஒரு புத்தகத்தில் கூறியுள்ளார்.

பாஜகவிற்கு சொம்பு தூக்கும் பிற்படுத்தப்பட்ட இந்துக்களே...
இதற்க்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்...?

நீங்களும் இந்துக்கள் தானே....! 
அப்படி இருக்க இந்துக்களுக்கு கட்சி நடத்துகிறோம் எனக் கூறும் பாஜக உங்களுக்கு வர வேண்டிய இட ஒதுக்கீட்டை தடுக்க ஏன் இப்படி துடித்தது...?

இஸ்லாமியர்களுக்கு சலுகை தரக் கூடாது, கிருஸ்துவர்களுக்கு சலுகை தரக் கூடாது என பார்ப்பனசங்கிகள் சொல்லிக் கொடுப்பதை கிளிப்பிள்ளை போல ஒப்புவிக்கும் கூட்டமே...!! 

உங்களுக்கு தர வேண்டிய இடஒதுக்கீட்டையே எதிர்த்தது தான் உங்க ஆர்எஸ்எஸ், பாஜக சங்கிக் கூட்டம்.

இதற்கும் சொம்படிக்காமல், போய் உங்க கட்சியில் இருக்கும் பார்ப்பன சங்கிகளிடம் கேளுங்கள்.

"ஜீ ஜீ  நாங்களும் இந்துக்கள் 
தானே..ஜீ

அப்பறம் ஏன் ஜீ எங்க இட ஒதுக்கீட்டை எதிர்த்தீங்க' ன்னு கேளுங்கள்.

(இன்று வி.பிசிங் பிறந்த நாள்.)

ஒரு 83 வயது முஸ்லிம் பாட்டி, படுக்கையில்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,
.
ஒரு 83 வயது முஸ்லிம் பாட்டி, படுக்கையில் படுத்துக்கொண்டு, தனது 87 வயதான  கணவரிடம் கூறினார்:

"இங்க பாருங்க, நான் ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன், கார் நிறுத்தும் ஷெட்டின் வாசல் லைட்டை அணைக்கவில்லைன்னு நினைக்கிறேன். நீங்க போய் லைட்டை ஆஃப் பண்ணிட்டு வாங்க".

முதியவர் மிகவும் சிரமப்பட்டு படுக்கையில் இருந்து எழுந்து, ஜன்னலைத் திறந்து பார்த்தார், ஐந்தாறு திருடர்கள் தனது கார் நிறுத்தியுள்ள ஷெட்டின் ஷட்டர் கதவை உடைக்க முயற்சிப்பதைக் கண்டார்.

பெரியவர் அங்கிருந்து அருகில் உள்ள காவல் நிலையத்தை ஃபோனில் அழைத்தார்: "ஹலோ......எனது முகவரியை எழுதிக் கொள்ளுங்கள். வீட்டில் நாங்கள் இரண்டு வயதான கணவன் மனைவி மட்டுமே இருக்கிறோம். இப்போது ஐந்து அல்லது ஆறு திருடர்கள் எங்கள் கார் நிறுத்தியுள்ள ஷெட்டின் ஷட்டர் கதவை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு போலீஸ் குழுவை சீக்கிரம் அனுப்புங்கள்."

மறுபக்கத்திலிருந்து காவல் அதிகாரியின் குரல் வந்தது: "உங்கள் முகவரியை குறித்துக் கொண்டோம். எங்களிடம் தற்போது காவலர்கள் யாரும் இல்லை. நாங்கள் ஒரு போலீஸ் டீமுடன் தொடர்பு கொண்டவுடன், அவர்களை உங்கள் வீட்டிற்கு அனுப்புகிறோம்."

இதைக் கேட்டு, பெரியவர் ஏமாற்றம் அடைந்தார், ஆனால் மறுபுறம், ஷட்டர் கதவை உடைக்கும் பணியில் திருடர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, பெரியவர் மீண்டும் காவல் நிலையத்தை அழைத்தார்: "அய்யா.....இப்போது யாரையும் அனுப்ப வேண்டியதில்லை. ஐந்து திருடர்களையும் சுட்டு விட்டேன்" என்று நிதானமாகக் கூறினார்.

போலீஸ் ஸ்டேஷனில் ஒரே பரபரப்பு. ஐந்து நிமிடங்களில், ஒரு போலீஸ் குழு, ஒரு ஹெலிகாப்டர், ஒரு துணை மருத்துவர், மூன்று டாக்டர்கள் மற்றும் இரண்டு ஆம்புலன்ஸ்களுடன், முதியவரின் வீட்டை அடைந்தது.

ஐந்து திருடர்களும் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் போலீஸ் குழுவின் தலைவர் பெரியவரை அணுகி கேட்டார், "நீங்கள் அந்த ஐந்து திருடர்களையும் சுட்டுக் கொன்றதாகச் சொன்னீர்கள், ஆனால் நாங்கள் அவர்களை உயிருடன் பிடித்துள்ளோமே?"

முஸ்லிம் முதியவர் பதிலளித்தார்: "நீங்கள் கூடத்தான் சொன்னீர்கள் போலீஸ் டீம் எதுவும் இல்லை என்று".

முஸ்லிம் மூத்த குடிமக்களின் அறிவாற்றலை என்றுமே குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள்...

Never Underestimate The Intelligence Of Senior Citizen...

பகிர்வு...

Monday 24 June 2024

அம்மாபேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதர நிலையம் பொது மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படுமா?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அம்மாபேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதர நிலையம் பொது மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படுமா? 

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ அவர்கள் 

#mmkitwing #jawahirullamla #பாபநாசம்#Papanasam
👇👇👇
https://www.facebook.com/share/v/EHEcAz1M1ECtrwFG/?mibextid=oFDknk
👇👇👇
https://x.com/mmkhqofficial/status/1805166973594321253?t=COWV5AENta5x4vOnAh5bAg&s=19