Thursday, 9 January 2025

இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள ரோல் பால் வீராங்கனை வசீமாவுக்கு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள ரோல் பால் வீராங்கனை வசீமாவுக்கு தமிழ்நாடு அரசு ஊக்கப் பரிசுகளை வழங்கி உற்சாகப்படுத்த வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை:

திருச்சி அருகே உள்ள புலிவலம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து தளர்ச்சி இல்லா தொடர் முயற்சிகளாலும் கடுமையான பயிற்சிகளாலும் நான்காவது ஆசிய ரோல்பால் விளையாட்டில் இந்திய அணி சார்பில் பங்கேற்று சாம்பியன் பட்டம் பெற்று, இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் தனிப் பெருமை சேர்த்துள்ளார் வசீமா என்ற மாணவி.

இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்பதற்காக கல்வியிலும் முன்னணி மாணவியான அவர் இறுதி பருவத் தேர்வை எழுத இயலவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருச்சியில் உள்ள புகழ்பெற்ற ஜமால் முகமது கல்லூரியின் மாணவியாகிய வசீமா ஒரு சாதாரண தொழிலாளியின் மகளாகப் பிறந்து, கல்வி நிறுவனங்களும் குடும்பத்தினரும் தந்த ஊக்கத்தால் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

ரோல் பால் என்பது மிகுந்த சிரமம் உடைய ஒரு விளையாட்டு ஆகும். உருளைகள் வைத்த காலணிகளை அணிந்து ஆடப்படும் இந்த விளையாட்டில் ஆசியாவின் 10 நாடுகள் பங்கேற்றுள்ளன.

கோவாவில் உள்ள மனோகர் பாரிக்கர் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ஆசிய அளவிலான நான்காவது ரோல் பால் சாம்பியன் பட்டத்துக்கான விளையாட்டில் இந்தியா, இலங்கை, ஈரான், மியான்மர், நேபாளம், மலேசியா, ஓமன், வியட்நாம், பிலிப்பைன்ஸ், பூட்டான் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றன இறுதிப்போட்டியில் ஈரான் அணியை எதிர்கொண்டு இந்திய ரோல்பால் மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது. 

மூன்றுக்கு இரண்டு என்ற கோல் கணக்கில் இந்திய மகளிர் ரோல்பால் அணி வெற்றி பெற்றுள்ளது. இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு சாம்பியன் பட்ட வென்ற வசீமாவும் ஆண்கள் பிரிவில் சிவச்சந்திரனும் பாராட்டு பெற்றுள்ளனர். இருவரும் தமிழ்நாட்டினர் என்பது நமக்கு கூடுதல் சிறப்பாகும். இருவருக்கும் தமிழ்நாடு அரசு உரிய அங்கீகாரம் வழங்கி கவுரவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
எம்.எச்.ஜவாஹிருல்லா 
தலைவர்,
மனிதநேய மக்கள் கட்சி

Wednesday, 8 January 2025

M. H. ஜவஹிருல்லா: அரசியல்வாதி.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

M. H. ஜவஹிருல்லா: அரசியல்வாதி.

M. H. ஜவஹிருல்லா (1959-ம் ஆண்டு பிறந்தவர்) இந்தியாவின் முக்கியமான அரசியல்வாதியாவர், சமூக செயற்பாட்டாளர் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள மனிதநேய மக்கள் கட்சியின் (MMK) நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார். 1959-ம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் இளங்குடியில் பிறந்த ஜவஹிருல்லா, தன்னுடைய வாழ்க்கையை புறக்கணிக்கப்பட்ட சமுதாயங்களின், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்களின் மறுக்கப்பட்ட உரிமைகளையும், நலன்களையும் ஊக்குவிப்பதில் அர்ப்பணித்துள்ளார்.

ஜவஹிருல்லாவின் ஆரம்பக் கல்வி பாரம்பரிய இஸ்லாமிய படிப்புகளிலும், நவீன கல்வியிலும் அடிப்படை பெற்றுள்ளதுடன், அவர் பொருளாதாரம் பட்டப் படிப்பையும் முடித்துள்ளார், அதே துறையில் முதுகலைப்படிப்பை முடித்து, பின்னர் இஸ்லாமிய படிப்புகளில் பிஏச்.டி. பெற்றார். இந்த கல்விப் பின்னணி சமூக செயற்பாட்டிலும், அரசியலிலும் அவரது சமூக சமுதாயப் பணிகளுக்கு உறுதியான அடித்தளத்தை வழங்கியது.

2009-ஆம் ஆண்டு, ஜவஹிருல்லா மனிதநேய மக்கள் கட்சியை நிறுவினார், இது சமூக மற்றும் பொருளாதார ரீதியாக புறக்கணிக்கப்பட்ட மற்றும் குறைவான பிரதிநிதித்துவம் பெற்ற சமூகங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கட்சி. அவரது தலைமையில், MMK தமிழ்நாட்டில் முக்கியமான அரசியல் பங்காற்றும் கட்சியாக உயர்ந்துள்ளது, முக்கிய அரசியல் கூட்டணிகளுடன் இணைந்து முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் உரிமைகள் பேணவும், அதற்காக வாதிடவும் பல முறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஜவஹிருல்லாவின் அரசியல் வாழ்க்கை, 2011 முதல் 2016 வரை ராமநாதபுரம் தொகுதியில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுப்பினராக இருந்த காலத்தை மையமாக கொண்டது. அவற்றில், சமூகநீதி, சமய ஒற்றுமை, சிறுபான்மையினரின் உரிமைகள் போன்ற பிரச்சினைகளுக்கு அவர் திறம்பட தமது கருத்துக்களை வெளிப்படுத்தினார். சட்டப்பேரவையில் அவர் எடுத்த முயற்சிகள் பெரும்பாலும் கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படை வாழ்க்கைத்துணைகளுக்கான வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டன.

அரசியலுக்கு அப்பால், ஜவஹிருல்லா பல சமூக நலத்திட்டங்களில் சோம்பலின்றி ஈடுபட்டு வருகின்றார். அவர் சமய ஒற்றுமைக்கு வலியுறுத்தி, தமிழ்நாட்டில் பல்வேறு சமய மற்றும் சமூகக் குழுக்களுக்கிடையே இடைவெளியை குறைக்கும் பணியில் கஷ்டப்பட்டு வருகின்றார்.

M. H. ஜவஹிருல்லா இன்று தமிழ்நாட்டின் அரசியல் பரப்பில் முக்கியமான தலைவராகத் தொடர்ந்தும் செயல்படுகின்றார், அனைத்து மக்களுக்கும் நீதி, சமத்துவம் மற்றும் அதிகாரம் என்பவற்றுக்காகப் போராடி வருகின்றார்.

சீமான் பேச்சு கண்டிக்கதக்கது / மமக தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

09.01.2024 Chennai 

https://youtu.be/56qaH3wk7e0?si=TELGpAb-rY28ggO_&sfnsn=wiwspwa

சீமான் பேச்சு கண்டிக்கதக்கது, தமிழ்நாட்டின் வரலாற்றை புரியாமல் யாரையோ திருப்தி படுத்துவதற்கு ஆற்றிய உரை - 

மமக தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி

திருமணத்திற்கு இனி பத்திரப்பதிவு அலுவலகம் வர தேவையே இல்லை.! ஈசியா ஆன்லைனில் பண்ணலாம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

திருமணத்திற்கு இனி பத்திரப்பதிவு அலுவலகம் வர தேவையே இல்லை.! ஈசியா ஆன்லைனில் பண்ணலாம்

திருமண பதிவுகளை எளிதாக்க, தமிழக அரசு புதிய ஆன்லைன் முறையை அறிமுகப்படுத்த உள்ளது. 

இதன் மூலம் வீட்டிலிருந்தே திருமணத்தை பதிவு செய்து கட்டணத்தை செலுத்த முடியும். 

பத்திரிக்கை அடித்து, உறவினர்களை கூப்பிட்டு  விருந்து வைத்து திருமணமானது விஷேசமாக நடந்தாலும் அந்த திருமணத்தை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிந்தால் மட்டுமே செல்லுபடியாகும். 

எனவே பத்திர பதிவு அலுவலகத்தில் மணமகன், மனமகள் போட்டா, ஆதார் ஆவணங்கள், வயது சான்றிதழ் உள்ளிட்ட பல சான்றிதழ்கள் கொடுத்து பதிவு செய்யப்படுகிறது. 




தற்போது உள்ள சூழலில் பாஃபோர்ட் போன்ற காரணங்களுக்கு திருமண பதிவு சான்றிதழ் அவசியமாக உள்ளது. 

எனவே இதற்காக மீண்டும் பத்திர பதிவு அலுவலகத்தில் பதிவாளர் முன்பாக கையெழுத்திட்டு முறைப்படி திருமணங்கள் நடைபெறும்.

திருமண பதிவு - பத்திரபதிவு அலுவலகம்

தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டம் 2009-ம் ஆண்டு சட்டத்தின் படி திருமணம் நடைபெறும் பகுதியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே திருமணத்தைபதிவு செய்ய முடியும். 

இது சட்டம் மாற்றப்பட்டு 2020-ம் ஆண்டு இந்த சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் ஒன்று கொண்டுவந்தது. 

அதன்படி மணமகன் அல்லது மணமகள் வசிக்கும் பகுதியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் கூட திருமணத்தை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. 

ஆனால் பெரும்பாலானவர்கள் பத்திர பதிவு அலுவலகத்திற்கு சென்று அலைய விரும்பாத நிலையே உள்ளது. 

இதனால் பாஸ்போர்ட் பெறும் தம்பதிகள் மற்றும் காதல் திருமணங்கள் செய்பவர்கள் மட்டுமே பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்து வருகின்றனர்

லஞ்சமாக கைமாறும் பணம்

மேலும் பத்திர பதிவு அலுவலங்களில் திருமணத்தை பதிவு செய்வதில் பல்வேறு சிக்கல்கள்களோடு லஞ்சமாக பல ஆயிரத்தில் பணமும் கைமாறுவது தெரியவந்தது. 

இதனையடுத்து திருமணத்தை பத்திர பதிவு அலுவலகத்தில் சென்று பதிவு செய்யும் முறையில் மாற்றம் செய்யப்படவுள்ளது. 

அதன் படி  பொதுமக்களே நேரடியாக ஆன்லைனில் கட்டணத்தை செலுத்தி திருமண பதிவுகளை பதிவு செய்யும் நடைமுறையை கொண்டுவர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதன் மூலம் வீட்டில் இருந்தே திருமணத்தை பதிவு செய்து அதற்கான கட்டணத்தையும் செலுத்த முடியும். 

திருமணம் செய்துகொள்ளப்பட்டதற்கான ஆவணங்கள் உரிய முறையில் இருந்தால் உடனடியாக திருமண சான்றிதழ்களும் வழங்கப்படவாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆன்லைனில் திருமண பதிவு

தமிழக பத்திர பதிவுத்துறையில் பல்வேறு பணிகள் ஆன்லைனில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ஸ்டார்-2 மென் பொருள் மூலமாக எளிமையாக சான்றிதழ்களை வழங்கப்பட்டு வருகிறது. 

இதன் அடுத்தக்கட்டமாக ஸ்டார்-3 மென் பொருள் அப்டேட் செய்யப்பட உள்ளது. இந்த சாப்ட்வேர் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. 

எனவே திருமண பதிவுகள் பொதுமக்களே வீட்டில் இருந்து மேற்கொள்ளும் வகையில் புதிய திட்டம் விரைவில் அறிமுகமாக இருப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

முதற்கட்டமாக தமிழ்நாடு திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்பவர்களுக்கு பொருந்தும் எனவும், பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் சிறப்பு திருமணங்கள் போன்றவற்றில் ஏற்கனவே உள்ள நடைமுறைகள் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tuesday, 7 January 2025

புகார் பதிவேடு” முறை பின்பற்றிட கிராம ஊராட்சிகளுக்கான சிறப்பு அதிகாரிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கோரிக்கை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் தேர்தல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்பு பிரநிதிகளுக்கான பதவி காலம், 2025 ஜனவரி 5ந்தேதியோடு நிறைவடைந்த நிலையில் 28 மாவட்டங்களுக்கான ஊராட்சிகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள எங்கள் கிராம ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் “பொதுமக்கள் புகார் பதிவேடு” முறை பின்பற்றிட கிராம ஊராட்சிகளுக்கான சிறப்பு அதிகாரிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

நமது கோரிக்கையின் அடிப்படையில் எங்கள் ஊரில் பொதுமக்கள் புகார் பதிவேடு பராமரிக்கப்பட்டுள்ளது. 

நமது நிர்வாகிகளும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கான சிறப்பு அதிகாரியை சந்தித்து தங்களது கிராமத்திற்குத் தேவையான அத்தியாவசிய பணிகள் குறித்து எழுத்துப் பூர்வமாகமனுக் கொடுத்து பொதுமக்களின்  தேவைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

மு. உசைன் கனி
மக்கள் உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அணி
மாநில பொறுப்பாளர்.

கண்ணீரை வரவழைக்கும் புகைப்படங்கள்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

கண்ணீரை வரவழைக்கும் புகைப்படங்கள்.
<><><><><><><><><><><><><><><><>



கீழேயுள்ள புகைப்படங்களில் (இடது கையில் சாவிகள், வலது கையில்) குத்து வாளுடன் மொரோக்கோ நாட்டின் ஜலாபா என்ற சூஃபி உடையணிந்து காணப்படுபவர் மொரோக்கோவாசி அல்லர். அவர் ஸ்பெய்ன் நாட்டுக்காரர். அந்தலுஸ் என்ற முஸ்லிம் ஸபெய்னின் கடைசி மன்னரான அப்துல்லாஹ் அஸ்ஸஙீர் அவர்களின் பிரதிநிதி.

(கி.பி. 712 முதல் 1492 வரை 780 ஆண்டுகளாக கொடிகட்டிப் பறந்த அந்தலுஸ் என்ற முஸ்லிம் ஸ்பெய்ன் நாடு, கிறிஸ்தவர்களால் வீழ்த்தப்பட்டது. அதில் கடைசியாக வீழ்ந்த மாகாணம் கிரானடா தான்.)

அந்த கிரானடா பேரரசின் சாவிகளைத் தான் , Kingdom of Castile-ன் (கிறிஸ்தவ) அரசன் ஃபெர்னான்டோவிடம் ஒப்படைக்கச் செல்கிறார் அவர்.

இந்த நிகழ்வு கடந்த 533 ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டும் ஸ்பெயின் நாட்டின் பெரும்பாலான நகரங்களில் பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்தலுஸ் என்ற முஸ்லிம் ஸ்பெயின் (முஸ்லிம்களிடமிருந்து கிறிஸ்தவர்களிடம் கைமாறி) வீழ்ந்ததை  ஸ்பெயின் மக்கள் ஆண்டுதோறும் ஜனவரி இரண்டாம் தேதி கொண்டாடி வருகின்றனர்.
#Imam_Ilyas_Riyaji #ilyas_riyaji #الاندلس #غرناطة

Monday, 6 January 2025

மதுரை சிக்கந்தர் தர்ஹா பிரச்சினையில் தமுமுக மேற்கொண்ட நடவடிக்கைகள்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மதுரை சிக்கந்தர் தர்ஹா பிரச்சினையில் தமுமுக மேற்கொண்ட நடவடிக்கைகள்.

மதுரை திருப்பரங்குன்றம் சிக்கந்தர் அவுலியா பாதுஷா தர்காவில் ராஜபாளையத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் ஒரு ஆட்டுக்கடாவுடன் கந்தூரி ஆக்குவதற்காக 
25/12/2024 அன்று காலை 6 மணிக்கு மலையில் மேல் உள்ள தர்காவிற்கு செல்ல வந்துள்ளனர். வந்த மக்களையும் ஆட்டுக்குட்டியையும் அந்த குடும்பத்தினரையும்
மதுரை திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் மதுரை வீரன் அவர்கள் தடுத்து நிறுத்தி மேலே பலி கொடுக்கக் கூடாது மேலும் அசைவம் சமைக்க கூடாது என்று தடை உத்தரவு போட்டு பிரச்சனை செய்துள்ளார்.  (எந்த விதமான அரசு ஆணையோ நீதிமன்ற உத்தரவு இல்லாமல் ) அவர் தன்னிச்சையாக அறிவித்து பிரச்சினை செய்திருக்கிறார்
அதற்கு பின்பு பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் தகவல் தெரிவித்து  உள்ளூர் மக்களும், இடதுசாரி தோழர்கள் சில நபர்கள் சேர்ந்து ஒரு சிறு குழுவாக போராட்டம் செய்துள்ளார்கள் அவர்களை கைது செய்து மாலை விடுவித்து விட்டார்கள். 

காலங்காலமாக நடைப்பெறும் இந்த சடங்கை காவல்துறை திடீரென தடுத்து நிறுத்தியுள்ளது. இந்த பிரச்சினை குறித்து தர்ஹா நிர்வாகம் தமுமுக மாவட்ட நிர்வாகிகளை தொடர்புக்கொண்டு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து களத்திற்கு சென்று பார்வையிட்ட நிர்வாகிகள் தமுமுக மாநில நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்துவிட்டு வந்தனர். 

தர்ஹா பிரச்சினை குறித்து விவாதிக்க பள்ளிவாசல் நிர்வாகம் அனைத்து கட்சி கூட்டத்தை 26/12/2024 அன்று மாலை 7 மணிக்கு கூட்டினர். அந்த கூட்டத்தில் மமக மாநில அமைப்புச்செயலாளர் காதர்மெய்தீன் தலைமையில் தமுமுக மாவட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டு தர்ஹா பிரச்சினை குறித்து தமுமுக மாநிலத் தலைமையின் கவனத்திற்கு எடுத்து சென்றருப்பதாகவும், வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் தனி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படும் என்றும் உறுதியளித்தனர். மேலும் பள்ளிவாசல் நிர்வாகம் எடுக்கும் முயற்சிகளில் உறுதுணையாக இருப்போம் என்றும் பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் தெரிவித்தனர். 

அதைத்தொடர்ந்து 31/12/2024 அன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுக்கும் நிகழ்விலும் தமுமுகவின் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். 

மதுரை திருப்பரங்குன்றம் சிக்கந்தர் மலை தர்கா பள்ளிவாசல் மலைக்குச் செல்லவும் நேர்த்திக்கடன் நிறைவேற்றவும் தடை விதிக்கும் காவல்துறை மற்றும் வருவாய் கோட்டாட்சியர் கண்டித்து 05/01/2025 அன்று நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் காதர் மைதீன் மதுரை தெற்கு மாவட்ட தலைவர் ஷேக் இப்ராகிம் மதுரை வடக்கு மாவட்ட தலைவர் சீனி அகமது மற்றும் தெற்கு வடக்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் கைதாயினர். காவல்துறைக்கும் போராடிய மக்களுக்கும் இடையே நடைப்பெற்ற தள்ளுமுள்ளுவில் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

கைது செய்து மண்டபத்தில் அடைக்கப்பட்ட மக்கள் அனைவரும் எங்கள் உரிமையை காக்க போராடிய எங்களை காவல்துறை தாக்கியது கடும் கண்டனத்திற்குரியது என்றும் தாக்கிய காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்வரை விடுதலையாவதில்லையென தெரிவித்தனர். காவல்துறை வேறு வழியின்றி விடுதலை செய்துவிட்டதாக அறிவித்துவிட்டு மண்டபத்தைவிட்டு வெளியேறிவிட்டனர். 

06/01/2025 இன்று மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது அவர்கள் மதுரை சிக்கந்தர் தர்ஹா  பிரச்சினை குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்க தனி கவன ஈர்ப்புத் தீர்மானத்தை சபாநாயகரிடம் முன்மொழிந்துள்ளார். 

06/05/2025 இன்று தமுமுகவின் மதுரை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது. மதுரை சிக்கந்தர் மலை தர்ஹா மற்றும் பள்ளிவாசல் வழிபாட்டு உரிமைக்காக போராட்டம் செய்த ஜமாத்தார்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், இஸ்லாமிய பெண்கள், குழந்தைகள் மீது கடும் தாக்குதல் நடத்தி அத்துமீறிய காவல்துறையை கண்டித்து மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தை 10/01/2025 அன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதுபோன்ற சமுதாய கொந்தளிப்பு பிரச்சினைகளை அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து போராடுவதே உரிமையை மீட்டு தரும் என்பதை நம் சமுதாயத்தை சேர்ந்த சிலர் புரிந்துக்கொள்வது அவசியம்.

பெண்கள் முகத்தை மறைக்க ஆதாரம் இருக்கிறதே?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்

பெண்கள் முகத்தை மறைக்க ஆதாரம் இருக்கிறதே?

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தங்கள் மீது தொங்கவிடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.” அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் (33 : 59)

மேற்கண்ட வசனத்தில் முக்காடுகள் என்று மொழி பெயர்த்துள்ள இடத்தில் ஜலாபீப் என்ற பன்மைச் சொல் இடம் பெற்றுள்ளது. ஜில்பாப் என்பது இதன் ஒருமையாகும்.

இச்சொல்லுக்கு போர்வை விசாலமான துணி கீழாடை நீளங்கி எனப் பல பொருள் உள்ளது.

இந்த வசனத்தில் பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்று கூறப்படவில்லை. மாறாக பெண்கள் தங்கள் உடலை மறைக்க வேண்டும் என்று பொதுவாகத் தான் கூறப்படுகின்றது.

பெண்கள் முகம் மணிக்கட்டு வரை முன் கைப்பகுதி மற்றும் பாதம் ஆகிய குறிப்பிட்ட பாகங்களை வெளிப்படுத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதியளித்துள்ளார்கள். எனவே இந்த பாகங்கள் உடலை மறைக்க வேண்டும் என மேற்கண்ட வசனத்தில் கூறப்பட்ட சட்டத்திலிருந்து விதிவிலக்கலானவை.

இது தொடர்பாக ஏற்கனவே விளக்கம் தரப்பட்டுள்ளது.

அடுத்து ஆயிஷா (ரலி) அவர்கள் நபித்தோழர்களிடமிருந்து தனது முகத்தை மறைத்தார்கள் என்பதால் பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்ற வாதம் தவறனாது. ஏனெனில் இது நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்களுக்கு மட்டுமே உரிய ஹிஜாபின் சட்டமாகும்.

எனவே, நபியின் மனைவிமார்களைத் தவிர, மற்ற பெண்கள் முகத்தை மறைப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை. 

இதற்கு முன்னால், முகத்தை மறைப்பதற்கும் மறைக்காமல் இருப்பதற்கும், மறைப்பதற்கும் அனுமதி உண்டு என்று கூறியிருந்தோம்.  அதாவது, ஒரு பெண் தனது சுயவிருப்பத்தின் அடிப்படையில் முகத்தை மறைத்தால் அது குற்றமில்லை. அதே போன்று முகத்தை அவள் வெளிப்படுத்தினாலும் குற்றமில்லை. முகத்தை மறைப்பது கட்டாயமில்லை என்று கூறியிருந்தோம்.  பிறகு இதனை மறு ஆய்வு செய்த போது, இந்த வாதம் தவறு என்று விளங்கிய காரணத்தினால், நபியின் மனைவிமார்களைத் தவிர, மற்ற பெண்கள் முகத்தை மறைப்பதற்கு இஸ்லாத்தில் அறவே அனுமதியில்லை என்பதே நமது தற்போதைய இறுதி நிலைப்பாடு என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

சுயநலம் உள்ள மனிதன் புறக்கனிக்கப் படுவான். பொதுநலம் உள்ளவன் போற்றப் படுவான்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

ஒரு பணக்கார அம்மா துணி கடைக்குப் போய்_கடைக்காரரிடம் எனது மகனுக்கு திருமணம்' ஆகவே எனது வீட்டில் வேலைசெய்யும் பணிப்பெண்ணிற்கு கொடுக்க மிக குறைந்த விலையில் ஒரு சேலை கொடுங்கள் என்று வாங்கிச் செல்கிறார்..!
சற்று நேரத்திற்கு பிறகு அதே கடைக்கு அந்த வீட்டு பணிப்பெண்
வருகிறார் கடைக்காரரிடம் என் முதலாலியின் பையனுக்கு கல்யாணம் அதனால் எனது முதலாளி அம்மாவுக்கு பரிசாக கொடுப்பதற்கு உங்க கடையில் மிக உயர்ந்த விலையுடைய சேலைகளை எடுத்துப்போடுங்கள் என்று பார்த்து மிக உயர்ந்த விலையுடைய ஒரு சேலையை வாங்கிச் செல்கிறார்..!
இதில் யார்_பணக்காரர்...?!!
3 'ஸ்டார் ஹோட்டலில் தங்கி இருக்கும் சுற்றுலாவிற்கு வந்த ஒரு பணக்காரவீ்ட்டு 6 மாத குழந்தையின் அம்மா,
ஹோட்டல் மேலாளரிடம் குழந்தைக்கு ஒரு கப் பால் வேண்டும் என்று கேட்கிறார்,
அதற்கு அந்த மேலாளர் பாலுக்கு நீங்கள் தணியாக பணம் செலுத்த வேண்டும் என்று கூற ,
பணக்கார அம்மாவும் பணத்தை செலுத்தி பாலை வாங்கி குழந்தைக்கு ஊட்டுகிறார்..!
ஒருநாள் சுற்றிப் பார்த்தவிட்டு ஹோட்டலுக்கு திரும்பும் வழியில் குழந்தை பசியால் அழுததால் ,
ரோட்டின் ஓரத்தில் இருந்த டீ கடையில் ஒரு கப் பால் வாங்கி குழந்தைக்கு ஊட்டினார் பிறகு பால் எவ்வளவு
என்று டீ கடைக்காரரிடம் கேட்க,
டீ கடைக்கார பெரியவர் குழந்தைக்கு கொடுக்கும் பாலுக்கு நாங்கள் காசு வாங்குவதில்லை எனறு சிரித்த முகத்தோடு பதில் அளித்தார்...!!..
பணம் உள்ளவர் எல்லாம் பணக்காரர் அல்ல ......!!!
அதை கொடுக்க நினைப்பனே உண்மையான பணக்காரன்....!!!!
இந்த உலகத்தில் நிறைய நல்ல மனிதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் ,.....
நம் கண்களுக்கு தென்படவில்லை என்றாலும் பரவாயில்லை நாம் அவர்களில் ஒருவராக இருக்க முயற்சி செய்வோம்.....!!!!
தொடக்கம் நாமாக இருப்போமே...!!!
பொதுநலம் என்பது புல்லாங்குழல் போன்றது. சுயநலம் என்பது கால்பந்து போன்றது. இவை இரண்டுமே காற்றால் இயங்குகின்றன.ஆனால் ஒன்று முத்தமிடப்படுகின்றது. மற்றொன்று உதைக்கப் படுகின்றது. தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால்பந்து உதை படுகிறது. ஆனால் தான் வாங்கிய காற்றை இசையாக புல்லாங்குழல் தருவதால் அது முத்தமிடப் படுகிறது.
சுயநலம் உள்ள மனிதன் புறக்கனிக்கப் படுவான். பொதுநலம் உள்ளவன் போற்றப் படுவான்

ஹராத் முதல் அல்பத்தா வரை 246 கிலோ மீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலை


போட்டோவில் காண்பது ஆஸ்திரேலியாவில் உள்ள வளைவே இல்லாத மிகவும் நேரான மிகவும் நீளமான சாலையாகும். இது பல்லடோனியாவிற்கும்( Balladonia) கைகுனாவிற்கும் ( Caiguna) இடையே 145.6 கிலோமீட்டர் ( 90 மைல்கள்) நேராக நீண்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் இந்த சாலையை தவிர ஹராத் முதல் அல்பத்தா வரை 246 கிலோ மீட்டர் நீளமுள்ள உலகின் மிகவும் நீளமான மிகவும் நேரான தடையில்லாத நெடுஞ்சாலையாக சௌதி அரேபியா கின்னஸ் உலகச் சாதனைப் படைத்துள்ளது.