Saturday 21 September 2019

நாட்டை நாசம் செய்ய..! பங்காற்றிய ஊடகங்கள்..!

நாட்டை நாசம் செய்ய..! பங்காற்றிய ஊடகங்கள்..!

*அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமா சொல்லியது..

*"எனக்கு பொருளாதாரத்தில் சந்தேகம் ஏற்பட்டால் நான் உடனே கேட்பது,
Dr Singh இடம் தான்.."*

*தவறாக செயல்பட்ட ஊடகங்களால்..ஒரு நல்ல பிரதமரை தோற்கடித்து விட்டதே..இந்தியா..!!!*

*2009களில்..*
திடீரென ஜெர்மனி, ஸ்பெயின், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இன்னும் பல மேலை நாடுகளின் வங்கிகள் எல்லாம் திவாலாகியது..

சீனாவில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டது.

உலகமே பொருளாதார தேக்கநிலையால் ஸ்தம்பித்து நின்றது.

உலகம் முழுதும் சுமார் 8 கோடி பேர் வேலை இழந்தனர்.

உலகின் பல துறைமுகங்கள் எரிவாயு தட்டுப்பாட்டை சந்தித்து செய்வதறியாது விழி பிதுங்கி நின்றன.

சரக்கு கப்பல்கள் நங்கூரம் போட்டு மாதக்கணக்கில் துறைமுகத்தை விட்டு அகலாமல் நின்றன.

கச்சா எண்ணெய் விலை $160 டாலர்களை தொட்டு கொடூர முகம் கொண்டு பயமுறுத்தியது..

பல நாடுகளில் அனல்மின் நிலையங்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இதற்கிடையில் போர் பதற்றங்கள் வேறு..

ஆனால்

அப்போது.. இந்தியா மட்டும் சீராக சென்றுகொண்டிருந்தது..!*

ஒரு கணம் அமெரிக்கா, ரஷ்யாவின் பார்வைகள் இந்தியாவின் பதற்றமில்லா நிலையை கண்டு ஆச்சரியத்தில் மூழ்கின.

இந்தியாவில் ஒரே ஒரு வங்கி கூட திவாலாகவில்லை.

வளர்ச்சி மற்றும் உற்பத்தி விகிதம் வழக்கம்போல சராசரி அளவில் உயர்ந்தது.

மேலை நாடுகளுக்கு சேவை செய்யும் IT நிறுவனங்கள் மட்டும் அமெரிக்காவிடம் இருந்து ப்ரொஜெக்ட் வராததால் தங்கள் ஊழியர்களை Layoff செய்தது.

வேறு யாரும் வேலை இழக்கவில்லை.

உணவு தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. சிறு நிறுவனங்கள் கூட இந்தியாவில் மூடப்படவில்ல..!

இதற்கிடையில் ஊரக மேம்பாட்டுக்காக வாஜ்பாய் ஆட்சியின்..

உலக வங்கியில் வாங்கிய கடனும் அடைக்கப்படது.

இது அத்தனையையும் சாத்தியமாக்கிய அந்த மாமேதை இந்தியப் பிரதமரை, மூன்று ஐரோப்பிய நாடுகளின் பிரதமர்கள் வந்து சந்தித்து நெருக்கடி நிலையை சமாளிக்க ஆலோசனைகள் கேட்டார்கள்..!

பொருளாதார தேக்கநிலையை சமாளிக்க IMF நடத்திய கலந்தாய்வில் சிறப்பு விருந்தினராக இந்திய பிரதமர் அழைக்கப்பட்டார்.

ஆம்

உலகமே வியந்த அந்த தன்னிகரற்ற.. *பொருளாதார மாமேதை*

*Drமன்மோகன்சிங்..*

அப்படிப்பட்ட மாமேதையை தூக்கி எறிந்து விட்டு வளர்ச்சி என்ற பெயரில் மதவெறிக் கும்பல்களிடம் ஆட்சியைப் பறி கொடுத்துவிட்டு..

இன்று

ஒட்டுமொத்தமாக திவாலாகிக் கொண்டிருக்கின்றோம்..

வளர்ச்சி என்றப் பெயரைச் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள்....

இந்தியாவை வளரும் நாடுகளின் பட்டியலிருந்தே தூக்க வைத்து விட்டு..

பண மதிப்பு நீக்கம் மூலம் ஓட்டு மொத்த இந்திய மக்களையும் தன் நாட்டிலேயே அகதியாய் அலையவிட்டது தான் இன்றைக்கு ஆட்சியிலிருப்பவர்களின் சாதனை.

No comments:

Post a Comment