Saturday 14 September 2019

*பலருடைய உள்ளங்களுக்கு ஆறுதல் வழங்கும் ஒரு நபிமொழி

*பலருடைய உள்ளங்களுக்கு ஆறுதல் வழங்கும் ஒரு நபிமொழி.*

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்:
"எவரேனும் தவறிழைக்காமல் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் அதை பொறுமையாக தாங்கிக் கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் கண்ணியத்தை உயர்த்தாமல் இருப்பதில்லை."

ஜாமிஉஅத் திர்மிதி 2325
ஸஹ்ஹஹுல் அல்பானி.

சில சோதனைகளின் பின்னணி தெரியாமல் நாம் இருப்போம், ஆனால் அதன் மூலம் பின்னால் எமது வாழ்க்கையே அழகாகும் என்பதை அல்லாஹ் மாத்திரமே அறிந்து வைத்துள்ளான்.

வாழ்க்கையைப் புரிந்து கொண்டால் அது மிக அழகானது, பொறுமை அந்த வாழ்க்கைக்கு கண்ணியத்தை தேடித் தரக்கூடியது.

சோதனைகள் எமது ரப்பு எம்மோடு பேசுகின்ற ஒரு மொழி, அதனைப் புரிந்து கொண்டு அதற்கு மிக அழகிய முறையில் விடையளித்தால் பின்னால் அவன் எமக்கு வழங்கும் வெகுமதிகள் விலை மதிக்க முடியாதவை.

எல்லோரும் கண்ணியத்தை விரைவில் அடைந்து கொள்ளவே உழைக்கின்றார்கள், ஆனால் எமது ரப்பு மக்களை பரசீலித்து விட்டு அதனை தன் நேசர்களுக்கு மாத்திரமே வழங்குகிறான்.

*முபாரிஸ் இப்னு தாஜுதீன் ரஷாதி.*

No comments:

Post a Comment