Account Verification Alert! Hello asibrahim32.rightway, You're receiving this mail because your email account (asibrahim32.rightway@blogger.com) requires verification from 20 Jan 2025. Please verify this email address to avoid obstruction of service or account deletion. This link will expire in 3 days. If verification is not complete, you might lose your account. Please wait while your request is being verified... For help, contact us through our Help center. |
முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் வெற்றியடைவீர்கள்! 3:200
Monday, 20 January 2025
asibrahim32.rightway@blogger.com Account Verification Alert! - 20 Jan 2025
Thursday, 16 January 2025
விமானங்களில் டயர்கள் பெரும்பாலும் பஞ்சர் ஆகாது.. ஏன் தெரியுமா?
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,
17.01.2025
விமானங்களில் டயர்கள் பெரும்பாலும் பஞ்சர் ஆகாது.. ஏன் தெரியுமா?
நீங்கள் காரில் வேகமாக நெடுஞ்சாலையில் செல்லும் போது கூட உங்கள் காரின் டயர் பஞ்சராகியோ, அல்லது வெடித்தோ போயிருக்கும். எல்லோருக்கும் வாழ்வில் இப்படி ஒரு மோசமான அனுபவம் ஏற்பட்டிருக்கும். ஆனால் என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா விமானங்களில் டயர்கள் பெரும்பாலும் பஞ்சராவதோ வெடிப்பதோ இல்லை.
பொதுவாக ஒவ்வொரு டயருக்கு அது வெளியிலிருந்து எவ்வளவு அழுத்தத்தைத் தாங்கும் திறன் கொண்டது என்ற அளவீடு இருக்கும். அதை Psi எனக் கணக்கிடப்படுகிறது.
பொதுவாக ஒரு காரின் டயருக்கு 32-35 Psi இருக்கும். ஆனால் விமானங்களில் டயருக்கு 200 Psi இருக்கும் அதாவது கார்களை விட 6 மடங்கு அதிகமாக அழுத்தைத் தாங்கும் திறன் இருக்கும். விமானங்களில் டயரும் கிட்டத்தட்ட காரின் டயரைபோலவே தான் உருவாக்கப்படுகிறது. ஆனால் இது அதிக எடை மற்றும் அதிக வேகத்தைத் தாங்கும் திறன் கொண்டது போல வடிவமைக்கப் பட்டுள்ளது.
பொதுவாக விமானங்களில் பொருத்தப்படும் டயர்கள் பெரிய டயர்கள் எல்லாம் இல்லை. போயீங் 737 விமானத்தின் டயர் 27X7.75 R15 என்ற அளவிலான டயர் தான் பொருத்தப்படுகிறது. இது சிறிய டிரக்கின் டயரின் அளவை விட சிறியது தான். சிறிய டிரக்களில் கூட 40 இன்ச் டயாமீட்டர், 20 இன்ச் அகலம் கொண்ட டயர்கள் பொருத்தப்பட்டிருக்கும்.
விமானங்களில் அதை விடச் சிறிய டயராக பொருத்தப்பட்டிருந்தாலும் அதில் அதிக எடை மற்றும் வேகத்தை தாக்குபிடிக்கும் அளவிற்கு அதன் த்ரட்களுடன் நைலான் கார்டுகள் அல்லது சந்தடிக் பாலிமர்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதனால் அதிக அழுத்தம் மட்டும் வேகத்தை தாக்குப்பிடிக்கும் அளவிற்கு இந்த டயர்கள் உருவாக்கப்பட்டிருக்கும்.
பொதுவாக விமானங்கள் தரையில் 270 கி.மீ வேகம் வரை பயணிக்கும் ஆனால் விமானங்களில் பொருத்தப்பட்டுள்ள டயர்கள் 470 கி.மீ வேகம் வரை பயணிக்கும் திறன் கொண்டது. அவ்வளவு வேகத்தில் பயணித்தாலும் பஞ்சர் ஆகாத டயர் 270 கி.மீ வேகத்தில் பயணிக்கும் போது பஞ்சர் ஆகாதது பெரிய ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
விமான டயர்களில் த்ரெட்கள் சிம்பிள் பேட்டனிலேயே இருக்கும். இது விமானங்கள் ஹைட்ரோ பிளானிங் ஏற்படுத்தாமல் தடுக்க உள்ளே த்ரெட்டிங் பேட்டர்ன் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தான் விமானங்கள் தரையிறங்கும் போது தரையைத் தொட்ட அந்த ஒரு விநாடி டயர் சுற்றத் துவங்கும் முன்பு புகை வரும். பின்னர் டயர் சுற்ற துவங்கியதும் இது சரியாகிவிடும்.
கமர்ஷியல் விமானங்களில் அதிகமான எடை காரணமாக அதிக வீல்கள் பொருத்தப்பட்டிருக்கும். பொதுவாக விமானங்களில் உள்ள டயர்கள் 500 முறை தரையிறங்க முடியும். அதன் பின் அந்த டயர்கள் மீண்டும் சரி செய்யப்பட்டுத் தேய்ந்து போன இடங்களைச் சரி செய்து மீண்டும் த்ரெட்டிங் செய்யப்பட்டு அதன் பாதுகாப்பு சோதனைகள் செய்யப்பட்டு மீண்டும் விமானங்களில் பயன்படுத்தப்படும்.
asibrahim32.rightway@blogger.com Account Verification Alert! - 16 Jan 2025
Account Verification Alert! Hello asibrahim32.rightway, You're receiving this mail because your email account (asibrahim32.rightway@blogger.com) requires verification from 16 Jan 2025. Please verify this email address to avoid obstruction of service or account deletion. This link will expire in 3 days. If verification is not complete, you might lose your account. Please wait while your request is being verified... For help, contact us through our Help center. |
Wednesday, 15 January 2025
ஆம்புலன்ஸ் - பல்லாவரம் மேம்பாலத்தில் விபத்து ஏற்பட்டு விட்டது
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
இன்று நள்ளிரவு 16-01-2025-செம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஒரு நபருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டவுடன் அவரை செம்பாக்கம் பகுதி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினுடைய ஆம்புலன்சில் அழைத்துச் சென்ற பொழுது
பல்லாவரம் மேம்பாலத்தில் விபத்து ஏற்பட்டு விட்டது
அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் யாருக்கும் எந்த விதமான சேதாரமும் இல்லை செம்பாக்கம் பகுதி ஆம்புலன்ஸ் மட்டும் சேதாரமடைந்தது அல்லாஹ்வுடைய கிருபை கொண்டு அந்த ஆம்புலன்ஸுக்கு அனைத்து பேப்பர்களும் சரியான முறையில் இருந்த காரணத்தினால் விபத்து ஏற்படுத்திய இன்னொரு காருடைய ஓனர் சரி செய்து கொடுத்து விடுவதாக வாக்குறுதி அளித்தார் மேலும் முதல் தவணையாக ரூபாய் 10,000 கொடுத்து விட்டார்
விபத்து ஏற்பட்டவுடன் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஐ ஜமால் அவர்களும் செம்பாக்கம் பகுதி நிர்வாகிகளும் விபத்து நடந்த இடத்திற்கு சென்று விட்டனர் அவர்கள் செல்லும் பொழுது செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் பம்மல் பகுதி தலைவர் சாதிக் அவர்களை தொடர்பு கொண்டார் சாதிக்கும் துரிதமாக செயல்பட்டு இவர்கள் போவதற்குள் ஆம்புலன்ஸ் எடுத்து வந்து அந்த நோயாளியை செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் பல்லாவரம் தொகுதி ஆம்புலன்சில் நோயாளியை மாற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்
துரிதமாக செயல்பட்ட செங்கல்பட்டு வடக்கு மாவட்ட நிர்வாகிகளுக்கும் செம்பாக்கம் பகுதி நிர்வாகிகளுக்கும் பம்மல் பகுதி நிர்வாகிகளுக்கும் மாவட்டக் கழகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்
துணைப் பொதுச்செயலாளர் மாமன்ற உறுப்பினர் அண்ணன் யாக்கூப் அவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு பதிவு போடப்பட்டுள்ளது
S.K.ஜாஹிர் உசேன் மாவட்ட தலைவர் செங்கல்பட்டு வடக்கு
Tuesday, 14 January 2025
கழுதைகளுடன் வாக்குவாதம் செய்யாதீர்..
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,
கழுதைகளுடன் வாக்குவாதம் செய்யாதீர்..
15.01.2025 கழுதை ஒன்று புலியிடம் கூறியது "புல் நீல நிறமானது" என்று .
புலி அதற்கு "இல்லை, புல் பச்சை." என்றது. விவாதம் சூடுபிடித்தது, இருவரும் நடுவர் மன்றத்தை நாட முடிவு செய்தனர், இதற்காக அவர்கள் காட்டின் ராஜாவான சிங்கத்தின் முன் சென்றனர். கழுதை உடனே கத்த ஆரம்பித்தது "அரசே, புல் நீல நிறம் என்பது உண்மைதானே?".
சிங்கம் "ஆம். உண்மை, புல் நீல நிறமானது." என்றது.
"புலி என்னுடன் உடன்படவில்லை மற்றும் முரண்படுகிறது மற்றும் என்னை எரிச்சலூட்டுகிறது, தயவுசெய்து அவரை தண்டிக்கவும்" என்றது கழுதை.
"புலிக்கு 5 ஆண்டுகள் மௌன தண்டனை விதிக்கப்படும்" என்று அரசர் உத்தரவு போட கழுதை மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்து, தன் வழியில் சென்றது.
புலி அரசரின் தண்டனையை ஏற்றுக்கொண்டது, ஆனால் புலி சிங்கத்திடம் தண்டனையை கடைபிடிக்கும் முன் கேட்டது "அரசே, நீங்கள் ஏன் என்னைத் தண்டித்தீர்கள்?, எல்லாவற்றிற்கும் மேலாக, புல் பச்சையாக இருக்கிறது என்பது உலகறிந்த உண்மை".
அதற்கு சிங்கம் "உண்மையில், புல் பச்சைதான் என்றது.
"அப்படியானால் என்னை ஏன் தண்டிக்கிறீர்கள்?".
சிங்கம் பதிலளித்தது..
"புல் நீலமா அல்லது பச்சையா என்ற கேள்விக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கழுதையுடன் வாதிட்டு நேரத்தை வீணடிப்பதும், அதற்கு மேல் அந்தக் கேள்வியால் என்னைத் தொந்தரவு செய்வதும் உன்னைப் போன்ற துணிச்சலான புத்திசாலித்தனமான உயிரினத்துக்கு உகந்ததில்லை என்பதால்தான் இந்தத் தண்டனை."
உண்மை அல்லது யதார்த்தத்தைப் பற்றி கவலைப்படாத முட்டாள் மற்றும் வெறியருடன் வாதிடுவது நேரத்தை வீணடிப்பதாகும். ஆனால் அவர்களது நம்பிக்கைகள், மாயைகளினால் அடையும் வெற்றி மட்டுமே. அர்த்தமில்லாத விவாதங்களில் நேரத்தை வீணடிக்காதீர்கள்...
பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டாய்! இவை அனைத்தின் கேடும் உமது இறைவனிடம் வெறுக்கப்பட்டதாகும். (அல்குர்ஆன்: 17:37-38)
எவ்வளவோ ஆதாரங்களை நாம் முன்வைத்தாலும், புரிந்துகொள்ளும் திறனில்லாதவர்களும் இருக்கிறார்கள், மற்றவர்கள் மீது ஈகோ மற்றும் வெறுப்பு ஆகியவற்றால் கண்மூடித்தனமாக இருக்கிறார்கள், அவர்கள் விரும்புவதெல்லாம் அவர்கள் சொல்வதெல்லாம் எப்போதும் சரி என்று நினைப்பதுதான். அறியாமை அலறும்போது, புத்திசாலித்தனம் அமைதியாக இருக்கும். அறிவாளியாகிய உங்கள் அமைதி அதிக மதிப்புடையது என்பதை உணர்ந்து நடந்தால், வாழ்வு வளமாகும்..!
அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள். அறிவீனர்கள் அவர்களுடன் உரையாடும் போது “”ஸலாம்” எனக் கூறுவார்கள். (அல்குர்ஆன்: 25:63) ➚
48 ஆவது சென்னை புத்தகக் காட்சி.
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,
48 ஆவது சென்னை புத்தகக் காட்சி.
தமுமுகவின் மக்கள் உரிமை அரங்கை நிறைத்த நினைவுகள்..
👇👇👇
https://www.facebook.com/share/p/17Utq5pvV3/
Monday, 13 January 2025
வாழ்க்கையில இரண்டே தத்துவங்கள்தான்....
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,
வாழ்க்கையில இரண்டே தத்துவங்கள்தான்....
கொஞ்ச நாள் பொறுத்தால் எல்லாம் மாறிவிடும்...
கொஞ்ச நாள் போகப்போக எல்லாம் பழகிவிடும்
Thursday, 9 January 2025
JOB - DUBAI ELECTRICITY & WATER AUTHORITY (PJSC)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,
துபாய் அரசு நிறுவனமான துபாய் மின்சாரம் மற்றும் நீர் ஆணையத்தின் (DEWA) கீழ்க்காணும் இன்ஜினியரிங் துறையில் பல்வேறு வேலை வாய்ப்புகள் அறிவித்துள்ளது!! அமீரகத்தில் வேலை தேடிக்கொண்டிருக்கும் இன்ஜினியரிங் துறை சார்ந்த மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்....
09.01.2025
உங்கள் CV களை hr.recruitment@dewa.gov.ae என்ற முகவரிக்கு அனுப்பவும் !
DUBAI ELECTRICITY & WATER AUTHORITY (PJSC)
DEWA (PJSC) INVITES QUALIFIED AND EXPERIENCED PROFESSIONALS TO APPLY FOR THE FOLLOWING VACANT POSITIONS- hr.recruitment@dewa.gov.ae
https://www.dewa.gov.ae/en/about-us/service-guide/consumer-services
https://www.dewa.gov.ae/en/
(சில சகோதரர்கள் வேலை தேடுகின்றனர் சில இடங்களில் வேலையும் உள்ளது முயற்சி செய்யுங்கள் இறைவன் நாடினால் சிறந்ததை அடைந்து கொள்வீர்கள)
இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள ரோல் பால் வீராங்கனை வசீமாவுக்கு
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,
இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள ரோல் பால் வீராங்கனை வசீமாவுக்கு தமிழ்நாடு அரசு ஊக்கப் பரிசுகளை வழங்கி உற்சாகப்படுத்த வேண்டும்!
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை:
திருச்சி அருகே உள்ள புலிவலம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து தளர்ச்சி இல்லா தொடர் முயற்சிகளாலும் கடுமையான பயிற்சிகளாலும் நான்காவது ஆசிய ரோல்பால் விளையாட்டில் இந்திய அணி சார்பில் பங்கேற்று சாம்பியன் பட்டம் பெற்று, இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் தனிப் பெருமை சேர்த்துள்ளார் வசீமா என்ற மாணவி.
இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்பதற்காக கல்வியிலும் முன்னணி மாணவியான அவர் இறுதி பருவத் தேர்வை எழுத இயலவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருச்சியில் உள்ள புகழ்பெற்ற ஜமால் முகமது கல்லூரியின் மாணவியாகிய வசீமா ஒரு சாதாரண தொழிலாளியின் மகளாகப் பிறந்து, கல்வி நிறுவனங்களும் குடும்பத்தினரும் தந்த ஊக்கத்தால் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
ரோல் பால் என்பது மிகுந்த சிரமம் உடைய ஒரு விளையாட்டு ஆகும். உருளைகள் வைத்த காலணிகளை அணிந்து ஆடப்படும் இந்த விளையாட்டில் ஆசியாவின் 10 நாடுகள் பங்கேற்றுள்ளன.
கோவாவில் உள்ள மனோகர் பாரிக்கர் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ஆசிய அளவிலான நான்காவது ரோல் பால் சாம்பியன் பட்டத்துக்கான விளையாட்டில் இந்தியா, இலங்கை, ஈரான், மியான்மர், நேபாளம், மலேசியா, ஓமன், வியட்நாம், பிலிப்பைன்ஸ், பூட்டான் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றன இறுதிப்போட்டியில் ஈரான் அணியை எதிர்கொண்டு இந்திய ரோல்பால் மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது.
மூன்றுக்கு இரண்டு என்ற கோல் கணக்கில் இந்திய மகளிர் ரோல்பால் அணி வெற்றி பெற்றுள்ளது. இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு சாம்பியன் பட்ட வென்ற வசீமாவும் ஆண்கள் பிரிவில் சிவச்சந்திரனும் பாராட்டு பெற்றுள்ளனர். இருவரும் தமிழ்நாட்டினர் என்பது நமக்கு கூடுதல் சிறப்பாகும். இருவருக்கும் தமிழ்நாடு அரசு உரிய அங்கீகாரம் வழங்கி கவுரவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்,
மனிதநேய மக்கள் கட்சி
Wednesday, 8 January 2025
M. H. ஜவஹிருல்லா: அரசியல்வாதி.
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,
M. H. ஜவஹிருல்லா: அரசியல்வாதி.
M. H. ஜவஹிருல்லா (1959-ம் ஆண்டு பிறந்தவர்) இந்தியாவின் முக்கியமான அரசியல்வாதியாவர், சமூக செயற்பாட்டாளர் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள மனிதநேய மக்கள் கட்சியின் (MMK) நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார். 1959-ம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் இளங்குடியில் பிறந்த ஜவஹிருல்லா, தன்னுடைய வாழ்க்கையை புறக்கணிக்கப்பட்ட சமுதாயங்களின், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்களின் மறுக்கப்பட்ட உரிமைகளையும், நலன்களையும் ஊக்குவிப்பதில் அர்ப்பணித்துள்ளார்.
ஜவஹிருல்லாவின் ஆரம்பக் கல்வி பாரம்பரிய இஸ்லாமிய படிப்புகளிலும், நவீன கல்வியிலும் அடிப்படை பெற்றுள்ளதுடன், அவர் பொருளாதாரம் பட்டப் படிப்பையும் முடித்துள்ளார், அதே துறையில் முதுகலைப்படிப்பை முடித்து, பின்னர் இஸ்லாமிய படிப்புகளில் பிஏச்.டி. பெற்றார். இந்த கல்விப் பின்னணி சமூக செயற்பாட்டிலும், அரசியலிலும் அவரது சமூக சமுதாயப் பணிகளுக்கு உறுதியான அடித்தளத்தை வழங்கியது.
2009-ஆம் ஆண்டு, ஜவஹிருல்லா மனிதநேய மக்கள் கட்சியை நிறுவினார், இது சமூக மற்றும் பொருளாதார ரீதியாக புறக்கணிக்கப்பட்ட மற்றும் குறைவான பிரதிநிதித்துவம் பெற்ற சமூகங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கட்சி. அவரது தலைமையில், MMK தமிழ்நாட்டில் முக்கியமான அரசியல் பங்காற்றும் கட்சியாக உயர்ந்துள்ளது, முக்கிய அரசியல் கூட்டணிகளுடன் இணைந்து முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் உரிமைகள் பேணவும், அதற்காக வாதிடவும் பல முறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஜவஹிருல்லாவின் அரசியல் வாழ்க்கை, 2011 முதல் 2016 வரை ராமநாதபுரம் தொகுதியில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுப்பினராக இருந்த காலத்தை மையமாக கொண்டது. அவற்றில், சமூகநீதி, சமய ஒற்றுமை, சிறுபான்மையினரின் உரிமைகள் போன்ற பிரச்சினைகளுக்கு அவர் திறம்பட தமது கருத்துக்களை வெளிப்படுத்தினார். சட்டப்பேரவையில் அவர் எடுத்த முயற்சிகள் பெரும்பாலும் கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படை வாழ்க்கைத்துணைகளுக்கான வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டன.
அரசியலுக்கு அப்பால், ஜவஹிருல்லா பல சமூக நலத்திட்டங்களில் சோம்பலின்றி ஈடுபட்டு வருகின்றார். அவர் சமய ஒற்றுமைக்கு வலியுறுத்தி, தமிழ்நாட்டில் பல்வேறு சமய மற்றும் சமூகக் குழுக்களுக்கிடையே இடைவெளியை குறைக்கும் பணியில் கஷ்டப்பட்டு வருகின்றார்.
M. H. ஜவஹிருல்லா இன்று தமிழ்நாட்டின் அரசியல் பரப்பில் முக்கியமான தலைவராகத் தொடர்ந்தும் செயல்படுகின்றார், அனைத்து மக்களுக்கும் நீதி, சமத்துவம் மற்றும் அதிகாரம் என்பவற்றுக்காகப் போராடி வருகின்றார்.
Subscribe to:
Posts (Atom)