Sunday 9 February 2014

Dinamalar - News

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

படிப்பைப் பாதியில் விட்ட, அல்லது மேல் படிப்பைத் தொடர இயலாத சகோதரர்களுக்கு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பு சகோதரர்களுக்கு,

படிப்பைப் பாதியில் விட்ட, அல்லது மேல் படிப்பைத் தொடர இயலாத சகோதரர்களுக்கு ஆலோசனை வழங்க தமிழகத்திலிருந்து முனைவர் உசைன் ஷரீப் அவர்கள் துபை வந்துள்ளார்கள். ஆலோசனை பெற விரும்புபவர்கள் 055-5840671 என்ற எ்ண்ணில் தொடர்பு கொள்ளவும்.

தற்போது அமீரகம் வந்துள்ள முனைவர் பாபு உசேன் ஷரீப் M.Com., M.Phil., PGDCA, Ph.D
அவர்கள் கடந்த 1995 லிருந்து சுமார் 19 வருடங்களாக கல்விப்பணி செய்து வருகிறார்கள்.

தற்போது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டுக்கோட்டை சென்டரின் அக்டமிக் கவுன்சிலராக (academic counselor ) செயல்பட்டு தமிழகம் தழுவிய அளவில் மேற்படிப்பு மேற்கொள்ளவிரும்புபவர்களுக்கு கவன்சிலிங் மற்றும் கல்விச் சேர்க்கை பணிகளை செய்து வருகிறார்கள்.

தொலைதூர மற்றும் தொடா்நிலைக் கல்விக்கான வி்ண்ணப்பம் அளித்தல் பூர்த்தி செய்தல், புத்தகங்களை அனுப்புதல் ஆகிய பணிகளை மேற்பார்வை செய்வது மட்டுமல்ல, மேற்படிப்பு படிக்க விரும்புபவர்களுக்கான விண்ணப்பம் அளித்தலில் தொடங்கி தேர்வு முடிந்து பட்டம் அல்லது சான்றிதழ் பெறவது வரை தொடர்ந்து கண்காணித்தும் ஒத்துழைப்புக்கொடுத்தும் வருகிறார்கள். அமீரகத்தில் இருப்பவர்கள் ஆலோசனை பெற 055-5840671 என்ற எ்ண்ணில் தொடர்பு கொள்ளவும்.


Regards

MOHAMED FAIZUR Rahman  / A.S.Ibrahim 

துர்கியில் மறைத்து வைக்கப்பட்ட பழைய பைபிள் கண்டெடுப்பு :

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


துர்கியில் மறைத்து வைக்கப்பட்ட பழைய பைபிள் கண்டெடுப்பு :

Pope Benedict XVI என்ற புதிய போப் ஆண்டவர் என்றளைக்கபடும் நபர் பழைய பைபளின் பிரதியை பார்க்கவேண்டும் என்று முற்பட்டார் அதன் மூலம் துர்கீயில் 12 ஆண்டுகாலம் மறைத்துவைக்கப்பட்டுள்ள 1500 ஆண்டுகாலம் பழமையான பிரதி கண்டெடுக்கப்பட்டுள்ளது 

அந்த பிரதியில் முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் என்ற நபியை பற்றியை தெளிவான முன் அறிவிப்பு இருப்பதாக அதனை புதிய ரக பைபிளில் மறைக்கப்ட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது

மேலும் அந்த பிரதி ஈசா அலைஹி வசல்லம் (ஏசு)வின் தாய்மொழியான அராமிக் மொழியில் தங்க எழுத்துகளால் பதியப்பட்டுள்ளது மாஷா அல்லாஹ்

அதற்க்கான ஆதாரம்

http://www.dailymail.co.uk/news/article-2105714/Secret-14million-Bible-Jesus-predicts-coming-Prophet-Muhammad-unearthed-Turkey.html

இன்னும் எத்தனை எத்தனை உண்மைகளை மறைத்துள்ளது இந்த ட்ரினிட்டி கொள்கையை பொருத்திய யூத குளம் ... கிறிஸ்தவ சகோதரர்களே இனியாவது ஏசு என்ற புனிதமிக்க இறைதூதரின் வாக்கை கேட்டு அதன் படி பின்பற்றுங்கள்

ஈசா அலைஹி வசல்லம் (jesus) அவரின் மார்க்கமான இஸ்லாத்தை பின்பற்ற முயற்ச்சியுங்கள்

ஹஸ்புனல்லாஹ் வ நிஃமல் வகீல்
தவகல்த்து ஆலல்லாஹ் லாஹவ்ல வளாகுவ்வத்த இல்லாபில்லா

நம்மை பாதுகாக்க அல்லாஹ் ஒருவனே போதுமானவன்

S. Abdul Gapoor with Ramnad M.L.A Dr.Jawahirullah

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

My dad S. Abdul Gapoor Paramakudi Melapallivasal President & Annai Ayeisha Trust president of Paramakudi with Ramnad M.L.A Dr.Jawahirullah after jummah pray. discus with Pamaramakudi Melapallivasal implement. 





er meeting at my house

Wednesday 5 February 2014

சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்.

1. அநாதையைப் பொறுப்பேற்றல்:
"அநாதையைப் பொறுப்பேற்றவரும், நானும் சுவர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் தனது ஆள்காட்டி விரலையும், நடு விரலையும் இணைத்துக் காட்டினார்கள்" (புஹாரி).

2. கடமையான தொழுகைக்குப் பின் ஆயத்துல் குர்ஸி ஓதி வருதல்: "எவர் கடமையான தொழுகைக்குப் பின் 'ஆயத்துல் குர்ஸியை'ஓதி வருவாரோ மரணத்தைத் தவிர அவருக்கு சுவர்க்கம் நுழைய எதுவும் தடையாக இருக்காது" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நஸாஈ)

ஆயத்துல் குர்ஸி:
"அல்லாஹூ லாஇலாஹ இல்லா ஹூவல் ஹய்யுல் கய்யூம் லா தஃஹுதுஹு ஸினத்துவ்வலா நவ்ம் லஹு மாபிஃஸ் ஸமாவாதி வமாபில் அர்லி மன்தல்லதி யஷ்பஃஉ இன்தஹு இல்லா பி இத்னிஹி யஃலமு மாபயின அய்தீஹிம் வமா கல்பஹும் வலா யுஹீதூன பிஷய்இம்மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாதி வல்அர்ல வலா யஊதுஹு ஹிப்லுஹுமா வஹுவல் அலிய்யுல் அழீம"(பகரா 2:255).

اللَّهُ لا إِلَهَ إِلا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لا تَأْخُذُهُ سِنَةٌ وَلا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالأرْضَ وَلا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்கு சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும் பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது, அவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று அவன் உயர்ந்தவன், மகத்துவமிக்கவன்.

3. வுழூச் செய்த பின் ஓதவேண்டியவை:
'உங்களில் ஒருவர் அழகான முறையில் வுழூச் செய்து பின்பு:
أشهد أن لا اله الاالله وحده لا شريك له واشهد أن محمدا عبده ورسوله
'அஷ்ஹது அல் லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு' (வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு எந்த இணையுமில்லை என்றும், முஹம்மத் அல்லாஹ்வின் அடியாரென்றும் தூதரென்றும் சான்று பகருகிறேன்) என்று சொல்வாரானால் அவருக்கு சுவர்க்கத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படுகின்றன. அவர் விரும்பிய வாயிலால் நுழைய முடியும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

4. அஸர் தொழுகையையும் சுபஹ் தொழுகையையும் தொடர்ச்சியாக தொழுது வருதல்: 'எவர் அஸர் தொழுகையையும், சுபஹ் தொழுகையையும் (பேணிப் பாதுகாத்து) தொழுது வருவாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புஹாரி, முஸ்லிம்)
5. ஐவேளை தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுது வருதல்: "எவர் தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுது வருவாரோ அல்லாஹ்விடத்தில் அவரை சுவர்க்கத்தில் நுழைவிக்கும் ஓர் உடன்படிக்கை இருக்கிறது" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், அபூதாவூத், நஸாஈ).

6. ஸலாத்தை பரப்புதல்: உங்களில் எவரும் நம்பிக்கை கொள்ளாத வரை, சுவர்க்கம் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காத வரை விசுவாசம் கொண்டவராகக் கருதப்பட மாட்டீர். உங்களுக்கு மத்தியில் நேசத்தை ஏற்படுத்தும் ஒரு காரியத்தை சொல்லித் தரட்டுமா? உங்களுக்கு மத்தியில் ஸலாத்தை அதிகமாகப் பரப்புங்கள்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

7. வுழூச் செய்த பின் இரண்டு ரக்அத் மனப்பூர்வமாகத் தொழுதல்: 'ஒரு முஸ்லிம் அழகான முறையில் வுழூச் செய்து உளப் பூர்வமாக இரண்டு ரக்அத் தொழுவாரானால் அவருக்கு சுவர்க்கம் கடமையாகி விட்டது' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

8. கல்வியைத் தேடல்: "எவர் கல்வியைத் தேடி வெளியேறிச் செல்கிறாரோ அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தின் பாதையை இலகு படுத்துகிறான்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(முஸ்லிம்)
9. பெற்றோருக்கு நன்மை செய்தல்:  அவனது மூக்கு மண்ணை கவ்வட்டும். இறைத் தூதரிடம் அவர் யார் எனக் கேட்கப்பட்டது? "பெற்றோர்களின் இருவரையோ அவர்களின் ஒருவரையோ முதிய வயதில் அடைந்து, பின்பு அவன் (அவர்கள் மூலம்) சுவர்க்கம் நுழையவில்லையானால் அவனேயாவான்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம்)
10. நாவையும், மர்மப் பகுதியையும் பேணுதல்:
"எவர் இரு தாடைகளுக்கும், தொடைகளுக்கும் மத்தியில் உள்ளதை பாதுகாக்கிறேன் என பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்கு நான் சுவர்க்கத்தை பொறுப்பேற்றுக் கொள்கிறேன்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(புஹாரி).

11. முஅத்தீனின் அழைப்புக்கு மறுமொழி பகருதல்:
"முஅத்தீன் (அழைப்பாளர்) பாங்கு சொல்லும் போது அதை செவிமடுப்பவர் அதே போன்று சொல்ல் வேண்டும், 'ஹய்யஅலஸ் ஸலாஹ், ஹய்யஅலல் பலாஹ்' என்று சொல்லும் போது மாத்திரம் 'லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹி' என்று சொல்ல வேண்டும், பின்பு முஅத்தீன் 'லா இலாஹ இல்லல்லாஹ்'என்று சொல்லும் போது யார் தூய உள்ளத்துடன் 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று பதில் சொல்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(முஸ்லிம்)
12. ஒரு நாளைக்கு பன்னிரண்டு ரக்அத் ஸுன்னத் தொழுது வருதல்: "எவர் ஒரு நாளைக்கு பன்னிரண்டு ரக்அத் ஸுன்னத் தொழுது வருவாரோ அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தில் ஒரு மாளிகையை எழுப்புகிறான். அவைகளாவன: லுஹருக்கு முன் 4ரக்அத்துகள், லுஹருக்குப் பின் 2 ரக்அத்துகள், மஃரிபுக்குப் பின் 2ரக்அத்துகள், இஷாவுக்குப்பின் 2 ரக்அத்துகள், பஜ்ருக்கு முன் 2ரக்அத்துகள்". 
(திர்மிதி)
13. அல்லாஹ்வின் 99 திருநாமங்களை மனனமிட்டு அதன்படி செயல்படுதல்: "அல்லாஹ்விற்கு 99 திருநாமங்கள் உள்ளன. எவர் அவைகளை மனனமிட்டு அதன்படி செயல்படுவாரோ அவர் சுவர்க்கம் நுழைந்துவிட்டார்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(புஹாரி).
14. நான்கு விடயங்கள் ஒரு சேர பெற்று விட்டவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்: "உங்களில் இன்று நோன்பு நோற்றவர் யார்? என நபி (ஸல்) அவர்கள் குழுமியிருந்த தனது தோழர்களிடம் வினவினார். அபூபக்ர் (ரலி) அவர்கள் அதற்கு நான் என்றார்கள். இன்று உங்களில் நோயாளியை சுகம் விசாரிக்க சென்றது யார்? என அன்னார் வினவினார், அதற்கும் நான் என அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள். இன்று உங்களில் ஜனாஸாவில் கலந்து கொண்டவர் யார்? என அன்னார் கேட்டபோது, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்றார்கள். இன்று உங்களில் ஏழைகளுக்கு உணவளித்தவர் யார்? என அன்னார் கேட்டார், அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்றார்கள். எவருக்கு மேற் கூறப்பட்ட இவ்விடயங்கள் ஒரே நாளில் ஒரு சேர கிடைத்துவிடுமோ அவர் சுவர்க்கத்தில் நுழைந்து விடுவார்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(முஸ்லிம்).

15. இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்:
"முஆதே! எவர் அல்லாஹ்வுக்கு எந்த ஒன்றையும் இணையாக்காத நிலையில் மரணிக்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 (அஹ்மத்).
16."லா இலாஹ இல்லல்லாஹ்" வை உளத்தூய்மையுடன் மொழிதல்: "எவர் "லா இலாஹ இல்லல்லாஹ்" வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் இல்லை என்பதை உளத்தூய்மையுடன் சொல்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அஹ்மத்).17. எழுபதாயிரம் பேர் கேள்வி கணக்கின்றி சுவர்க்கம் நுழைவர்: "நபி (ஸல்) அவர்கள்: எனது சமுதாயத்தில் எழுபதாயிரம் பேர் எந்த விசாரணையும், தண்டனையுமின்றி சுவர்க்கம் நுழைவார்கள் எனக் கூறிவிட்டு வீட்டுக்குள் நுழைந்து விட்டார்கள். அங்கிருந்தோர் தங்களுக்குள் அந்த எழுபதாயிரம் பேர் நபியோடு தோழமை கொண்டு இருந்தவர்கள், மற்றும் சிலர் இல்லை அவர்கள் இஸ்லாத்தில் பிறந்து அல்லாஹ்வுக்கு எந்த ஒன்றையும் இணையாக்காதவர்கள். வீட்டைவிட்டு வெளியில் வந்த நபி (ஸல்) அவர்கள் நீங்கள் எதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தீர்கள் எனக் கேட்க நடந்தவைகளைக் கூறினர். நபி (ஸல்) அவர்கள் அந்த எழுபதாயிரம் பேர்:

மந்திரித்துப் பார்க்காதவர்கள், மந்திரித்துப் பார்க்குமாறு கோராதவர்கள், பறவை சாஸ்த்திரம் பார்க்காதவர்கள் முழுமையாக அல்லாஹ்வையே சார்ந்திருக்கக் கூடியவர்கள் எனக் கூறினார்கள். அங்கிருந்த ஒருவர் எழுந்து நபியே நானும் அவர்களுடன் இருக்க பிரார்த்தியுங்கள், நீரும் அவர்களுடன் இருப்பீர் எனக் கூறினார்கள். மற்றொருவர் எழுந்து தனக்கும் பிரார்த்திக்குமாறு வேண்டினார், அதற்கு நபியவர்கள் "உக்காஷா"உம்மை முந்திவிட்டார் எனக்கூறினார்கள்.(முஸ்லிம்).

"நிச்சயமாக நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு ஃபிர்தவ்ஸ் எனும் சொர்க்கச் சோலைகள் தங்குமிடங்களாக உள்ளன. அதிலே நிரந்தரமாக இருப்பார்கள். அங்கிருந்து இடம் பெயர்வதை விரும்ப மாட்டார்கள்" 
(குர்ஆன் 8:107,108). 

(தலை)விதி - Al Buhary

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

6594. உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உங்களில் ஒருவர் தம் தாயின் வயிற்றில் நாற்பது நாள்கள் (கருவாக) சேமிக்கப்படுகிறார். பிறகு அதைப் போன்றே (40 நாள்கள்) அந்தக் கரு (அட்டை போன்று கருப்பையின் கவரைப் பற்றிப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக் கட்டியாக மாறுகிறது. பிறகு அதைப் போன்றே (மேலும் 40 நாள்கள் மெல்லப்பட்ட சக்கை போன்ற) ஒரு சதைப் பிண்மாக மாறிவிடுகிறது.
பிறகு (அதனிடம்) அல்லாஹ் ஒரு வானவரை அனுப்புகிறான். அவர் நான்கு விஷயங்களை எழுதுமாறு பணிக்கப்படுகிறார். அந்த மனிதனின் வாழ்வாதாரம், வாழ்நாள், (செயல்பாடு), அவன் துர்பாக்கியசாலியா அல்லது நற்பாக்கியசாலியா (ஆகியவை எழுதப்படும்). பிறகு அவனுள் உயிர் ஊதப்படும். இதனால் தான் அல்லாஹ்வின் மீதாணையாக! 'உங்களில் ஒருவர்', அல்லது 'ஒருவர்' நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்துகொண்டே செல்வார். இறுதியில் அவருக்கும் நரகத்திற்கும் இடையே 'விரிந்த இரண்டு கைகளின் நீட்டளவு' அல்லது 'ஒரு முழம்' இடைவெளி தான் இருக்கும்; அதற்குள் அவரின் விதி அவரை முந்திக்கொள்ள, அவர் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்து அதன் விளைவாகச் சொர்க்கத்தில் புகுந்துவிடுவார்.
(இதைப் போன்றே) ஒருவர் சொர்க்கவாசிகளின் (நற்) செயலைச் செய்துகொண்டே செல்வார். இறுதியில் அவருக்கும் சொர்க்கத்திற்கும் இடையே 'ஒரு முழம்' அல்லது 'இரண்டு முழங்கள்' இடைவெளி தான் இருக்கும்; அதற்குள் விதி அவரை முந்திக்கொள்ள, அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து அதன் காரணத்தால் நரகத்தினுள் புகுந்துவிடுவார்.
என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.2
ஆதம் இப்னு அபீ இயாஸ்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் (ஒரு முழமா இரண்டு முழங்களா? என்பதில் சந்தேகம் இல்லாமல்) ஒரு முழம் என்றே (தீர்மானமாக) இடம் பெற்றுள்ளது.
Volume :7 Book :83
6595. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ், (தாயின்) கருவறையில் ஒரு வானவரை நியமிக்கிறான். அவர், 'இறைவா! (இது ஒரு துளி) விந்து. இறைவா! (இது பற்றித் தொங்கும்) கருக்கட்டி இறைவா! (இது மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைத் துண்டு' என்று கூறிக் கொண்டிருப்பார். அதன் படைப்பை முழுமையாக்கிட அல்லாஹ் விரும்பும்போது 'இறைவா! இது ஆணா? அல்லது பெண்ணா? துர்பாக்கியம் உடையதா? அல்லது நற்பாக்கியம் பெற்றதா? (இதன்) வாழ்வாதாரம் எவ்வளவு? ஆயுள் எவ்வளவு?' என்று வானவர் கேட்பார். அவ்வாறே இவையனைத்தும் அல்லாஹ்வால் நிர்ணயிக்கப்பட்டு,) அது தன் தாயின் வயிற்றில் இருக்கும்போதே எழுதப்படும்.
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.3
Volume :7 Book :83
6596. இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் 'இறைத்தூதர் அவர்களே! சொர்க்கவாசிகள் யார்? நரகவாசிகள் யார்? என்று (முன்பே அல்லாஹ்வுக்குத்) தெரியுமா?' எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'ஆம் (தெரியும்)' என்றார்கள்.
அவர் 'அவ்வாறாயின் ஏன் நற்செயல் புரிகிறவர்கள் நற்செயல் புரியவேண்டும்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'ஒவ்வொருவரும் 'எ(தை அடைவ)தற்காகப் படைக்கப்பட்டார்களோ' அல்லது 'எ(தை அடைவ)தற்கு வாய்ப்பளிக்கப்பட்டார்களோ' அதற்காகச் செயல்படுகிறார்கள்' என்று பதிலளித்தார்கள்.6
Volume :7 Book :83
6597. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
இணைவைப்போரின் குழந்தைகள் (இறந்துவிட்டால் அவர்களின் முடிவு யாது? என்பது) பற்றி நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கவர்கள், 'அவர்கள் (உயிருடன் வாழ்ந்தால்) எவ்வாறு செயல்பட்டிருப்பார்கள் என்பதை அல்லாஹ் நன்கறிவான்' என்று பதிலளித்தார்கள்.8
Volume :7 Book :83
6598. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இணைவைப்போரின் குழந்தைகள் (இறந்துவிட்டால் அவர்களின் முடிவு யாது? என்பது) குறித்து இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் 'அவர்கள் (உயிருடன் வாழ்ந்தால்) எவ்வாறு செயல்பட்டிருப்பார்கள் என்பதை அல்லாஹ் நன்கறிவான்' என்று விடையளித்தார்கள்.9
Volume :7 Book :83
6599. & 6600. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
'எல்லாக் குழந்தைகளும் இயற்கையி(ன் மார்க்கத்தி)ல்தான் பிறக்கின்றன. அவர்களின் பெற்றோர்கள் தாம் அவர்களை (இயற்கை மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறிஸ்தவர்களாகவோ ஆக்கிவிடுகின்றனர். ஒரு விலங்கு (முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப்) பெற்றெடுப்பதைப் போன்றுதான் (இது). நீங்களே அதன் நாக்கு, மூக்கு போன்ற உறுப்புகளை வெட்டிச் சேதப்படுத்தாத வரை நாக்கு மற்றும் மூக்கு வெட்டப்பட்ட நிலையில் அது பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறனார்கள்.10
Volume :7 Book :83
6601. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஒரு பெண், மற்றொரு பெண்ணின் பாத்தி(ரம் எனும் வாழ்வாதா)ரத்தைக் காலி செய்(துவிட்டு, அதைத் தன்னுடையாக்கிக்கொள்)வதற்காக அவளை மணவிலக்குச் செய்திடுமாறு (தன் மணாளரிடம்) கோர வேண்டாம். (மாறாக, அந்த நிபந்தனையின்றி) அவள் மணம் புரிந்துகொள்ளட்டும். ஏனெனில், அவளுக்கென விதிக்கப்பட்டது அவளுக்கே கிடைக்கும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 11
Volume :7 Book :83
6602. உசாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்கள் அருகில் இருந்துகொண்டிருந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்களின் புதல்வியார் ஒருவரின் தூதுவர் நபி அவர்களிடம் வந்தார். அப்போது ஸஅத் இப்னு உபாதா(ரலி), உபை இப்னு கஅப்(ரலி), முஆத் இப்னு ஜபல்(ரலி) ஆகியோர் நபி அவர்களுடன் இருந்தனர். அந்தப் புதல்வியாரின் மகன் உயிருக்காகப் போராடிக் கொண்டிருப்பதாகத் தூதுவர் தெரிவித்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அல்லாஹ் எடுத்துக்கொண்டதும் கொடுத்ததும் அவனுக்கே உரியது. ஒவ்வொன்றுக்கும் ஒரு தவணை உண்டு. எனவே, பொறுமையைக் கடைப்பிடித்து நன்மையை எதிர்பார்ப்பாயாக' என்று தம் புதல்விக்குச் சொல்லி அனுப்பினார்கள்.12
Volume :7 Book :83
6603. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது அன்சாரிகளில் ஒருவர் வந்து, இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை (விற்று) காசாக்கிக்கொள்ள நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும்போது) புணர்ச்சி இடைமுறிப்பு (அஸ்ல்) செய்துகொள்வது குறித்துத் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?' என்று கேட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருந்தால் உங்களின் மீது தவறேதுமில்லையே? ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும்' என்று பதிலளித்தார்கள். 13
Volume :7 Book :83
6604. ஹுதைபா அல்யமான்(ரலி) அறிவித்தார்.
(ஒரு முறை) எங்களிடையே நபி(ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். அந்த உரையில், மறுமை ஏற்படும் வரையிலான எந்தத் தகவலையும் அவர்கள் குறிப்பிடாமல் விடவில்லை. அதனை அறிந்தவர்கள் அறிந்து கொண்டார்கள். அதனை அறியாதவர்கள் அறியாமலானார்கள். (அதில்) ஏதேனும் ஒன்றை நான் மறந்துவிட்டிருந்தாலும் அதை (நேரில்) காணும்போது அறிந்துகொள்வேன். தம்மைவிட்டு மறைந்துவிட்ட ஒருவரை (மீண்டும்) பார்க்கும்போது அவரை ஒருவர் அடையாளம் கண்டுகொள்வதைப் போன்று.
Volume :7 Book :83
6605. அலீ(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (பகீஉல்ஃகர்கத் எனும் பொது மையவாடியில் ஜனாஸா ஒன்றில் கலந்து கொள்வதற்காக) அமர்ந்திருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் தம்மிடமிருந்த ஒரு குச்சியால் தரையைக் குத்திக் கீறியபடி (ஆழ்ந்த யோசனையில்) இருந்தார்கள். பின்னர் 'சொர்க்கம் அல்லது நரகத்திலுள்ள தம் இருபபிடம் எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை' என்றார்கள்.
அப்போது மக்களில் ஒருவர் 'அவ்வாறாயின் (ஏற்கெனவே எழுதப்பட்டுவிட்ட விதியை நம்பிக் கொண்டு நல்லறங்கள் ஏதும் புரியாமல்) நாங்கள் இருந்து விடமாட்டோமா? இறைத்தூதர் அவர்களே!' என்று கேட்டார்.
நபி(ஸல்) அவர்கள் 'இல்லை நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) அனைவருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது' என்று கூறிவிட்டு பிறகு '(இறைவழியில் வழங்கி (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்குகிறவர் சுலபமான வழியில் செல்ல நாம் வகை செய்வோம்' எனும் (திருக்குர்ஆன் 92:5-7) வசனங்களை ஓதிக் காட்டினார்கள். 14
Volume :7 Book :83
6606. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நாங்கள் கைபர் போரில் கலந்து கொண்டோம். அப்போரின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்முடன் இருந்தவர்களில், தம்மை முஸ்லிம் என்று சொல்லிக்கொண்ட ஒருவரைப் பற்றி 'இவர் நரகவாசிகளில் ஒருவர்' என்று கூறினார்கள்.
போரிடும் நேரம் வந்தபோது அந்த மனிதர் மிகக் கடுமையாகப் போரிட்டார். அப்போது அவருக்கு நிறைய காயங்கள் ஏற்பட்டு அவரை உட்காரவைத்துவிட்டன. அப்போது நபித்தோழர்களில் ஒருவர் வந்து 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் எவரைக் குறித்து 'அவர் நரகவாசி என்று சொன்னீர்களோ அவர் இறைவழியில் கடுமையாகப் போரிட்டு அதிகமான காயங்கள் அடைந்துள்ளார்' என்று கூறினார். அப்போதும் நபி(ஸல்) அவர்கள் 'அவர் நரகவாசிகளில் ஒருவர் தாம்' என்றே கூறினார்கள்.
அப்போது முஸ்லிம்களில் சிலர் (நபி(ஸல்) அவர்களின் இச்சொல் குறித்து) சந்தேகப்படும் அளவுக்குப் போய்விட்டார்கள். நிலைமை இவ்வாறு இருக்கும்போது, அந்த மனிதர் காயத்தின் வேதனையை உணரலானார். உடனே அவர் தம் கையை அம்புக் கூட்டுக்குள் நுழைத்து அதிலிருந்து ஓர் அம்பை உருவி அதன் மூலம் தற்கொலை செய்துகொண்டார். உடனே முஸ்லிம்களில் சிலர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் விரைந்து வந்து 'இறைத்தூதர் அவர்களே! தங்களின் அறிவிப்பை அல்லாஹ் உண்மையாக்கிவிட்டான். இன்ன மனிதா தற்கொலை செய்து தம்மை மாய்த்துக் கொண்டார். (அதனால் அவர் நரகவாசிகளில் ஒருவராம்விட்டார்)' என்று கூறினர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'பிலாலே! எழுந்து சென்று 'இறை நம்பிக்கையாளர் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழைய முடியாது. மேலும் அல்லாஹ் இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனிதனின் மூலமாகவும் வலுவூட்டுகிறான்' என்று (மக்களிடையே) அறிவிப்புச் செய்யுங்கள்' என்று கூறினார்கள். 15
Volume :7 Book :83
6607. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களுடன் பங்கெடுத்த (கைபர்) போரில், எதிரிகளுக்கு பதிலடி கொடுப்பதில் முஸ்லிம்களிலேயே மகத்தான (பங்காற்றுப)வராக இருந்த ஒருவரைப் பார்த்த நபி(ஸல்) அவர்கள் 'நரகவாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புகிறவர் இவரைப் பார்த்துக்கொள்ளலாம்' என்று கூறினார்கள். (அவரைப் பற்றி நபியவர்கள் ஏன் அவ்வாறு குறிப்பட்டார்கள் என்பதை அறிய) மக்களில் ஒருவர் அவரைப் பின்தொடர்ந்து சென்றார். அந்த மனிதரோ இணைவைப்பாளர்களை எதர்த்து எல்லாரையும் விடக் கடுமையாகப் போராடும் அதே நிலையில் இருந்தார். இறுதியில் அவர் (எதிரிகளால் கடுமையாகக்) காயப்படுத்தப்பட்டார். அதனால் அவர் அவசரமாக இறந்துவிட விரும்பி, தம் வாளின் கூரான பகுதியைத் தம் மார்புகளுக்கிடையே வைத்து (அழுத்தி)க் கொண்டார். வாள் அவரின் தோள்களுக்கிடையே இருந்து வெளியேறியது.
(பின்தொடர்ந்து சென்ற) அந்த மனிதர் நபி(ஸல்) அவர்களை நோக்கி விரைந்து வந்து 'தாங்கள் இறைத்தூதர்தாம் என்று நான் உறுதி கூறுகிறேன்' என்றார்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'என்ன விஷயம்?' என்று கேட்டார்கள். அவர் 'தாங்கள் எவரைக் குறித்து நரகவாசிகளில் ஒருவரை பார்க்க விரும்புகிறவர் இவரைப் பார்த்துக் கொள்ளட்டும் என்று குறிப்பிட்டீர்களோ அவர் முஸ்லிம்களுக்காகப் போராடுவதில் மகத்தான (பங்காற்றுப)வராகத் திகழ்ந்தார். (தாங்கள் அவரைப் பற்றி நரகவாசி என்று குறிப்பிட்டிருப்பதால்) அவர் இதே (தியாக) நிலையில் இறக்கப்போவதில்லை என்று நான் அறிந்தேன். அவர் (எதிரிகளால் கடுமையாகக்) காயப்படுத்தப்பட்டபோது அவரசமாக இறந்துவிட விரும்பி தற்கொலை செய்தார்' என்றார். அப்போதுதான் நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: ஓர் அடியார் நரகவாசிகளின் செயல்களைச் செய்துவருவார். ஆனால, (இறுதியில்) அவர் சொர்க்கவாசகளில் ஒருவராம்விடுவார். இன்னொருவர் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்துவருவார். ஆனால், (இறுதியில்) அவர் நரகவாசிகளில் ஒருவராம்விடுவார். இறுதி முடிவுகளைப் பொறுத்தே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன.16
Volume :7 Book :83
6608. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் நேர்த்திக்கடன் செய்ய வேண்டாமென்று தடை விதித்தார்கள். மேலும், 'நேர்த்திக்கடன் (விதியிலுள்ள) எதையும் மாற்றிவிடாது. நேர்த்திக் கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம்) வெளிக்கொணரப்படுகிறது (அவ்வளவு தான்)' என்றார்கள்.18
Volume :7 Book :83
6609. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(அல்லாஹ் கூறினான்:) நேர்த்திக் கடனானது, நான் விதியில் எழுதியிராத எந்தவொன்றையும் மனிதனிடம் கொண்டு வந்துவிடாது. மாறாக, விதிதான் அவனை (நேர்த்திக்கடன் பக்கம்) கொண்டு செல்கிறது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வத்தை) வெளிக்கொணர்வதென நான் (முன்பே) விதியில் எழுதிவிட்டேன்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :7 Book :84
6610. அபூ மூஸா அப்துல்லாஹ் இப்னு கைஸ்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் ஒரு போரில் (கைபரில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நாங்கள் ஒரு மேட்டின் மீது ஏறும்போதும் ஒரு கணவாயில் இறங்கும்போதும் உரத்த குரலில் 'அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று கூறலானோம். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்கள் அருகில் வந்து 'மக்களே! உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். (மென்மையாக மெதுவாகக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ இங்கு இல்லாதவனையோ அழைப்பதில்லை. நன்கு செவியேற்பவனையும் (எல்லாரையும்) பார்ப்பவனையுமே அழைக்கின்றீர்கள்' என்று கூறிவிட்டு, (என்னைப் பார்த்து) 'அப்துல்லாஹ் இப்னு கைஸே! சொர்க்கத்தின் கருவூலங்களிலுள்ள ஒரு வார்த்தையை உமக்கு நான் அறிவிக்கட்டுமா? (அது) 'லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்தான் என்றார்கள்.20
Volume :7 Book :84
6611. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(இப்புவியின் ஆட்சிக்கு இறைவனுடைய) பிரதிநிதியாக ஆக்கப்படும் எவருக்கும் இரண்டு நெருக்கமான ஆலோசகர்கள் இருக்கவே செய்வார்கள். ஓர் ஆலோசகர், அவரை நன்மை செய்யும்படி ஏவி அதற்குத் தூண்டு கோலாக இருப்பார். அல்லாஹ் (குற்றங்களிலிருந்து) யாரை பாதுகாத்தானோ அவரே மாசற்றவராக இருப்பார்.
என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
Volume :7 Book :84
6612. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல் கண்ணும் நாவும் கூட விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இதன் அறிவிப்பாளரான இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி(ஸல்) அவர்களிடமிருந்து அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்துள்ள இந்த ஹதீஸை விடச் சிறுபாவங்களுக்கு எடுத்துக்காட்டாக வேறெதையும் நான் காணவில்லை.
இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.22
Volume :7 Book :84
6613. இக்ரிமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
'(நபியே!) உங்களுக்கு நாம் காண்பித்த (இக்) காட்சியையும், சபிக்கப்பட்ட மரத்தை (அது மறுமையில் பாவிகளுக்கு உணவாகும் என) குர்ஆனில் நாம் கூறியிருப்பதையும் இந்த மக்களுக்கு ஒரு சோதனையாகவே ஆக்கியுள்ளோம்' எனும் (திருக்குர்ஆன் 17:60 வது) வசனம் தொடர்பாக இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்: இது, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மக்காவிலிருந்து) பைத்துல் மக்திஸிற்கு அழைத்துச் செல்லப்பட்ட இரவில் அன்னாருக்குக் காட்டப்பட்ட கண்கூடான காட்சியைக் குறிக்கிறது. குர்ஆனில் சபிக்கப்பட்ட மரம்' என்பது 'சப்பாத்திக் கள்ளி' மரத்தைக் குறிக்கிறது.23
Volume :7 Book :84

Saturday 1 February 2014

துபை தமுமுக சார்பாக நடைபெற்ற மார்க்க அமர்வில் திருக்குர்ஆனை அணுகுவோம் தலைப்பில் உரை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

31:1:2014 அன்று துபை தமுமுக சார்பாக நடைபெற்ற மார்க்க அமர்வில் இஸ்லாமிய அழைப்பாளர் சகோதரர் ஜலால் அவர்கள் திருக்குர்ஆனை அணுகுவோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்,இந்நிகழ்ச்சியில் திரளான சகோதரர்கள் பயனடைந்தனர்,


எல்லாப் புகழும் இறைவனுக்கே.

கயத்தார் த.மு.மு.க விற்கு மாவட்ட ஆட்சியரால் விருது

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,



சிறந்த குருதி கோடையாளர்களுக்குகாண விருது திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது அதில் கயத்தார் த.மு.மு.க விற்கு மாவட்ட ஆட்சியரால் விருது வழங்கப்பட்டது.



www.tmmk.in 

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டில் குளறுபடி - சட்டபேரவையில் பேச வாய்ப்பு மறுப்பு - மமக வெளிநடப்பு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இன்று (1.02.2014) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரையின் போது பின் வரும் கருத்துகளை பதிவுச் செய்ய முயற்சித்த மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா கருத்துகளை அவை குறிப்பிலிருந்து நீக்கி பேச வாய்ப்பு மறுக்க பட்டதை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, அஸ்லம் பாஷா ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்
மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவரு

ம், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா இன்று சட்டமன்ற பேரவையில் பேச முற்பட்ட விஷயங்கள் கீழே குறிப்பிட்டுள்ளது
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே
மேதகு ஆளுநர் அவர்கள் தனது உரையில் வேலை தேடுபவர்களையும் வேலை வாய்ப்பு அளிப்பவர்களையும் இணைக்கும் தளமாக மாநில வேலை வாய்ப்பு இணைய தளம் ஒன்று அரசின் சார்பாக அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வேலை தேடும் இளைஞர்களுக்கு மிக்க பயனுள்ளதாக இருக்கும் என்ற வகையில் வரவேற்கிறேன்.

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு கடந்த திமுக ஆட்சியின் அளிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை அதிகரித்து தர வேண்டும் என்ற கோரிக்கையை எங்கள் அமைப்பின் சார்பாக நாங்கள் நீண்ட காலமாக வைத்து வருகிறோம். சட்டமன்றத்தில் பல முறை இதனை வலியுறுத்தி பேசியிருக்கிறேன். பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிசீலனையில் இது இருப்பதாக ஒரு முறை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் அமைச்சர் கடந்த 2012ல் பட்ஜெட் கூட்டத்தொடரில் தெரிவித்தார். ஆனால் காலங்கள் உருண்டோடிய பிறகு கூட இந்த ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகளும் 8 மாதங்களும் கழிந்த பிறகும் கூட தேர்தல் நேரத்தில் அதிமுக அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட வில்லை. இந்த ஆட்சியில் பல்வேறு துறைகளில் பணியாளர்கள் நியமனத்தின் போது பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு உரிய பணியிடங்கள் அளிக்கப்படவில்லை என்பதையும் வருத்தத்துடன் பதிவுச் செய்ய விரும்புகிறேன். எடுத்துக் காட்டாக சொல்ல வேண்டுமெனில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக வெளியிடப்பட்ட அறிவிக்கை எண் 17-2013 தேதி 29.12.2013ல் தொகுதி 1 பணிகளுக்கான பணி நியமனங்கள் 33 காவல் துணை கண்காணிப்பாளர்கள் பதவிகளில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு ஒரு இடம் கூட ஒதுக்கப்படவில்லை. இதே 33 வணிக வரி உதவி ஆணையாளர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பில் 1 இடம் பிசிஎம்க்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துணை கண்காணிப்பாளர் பணியிடங்களில் மட்டும் ஏன் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பதற்கான விளக்கத்தை இந்த அரசு அளிக்க வேண்டும். இதே போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதிலும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். இந்த அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு அரசு பணிகளுக்கான நியமனத்தில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு அடிப்படையில் எவ்வாறு பணியிடங்கள் நிரப்பபட்டன என்பது குறித்து தெளிவான அறிக்கை இந்த அவையில் வைக்கப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இந்த அரசு பள்ளிக் கல்வித் துறையில் செய்து வரும் சேவைகளை ஆளுநர் தனது உரையில் விவரித்துள்ளார். பள்ளியில் பயிலாதவர்கள் என கண்டறியப்பட்ட 51477 குழந்தைகளில் இந்த ஆண்டு43838 குழந்தைகள் முறையான பள்ளிக் கல்விமுறைத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். இது ஒரு நல்ல நிகழ்வு தான். ஆனால் தொடர்ந்து இந்த அவையில் கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் போது கூட எங்கள் கட்சியின் சார்பாகவும் வேறு பல எதிர்கட்சிகளின் சார்பாகவும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வு டெட் தேர்வில் தமிழகத்ததில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் தளர்வு அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.

ஆசிரியர் பதவிகளுக்காக தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு National Council for Teacher Education 11.02.2011ல் எழுதிய கடிதத்தில் டெட் தேர்வில் வெற்றி பெற 60 விழுக்காடு மதிப்பெண்எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டாலும் மாநிலங்களில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடுகொள்கைக்கு ஏற்ப பிற்படுத்தப்பட்டோர் , பட்டியலினத்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்குதேர்வுக்கான குறைந்த பட்ச மதிப்பெண்ணில் சலுகை அளிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி நான் இந்த அவையில் உரையாற்றியுள்ளேன். ஆனால் இந்த அரசு எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை. பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக இயக்கங்களும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தினார்கள்.

தமிழக ஆசிரியர்கள் தகுதிதேர்வு நடத்துவதற்கு தமிழக ஆசிரியர் தேர்வு வாரியத்தை நியமித்து 15.11.2011ல் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசு ஆணை 181லும், இட ஒதுக்கீடு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு அளிக்க வழங்கிட வகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2012மற்றும் 2013 ஆண்டுகளில் நடைபெற்ற தகுதி தேர்வுகளில் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு வழங்கப்படவில்லை.

தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (NCTE) மிகச் சரியான வழிகாட்டுதலை அளித்துள்ளது. அதன்படி இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்குத் தகுதி மதிப்பெண்களில் தளர்வு காட்டப்பட வேண்டும்.ஆந்திரா, கேரளம், ஒரிசா, அஸ்லாம், பீகார் மாநிலங்களில் அத்தகு முறைபின்பற்றப்பட்டுள்ளது. குறிப்பாக ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் முன்னேறிய ஜாதியினருக்கு 60 மதிப்பெண்கள், பிற்படுத்தப்பட் டோருக்கு 50 மதிப்பெண்கள், தாழ்த்தப்பட்டோருக்கு 40 மதிப்பெண்கள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இந்த சூழலில் இது குறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடை என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் திரு. பு.பா. பிரின்ஸ்கஜேந்திரபாபு அவர்களால் அனுப்பப்பட்ட புகார்களைத் தொடர்ந்து, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் (National Commission of Scheduled castes) தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மற்றும் ஆசிரியர் தேர்வு ஆணையத்திற்கு அனுப்பியுள்ள 23.1.2014 நாளிட்ட கடிதத்தில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் மதிப்பெண் தளர்வு வழங்க வாய்ப்பு அளிக்கத் தவறியதைச் சுட்டிக் காட்டி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்குஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு வழங்கிட உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு தேர் வாணையத்தின் செயல்பாடு தன்னிச்சையானது - அநீதியானது - சட்ட விரோதமானது - இடஒதுக் கீடுக்கு எதிரானது (Arbitrary, Unjust, Unlawful and Against the Reservation Policy) என்று கடினமான பதங்களையும் பயன்படுத்தியுள்ளது. அத்தோடு தேசிய தாழ்த்தப்பட்டோருக்கான ஆணையம் நிறுத்திக் கொள்ளவில்லை; இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு வழங்கத் தவறியஅதிகாரிகள்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு எண் 4இன் கீழ் நடவடிக்கை எடுக்கும்படியும் வலியுறுத்தியுள்ளது.

இந்த அடிப்படையில் இதற்கு மேலும் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தாமல் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக் குரிய தளர்வு மதிப்பெண் அடிப்படையில் ஏற்கெனவே தேர்வு எழுதியவர்களைத் தேர்வு செய்யுமாறு வலியுறுத் துகிறேன். ஆசிரியர் தேர்வு ஆணையம் இனிநடத்தவிருக்கும் தேர்வுகளை இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தளர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை மேதகு ஆளுநர் தமது உரையில் முழுமையான மருத்துவ சேவைகளை அளிப்பதில் இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாகத் தமிழகம் உருவெடுத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். ஓமாந்தூரர் அரசினர் பல் நோக்கு சிறப்பு உயர் மருத்துவமனையில் பேராசிரியர்கள் பணி நியமனம் தொடர்பான மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (Medical Services Recruitment Board) 2013 டிசம்பர் 27 அன்று இணையதளத்தில் விளம்பரம் செய்திருந்தது. இந்தப் பணி நியமனங்கள் ஒப்பந்த அடிப்படையில் செய்யப்படும் என்றும் இடஒதுக்கீடு அறவே கிடையாது என்றும் இந்தியா முழுவதிலிருந்தும் விண்ணப்பிக்கலாம் என்றும், ஓய்வு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும் அந்த விளம்பரத்தில் குறிக்கப்பட்டு இருந்தது.
பல்நோக்கு சிறப்பு உயர் மருத்துவமணையில் மருத்துவத்துறை பேராசிரியர்கள் நியமனத்தில் இந்தியாவிலியே சமூக நீதிக்கு எடுத்துக்காட்டாக திகழும் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு முறை கடைபிடிக்கப்பட மாட்டது என்று அறிவித்துள்ளது அதிர்ச்சியை அளித்துள்ளது.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பணி நியமன விளம்பர அறிக்கையை விலக்கிக் கொண்டு, தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்து வரும் 69 சதவிகித அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும் என்ற உத்தரவாதத்துடனும், சம்பள விகிதத்தில் பாரபட்சம் அற்ற தன்மையுடனும், புது விளம்பரத்தினை வெளியிட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன். ஒப்பந்த முறை நியமனம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பும் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் மனிதநேய கட்சி சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.
ஏற்கெனவே சுப்ரீம்கோர்ட்டால் கொடுக்கப்பட்ட டில்லி AIIMS FACULTY -பேராசிரியர்கள் போட்ட வழக்கில் 18.7.2013 தீர்ப்பில் - மண்டல்கமிஷன் வழக்காகிய இந்திரா சஹானி வழக்கு என்ற வழக்கில் வெறும் கருத்துரையாக,OBSERVATION- (OBITER-DICTA) சொல்லப்பட்ட ஒன்றை நீதிமன்றம் சுட்டிக் காட்டியது. உயர் சிறப்பு மருத்துவத் துறைப் படிப்பு (Super Speciality) மருத்துவத்துறையில் இட ஒதுக்கீடு கொடுப்பது விரும்பத்தக்கதல்ல என்றும் கருதலாம் என்பதாகக் குறிப்பிட்ட அந்தப் பெரும்பான்மை தீர்ப்பில் பாரா 861இல்

“..... Be that as it may, we are of the opinion that in certain services and in respect of certain posts, application of the rule of reservation may not be advisable for the reason indicated hereinbefore
என்று குறிப்பிட்டுள்ளது.

இதன் தமிழாக்கம்: முக்கியமான உயர்நிலை பதவிகளில் சேருவதற்கான விதிமுறைகளை பின்பற்றி பணிக்கான நபர்களைத் தேர்ந்தெடுக்கும் போது இடஒதுக்கீட்டுக்கான சட்டதிட்டங்கள் கடைப்பிடிக்கப் படுவது உகந்ததாக இருக்காது என்று கூறப்பட்டது. இது தீர்ப்புரை அல்ல; வெறும் கருத்துரை - பொதுவாகச் சொல்லப்பட்ட கருத்து.

இதன்படி இது சட்டக்கட்டாயத்தன்மை (MANDATORY LAW) அல்ல. நீதிபதியின் ஆலோசனை போன்ற ஒரு கருத்து.

அரசமைப்புச் சட்டம் 16 ஆவது பிரிவு கூறுவது என்ன?

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தருவது பற்றிய 16 ஆவது பிரிவில், போதிய அளவு பிற்படுத் தப்பட்டவருக்குத் தருவது என்பதும், பிற்படுத்தப்பட்டவரை அடையாளம் கண்டறிந்து பட்டியலில் சேர்ப்பது என்பது பற்றியுமான உரிமையை அரசுக்குத்தான் அளித்துள்ளதே தவிர, நீதிமன்றங்களுக்கு அல்ல. In the opinion of the State என்றுதான் குறிப்பிடுகிறது.

நீதிமன்றங்கள் கருத்துக்கள் கூட கூற இயலாது என்பது இதன் மூலம் திட்டவட்டம்!

இந்திரா சஹானி (மண்டல்) வழக்கில் மேலே குறிப்பிட்ட பத்தியிலேயே இக்கருத்து முடிக்கப்பட்டு, வலியுறுத்தப்பட்டுள்ளது. “It is the Government of India to consider and specify the service and posts to which the rule of reservation shall not apply (but on that account the implementation in the impugned office Memorandum dated 13th August 1990 can not be stayed or with held)”

இதன் தமிழாக்கம்: இட ஒதுக்கீட்டிற்குப் பொருந்தாத சேவைகள் மற்றும் பணியிடங்கள் எவை என்பதை இந்திய அரசுதான் குறிப்பிட வேண்டும். (ஆனால் இந்த காரணங்களுக்காகவே குறிப்பிடப்பட்ட ஆகஸ்டு 13, 1990 நாளிட்ட அலுவலக குறிப்பினை நடைமுறைக்கு தடை விதிக்கவோ, நிறுத்தி வைக்கவோ முடியாது).

இதன்படி, - அண்மையில் அய்ந்து நீதிபதிகள் மறு சீராய்வில் குறிப்பிட்டபடி, பந்து மத்திய அரசின் கோர்ட்டுக்குள்ளே தான் இருக்கிறது. அதாவது டில்லி மத்திய அரசுக்குத்தான் எவை எவை தெளிவாக இடஒதுக்கீட்டில் சேர்க்கப்படலாம் என்று கூறவேண்டிய பொறுப்பு என்று கூறிவிட்டு கடைசியில் தேவையற்ற ஒரு கருத்துரையைப் போட்டு ஒரு புதுக் குழப்பத்தை தீர்ப்பின் மூலம் எடுத்துக்காட்ட முயன்றுள்ளார்கள்.

தேவையற்ற கருத்து
அரசியல் சட்டத்திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று கூறிய கருத்தே அது!

மத்திய அரசு குறிப்பிட்டுச் சொன்னாலே போதுமானது. அரசியல் சட்டத் திருத்தம் என்பது தேவையற்ற ஒன்று- இந்திரா சஹானி வழக்கின் பாரா 861 வாக்கியங்கள் அதை தெளிவாக்குகின்றன.

டில்லி எய்ம்ஸ் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் 18.7.2013 அன்று அளித்த தீர்ப்புரைக்குப்பிறகு, மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத், நாடாளுமன்றத்தில் தெளிவாகவே குறிப்பிட்டார்: We are ignoring the Judgement என்று கூறினார். அதனைத் தொடர்ந்து சீராய்வு மனுவை நீதிமன்றத்தில் தொடருவோம் - நீங்கள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனங்களைச் செய்யலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம், எய்ம்ஸ் நிறுவனத்துக்கு தாக்கீது பிறப்பித்தது. அதன் அடிப் படையில் ரிஷிகேஷ் எய்ம்ஸ் நிறுவனம் ஒப்பந்த அடிப் படையில் பணி நியமனம் செய்யும் ஒரு விளம்பரத்தில் இட ஒதுக்கீடு உண்டு என்று தெளிவாகவே தெரிவித்திருந்தது. துவக்கத்திலிருந்தே இடஒதுக்கீட்டுக்கு எதிராக நீதிமன்றங்கள் முட்டுக்கட்டை போடுவதும், அதன்பிறகு புதிய சட்டத்திருத்தம், ஆணைகளை, அரசுகளும் சட்டமன்றங்களும், நாடாளுமன்றமும், ஆட்சி மன்றமும் கொண்டு வந்து செயல்படுத்துவதும் நமது சமூகநீதிப் போராட்டத்தில் பல்வேறு மைல்கற்கள் அல்லவா?

கூடங்குளம் அணுஉலை தென் தமிழக மக்களுக்கு ஆபத்தானது என்று கூறி கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக இடிந்தகரையில் போராடி வரும் மக்கள் தங்கள் போராட்டதின் 900வது நாள்முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஜனவரி 30 முதல் தொடங்கியுள்ளார்கள். உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்திலின் அடிப்படையில் இரண்டுலட்சத்து இருபத்தேழாயிரம் மக்கள் மீது போடப்பட்டிருக்கும் 360 பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையில் அடங்கும். இதனை இந்த அரசு கனிவுடன் பரிசீலித்து அங்கு சுமூக நிலை ஏற்பட வழிவகைச் செய்ய வேண்டும். கூடங்குளத்தில்
கடந்த 2011 செப்டம்பர் மாதம் தமிழக முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து, மேற்கு வங்காள மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி ஹரிப்பூர் அணுமின் நிலையத்தை வேண்டாம் என்றுசொல்வது போல நீங்களும் சொல்லுங்களேன் என்று அணுஉலைக்கு எதிராக போராட்டம் நடத்துவோரின் பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டார்கள். அப்போது தமிழக முதல்வர் “அந்தத் திட்டம்துவக்க நிலையில் இருப்பதால் அவரால் அப்படி கேட்டுக் கொள்ள முடிகிறது; ஆனால் கூடங்குளம் திட்டம் முடியும் தருவாயில் இருக்கிறதே” என்று சொன்னார். கூடங்குளத்தில் 3 & 4 அணுஉலைகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கி, இடமும் தேர்ந்தெடுத்து விட்டோம் என்று அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் அறிவித்திருக்கிறது. ஆனால் தமிழக அரசு இதுவரை அந்தஅறிவிப்புக்கு எந்தவிதமான எதிர்வினையும் புரியாமல் தவிர்த்து வருகிறது. இது குறித்து தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
காவல்துறை சிறப்பாக செயல்பட வரலாறு காணாத அளவிற்கு 1,448.74 கோடி ரூபாய் ஒதுக்கீடுச் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் காவல்துறையின் ஒரு பகுதியினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவது வருத்தம் அளிக்கின்றது. கடந்த ஜனவரி 7 அன்று நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளர் புஷ்பராஜ் என்பவர் 16வயது சிறுவன் தமீம் அன்சாரியை விசாரணையின் போது துப்பாக்கியால் சுடப்பட்டு அந்த சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். எங்கள் கட்சியீன் சார்பாக நாங்கள் இது குறித்து போராட்டம் நடத்தினோம். இந்த ஆய்வாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு கோட்டாச்சியரின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. தமிழக அரசின் சார்பாக இழப்பீடு அளிக்கப்பட்டது. இருப்பினும் இந்த ஆய்வாளர் மீது கொலை முயற்சி வழக்கு 307ம் பிரிவின் கீழ் படிவுச் செய்யப்பட்டு அந்த ஆய்வாளர் கைதுச் செய்யப்பட வேண்டும். இந்த ஆய்வாளர் சிறுவனை காவல்நிலையத்தில் தடுத்து வைத்ததின் மூலம் சிறார் நீதி சட்டம் Juuvenile Justice Act அளித்துள்ள விதிமுறைகளை மீறியுள்ளார். ஒரு சிறுவர் குற்றம் செய்தால் அது பற்றிய விசாரணை சிறுவர் நீதி அமர்வில் (Juuvenile Justice Board) தான் விசாரிக்கப்பட வேண்டும். எனவே சிறுவர்கள் விஷயத்தில் காவல்துறை எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
www.tmmk.in 

துபையில், சிறப்பாக நடைப்பெற்ற இஸ்லாமிய நிகழ்ச்சி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

துபையில், சிறப்பாக நடைப்பெற்ற இஸ்லாமிய நிகழ்ச்சி

தமுமுக துபை மண்டலம் தேரா மர்கசில் [இன்று] 31:1:2014 இரவு 8:30 மணியளவில் இஸ்லாமிய சொற்பொழிவு நடைப்பெற்றது, இஸ்லாமிய அழைப்பாளர் சகோதரர் ஜலால் அவர்கள்
திருக்குர்ஆனை அணுகுவோம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்,தனது உரையில் திருக்குர்ஆன் இறக்கப் பட்ட நோக்கத்தையும் அதன் சிறப்புகளையும் எடுத்துரைத்தார்,திருக்குர்ஆனை அவசியம் பொருள் உணர்ந்து நாம் ஓதவேண்டும் என்பதையும் ஓதுவதால் ஏற்படக்கூடிய நன்மைகளையும் தனது உரையில் சுட்டிகாட்டினார், திரளான சகோதரர்கள் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு பயன் அடைந்தனர்,எல்லாப் புகழும் இறைவனுக்கே.
Inline images 1

Inline images 2


என்றும் சமுதாய பணியில்
தமுமுக துபை மண்டலம்