Tuesday 28 May 2024

அல்லாஹ்வே! புகழெல்லாம் உனக்கே உரித்தானது

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்ஹம்துலில்லாஹ் !

அல்லாஹ்வே! புகழெல்லாம் உனக்கே உரித்தானது.
நீ விரித்ததை மடக்குபவர் யாருமில்லை. 
நீ மடக்கியதை விரிப்பவர் யாருமில்லை.
நீ வழிகேட்டில் விட்டவருக்கு நேர்வழி காட்ட யாருமில்லை .
நீ நேர்வழி காட்டியவரை வழி கெடுப்பவர் யாருமில்லை.

நீ தடுத்ததை கொடுப்பவர் யாருமில்லை.
நீ கொடுப்பதைத் தடுப்பவர் யாருமில்லை.

நீ தூரமாக்கியதை நெருக்கமாக்கி வைப்பவர் யாருமில்லை.
நீ நெருக்கமாக்கியதை தூரமாக்குபவர் யாருமில்லை.

அல்லாஹ்வே! 
உனது வளங்களை , உனது கருணையை ,உனது அருட்கொடையை, உனது ரிஜ்குகளை எங்களுக்கு விசாலாமாக்கி அருள் புரிவாயாக!

அல்லாஹ்வே! நீங்காத, விலகி விடாத, நிரந்தரமான அருட்கொடைகளை எங்களுக்கு வழங்குவாயாக!

அல்லாஹ்வே! நெருக்கடியான நேரத்தில் உனது நல்லுதவியையும்,
அச்சப்படும் நேரத்தில் உனது பாதுகாப்பையும் உன்னிடம் கேட்கிறேன்.

அல்லாஹ்வே! நீ எங்களுக்கு கொடுத்தவற்றின் தீங்கிலிருந்தும், 
நீ கொடுக்காமல் தடுத்துக் கொண்டவற்றின் தீங்கிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.

அல்லாஹ்வே! ஈமானை எங்களுக்கு பிரியாமானதாக ஆக்குவாயாக!
அந்த ஈமானை எங்கள் உள்ளங்களில் அழகாக ஆக்குவாயாக!

யா அல்லாஹ்! எங்களின் துஆவை ஏற்று கபுல் செய்வாயாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!

No comments:

Post a Comment