Tuesday 21 May 2024

என்னைப் படைத்துப் பரிபாலிப்பவனே !

அல்ஹம்துலில்லாஹ் !
அஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ் !

என்னைப் படைத்துப் பரிபாலிப்பவனே ! 
என் பாவங்களைக் கண்டும் உடனே என்னை தண்டிக்காமல் பொறுமை காப்பவனே !
என் மீது நீ காட்டும்  பொறுமையைக் கண்டு நான் வெட்கப்படுகிறேன்.
 
என்னை பாவம் செய்யவிடாமல் தடுப்பாயாக !
என் தவறுகளையும், பாவங்களையும் நான் உணர்ந்து வருந்தி  தௌபா செய்பவனாக என்னை ஆக்குவாயாக !

எப்பொழுதும் நான் செய்யும் தவறுகளை பிறரிடமிருந்து மறைப்பாயாக ! உன்னுடைய மன்னிப்பை நிரந்தர மாக்குவாயாக ! உன்னுடைய படைப்பினங்களுக்கு முன் என்னைக் கேவலப் படுத்திவிடாதே !

என் இரட்சகனே ! நான் மிகவும் பலவீனமாக இருக்கிறேன்.
என்னைப் பலப்படுத்துவாயாக !
நோயாளியாக இருக்கிறேன். என்னைக்
குணப்படுத்துவாயாக !
எனக்கு சுகத்தைக் கொடுப்பாயாக ! மனஅழுத்தம் பதட்டம் போன்றவைகளை விட்டும் என் உள்ளத்தை பாதுக்காப்பாயாக !

நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி அவனிடமே எங்கள் காரியங்களை ஒபபடைத்து விட்டோம். உன்னையல்லால் வேறு நாயனில்லை.
எங்கள் இறைவனே ! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே ! எமது ஆட்சியாளர்களின் சூழ்ச்சிகளுக்கு எங்களை காப்பாற்றியருள்வாயாக ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் !

No comments:

Post a Comment