Friday 25 October 2019

அல்குர்ஆன் அகில உலகையும் இயற்கை வளத்தையும் இறைவனின் கொடை

அல்குர்ஆன்

ஆண்டியையும் அரசனையும் சமம் என்று சொல்லும்
குர்ஆன்
உலகில் இரண்டே இனம்
1 ஆண் 1 பெண்
என வாதாடும்
குர்ஆன்
புட் பூண்டையும் ஜோடி ஜோடியாய் படைத்தோம் என்கிறது குர்ஆன்

கர்ப்பத்தில் குழந்தை அட்டைப்பூச்சியாய்
ஒட்டி இருப்பதை படம் பிடித்து காட்டுகிறது
குர்ஆன்


விதவைக்கும் மறுவாழ்வு வேண்டும் என்று பெண்ணியம் பேசியது
குர் ஆண்.
தாய்மையின் மகிமையை உரக்கச் சொல்வது குர்ஆன்
சகோதர பாசத்தின்
சத்த அளவுக்கு வட்டம் காட்டுகிறது
குர்ஆன்


நீதிக்குப் புறம்பான அவர்களுக்கு
மறுமையில் கோடுதான் என்று பயம் காட்டுகிறது
குர்ஆன்
நீதி நெறியை காட்டிக் கொடுக்கிறது
குர்ஆன்

இது இறைவனின் வார்த்தைகள் என்கிறது திருக்குர்ஆன்
இரும்பை இறக்கி வைத்தோம் என்று சொல்கிறது
திருக்குர்ஆன்

கொசுவின் வயிற்றுக்குள் கொண்டு போனதை உங்களால் மீண்டு
கொண்டு வர முடியுமா
என்று
கர்வம் கொண்ட மனிதனுக்கு சவால் விடுக்கிறது
குர்ஆன்

ஆகமொத்தம் அல்குர்ஆன் அகில உலகையும் இயற்கை வளத்தையும் இறைவனின் கொடை என்கிறது திருக்குர்ஆன்


*ஏரூர் கபீர்*

No comments:

Post a Comment