Sunday 6 February 2011

பரமக்குடி ஜவ்வாதுப் புலவர் மன்றம் நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் paramakudi eye test

பரமக்குடி ஜவ்வாதுப் புலவர் மன்றம் நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம்
பரமக்குடி : பரமக்குடி ஜவ்வாது புலவர் மன்றம் மற்றும் வாஸன் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாமினை 29.01.2011 சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் ஹைராத்துல் ஜமாலியா கீழ முஸ்லிம் திருமண மஹாலில் நடத்தியது.
கிழப்பள்ளிவாசல் பேஷ் இமாம் மௌலவி ஜலாலுதீன் மன்பஈ இறைவசனங்களை ஓதி இலவச கண் பரிசோதனை முகாமினை துவங்கி வைத்தார்.
கீழ முஸ்லிம் ஜமாஅத் சபை செயலாளர் எஸ்.இ.எம். ஷாகுல் ஹமீது தலைமை தாங்கினார்.
பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் கே.வி.ஆர். ராம்பிரபு, காவல்துறை ஆய்வாளர் பி. சிவக்குமார், நகர்மன்றத்தலைவர் எம். கீர்த்திகா முனியசாமி, ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் உ. திசைவீரன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
ஆசிரியர் எம். புரோஸ்கான் முன்னிலை வகித்தார். ஜவ்வாது புலவர் மன்ற தலைவர் பி. அக்பர் அலி வரவேற்புரை நிகழ்த்தினார். செயலாளர் டி. முஹம்மது பரக்கத் அலி நன்றியுரை நிகழ்த்தினார்.
நிகழ்வினை கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கவிஞர் கே.ஏ. ஹிதாயத்துல்லா தொகுத்து வழங்கினார்.
நிகழ்வில் கீழ முஸ்லிம் ஜமாஅத் சபை உதவிச் செயலாளர் எஸ். சகுபர் சாதிக், பொருளாளர் எஸ். சாகுல் ஹமீது, தாளாளர்கள் பி.எம்.எஸ். சிகாபுதீன், சி.ஏ. கமருல் ஜமாலுதீன், கல்விக்குழு உறுப்பினர்கள் எஸ்.என்.எம். முஹம்மது யாக்கூப், பி.எம்.எஸ். அப்துல் ரஹீம், எஸ்.என்.ஏ. அன்வர்தீன், இ. முஹம்மது உமர் உள்ளிட்ட பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
விழா ஏற்பாடுகளை எம். உதுமான் அலி, பி. அக்பர் அலி, எம். செய்யது அலி, ஜே. ஹிதாயத்துல்லா, கே. முகம்மது சபீர், கே. அஸ்கர் அலி, ஏ. செய்யது அன்சாரி, எஸ். அக்பர் அலி, ஏ. அபுல் ஹஸன், ஏ. அஹமது சுபையர், எம். ஜாபர் அலி, ஏ.டபிள்யூ. நூருல் அமீன், ஏ. சாதிக் நஸ்ரத்தான், எஸ்.பி. சாகுல் ஹமீது, ஏ. செய்யது நல்ல இபுறாஹிம், ஜே.முகம்மது பைசல் உள்ளிட்ட ஜவ்வாது புலவர் மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.
கண் பரிசோதனை முகாமில் பலர் பங்கேற்று பயனடைந்தனர்.

No comments:

Post a Comment