Thursday 8 October 2020

முஸ்லிமா இருந்தா தீவிரவாதி.. தாக்கூர் மேல் ஜாதி, அதனால அவரு வியாபாரி...!

பாஜக என்ற நாறும் சாக்கடையின் ஒரு துளி தான்.

உபியில் பள்ளி மாணவர்கள் சப்பாத்திக்கு உப்பைத் தொட்டுக் கொண்டு  சாப்பிடுவதை அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளரை யோகி சிறையில் அடைத்தார்.
*
மோடியின் தொகுதியான வாரணாசியில்,  பசி தாங்காமல் புல்லைப் பறித்து உண்ட தலித் குழந்தைகளைப் பற்றி கட்டுரை எழுதிய எழுத்தாளரையும் யோகி சிறையில் அடைத்தார்.
*
ஆக்சிஜன் கொடுத்து குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய, #டாக்டர்_கஃபில்கான் யோகியால் பட்ட பாட்டை நாடறியும்.
*
இது, பாஜக என்ற நாறும் சாக்கடையின் ஒரு துளி தான்.
*
இந்த அட்டூழியத்தை எல்லாம் பார்த்ததால், மோடியால் எளிதாக தேர்தல் முறையை ஒழித்து விட்டு, நீதிமன்றத்தின் துணையோடு யதேச்சாதிகார ஆட்சி முறையைக் கொண்டு வந்து விட முடியும் என்று நான் நினைத்தது உண்டு.
*
ஆனால்..
*
ஹத்ராஸ் சம்பவத்தில் ஊடகத்துறையைச் சேர்ந்த இளம்பெண் ஊடகவியலாளர்கள், வெளிப்படுத்திய பூமியில் யாருக்கும் அஞ்சாத நெஞ்சுரத்தையும், நேர்மைக்கு உயிர்த் தியாகம் செய்யத் தயாராக இருந்த லட்சியப் பிடிப்பையும் பார்த்த பின்பு....
*
ஒரு லட்சம் மோடிகளாலும், ஒரு கோடி அமீத்ஷாக்களாலும்       யதேச்சாதிகார முறையை, இந்தியாவில் கொண்டு வர முடியாது என்பது, தெளிவாகத் தெரிந்தது.
*
செவ்வணக்கம் தோழர்களே

பட்ட சிட்டா அடங்கள்

பத்திரம் யார் பெயரில் உள்ளது

வில்லங்கம்

Sunday 4 October 2020

இஸ்லாமிய இயக்கங்களை/கட்சிகளை குறை கூறி புறம் பேசி திரிபவர்களுக்கு.....

இஸ்லாமிய இயக்கங்களை/கட்சிகளை குறை கூறி புறம் பேசி  திரிபவர்களுக்கு.....

வாட்ஸ் அப் மூலம் வந்தது..! 
சிறப்பு வாய்ந்த பதிவு...!
 சில மாற்றங்களுடன் பகிர்கிறேன்....

மக்கள் நலன் பற்றி சிந்திக்கும் திறன் கொண்டவர்களுக்கு அறிவுப்பூர்வமான பதில்கள்.!!

முதலில் இயக்கங்களை குறை சொல்லும் முன்பாக நாம் இஸ்லாமிய சமூகத்திற்கு  செய்த பணிகள் என்ன.? என்று உங்கள் உள்ளத்தை  கேட்டுப்பாருங்கள்...

இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய ஊர்களில் அதிமுக திமுக காங்கிரஸ் போன்ற கட்சிகள் பலம் பெற்றிருக்கிறார்கள்.  ஜமாஅத்தின நிர்வாகிகள் அக்கட்சியில் நிர்வாகிகளாக செயல்படுகிறார்கள் 

அதே பகுதியில் இருக்கக்கூடிய இஸ்லாமிய இயக்கங்களுடனும் கட்சிகளுடனும் ஜமாத்தார்கள் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதை சிந்தித்துப் பார்க்கவும்.

அவர்களுக்கு ஆம்புலன்ஸ் மற்றும் இரத்தம் தேவைப்பட்டால் கொரானா இறப்பு,  ஜனாஸா அடக்கம் செய்ய, காதல் வலையில் பெண்கள் யாரும் ஓடிவிட்டால் அதை மீட்டெடுக்க, ஜமாத் பிரச்சனைகளுக்கு காவல் நிலையத்துக்குச் செல்வதற்கு, இஸ்லாமியர்களை யாராவது தாக்கிவிட்டால் அதற்காக களம் காணுதல்,,  வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் நம் பிள்ளைகளை அழைத்து வருவதற்கு, சிறைவாசிகளின் விடுதலைக்காக போராடுவதற்கும், அரசாங்கம் தரக்கூடிய இலவசத் திட்டங்களை பெற்றுத் தருவதற்கு, அரசு வேலைகளில் சேர்வதற்கு, தேர்வு முகாம் வழிகாட்டி மையங்கள் அமைத்து தருவது, சமூகத்தில் பின்தங்கிய நபர்களுக்கு பொருளாதாரத் தேவைக்கு, இயற்கை பேரிடர் நிகழும்போது,  பெருவெள்ளம் புயல் காலங்களிலும் உயிரை அடகு வைத்து மீட்பு பணிக்கும்,  நோய்க் காலங்களில்  மருத்துவ முகாம் நடத்துவதற்கும், நம் சமூகம் சந்திக்கிற பிரச்சினைகளுக்கு களத்தில்  போராடுவதற்கும், சிறை செல்வதற்கும், வழக்குகள் வாங்குவதற்கும், ஏன் உயிர்  இழப்புகளை சந்திப்பதற்கும் இஸ்லாமிய இயக்கங்கள் நாங்கள் தேவை எங்களை அழைப்பீர்கள். உங்கள்  பிரச்சினைக்கு இஸ்லாமிய அமைப்புகள் கட்சிகளின் தேவை..
தேவைகள் முடிந்த உடன் குறைசொல்ல கிளம்பி விடுவது . இவைகள் எந்த வகையில் நியாயம்..?

இன்றைக்கு R.S.S சங்க்பரிவார பாசிச அமைப்புகள் தங்கள் நடத்தக்கூடிய அத்தனை நிகழ்ச்சிகளையும் அவர்கள் பகுதியிலுள்ள கோயில்களில் நடத்துகிறார்கள். முழு ஒத்துழைப்பையும் கோவில் நிர்வாகிகள் அவர்களுக்கு கொடுக்கிறார்கள்.

ஆனால் என்றைக்காவது இஸ்லாமிய இயக்கங்களுக்கும் கட்சிகளுக்கும் பள்ளிவாசல் இடம் அளித்தது உண்டா? ஜும்மா பயான் களில் அறிவிப்பு செய்வதற்கு பயம். சமுதாய பணிகளுக்கு பக்கபலமாக ஆதரவாக இருந்து உள்ளார்களா?

கொரானா நோயால் இறந்த மக்களை நல்லடக்கம் செய்த இஸ்லாமிய அமைப்பு, கட்சிகளை எந்த ஜமாத்திலாவது எந்த நடுநிலைவாதிகளாவது தங்கள் ஊரில் கௌரவித்துள்ளீர்களா? பாராட்டு நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளீர்களா? அல்லது சேவைகளை பாராட்டி உள்ளார்களா?  நடுநிலைவாதிகள் இதை எங்காவது பேசியது உண்டா?

அல்லாஹ்வின் தூதரைப் பற்றி இழிவான செய்திகளும் படங்களும் வந்த போது 25 வருட காலமாக  தமிழ் சினிமாக்களில் இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்தியும்  தீவிரவாதிகள் என்று காட்டக்கூடிய காட்சிகள் வந்தபோதும், 92ல் பாபர் மசூதி இடித்த பொழுதும், 2002 குஜராத் கலவரம் நடந்த போது நடுநிலைவாதிகள் என்ன செய்தீர்கள்?

மாட்டின் பெயரால் நடுரோட்டில் ரத்தம் சொட்ட சொட்ட 100க்கும் மேற்பட்ட  முஸ்லிம்களை அடித்தும் ஏரித்தும் கொன்றார்கள். தாங்கள் பார்வையாளராக மட்டும் இருந்தீர்கள்

காஷ்மீரில் ஆசிபா என்ற சிறுமியை கற்பழித்து கொலை செய்த குற்றவாளிகளை தண்டிக்க தாங்கள் என்ன செய்தீர்கள்?

 டெல்லியில் CAA போராட்டக்கார்கள் மீது தாக்குதல் நடத்தி 50 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை கொலை செய்யப்பட்டதை கண்டித்து தாங்கள் என்ன செய்தீர்கள்? எதிர்ப்பு  கண்டனத்தை பதிவு செய்தீர்களா? பிந்தைய காலங்களில் தங்கள் ஊரின் சார்பாக  நடுநிலைவாதிகள் நீதிக்காக  ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்தி உள்ளீர்களா? 

ஏன் ஒரு போஸ்டர் ஒட்டி இருப்பீர்களா? அவ்வாறு செய்தால் வழக்கு வரும் சிறை செல்ல வேண்டுமென்று பயமா? இல்லை ஊருக்கு என்று நாலு பேரை நேந்து விட்டிருப்பார்கள் கட்சிக்காரன்,  இயக்கத்துக்காரன் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று என்னமா? ஏன் இயக்கவாதிகளுக்கு  மட்டும் சமுதாய அக்கறை வேண்டும? ஏன் அவர்களுக்கு தான் தலையெழுத்தா? நடுநிலை வாதிகளுக்கு தேவை இல்லையா? 

 இயக்க வாதிகளுக்கு மனைவி பிள்ளை குடும்பமும் தொழில்கள் கல்வி படிப்பு இல்லையா? அவர்கள் என்ன நாடோடிகள் என்று உங்களுக்கு எண்ணமா...?

இன்று சங்பரிவார்கள் ஆர் எஸ் எஸ் பிஜேபி தலைவர்கள் செய்யக்கூடிய அத்தனை சமூக விரோத செயல்களுக்கும்  அவர்களுக்கு அந்த சமூகம் பாதுகாப்பாகவும் பக்கபலமாக இருக்கிறார்கள்

 நீங்கள் இஸ்லாமிய கட்சி அமைப்பின் தலைவர்கள்  செய்த சமுதாய நன்மையான பணிகளுக்கு உழைத்த தலைவர்கள் நெருக்கடிகளை சந்திக்கும் போது அவர்களுக்கு நீங்கள் என்ன உதவிகள் செய்தீர்கள்.?

 சிறந்த இஸ்லாமிய அழைப்பாளர் டாக்டர் ஜாகிர் நாயக் இந்தியாவிற்குள் நுழைய தடை என்று பஜக அரசு சொன்னபொழுது நடுநிலைவாதிகள் என்ன செய்தீர்கள்.?

சமூகத்திற்காக உயிர் நீத்த அல்ஹாஜ் ஷஹீத் பழனி பாபா அவர்களை ஜமாத்தார்கள் நடுநிலைவாதிகள் எவ்வாறு அவரை உதாசீனப்படுத்தினீர்கள்? இறந்த தினத்தில் கூட நினைவஞ்சலி நிகழ்ச்சிகள், ஏன் ஒரு போஸ்டர்  ஒட்டியது உண்டா.?

சமுதாய பணிகளை ஜமாத்தார்கள் நடுநிலைவாதிகள் செய்யாத விளைவே இன்றைக்கு இஸ்லாமிய அமைப்பு கட்சிகள் சமுதாய  பணிகளையும்  தேவைகளையும் பூர்த்தி செய்து மக்களின் தேவைகளை நிறைவு செய்து வருகிறார்கள்

இஸ்லாமிய  கட்சிகளின், அமைப்புகளின் பிரிவை நான் ஆதரிக்கவில்லை.  தவறுகளைச் சுட்டிக்காட்டி அவற்றை சரி செய்ய வேண்டி நாம் கோரிக்கை வைக்கலாம். அதுவல்லாமல் உலகமகா குற்றவாளிகள் போன்று கட்சிகளையும் அமைப்புகளையும் களங்கப்படுத்த  வேண்டாம். எந்த இயக்கம்  தவறு செய்கிறதோ  அந்த இயக்கத்தை மட்டும் சுட்டிக்காட்டுங்கள்.  எல்லா அமைப்பையும் குறை சொல்லாதீர்கள். அதேநேரத்தில் சமுதாய கட்சிகள் அமைப்புகளிடம் மட்டுமே பிளவுகள் இருப்பதுபோன்று சுட்டிக் காட்டாதீர்கள்.  

ஜமாத்தில் ஊர் நிர்வாகத்தில்  பிரிவுகள் இல்லையா? ஒரே  குடும்பத்தில் பிளவுகள் சண்டை சச்சரவுகள் சொத்து தகராறு நடப்பதில்லையா? நாம் வசிக்கும் தெருவில் எத்தனை முன்விரோதம்? ஜென்ம பகைகள் குரோதம் இருக்கின்றன.

இஸ்லாமிய இயக்கங்களிடம் ஒற்றுமை இருக்கு இல்லை என்பது இருக்கட்டும்.  தாங்கள்  இஸ்லாமிய அமைப்புகள் கட்சிகள் நடத்தும் பத்திரிக்கைகளை வாங்கி நாம்  பத்திரிகைத்துறையில் வளர்வதற்கு உதவி செய்தோமா? நமக்கு எதிராக செய்திகள் வெளியிடும் பத்திரிக்கைகளை வாங்கும் ஆர்வம் ஏன் சமுதாய பத்திரிக்கை வளர்வது பற்றி மட்டும் அக்கறை இல்லையா?

பிற கல்லூரிகளில் நம் பிள்ளைகளை சேர்க்கும் நாம் இஸ்லாமியர் நடத்தும் பள்ளி கல்லூரியில் நம் பிள்ளைகளை  சேர்ப்பதற்கும் இஸ்லாமிய சமூக மக்கள் வைத்திருக்கும் நிறுவனத்தில் பொருட்களை வாங்குகிறோமோ என்று சிந்தியுங்கள்?

அதேபோல் இஸ்லாமிய இயக்கங்கள் கட்சிகள் தங்களின் தேவைக்காக  கொடி பிடிக்கவில்லை. சமூகப் பிரச்சினைக்காக, சமுதாய தேவைக்காக கொடி பிடிக்கிறார்கள். அந்த போராட்டத்தை கொச்சை படுத்தாதீர்கள். அவர்கள் செய்யும் உழைப்பையும் தியாகத்தையும் விமர்சனமும் கேலியும் செய்யாதீர்கள். 

அமைப்புகள் கட்சிகள் இப்போது கொரானா காலகட்டத்தில் தப்லிக் ஜமாத் கைது நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றம் சென்று வெற்றி பெற்றதும்,  விஸ்வரூபம் படத்தில்  முஸ்லிம்களை தீவிரவாதிகளாக  சித்தரித்த காட்சிகளை நீக்கம்  செய்ய நாம் செய்த போராட்டமும், அதன் வெற்றியும் தற்போது முகநூலில் ஆர்எஸ்எஸ் பிஜேபி நபர்கள் இஸ்லாமியர்களையும் இஸ்லாத்தையும் தவறாக ஆபாசமாக விமர்சனம் பதிவு செய்தவர்களை  புகார் செய்து சிறையில் தள்ளிய வெற்றியும் இஸ்லாமிய இயக்கங்கள் கட்சிகளின் பணிகள் என்பதை மறந்து விடாதீர்கள்

அதேபோல் முஸ்லிம்கள் கட்சிகள் இயக்க பிரிவுகள் என்பது இந்த காலத்தில் மட்டும் உள்ளதுபோல்  எண்ணாதீர்கள். இஸ்லாமிய சாம்ராஜ்யம் வீழ்ந்தது எதிரிகளால் மட்டுமல்ல. நயவஞ்சகத்தாலும் உண்டு. 

எல்லா காலகட்டத்திலும் நயவஞ்சகர்கள் கூட்டமும் உண்டு. ஏன் அல்லாஹ்வின் தூதரின் காலகட்டத்திலும் நயவஞ்சகர்கள் உண்டு. அவ்வாறு இருக்க இப்போது இருப்பது ஆச்சரியமில்லை. பதவி மோகத்தாலும் ,தன்னைத் தவிர வேறு எவரும் இயக்க தலைமைக்கு வந்து விடக்கூடாது என்கின்ற ஆதிக்க மனப்பான்மையும் கொண்ட சில பேர் பிளவுகளை ஏற்படுத்தும்  தவறு செய்கிறார்கள் அதை நாம் ஆதரிக்கவில்லை.  இருந்தாலும் இதுபோன்ற குள்ள நரிகளும் குற்றவாளிகளும் இருக்கத்தான் செய்வார்கள் என்பது வரலாற்றில் பல இடங்களில் நாம் பார்த்துள்ளோம்.

மேலும் மற்றவர்களின் நன்மை தீமை பற்றி தாங்கள் எடை போடாதீர்கள். தங்களின் செயலைப் பற்றியும் தங்களின் குடும்பத்தார்கள் மனைவி  பிள்ளைகளின் நன்மை தீமை பற்றியும் தாங்கள் சிந்திப்பதே கால சிறந்தது

ஆகையால்  இஸ்லாமிய இயக்கங்கள் கட்சிகளின் பிளவுகள் சமூகத்திற்கு பின்னடைவு அல்லது பெரும் இழப்பு அல்ல.! காலப்போக்கில் அவர்களையும் அந்த அமைபையும் சமூகம் அங்கீகரிக்காது என்பதை தாங்கள் உணர்ந்து கொள்ளுங்கள்

இயக்கங்கள் இத்தனையும் இருந்து இந்த நிலை என்றால்.....
இயக்கங்கள் இல்லை என்றால் பிணம் தின்னும் கழுகுகள் போல் உங்களை எதிரிகள் வேட்டையாடி இருப்பார்கள்.

இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய காலங்களில் வலைதளத்தில் வீரம் காட்டாமல் தங்களின் நேரம் செல்வம் உடல் உழைப்பு அறிவு ஆகியவற்றை சமூகத்திற்கு தந்து சமூகத்தை பலப்படுத்த தாங்கள் இணைந்து சமூக பணி செய்திட ஒற்றுமையாக செயல்பட்டு பாசிசத்தை வீழ்த்தி வெற்றி பெறுவோம் சமூகம் முன்னேற்றம் அடைய இறைவன் நல்லருள் புரிவானாக .!
--
Thanks & Regards

Wednesday 23 September 2020

Salam rules

"உனக்குத் தெரிந்தவருக்கும், தெரியாதவருக்கும் ஸலாமைப் பரப்பு'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (பார்க்க புகாரி 12, 28, 6236)

திருக்குர்ஆன் கற்றுத் தருகின்ற இந்த வாழ்த்து எல்லா நேரத்திலும், எல்லாச் சூழ்நிலைகளிலும் பயன்படுத்துவதற்கு ஏற்றது.

உங்கள் மீது அமைதி ஏற்படட்டும், சாந்தி ஏற்படட்டும், நிம்மதி ஏற்படட்டும், கடவுளின் பாதுகாப்பு ஏற்படட்டும் என்று இந்தச் சொல்லுக்கு அர்த்தம் உள்ளது.

இதனைத் திருமண வீடுகளில் மகிழ்ச்சியாக இருப்பவர்களிடமும் கூறலாம். சோகமாக இருப்பவர்களிடமும் கூறலாம். இரு தரப்பினருக்கும் நிம்மதி அவசியமானது.

காலையிலும் கூறலாம். மாலையிலும் கூறலாம். இரவிலும் கூறலாம்.

பெரியவர்கள் சிறியவர்களுக்கும், சிறியவர்கள் பெரியவர்களுக்கும் கூறலாம்.

ஆரோக்கியமானவர்கள் நோயாளிகளுக்கும், நோயாளிகள் நோயற்றவர்களுக்கும் கூறலாம்.

மாணவர்கள் ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கும், தலைவர்கள் தொண்டர்களுக்கும், தொண்டர்கள் தலைவர்களுக்கும் கூறலாம்.

எந்தவிதமான கேவலமோ, அவமரியாதையோ ஏற்படாமல் எல்லோருடைய மரியாதையையும் பேணும் சொல்லாக இந்த அஸ்ஸலாமு அலைக்கும் என்ற சொல் அமைந்துள்ளது.

வெவ்வேறு வாழ்த்து முறைகள் உலகத்தில் நடைமுறையில் உள்ளன. சில வாழ்த்து முறைகள் நல்ல காலைப் பொழுது என்று உள்ளது. இதனைச் சோகமான இடங்களில் சொல்ல முடியாது. இது அவர்களின் மனதிற்குச் சங்கடத்தை ஏற்படுத்தும். நல்ல காலைப் பொழுது என்பதை மாலையிலோ, இரவிலோ சொல்ல முடியாது.

அதே போன்று ஒருவரை ஒருவர் உயர்த்தி மதிப்பது போன்றும், கும்பிடுவது போன்றும், வணங்குவது போன்றும் கருதப்படுமானால் ஒரு மனிதரின் சுயமரியாதைக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும். வணக்கம், வந்தனம், நமஸ்தே, நமஸ்கார் என்பது போன்ற சொற்களுக்கு உங்களை வணங்குகிறேன் என்று பொருள். ஒரு மனிதனை இன்னொரு மனிதன் வணங்குவது சுயமரியாதைக்குப் பங்கம் ஏற்படுத்தும்.

அவ்வாறில்லாமல் ஒருவருக்காக மற்றவர் கடவுளிடம் வேண்டுவது என்ற அடிப்படையில் அமைந்திருக்கின்ற இந்த வாழ்த்து இஸ்லாத்தின் தனிச் சிறப்பாகும்.

முஸ்லிம்களுக்கு மட்டுமே ஸலாம் கூற வேண்டும் என்று பெரும்பாலான முஸ்லிம்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக முஸ்லிமல்லாத மக்களைச் சந்திக்கும்போது ஸலாம் கூறத் தயங்கி வணக்கம், வந்தனம், நமஸ்காரம் போன்ற சுயமரியாதைக்குப் பங்கம் விளைவிக்கும் சொற்களையும், இறைவனுக்கு இணைகற்பிக்கும் சொற்களையும் கூறும் நிர்பந்தத்தை தமக்குத் தாமே ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறக் கூடாது என்று கட்டளையிருந்தால் அதைக் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் இரு வேறு கருத்து இல்லை. ஆனால் அல்லாஹ்வும், அவனது தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் நமக்கு இவ்வாறு கட்டளையிடவில்லை. மாறாக முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஸலாம் கூறுவதைத் தெளிவாக அனுமதித்துள்ளனர்.

திருக்குர்ஆனில் 2:130, 2:135, 3:95, 4:125, 6:161, 16:123, 22:78 ஆகிய வசனங்களில் இப்ராஹீம் நபியவர்களின் வழிமுறையை முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும் என்று அல்லாஹ் வலியுறுத்துகின்றான்.
--
Thanks & Regards

மரணஅறிவிப்பு

மரணஅறிவிப்பு...

இன்ஷா அல்லாஹ்.


மனைவி படிக்க மறுக்கும் வரிகள்.

மற்றவர் படிக்க வேண்டிய வரிகள்.


அந்த நாள்

ஐம்புலன்களும் ஒடுங்கி..

ஜனாஸா நிலையில், நான் இறையடி சேர்ந்தவனாய்.


அந்த கணம் எப்படி இருந்தால், நன்றாக இருக்கும், என ஒரு சிறு சிந்தனை.

இவை நடந்தால், நான் நல்லவன் என்று உறுதியாக சொல்ல முடியாது,

ஆனாலும் ஓர் நப்பாசை.


ஒரு நல்ல தந்தையை இழந்த நிலையில் குழந்தைகள்..

நல்ல நினைவுகளோடு என் மனைவி.

சிறந்த நண்பனை பிரிந்தவர்களாக, என் நண்பர்கள்.

நன்றியோடு அண்டை வீட்டுக்காரன்

நல்ல பணியாளை இழந்த ஊழியர்கள்.

நல்ல முதலாளியை இழந்த தொழிலாளிகள்.

நான் கற்பித்த கல்வியோடு.. சுற்றும் பல மாணவர்கள்.

உண்மை துஆக்களோடு பல உறவுகள்

ஜனாஸாவில் எதிர்பார்த்திராத கூட்டம்.

மொத்தத்தில் எனைப்பற்றி கசப்பான அனுபவத்தை பேசாத மனிதர்கள்.


உலக மார்க்க கல்வியோடு மகன் மகள்கள்.

பொதுப் பணியோடு குடும்பம் பேணும் மனைவி.

பெற்றோரின் துஆவில் என்றும் நான்.

நல்ல தகவல்களோடு மிளிரும் எனது Website.

அழகிய போஸ்ட்களோடு என் facebook பக்கம்.

நல்ல வீடியோக்களோடு எனது youtube சேனல்.

நான் எழுதிய நல்ல புத்தகங்கள் உங்கள் வீடுகளில்.

மொத்தத்தில் அனைத்தும் நான் விட்டுச் சென்ற நிரந்தர கல்வியாக.


எந்த வங்கியிலும் லோன் இல்லை.

எந்த நபருக்கும் கடன் இல்லை.

என் பேர்ஸில் எந்த credit card உம் இல்லை.

பெரிய சொத்துக்கள் இல்லை.

குழந்தைகளிடம் சொத்தாசையும் சொத்து சண்டையும் இல்லை.

ஆனாலும் என் குடும்பம் யாரையும் தங்காது

இருக்க நிலையான வருமானம்.

அமானிதங்கள் கையில் இல்லை.

நிறைவேற்றாத எந்த வாக்குறுதியும் இல்லை.

நிலையான தர்மத்தில் என் கண்ணுக்குப் பிறகும் சந்தோஷப்படும் சில நல்லுள்ளங்கள்.

என்னால் இனிய மார்க்கத்தில் நுழைந்த குறைந்தது ஒரே ஒரு நபர்.


அன்றைய நாளில்...

எல்லா ஜமாத்தையும் பேணி இருக்க வேண்டும்.

குர்ஆனின் சில வரிகளை ஓதி இருக்க வேண்டும்.

தர்மம் செய்திருக்க வேண்டும்.

துஆ கேட்டிருக்க வேண்டும்.

அந்த இறுதி கணம் வரை, என் வேளையை நானே கவனித்து ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும்.

ஹஜ்ஜின் கடமையையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.


இறுதி கணம்..

அழுகையின் நடுவேயும் மன தைரியம் உடையவராக என் மனைவி மக்கள்.

ஆண்களும், பெண் மஹ்ரமிகளும் மட்டுமே பார்க்கும் என் ஜனஸா..

என்னை குளிப்பாட்டுவதும் என் உறவு.

எனக்காக தொழுகை நடத்துவதும் என் நெறுங்கிய உறவு.

நல்ல நறுமணத்தொடு

யாருக்காகவும் காத்திராமல்

சூட்டோடு வேகமாக எடுக்கப்படும் என் ஜனாஸா.

இறந்த ஊரிலேயே அடக்கம்.

பித்அத்துக்கு இடமில்லை.

கத்தம் சாப்பாடும் இல்லை.

சுன்னாஹ்வுக்கே முக்கியத்துவம்..

ஒப்பாரிகள் இல்லை.

அமைதியான சூழல்.

ஒரு கணம், முழு உள்ளத்தோடு எனக்காக இறைஞ்சும் உள்ளங்கள்.


மரணத்தின் பின்னும் நாம் வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமுள்ளது என கூறும் படியான வாழ்க்கை.


நப்பாசைதான்.... துஆ செய்யுங்கள்.

இன்ஷா அல்லாஹ், அவன் நாடினால் எதுவும் நடக்கும்...,



சார்பாக காவல்துறை தேர்வில் வெற்றி பெற்ற சாதனையாளர்கள்

*நமது Melapalayam Officers Academy (MOA) சார்பாக காவல்துறை தேர்வில் வெற்றி பெற்ற சாதனையாளர்கள் மூலமாக*

*தமிழக காவல்துறை PC2020 தேர்வு & PC பணி குறித்த ஆன்லைன் விழிப்புணர்வு நிகழ்ச்சி*


*நாள்: 27/09/2020 ஞாயிற்றுக்கிழமை*

*நேரம்: 04:30 PM to 06:00PM (IST)*


விளக்கமளிப்பவர்கள்


*J. சாகுல் ஹமீது (காவல்துறை சிறப்பு பிரிவு)*


*M. மாசானமூர்த்தி (ஆயுதப்படை)*


*M. ஆலிமுத்து மெஹ்ராஜ் (தீயணைப்புத் துறை)*


*K.J. இஸ்மாயில் அபுபக்கர் (ஆயுதப்படை)*


*S.M. முஹம்மது சுஹைல் (காவல்துறை சிறப்பு பிரிவு)*


*ZOOM app* மூலம் விளக்கம் அளிக்கவுள்ளனர்.


Meeting ID: 5915998782

Passcode: moa5678


*குறிப்பு*


*MOA சார்பாக காவல்துறை PC2020க்கான இலவச பயிற்சிக்கான தகுதித்தேர்வு எதிர்வருகின்ற 04/10/2020 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும், இதில் கலந்துக்கொள்ள கீழ்கண்ட google form link ல் பதிவு செய்யவும்*


https://forms.gle/mVaLugNfv7frue288


*அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்விப்பணியில்* *Melapalayam Officers Academy* (MOA)

*Regd no. 44/2020*

பாஜக உள்ள வந்துரும் ப்ரோ

https://www.facebook.com/100004562077325/posts/1566339686861419/


#பாஜக உள்ள வந்துரும் ப்ரோ.....


அதிகமா இணையத்துல போன தேர்தலப்போ கேட்ட வார்த்தை இது....

ஆனா இங்க ஒரு வருஷத்துல....


வீட்டு பக்கத்துல 10 நாள் முன்னாடி வரை வெறும் கொடிக்கம்பமா இருந்ததுல இன்னிக்கு பாஜக கொடி பறக்குது....


சென்னைல ஏகப்பட்ட இடங்கள்ல இதுவரை பாக்காதளவு சுவர் விளம்பரங்கள்.... பாஜகவை விளம்பரப்படுத்தி....


பெரும்பாலான மெட்ரோ ரயில்வே தூண்கள் முழுக்க பாஜக சுவரொட்டிகள்....


சேரிக்குள்ள போகுறதுக்கு அதிகாரப்பகிர்வு வேணும்ன்னு ஒரு ப்ளான்.... ஜாதித்தெருக்குள்ள போக ஆண்டைப்பெருமை பேசிட்டு இன்னொரு ப்ளான்....


பார் கவுன்சில்ல அத்தனை பேரை வளைச்சி பிடிச்சிருக்கு.... ஏற்கனவே IAS மாதிரி தேர்வுகள்ல 60-70% RSS பின்புலத்தோட செலக்ட் ஆகிருக்காங்க.... இப்போ காவலர் தேர்வுலயும் அதே மாதிரி உள்ள நுழைக்க அத்தனை வேலைகள் நடக்குது.... குடுமி மன்றத்துல சொல்லவே தேவையில்ல... எல்லாமே அவங்க ஆளுங்க தான்....


பாஜகவில் சேர வந்த ரவுடிகள் தப்பியோட்டம்ன்னு வர்ற நியூஸ்லாம் பாக்றோம்.... சேர்ந்துக்கிட்ட ரவுடிங்க எண்ணிக்கை ரொம்பவே அதிகம்....


இதுவரை திறக்கப்படாத கோவில்கள்ல கூட கண்ட கண்ட பேர்ல யாகம் பூஜைன்னு ஆளை சேர்த்து பாஜக இந்துக்களுக்கான கட்சின்னு நிறுவிட்டு இருக்கு....


இன்னொரு பக்கம் 16-24 வயசு பசங்க கிட்ட அதிகப்படியான ஜாதி உணர்வை வாட்சப் பேஸ்புக்ன்னு முடிஞ்சவரை தினசரி அவ்ளோ விஷயங்கள் மூலமா பரப்புது....


100 பேர்க்கு தெருவுல தெரிஞ்ச ஆளா இருந்தாலும் காரும் தந்து டீசல் காசும் தரேன்... அப்பப்போ இதை பேசுன்னு ஆள் சேக்குது...


பாஜகவை எதிர்த்து பேசுற பல மீம் பேஜ்கள் ரிப்போர்ட் ஆகி ஒரு காலத்துல 1 மில்லியன் ரீச் இருந்தது இன்னிக்கு 100 ஷேர்க்கு முக்குது.... ஒரிஜினல் ஐடில பேசுறவங்க இன்பாக்ஸ்ல மிரட்டல்கள் குவியுது....


கார்த்திகை செல்வன் ஹசீப் குணசேகரன் மாதிரியான மக்கள் பிரச்சினைகளை பேசுற ஊடகவியலாளர்கள் கழுத்து நெறிக்கப்படுவதும் எல்லா ஊடகங்களிலும் பாஜக சார்பு செய்திகளே அதிகமா வர்றதும் ரீசன்ட் டைம்ல நிறைய நடக்குது...


கிடைக்கிற மேடைகள்ல பாஜகவை சூசகமா சீண்டுன விஜய் சேதுபதி 'ஓம்' ன்னு டிபி வைக்கிறாரு..... விஜய் மாதிரி ஆளுங்க எதுக்குடா வம்புன்னு அடக்கி வாசிக்க தொடங்குறாங்க... பேச ஆரம்பிச்ச சூர்யாவுக்கும் சரியான இடதுசாரி ஆதரவு இல்லாததால அரசுக்கு ஆதரவா இருக்க மாதிரி காட்டிக்க தொடங்கிக்கிறாரு....


எல்லா சீரியல்லயும் முன்ன இல்லாதளவு சாமிக்குத்தம் தெய்வவாக்குன்னு அவ்ளோ மோசமா இந்துத்துவ கருத்துக்கள் திணிக்கப்படுது....


குமுதம் ஆனந்தவிகடன்னு பல வாரப்பத்திரிக்கைகளும் தன்னோட சங்கி முகத்தை நல்லா காட்ட தொடங்கிருக்கு... நக்கீரன் மாதிரி பத்திரிக்கைகளும் மன்னிப்பு நோட்டீஸ்லாம் விடுது( ஆளுநர் விஷயத்துல)


சுத்தி நல்லா பாருங்க.... இங்க பாஜக முழுசா எல்லா பக்கமும் வந்தாச்சி.... முழுசா எதிர்க்கிறவங்களையும் தன்வசப்படுத்த அதிகாரம், பணம், பதவின்னு எதையாது கொடுத்து ஈர்க்குது.... இன்னொரு பக்கம் இருக்க நட்பு சக்திகளையும் சந்தேகப்படுறதும் எதிரி கூடாரத்துக்கும் தள்ளுற வேலையும் நடக்குது...


2000 வருஷத்துக்கு மேல வேரூன்றுன மரத்தை வெட்ட ஒரே ஒரு கோடாரி பத்தாது... எல்லா பக்கமும் வெட்டாமல் ஒழிய மரத்தை சாய்க்க முடியாது... புத்திசாலியா இருந்தா என் கோடாரியை மட்டுந்தான் வச்சி வெட்டணும்ன்னு சொல்ல மாட்டான்... ஊருக்கே கோடாரி கொடுக்க நினைப்பான்... இல்ல கோடாரி பிடிச்சிட்டு வர்றவங்களுக்கு தானும் சக ஆள்ன்னு காட்டிப்பான்...


இதுக்கு மேல சொல்ல ஒண்ணும் இல்ல.... ஆனா இனியும் பாஜக உள்ள வந்துரும்ன்னு சொல்ல முடியாது.... அது அல்ரெடி உள்ள வந்தாச்சி.... இன்னிக்கு இல்லன்னாலும் 10 வருஷத்துல அது பண்ண வேலைக்கான அறுவடையை எடுக்கும்... அது உறுதி....