Monday 24 June 2024

பழங்காலத்தில் தொடர்பு கொள்ள பயன்படுத்தப்பட்ட பொருட்கள் என்ன?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


பழங்காலத்தில் தொடர்பு கொள்ள பயன்படுத்தப்பட்ட பொருட்கள் என்ன?

நவீன தொழில்நுட்பத்திற்கு முந்தைய காலங்களில், தகவல்தொடர்புக்கு பல்வேறு முறைகள் பயன்படுத்தப்பட்டன. சில பொதுவான முறைகள் அடங்கும்:

ஸ்மோக் சிக்னல்கள் : இந்த முறையானது, நெருப்புடன் கூடிய வடிவங்கள் அல்லது சமிக்ஞைகளை உருவாக்குவதன் மூலம் புகையைப் பயன்படுத்தி செய்திகளை அனுப்புவதை உள்ளடக்கியது.
கேரியர் புறாக்கள் : நீண்ட தூரத்திற்கு செய்திகளை எடுத்துச் செல்ல புறாக்கள் பயிற்றுவிக்கப்பட்டன. அவை பண்டைய காலங்களில் நம்பகமான தகவல்தொடர்பு வழிமுறையாகப் பயன்படுத்தப்பட்டன.
ஹோமிங் பீக்கான்கள் : வழிசெலுத்தலுக்கான குறிப்பு புள்ளியை வழங்குவதன் மூலம் கப்பல்கள் அல்லது பயணிகளுக்கு வழிகாட்ட இவை பயன்படுத்தப்பட்டன.
டிரம்ஸ் மற்றும் ஹார்ன்ஸ் : பல கலாச்சாரங்களில், டிரம்ஸ் மற்றும் கொம்புகள் குறிப்பிட்ட தாளங்கள் அல்லது ஒலிகளை உருவாக்குவதன் மூலம் நீண்ட தூரங்களுக்கு செய்திகளை அனுப்ப பயன்படுத்தப்பட்டன.
செமாஃபோர் டெலிகிராப் : இந்த அமைப்பு தொலைதூரங்களுக்கு செய்திகளை அனுப்ப பொதுவாக கொடிகள் அல்லது விளக்குகளுடன் கூடிய காட்சி சமிக்ஞைகளைப் பயன்படுத்துகிறது.
மெசஞ்சர் ரன்னர்கள் : பண்டைய காலங்களில், பயிற்சி பெற்ற ஓட்டப்பந்தய வீரர்கள் நிலத்தில் செய்திகளை விரைவாகவும் திறமையாகவும் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டனர்.
கேரியர் விலங்குகள் : புறாக்கள் தவிர, குதிரைகள், நாய்கள் மற்றும் ஒட்டகங்கள் போன்ற பிற விலங்குகளும் நீண்ட தூரத்திற்கு செய்திகளை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்டன.
மை மற்றும் காகிதக் கடிதங்கள் : தூதர்களால் வழங்கப்பட்ட கையால் எழுதப்பட்ட கடிதங்கள் பல நூற்றாண்டுகளாக பொதுவான தகவல்தொடர்பு வழியாகும்.
சிக்னல் ஃபயர்ஸ் : தீகள் நீண்ட தூரத்திற்கு செய்திகளை அனுப்ப பயன்படுத்தப்பட்டன, குறிப்பாக அவசரநிலை அல்லது இராணுவ தகவல்தொடர்புகளில்.
டவுன் க்ரையர்ஸ் : பல சமூகங்களில், பொதுமக்களுக்கு செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிவிப்பதற்காக டவுன் க்ரையர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
நவீன தொழில்நுட்பம் வருவதற்கு முன்பும் மின்னணுத் தொடர்பு சாதனங்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுவதற்கும் முந்தைய காலத்தில் தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்பட்ட முறைகளின் சில எடுத்துக்காட்டுகள் இவை.

தகவல் தொடர்பு தொழில்நுட்பம் வரிசையும் வரலாறும்.

தகவல் தொடர்பு தொழில்நுட்பம் 
வரிசையும் வரலாறும். 


முன்னுரை
இயற்கை காட்டிய வழிமுறையின் அடிப்படையில், மனிதனின் ஆறாம் அறிவை பயன்படுத்தி, அறிவியல் மூலம் பெற்றுள்ளதே இன்று மனிதகுலம் பல வகைகளில், பல்வேறு வழிகளில் பயன்படுத்துகின்ற தகவல் தொடர்பு வழிமுறைகளாகும். குகைகளை வீடாக பயன்படுத்திய காலம் முதல் விண்ணிலே வீடமைத்து வாழும் வழிமுறைகளை ஆராய்ந்து கொண்டிருக்கும் இன்றைய காலம் வரையிலும் மட்டுமல்லாது, நிலவில் குடியேறிய பிறகும்கூட மனித குலத்தின் அடிப்படைத் தேவையாகத் திகழப்போவது தகவல் தொடர்பு என்பதுவே.

அறிவியல் சார்ந்த வாழ்க்கைக்கு மட்டுமல்லாது, எளிமையான வாழ்க்கைக்கும் இந்தத் தகவல் தொடர்பு என்பதே அடிப்படையாகும். இந்தத் தகவல் தொடர்பின் துவக்கம், வளர்ச்சி, நடைமுறை, பயன்படுத்தும் கருவிகள் மற்றும் எதிர்கால நிலை ஆகியனபற்றி விரிவாகக் காணலாம்.

தகவல் தொடர்பு என்றால் என்ன?
இதனை முழுமையாக அறிந்து கொண்டால் மட்டுமே இதுபற்றி நாம் சரியாகப் புரிந்து கொள்ள முடியும். இதில் “தகவல்” – “தொடர்பு” என்ற இரண்டு சொற்கள் இணைந்துள்ளன. தகவல் என்றால் ’பிறர் அறியும் வகையில் வெளிப்படுத்தப்படும் செய்தி’ என்று பொருளாகும். தொடர்பு என்றால் ’இரு இடங்களை இணைப்பது; இணைப்பு’ என்று பொருளாகும்.

எனவே தகவல் தொடர்பு என்பதற்கு ஓர் இடத்திலிருந்து தொலைவில் இருக்கும் மற்றொரு இடத்தோடு தகவல்களைப் பரிமாறிக் கொள்ளப் பயன்படுத்தும் அமைப்பு – என்று பொருள் கொள்ள வேண்டும். அதாவது இரண்டு இடங்களை இணைத்து, அங்குள்ளவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்திகளை வெளிப்படுத்தும் வழிமுறை மற்றும் அதற்கான கருவிகளுக்குத் தகவல் தொடர்பு என்ற தொழில்நுட்பச் சொல்லைப் பயன்படுத்துகின்றோம்.

ஓவியங்கள் மூலம் தகவல் தொடர்பு
குறிப்பிட்ட காலகட்டத்தில்தான் துவங்கியது என்று உறுதியாகக் கூறமுடியாதவற்றுள் தகவல் தொடர்பின் துவக்கமும் அடங்குகிறது. மனிதகுலத்தில் பேச்சும் எழுத்தும் துவங்குவதற்கு முன்பாகவே தகவல் பரிமாற்றம் துவங்கிவிட்டது என்றே ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அச்சு மற்றும் தகவல் தொடர்பின் துவக்கம் என்று கருதப்படுவது, கற்கால மனிதர்கள் வரைந்து வைத்துள்ள குகைச் சித்திரங்களாகும். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாக 15 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான வரலாற்றிற்கு முந்தைய காலத்தில் மனிதன் நாகரீகம் எதுவும் அடையவில்லை; சாப்பிடுவது, உறங்குவது, இனப்பெருக்கம், சண்டை போடுவது போன்ற அடிப்படை செயல்பாடுகளை மட்டுமே செய்துவந்துள்ள, கடைபிடித்துள்ள அந்த நிலையிலும் தகவல் தொடர்பை துவங்கிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

தான் அறிந்த ஒன்றை அல்லது பார்த்த ஒன்றை, அருகில் அல்லது தொலைவில் அல்லது இனிமேல் வரப்போகும் நபர்களுக்குத் தெரிவிப்பதற்காக வரையப்பட்டவையே குகை ஓவியங்கள் ஆகும். அதிசயிக்கத்தக்க அளவிற்கு அறிவியல் வளர்ச்சியும், கண்டுபிடிப்புகளும் உள்ள இந்த நாட்களிலும், ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்துகின்றவைகளாகவும் இந்தக் குகைச் சித்திரங்கள் உள்ளன.

ஒலி வழித்தகவல் பரிமாற்றம்
அடுத்து, வாய்வழியே ஒலி எழுப்பப் பழகிய மனிதன், ஒவ்வொரு செயலுக்கும் ஆ.. ஊ.. என்று ஒலி எழுப்பித் தகவல் பரிமாற்றத்தைத் துவக்கினான். இன்றும் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களும் இந்த ஒலி வழித்தகவல் பரிமாற்றத்தையே கடைபிடிக்கின்றன.

படவடிவத் தகவல் தொடர்பு
இன்றைக்கு சுமார் ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்பாகத்தான் மனிதன் எழுத்துக்களை உருவாக்கியுள்ளான். கிமு 2500ம் ஆண்டுகளில் (அதாவது இன்றைக்கு சுமார் 4500 ஆண்டுகளுக்கு முன்பாக) எகிப்திய நாகரீகம்தான் பேச்சு ஒலியை வரிவடிவத்திற்குக் கொண்டுவந்துள்ளது. அன்றைய நாட்களில் அவர்கள், படவடிவ எழுத்துக்களை (ஹையரோக்லிஃபிக்) பயன்படுத்தியுள்ளனர். இன்று வரலாற்றாய்வாளர்கள் இந்த படவடிவ எழுத்துக்களைப் படித்தே எகிப்திய வரலாற்றை அறிந்து கொண்டுள்ளனர்.

தோல் கருவிகளின் பயன்பாடு
இதன் பிறகு, நாகரீகங்களும் நாடுகளும் எழுத்துக்களை உருவாக்கியுள்ளன. என்றாலும் தகவல் தொடர்பிற்கு அந்த நாட்களில் மேலும் சில வழிமுறைகளும் கருவிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் முதல் நிலையில் உள்ளது, தோல் கருவிகளால் ஒலி எழுப்பப்பட்டு செய்யப்பட்ட தகவல் பரிமாற்றமாகும். இன்று பயன்பாட்டில் உள்ள பேரிகைகள், மத்தளங்கள் போன்ற தோல் கருவிகளால் ஒலி எழுப்பப்பட்டது. மகிழ்ச்சி, ஆபத்து, போர், வரவேற்பு போன்ற நேரங்களிலெல்லாம் அந்த நிகழ்விற்கு ஏற்ற ஒலிகளை எழுப்ப இந்தத் தோல் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டு
தமிழ்நாட்டில், குறுநில மன்னராக இருந்த வீரபாண்டிய கட்டபொம்மன் இதுபோன்ற ஒரு வசதியை பயன்படுத்தியுள்ளதாக வரலாற்றறிஞர்கள் கூறுகின்றனர். தனது நகரான பாஞ்சாலங்குறிச்சிக்கும், தான் வணங்கிய முருகக் கடவுளின் ஊரான திருச்செந்தூருக்கும் இடையே பெரிய மணிகளை நிறுவியுள்ளார். திருச்செந்தூர் கோவிலில் பூசை செய்யப்படும் நேரத்தில் மணியடிக்கப்படுகிறது. அந்த ஒலியைக் கேட்டு வரிசையாக உள்ள மணிகளை ஒலிக்கச் செய்துள்ளனர். அவற்றின் தொடர்ச்சியாக பாஞ்சாலங்குறிச்சியில் மணி ஒலி எழுப்பப்பட்டுள்ளது. கோவில் பூசையை அறிந்து கட்டபொம்மன், தனது பூசைகளைச் செய்துள்ளார். கோவில் பூசை பற்றிய தகவல் மணி ஒலி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் கோவில்களிலும், தேவாலயங்களில், மசூதிகளிலும் எழுப்பப்படும் ஒலி, ஊர்முழுக்கக் கேட்கிறது அல்லவா? கோவிலுக்கு வரமுடியாதவர்கள் அந்த நேரத்தில், இருந்த இடத்திலிருந்தே இறைவனை வழிபடவும் தகவல் தொடர்பு வழிமுறை கையாளப்படுகிறது.

கடிதங்கள் மூலம் தகவல் பரிமாற்றம்
சொற்கள் வரிவடிவம் பெற்று எழுத்துக்கள் உருவாகியதும், தகவல் தொடர்பில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. கடிதங்கள் எழுதப்பட்டன. அன்றைய நாட்களில், அந்தந்தப் பகுதிகளில் கிடைத்த துணி, ஓலை, தோல், மரத்துண்டு போன்ற தளங்களில் எழுத்துக்கள் எழுதப்பட்டு மற்றவர்களுக்கு அனுப்பப்பட்டன.

கடிதப் போக்குவரத்தில் முற்கால அரசர்கள் பயன்படுத்திய சிறப்பான தகவல் தொடர்பு சாதனம் புறாக்கள் ஆகும். இந்த அமைதிப் பறவையின் காலில் கட்டப்பட்டு அனுப்பப்படும் கடிதம், குறித்த நபருக்கு விரைவாகக் கொண்டு சேர்ப்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் இந்த புறாக்களைப் பயிற்றுவிப்பவர்கள் இந்தியாவில் உள்ளனர். சரியான வழியை கண்டுபிடித்து புறப்பட்ட இடத்திற்கு இந்தப் பறவைகள் வந்து சேர்வது இயற்கையின் விந்தைக்குரிய செயல்பாடுகளில் ஒன்றாகும்.

நாட்கள் மாறி, நவீன தொழில்நுட்பங்கள் உருவாக்கிக் கொடுத்த காகிதம் புழக்கத்திற்கு வந்தது. கடிதங்கள் எழுதும் பழக்கம் துவங்கியது. எழுதுபவரிடமிருந்து கடிதங்களைப் பெற்று உரிய நபரிடம் கொண்டு சேர்க்கும் அஞ்சல் சேவை உருவாக்கப்பட்டது; இதற்கான கட்டணங்களை பெறுவதற்கு பல்வேறு முறைகள் முயற்சிக்கப்பட்டன. இறுதியாக இன்றைய நாட்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்ற தபால் தலை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. உலகிற்கு இதனை அறிமுகப்படுத்தியவர்கள் தாங்களே என்பதால், இன்றும் தபால் தலையில் இங்கிலாந்து நாட்டின் பெயர் கொடுக்கப்படுவதில்லை. நாட்டின் பெயர் இல்லாத தபால் தலை ஒன்றைக் கண்டால் அது இங்கிலாந்து நாட்டினுடையது என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஓரிடத்தில் சேகரிக்கப்படும் கடிதங்களை மற்றொரு இடத்திற்கு, நாட்டிற்குக் கொண்டு செல்ல, குதிரைகள், உந்து வண்டிகள், கப்பல்கள், புகை வண்டிகள் என்று எல்லாவிதமான போக்குவரத்து முறைகளும் பயன்படுத்தப்பட்டன. நவீன மின்னணுச் சாதனங்கள், தொலை தொடர்பிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும் இந்தக் கடிதப் போக்குவரத்து இன்றும் உலகளவில் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அச்சுத்துறையின் பங்களிப்பு
மனித நாகரிகம் வளர்ந்ததுடன், தகவல் பரிமாற்றத்தின் துவக்கமான வாய்மொழி என்பது எழுத்தாக மாறி அதிலும் நல்ல வளர்ச்சி ஏற்பட்டது. செய்திகளை, கருத்துக்களை, தகவல்களை எழுதத் தொடங்கியபொழுது பல இடர்பாடுகள் ஏற்பட்டன. எழுத்துக்கள் காகிதம், துணி உள்பட ஏதேனும் ஒரு தளத்தில், மயிலிறகு, சீர்செய்யப்பட்ட மூங்கில் போன்ற கருவிகளை பயன்படுத்தி கையால் மட்டுமே எழுதப்பட்டன. ஒரு பிரதி எழுதி முடிக்க பல நாட்கள் தேவைப்பட்டன. எழுதி முடிக்கப்பட்ட பிறகு அதில் பிழைகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றை சரிசெய்வதற்கு மேலும் அதிக காலம் ஆயிற்று அல்லது பிழை நீக்கவே முடியவில்லை. இதுபோன்ற காரணங்களால், எழுதப்பட்ட புத்தகம் ஒன்றின் விலை மிக அதிகமாக இருந்தது. பொதுமக்களுக்கு புத்தகம் என்பது கனவாகவே இருந்தது. அறிஞர்களின் கருத்துக்களும் மக்களிடையே பரவவில்லை.

அச்சுமுறை அறிமுகம் செய்யப்பட்டது. என்றாலும் துவக்க காலத்தில் கடினமான செயல்பாடுகளைக் கொண்டிருந்ததால் அச்சுமுறை விரைவாகப் பரவவில்லை. இதன் மூலம் உருவாக்கப்பட்ட புத்தகங்களும் விலை அதிகமாக இருந்தன.

அச்சுத்துறையில் ஏற்பட்ட இந்த மாற்றத்தைத் தொடர்ந்து நடைபெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகளால், நீராவிக் கருவிகள், மின்சாரம், மின்னுற்பத்தி இயந்திரங்கள், மின் விளக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. பொறியியல் துறையில் நவீன இயந்திரங்கள் உருவாக்கப்பட்டன. எதிரீட்டு அச்சு முறை அறிமுகமானது.

கருத்தும், எண்ணமும், எழுத்தும் நவீன தொழில்நுட்ப வசதிகளால் வளர்ச்சியடைந்தன. உலக நாடுகளில் பெரும்பாலானவற்றில் உள்ளூர் மக்கள் பேசிய மொழிகளில் செய்தித்தாள்கள் மட்டுமல்லாது பல்வேறு இதழ்களும் கொண்டுவரப்பட்டன. தகவல் தொடர்பு முறை என்பது எளிமையடையத் துவங்கியது இந்தக் காலகட்டத்தில் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மின்சாரம் தந்த அறிவியல் கருவிகள்
மனிதகுலத்திற்கு அறிவியல் கொடுத்த மிகப்பெரிய பரிசு மின்சாரம் என்ற சக்தியாகும். ஒரு அணுவின் மையத்தில் உள்ள உட்கருவைச் சுற்றிக் கொண்டிருக்கும் எதிர்மறைத் தன்மை கொண்ட மின்னணுவின் நகர்தலே மின்சாரம் என்றழைக்கப்படுகிறது.

இயற்கை இன்றளவும் கொடுத்துவரும் உயர்நிலை மின்சாரமான மின்னல் என்பது வெளிப்படுத்திய சக்தியை ஆராய்ந்த மனித அறிவு கண்டுபிடித்ததே மின்உற்பத்தி இயந்திரங்களாகும். 1831ல் இங்கிலாந்து நாட்டின் அறிவியலாளர் மைக்கேல் ஃபாரடே என்பார் காந்தம் மற்றும் உலோகக் கம்பி வடங்களை பயன்படுத்தி எளிமையான முறையில் மின்சாரம் உற்பத்தி செய்யும் வழிவகையை உருவாக்கிக் கொடுத்தார். மின்உற்பத்தி இயந்திரத்தின் மூலம் கிடைக்கும் மின்சாரம் நேரடியாக பயன்படுத்தப்படுகிறது; மேலும் மின்கலன், மின்கலன் தொகுதி போன்றவற்றில் சேமித்து வைத்தும் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது.

அறிவியல் என்பது மட்டுமல்லாது எல்லாத் துறைகளிலும் பயன்படுத்தப்படும் கருவிகள் அனைத்தும் அநேகமாக இந்த மின்சாரம் என்ற சக்தியின் வழியே செயல்படும் விதத்திலேயே உருவாக்கப்படுகின்றன. இன்னும் சரியாக சொல்லப்போனால், இன்று உலகம் என்பதும் அதில் உள்ள மனிதகுலம் என்பதும் இந்த மின்சார சக்திக்கு அடிமையாகவே உள்ளனர். உலகில் அத்தனை வசதிகளையும் கொண்டுள்ள அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அண்மையில் ஏற்பட்ட மின்தடை இதனை உணர வைத்தது. இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் நாள் முழுவதும் மின்சாரம் இல்லாமல் வாழப்பழகிவிட்டுள்ளனர். ஆனால் வளர்ச்சியடைந்த நாடுகளில் இது ஏற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலையே உள்ளது. இது இல்லையென்றால் ஒரு மணிநேரம்கூட மனிதனால் வாழ இயலாது என்ற அளவிற்கு, இந்த மின்சாரத்தின் பயன்பாடு அமைந்துவிட்டது.

அந்த வகையில் இன்றைக்கு தொலைத் தொடர்பு என்பதில் பயன்படுத்தப்படும் கருவிகள், வழிமுறைகள் அனைத்திற்கும் அடிப்படை இந்த மின்சாரம் என்பதுவே என்றால் அது மிகையில்லை.

வானொலி மற்றும் தொலைக் காட்சி
எளிமையான முறையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதும் புதிய கருவிகள் கண்டுபிடிப்பதும் விரைவாக நடந்தது எனலாம். அந்த வகையில் தொலை தூரத்தில் உள்ளவர்களுக்கு விரைவாக செய்தியை அனுப்பும் சங்கேதக் குறியீடுகளாலான தந்தி முறை உருவாக்கப்பட்டது. சாமுவேல் மோர்ஸ் என்பவர் கண்டுபிடித்த, அவர் பெயராலேயே குறிப்பிடப்பட்ட மோர்ஸ் முறை 20ம் நூற்றாண்டின் இறுதி வரையிலும் பயன்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். தந்தி என்பது தகவல் தொடர்பில் பெரிய மாற்றத்தைக் கொடுத்தது என்றால் அது மிகையாகாது. பயன்பாட்டில் இருந்த காலத்தில் பெரிய அளவில் மதிக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பமாகவே இது இருந்தது. இதைப் பழகுவதற்கு பயிற்சிப் பள்ளிகளும் நடத்தப்பட்டன. தற்பொழுதும் தந்தி என்ற தகவல் பரிமாற்ற முறை பயன்பாட்டில் உள்ளது. ஆனால் அதன் வேகம் மிகமிகக் குறைவாகிப் போயுள்ளது.

ஒலி அலைகளை மின்காந்த அலையாக மாற்றி தொலைதூரத்திற்கு அனுப்பும் முறை உருவாக்கப்பட்டது. வான் வழியே அனுப்பப்பட்ட மின்காந்த அலைகளைப் பெற்று ஒலி அலையாக மாற்றிக் கொடுத்த வானொலிப் பெட்டிகள் பயன்பாட்டிற்கு வந்தன. 1826ம் ஆண்டில் அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல் உருவாக்கிய இந்த வானொலி தொழில்நுட்பம், 20ம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் பெரிய மாற்றத்தைக் கண்டது. அந்தப் பெரிய மாற்றத்தால், வானொலிப் பெட்டிகள் உருவத்தில் சிறியதாகிப் போயின. ஆம், அதுவரையிலும் பெரிய பெரிய காற்றில்லா குழல்களைப் பயன்படுத்தியே வானொலிப் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. 1950களில் வளர்ச்சியடைந்த மின்னணுத்துறை சின்னஞ்சிறிய உருவிலான மின்மப் பெருக்கிகளை உருவாக்கிக் கொடுத்தது. இவற்றை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வானொலிப் பெட்டிகளும் அந்தப் பெயரரேலயே – டிரான்சிஸ்டர் என்றே – அழைக்கப்பட்டன. இந்த மின்மப் பெருக்கி உருவில் சிறியதாக இருந்தாலும் ஆற்றலில் மிகப் பெரியதாக இருந்ததால், அதுவரையிலும் மேசையின் மீது வைக்கும் அளவிற்குப் பெரியதாக இருந்த வானொலிப் பெட்டியின் உருவம் சுருங்கி சட்டைப் பைக்குள் அடங்கும் அளவிற்கு வந்துவிட்டது. 20ம் நூற்றாண்டின் இறுதியில் உருவாக்கப்பட்ட ஐசி என்று குறிப்பிடப்படும் ஒருங்கிணைந்த சில்லுகள், பண்பலை வரிசை போன்றவற்றால் வானொலிப் பெட்டி என்பது முற்றிலுமாக மாறிப்போய்விட்டது. சாவிக்கொத்து முனையாகவும், பேனா மூடியாகவும்கூட இவை தற்போது உருவாக்கப்படுகின்றன.

ஒலியலையை தொலைதூரத்திற்கு அனுப்ப உதவிய அறிவியல், ஒளியையும் அவ்வாறே மாற்றவும் செய்தது. 1926ல் இங்கிலாந்து நாட்டின் ஆய்வாளர் ஜான் லோகி பேர்டு தொலைக் காட்சிப் பெட்டியை உருவாக்கி செயல்படுத்திக் காட்டினார். இதனால் ஓசையாக மட்டும் கேட்கப்பட்டவற்றை, காட்சிகளாகவும் வண்ணத்திலும் பார்க்கவும் முடிந்தது. தொலைக் காட்சித் தொழில்நுட்பம் வளர்ந்து இன்று மக்கள் ஏறக்குறைய அதற்கு அடிமையாக இருக்கும் நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

தொலைபேசி மற்றும் தொலைக் கருவிகள்
காற்றுவழி அனுப்பப்பட்ட மின்காந்த அலையைப் பெற்று ஒலியலையாக மாற்றும் செயல்புரிந்த வானொலி தொலைத் தொடர்பில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. என்றாலும் இது ஒருவழித் தகவல் தெரிவிக்க மட்டுமே பயன்பட்டது. மறுமுனையிலிருந்து தகவல் பெறுவது இயலாததாக இருந்தது. இதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் முடிவாக, 1876ல் அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல் என்ற அமெரிக்கர் கம்பிவழியாக இருமுனை தொடர்பை ஏற்படுத்திய தொலைபேசிக் கருவியை செயல்முறையாக இயக்கிக் காட்டினார். இது தொலைத் தொடர்பினை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றது.

இந்தத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில், இதன் தொடர்ச்சியாக தொலை அச்சு, தொலைநகல் போன்ற கருவிகளும் உருவாக்கப்பட்டன.

கணினி
தொலைத் தொடர்பு மேலும் வளர்ச்சியடைந்தது. கணினியின் வரவு மற்றும் அதன் தொழில்நுட்பம் 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் விளைவாக, அறிவியல் மனிதகுலத்திற்குக் கொடுத்த அன்பளிப்பு கணினி தொழில்நுட்பமாகும். மனித மூளையால் உருவாக்கப்பட்ட, மனித மூளைக்கு வேலையை குறைத்த கருவி; அறிவு சார்ந்த செயல்பாடுகளுக்காக அறிவியல் உருவாக்கித் தந்த இயந்திரம். எண்ணியல் என்றழைக்கப்படும் இரு இலக்க முறை என்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த கணினி தொழில்நுட்பம் அமைந்துள்ளது.

உடல் போன்ற, தொட்டு உணரும் தன்மை கொண்ட வன்பொருட்கள், உயிர் போன்ற கண்ணிற்கும் புலப்படாத மென்பொருள் ஆகிய இரண்டும் இணைந்ததே கணினி என்ற இயந்திரமாகும். இவை இரண்டையும் செயல்பட வைப்பது மின்சாரம் என்ற சக்தியாகும்.

மின்னணுக் கருவிகள் மற்றும் வேறுபல உறுப்புக்களால் உருவாக்கப்பட்டதே வன்பொருளாகும். மைய செயலகம், கணித்திரை, விசைப்பலகை, சுட்டுக்கருவி என்ற அடிப்படையான பகுதிகளுடன், ஒலிபெருக்கி, தலைத் தொகுதி, அச்சு இயந்திரம், ஒளி வருடி போன்ற துணை பகுதிகளும் சேர்ந்ததே ஒரு கணினி என்று குறிப்பிடப்படுகிறது. இவற்றுடன், நிலை வட்டு, பேனா வட்டு, நினைவக அட்டை படிப்பான் போன்ற பிரித்தெடுக்கும் இயக்கிகளும் கணினிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

தாய்ப் பலகை, ஒலிபெருக்கி, சிறு மின் விசிறி, மின்சுற்று அட்டைகள், இவற்றை இணைக்கப் பயன்படுத்தியுள்ள கம்பி வடங்கள் உட்பட பற்பல உறுப்புகளை பயன்படுத்தியே கணினியின் மைய செயலகம் உருவாக்கப்படுகிறது. இதில் சுட்டுக்கருவி, ஒளி வருடி, பேனா வட்டு உள்ளிட்ட துணைக் கருவிகளை இணைப்பதற்கான பல துறைகளும் கொடுக்கப்படுகின்றன.

கணினிகள் பல்வேறு வகைகளில் உருவாக்கப்படுகின்றன. மேசைக் கணினி, மடிக் கணினி, கையகக் கணினி என்பன பொதுவான பயன்பாட்டில் உள்ளன. கணினிகளில் பல்வேறு மென்பொருட்கள் நிறுவப்படுகின்றன. குறிப்பாக கணினிகளை செயல்படுத்துகின்ற செயற்பாடு பொறியமைவு என்ற மென்பொருள் அனைத்து கணினிகளிலும் நிறுவப்பட்டிருக்க வேண்டும். இதற்கு மேல், அந்தக் கணினியை பயன்படுத்துகின்றவர், தாம் செயல்படும் பகுதிக்கு ஏற்ற, தனது தேவைகளை செய்து முடிப்பதற்கு உதவுகின்ற மென்பொருட்களை தமது கணினியில் நிறுவிக் கொள்ளுகின்றார். அலுவலகப் பணிகளை செய்து முடிக்க எம்எஸ் ஆபீஸ் தொகுப்பு, கணினி வரைகலைப் பகுதிக்கான கோரல்டிரா, போட்டோஷாப், இன்டிசைன், இல்லஸ்ட்ரேட்டர் போன்ற வரைகலை மென்பொருட்கள், பொறியியலாளர்களுக்கான ஆட்டோகேட் என்று அவரவரது துறைகளுக்கு ஏற்ற மென்பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன.

தங்களது கணினிகளில் உரிய உரிமம் பெற்ற மென்பொருட்களை நிறுவுதலே முறையாகும். எனினும் ஆசிய நாடுகளில் பெரும்பாலும் கள்ளத்தனமாக நகலெடுக்கப்பட்ட மென்பொருட்களே பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு வேறுபல காரணங்களிருந்தாலும், முதன்மையானது மிக அதிகமான விலை என்பதுவேயாகும். இது மாற வேண்டும்.

கணினிகளின் பயன்பாடு
கணினியின் பயன்பாடு பற்றி, அவை அறிமுகம் செய்யப்பட்ட நாட்களில், இன்று பெருமளவில் பயன்பாட்டில் உள்ள சொந்தக் கணினி வகைகளின் தயாரிப்பாளர்களான ஐபிஎம் நிறுவனத்தின் தலைவர் கூறியதாவது ‘உலகளவில் இந்தக் கணினிகள் மொத்தம் ஐந்திற்கு மட்டுமே தேவை இருக்கும்’.

அதாவது ஐந்தே ஐந்து கணினிகள் மட்டுமே உலகத்தில் பயன்படுத்தப்படும்; அதற்கு மேல் தேவையிருக்காது, பயன்படுத்தமாட்டார்கள் – என்று அவர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் நடந்துள்ளது என்ன! மேற்கத்திய நாடுகளில் கணினி இல்லாத வீடே கிடையாது எனலாம். இந்தியா போன்ற நாடுகளிலும் பயன்பாடு பெருமளவு அதிகரித்து வருகிறது.

பொதுவாகக் கணினிகள் தனித் தனியாக ஒன்றுக்கொன்று எந்தத் தொடர்பும் இல்லாமல் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை சொந்தக் கணினி என்று குறிப்பிடுகின்றனர். வீடுகளில் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இந்த வகையிலேயே கணினிகள் நிறுவப்படுகின்றன. இவ்வாறில்லாமல் ஒன்றுக்கொன்று கம்பி வடத்தால் இணைக்கப்பட்ட நிலையில் கணினிகள் அமைக்கப்படுகின்றன. இவற்றிற்கு பிணையக் கணினிகள் என்று பெயர். இணைக்கப்பட்டுள்ள பிணையக் கணினிகளில் ஒன்று மட்டும் புரவலராக அதாவது தலைமைக் கணினியாக செயல்படுகிறது. மற்ற கிளையன் கணினிகள் இந்தப் புரவலர் கணினியிலிருந்து தரவுகளைப் பெற்று செயல்படுகின்றன.

இந்தக் கணினிகளின் இணைப்பான பிணையக் கட்டமைப்பை நிர்வகிக்கத் தனியாக பிணைய நிர்வாகிகள் உள்ளனர். இந்த பிணையத் தொழில்நுட்பம் என்பது பல்வேறு நிலைகளில் உருவாக்கப்படுகிறது. ஒரு அறைக்குள் செய்யப்படும் இணைப்புகளே பிணையம் என்றழைக்கப்படுகிறது. ஒரு நிறுவனத்தின், ஒரே கட்டிடத்திற்குள், பல மாடிகளில், பல அறைகளில் உள்ள கணினிகளின் இணைப்பு உள் பகுதி பிணையம் என்று குறிப்பிடப்படுகிறது. இவை அல்லாமல் குறிப்பிட்ட நிறுவனத்தின், பல்வேறு நகரங்களில் உள்ள அலுவலகங்களில் உள்ள கணினிகளின் இணைப்பை உள் இணையம் என்று அழைக்கப்படுகிறது.

உலகளவில் பல்வேறு நாடுகள், நகரங்கள், அலுவலகங்கள் என்று எல்லா இடங்களிலும் நிறுவப்பட்டுள்ள சொந்தக் கணினி மற்றும் பிணையக் கணினிகள் ஆகியவற்றை இணைக்கும் இணைப்பையே இணையம் என்று அழைக்கின்றோம்.

இணையம்
தற்போது உருவாக்கப்படும் கணினிகளில், வளர்ந்துள்ள கணினி தொழில்நுட்பத்தால், தொலைபேசி கம்பி வடத்தையும் இணைத்துக் கொள்ள முடிகிறது. இதனால் கிடைத்த அரியதொரு பயன்பாடே இணையம் என்பதாகும்.

ஒலி மற்றும் ஒளியலைகளால் இயங்கியவை தொலைக்காட்சியும் வானொலியும் ஆகும். இரு இலக்கத் முறையில் உருவாக்கபட்டது கணினி தொழில்நுட்பம். கம்பி வடம் மற்றும் காற்றுவழி தொடர்பை கொடுத்தது தொலைபேசி இணைப்பு. இவை அனைத்தையும் உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டதே இணையத் தொழில்நுட்பமாகும்.

உலகத்தையே சுருக்கி நமது மேசைக்குக் கொண்டுவந்துவிட்ட அறிவியல் தந்த தொழில்நுட்பமே இணையம் என்பதாகும். இது 1960களில் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புத் துறைக்காக உருவாக்கப்பட்டதாகும். 1990களின் இடையில் இந்தத் தொழில்நுட்பம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்த பத்தாண்டுகளில் தொலைத் தொடர்புத் துறையில் மட்டுமல்லாது பல்வேறு துறைகளின் அடிப்படையையே மாற்றியமைத்து விட்டது இந்தத் தொழில்நுட்பம்.

உலகெங்கிலும் நிறுவப்பட்டுள்ள புரவலர் கணினிகளில் பதியப்பட்டுள்ள செய்திகளை, தரவுகளை விரைவாகத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுப்பதற்காக தோடுபொறிகள் இணையத்தில் கிடைக்கின்றன. உண்மையில் இவை இயந்திரங்கள் அல்ல; கட்டளை நிரல் என்று குறிப்பிடப்படும் இவையும் ஒரு கணினி தரவுகளைச் செய்முறைப்படுத்தும்படி செய்வதற்கான தொடர்வரிசை நிரல்களேயாகும்.

இணையம் வழங்கும் வசதிகள்
இணையம் மூலம் இரண்டு முதன்மையான வசதிகள் கிடைக்கின்றன. முதலாவது வலைதளப் பக்கங்கள் என்பதாகும். இரண்டாவதாக மின்னஞ்சல் என்பதுமாகும். இணையத்தில் உள்ள வையக விரிவு வலை என்பதில் தரப்படுபவை வலைதளங்களாகும். இவை ஒவ்வொன்றும் தங்களுக்குள் ஏராளமான செய்திகளைக் கொண்டுள்ளன. அந்தச் செய்திகளை வடிவமைத்துப் பக்கங்களாக கொடுத்துள்ளனர். இதனால் வலைதளம் என்பது பல பக்கங்களைக் கொண்டு ஒரு புத்தகம் போலவே காட்சியளிக்கிறது. ஒரு வலைதளத்தைத் திறப்பதற்கு அதற்கான முகவரி தேவை.

கணினியில் இந்த வலைதளப் பக்கங்களைத் திறந்துபார்ப்பதற்காக இணைய உலவி மென்பொருட்கள் கிடைக்கின்றன. அநேகமாக இவை அனைத்தும் இலவசமாகவேத் தரப்படுகின்றன. இவற்றில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஐஈ என்று குறிப்பிடப்படும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் என்பதும் நெட்ஸ்கேப் நாவிகேட்டர் என்பதும் குறிப்பிடத்தக்கனவாகும். எனினும் தற்போது பலதரப்பட்ட உலவிகள் கிடைக்கின்றன. தேவையானவற்றை நேரடியாக இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நமது கணினியில் நிறுவிக் கொள்ள முடிகிறது.

இணையம் என்பது மிகப்பெரிய நூலகம் போலவே காணப்படுகிறது. என்றாலும், நூலகத்தில் கிடைப்பதுபோல எழுத்துக்கள் மற்றும் படங்களால் ஆன செய்திகளை மட்டுமல்லாது, பல ஊடகம் என்ற நிலையில் தேவையான எதனையும் பெற முடிகிறது. ஒலி, ஒளி, சலனப்படம், அநேகமாக உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் செய்திகள், எல்லாவகையான ஒளிப் படங்கள் என்று அனைத்தும் இணையத்தின் வலைதளப் பக்கங்கள் வழியாகக் கிடைக்கின்றன.

இவை தவிர தற்போது இணையத்தில் மிகவும் பெரிய அளவில் பயன்பாட்டில் உள்ளவை சமுதாய வலைத்தளங்களாகும். கட்டற்ற களஞ்சியமாகக் குறிப்பிடப்படும் விக்கிப்பீடியா, முகப்புத்தகம், வலைப்பதிவு போன்றவை ஏராளமான மக்களால் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் பல்வேறு தகவல்களை ஒருசில நிமிடங்களில் உலகெங்கும் பரப்புவதில் இவை தனித்துவம் பெற்றும் திகழுகின்றன.

மின்னஞ்சல்
தொலைத் தொடர்பில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, இணையம் வழியே கிடைக்கும் மின்னஞ்சல் வசதி என்றால் அது மிகையாகாது. ஒரு கடிதத்தை பல நாடுகளில் உள்ள பல்வேறு நபர்களுக்கு அனுப்பவும், பல்வேறு இடங்களிலிருந்து பெறப்பட்ட பல கடிதங்களை ஒரு நபருக்கு அனுப்பவும் வசதி உள்ளது. உலகிலேயே மிகவும் குறைவான செலவில், அதிக தூரத்தில் உள்ளவர்களுக்கும், மிகவும் விரைவாக அதாவது குறைவான நேரத்தில் சென்றடைவது இந்த மின்னஞ்சலின் சிறப்பாகும். இதன் வேகத்திற்கு முன்னால், முந்தைய கடித அஞ்சல் முறை நத்தை அஞ்சல் என்று குறிப்பிடப்படுகிறது. தமிழ் உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் மட்டுமல்லாது, உலகளவில் ஏராளமான மொழிகளில் மின்னஞ்சல் மூலமாக கடிதங்களை அனுப்ப முடிகிறது.

இணையம் வழி தகவல் தொடர்பிற்காகவே தற்போது ஒருங்குறி எழுத்து முறை உருவாக்கப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டுவருகிறது. கணினிக்கான செயற்பாடு பொறியமைவு மென்பொருளிலேயே இந்த ஒருங்குறி எழுத்துருக்கள் கொடுக்கப்பட்டு விடுகின்றன. எனவே தனியாக எழுத்துருக்களை நிறுவ வேண்டும் என்ற தேவையில்லை. இதனால் ஒரு மொழியில் உருவாக்கப்பட்டு அனுப்பப்படும் கடிதம், பெறுகின்ற இடத்தில், அந்த மொழிக்கான தனியான எழுத்துரு இல்லாத நிலையிலும் படிக்கப்படும் நிலையில் கிடைக்கின்றது.

செல்லும் இடமெல்லாம் செல்பேசிகள்
பொதுவாக எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பும் மனித குலத்தில் பரவுவதற்கு அதிக நாட்களை எடுத்துக் கொண்டன. வானொலி பிரபலமாகி வரவேற்பைப் பெறுவதற்கு சுமார் 30 ஆண்டுகள் ஆயிற்று; ஒலி-ஒளி இணைந்து வழங்கிய தொலைக்காட்சிக்கோ 13 வருடங்களாயிற்று; கம்பிவழி தொலைக்காட்சித் தொடர்பு வசதி தொலைக்காட்சிப் பெட்டிகளை சென்றடைய 10 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது; இவற்றுடன் ஒப்பிடுகையில் இவற்றைவிட பல மடங்கு அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தப்படுகின்ற நிலையில் உள்ள இணையம் அதற்கு எடுத்துக் கொண்டது வெறும் 5 வருடங்கள் மட்டுமேயாகும்.

எனினும் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதால், இணையத்தையும் மிஞ்சிய தொழில்நுட்பம் ஒன்று அதனைவிட பெரிய எண்ணிக்கையில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஆம்! வளர்ந்த நாடுகளின் மக்கள் எண்ணிக்கையில் 100 சதவீதத்திற்கும் அதிகமாகவும், வளரும் நாடுகளில் குறைந்தபட்சம் 50 சதவீதத்திற்கும் அதிகமாகவும் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமாக உள்ளது “செல்பேசி” எனும் சின்னஞ்சிறு கருவியாகும்.

அறிமுகம் செய்யப்பட்டபோது, பேசுவது என்ற செயலுக்காக மட்டுமே இது பயன்படுத்தப்பட்டது. மேலும் செலவு அதிகமான தொலைத் தொடர்பு வசதியாகவும் இருந்தது. துவக்க காலத்தில் வெளி அழைப்புகளுக்கு இந்திய பண மதிப்பில் சுமார் 16 ரூபாய்களும், வரும் அழைப்புகளுக்கு 10 ரூபாய்களும் கட்டணமாக இருந்தது. ஆம், நமக்கு வரும் அழைப்புகளுக்கும் நாம் தான் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. (அஞ்சல் வசதி துவங்கப்பட்ட காலத்தில், கடிதம் பெறுகின்றவரே கட்டணம் செலுத்தி பெறும் முறையே இருந்தது. அதனால் ஏற்பட்ட பல்வேறு தொல்லைகளின் முடிவாகவே தபால் தலைகள் உருவாக்கப்பட்டு, கடிதம் அனுப்புகின்றவரே கட்டணத்தையும் செலுத்தும் முறை வந்தது).

ஆனால் மிக வேகமாக மாற்றம் கண்ட இந்தத் தொழில்நுட்பம் இன்று செல்பேசிகளின் உருவத்தை மட்டுமல்லாது, செலவையும் குறைத்து விட்டது. ஆனால் நடைமுறையில் இன்று செல்பேசி என்ற இந்தச் சின்னஞ்சிறிய கருவியானது, தொலைபேசி வசதிக்காக மட்டும் பயன்படுத்துவது என்பது முடிந்துவிட்டது.

செல்பேசியின் மாறிவரும் உருவமும் வளர்ந்துவரும் தொழில்நுட்ப வளர்ச்சியும்
மின்னணுவியலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள கருவியே செல்பேசியாகும். அச்சிட்ட மின்சுற்று வழிப்பலகை ஒன்றின்மீது மின்னணு உறுப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. துவக்கத்தில் கம்பி வழி இணைப்பும் பயன்படுத்தப்பட்டது. அத்துடன், செல்பேசியின் பல்வேறு செயல்பாடுகளுக்கும் தனித்தனியாக ஒருங்கிணைந்த மின்சுற்று சில்லுகள் பொருத்தப்பட்டன. இதனால் நிறைய ஒருங்கிணைந்த மின்சுற்று சில்லுகளும் அவற்றிற்கிடையே, மின்மப் பெருக்கி, இருமுனையம், ஒளி உமிழும் இருமுனையம், தடுப்பான் (மின்தடை), மின்தேக்கி, தூண்டுவான் போன்றவையும் நிறைய அளவில் பொருத்தப்பட்டிருந்தன. இதனால் செல்பேசியின் அளவும், உருவமும் சற்றே பெரியதாகவே இருந்தது.

ஆனால் விரைவாக வளர்ந்த தொழில்நுட்ப ஆராய்ச்சி, ஒருங்கிணைந்த மின்சுற்று சில்லுகளின் செயலை அதிகரித்து உருவத்தை சுருக்கியது. இதனால் பல சில்லுகள் பொருத்தப்பட்ட இடத்தில் ஒன்று அல்லது இரண்டு சில்லுகள் மட்டுமே போதும் என்ற நிலை ஏற்பட்டது. அத்துடன் மின்மப் பெருக்கி உள்ளிட்ட அனைத்து உறுப்புகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுவிட்டது. இதனால் செல்பேசியின் அளவு குறைந்து உருவம் சிறியதாகிப்போனது.

என்றாலும், புதிய தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டு, செல்பேசியின் செயல்பாடுகள் அதிகரிக்கப்பட்டது. பேசுவதற்கு மட்டுமிருந்த அதன் செயல் மாறிவிட்டது. பாடல்களை செவிமடுக்க, திரைப்படங்களை பார்க்க, திரைப்பட வல்லுநர்கள் குழு என்ற ஆங்கில சொற்றொடரின் குறும்பெயரான எம்பீஈஜி (எம்பெக்) என்பதில் 3,4 ஆகிய நிலைகள் பயன்படுத்தப்படுகின்றன.

குறுஞ்செய்திகள் அனுப்ப முடிகிறது; பெற முடிகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, தற்போது செல்பேசிகள் வழியே இணைய வசதியும் கிடைக்கின்றது. வலைதளப் பக்கங்களை பார்வையிட முடிகிறது; மின்னஞ்சல் அனுப்பவும், பெறவும் முடிகிறது. மூன்றாம் தலைமுறை அலைவரிசையின் உதவியுடன் நேரடியாக முகத்தைப் பார்த்து பேசிக்கொள்ளவும் முடிகிறது.

மெதுவாகத் துவங்கி, வேகமாக வளர்ந்து, விரைவாகப் பரவிவரும் செல்பேசித் தொழில்நுட்பத்தில் மாற்றங்களும் ஏராளமாகக் கொடுக்கப்படுகின்றன. இவற்றை முறையாக பயன்படுத்தி பலன் பெறுவதே நமது செயலாக உள்ளது.

தொலை தூரத்தில் இருந்த தொலைத் தொடர்பு வசதி என்பது இன்று மனிதனின் சட்டைப்பைக்குள் வைக்கப்பட்டுவிட்டது என்றுதான் குறிப்பிடவேண்டும். துவக்க காலத்தில் விலைக்கு விற்கப்பட்ட, செல்பேசிக்கு அடிப்படையான சந்தாதாரர் தகவமைவு (கூறு) அட்டைகள் தற்போது இலவசமாகவே கிடைக்கின்றன.

தலைமுறைகள் கடந்த தொழில்நுட்பங்கள்
மனித வாழ்க்கை முறையில் ஒரு தலைமுறை என்பது 30 ஆண்டுகளைக் குறிக்கும். ஆனால் தற்போதைய மின்னணுத் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு தலைமுறை என்பது பத்து ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தை, இன்னும் சரியாகச் சொல்லப்போனால் 3 முதல் 5 ஆண்டுகளை மட்டுமே குறிக்கின்றது என்றே தோன்றுகிறது. முதல் தலைமுறை தொழில்நுட்பம் என்று குறிப்பிடப்படும் கம்பி வழி தொலைபேசி வசதி பல ஆண்டுகள் புழக்கத்தில் இருந்தது. அதில் கம்பியில்லா இணைப்பும் கிடைத்தது.
ஆனால் 2ம் தலைமுறை கருவியாக, காற்றுவழி மின்காந்த அலை மூலம் தொடர்பை ஏற்படுத்தி செயல்பட்ட செல்பேசி உருவாக்கப்பட்டது. இது அறிமுகப்படுத்தப்பட்ட 10 ஆண்டுகளுக்கு உள்ளாக, 3ம் தலைமுறை அலைவரிசையும், அதனை பயன்படுத்தும் செல்பேசி கருவியும் உருவாக்கப்பட்டுவிட்டன. தற்போது நான்காம் தலைமுறை தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. செல்பேசி வழியாக இணையம் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கின்றன.
இதேபோல, தொலைக்காட்சிப் பெட்டி வழியாக இணையத் தொடர்பு கிடைக்கவும் ஆராய்ச்சிகள் நடந்தவண்ணம் உள்ளன. என்றாலும் கணினி வழியாகவும், செல்பேசி வழியாகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடிகிறது என்பது தொழில்நுட்ப வளர்ச்சியையே காட்டுகிறது.

கம்பிகள் மூலமாக தரைவழித் தொடர்பு, காற்றுவழித் தொடர்பு என்று வளர்ந்த தொழில்நுட்பம் இன்று பூமிக்கு வெளியே, வான்வெளியில் தனித்து நிறுத்தப்பட்டுள்ள செயற்கைக் கோள்கள் வழியே செயல்படுத்தப்படுகிறது. இதனால் நாடுவிட்டு நாடு என்பது மறைந்து கண்டம் விட்டு கண்டம் பரிமாற்றம் செய்து கொள்ளுவது மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுவிட்டது.

வளர்ச்சியும் தொடர்ச்சியும்
சின்னஞ்சிறிய செல்பேசிக்குள் சிக்கலான பலசெயல்பாடுகள் உள்ளன. எங்கேயோ நடைபெறும் நிகழ்வுகளை நேரடியாக காணமுடிகிறது. தொலைதூரத்தில் எங்கோ ஓரிடத்தில் பேசுகின்ற ஒருவரது உரையை செவிமடுக்க முடிகிறது. அறிவியல் கருவிகளால் நிகழ்த்தப்படும் இந்த அதிசயங்கள் எவ்வாறு நடக்கின்றன. இந்தக் கருவிகள் வானத்திலிருந்து ஏதேனும் இறைதூதுவர் கொடுத்ததா? இவற்றிற்கு வெளியே நின்று சற்றே சிந்தித்துப் பார்த்தால் ஒரு வேடிக்கை புரிகிறது.

சில காலத்திற்கு முன்பாக இந்தக் கருவிகள் எங்கே இருந்தன? யாரேனும் பதுக்கி வைத்திருந்தார்களா? ஒளித்து வைத்திருந்தார்களா? இல்லை. நிச்சயமாக இல்லை. இந்தக் கருவிகள் அனைத்தும் அவற்றிற்கான மூலப் பொருட்களாக, இயற்கையுடன் இணைந்திருந்தன. நிலத்திற்குள்ளிருந்து எடுக்கப்பட்ட தாது எண்ணெய், காற்று, காந்தம், இவற்றுடன் மின்சக்தி சேர்ந்து இன்று இந்தக் கருவிகளாக பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளன என்று கூறலாமல்லவா!

இதைத் தொடர்ந்து அடுத்த கேள்வி எழுவதை தவிர்க்க இயலவில்லை? இவை எவ்வாறு வளர்ந்தன? யாராவது உரம் போட்டு தண்ணீர் ஊற்றினார்களா? அல்லது இயற்கையாகப் பெய்த மழையால் வளரும் காளானாக தானே வளர்ந்தனவா? இல்லை.

மனித அறிவு; தேடுதலில் ஆர்வம் கொண்ட மனித அறிவு இவற்றை உருவாக்கியது. துவக்க காலத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகள் செயல்படுத்த ஏராளமான ஆண்டுகள் ஆயிற்று. ஆனால் அந்தக் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், இன்றைய நாட்களில் புதிய படைப்புகள் உருவாக்க மிகக் குறைவான நாட்களே தேவைப்படுகிறது. தொழில்நுட்ப ஆராய்ச்சி மிகுதியாக செய்யப்படுவதாலும், இதற்காகவென்றே பல குழுக்கள் திறம்பட செயல்படுவதாலும் கண்டுபிடிப்புகள் விரைவாகக் கிடைக்கின்றன. விபத்தாக நடந்த கண்டுபிடிப்புகள் அல்லாமல், உருவாக்கியே ஆகவேண்டும் என்று கண்டுபிடிப்புகள் செய்யப்படுகின்றன.

இவை எல்லாவற்றிற்கும் அடிப்படையாக அமைந்தது, தொலைத் தொடர்பு வளர்ச்சியாகும். அறிவியல் கட்டுரைகள், ஆராய்ச்சிகள் உடனுக்குடன் அறிஞர்களைச் சென்று சேருகிறது. தொலைபேசி, செல்பேசி, தொலைநகல், கணினி தொழில்நுட்பம், இணையம் என்று உருவாக்கப்பட்டுள்ள அத்தனை வசதிகளும் தாமதம் என்பதைத் தவிர்த்து வேகம் என்பதை கொடுத்துவிட்டன.

இதற்கு முடிவு என்பது உள்ளதா? தெரியவில்லை. மனிதனுக்கு போதும் என்பது அந்த நேரத்து உணவு ஒன்றில் மட்டுமே சொல்லப்படுகிறது. வேறு எதிலும் போதும் என்ற சொல் பயன்படுத்தப்படுவதே இல்லை. என்றாலும் இதனை நினைத்திருந்தால்…? தொலைபேசி போதும் என்றிருந்தால் இன்று செல்பேசி கிடைத்திருக்காது! வானொலி போதும் என்றிருந்தால் இன்று தொலைக்காட்சி கிடைத்திருக்காது! இப்படி பல கண்டுபிடிப்புகள், தங்களுக்கு அடுத்து உருவாக்கப்படும் கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையாகவே அமைந்துவருவது வியப்பிற்குரிய ஒன்றுதானே!

சிந்தனைக்குரிய கேள்வியாகவே இது உள்ளது. கத்தி என்ற கருவி, அதனை பயன்படுத்துகின்றவரைப் பொறுத்து உதவியாகவோ தொல்லையாகவோ அமைகிறது அல்லவா? அதுவேதான் இன்றைய கண்டுபிடிப்புகள் எல்லாம். தொலைத் தொடர்பிற்காக உருவாக்கப்பட்ட செல்பேசிகள் நடைமுறையில் தொல்லையளிக்கும் கருவியாகக் கருதப்படுகிறது. இந்த வசதியே இல்லாத காலத்தில் வேலைகள், செயல்கள் விரைவாகவே நடைபெற்றன. தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட இது, தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டே இருப்பதால் செயல்பாடுகளைக் குறைத்துவிடுகிறது; வேலைக்குத் தொல்லையாகவும் அமைகிறது.

குறிப்பாக தொலைக்காட்சிகள் வழியாகக் காட்டப்படும் விளம்பரங்கள், செல்பேசிகளை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்ற போலியான தோற்றத்தைக் காட்டுகின்றன. மக்கள் இதனையே கடைபிடிக்கவும் செய்வது சற்றே கவலைக்குரிய தாகும். ஆனால், நேரமும் நாட்களும் முடிந்தபிறகு தொலைக்காட்சிப் பெட்டி தமக்குத் தொல்லை தரும் பெட்டியாக இருப்பதை உணர்ந்து கொள்ளுகின்றனர். ஆனால், கடந்த கால நிகழ்வுகளிலிருந்து எதனையும் கற்றுக் கொள்ளாத மனிதன் மீண்டும் அந்தத் தொலைக்காட்சியை தொடர்ந்து பயன்படுத்துவது வேடிக்கையான செயலாகவே உள்ளது.

அறிவியல் தந்த எதுவும் நிச்சயமாக தொல்லைகளை கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டவை அல்ல. பயன்படுத்துபவர்களின் செயல்பாடுகளே அந்தக் கருவியை வெற்றிகரமான ஒன்றாகவோ அல்லது தொல்லைதருவதாகவோ மாற்றுகிறது.

முடிவுரை
குகைச் சுவற்றில் படமாக வரைந்து தகவல் தெரிவித்த மனிதன் இன்று செல்லும் இடம் எல்லாம் எளிதாகத் தொடர்பு கொள்ளும் செல்பேசிக் கருவியை பயன்படுத்துகின்றான். ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு கண்டுபிடிப்பு என்பது மாறி, 100, 50, 10, 4, 1 ஆண்டுகளாகச் சுருங்கி இன்று தினந்தோறும் ஏதேனும் ஒரு கண்டுபிடிப்பு அறிமுகம் செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

என்றாலும் இது கவலைக்குரியதாகவே தோன்றுகிறது. இயற்கைக்கு மாறாக, எதிராக உருவாக்கப்படும் எது ஒன்றும் நிலைப்பதில்லை; அல்லது காலப்போக்கில் இயற்கையாலேயே அழிக்கப்பட்டும் விடுகிறது. மேலும் புதிதாகத் தரப்படும் கண்டுபிடிப்பு பழையதை கொன்றுவிடுகிறது. வானொலிப் பெட்டி, பேஜர் என்று குறிப்பிடப்படும் செய்திக் குறிப்பனுப்பிய கருவி, துவக்க கால செல்பேசிகள், கணினிகளில் பயன்படுத்தப்பட்ட நெகிழ் வட்டுக்கள், நெகிழ் வட்டுப் பெட்டிகள், குறுவட்டுக்கள், பழைய தட்டச்சு இயந்திரங்கள், கையால் அச்சுக் கோர்த்த அச்சு முறை, ஒலிநாடாக்கள், ஒளிக்காட்சி பேழைகள், ஒளிக்காட்சி பேழை இயக்கிகள், ஒலித்தட்டுகள், ஒலித்தட்டு இயக்கிகள், கருப்பு வெள்ளை ஒளிப்படங்கள், நிழற்படக் கருவிகள் என்று ஏராளமான முந்தைய தலைமுறைக் கருவிகள் இன்று கண்காட்சிகளிலும் அருங்காட்சியகங்களிலும் இடம்பெறும் நிலை ஏற்பட்டுள்ளதை மறுக்க இயலாதல்லவா?

அந்த வகையில் இன்று பயன்பாட்டில் உள்ளவை நிச்சயம் நாளை நீக்கப்படவுள்ளன என்பது தெளிவாகிறது. மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது என்பார்கள். ஆனால் இன்று அறிவியல் வளர்ச்சியால் அந்த மாற்றமும் மாறுபட்டு அமைகிறது என்பது தெரிகின்றதல்லவா?

இயற்கை காட்டிய எதிரொலி இன்று பல்வேறு வகைகளில் வளர்ச்சியடைந்துவிட்டது. தகவல் தொடர்பு என்பது மனித நாகரீகத்தின் அடிப்படையாக மாறிவிட்டது. அதனால் தானோ என்னவோ இன்று சாலையில் நடந்து செல்லும், எளிமையான, ஏழ்மையான மனிதர்களும் செல்பேசியை பயன்படுத்தியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்கு வந்துள்ளனர்.

காற்றுவழியாக அனுப்பப்படும் செல்பேசிக்கான மின்காந்த அலைகள் மனித உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கின்றது என்ற அதிர்ச்சித் தகவலும் வெளிவருகிறது. இதன் முன்னோட்டமாக, சிட்டுக்குருவிகள் உட்பட சில உயிரினங்கள் பெரிய தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன என்பதும் கவலைக்குரிய ஒன்றாகும். அதிகாலை வேளைகளில் இன்று கிராமத்து மரங்களில்கூட சிட்டுக்குருவிகளின் கீச்சிடும் சத்தம் இல்லாது போய்விட்டது.

ஒருபுறம் தகவல் தொடர்பு வேகமாக வளர்ந்து வருகிறது. மனிதகுலத்திற்கு வேகமான தகவல் பரிமாற்ற வழிமுறைகள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றது. முகம்பார்த்து பேசும் வசதியை மூன்றாம் தலைமுறை அலைவரிசை கொடுத்துவிட்டது. அடுத்து வரப்போகும் அலைவரிசைகள் ஆளையே நேரில் நிறுத்தினாலும் வியப்படைவதற்கில்லை. ஆனால் அது நிச்சயம் மற்ற உயிரினங்களின் அழிவிற்கும் ஆரம்பமாக அமையும் என்றும் சொல்லலாம். அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு இருந்த டைனோசார்களே ஏதோ ஒரு காரணத்தால் இந்த பூமியிலிருந்து மறைந்து போய்விட்டன. அப்படியென்றால், வெய்யில் கொஞ்சம் அதிகமாக அடித்தாலே தாங்காத மனிதனும் மற்ற உயிரினங்களும் இந்தப் பூமியில் இன்னும் எத்தனை நாட்களுக்கு இருக்கப்போகின்றன. தொலைத் தொடர்பு வசதிகளுக்காக நாம் தொலைத்துள்ளவையும் தொலைக்கப் போகின்றவையும் ஏராளம்!

Digital media/journalism

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

Paper name
Digital media/journalism 

Course name 
Certificate course 

Duration
1 year 

Classes
Weekly five classes 

Medium of study
Tamil 

Mode
Online only 

Syllabus details 

Paper 1 
Digital Journalism  Introduction and basics 

டிஜிட்டல் ஜேர்னலிசம் அறிமுகமும் அடிப்படைகளும் 

இயல்1: 
டிஜிட்டல் ஊடகத்துறைகளும் செயல்பாடுகளும் 

டிஜிட்டல் மீடியா அறிமுகம்- தொழில்நுட்பமும் ஊடகமும்- 
இந்தியாவில் மாஸ் மீடியா- 
சமூக வலைதளங்களும் மக்கள் பயன்பாடும்- 
டிஜிட்டல் மீடியாக்களின் வளர்ச்சி வரலாறு- 
சமூக வலைத்தளங்கள் ஏற்படுத்தியிருக்கும் நன்மைகளும் தீமைகளும்- 
ஊடகமும் சட்டங்களும்- எழுத்து சுதந்திரம். 

இயல்2: 
டிஜிட்டல் மீடியாக்களின் வகைகளும் செயற்பாட்டு விதிகளும். 

டிஜிட்டல் மீடியா வகைகள்- இணையதளம்(Website)- 
வலைப்பூ(Blog)- 
சமூக வலைதளங்கள்(Socialmedia)- செயலிகள்(Application)- 
இணைய வானொலி(web redio)- 
மின்நூல்கள்(Ebook)- 
மின்னிதழ்கள்(Ejournal)- 
OTT தளங்கள்(OTT sites). 

இயல்3
டிஜிட்டல் ஊடகங்களும் சமூகமும்- 
இந்தியாவில் இணைய பயன்பாடு- 
இணையத்தள கட்டுப்பாடுகளும் 
சட்ட திட்டங்களும்- 
சைபர் குற்றப்பிரிவு( Cyber crime )- 
இணைய வன்முறை(Cyber ​​violence)- 
தேச பாதுகாப்பு- 
தனிமனித சுதந்திரம்- 
தரவுப் பாதுகாப்பு(Data protection)- நம்பகத்தன்மை 
அரசியல் பங்களிப்பு- 
(IT Wing)- 
இணைய முடக்கம்( Hacking) 


இயல் 5: 
நிர்வாகமும் அலுவல்களும் 

இணைய சேவை நிறுவனங்கள்- 
ஒலிபரப்பு சேவை நிறுவனங்கள்- 
ஒளிபரப்பு சேவை நிறுவனங்கள்-
அலுவலகம்- பணியாளர்களும் பணிகளும்- தனிமனித நிர்வாகமும்- 
சமூக அங்கீகாரம்- 
தொழில் வாய்ப்புகள்- மொபைல் ஜேனலிசம்- முதலீடு- 
கருத்துருவாக்கம்- 
புதுமைகளை கண்டடைதல்- 
பயனாளர் பங்களிப்பு. 

Paper 2 

Digital Media 
Tasks and Tutorials. 

டிஜிட்டல் மீடியா பணிகளும் பயிற்சிகளும் 

இயல் ஒன்று 

இணையதளம் கட்டமைப்பும் பணிகளும். 
இணையதளத்தின் வகைகள் 
Domaine 
செய்தி இணையத்தளங்கள் 
இணையச் செய்தி வடிவமைக்கும் முறை 
இணையச் செய்தியாளரின் அடிப்படை பண்புகள் 
செய்தி எழுதும் முறை 
கட்டுரை உருவாக்கம் 
இணையதள வகைக்கேற்ப மூலங்களை வழங்குதல் 
வாசகரை கவருதல் 
வணிக நோக்கத்தில் இணையதளங்களை பயன்படுத்துதல். 

இயல் 2 
இணைய வானொலி உருவாக்கமும் நிர்வாகமும். 

இணைய வானொலிக்கான அடிப்படைத் தேவைகள் 
Redio server 
கட்டமைப்பும் கருவிகளும் 
ஒலிபரப்பு 
நிகழ்ச்சி தயாரிப்பு 
அறிவிப்பாளர் 
அறிவிப்பாளருக்கான அடிப்படை பண்புகள் 
குரல் தேர்வு 
உச்சரிப்பு 
வானொலி செய்தி வாசித்தல் 
பேட்டி 
வர்ணனை 
நேரலை 
நிகழ்ச்சித் தொகுப்பு 
செய்திக் கட்டுரை 
மொழி 
வானொலி நிகழ்ச்சிக்கான வடிவம் இணைய வானொலி செயலிகள் 
ஒலிப்பதிவு கூடம் 
இணைய வானொலிகளை வணிக நோக்கத்துடன் பயன்படுத்துதல். 

இயல் 3 
சமூக வலைத்தள மேலாண்மையும் 
புதிய முயற்சிகளும்( Social media management New initiatives.)
சமூக வலைதளத்திற்கு எழுதுதல் 
ஒலி ஊடக தளம் 
காட்சி ஊடகத் தளம் 
ஒளி வடிவ நிகழ்ச்சிகள் உருவாக்கம் 
பின்னணி இசை 
குரல் பயன்பாடு 
ஒளி ஊடக இணைய தளங்கள் மற்றும் செயலிகள் 
பின்னூட்டம் ( Comments)
காட்சி தலங்கள் 
திரை பயன்பாடு  
புதிய நிகழ்ச்சி வடிவங்களை உருவாக்குதல் 
பயனாளர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தல்  
சமூகப் பொறுப்புணர்வு 
நிகழ்ச்சி வகைப்பாடு 
நவீன தொழில்நுட்ப தேவை 
Youtuber 
யூடியூபருக்குத் தேவையான அடிப்படை தகுதிகள் 
கதைச் சொல்லல் (story telling)
ஒலி புத்தகங்கள் (audio book)
Web tv
Web serial
இணைய ஊடகங்கள் வழி அடையும் பொருளாதார வளர்ச்சி. 

இயல் 4 
Digital Marketing and 
Ecommerce 

டிஜிட்டல் மார்க்கெட்டிங் அறிமுகம் 
சமூக வலைதள விளம்பர பயன்கள் 
டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் 
தனிமனித வருமானம் 
மின் வணிகம் 
மின் வணிகமும் சமூகமும் 
மின் வணிக நிறுவனங்களை தொடங்குதல் 
இணைய பணப் பரிமாற்றம் 
அடிப்படை சட்டங்கள் 
சேவை வணிக நிறுவனங்கள் 
மின் வணிக நிறுவனங்கள் ஏற்படுத்தும் வேலை வாய்ப்புகள். 

இயல் 5. 
டிஜிட்டல் மீடியா அடிப்படை பயிற்சிகள். 

எழுத்துப் பயிற்சி 
குரல் பயிற்சி 
ஒப்பனை 
பாவனை 
அகப்புற சூழல் அறிதல் திறன் பயிற்சி 
காட்சி மொழி 

பாடத் திட்ட உருவாக்கம் 
பேராசிரியர் 
முஹம்மது அஸ்கர் MA M.PHIL PhD DJ. 
mail 
askarnews@gmail.com

Digital Journalism இரண்டாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் மூன்றாம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

பதிவு நாள் : 09-06-2024.

அபுதாபி :

அபுதாபி அய்மான் சங்கம்  நடத்தும்  Digital Journalism இரண்டாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் மூன்றாம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி ஜுன் 09, 2024 ஞாயிற்றுக்கிழமை இரவு 08 மணி முதல் 09 : 30 மணி வரை‌ கூகுள் மீட் ஆன்லைன் வாயிலாக மிகச்  சிறப்பாக நடைப்பெற்றது.

அமீகத் தாய்ச் சபை அபுதாபி அய்மான் சங்கத் தலைவர் கண்ணியத்திற்குரிய கீழக்கரை  H. M. முஹம்மது ஜமாலுதீன் ஹாஜியார் அவர்கள் விழாவிற்கு தலைமை தாங்கி தலைமையுரை ஆற்றினார்கள்.

அய்மான் சங்க சர்வதேச ஒருங்கிணைப்பாளர் சகோதரர் காயல்பட்டினம் எஸ்.ஏ.சி ஹமீத் அவர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார்கள்.

நிகழ்ச்சியின் துவக்க மாக ஆண்டவனின் அருள்மறை திருக்குர்ஆன் திருவசனங்களை ஓதி இளவல் காயல் அப்துல் கைய்யூம் அவர்கள் தொடங்கினார்கள்.

விழாவின் வரவேற்புரையை அய்மான் பைத்துல் மால் பொதுச் செயலாளர் பார்த்திபனூர்  நிஜாம் மைதீன் அவர்கள் நிகழ்த்தினார்கள்.

 அய்மான் டிஜிட்டல் மீடியாவின் திட்ட இயக்குனர்  பேராசிரியர் டாக்டர் முஹம்மது அஸ்கர் அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார்கள்.

பைத்துல் மால் தலைவர் அதிரை A. சாகுல் ஹமீது ஹாஜியார், தமிழ்நாடு ஸ்டேட் உருது அகாடமி துணைத் தலைவர் டாக்டர் நயீமுர் ரஹ்மான் சாகிப், அய்மான் சங்கத் துணைத் தலைவர்  ஆவை A. S. முகம்மது அன்சாரி,  அமைப்பாளர் A. அப்துல் ரஹ்மான்  ரப்பானி  உள்ளிட்போர் விழா வாழ்த்துரை வழங்கினார்கள்.

தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் திரு. சமஸ் அவர்களும், சென்னை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் தங்க ஜெய சக்திவேல் அவர்களும் சிறப்புரை நிகழ்த்தினார்கள்கள்.

 அதனைத் தொடர்ந்து  அய்மான் டிஜிட்டல் மீடியாவின் முன்னாள் மாணவர்கள் ஏராளமானோர்  அவர்களுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்கள் 

விழாவின் இறுதியாக அய்மான் சங்க நிர்வாகச் செயலாளர் ஆடுதுறை S. முஹம்மது அப்துல் காதர் அவர்கள் நன்றிவுரை நிகழ்த்தினார்கள்.

அய்மான் சங்கத்தின் நிர்வாகிகள், அய்மான் டிஜிட்டல் மீடியாவின் முன்னாள் மாணவர்கள், மற்றும் அபுதாபியில் வசிக்கக்கூடிய தமிழ் சொந்தங்கள்  ஏராளமானோர் இர் நிகழ்ச்சியில்   கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 துஆவோடு நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.

இச்சிறப்புமிக்க விழாவினை இசைமுரசு FM ல் நேரலை செய்யப்பட்டது.

அய்மான் சங்கம்
அபுதாபி

மடைதிறந்த வெள்ளமாய் கருத்துக்களும் தகவல்களும்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ

மடைதிறந்த வெள்ளமாய் கருத்துக்களும் தகவல்களும் கறைபுரண்டு வருவதில் அதிசயம் மேலிட ஆனந்த வெள்ளத்தில் மூழ்கிதிலைக்கும் ஒரு அறிய வாய்ப்பு முனைவர் பேராசிரியர் முஹம்மது அஸ்கர் ஐயா அவர்களின் வகுப்புக்கள் என்றால் அது மிகையாகாது. 

கருத்துக்கோர்வையில் தகவல்கள் தண்ணீர்கட்டிகள் மலைகளில் முனைப்பாய் வந்துவிழும் அருவியாய் அதில் குளித்துத்தினரும் ஆனந்த உணர்வை ஐயா அவர்களின் வகுப்புக்கள் நமக்கு அளிக்கும் என்பது மிகையானதல்ல. 

தகவல் தொழில் நுட்ப்பம், கலை, இலக்கியம், சமூகம், அரசியல், சமகால நிகழ்வுகள் என்று அனைத்தும் ஊடகவியல் கல்வியுடன் ஒன்றி வருதல் வகுப்பில் ஆர்வத்தை அதிகரிக்கும். 

எத்துறையிலும் எடுத்துச்சொல்லும் ஆழமான தகவல் நம்மை வியப்பூட்டும். பல் துறைகளிலும் ஐயா அவர்களின் தேர்ந்த ஞானம் மாணவர்களுக்கு கிடைக்கும் அறிய பொக்கிஷம். 

டிஜிட்டல் ஊடகத்துறைக்கு வேண்டிய அனைத்து தொழில் நுட்ப்பங்கள் மற்றும் அவற்றை அமைக்கும் முறைகள் அனைத்தும் மிகச்சிறப்பாக வகுப்பில் விவரிக்கப்பட்டன. 

வகுப்புக்களை தவறாமல் வருதலும் குறிப்பெடுத்தலும் ஐயங்களை நீக்க கேட்டு தெளிவுருதலினாலும் சிறப்பாய் கல்வியை பெறவியலும். 

மூன்றாம் தொகுதி மாணவர்கள்  சிறப்பாய் கல்விபெற்று ஊடகத்துறையில் சிறந்துவிளங்க மனமார்ந்த வாழ்த்துக்கள்!

அ. ஹாரூன் ரஷீது
இரண்டாம் தொகுதி மாணவர்

வலிமையான சமூகம் என்பது எண்ணிக்கையை கொண்டு தீர்மானிக்கப்படுவதில்லை.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


உங்கள் கனிவான உள்ளத்திற்கு 
அன்பான சலாம்.

வலிமையான சமூகம் என்பது எண்ணிக்கையை கொண்டு தீர்மானிக்கப்படுவதில்லை. 
அச்சமுகம் வெளிப்படுத்தும் அறிவார்ந்த அல்லது திறன் சார்ந்த செயல்பாட்டின் வெளிப்படுதலை கொண்டே அவை தீர்மானிக்கப்படுகின்றன. 
6 நூற்றாண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்று பின்புலத்தில் 
ஆட்சி அதிகாரமிக்க சமூகமாக இருந்த முஸ்லிம் சமூகம் 
விடுதலைப் பெற்ற அரை நூற்றாண்டிற்குள் அத்தனை பெரிய வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. 
கிட்டத்தட்ட எல்லா துறைகளில் இருந்தும் முழுமையாக வெளியேற்றப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். 
இதனால் அதிகார வன்முறை, 
அரசியல் வன்முறை, 
என்று பல்வேறு வன்முறைகளுக்கு இந்தச் சமூகம் இறையாகி இருக்கிறது. 
இவற்றில் எல்லாம் பேரிழப்பையும் பெருத்த அவமானத்தையும் தேடி தந்தது 
ஊடக வன்முறைதான். 
சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் மீது 
இந்திய அளவில் நிகழ்த்தப்பட்ட ஊடக வன்முறையால் 
அளவிட முடியாத இழப்பையும் அவமானத்தையும் இந்த சமூகம் சந்தித்திருக்கிறது. 
இத்தகைய பெருத்த சமூக அவமதிப்புக்கு காரணம் 
ஊடகத்துறையில் 
கடந்த அறை நூற்றாண்டில் முஸ்லிம் சமூகம் எந்தவித பங்களிப்பையும் செய்யாமல் விட்டு வைத்ததுதான் முதன்மை காரணம். 
அதிகார, அரசியல், கார்ப்பரேட் சட்டைகளுக்குள் மட்டுமே இருந்து இயங்கும் நிலையில் இருக்கும் ஊடகத்தால் இத்தனை பெரிய வன்முறையை ஒரு சமூகத்தின் மீது நிகழ்த்த முடியும் என்றால்! 
வளர்ந்து வரும் உலகின் வியக்கத்தக்க அதிசயமாக உருவெடுத்துக் கொண்டிருக்கும் 
டிஜிட்டல் ஊடகம் சாமானியன் ஒவ்வொருவருக்கும் கைக்குள் வந்து அமர்ந்து கொண்டு 
அது தன் விளையாட்டை துவக்கினால் 
இன்னும் பெரும் வீழ்ச்சியையும் இழிவையும் இந்த சமூகம் சந்திக்க நேரிடும் என்பதை உணர்ந்ததன் அடிப்படையில் 
அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய வலிமையான ஊடகமாக திகழப்போகும் 
டிஜிட்டல் ஊடக துறையில் இஸ்லாமியர்களின் பங்களிப்பை, 
தமிழர்களின் பங்களிப்பை வலிமையாக உருவாக்கும் கண்ணோட்டத்தோடு 
கடந்த 2022 ஆம் ஆண்டு அபுதாபி அய்மான் சங்கம் 
Digital journalism என்ற தனித்த பாடத்திட்டத்துடன் கூடிய வகுப்பை தொடங்கியது. 
கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட டிஜிட்டல் ஊடக துறையில் 
எழுதவும், இயங்கவும் ஆற்றலுடைய வல்லுனர்களை உருவாக்கி விட்டிருக்கிறது. 
இப்போது இதோ மூன்றாவது ஆண்டின் தொடக்க விழா 
9 ஜூன் 2024 ஞாயிறு இரவு 8  மணிக்கு இணையவழியில் நடைபெற இருக்கிறது. 
அபுதாபி அய்மான் சங்க நிர்வாகிகள், 
ஊடகத் துறை சார்ந்த வல்லுநர்கள், 
பேராசிரியர்கள் 
பயிற்சி பெற்ற டிஜிட்டல் மீடியா வகுப்பின் பங்கேற்பாளர்கள் என எல்லோரும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் உங்களையும் கலந்து சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம். 
நிகழ்ச்சியில் இணைந்திடும் 
Google meet 
இணைப்பு இத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. 

அபுதாபி அய்மான் சங்கம் நடத்தும் 
Digital journalism 
இரண்டாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் 
மூன்றாம் ஆண்டு தொடக்க விழா.
Sunday, 9 Jun  •  8:00 – 9:30 pm
Google Meet joining info
Video call link: https://meet.google.com/eqj-ugcp-dvu

Digital journalism பயிற்சி வகுப்பிற்கான அட்மிஷன் நடைபெறுகிறது.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

Digital journalism
 பயிற்சி வகுப்பிற்கான அட்மிஷன் நடைபெறுகிறது. 

100 மாணவர்களுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக 
Digital Media studies பயிற்சி வகுப்பை நிறைவு செய்த 
அபுதாபி அய்மான் சங்கம் 
இப்போது மூன்றாவது ஆண்டாக 
 இணைய வழி 
 ஊடக சான்றிதழ் கல்விக்கான மாணவர் சேர்க்கையை தொடங்கி இருக்கிறது. 

 DIGITAL JOURNALISM 
 ஓராண்டு பாடத்திட்டத்துடன் இணைய வழி பயிற்சியும் வழங்கப்படுகிறது 

 ஆர்வமுள்ள இஸ்லாமியர்கள் சேர்ந்து பயன் பெறலாம். 
 வயது வரம்பு இல்லை. 

 பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணைய ஊடகங்களில் பணியாற்றவும் சாதிக்கவும் விரும்பும் முழு ஈடுபாடு உள்ளவர்கள் மட்டும் வகுப்பில் இணைந்து பயன் பெறலாம். 

 பதிவு கட்டணம் 300ரூ 

 உங்களுக்கான முழு கல்வி கட்டணத்தையும் அய்மான் சங்கம் வழங்குகிறது. 
9 ஜூன் 2024 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை 
வாரத்தில் 5 நாட்கள் 
 மாலை 7 முதல் 8 மணி வரை வகுப்பு நடைபெறும். 

 வகுப்பில் இணைய உங்கள் விவரங்களை 
 9080475780 
 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் தெரியப்படுத்தவும்.

 Academy director
 ஹாஜி H.M. முஹம்மது ஜமாலுத்தீன் 
 தலைவர் 
 அய்மான் சங்கம் அபுதாபி 
 
 Project director
 Professor 
 Dr. Mohamed Askar.

 அமீரக மாணவர் சேர்க்கைக்கு தொடர்புகொள்ள 
 ஆடுதுறை M.A.K காதர் 
 நிர்வாக செயலாளர்,
 அய்மான் சங்கம்
 அபுதாபி 
 (+971 55 303 8066)

முதன்முறையாக ஒளிமூலமாக ஒற்றை மூலக்கூற்றை கண்டறிந்தத நோபல் பரிசு பெற்ற

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

முதன்முறையாக ஒளிமூலமாக ஒற்றை மூலக்கூற்றை கண்டறிந்தத நோபல் பரிசு பெற்ற, அமெரிக்க வேதியியல் இயற்பியலாளர் வில்லியம் எசுக்கோ மோர்னர் பிறந்த தினம் இன்று (ஜூன் 24, 1953).

வில்லியம் எசுக்கோ மோர்னர் (William Esco Moerner) ஜூன் 24, 1953ல் கலிபோர்னியாவின் ப்ளேசன்டனில் பெர்த்தா பிரான்சிஸ் (ராபின்சன்) மற்றும் வில்லியம் ஆல்ஃபிரட் மூர்னர் ஆகியோரின் மகனாகப் பிறந்தார். அவரது குடும்பத்தினர் அவரை W.E என்ற எழுத்துக்களால் அழைத்தனர். அவரை அவரது தந்தை மற்றும் தாத்தாவிடமிருந்து வேறுபடுத்துவதற்கான ஒரு வழியாக வில்லியம் என்று பெயரிடப்பட்டது.மோர்னர் பாய் ஸ்கவுட்ஸ் ஆஃப் அமெரிக்காவுடன் ஈகிள் சாரணராக இருந்தார். அலெக்சாண்டர் எஸ். லாங்ஸ்டோர்ஃப் இன்ஜினியரிங் ஃபெலோவாக இளங்கலை படிப்பிற்காக செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பயின்று மேலும் மூன்று பட்டங்களைப் பெற்றார். ஒரு பி.எஸ். இயற்பியலில், ஒரு பி.எஸ். மின் பொறியியலில், இறுதி ஒரு ஏ.பி. 1975ல் கணிதத்தில் பெற்றார். இதைத் தொடர்ந்து, ஆல்பர்ட் ஜே. சீவர்ஸ் III குழுவில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் தேசிய அறிவியல் அறக்கட்டளை பட்டதாரி பெல்லோஷிப்பால் ஓரளவு ஆதரிக்கப்பட்டது. இங்கே அவர் எம்.எஸ். பட்டம் மற்றும் பி.எச்.டி. முறையே 1978 மற்றும் 1982ல் இயற்பியலில் பட்டம் பெற்றார். அவரது முனைவர் ஆய்வறிக்கை ஆல்காலி ஹலைடு லட்டுகளில் IR-லேசர்-உற்சாகமான மூலக்கூறு தூய்மையற்ற பயன்முறையின் அதிர்வு தளர்வு இயக்கவியல் பற்றியது. 

தனது பள்ளி ஆண்டுகளில், மோர்னர் 1963 முதல் 1982 வரை நேர்மையான ஒரு மாணவராக இருந்தார். மேலும் அசாதாரணமான விதிவிலக்கான கல்வி சாதனைக்கான டீன் விருதையும், கல்லூரியில் பட்டம் பெற்றபோது சிறந்த சாதனைக்கான ஈதன் ஏ. எச். ஷெப்லி விருதையும் வென்றார். கலிபோர்னியாவின் சான் ஜோஸில் உள்ள ஐபிஎம் அல்மடன் ஆராய்ச்சி மையத்தில் 1981 முதல் 1988 வரை ஆராய்ச்சிப் பணியாளர் உறுப்பினராகவும், 1988 முதல் 1989 வரை மேலாளராகவும், 1989 முதல் 1995 வரை திட்டத் தலைவராகவும் பணியாற்றினார். இயற்பியல் வேதியியல் வருகை பேராசிரியராக நியமிக்கப்பட்ட பின்னர் ETH சூரிச் (1993-1994), 1995 முதல் 1998 வரை சான் டியாகோவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வேதியியல் மற்றும் உயிர் வேதியியல் துறையில் இயற்பியல் வேதியியலில் சிறப்புத் தலைவராக பொறுப்பேற்றார். 1997 ஆம் ஆண்டில் ஹார்வர்டில் ராபர்ட் பர்ன்ஸ் உட்வார்ட் விசிட்டிங் பேராசிரியர் என்று பெயரிடப்பட்டார். பல்கலைக்கழகம், அவரது ஆராய்ச்சி குழு 1998ல் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்திற்கு சென்றது.  

மோர்னர் 2011 முதல் 2014 வரை வேதியியலுக்கான துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது தற்போதைய ஆராய்ச்சி மற்றும் ஆர்வத்தின் பகுதிகள் பின்வருமாறு, ஒற்றை-மூலக்கூறு ஸ்பெக்ட்ரோஸ்கோபி மற்றும் சூப்பர்-ரெசல்யூஷன் மைக்ரோஸ்கோபி, இயற்பியல் வேதியியல், வேதியியல் இயற்பியல், உயிர் இயற்பியல், நானோ துகள்கள் பொறி, நானோபோடோனிக்ஸ், ஒளிமின்னழுத்த பாலிமர்கள் மற்றும் நிறமாலை துளை எரியும்.  மே 2014 நிலவரப்படி, ஸ்டான்போர்ட் பட்டதாரி மாணவர்களால் எழுதப்பட்ட 26 ஆய்வறிக்கைகளில் மோர்னர் ஆசிரிய ஆலோசகராக பட்டியலிடப்பட்டார். மே 16, 2014 நிலவரப்படி, மூர்னரின் முழு சி.வி.யில் 386 வெளியீடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. மோர்னர் பணியாற்றிய சமீபத்திய தலையங்கம் மற்றும் ஆலோசனைக் குழுக்கள் பின்வருமாறு, தேசிய பயோமெடிக்கல் இமேஜிங் மற்றும் பயோ இன்ஜினியரிங் நிறுவனத்தின் (என்ஐபிஐபி) அறிவியல் ஆலோசகர் குழுவின் உறுப்பினர், அணு மற்றும் மூலக்கூறு அறிவியல் நிறுவனத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர், அகாடமிகா சினிகா, தைவான், வேதியியல் இயற்பியல் கடிதங்களுக்கான ஆலோசனை ஆசிரியர் குழு உறுப்பினர், ஸ்டான்போர்டில் உள்ள பயோமெடிக்கல் இமேஜிங் மையத்திற்கான ஆலோசனைக் குழு உறுப்பினர் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக சுகாதார மற்றும் பாதுகாப்புக் குழுவின் தலைவர்.

தற்போது உயிரி இயற்பியலிலும் ஒற்றை மூலக்கூறுகளை படமெடுப்பதிலும் ஆய்வு செய்து வருகிறார். முதன்முறையாக ஒளிமூலமாக ஒற்றை மூலக்கூற்றை கண்டறிந்ததற்கும் குறுகிய கட்டங்களில் ஒற்றை மூலக்கூறின் நிறமாலை காட்டி ஆய்விற்காகவும் அறியப்படுகிறார். தற்போது ஒற்றை மூலக்கூறுகளின் ஒளி மூலமான ஆய்வு பரவலாக வேதியியல், இயற்பியல், மற்றும் உயிரியலில் பயன்படுத்தப்படுகின்றது. 2014 ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு இவருக்கு எரிக் பெட்சிக், இசுடீபன் எல்லுடன் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
Source By: Wikipedia

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

மதுக்கூரில் மதுக்கடை திறக்க மனிதநேய மக்கள் கட்சி எதிர்ப்பு -

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மதுக்கூரில் மதுக்கடை திறக்க மனிதநேய மக்கள் கட்சி எதிர்ப்பு - காவல்நிலையத்தில் புகார் மனு அளிப்பு!

மதுக்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிக்குள் மீண்டும் டாஸ்மாக்.பழயை அம்மா சந்தை, மருத்துவமனை, காவல்நிலையம், குடியிருப்பு பகுதிகள்,100 மீட்டர்க்குள் பள்ளிகூடம் என மக்கள் அதிகம் பயன்படுத்தும் மிக முக்கிய பகுதியாக இருக்க கூடிய இடத்தில் டாஸ்மாக் அமைப்பதற்கான முயற்சியில் சிலர் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதன் தகவலை அறிந்து இன்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் காவல்நிலையம் சென்று, டாஸ்மாக் அமைய எதிர்ப்பு தெரிவித்து புகார் மனு அளிக்கப்பட்டது. 

அப்புகாரில், "மதுக்கூர் பகுதிகுள் மதுபானகடைய அமைய கூடாது, 100 மீட்டர்க்குள் அரசு பள்ளிகூடம் உள்ளது,மருத்துவமனை, காவல்நிலையம் என இதனை எல்லாம் கவனித்தில் கொண்டு, அரசும், காவல்துறையும், டாஸ்மாக் அனுமதிக்க கூடாது என்றும், மேலும் அமைக்கப்பட்டால், திறக்கப்படும் நாள் அன்றே பொது மக்களை திரட்டி "டாஸ்மாக் பூட்டு போடும் போராட்டம்" நடத்தப்படும் என்று அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது, செய்தி மேலிட கவனத்திற்கு செல்ல கூடிய வகையில், பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்று, பேட்டி அளிக்கப்பட்டது

இந்த நிகழ்வில், மமக மாவட்ட தலைவர் ஃபவாஸ், தமுமுக பேரூர் கழக செயலாளர் ஜெகபர் அலி, மமக மாவட்ட துனை செயலாளர் Er.இலியாஸ், தமுமுக மாவட்ட துனை செயலாளர் புரோஸ்கான், பேரூர் கழக பொருளாளர் முகமது சேக் ராவுத்தர், பேரூர் கழக துனை தலைவர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் அணி நிர்வாகிகள், SMI சகோதரர்கள் கழக கட்சி உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தமுமுக மமக
தகவல் தொழில்நுட்ப அணி
மதுக்கூர் பேரூர் கழகம்
தஞ்சை தெற்கு.

இருபது கோடி முஸ்லிம்கள் பக்ரீத் திருநாளை கொண்டாடினர்..

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இருபது கோடி முஸ்லிம்கள் பக்ரீத் திருநாளை கொண்டாடினர்..

ஏழைகளுக்கும், தேவையுடையோருக்கும் மாமிசங்களை விநியோகித்தனர்..

சொந்த, பந்தங்களை சந்தித்தனர்..

அற்புதமான உணவுகளை உட்கொண்டனர்..

குழந்தைகளுக்கு பெருநாள் பணம் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியூட்டினர்..

இவர்களில் ஒருவரும் மது அருந்தவில்லை..

இவர்களில் ஒருவரும் பிறமத வணக்கத்தலங்கள் முன்பு கூடி நடனமாடவில்லை..

இவர்களில் ஒருவரும் பிற மதத்தினரை (வன்முறைக்கு) தூண்டவில்லை..

என்ன ஒரு அற்புதமான சமூகம்..

நன்றி Dhruv Rathee