Saturday 12 April 2014

ஷார்ஜாவில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் 10-04-2014 – வியாழக்கிழமை
(UAE-நேரம்) இரவு 10.00 மணி முதல் 11.00 மணி வரை த.மு.மு.க ஷார்ஜா கிளை சார்பாக (SHARJAH NATHANI MEDICAL CENTER BLDG ) மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் .





அதில் சகோதரர் A.S.இபுராகிம்  இந்த உலகத்திலும் வெற்றி பெறவேண்டும் 
மறுமையிலும் வெற்றி பெறவேண்டும் என்றால் அல் குர்ஆன் மற்றும் முஹம்மது நபி (ஸல் ) வாழ்க்கை வழிமுறைதான் சிறந்தது எனவும் மாற்றமாக நடந்தால் வெற்றி பெறமுடியாது எனவும் அறிவுரை கூறபட்டது. 


இது ஏரளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்!

இஸ்லாம் பற்றி இஸ்லாம் அல்லாதவர்களுக்கு தாவா

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


Thursday 10 April 2014

ஷார்ஜாவில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அஸ்ஸலாமு அலைக்கும்

ஷார்ஜாவில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

இன்ஷா அல்லாஹ் இன்று 10 : 04: 2014 – வியாழக்கிழமை
(UAE-நேரம்) இரவு 10.00 மணி முதல் 11.00 மணி வரை SHARJAH NATHANI MEDICAL CENTER BLDG நடைபெறும்

சிறப்புரை வழங்குபவர்: பரமக்குடி A.S.இபுராகிம் 

குறிப்பு: பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புக்கு : அபுல் ஹசன் 050-8669186

அனைவரும் குடும்பத்துடன் வருக...! அன்பர்களையும் அழைத்து வருக...!! அல்லாஹ்வின் அளவிலா அருள்மழையில் நனைக....!!!

அஜ்மான் - மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அஸ்ஸலாமு அலைக்கும்

அஜ்மான் - மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

இன்ஷா அல்லாஹ் இன்று 11 : 04: 2014 – வெள்ளிக்கிழமை
(UAE-நேரம்) இரவு 07.00 மணி முதல் 08.00 மணி வரை

இடம் : Near GIANT SUPER MARKET -IAC- AJMAN நடைபெறும்

சிறப்புரை வழங்குபவர்: பரமக்குடி A.S. இபுராகிம் - சுவனத்திற்கு செல்லும் எளிய வழிகள்

குறிப்பு: பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புக்கு : சுலைமான் 050-5868280

அனைவரும் குடும்பத்துடன் வருக...! அன்பர்களையும் அழைத்து வருக...!! அல்லாஹ்வின் அளவிலா அருள்மழையில் நனைக....!!!

பொது சிவில் சட்டம் - 1

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

தேசத்தந்தை மஹாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவின் வாரிசுகள், உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைப்பெற்ற இம்ரானாவின் சம்பவத்தை மையமாக வைத்து மீண்டும் ஒரு பழைய பல்லவியைப் பாட ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கீறல் விழுந்த ரெக்கார்டை மறுபடி Play பண்ண ஆரம்பித்திருக்கிறது தேச விரோத சங்பரிவார் அமைப்பு. எத்தனையோ முறை பதில் கொடுக்கப்பட்ட ஒரு விஷயமாக இருந்தாலும் கூட, மக்களின் மறதியைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் போக்கு மிகுந்து காணப்படும் இக்காலத்தில் அவ்வப்போது நாமும் அதுபற்றிய விளக்கத்தை சிந்திக்கும் பொது ஜனத்துக்கு சமர்ப்பிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
இவர்கள், அவ்வப்போது வரிந்து கட்டிக்கொண்டு முஸ்லிம்களை மையமாக வைத்து பொது சிவில் சட்டம் வேண்டும், பொது சிவில் சட்டம் வேண்டும் என்று வீர!முழக்கம் இடுவதைக் கேட்கும்போது உண்மையிலேயே இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் தனது அனைத்து விவகாரங்களுக்கும் தனக்கென தனி சட்டம் வைத்துக்கொண்டு தனியாக அரசாங்கம் நடத்துவதைப் போல் ஒரு மாயையை ஏற்படுத்தும். ஆனால், உண்மை நிலையோ வேறு.
இந்த நாட்டில் மதச்சார்பற்ற ஓர் அரசின் கீழ் சிறுபான்மையினராக வாழ்ந்து வரும் முஸ்லிம்களுக்கு திருமணம், தலாக், பாகப்பிரிவினை போன்ற சில விவகாரங்களுக்கு மட்டும் இந்திய நீதிமன்றங்கள் முஸ்லிம் தனியார் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பளித்து வருகிறது. இதேபோல் இந்து, கிறிஸ்தவ, சீக்கிய, ஜைன, புத்த சமயத்தினருக்கும் அவர்களுக்கென்று தனியார் சட்டங்கள் அமலில் இருந்து வருகிறது. ஆனால்,குற்றவியல் நடைமுறைக்கு மட்டும் அனைத்து தரப்பினருக்கும் பொதுவான I.P.C. ( INDIAN PENAL CODE ) எனும் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தனியார் சட்டம் என்பது இந்தியாவுக்குப் புதிதல்ல. மொகலாய மன்னர்கள் என்று இந்தியாவில் தன் கால்களை ஊன்றினார்களோ, அன்றிலிருந்தே அவரவர்கள் சார்ந்திருந்த மதங்களுக்குரிய சட்டங்களின் அடிப்படையில் தீர்ப்பளிக்கப்பட்டு வந்தார்கள்.
அதன்பின், கி.பி. 1862-ல்தான் I.P.C. ( INDIAN PENAL CODE ) என்ற புதிய சட்ட முறையைக் கொண்டு வந்தார்கள். இதுவும் கூட இங்கிலாந்தின் சட்ட முறையினை அடிப்படையாகக் கொண்டே வரையறுக்கப்பட்டது. பின்னர், 1937-ல் முஸ்லிம் தனியார் சட்டம் ( MUSLIM PERSONAL LAW – Shariath Application Act – 1937 ) அமலுக்கு வந்தது. பின்னர், அதனைத் தொடர்ந்து 1939-ல் முஸ்லிம் திருமணச் சட்டம் ( MUSLIM MARRIAGES ACT – 1939 ) ஷரீஅத் சட்டத்தின் அடிப்படையில் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தது.
இந்த நிலை இன்று வரை நீடித்து வருகிறது என்றாலும்கூட, இன்றைய இந்தியாவில் இந்த முஸ்லிம் தனியார் சட்டம் மிகப்பெரும் துவேஷத்துக்கு ஆளாகி வருகிறது. பெரும்பான்மையினரின் மதத்தின் மீது வெறியூட்டி இஸ்லாத்திற்கெதிராக மாபெரும் சூழ்ச்சிகளையும் சதித்திட்டங்களையும் தீட்டிவரும் சங்பரிவார்களின் அரசியல் ரூபமான பி.ஜே.பி- யின் தலை?வர்கள், முஸ்லிம்களுக்குள் பிரச்சினை ஏற்படும்போதெல்லாம் அதனைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பொது சிவில் சட்டம் வேண்டும் என்று கூப்பாடு போட்டு வருகிறார்கள்.
சங்பரிவார்கள் கூறுகிறார்கள்: “இந்திய முஸ்லிம்கள் குற்றவியல் நடைமுறைகளில் எவ்வாறு I.P.C. ( INDIAN PENAL CODE ) என்ற பொதுவான சட்டத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார்களோ, அவ்வாறே அனைத்து விஷயங்களிலும் ஷரீஅத்தைக் கைவிட்டு விட்டு பொது சிவில் சட்டத்தை ஏற்றுக் கொள்ளலாமே” என்று. இவர்களின் இந்தப் புலம்பலுக்கு ஒரு இஸ்லாமிய அறிஞரின் கூற்றையே பதிலாக வைக்கிறேன். “ஓர் அறையில் காற்றோட்டத்திற்காக வைக்கப்பட்டிருக்கும் இரு ஜன்னல்களில் ஒன்று மூடியிருப்பதைக் கண்டு அதுபோல் மற்றொன்றையும் மூடிவிடலாம் என்று எண்ணுவது பேதமை அல்லவா?.
சிவில் சட்டங்களுக்கும், கிரிமினல் சட்டங்களுக்குமிடையில் மிகப்பெரும் வேறுபாடு உண்டு. கிரிமினல் விஷயங்கள் நேரடியாக நீதிமன்றங்களால் தீர்க்கப்படக்கூடிய ஒன்று. ஆனால், சிவில் விஷயங்கள் அப்படியல்ல. சிவில் விஷயங்களை நீதிமன்றத்துக்கு வெளியில் மக்கள் மன்றத்திலும் தீர்த்துக்கொள்ள முடியும். உதாரணமாக, ஒருவன் மற்றொருவனைக் கொலை செய்து விடுகிறானென்றால் அவனுடைய பிரச்சினையை எவ்விதத்திலும் நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்த்துக்கொள்ள முடியாது. அதை அரசாங்கம் அனுமதிக்கவும் செய்யாது.
ஆனால், திருமணம், தலாக், பாகப்பிரிவினை போன்ற சிவில் விவகாரங்களில் சம்பந்தப்பட்டவர்கள் விரும்பினால் அதை நீதிமன்றத்துக்கு வெளியிலும் தீர்த்துக்கொள்ள முடியும். இதை அரசாங்கம் கட்டுப்படுத்த முடியாது. மேலும், இது போன்ற சிவில் விவகாரங்கள் முழுக்க முழுக்க முஸ்லிம்களின் உள் விவகாரங்கள். முஸ்லிம்களுக்கிடையே தீர்ப்பளிக்கப்படும் எந்த விஷயமும் மற்றவர்களை, மாற்றுமதத்தினரை எவ்விதத்திலும் பாதிப்பதில்லை.
இந்நிலையில், திருமணம், தலாக், பாகப்பிரிவினை போன்ற விவகாரங்களில் பொது சிவில் சட்டம் கோருவோரின் நோக்கம் அப்பழுக்கற்ற இஸ்லாமிய விரோத மனப்பான்மையே என்பதில் ஊசிமுனையளவும் சந்தேகமில்லை. முதலில் ஒரு விஷயத்தை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்று முடிவு செய்வதாகயிருந்தால், அதற்கான சரியான காரணம் ஒன்று இருக்க வேண்டும். இவர்கள் பொது சிவில் சட்ட விஷயத்தில் எந்த ஒரு வலுவான காரணத்தையும் இதுவரை வைக்க முடியவில்லை. இவர்களால் சுட்டிக்காட்ட முடிந்ததெல்லாம் ஒரு ஷாபானு வழக்கு மட்டுமே. அதுவும்கூட அரசியல் காரணங்களால் சந்திக்கு வந்த ஒரு விஷயம் என்பதை ஊடகங்களுடன் தொடர்புடையவர்கள் நன்றாக அறிவார்கள். அதுமட்டுமல்லாமல், முஸ்லிம்களுக்குள்ளே நடக்கும் எந்த விவகாரத்திலும் அந்த சமுதாயம் மற்றவர்களைத் துணைக்கு அழைப்பதில்லை. அதற்குத் தேவையும் இருக்கவில்லை. ஆனால், அழையா விருந்தாளிகளாக முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்குள் நீலிக்கண்ணீர் வடித்துக்கொண்டு நுழையும் சங்பரிவார்கள் உடனே கையில் எடுக்கும் விஷயம் பொது சிவில் சட்டம் வேண்டும் என்பதுதான்.
இவர்களின் இந்த மனப்பான்மையைச் சற்று சிந்தித்துப்பார்த்தால், அடுத்த வீட்டுக்காரன் மீது ஆளுமை செலுத்தத் துடிக்கும் அதிகாரப் போக்குதான் இங்கு வெளிப்படுகிறது. எனது அடுத்த வீட்டுக்காரர் ஐயங்கார் என்று தெரிந்தும் அவரை, நான் சாப்பிடுவதைப் போல் மீனையும் இறைச்சியையும் சாப்பிடு என்றோ அல்லது நாமிருவரும் பொதுவாக இன்றிலிருந்து முட்டை சாப்பிடுவோம் என்றோ கூறுவது அடுத்த வீட்டுக்காரரை நமக்கு எதிராகத் தூண்டுமே தவிர இணக்கமாக வாழ்வதற்குரிய வழி அதுவாக இருக்க முடியாது. எப்படி ஒரு வீட்டில் மாறுபட்ட குணாதிசயங்களைக் கொண்ட சகோதர, சகோதரிகளோடு அவர்களது மனப்பான்மையை அறிந்து நடந்து கொண்டு குடும்ப ஒற்றுமையைக் காக்கிறோமோ, அதுபோல் பன்முகக் கலாச்சாரம் கொண்ட ஒரு நாட்டில் வாழும் நாம், ஒருவர் மற்றவரது கலாச்சாரத்தை மதித்து நடந்து கொள்ளும்போதுதான் இந்நாட்டில் சமூக ஒற்றுமையைக் காக்க முடியும். சமூக ஒற்றுமை ஒரு நாட்டில் மேலோங்கும்போதுதான் அந்நாடு ஒட்டுமொத்த வளர்ச்சியை நோக்கிச் செல்ல முடியும்.
மேலும், பால்ய விவாகம், உடன்கட்டை ஏறுதல் போன்ற சமூக விரோத நடவடிக்கைகளுக்கு அரசியல் சாசனத்தில் அவற்றைத் தடுத்து சட்டமியற்றப்பட்டும் கூட மறைமுகமாக வக்காலத்து வாங்கும் சங்பரிவார்கள் பொது சிவில் சட்ட விஷயத்தில் மட்டும் தங்களை அரசியல் சாசன பாதுகாவலர்களாக காட்டிக் கொள்ள முனைந்து நிற்கிறார்கள். அதிலும் அவர்கள் தோல்வியையே சந்திப்பார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
பொது சிவில் சட்ட விஷயத்தில் தங்களை அரசியல் சாசன பாதுகாவலர்களாக அறிமுகப்படுத்திக் கொள்வதற்கு அரசியல் சாசன வரிகளையே ஆதாரம் காட்டுகிறார்கள். அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியல் சாசன பிரிவு 44-ல் உள்ள வழிகாட்டிக் கொள்கையில் கூறப்படும் “நாட்டிலுள்ள எல்லாக் குடிமக்களுக்கும் பொதுவான ஒரு சிவில் சட்டம் உருவாக்கிட முயல வேண்டும்” என்ற வரிகளையே சுட்டிக் காட்டுகின்றார்கள். இது ஒரு வழிகாட்டிக் கொள்கைதானே தவிர அரசியல் சாசன சட்டம் அல்ல.
இம்மாதிரியான வழிகாட்டிக் கொள்கைகளையெல்லாம் சட்டமாக்கிட ஆவல் கொண்டிருந்தால் முதலில் மதுவிலக்கு சம்மந்தமான அரசியல் சாசன வழிகாட்டிக் கொள்கையை சட்டமாக்கிட முனைந்திருக்க வேண்டும். மது என்பது அனைத்து சாராரும், அனைத்து மதத்தவரும் எதிர்க்கக்கூடிய, சமூக நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் அழித்தொழிக்க விரும்பும் ஒரு விஷயம். ஆனால் நடப்பதென்ன? இன்று பல மாநில அரசுகளே மதுக்கடைகளை திறந்து வைத்து மாபெரும் ஒழுக்க சீர்கேட்டிற்கு அடித்தளம் அமைத்துக் கொண்டிருக்கிறது. அவற்றையெல்லாம் புறந்தள்ளி விட்டு முழுக்க முழுக்க முஸ்லிம்களின் உள்விவகாரமான ஷரீஅத்தை மாற்றி பொது சிவில் சட்டம் கொண்டு வரவேண்டுமென்று கூப்பாடு போடுவது எவ்வளவு பெரிய விஷமத்தனம் என்பதை நாட்டு மக்கள் அனைவருமே நன்றாக உணர்ந்திட வேண்டும்.
மேலும், இந்த சங்பரிவார்களின் கூக்குரல் இந்திய அரசியல் சாசனத்திற்கே முற்றிலும் விரோதமானது என்பதைக்கூட வசதியாக மறந்து விட்டது இந்த கும்பல். இந்திய அரசியல் சாசனம் பிரிவு 25-ல், “எல்லாக் குடிமக்களும் மனசாட்சி சுதந்திரத்திற்குச் சமமான உரிமை பெற்றவர்கள். தனக்கு விருப்பமான மதத்தில் நம்பிக்கை கொண்டு, அதனை ஏற்றுக்கொண்டு அமல் செய்யவும், அதனைப் பிரச்சாரம் செய்யவும் எல்லாக் குடிமக்களுக்கும் உரிமை உண்டு.” எனக் கூறுகிறது. இதன்படி, எந்த ஒரு மதத்தினர் மீதும் யாரும் அவரவர்களுடைய மதச்சட்டங்களையோ, நடைமுறைகளையோ கைவிடும்படி எந்தவிதத்திலும் நிர்ப்பந்திக்க முடியாது. அப்படித் திணிக்கும் பட்சத்தில் அது இந்தியாவில் சிறுபான்மையினர்கள் தன் உரிமைகளை நிலைநாட்டிக்கொள்வதற்கான உரிமைப்புரட்சி வெடிக்கக் காரணமாகிவிடும். இந்த உண்மையை சங்பரிவார்களின் தலைமையே ஒருமுறை ஒப்புக்கொண்டதுதான் சிறப்பு.
MOTHER LAND என்ற பத்திரிக்கையில் 21/08/1972 அன்று வெளியான ஒரு செய்தியில், “ஆர்.எஸ்.எஸ் தலைவரான குரு கோல்வால்கர், 1972 ஆகஸ்ட் 20-ல் தீனதயாள் உபாத்யாயா ஆராய்ச்சிக்கழகத்தைத் துவக்கி வைத்துப் பேசியபோது,’பாரதத்தில் தேசிய ஒற்றுமையை உருவாக்கப் பொது சிவில் சட்டம்தான் கருவியாகும் என்று சொல்வது தவறு; இயற்கைக்கு விரோதமானது; விபரீத விளைவுகள் உண்டாக்கக் கூடியது.’ என்று அறிவுறுத்தி இருக்கிறார்” என்று தெரிவிக்கிறது. ஆனால், தன் தலைமையின் கருத்தையே புறக்கணித்து விட்டு இன்று பொது சிவில் சட்டம் வேண்டும் என்று ஓலமிடுகிறது சங்பரிவார் கும்பல்.
இந்நாட்டின் சிறுபான்மையினர்கள் எவ்விதத்திலும் தங்கள் மத சுதந்திரத்தை இழந்து விடக்கூடாது என்பதைக் கருத்திற்கொண்டே, அரசியல் சாசனத்தை வகுத்தளித்த சிந்தனையாளர்கள் சாசனத்தின் 25-வது பிரிவை ஏற்படுத்தி வைத்தார்கள். பொது சிவில் சட்டத்தைப் பாராளுமன்றம் அங்கீகரிக்க முயன்றால் அது பாராளுமன்றத்தில் பெரும்பான்மையாக உள்ள இந்துக்களின் விருப்பத்திற்கேற்ப, அவர்களின் கலாச்சாரத்தை ஒட்டிய சட்டமாகவே அமையும். அவ்வாறாகும் பட்சத்தில் அதை பொது சிவில் சட்டம் (COMMON CIVIL CODE) என்று சொல்வதைவிட ஹிந்து சிவில் சட்டம் (HINDU CIVIL CODE) என்று அழைப்பதே பொருத்தமாயிருக்கும்.
பொது சிவில் சட்டம் என்ற வார்த்தை பாமர மக்களைக் கவர வசதியான பெயராக அமைந்து விட்டது. ஆனாலும் அவர்களது எண்ணம் ஈடேறப்போவதில்லை என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லி வைப்போம்.
thanks for: & http://www.islamkalvi.com/ 

தேர்தலில் முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

கட்சிகள் எதிலும் இல்லாத பட்சியாக, எந்த இயக்கத்திலும் மயக்கம் கொள்ளாதவனாக, குழு சாரா குழுவின் குரலாக  மீண்டும் கூற விரும்புவது இது தான்:

1). தி மு க, காங்கிரஸ் உட்பட அரசியலில் எந்தக் கட்சியும் யோக்கியமில்லை.

2). இந்தத் தேர்தல் மிகப் பிரதானமான தேர்தல். கொடுங்கோன்மை மதவெறிக்கும் அதற்கு எதிரான சாமானியர்களுக்குமான தேர்தல்.

3). சிறுபான்மையினர் அனைவரும், மதச்சார்பற்றவர்களும், ஒடுக்கப்பட்டவர்களும், நியாயம் அறிந்தவர்களும் ஃபாஸிசத்திற்கு எதிராக தங்கள் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அளிக்க வேண்டும்.

4). அதற்கு வழி இந்திய அளவில் காங்கிரஸ் தான்.(வெல்லும் வாய்ப்புள்ளது என்பதால்). 

ஆம் ஆத்மி போன்ற 'நல்ல' கட்சிகளுக்கு அளிக்கும் வாக்கு, வாக்குச் சிதறலுக்கே வழிவகுக்கும். அதனால் ஃபாஸிசமே ஆதாயம் அடையும். ஆகவே 'ஆம் ஆத்மி'க்கு வாக்களிப்பது அறிவுடமை ஆகாது.
5). இந்திய அளவில் காங்கிரஸ்ஸை ஆதரித்தாலும், தமிழகத்தில் காங்கிரஸ்ஸை ஆதரிப்பது - வெல்லும் வாய்ப்பற்றது என்பதால் -  வீண். ஏனெனில் மீண்டும் வாக்குச் சிதறல் ஏற்பட்டு ஃபாஸிசமே  ஆதாயம் பெறும்.

6). ஆகவே, தமிழக அளவில் ஃபாஸிசத்திற்கு மாற்று அணியாக உள்ள திமுக அணிக்கே சிந்தாமல் சிதறாமல் வாக்களிக்க வேண்டும்.

7). திமுக-வும் சந்தர்ப்ப வாதமாக ஃபாஸிச கட்சியை தேர்தலுக்குப் பிறகு  ஆதரித்துவிட்டால்? என்ற சந்தேகம் இரண்டு காரணங்களால் நிவர்த்தியாகிறது.

  7அ). இன்னும் இரண்டு வருடங்களுக்குள் தமிழக சட்டமன்ற தேர்தல் வருவதால், ஃபாஸிசத்தை மத்தியில் ஆதரித்து, அதனால் தமிழக சட்டமன்றத்தை 'கோட்டை'விடும் அரசியல் தவறை திமுக செய்யாது. ஆனால், ஆட்சியைத் தக்கவைக்க அதிமுக-வும் அவ்விதமே நடந்துகொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாது.  யாரும் கோராமலே, பாபர் மசூதியை இடிக்க தன் தொண்டர்களை அனுப்பிவைத்த கட்சி அது.

  7ஆ). குறைந்தபட்சம் அப்படி ஒரு சூழல் ஏற்படுகையில், அந்த அணியின் இரு முஸ்லிம் உறுப்பினர்கள் விலகுவதன் மூலம்  ஒரு பின்னடைவை ஏற்படுத்துவர் என்ற கருத்தை அக்கட்சி யோசிக்கும்.

8). திமுக-வின் முஸ்லிம் எதிர்ப்பு அரசியல் என்றிருந்தால், அதற்குக் காரணமாக சந்தர்ப்ப வாதமும், சுயநல அரசியல் ஆதாயமும் தான் இருக்கும். ஆனால், அதிமுக-வின் முஸ்லிம் வெறுப்பு என்பது (அதன் இன்றைய தலைமை காரணமாக) ஆதிக்க மனப்பான்மையிலும், இனவெறியிலும் அமைந்தது என்பதை உணரவேண்டும். (ராமர்கோயில் ஆதரவு, பொதுசிவில் சட்ட ஆதரவு, மதமாற்றத் தடைச் சட்டம் ஆகியவை நினைவுக்கு வரவேண்டும்). சுருங்கக் கூறின் அதிமுக என்பது மென்மையான பீஜேபி. இதை விளங்கிவிட்டால் அதுவே போதுமானது. விளங்கா விட்டால், என்ன விளக்கினாலும் பலன் ஏற்படாது.

9). இந்தக் காரணங்களால், ஃபாஸிசத்திற்கு எதிர்நிலையிலிருக்கும் திமுக அணிக்கே சிந்தாமல் சிதறாமல் சிறுபான்மையினரும், தாழ்த்தப்பட்டோரும், மற்ற ஃபாஸிச எதிர்ப்பாளர்களும் வாக்களிக்க வேண்டும். அதுவே இன்றைய சூழலில் ஃபாஸிசத்தை வரவிடாமல் தடுக்கும். ஃபாசிஸத்திற்கு எதிர்ப்பாகத் தான் இந்த முடிவே தவிர, தி மு க அணிக்கு ஆதரவாக அல்ல; அல்ல.

10). கேடயக் குறிப்பாக,  முன்னரே நான் குறிப்பிட்டுள்ளதைப் போல நான் எந்த கட்சியையும், இயக்கத்தையும் சாராதவன் என்பதை மீண்டும் கூறிக்கொள்கிறேன். 

-- 
H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)

மீத்தேன் வாய்வுக்கு பின்னுள்ள பயங்கரம்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

            நூறுபேர் வாழ்வதற்கு, நாலு பேர் உயிர் விட்டால் தப்பிப்பில்லை என்று நியாயம் பேசுவார்கள்,ஆனால், மீத்தேன் திட்டம் இது போன்றதல்ல.. நான்கு பேர் வாழ்வதற்க்கு நூறுப் பேரை கொல்லும் திட்டம்.! .

        சாதாரணமாவே இது மாதிரியான திட்டங்களால் சுற்று சூழல் மாசுபடும், மக்களின் வாழ்வாதரங்கள் பாதிக்கப்படும், அதைவிட அவை மனித உயிர்களுக்கே உலை வைக்கும்!   இது மாதிரியான திட்டங்களால் எதிர் வினைகள் மிக மோசமானதாக இருக்கும்.!

           "மீத்தேன் வாயு திட்டம்"  என்ற பெயரில் கிட்டதட்ட 50 லட்சம் தமிழர்களை   விவசாயிகளை  காவிரி படுகையிலிருந்து துரத்தியடித்து விட்டு தெற்கே ஓர் தார் பாலைவனத்தை உருவாக்க முயல்கிறது மத்திய அரசு!

           நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பூமிக்கு கீழே ஏராளமான  மீத்தேன் வாயு உள்ளதாகவும், அதை எடுத்து மின் உறபத்தி செய்யப் போவதாகவும் மத்திய அரசு இதற்கான ஒப்பந்தத்தை “ கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்பரேஷன் லிமிடெட்” என்ற நிறுவனத்திற்கு 100 ஆண்டுகளுக்கு வழங்கி இருக்கிறது.   பாகூரிலிருந்து ராஜ மன்னார்குடி வரை. சுமார் 1,64,819 ஏக்கர் நிலப்பரப்பு வரை  திட்டம் பரந்து விரியப் போகிறது!

          இந்த நிலப்பரப்பின் கீழ் சுமார் 6.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள மீத்தேன் வாயு இருக்கிறதாம்.,இந்த தொகைக்காக இவ்வளவு பெரிய நிலப்பரப்பை   நமது மத்திய அரசு பலி கொடுக்கிறது.இத்திட்டத்தின் பின்னே ஆழமான பயங்கர  நோக்கம் இருக்கிறது.!

         நம் காவிரி படுகையின் கீழே மாபெரும் நிலக்கரி சுரங்கம் இருப்பதை கண்டறிந்துள்ளனர்! .இந்த மீத்தேன் வாயு எல்லாம் முதல் 35 ஆண்டுகள் மட்டும்தான். அதன் பிறகு  நிலக்கரியைத்  தோண்டி எடுக்கவே  இந்த திட்டம் ! ஆனால், செய்திகளில் “மீத்தேன் வாயு திட்டம்” என்றுதான் முன்னிலை படுத்துகிறார்கள்!  ஏன்என்றால் முதலில் மீத்தேன் வாயுவை வெளியேற்றினால்தான்  நிலக்கரியை தோண்டி எடுக்க முடியும் இல்லையெனில் தீ விபத்து ஏற்படும்!  அதற்காக மீத்தேனை வெளியே எடுக்க வேண்டுமானால் முதலில் நிலத்தடி நீரை முற்றிலும் வெளியேற்ற வேண்டும்!

          நிலத்தடி நீரை வெளியேற்றிவிட்டால் பின் மெல்ல மெல்ல அந்தப் பகுதியின் நிலத்தடி நீர்வளம் நாசமாக்கப்பட்டு, பூமியின் கீழ் ரசாயன கழிவுகள் செலுத்தப்பட்டு, பின்  பூமியின் மேலே  நிலம் நஞ்சாகிவிடும்!இவையெல்லாம்  35 ஆண்டுகளுக்குள் நடக்ககூடும்!

          அப்புறம்  என்ன? அந்த பகுதி மக்கள் வேறு வழியில்லாமல், விவசாயம் செய்ய முடியாமல், நிலங்களை பாதி விலைக்கு விற்றுவிட்டு அந்த பகுதியை விட்டே வெளியேறி விடுவார்கள்  அப்புறமென்ன? எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் நிலக்கரி தோண்ட ஆரம்பித்து விடுவார்கள்!  என்ன  ஒரு மாபாதக திட்டம் இது! .

         அமெரிக்கா, கனடா ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில்  மீத்தேன் எடுக்கிறார்கள் என்றால், மக்கள் அடர்த்தி குறைந்த பகுதியிலும,மக்கள் அதிகம் வசிக்காத நிலப்பரப்பிலும்  இந்த திட்டத்தை செயல் படுத்துகிறார்கள்!

          ஆனால், இங்கே காவிரி டெல்டாவில் ஊர்களும் வயல்களும் இனைந்தே இருக்கிறது. .ஏற்கனவே திருவாரூர் பகுதியில் குழாய்கள் அனகொண்டா போல் ஊர்முழுவதும் புதைக்கப்பட்டு இருகிறது!

          நெற்களஞ்சியமாக காணப்பட்ட விளைநிலங்களை விலை நிலங்களாக மாற்றுவதோடு   பாலை வனமாகவும் மாற்ற கிளம்பி உள்ளார்கள் ! இந்த பயங்கரம்  நம் மாவட்டதில் ,தஞ்சையில் நடக்கிறது    இனியும் நினைக்காதீர்கள்.!

         தமிழனின் வீரம் ஜல்லிக்கட்டிலும், இளவட்டக்கல்லிலும் மட்டும் இல்லை...எங்கெல்லாம் தமிழனுக்கு பாதிப்பு ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் தமிழனுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதும் வீரம் தான்!

          நம் விவசாய நிலங்களை காக்கவேண்டிய மகத்தான பொறுப்பு இன்று நமக்கு இருக்கிறது! நம் வருங்கால சந்ததியினருக்கு சொத்துக்களை சேர்த்து வைப்பதை விட இயற்கை வளங்களையும் வளமான வாழ்வையும் ஏற்படுத்தி தருவதே நம் கடமை.!

          நம்   சந்ததியினர் சாப்பிடப் போகும் தட்டில்.. நாம் அரிசியை தரப் போகிறோமா? அல்லது கரியை தரப் போகிறோமா என முடிவு செய்ய வேண்டிய கட்டாயம் இன்று ஏற்பட்டு உள்ளது. நமது மண்ணைக் காக்க,தமிழர்களைக் காக்க, விவசாயிகளைக் காக்க, நிலத்தடி நீரைக்காக்க, இயற்கை வளத்தைக்காக்க ,  உணவுதேவையைக் கருதி, எதிர்வரும் சந்ததிகளின் நலத்தைகருதி மீத்தேன் வாயுத் திட்டத்தை எதிர்போம் !
(நன்றி; பனிமலர் வைத்தி )

கருத்துக் கணிப்பும் மக்கள் நினைப்பும்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

         தேர்தல் என்றாலே ஆட்சிக்கு வரும் கட்சி எது,?அதிக இடங்களைக் கைப்பற்றும் கட்சி எது?எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்? எந்தவேட்பாளர் வெற்றிபெறுவார்?அல்லது எதனால் அவர் வெற்றி  பெறமாட்டார் என்று  பத்திரிகைகள், தொலைக் காட்சி ஊடகங்கள், தனியார் துப்பறியும் நிறுவனங்கள், தேர்தல் கணிப்புக்கு என்ற இயங்கும் அமைப்புகள் எல்லாம் கருத்துக் கணிப்புகள்  நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.


       எப்போதேனும் ,அபூர்வமாக ஒன்றிரண்டு கருத்து கணிப்புகள் சரியாக அமைந்துவிடுவதும் உண்டு. ஆனால், கணிப்புகள் பெரும்பாலும்  மக்கள் நினைப்பை, அவர்களது எண்ணத்தைப் பிரதிபலிப்பதில்லை என்பதுதான் உண்மையாக இருக்கிறது.!

       காரணம், கணிப்புகள் நடத்தும் அமைப்புகள் வாக்களர்களில் சிறு பகுதியினரை மட்டுமே அணுகுவது, தொகுதிநிலவரம், வாக்களரின் தகுதி, கட்சியின் செல்வாக்கு,வேட்பாளர்கள்  தேர்தலில் செலவிடும் முறைகேடான கள்ளப் பணம், வாக்குக்கு கடைசி நேரத்தில் தரும் லஞ்சம், குவாட்டர், கோழி பிரியாணி,தொகுதியில் உள்ள ஏழ்மை, வேலைவாய்ப்பின்மை ஆகிய பலவற்றை  கணிப்பாளர்கள் கருத்தில் கொள்ளாத  காரணங்களால் கணிப்புகள் பொய்த்துப் போகின்றன.

         பிறகு, தேர்தல் கணிப்புகள் பிறகு எதற்காக நடத்தப் படுகின்றன?  மக்களின் திடமற்ற,ஊசலாடும் மனநிலையைத் தங்களது ஆதரவு அக்கட்சிக்கு, வேட்பாளருக்கு ஆதரவாக திசைதிருப்பவே நடத்தப்படுகிறது.!

 பல தேர்தல்களை  சந்தித்த,பல வேட்பாளர்களுக்கு  வாக்குகளை அளித்து ஏமாந்த  வாக்காளர்கள் பலரும் "எல்லோரும் அயோக்கியர்கள் எல்லா கட்சியும் ஊழல் கட்சிகள்" என்ற விரக்தியில் இருப்பார்கள்.  அத்தகைய மக்களுக்கு இந்த தேர்தலில் நீங்கள் யாருக்கு வாக்களிக்கலாம் என்று மறைமுகமாக தூண்டும்  மனோதத்துவ செயலாக தேர்தலுக்கு முன்பு நடத்தப்படும்   கணிப்புகள் இருக்கின்றன !

      வாழ்க்கை நெருக்கடியில் பல்வேறு வீழ்ச்சிகளை,தோல்விகளைச் சந்திக்கும்  பொதுஜனமான வாக்காளர்கள்,  இந்த வேட்பாளர்தான் வெற்றி பெறுவார், இந்த கட்சிதான் ஆட்சி அமைக்கும்  என்ற தேர்தல் கணிப்புகளால் மனமாற்றம் அடையும் நிலையை கணிப்புகள் ஏற்படுத்துகின்றன.!

        மனித மனம் தோல்வியை விரும்புவதில்லை. வெற்றியை விரும்புகிறது. வெற்றி சந்தோசத்தைக் கொடுகிறது. அந்த சந்தோசத்தைத் தரும் வெற்றியை விரும்பும் மனிதன் பின்விளைவுகளைக்  கருத்தில் கொள்ளாமல், கணிப்புகள் என்ற பெயரில் திணிக்கப்படும், வெற்றிபெறுவார் என்றுகருத்துக் கணிப்புகள் கோடிட்டுக் காட்டும் மோசமான வேட்பாளருக்கு வாக்களிக்கும் நிலையை  ஏற்கவைக்கும் உத்தியே கணிப்புகளின் நோக்கமாகும்!

     . "எப்படியும் அவர்தான் வெற்றிபெறுவார் என்று கணிப்புகள் சொல்லுகின்றன .  நாம் எதற்கு நமது வாக்கை தோல்வி அடையும்  வேட்பாளருக்கு போடவேண்டும்?. நாம் தான் வெற்றி பெறவில்லை நாம் வாக்களிக்கும் நபராவது (வேட்பாளர் )வெற்றிபெறட்டும்"  என்ற மன நிலைக்கு வாக்காளர்களை கொண்டுசெல்ல  கணிப்புகள் பயன்படுகின்றன. .

          உள்நோக்கத்துடன் குறிப்பிட்ட கட்சிக்கு, வேட்பாளருக்கு ஆதரவாக நடத்தப்படும்  கணிப்புகள் ஆபத்தானவை. இதனால், ஜனநாயகத்திற்கு எதிரான,   மிக மோசமான,நபர்கள்,கிரிமினல்கள் கூட தேர்தலில் வெற்றிபெரும் நிலை ஏற்படுகிறது.!

        ஜோதிடர்கள் எப்படி  ஆளுக்கு ஒருவர் அவரவர் எண்ணப்படி ஜோதிடம் என்ற பெயரில் சொல்கிறார்களோ,  அதுபோன்றதுதான்   தேர்தல் கணிப்புகளும் !

           ஆகவே, மக்கள் தேர்தல் கணிப்புகளை பொதுமக்கள் அலட்சியப் படுத்தவும் கணிப்புகளுக்கு  முக்கியத்துவம் அளிப்பதையும் த்விர்க்கவும்   வேண்டும்.  நல்ல வேட்பாளர்களை ,ஜனநாயகவாதிகளை  கட்சி வித்தியாசம் இன்றியும்   சாதி, மதம் பாராமலும் தேர்வு செய்ய முன்வரவேண்டும்!

       குறுக்கு வழியில் ஆட்சிக்கு வருவோருக்கு உதவும் கணிப்புகளை புறகணிக்க வேண்டியது வாக்களர்களின் முக்கிய கடமையாகும்.!  அவ்வாறு செய்தால்தான் இந்தியாவில் ஜனநாயகம் தழைக்கும் !  கிரிமினல்கள்,ஊழல் அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வருவதை தடுக்க முடியும் ! நாடும் வீடும் நலம்பெற நமது  வாக்குகளை  நல்ல முறையில் பயன்படுத்துவோம்!

பொது சிவில் சட்டம் தேவையா?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

பொது சிவில் சட்டம் தேவையா?


        விஷ்வ இந்து பரிஷத் தலைவர்   பிரவீன் தொகடியா  பாபர் மசூதி இருந்த அதே இடத்தில ராமர் கோயில் கட்டவேண்டும்,பொது சிவில் சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று பேசியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருக்கத்தில் இந்துத்துவ அமைப்பு தலைவர்கள் பலரும்  வெகுஜன மக்களான இந்துக்களின் வாக்குகளை மனதில் வைத்து இதுபோல பேசுவதுவாடிக்கையாக இருந்துவருகிறது!

       இந்தியாவில் உள்ள  முஸ்லிமோ,இந்துவோ, சீக்கியனோ,கிருத்துவனோ அல்லது வேறு எந்த மதத்தை சேர்த்தவர்களாக இருந்தாலும் அனைவருக்கும் கிரிமினல் (குற்றச்)  சட்டம் பொதுவானதாகும். கிரிமினல் சட்டப்படி எந்த மதத்தை சேர்ந்த யாராக இருந்தாலும் அவர்களது குற்றசெயல்களுக்கு நடவடிக்கை எடுக்கவும்,தண்டனை வழங்கவும் முடியும்.!


         பொதுவான கிரிமினல் சட்டம் அமுலில் இருந்து வரும் நிலையில்,  இந்துத்துவ வாதிகள்,   பொதுவான சிவில் சட்டம் வேண்டும் என்று இந்துத்துவ வாதிகள் தொடர்ந்து  ஏன் கூறுகிறார்கள்? 

        இந்திய அரசியல் அமைப்பில் சிறுபான்மையினராக உள்ள சமூகங்களுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளன. கல்வி நிலையங்கள்,வழிபாட்டு உரிமைகள், அரசின்  நிதி ஒதுக்கீடு,உதவித் தொகை போன்ற சலுகைகளை பெற்றுவரும் சிறுபான்மையினருக்கு அவைகளை வழங்க கூடாது என்று நேரடியாக  தடுப்பதற்கு பதிலாக, மேலும்  சிறுபான்மை சமூகங்களின் வாழ்வாதாரத்தை பறித்து, பாதிப்புக்கு உள்ளாக்க வேண்டும் என்ற பாசிச இந்துவெறியர்களின் நோக்கமே  பொது சிவில் சட்ட கோரிக்கையாக அவர்களால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.


          இந்தியாவில் பொது சிவில் சட்டம் அமுல்படுத்தினால் சிறுபான்மை இன மக்கள் மட்டும் பாதிக்க படுவார்கள் என்பதில்லை. இந்து மக்களாக அடையாள படுத்தும்  தாழ்த்தப்பட்ட,  பழங்குடியின ,  மிகவும் பிற்படுத்தப்பட்ட  சமூகங்களும், சாதிகளும் கூட பாதிக்க படும். !

       இன்று அவர்களுக்கு வழங்கி வரும் கல்விச் சலுகைகள், கல்வி உதவித் தொகை,  இருப்பிட வசதி, இட ஒதுக்கீடு,  வேலைவாய்ப்பில் முன்னுரிமை, அவர்களின் முன்னேற்றத்திற்கு மத்திய - மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் சிறப்பு கூறுகள் திட்டங்கள்,  அவற்றுக்கு வழங்கப்பட்டு வரும் நிதி ஒதுக்கீடு, சிறப்பு தொழில் வாய்ப்புகள்,  கடன் வசதிகள்   ஆகிய அனைத்தும் கேள்விக்குறியாகும்.!

       பொது சிவில் சட்டப்படி, இவைகளை  S C , S T AND  M BC  மக்கள் எதிர்காலத்தில்  பெற முடியாமல் போகும். அவைகளை தொடர்ந்து பெற நீதிமன்றம் போனாலும்  சட்டத்தை காட்டி  தடுத்துவிட முடியும். . இந்த விவரங்களை அறியாமல்  முட்டாள்தனமாக, வெகுஜன  இந்துக்கள் எனபடும் தாழ்த்தப்பட்ட,பழங்குடியின,மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் பொது சிவில் சட்டம் கோரிக்கைக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள்!



         பிராமணர்கள்,ஆதிக்க சாதிகள்,   அதிகார வர்க்கங்கள் ஆகியோர்தான் பொது சிவில் சட்டத்தால் மேலும்  லாபம் பெறுவார்கள். ! எல்லாம் சட்டப்படியே   நமக்கு மறுக்கப்படும்.   'அவாள்'களுக்கு கிடைக்கும். அதற்காக    நடத்தும்  நாடகமே, பொது சிவில் சட்டம்   என்பதை புரிந்து நாம்  கொள்ள வேண்டும்! .

       பொது சிவில் சட்ட கோரிக்கைப் பற்றி  முஸ்லிம் சமூக புரட்சியாளர், போராளி டாக்டர்.பழனிபாபா அவர்கள்  முப்பது ஆண்டுகளுக்கு முன்பே தெளிவான பார்வை கொண்டு, கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.  அவரது கருத்துகளை  அடுத்த பதிவில் பார்ப்போம். 

பொதுசிவில் சட்டம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

சென்னை: பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கையில் பாலின சமத்துவத்துக்காக பொதுசிவில் சட்டம் கொண்டுவருவோம் என்கிறது. ஆனால் பொதுசிவில் சட்டத்தை முஸ்லிம் மக்களும் சமூக நீதியாளர்களும் நீண்டகாலம் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
இந்த பொதுசிவில் சட்டம் பற்றி எழுத்தாளர் அ.மார்க்ஸ் தனது "இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள்" என்ற நூலில் விவரித்திருக்கிறார். தமது இணையப் பக்கத்தில் அ.மார்க்ஸ் வெளியிட்டுள்ள இந்த நூலில் பொதுசிவில் சட்டம் பற்றி கூறப்பட்டுள்ளதாவது: எல்லோருக்கும் பொதுவான சிவில் சட்டம் என்பது ஒரு நியாயமான கோரிக்கைதானே! அதை ஏன் முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள்? மேலோட்டமாகப் பார்த்து இந்தப் பிரச்சினையை அணுக முடியாது. கிரிமினல் சட்டம், தண்டனைச் சட்டம் எல்லாம் இங்கே பொதுவாகத்தான் இருக்கிறது. சிவில் சட்டத்தில் விவாகரத்து, தத்து எடுத்தல், சொத்துரிமை ஆகியவற்றில் மட்டும் சில வேறுபாடுகள் மத அடிப்படையில் இங்கே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஏதோ இந்திய முஸ்லிம்கள் அனைவருக்கும் அவர்களது ஷரியத் சட்டங்கள் எல்லாம் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளன என்பது போலச் சொல்வதும் தவறு. உதாரணமாக முஸ்லிம் நீதி முறையோ, தண்டனை முறையோ இங்கு நடைமுறையில் இல்லை. குற்றவாளிக்குத் தண்டனை என்பது இங்கே மத ரீதியில் வழங்கப்படுவதும் இல்லை. எல்லோருக்கும் பொதுவாகத்தான் தண்டனை வழங்கப்படுகிறது. இந்தியா போன்ற பலவிதமான மொழி, பண்பாடு மதம், சாதி என வேறுபட்டு இருக்கும் மக்கள் குழுமங்களிடையே பொது சிவில் சட்டம் சாத்தியமல்ல. இந்துக்களிடையே கூட ஒரு சாதி மக்களின் வழமைகள் மற்றொரு சாதியுடன் முழுமையாக ஒத்துப் போவதில்லை. எடுத்துக்காட்டாக சில சாதியினர் மத்தியில் எளிதில் விவாகரத்தும் மறுமணமும் அனுமதிக்கப்படுகிறது. சில சாதிகளில் அது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்துச் சட்டம் இயற்றும்போது கூட மேற்குப் பஞ்சாபிய உயர்சாதிப் பார்ப்பனப் பண்பாடுகளின் அடிப்படையிலேயே அச்சட்டம் இயற்றப் பட்டது என்றும் அது பல பழங்குடி மக்களின் பண்பாடுகளுக்கு எதிரான வன்முறையாக இருக்கிறது என்றும் ஒரு விமர்சனமுண்டு. இது போன்ற சந்தர்ப்பங்களில் தல வழமைகளையும் கணக்கிலெடுத்துக் கொள்வதற்கும் நமது சட்டத்தில் வழிமுறைகள் உள்ளன. இப்படி நிறைய உதாரணங்கள் சொல்ல முடியும். சிறீரங்கம் கோயில் யானைக்கு வடகலை நாமம் போடுவதா, தென்கலை நாமம் போடுவதா என்றொரு பிரச்சினை பல ஆண்டுகளக்கு முன்பு வந்தது. நீதிமன்றம் வரை சென்ற அந்தப் பிரச்சினையில் இறுதிவரை பொதுவான முடிவு ஏதும் எடுக்க முடியவில்லை. ஒருமாதம் வடகலை நாமம், இன்னொரு மாதம் தென்கலை நாமம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது நினைவிருக்கலாம். இந்துமதத்திற்குள்ளேயே கூட இது சாத்தியமில்லை என்பதையே இது நிறுவுகிறது. இந்நிலையில் பல்வேறு மதங்களையும் உள்ளடக்கிய பொதுசிவில் சட்டம் என்பது முஸ்லிம்களக் குறிவைத்துச் செய்யப்படும் தாக்குதலின்றி வேறில்லை. சென்ற ஜுலை 21 (2003) அன்று வழங்கிய தீர்ப்பொன்றில் வழக்கின் வாதங்களுக்கோ, தீர்ப்புகளுக்கோ எவ்விதத் தொடர்பும் இன்றி பொதுசிவில் சட்டம் நிறைவேற்றுமாறு தலைமை நீதிபதி காரே பாராளுமன்றத்திற்கு அறிவுறுத்தியுள்ளார். அதற்கு அவர் சொன்ன காரணம் பொதுசிவில் சட்டம் வந்தால் தேசிய ஒருமைப்பாடு காப்பப்படுமாம். இதற்கு முன்பே நீதிபதி குல்தீப் சிங், சந்திரசூட் போன்றவர்களும் இப்படிச் சொல்லியுள்ளனர். அரசியல் சட்ட அவை விவாதத்தின் போதும் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், எம்.ஆர்.மசானி போன்றோர் இதைச் சொல்லியுள்ளனர். இதில் சிலஅம்சங்களை நாம் கவனிக்க வேண்டும். 1. பாராளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் அரசியல் சட்டத்திற்குப் பொருத்தமாக உள்ளதா இல்லையா என ஆய்ந்து தீர்ப்பளிப்பதே நீதிமன்றங்களின் பணி. பாராளுமன்றம் என்ன மாதிரி சட்டங்களை இயற்ற வேண்டும் எனச் சொல்வதற்கோ, கட்டளையிடுவதற்கோ அதற்கு அதிகாரமில்லை. 2. தேசிய ஒருமைப்பாடு குறித்த கவலையும் கூட நீதிமன்ற எல்லைக்கு அப்பாற்பட்டது. அது குறித்துப் பாராளுமன்றம், அரசியல் சட்டம் ஆகியவை கரிசனம் கொள்வதே பொருத்தம். 3. இந்த நாடு என்னுடையது; என்னுடைய அடிப்படையான, மத, பண்பாட்டு, மொழி உரிமைகள் எதுவும் புறக்கணிக்கப்படவில்லை; அந்த உரிமைகள் இந்த நாட்டின் சட்டத்தாலும், அரசாலும், நீதிமன்றங்களாலும் பாதுகாக்கப்படும் என்கிற உணர்வு ஒவ்வொரு குடிமகனுக்கும்/குடிமகளுக்கும் உறுதியாகும்போதே இந்த நாட்டின் மீதும், அதன் ஒருமைப்பாட்டின் மீதும் அவருக்கு நம்பிக்கை வரும். மாறாக பொதுசிவில் சட்டம் போன்றவற்றின் மூலம் அந்த உரிமைகள் மறுக்கப்படும்போது அவருக்கு இது நமது நாடுதானா என்கிற அய்யம்தான் ஏற்படும். முஸ்லிம் தனிநபர் சட்டத்தை ஒழிப்பது என்பது அவர்களின் மத உரிமையில் தலையிடுவதுதான். சொல்லப்போனால் ‘தனிநபர்', ‘சட்டம்' என்கிற இரு சொற்களுமே இங்கே பொருத்தமின்றி கையாளப்படுகின்றன. ‘தனிநபர்' என்கிற மேலைத்தேய நவீனத்துவக் கருத்தாக்கம் இங்கே பொருந்தாது. முஸ்லிம்களைப் பொருத்தமட்டில் இந்தச் சட்டத்தின் கீழ் வருபவை தனிநபர் சார்ந்த உரிமைகள் அல்ல. அது அவர்களது ‘தீனின்' ஒரு பகுதி, மதக் கடமை. தவிரவும் தொகுத்துச் சட்ட ஏற்பு வழங்கப்பட்டவைகளையே ‘சட்டம்' என்கிறோம். சட்டமாகும்போது நீதிமன்றம் அதை சொல்லுக்குச் சொல் கடைபிடிக்க வேண்டும. மீற முடியாது. ‘முஸ்லிம் தனிநபர் சட்டம்' இவ்வாறு பண்ணப்பட்டதல்ல. அதனால்தான் ஷாபானு வழக்கிலும் வேறு பல வழக்குகளிலும் முஸ்லிம் தனிநபர் சட்டத்தையும் மீறித் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய வாய்ப்புகள் இருக்கும் போதும் பொதுசிவில் சட்டம் எனக் கூப்பாடு போடுவதன் அர்த்தமென்ன? இந்த மாதிரியான பிரச்சினைகளில் சீர்திருத்தங்கள் கூடாது என்பதில்லை. அவை உள்ளிருந்து மேற்கொள்ளப்பட வேண்டும். வெளியிலிருந்து திணிக்கக்கூடாது. கிறிஸ்தவர்கள் தமது சட்டங்களில் சில மாற்றங்கள் வேண்டுமென்கிறார்கள். இதில் கருத்தொருமிப்பு இருந்தால் அதை ஏற்று தேவையான சட்டத் திருத்தம் செய்யலாம். அதே போல முஸ்லிம்கள் மத்தியிலும் ஏதோ ஒரு விசயத்தில் ஒரு கருத்தொருமிப்பு ஏற்பட்டு சட்டத் திருத்தம் என்கிற குரல் மேலுக்கு வந்தால் அது வேறு விஷயம்; அத்தகைய நிலை இல்லாதபோது வெளியிலிருந்து எதையும் திணிக்க முயல்வது எப்படிச் சரியாக இருக்க முடியும்? சில விடயங்களில் ஒரே பிரச்சினை குறித்து இருவேறு சூழல்களில் இருவேறு கருத்துக்களைக் கூடப் பேச வேண்டி இருக்கலாம். இதுநாள் வரை பெண்களுக்குப் ‘பர்தா' வேண்டாமே என்று சொல்லிக் கொண்டிருந்த பெண்ணியவாதிகள் கூட இன்று பிரெஞ்சு அரசாங்கம் பர்தா அணியக் கூடாது என்றொரு நிலையை வன்முறையாகச் செயல்படுத்த முனையும் போது அதற்கெதிராக முஸ்லிம் பெண்களுடன் இணைந்து போராடவில்லையா? இவ்வாறு அ. மார்க்ஸ் தமது நூலில் பதிவு செய்திருக்கிறார்.

Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/what-s-uniform-civil-code-197478.html