Tuesday 20 October 2015

சிறுமிகளிடம் பாலியம் குற்றம் புரிந்த அமெரிக்க இந்து சாமியார் தலைமறைவாகியுள்ளார்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

டெக்சாஸ் மாகணத்தின் 200 ஏக்கர் இடத்தில் ஆசிரமம் வைத்து நடத்தும் 82 வயது பிரகாஷ்ஆனந்த் சரஸ்வதி என்ற “சிரி சாமிஜி” என்று அழைக்கப்படும் சாமியார் மீது இரு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக 20 பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 11 மில்லியன் டாலர் (ஏறக்குறைய 50 கோடி ரூபாய்) பிணையில் தற்போது வெளியில் உள்ளார்.
அவர் மீது சாட்டப்பட்ட குற்றங்கள் டெக்சாஸ் மாகாண நீதிமன்றத்தில் தற்போது நிருபிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு நாளன வெள்ளி அன்று அவர் நீதிமன்றத்திற்கு செல்லாமல் தலைமறைவாகியுள்ளார். மேலும் அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.
ஒவ்வொரு பிரிவிற்கும் அதிபட்ச தண்டனையாக 20 வருடம் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது அமெரிக்க பாஸ்போர்ட் ஏற்கனவே நீதிமன்றத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment