Tuesday 20 October 2015

காஷ்மீர் எம்எல்ஏ மீது மை வீச்சு!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

சில
வாரங்களுக்கு முன் தாத்ரி சம்பவத்தைக் கண்டித்து மாட்டிறைச்சி விருந்து வைத்த ஜம்மு - காஷ்மீர் மாநில சுயேச்சை எம்.எல்.. இன்ஜினியர் ரஷீத் முகத்தின் மீது டெல்லியில் மை வீசப்பட்டது.
டெல்லி பிரஸ் கிளப் சந்திப்பில் இருந்த ரஷீத் முகத்தீல் 3 பேர் கருப்பு மையை வீசி இன்று தாக்குதல் நடத்தினர். உதாம்பூர் சம்பவத்தில் கொல்லப்பட்டவரின் குடும்பத்தினருடன் அவர் டெல்லி பிரஸ் கிளப் சந்திப்பில் இருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்து சேனா அமைப்பு இதற்கு பொறுப்பேற்றிருப்பதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
ரஷீத் கூறும்போது, “பாகிஸ்தான் தாலிபான்மயமாவது பற்றி மக்கள் பேசி வருகின்றனர், இங்கு என்ன வாழ்கிறது? அவர்கள் மன நோய் பீடித்தவர்கள். காஷ்மீரில் 80,000 பேர் பலியாகியுள்ளனர், என் மீது மை வீசுவதால் எதுவும் மாறிவிடப்போவதில்லைஎன்று தாக்குதலுக்குப் பின்னர் கூறினார்.

மை வீச்சுக்கு முன்பாக அவர் கூறியபோது, “என்னுடைய பசுவை வைத்துக் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம் மட்டுமே. என் பசு மீது மற்றவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?” என்று பேசினார்.

No comments:

Post a Comment