Saturday 1 February 2020

ஓரே காட்சிகுள் நான்கு நிலைகள் - RSS BJP

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக இவ்வளவு போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டுள்ளது. எனினும் மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருக்கிறதே

*குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக இவ்வளவு போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டுள்ளது. எனினும் மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருக்கிறதே என்று நிராசை அடையக் கூடியவர்களுக்கான ஒரு சிறிய பதிவு...*

அல்லாஹ் மிகப்பெரும் சூழ்ச்சியாளன்.

மத்திய அரசு இப்படி பிடிவாதமாக இருப்பதால்...

1. நம்மிடையே ஒற்றுமை மேலும் வலுப்படும்.

2.அனைத்து சமூக மக்களின் ஆதரவும் பெருகுகிறது.

3. உலக நாடுகளின் நிலைப்பாட்டையும் ஆதரவையும் அறிந்து கொள்ள முடிகிறது.

4. இஸ்லாத்தின் பக்கம் உலக மக்களின் கவனம் திரும்புகிறது.

5. இந்துத்துவா என்பதை பற்றியும் அவர்களின் திட்டங்கள் பற்றியும் உலகமே அறிந்து கொள்கிறது.

6. இந்துத்துவா இது போன்ற சந்தர்ப்பங்களில் எப்படி கோரமாக நடந்து கொள்வார்கள் என்பதையும் அல்லாஹ் வெளிக்கொண்டு வந்து அவர்களின் சுய ரூபத்தை உலக மக்களுக்கு காட்டிக் கொடுக்கிறான்.

7. முஸ்லிம்களின் சகிப்புத்தன்மையை உலகமே புரிந்து கொண்டு நமக்கு ஆதரவாக ஒன்று சேர்வதை காணமுடிகிறது.

8. இந்துத்துவா கொள்கைக்கு இந்தியாவில் எவ்வளவு எதிர்ப்பு என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ள முடிகிறது.

9. இந்தியா மதசார்பற்ற நாடாக தொடர்வதையே உலக நாடுகள் அங்கீகரிக்கின்றன என்பதை அனைவரும் அறிந்து கொள்கின்றனர்.

10. ஆளும் மத்திய பா.ஜ.க. மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் எந்த அளவு விரோதமானது என்பதை அவர்களது தற்கால செயல்பாடுகளின் மூலம் அவர்களே நிரூபிக்க இதுவே ஒரு சந்தர்ப்பம் ஆகி விட்டது.

இப்படி எத்தனை எத்தனையோ பலன்கள் ஆளும் வர்க்கத்தின் இந்த பிடிவாத்தின் காரணமாக வெளிப்பட்டு கொண்டுள்ளது...

சிந்தியுங்கள். இனி பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும்.

இறைவன் மிகப்பெரும் சூழ்ச்சியாளன்.


உங்கள் நன்பனான AS

குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) என்றால் என்ன?*

*முழுமையாக படியுங்கள்,புரியாதவர்களுக்கு விளக்குங்கள்,கடந்துவிடாதீர்கள்*

*குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) என்றால் என்ன?*
என்பதைப் பார்ப்போம்

1982ஆம் ஆண்டு பர்மா அரசாங்கம் குடியுரிமை சட்டத்தைக் கொண்டு வந்தது.

யாரேனும் பர்மாவில் குடியுரிமை பெறவேண்டுமென்றால் அவர்கள் 1824ஆம் ஆண்டிலிருந்து பர்மாவில் குடியிருக்க வேண்டும் என்ற விதியை அதில் கொண்டு வந்த்து இதுதான் 2017-ல் பல இலட்சக்கணக்கான ரோஹிங்கிய முஸ்லிம்களை பர்மாவை விட்டு விரட்டியடிக்கக் காரணமானது.

ஜெர்மனியில் ஹிட்லர் 1935ஆம் ஆண்டு குடியுரிமை சட்டத்தைக் கொண்டு வந்தார்.

லட்சக்கணக்கான யூதர்களை அந்நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கும், அவர்களைக் கொன்றொழிப்பதற்கும் அதுதான் காரணமாக அமைந்தது.

வரலாற்றில் இன அழிப்புக்கான ஒரு வலிமையான ஆயுதம் தான் குடியுரிமை சட்டம்.

அதைத்தான் இன்று சங்கப்பரிவாரங்கள் கையில் எடுத்திருக்கின்றனர் என்பதைக் கவனத்தில் கொண்டு,

பின்வரும் செய்தியை கவனமாகப் படிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்
அண்மையில் நாடாளுமன்றத்தில் CAB (Citizenship Amendment Bill) குடியுரிமை திருத்த மசோதா, ஆளும் பாசிக பாஜக அரசாங்கத்தால் கடந்த 09.12.2019 திங்கட்கிழமை அன்று தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்றத்தில் பாஜக பெரும்பான்மையாக இருப்பதால் 12 மணி நேர விவாதத்திற்குப் பிறகு 311:80 என்ற வாக்கு விகிதத்தில் சட்டம் நிறைவேறியது.

அதைத் தொடர்ந்து கடந்த 11.12.2019 புதன்கிழமை அன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு 6 மணி நேர விவாதத்திற்குப் பிறகு 125:105 விகிதத்தில் நிறைவேறியது.

மாநிலங்களவையில் பாஜக பெரும்பான்மையாக இல்லாவிட்டாலும் அதிமுக என்ற அடிமைக் கட்சியின் ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

https://chat.whatsapp.com/DEIF8AHE7ii8BsqyL22AvS

இவ்வாறு இரு அவைகளிலும் இந்தச் சட்டம் நிறைவேறிய பிறகு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பின் அது சட்டமாக ஆகி விட்டது.

அதனால் அது இனி மசோதா என்று அழைக்கப்படாது.

Citizenship Amendment Act (CAA) குடியுரிமை திருத்தச் சட்டம் என்றே அழைக்கப்படும்.

என்ன திருத்தம்?
1955ஆம் ஆண்டுக்கான இந்திய குடியுரிமைச் சட்டம் இரண்டு விஷயங்களைக் குறிப்பிடுகின்றது.

1. இந்தியாவில் குடியுரிமை கோரும் வெளிநாட்டினர் இந்தியாவில் 11 வருடங்கள் தங்கியிருக்க வேண்டும்.

2. அவர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் குடியேறியிருக்க வேண்டும்.

இதில்தான் மத்திய அரசு திருத்தம் கொண்டு வருகின்றது.

இந்தியாவில் குடியேறிய வெளிநாட்டினர் இனி 11 வருடங்கள் தங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை.

அவர்கள் 2014 டிசம்பர் 31க்கு முன்பு, 5 ஆண்டுகள் தங்கியிருந்தால் போதும்.

அவர்கள் சட்டவிரோதக் குடியேறிகளாக இருந்தாலும் இனி சட்டப்பூர்வமான குடியேறிகள் ஆகிவிடுவார்கள்.

அதனால் அவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும்.

ஆனால் இந்தத் திருத்தத்தின் கீழ் குடியுரிமை பெறத் தகுதியுடையோர்,

1. இந்துக்கள், 2. கிறிஸ்துவர்கள், 3. பௌத்தர்கள், 4. பார்சிகள், 5. சீக்கியர்கள், 6. ஜைனர்கள் ஆகிய 6 மதங்களைச் சார்ந்தவர்கள் மட்டும் தான்.

முஸ்லிம்களுக்குக் குடியுரிமை வழங்கப்படாது என்பது தான் அந்தச் சட்டத்திருத்தம்.

இந்திய அரசியல் சாசனத்தின் 14வது விதி, சமத்துவத்துக்கான உரிமையை அளிக்கின்றது.

இந்தச் சட்டத்தின்படி அனைவருக்கும் சம அளவிலான பாதுகாப்பு உரிமை உண்டு என்று தெளிவாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடிமக்கள் மற்றும் குடிமக்கள் அல்லாத அனைவருக்கும் இது பொருந்தும்.

அதேபோன்று, அரசியல் சாசனத்தின் 15வது விதியும் சாதி, மதம், இனம், பாலினம், பிறப்பு இவற்றின் அடிப்படையில் யாருக்குமிடையே பாகுபாடு காட்டக்கூடாது என்று கூறுகின்றது.

இவையெல்லாம் இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை விதிகள்.

இவற்றுக்கு மாற்றமாக எந்தச் சட்டத்தையும் யாரும் நிறைவேற்ற முடியாது.

அவர்கள் நாடாளுமன்றத்தில் மிருக பலம் கொண்டிருந்தாலும் சரி! அசுர பலம் கொண்டிருந்தாலும் சரி!
ஆனால் அரசியல் சாசனம் வழங்கியுள்ள இந்த அடிப்படை உரிமைகளுக்கு எதிராகத் தான் பாசிச பாஜக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

அதாவது, முஸ்லிம்களைத் தவிர பிற மக்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்தச் சட்டத்தை எதிர்த்து நாடே எரிமலையாகப் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது.

முஸ்லிம்கள் மட்டுமின்றி அவர்களுக்கு ஆதரவாக முஸ்லிமல்லாத பிற மதத்தவர்களும் சேர்ந்து இந்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர்.

இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளிக்கையில், "இது முஸ்லிம்களுக்கு எதிரான சட்டமல்ல! ஓரிடத்தில் கூட இது முஸ்லிம்களைப் பற்றி குறிப்பிடவில்லை" என்று குறிப்பிடுகின்றார்.

இங்குள்ள அடிமை ஓப்பி, ஈப்பிகளும் அதையே வாந்தியெடுக்கின்றனர்.

மதரீதியாக இந்தியர்களைப் பிளவுபடுத்துகின்றது என்ற ஒற்றைக் காரணத்திற்காகவே இந்தச் சட்டத்தை எடுத்த எடுப்பிலேயே நிராகரிக்க வேண்டும்.

ஆனாலும் CAA முஸ்லிம்களைப் பற்றி குறிப்பிடவில்லை என்று அமீத்ஷா சொல்வதை ஒரு வாதத்திற்கு ஏற்றுக் கொள்வோம்.

ஆனால் அமீத்ஷா இத்துடன் நின்றால் பரவாயில்லை.

அவர் NRC என்ற சட்டத்தையும் சேர்த்து அமல்படுத்துவோம் என்று அன்றும் இன்றும் அழுத்தம் திருத்தமாக அடித்துச் சொல்கின்றார்.

இதில்தான் முஸ்லிம்களுக்கு ஆபத்து ஒளிந்திருக்கின்றது.

அதைத் தெரிந்து கொள்வதற்கு இங்கு நாம் NRC அல்லது NRIC என்ற சட்டத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியத்திலும் அவசரத்திலும் இருக்கிறோம்.

தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) என்றால் என்ன?
National Register of Citizens அல்லது National Register of Indian Citizens தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது தான் NRC என்று அழைக்கப்படுகின்றது.

CAA என்பதற்கும் NRC என்பதற்கும் இடையிலுள்ள வித்தியாசத்தையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

என்ன வித்தியாசம்?
CAA எனும் குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் பற்றிய விளக்கத்தை மேலே நாம் பார்த்தோம்.

CAA என்றால் சுருக்கமாக இந்தியக் குடிமக்களாக ஒரு தரப்பு மக்களைச் சேர்த்தல் என்றும், NRC என்றால் இந்தியக் குடிமகன் என்ற தகுதியிலிருந்து ஒரு தரப்பு மக்களை நீக்குதல் என்றும் நாம் எளிதாக விளங்கிக் கொள்ளலாம்.

இப்போது நாடு முழுமைக்கும் அமித்ஷா குறிப்பிட்டது போன்று NRC அமலுக்கு வருகின்றது என்று வைத்துக் கொள்வோம்.

இந்த NRC திட்டப்படி இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும், தான் இந்தியர் தான் என்று அரசிடம் நிரூபிக்க வேண்டும்.

அதற்கு ஆதார் கொடுத்தால் மட்டும் போதாது.

ஏனென்றால் ஆதார் அட்டையிலேயே, "இது அடையாளத்திற்கான சான்று மட்டுமே! குடியுரிமைக்கான சான்று அல்ல!" என்று அச்சிட்டுத்தான் தருகிறார்கள்.

எனவே ஆதாரை வைத்து எதுவும் செய்ய முடியாது.

நீங்கள் இந்த ஊரில் தான் பிறந்தீர்கள், இன்ன நபருக்குத்தான் பிறந்தீர்கள், உங்கள் தந்தையும் இங்கே தான் பிறந்தார் என்று நிரூபிக்க வேண்டும்.

எல்லா அலுவலகத்திலும் லஞ்சம் கொடுத்து ஆவணங்களைத் திரட்ட வேண்டும்.

வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வேலை செய்வோர் வேலையை விட்டு விட்டுத் தங்கள் ஊருக்கு வந்து, இவற்றைச் செய்ய வேண்டும்.

அப்படியும் திருப்திகரமாக ஆவணங்களைக் காட்ட இயலாவிட்டால், அல்லது எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தாலும் சங் பரிவாரச் சிந்தனை கொண்ட அரசு அதிகாரிகள் அவற்றை ஏற்றுக் கொள்ள மறுத்தால், இந்த நாட்டின் பூர்வக் குடிமக்களாக இருந்தாலும் அவர்கள் இந்தியரல்லர் என்று அறிவிக்கப்படுவார்கள்.

அப்படிக் காட்ட இயலாமல் போவதில் இந்துக்களும் இருப்பார்கள் அல்லவா? அப்படியானால் இது முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரானது என்று எப்படிச் சொல்ல முடியும்? என்று கேள்வி எழுப்பலாம்.

இங்குதான் CAAயின் தேவை வருகிறது.

இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் இந்தியராக இல்லாவிட்டாலும் CAA சட்டத்தின்படி குடியுரிமை பெறுவார். அதாவது, இந்துக்கள், கிறிஸ்துவர்கள், பௌத்தர்கள், பார்சிகள், ஜைனர்கள், சீக்கியர்கள் ஆகிய ஆறு பிரிவினரும் CAAவுக்குள் வந்து விடுவார்கள்.

அவர்கள் தமது வாழ்நாளை அப்படியே தொடரலாம்.

ஆனால் இந்தியாவிலேயே பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த ஒரு முஸ்லிமுக்கு CAAயின் பாதுகாப்பு இல்லாததால் வந்தேறி என்ற முத்திரை குத்தப்படுவார்.

இந்த இரண்டு சட்டங்களையும் வைத்து இந்தியாவில் வசிக்கும் பாதிக்கும் மேற்பட்ட முஸ்லிம்களை சுலபமாக வந்தேறிகள் என்று அறிவித்து விடலாம்.

அவர்களது குடியுரிமையை பறித்து விடலாம்.

ரேஷன் கார்டு, வாக்குரிமை போன்றவை பறிக்கப்பட்டு, Detention Camp என்ற தடுப்பு முகாம்களில் அவர்களை அடைத்து விடலாம்.

NRC அமுலுக்கு வந்ததும் நாடு முழுவதிலும் சரியாக ஆவணங்கள் இல்லாத முஸ்லிம்களும், அதுபோல் மேலே குறிப்பிட்ட ஆறு மதத்தினர்களும் தங்கள் குடியுரிமைக்காக விண்ணப்பிப்பார்கள்.

இப்போது அரசாங்கத்திற்கு முன்னுள்ள வேலை மிகவும் எளிது.

CAA அடிப்படையில் குடியுரிமைக்குத் தகுதியான ஆறு மதத்தவர்களை மட்டும் சேர்த்து விட்டு NRC அடிப்படையில் முஸ்லிம்களைக் கழித்து விடுவார்கள்.

இதன்பின்னர் முஸ்லிம்கள் கைதிகளாகவோ அல்லது அகதிகளாகவோ இருக்க வேண்டும்.

அல்லாஹ் காப்பாற்றுவானாக!
CAA என்பது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய 3 நாடுகளிலிருந்து மதரீதியில் துன்புறுத்தலுக்காகி இந்தியாவுக்குள் வருகின்ற ஆறு மதங்களைச் சார்ந்தவர்களுக்கு என்று சொன்னாலும் அமித்ஷாவின் NRC அறிவிப்பு அதைத் தவிடுபொடியாக்கி விடுகின்றது.

எனவே, முஸ்லிம்களுக்குப் பாதிப்பில்லை என்று கூறும் அமித்ஷாவின் பொய்யான வாக்குறுதியை முஸ்லிம்கள் மட்டுமல்ல! இந்த நாட்டில் வசிக்கும் நடுநிலையான எந்தக் குடிமகனும் நம்புவதற்குத் தயாரில்லை.

அஸ்ஸாமில் உள்ள முஸ்லிம்களை வெளியேற்றுவதற்காக அங்கு NRC அமுல்படுத்தப்பட்டது.

1600 கோடி ரூபாய் செலவு செய்து, ஆறாண்டு கால கடுமையான உழைப்புக்குப் பிறகு NRC மூலம் 19 லட்சம் அஸ்ஸாம் குடிமக்கள் இந்தக் குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் விடுபட்டவர்களில் 12 லட்சம் பேர் வங்க மொழி பேசும் இந்துக்கள்! மற்ற 7 லட்சம் பேர் முஸ்லிம்கள்! இது அஸ்ஸாம் மக்களிடம் பாஜகவுக்குப் பெரும் அவப்பெயரை வாங்கிக் கொடுத்து விட்டது.

அந்தத் தவறை மறைப்பதற்காகவும், விடுபட்ட 12 லட்சம் இந்துக்களுக்குக் குடியுரிமை வழங்கிவிட்டு, ஏழு லட்சம் முஸ்லிம்களை அகதிகளாக நாடு கடத்த வேண்டும் என்பதற்காகவும் CAA கொண்டு வரப்பட்டுள்ளது.

அதே பாணியில் நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்களை அகதிகளாக்குவதற்காகத் தான் NRC-யை இந்தியா முழுமைக்கும் அமுல்படுத்த அமித்ஷா துடிக்கின்றார் என்பதை இஸ்லாமிய சமுதாயம் நன்றாக விளங்கி வைத்திருக்கின்றது.

இப்போது மோடி - அமித்ஷா கூட்டணியிடம் நாம் முன்வைக்கும் கோரிக்கை இதுதான்.

1. CAA எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும்.

2. NRC எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமுல்படுத்த மாட்டோம் என்று பகிரங்கமாக நாடாளுமன்றத்தில் அறிவிக்க வேண்டும்.

இந்த இரண்டு கோரிக்கைளையும் நிறைவேற்றும் வரையில் சமுதாயம் போராடிக் கொண்டிருக்க வேண்டும்.

*நீங்கள் படித்து விட்டு மற்றவர்களுக்கும் அனுப்புங்கள்*

*உங்கள் வாயிலாக அல்லாஹ் ஒருவரை நேர்வழியில் செலுத்துவது சிகப்பு ஒட்டகங்களை (தருமம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும்*

இப்பதிவை தாங்கள் இருக்கும் மற்ற வாட்ஸ்அப் தளங்களுக்கும் அனுப்பி அவர்களும் அறிந்துக்கொள்ள உதவவும் இன்ஷாஅல்லாஹ்..


உங்கள் நன்பனான AS

இந்தியக் கல்வித் துறை எப்படி ஆட்சியாளர்களால் கல்விச் சந்தையாக உருமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது

இந்தியக் கல்வித் துறை எப்படி ஆட்சியாளர்களால் கல்விச் சந்தையாக உருமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதற்கு ஒரு குறியீடுபோல இருக்கிறது ராஞ்சியிலுள்ள ஒரு ஐந்தடுக்குப் பெரும் கட்டிட வளாகத்தின் பெயர் - 'எஜுகேஷன் மால்'.

ராஞ்சியில் 2012-ல் வெறும் இருநூறு பயிற்சி மையங்களே இருந்தன; இன்றைக்குப் பத்தாயிரத்தைத் தாண்டிவிட்டது என்கிறார்கள். நாட்டின் மிகப் பெரிய தொழில் சாம்ராஜ்யமான 'ரிலையன்ஸ்' தன் பார்வையைக் கல்வித் துறை நோக்கித் தொடர்ந்து முன்னகர்த்திவருவது ஒரு சூட்சமப் புள்ளி. மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் கல்வி வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கும் 'எம்பைப்' நிறுவனத்தின் பங்குகளை வாங்க 'ரிலையன்ஸ்' செய்துகொண்ட ஒப்பந்தத்தை இங்கே நினைவுகூரலாம். "நாடு முழுவதும் உள்ள 19 லட்சம் பள்ளிகள், 58,000 கல்லூரிகளைத் தொழில்நுட்பம் வழி இணைக்க இலக்கு வைத்திருக்கிறோம்" என்று அப்போது சொன்னார் ஆகாஷ் அம்பானி.

பள்ளிக்குச் செல்வது தனிப் பயிற்சியாளர்களுக்கு இனி ஒரு சம்பிரதாயம், அவ்வளவே. 2018 'நீட்' தேர்வில் நாட்டிலேயே முதலாவது இடத்தில் தேறிய மாணவி கல்பனா குமாரி, ஒரே சமயத்தில் பிஹார் பள்ளியில் படித்தபடியே டெல்லியில் முன்னணிப் பயிற்சி மையம் ஒன்றில் முழு நேர மாணவியாக தனிப் பயிற்சி பெற்றதும், பிஹார் பள்ளிக்கூடத்தில் முழு வருகைப்பதிவு பெற்றது சர்ச்சையானதும் பள்ளிக்கூடங்களின் மரணத்தையே சுட்டுகின்றன.

என்னுடைய பிரதான குற்றச்சாட்டு இதுதான்: 12 வருடப் பள்ளிக் கல்வியை இந்த நுழைவுத் தேர்வுகள் கொச்சைப்படுத்துகின்றன; அர்த்தமற்றதாக்குகின்றன. உயர் படிப்புகள் ஒவ்வொன்றுக்கும் நுழைவுத் தேர்வும் தனிப் பயிற்சியும்தான் வழி என்றால், 12 வருட பள்ளிக் கல்விக்கு என்ன பொருள்? அப்படியென்றால், பள்ளிக் கல்வி என்பது கீழ்நிலை வேலைகளுக்கானதா?

முழுக் கட்டுரையையும் அவசியம் வாசியுங்கள், பகிருங்கள்:

http://writersamas.blogspot.com/2020/01/blog-post_97.html?m=1

புதுவை முதல்வர் இன்றைய ஹைலைட் உரை

👆👆 புதுவை முதல்வர் இன்றைய ஹைலைட் உரை

நாம் பேசவேண்டிய செய்தி என்ன ?

ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கியால் சுட்ட ராம்பக்த் கோபால் ஷர்மா 2002 ல் பிறந்த ஒரு மைனர் மாணவர்- அர்னாப், ரிபப்ளிக் டிவி சொல்றான் ,

உபி ஊடகம் சொல்லுற செய்தியை கேளுங்க ,

ராம்பக்த் கோபால் ஷர்மா
2017 ஜாமியா பல்கலைக்கழகத்தில் சேர விரும்பினானாம் , அங்க அவனுக்கு மதத்தை காரணம் காட்டி சீட் கொடுக்கலையாம் ,

எவ்வளவு கேவலமான ஊடகவாதிகள் இவர்கள் ,

இதுல இன்னொரு கொடுமை 2000 த்தில் இவங்க அப்பா இறந்துட்டார்.எப்படி 2002 தில் பிறந்தான் ? 🙆🙆

Any How,

நாம் பேசவேண்டிய செய்தி என்ன ?

1 . ராம்பக்த் கோபால் ஷர்மா கையில் எப்படி துப்பாக்கி வந்தது ?.
2 . ராம்பக்த் கோபால் ஷர்மாவை இயக்குவது யார் ?
3 . ராம்பக்த் கோபால் ஷர்மா பேஸ்புக்கணக்கில் அனைத்தையும் அறிவித்துவிட்டு செய்யும் துணிச்சலுக்கு பின்னாடி மூளையாக இருந்தது எது ?
4 . ராம்பக்த் கோபால் ஷர்மாவை சிறார் என்று கூறி காப்பாத்தும் அஜெண்டாவை ஊடகத்திற்கு யார் கொடுத்தார்கள் ?
5 . இப்படியே அனைவரும் துப்பாக்கி , கத்தி எடுத்தால் நாட்டின் நிலை என்ன வாகும் ? இதற்க்கு தீர்வு என்ன ?

இவ்வாறான விஷயங்களை பற்றி பேசாமல் தொடர்ந்து மடைமாற்றி கொண்டு இருக்கிறது ஊடகம் !

உங்கள் நன்பனான AS

Silapuram police station arrest islamic women’s

சீனாவில் அழிவு எதனால்...*

*சீனாவில் அழிவு எதனால்...*

*இறையச்சத்துடன் தொடர்க..!*

*சமகால அகதிகள் உய்குர் முஸ்லிம்கள்…*

சீனாவின் தெற்குப் பகுதியான *ஷின்ஜியாங்* கிட்டத்தட்ட நம் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா இவற்றையெல்லாம் ஒன்றாக சேர்த்தால் எவ்வளவு பெரியதாக இருக்குமோ அவ்வளவு பெரிய பரப்பளவு கொண்ட ஒரு பகுதி.

'ஷின்ஜியாங்' (Xinjiang) மாகாணத்தில் வசிக்கும் *உய்குர் முஸ்லிம் (Uyghur) என்றால்,* வெள்ளிக்கிழமை எழுந்து தொழுகைக்காக மசூதிக்குச் செல்லும்போது, உலகில் வேறெங்கும் முஸ்லிம்கள் பின்பற்றாத சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

மசூதி வாசலை நெருங்கியவுடன், அங்கு கையில் இயந்திர துப்பாக்கிகளுடன் காத்திருக்கும் சீன பாதுகாப்புப் படையினர் வரவேற்பார்கள்.

முதலில் கருவிழித்திரை ஸ்கேன் செய்யப்படும். பின்பு மொத்த உடலும் சோதனை செய்யப்படும். இவையெல்லாம் முடித்து தொழுகை நடத்துவதற்காக மசூதிக்குள் நுழையலாம். உள்ளே சென்று தொழுகை நடத்துவதற்கு நிமிர்ந்து பார்த்தால் அங்கு பிரமாண்டமாக சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் (Xi jinping) படம் மாட்டப்பட்டிருக்கும்.

*உய்குர் முஸ்லிம்கள் வாசிக்கும் குர்ஆன் தணிக்கை செய்யப்பட்டிருக்கும்.* அதில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை சொருகப்பட்டிருக்கும்.

ஷின்ஜியாங் பகுதியில் உள்ள பாலைவனங்களில் சீன அரசு கடந்த சில ஆண்டுகளாக, பிரத்யேகமான *'பள்ளிகள்'* சிலவற்றை நடத்திவருகிறது. *வெளிஉலகுக்குத் தெரியாமல்* நடத்தப்படும் இப்பள்ளிகளில் பயில்பவர்கள் அனைவரும் 18 வயதைத் தாண்டிய உய்குர் முஸ்லிம்கள்.

*தாடி வளர்த்தால், குர்ஆனின் மூலப் பிரதியை வாசித்தால், இஸ்லாமிய வழக்கப்படி திருமணம் செய்துகொண்டால், ஹலால் உணவை உண்டால், சீன அரசின் தொலைக்காட்சி சேனலைப் பார்க்க மறுத்தால், அதிபர் ஜி ஜின்பிங்கின் படம் வீட்டின் வரவேற்பறையை அலங்கரிக்காவிட்டால், வாட்ஸ் ஆப் பயன்படுத்தினால், இந்த பள்ளிகளுக்கு அனுப்பப்படுவார்கள்.*

*ஆள் அரவமில்லாத பாலைவனத்துக்கு நடுவில் இயங்கும் இந்தப் பள்ளிகளில் பயிலச் செல்பவர்கள், அவர்கள் சொல்லும் 'பாடத்தை'க் கற்க மறுத்தால், அடித்துத் துன்புறுத்தப்படலாம். மின்சார நாற்காலியில் அமரவைக்கப்படலாம். இல்லை கொன்று தூக்கி எறியப்படலாம்.*

*உய்குர் முஸ்லிம்களை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்றால் அவர்களை ஒன்றிணைக்கும் மதத்தையும், கலாச்சாரத்தையும் முதலில் வேரறுக்க வேண்டும். அவர்களைச் சீனர்களாக மாற்ற வேண்டும். அதற்காக தொடங்கப்பட்டவைதான் இப்பத்தியின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட பள்ளிகள்.*

*இவை பள்ளிகள் அல்ல, மூளைச் சலவை மையங்கள் எனவும், பல அரச பயங்கரவாத குற்றங்கள் நடக்கும் சிறைகள் எனவும் சர்வதேச அளவில் உய்குர் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர்களும், பத்திரிகையாளர்களும் தெரிவிக்கின்றனர்.*

பொதுவாகவே தன் நாட்டு மக்களைக் கண்காணிப்பதில் பெரும் பகுதி பணத்தையும், உழைப்பையும் செலவழிக்கும் நாடு சீனா. ஆனால் ஷின்ஜியாங் பகுதியில் இது பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

*உய்குர் முஸ்லிம்கள் பயன்படுத்தும் செல்போன்களில் அவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க 'மொபைல் ஆப்' ஒன்று அரசால் வலுக்கட்டாயமாக இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொருவருக்கும் நம் ஆதார் அட்டையைப்போல் ஒரு அடையாள அட்டை உள்ளது. இவற்றை உய்குர்கள் ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ள சோதனைச் சாவடிகள், அலுவலகங்கள், கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் என அனைத்து இடங்களிலும் காட்ட வேண்டும்.*

*தன் சொந்த வீடாகவே இருந்தாலும், வீட்டுக்குள் நுழையும் நேரம், வீட்டை விட்டு வெளியேறும் நேரம் உள்ளிட்டவற்றை வீட்டு வாசலில் ஒட்டப்பட்டுள்ள 'கியூஆர் கோடை' செல்போனில் ஸ்கேன் செய்து பதிவு செய்ய வேண்டும்.*

*குழந்தைகளுக்கு உய்குர் வரலாற்றையோ, இஸ்லாத்தையோ பெற்றோர்கள் போதிக்கக் கூடாது. 18 வயதிற்கு குறைவானவர்கள் மத நிகழ்வுகளில் பங்கு பெறக்கூடாது. எவரும் மக்கா புனிதப் பயணம் செல்லக்கூடாது. ஹலால் உணவை விற்கும் உணவகங்களுக்குத் தடை. இதை எதிர்த்து நிகழும் போராட்டங்களை ராணுவத்தைக் கொண்டு அடக்குவது, மீறுபவர்களை அரசு நடத்தும் பள்ளிகள் என்ற இந்த சிறைகளுக்கு அனுப்புகிறது சீன அரசு.*

*பல அடுக்கு பாதுகாப்பு, சுற்றிலும் உயர் கண்காணிப்பு கோபுரங்கள். மின்சாரம் பாயும் கம்பிகள் நெளியும் மிகப்பெரிய மதில் சுவர்கள் கொண்ட இந்தப் பள்ளிகளில் பயில்பவர்களுக்கு, நாள் முழுவதும் சீன மொழியான மாண்டிரின், சீன அரசின் கொள்கைகள், சட்டங்கள் உள்ளிட்டவை பயிற்றுவிக்கப்படுகின்றன. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை அனைவரும் மனப்பாடம் செய்யவேண்டும். செங்கொடியை வணங்கவேண்டும். உய்குர் முஸ்லிம் கலாச்சாரத்தையும், இஸ்லாத்தையும் விமர்சனம் செய்ய வேண்டும். அதிபர் ஜி ஜின்பிங் எழுதிய பாடல்களை மனப்பாடம் செய்து பாட வேண்டும்.*

முதலில் *இதுபோன்ற இடங்கள் இல்லை என்று மறுத்து வந்த சீனா, மறுக்க முடியாத ஆதாரங்களை சர்வதேச அளவில் செயற்பாட்டாளர்கள் வெளியிட்டவுடன் ஒப்புக்கொண்டது.* ஆனால், அவை சிறைச்சாலை அல்ல. மத அடிப்படைவாதம், தீவிரவாதம் உள்ளிட்டவற்றை நோக்கிச் செல்பவர்கள் மீண்டு வருவதற்காக நடத்தப்படும் பள்ளிகள் என்று மழுப்பியது.

ஆனால் 18 வயதைத் தாண்டிய இளைஞர்கள், மத்திம வயதுக்காரர்கள் அனைவரும் இப்பள்ளிகளில் சீருடைகள் அணிந்து கொண்டு பாடம் பயில்கின்றனர் (இதில் உய்குர் இன பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், விஞ்ஞானிகளும் அடக்கம்). சிறிய அறைகளில் பத்துக்கும் அதிகமானோர் தங்கிக்கொண்டு ஒரே திறந்த கழிவறையை பகிர்ந்து கொள்கின்றனர்.

*இவர்கள் யாருக்கும் எப்போது வீடு திரும்புவோம் என தெரியாது. இவையெல்லாம் பள்ளியை நினைவுபடுத்துவதுபோல் இருக்கிறதா? அல்லது சிறைச்சாலையை நினைவுபடுத்துகிறதா? என செயற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.*

*உய்குர் இன முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டு இஸ்லாமிய நாடுகள் அமைதி காக்கின்றன.* அவர்களின் மதத்தை ஒரு மனநோய் என சீன அரசாங்கம் சொன்னாலும் செளதி அரேபியா உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் அமைதி காப்பதற்கான காரணம் ஒபிஓஆர் திட்டத்தின் கீழ் பல கோடிகளை இந்நாடுகள் சீனாவிடமிருந்து கடனாகப் பெற இருக்கின்றன.

சீன அரசு இவ்வளவு பணத்தைச் செலவழித்து ஏன் இது போன்ற பள்ளிகளை நடத்தவேண்டும்? அதற்கான பதில் ஷின்ஜியாங் பகுதியில் கொட்டிக்கிடக்கும் இயற்கை வளங்களில் உள்ளது. சீனாவுக்குத் தேவையான 40% நிலக்கரி இங்குதான் உள்ளது. சீனாவின் உற்பத்திக்கு உதவும் காற்றாலை மின்சாரத்தில் 20% இங்கிருந்துதான் செல்கிறது.

ஷின்ஜியாங் பகுதியின் மண்ணுக்கடியில் இயற்கை எரிவாயு, எண்ணெய் வளம் கொட்டிக்கிடக்கிறது. மண்ணுக்கடியில் உள்ள வளம் கொழிக்கும் சுரங்கத்தை ஒப்பிடும்போது, சீன அரசுக்கு அதற்கு மேல் அலையும் உய்குர்கள் பெரிதாக தெரியவில்லை.

*இவை எல்லாவற்றையும் விட சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் கனவுத்திட்டமான 'ஒன் பெல்ட் ஒன் ரோடு' திட்டத்தின் உயிர்நாடியாக ஷின்ஜியாங் கருதப்படுகிறது. இந்த ஓபிஓஆர் திட்டத்தின் கீழ் மத்திய ஆசிய நாடுகளை சீனாவுடன் இணைக்கும் ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள், கேஸ் குழாய்கள் மற்றும் ரயில் பாதைகள் ஷின்ஜியாங்கை ஊடுருவிச் செல்கின்றன.*

*உலக அளவில் சீனாவின் பொருளாதாரம் மற்றும் அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்டும் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட வேண்டும் என்றால் ஷின்ஜியாங் சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அதன் விளைவே இப்பள்ளிகள்.*

*ஒரு கோடிக்கும் மேல் வாழ்கிற உய்குர் முஸ்லிம்களில் முக்கால் வாசியினர் இந்த தடுப்பு முகாம்களான சிறப்பு பள்ளிக் கூடத்திலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.*

( நன்றி: https://tamil.asiavillenews.com/article/china-uighur-suppression-and-the-history-behind-it-8107, பிபிஸி. நியூஸ், விகடன்.காம் )

*முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக கொன்று குவித்திட, வெளியேற்றிட துடிக்கும் கொடிய விரோதிகளை அல்லாஹ் என்ன செய்வான்?

*அழித்து விடுவான்….*

*மீண்டும் முதல்வரியை வாசியுங்கள்...!*


உங்கள் நன்பனான AS

பெரியார் அன்று சொன்னது