Friday 25 October 2019

அல்குர்ஆன் அகில உலகையும் இயற்கை வளத்தையும் இறைவனின் கொடை

அல்குர்ஆன்

ஆண்டியையும் அரசனையும் சமம் என்று சொல்லும்
குர்ஆன்
உலகில் இரண்டே இனம்
1 ஆண் 1 பெண்
என வாதாடும்
குர்ஆன்
புட் பூண்டையும் ஜோடி ஜோடியாய் படைத்தோம் என்கிறது குர்ஆன்

கர்ப்பத்தில் குழந்தை அட்டைப்பூச்சியாய்
ஒட்டி இருப்பதை படம் பிடித்து காட்டுகிறது
குர்ஆன்


விதவைக்கும் மறுவாழ்வு வேண்டும் என்று பெண்ணியம் பேசியது
குர் ஆண்.
தாய்மையின் மகிமையை உரக்கச் சொல்வது குர்ஆன்
சகோதர பாசத்தின்
சத்த அளவுக்கு வட்டம் காட்டுகிறது
குர்ஆன்


நீதிக்குப் புறம்பான அவர்களுக்கு
மறுமையில் கோடுதான் என்று பயம் காட்டுகிறது
குர்ஆன்
நீதி நெறியை காட்டிக் கொடுக்கிறது
குர்ஆன்

இது இறைவனின் வார்த்தைகள் என்கிறது திருக்குர்ஆன்
இரும்பை இறக்கி வைத்தோம் என்று சொல்கிறது
திருக்குர்ஆன்

கொசுவின் வயிற்றுக்குள் கொண்டு போனதை உங்களால் மீண்டு
கொண்டு வர முடியுமா
என்று
கர்வம் கொண்ட மனிதனுக்கு சவால் விடுக்கிறது
குர்ஆன்

ஆகமொத்தம் அல்குர்ஆன் அகில உலகையும் இயற்கை வளத்தையும் இறைவனின் கொடை என்கிறது திருக்குர்ஆன்


*ஏரூர் கபீர்*

Thursday 24 October 2019

*அல்லாஹ்வின் உதவி* *எப்படி கிடைக்கும் என்று* *நாம் நம்பிக்கை* *இழந்துவிட வேண்டாம்...* 👇🏿

*அல்லாஹ்வின் உதவி*

*எப்படி கிடைக்கும் என்று*

*நாம் நம்பிக்கை*

*இழந்துவிட வேண்டாம்...* 👇🏿

நபிகளாருக்கு ஸஃபர் மாதத்தில் தான் நோய் ஏற்பட்டதா?*

*நபிகளாருக்கு ஸஃபர் மாதத்தில் தான் நோய் ஏற்பட்டதா?*

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸஃபர் மாதத்தில் புதன் கிழமையில் நோய் ஏற்பட்டதால் அன்றைய நாள் பீடை நாள் என்று கூறுகிறார்கள். நபிகளாருக்கு சஃபர் மாதத்தில் தான் நோய் ஏற்பட்டதா?

பதில்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு பல தடவை நோய் ஏற்பட்டுள்ளது. மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு பல நேரங்களில் நோய் ஏற்பட்டிருந்தாலும் இறுதி காலத்தில் ஏற்பட்ட நோய் தொடர்பாக நபிமொழிகளில் அதிகம் கூறப்பட்டுள்ளது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்த போது, யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிவிட்டனர் என்று கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லையாயின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கவிடத்தைத் திறந்த வெளியில் நபித்தோழர்கள் வைத்திருந்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கத்தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன்.

நூல் : புகாரி 1330

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு, அவர்களின் நோய் அதிகரித்த போது, எனது வீட்டில் தங்கி சிகிச்சையும் பராமரிப்பும் பெற, தம் (மற்ற) துணைவியரிடம் அனுமதி கேட்டார்கள். அதற்கு அவர்களும் அனுமதி வழங்கினர். அப்போது தமது கால்கள் தரையில் இழுபட, அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் வேறு ஒரு மனிதருக்கும் இடையில் தொங்கியபடி (என் வீட்டிற்குப்) புறப்பட்டார்கள்.

நூல் : புகாரி 198

இது போன்ற ஹதீஸ்கள் இருந்தாலும் எந்த நாளில் எந்த மாதத்தில் இந்த நோய் ஏற்பட்டது என்பதற்கு ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் வரிசையில் எந்தச் செய்தியும் இடம் பெறவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஃபர் மாதம் இருபதாம் நாள் திங்கள் கிழமை நோயுற்றார்கள்.
அறிவிப்பவர் : சுலைமான் பின் தர்கான் அத்தைமீ

நூல் : தலாயிந் நுபவா – பைஹகீ

இச்செய்தியை அறிவிக்கும் சுலைமான் பின் தர்கான் அத்தைமீ என்பவர் நபித்தோழர் அல்ல. நபிகளாருக்கு நடந்த நிகழ்வுகளை அவர்களைப் பார்த்த நபித்தோழர்கள் மட்டுமே அறிவிக்க முடியும். எனவே இந்தச் செய்தி தொடர்பு அறுந்த பலவீனமான செய்தியாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி பத்தாம் வருடம் ஸஃபர் மாதம் 11 ஆம் நாள் புதன் கிழமை நோயுற்றார்கள்.

அறிவிப்பவர் : முஹம்மத் பின் கைஸ்
நூல் : தபகாத்துல் குப்ரா

இந்தச் செய்தியை அறிவிக்கும் முஹம்மத் பின் கைஸ் என்பவர் நபித்தோழர் அல்ல. எனவே இந்தச் செய்தியும் தொடர்பு அறுந்த *பலவீனமான செய்தி* என்பதில் ஐயமில்லை.

மேலும் இதன் இரண்டாவது அறிவிப்பாளர் அபூமிஃஷர் என்பவர் பலவீனமானவராவார். மற்றொரு அறிவிப்பாளர் முஹம்மத் பின் உமர் என்ற அல்வாகிதி என்பவர் பொய் சொல்பவர் என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டவர்.
எனவே இந்தச் செய்தி மிகவும் பலவீனமானது.

நபிகளார் இறுதிக் காலத்தில் கடுமையான நோயில் பாதிக்கப்பட்டது உண்மை. ஆனால் *அது ஸஃபர் மாதம் என்பதற்கும் புதன் கிழமை* என்பதற்கும் ஆதாரம் இல்லை. மேலும் குறிப்பிட்ட நாளில் நோயுற்றதால் அந்த நாள் பீடை என்று சொல்வதற்கும் எந்த ஆதாரமும் இல்லை.

Wednesday 23 October 2019

#வாரிசுச்_சான்றிதழ்_பெறுவது_எப்படி?

#வாரிசுச்_சான்றிதழ்_பெறுவது_எப்படி?

வெளியீடு:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவரணி

🔅ஒருவர் இறந்த பின்பு அவரின் சொத்துக்களை பிரச்சினையில்லாமல் வாரிசுகள் பகிர்ந்து கொள்வதற்கு வாரிசுச் சான்றிதழ் அவசியமாகும்

🔰 *வாரிசுச் சான்றிதழ் என்பது என்ன?*

🔅ஒருவர் அல்லது ஒரு குடும்பத் தலைவர் இறந்துவிட்டால் அவரின் சொத்துக்களையோ அல்லது பணத்தையோ பெறுவதற்கு இறந்தவரின் வாரிசுதான் என்ற சான்றிதழ் வேண்டும். இந்தச் சான்றிதழை வட்டாட்சியர் அலுவலகம் மூலமாகவே பெறமுடியும். எடுத்துக் காட்டாக ஒரு குடும்பத்தில் ஆண் இறந்து விட்டால் அவருடைய தாய், மனைவி, திருமணம் ஆன/ஆகாத மகன், மகள்கள் வாரிசுகள் ஆகிறார்கள். திருமணமாகாத மகன் இறந்துவிட்டால் தாய் மட்டுமே வாரிசு ஆவார்.

🔰 *வாரிசுச் சான்றிதழ் எப்போது அவசியமாகிறது?*

🔅நிதி நிறுவனங்களில் அல்லது வங்கிகளில் உள்ள சேமிப்பு அல்லது வைப்புத்தொகையைப் பெறுவதற்கும், கருணை அடிப்படையில் இறந்தவர் சார்பாக வேலை வாய்ப்புப் பெறவும் எனப் பலவிதங்களில் பயன்படுகிறது. இறந்தவருடைய சொத்துக்களை விற்பதற்கோ, அடமானம் வைப்பதற்கோ வாரிசு உரிமையை காண்பிக்க வாரிசுச் சான்றிதழ் தேவைப்படும்.
பொதுத்துறை நிறுவனங்களில் அல்லது அரசுப் பணிகளில் பணிபுரிந்து இறந்தவர்களின் குடும்ப ஓய்வூதியம் மற்றும் பணிப் பலன்கள் பெறுவதற்கும், பட்டா போன்ற வருவாய் ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்வதற்கும் வாரிசுச் சான்றிதழ் அவசியமாகிறது.

🔰 *எங்கே விண்ணப்பிப்பது?*

🔅வாரிசுச் சான்றிதழ் விண்ணப்பப் படிவம் வட்டாட்சியர் அலுவலகங்களில் கிடைக்கிறது.
வாரிசுச் சான்றிதழ் கோரும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து இறந்தவரின் இறப்புச் சான்றிதழ், வாரிசுகள் யார் யார், அவர்களின் இருப்பிடச் சான்று ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். கிராம நிர்வாக அதிகாரி மற்றும் வருவாய் ஆய்வாளர் மூலம் விசாரணை நடத்திய பிறகு வாரிசுச் சான்றிதழ் வட்டாட்சியரால் வழங்கப்படும்.

🔰 *என்னென்ன ஆவணங்கள் தேவை?*
🔅இறந்தவரின் இறப்புச் சான்றிதழ்
🔅வாரிசுகளின் இருப்பிடச் சான்றிதழ்
🔅இறப்பு சான்றிதழ்
🔅ஏதேனும் ஒரு அடையாள அட்டை
🔅குடும்ப அட்டை (அ) முகவரி சான்று

🔰 *எவ்வளவு நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்?*

🔅ஒருவர் இறந்து எத்தனை ஆண்டுகள் கழித்தும் வாரிசுச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கலாம்.

🔅ஒருவர் இறந்து 30 நாட்களுக்குள் இறப்பைப் பதிவு செய்ய வேண்டும். ஒருவேளை உடனடியாக இறப்பைப் பதிவு செய்ய முடியாத நிலையில் அதற்கான காரணத்தைத் தெரிவித்து ஒருவருடத்திற்குள் தாமதக் கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
🔅அதற்கு மேல் காலம் கடந்திருந்தால் அருகிலுள்ள உரிமையியல் நீதிமன்றத்திற்குச் சென்று நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரே சான்றிதழ் பெறமுடியும்.

🔅ஒருவேளை பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் வருவதற்கு முன் இறந்திருந்தால் அவரின் இறப்புப் பதிவு செய்யப்பட்டிருக்காது. அப்படி இருக்கும்பட்சத்தில் அவரின் இறப்புப் பதிவு செய்யப்படவில்லை என்ற சான்றிதழைப் பதிவுத்துறையில் பெற்று நீதிமன்றத்தில் கொடுத்தால் நீதிமன்றம் இறப்புச் சான்றிதழ் வழங்க வட்டாட்சியருக்கு உத்தரவிடும்.

🔰 *விண்ணப்பித்து எத்தனை நாட்களில் கொடுக்கப்படும்?*

🔅விண்ணப்பித்து 30 நாட்களுக்குள் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். இல்லையெனில் தாமதமாவதற்கான காரணத்தைக் கூற வேண்டும்.

🔰 *எப்போது மறுக்கப்படும்?*

🔅இறந்தவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்து அவர்களிடையே பிரச்சினைகள் இருப்பது, தத்து எடுக்கப்பட்டவர் தான்தான் வாரிசு என்று கோரிக்கை உரிமை கோருவது, நேரடி வாரிசாக இல்லாத ஒருவர் வாரிசுச் சான்றிதழ் கேட்பது போன்ற தருணங்களில் வட்டாட்சியர் அலுவலகம் வாரிசுச் சான்றிதழை தர மறுக்கலாம்.

🔅 நீதிமன்றத்தை அணுகி, யாருக்கு வாரிசுச் சான்றிதழ் வழங்குவது என உத்தரவு பெற்று வரச் சொல்லலாம்.
இறங்குரிமை சான்றிதழ் (Succession certificate)
இறந்த நபரின் பெயரிலுள்ள முதலீடு /பங்குகள் மற்றும் அவருக்கு வரவேண்டிய கடன் போன்ற பணப் பலன்கள் பெற தனக்கு சட்டபூர்வமான உரிமை இருக்கிறது என்பதைக் காண்பிக்க ஒருவர் நீதிமன்றம் மூலம் பெறும் சான்றிதழ்தான் இறங்குரிமை சான்றிதழ்.

🔅எடுத்துக்காட்டாக, இறந்த நபருக்கு ஐந்து வாரிசுகள் இருக்கலாம். ஐந்து பேர் பெயரையும் உள்ளடக்கிய வாரிசுச் சான்றிதழ் இருக்கும். இந்த ஐந்து பேருக்கும் சுமார் 10 லட்ச ரூபாய் பங்குகள்/முதலீடுகள் முதலியவற்றில் உரிமை இருப்பதாகக் கொண்டால் அந்த முதலீட்டையோ அல்லது பங்குகளையோ ஐந்து பேரின் பெயருக்கும் மாற்றினால், பிற்காலத்தில் வேறு யாராவது உரிமை கோருவார்களா என்கிற பயம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வரலாம்.

🔅இதற்காக இந்த ஐந்து பேரும் நீதி மன்றத்தை அணுகி தாங்கள் தான் வாரிசுகள் என்பதற்கு வாரிசுச் சான்றிதழை தாக்கல் செய்து, வேறு யாரும் வாரிசுகள் இல்லை என உறுதிமொழி கொடுத்து தங்களில் ஒருவருக்கோ அல்லது ஐவருக்குமோ அந்த முதலீட்டை பெயர் மாற்றம் செய்யலாம் என்று மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.
அந்த நிறுவனங்களில் எவ்வளவு முதலீடு/பங்குகள் உள்ளது என்பதை மதிப்பிட்டு அதற்குரிய நீதிமன்ற கட்டணத்தைச் செலுத்தினால் நீதிமன்றம் அவர்களுக்கு இறங்குரிமை சான்றிதழ் வழங்கும்.

🔰 *ஒருவர் காணாமல் போயிருந்தால்..?*

🔅ஒருவர் காணாமல் போய் ஏழு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டிருந்தாலும், அவர் திரும்பி வந்துவிடுவார் என்று நம்புவது அவருடைய குடும்பத்தினரின் ஒரு நிலையே தவிர, அது வட்டாட்சியரை எவ்விதத்திலும் பாதிக்காது. அந்தக் காணாமல் போன குடும்ப உறுப்பினர் குறித்து காவல் துறை மற்றும் நீதிமன்ற உத்தரவுகள், செயல்முறைகள் வாயிலாக, 'அவர் இறந்து விட்டதாகக் கருதப்படுகிறார்' என்று சான்றுகளை அளித்தால் மட்டுமே அவருடைய பெயரைத் தவிர்த்து மீதியுள்ளவர்களின் பெயர்களோடு வாரிசுச் சான்றிதழ் பெற முடியும்..

🔰 *வாரிசு சான்றிதழ் பெற இறந்தவரது ஆதார் அட்டையும் அவசியம்* எனவும், விண்ணப்பிப்பவர் மற்றும் வாரிசுகளும் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டியது அவசியம் எனவும் தமிழக அரசு ஆகஸ்ட் 9-ஆம் தேதி வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளது.

🔰 *வாரிசு சான்றிதழ் பற்றிய பொதுவான தகவல்கள்*

🔅விண்ணப்பங்களுடன் அரசு கட்டணமாக ரூ. 60 செலுத்தப்பட வேண்டும்.

🔅விண்ணப்பங்கள் பொதுசேவை மையங்கள் மூலமாகவோ அல்லது இணையதளம் வாயிலாகவோ மட்டுமே விண்ணப்பிக்கப்பட வேண்டும்.

🔅 பொதுசேவை மையத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், தலைமையிடத்து துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் வழியாக 15 நாள்களுக்குள் விண்ணப்பித்தவருக்கு கிடைக்கும்.

🔅சான்றிதழ்களை பொதுசேவை மையங்கள் மூலமாக குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) வரப் பெற்றவுடன் இணையதளங்கள் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

🔅இறந்தவருக்கு ஒன்றுக்கு மேல் மனைவி அல்லது கணவர் இருந்தாலோ, இறந்தவரின் சொத்துகள் சம்பந்தமாக பிரச்னைகள் இருந்தாலோ, இறந்தவராக சொல்லப்படும் நபர் ஏழு ஆண்டுகள் காணாமல் போயிருந்து அல்லது குடும்பத்தில் இருந்து தள்ளியிருப்பவராக இருந்தாலோ, தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் விஷயமாக இருந்தாலோ, இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1925-இன்
படியோ இருந்தால் வாரிசு சான்றிதழை குறிப்பிட்ட நீதிமன்றங்களில் மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும். வட்டாட்சியர் அளிக்கக் கூடாது.....

Sunday 20 October 2019

*பலமான இறைநம்பிக்கையாளர்

*அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:*


*பலமான இறைநம்பிக்கையாளர்,*

*பலவீனமான இறைநம்பிக்கையாளரைவிடச் சிறந்தவரும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவரும் ஆவார்.*


*ஆயினும், அனைவரிடமும் நன்மை உள்ளது.*


*உனக்குப் பயனளிப்பதையே நீ ஆசைப்படு.*

*இறைவனிடம் உதவி தேடு.*

*நீ தளர்ந்துவிடாதே.*


உனக்கு ஏதேனும் *துன்பம்* ஏற்படும்போது, *"நான் (இப்படிச்) செய்திருந்தால் அப்படி அப்படி ஆயிருக்குமே!"* என்று (அங்கலாய்த்துக்) கூறாதே.


மாறாக, *"அல்லாஹ்வின் விதிப்படி நடந்துவிட்டது.*

*அவன் நாடியதைச் செய்துவிட்டான்"* என்று சொல்.


ஏனெனில், *"இப்படிச் செய்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே"* என்பதைச் சுட்டும் *"லவ்" எனும் வியங்கோள்* இடைச்சொல்லானது *ஷைத்தானின் செயலுக்கே வழி வகுக்கும்.*


*நூல் - முஸ்லிம் : 5178*


☝🏿☝🏿☝🏿

அனைவரும் கீழே கொடுத்துள்ள cmcell வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்து இது போல் மனு செய்யவும்

அனைவரும் கீழே கொடுத்துள்ள cmcell வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்து இது போல் மனு செய்யவும்

http://cmcell.tn.gov.in/

டெங்குவில் இருந்து விடுபட ஐந்து விதமான இலைகளை

*முக்கியச் செய்தி*

சேலம் டாக்டர். அழகு அவர்கள் டெங்குவில் இருந்து விடுபட ஐந்து விதமான இலைகளை சேர்த்து பருகிவந்தால் டெங்குவில் இருந்து விடுபடலாம் !

1. வெற்றிலை 10 இலைகள்.
2. புதினா கீரை கைப்பிடி அளவு.
3. கறிவேப்பிலை கைப்பிடி அளவு.
4. கொத்தமல்லி கீரை கைப்பிடி அளவு.
5. வாழைத்தண்டு 100 கிராம்.
இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நிறைய நீர் விட்டு நன்றாக கொதிக்கவிட்டு ஆறியபின் வடிகட்டி, பருகி வந்தால் காலையில் வந்த டெங்குவை மாலையில் விரட்டி விடலாம் !
இதை அனைவருக்கும் தெரியபடுத்துங்கள் ! நன்றி !

*இதை உங்களிடம் உள்ள அனைத்து வாட்ஸ் ஆப் குழு உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தவும்.*💐👆👆👆👆👆

Friday 18 October 2019

self evaluvation

அல்லாஹ்வுடன் உங்களுடைய தனிப்பட்ட உறவு


Friday 4 October 2019

ஐஐடி

ஐஐடி-யைத்

இந்தியா முழுவதும் பல ஐஐடியும், பல்வேறு மத்தியப் பல்கலைகழகங்களும் இயங்கி வருகின்றன. அதில் பெரும்பாலும் வட இந்தியர்களோ, பிராமணர்களோதான் பயில்கின்றனர். இதன் விளைவாக, இந்தியாவின் உயர் பொறுப்புகளில் அவர்கள் எளிதாக நுழைந்துவிடுகின்றனர். பெல், நெய்வேலி பழுப்பு நிலக்கரி மற்றும் மின் உற்பத்தி நிலையம், கல்பாக்கம், கூடங்குளம், சேலம் இருப்பாலை என்று எல்லா மத்திய நிறுவனங்களிலும் அவர்கள்தான் உயர் பொறுப்பில் அமர்ந்துள்ளனர். இந்த நிலையை மாற்ற வேண்டும்.

பிராமணர்களும், வட இந்தியாவைச் சேர்ந்த உயர் வகுப்பினரும், நிதானமாகத் திட்டமிட்டு படித்து, அவற்றுக்கான நுழைவுத் தேர்வுகளை எழுதி, ஐஐடி, ஐஐஏஸி, மத்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள எல்லா இடங்களையும் கைப்பற்றுகின்றனர். இந்த விடயத்தில் அவர்கள் அவசப்படுவதே இல்லை. 'முந்துகின்ற கல் அடிக் கல்லாக மாறும், பொறுத்திருந்த கல் கோபுரம் செல்லும்' என்பார்களே, அதுதான் இந்த விடயத்தில் நடக்கிறது.

நம் குழந்தைகளுக்கு நாம் என்ன கற்றுக் கொடுக்கிறோம்? 12-ஆம் வகுப்பு படித்தவுடன், அவசர அவசரமாக ஏதேனும் ஒருக் கல்லூரியில் பிஎஸ்ஸி, பிஇ போன்ற ஏதேனும் ஒருப் படிப்பில் சேர்த்துவிடுகிறோம். இலட்சக்கணக்கான ரூபாய் பணத்தைக் கொட்டிப் படிக்க வைத்தேன் என்று பெருமைப் பீற்றுகிறோம். ஆனால், பிள்ளைகளோ, தரமாகத் தயாராகி வராமல், தகுதியற்றவற்களாக சமூகத்திற்குள் நுழைந்து, வேலையில்லாமல் திரிகின்றனர். தொழிற்நுட்ப கிரீயேட்டர்களாக வரவேண்டியவர்கள், மீம்ஸ் கிரியேட்டர்களாக வலம் வருகின்றனர்.

பிஇ படித்துவிட்டு வீட்டிலும் இருக்க முடியாமல், சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் முட்டுச்சந்துகளில் அறை எடுத்துத் தங்கி, சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் திண்டாடி, தங்களின் வாழ்வே சூரையாடப்பட்டுவிட்டதை உணர்கின்றனர்.

இதற்கெல்லாம் காரணம் என்ன?

'முதல் கோணலே முற்றும் கோணல்' என்பதுதான். முதலில் எந்தப் படிப்பில் சேரவேண்டும். அதையும் எங்கு சேர வேண்டுமெனத் திட்டமிட்டுச் சேரவேண்டும். எத்தனையோ தகுதியுள்ள, திறமையான, புத்திசாலி மாணவர்கள், வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஏதேவொரு ஓட்டை ஒடைச்சல் கல்லூரிகளில் சேர்ந்து நான்கு, ஐந்து ஆண்டுகளை விரையம் செய்துவிடுகின்றனர். அந்தக் கல்லூரிகளில் எந்த அறிவியல் புரிதலும் இல்லாத, அதேக் கல்லூரியில் படித்த மாணவர்களையே பேராசிரியர்களாக குறைந்தச் சம்பளத்திற்கு நியமித்து, தொடக்கத்திலேயே மாணவர்களின் வாழ்க்கையை அழித்துவிடுகின்றனர்.

ஆனால், பிராமணர்களும் வட இந்திய உயர் வகுப்பினரும், 12-ஆம் வகுப்பு முடித்தக் கையோடு, பிள்ளைகளை ஓரிரு ஆண்டுகள் வீட்டில் இருந்தே, மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்வுகளை எழுத உதவியாக இருக்கின்றனர். அதற்கென எத்தனையோ புத்தகங்கள் வெளியில் கிடைக்கின்றன. அதனை முழுமையாகப் படித்து, இரண்டு மூன்று முறை நுழைவுத் தேர்வுகளை எழுதி, தங்களின் இடங்களைக் கைப்பற்றுகின்றனர்.

ஐஐடியிலும், மத்தியப் பல்கலைகழகங்களிலும் நுழைவதுதான் கடினம். நுழைந்தப்பின் எல்லாமும் மாணவர்களைத் தேடி வந்துவிடுகின்றன. பணம், தொழில்நுட்ப கருவிகள், வசதிகள், புத்தகம் என்று எல்லாமும் எளிதாக அவர்களுக்கு கிடைத்துவிடுகிறது. சிறந்த அறிவியல் புரிதல் உள்ள மாணவர்களாக உருவாகி, புதியப் புதியக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகின்ற பேராற்றல் கொண்ட மாணவர்களாக சமூகத்திற்குள் நுழைகின்றனர். இந்த திட்டமிட்ட நகர்வு நம்மிடம் இருக்கிறதா?

இல்லை..

எல்லாவற்றிலும் ஓர் அவசரம். உடனே பிஇ சேர்ந்தாக வேண்டும். உடனே வேலைக்கு போயாக வேண்டும். உடனே கை நிறைய சம்பாதிச்சாக வேண்டும். இதன் விளைவு, இன்று பொறியியல் துறை கவிழ்ந்து கிடக்கிறது. எல்லாத் துறைகளிலும் தகுதியில்லாத பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தெருவில் நிற்கின்றனர். இந்தியப் பொருளாதாரம் சரிந்த கையோடு, பொறியாளர்களும் தெருவுக்கு வந்து கொண்டு இருக்கின்றனர். தமிழகம் முழுவதும் பலப் பொறியியல் கல்லூரிகளை மூடுகின்ற நிலைக்கு வந்துவிட்டனர்.

ஆனாலும், இன்றும் ஐஐடியன்களுக்கு வாழ்வு உச்சத்தில்தான் இருக்கிறது. ஐஐடியில் தன் படிப்பை முடிப்பதற்கு முன்பே, உலகம் முழுவதும் பறந்துச் சென்று பணியில் அமர்ந்துவிடுகின்றனர். அவர்கள் யாரிடம் கேட்டாலும் ஒரே பதில்தான் வருகிறது. '12-ஆம் வகுப்பு படித்துவிட்டு, இரண்டு மூன்று ஆண்டுகள் கடினப்பட்டு படித்தேன்.. ஐஐடியில் சேர்ந்தேன்.. சாதித்தேன்..' என்பதுதான் அந்த பதில்.

உங்கள் வீட்டில் வளரும் இளம் தலைமுறைப் பிள்ளைகளுக்கு நான் ஒரேவொரு அறிவுரைதான் வழங்குகிறேன்...

'ஐஐடியைக் குறிவையுங்கள்..'

-பேராசிரியர் ஆ.அருளினியன்

Tuesday 1 October 2019

மசூராவின் ஒழுங்குகள்

அல்லாஹ்வின் திருப்பெயரால்

மசூராவின் ஒழுங்குகள் மற்றும்  நோக்கம்


முக்கியமாக அமீரை நியமிக்க வேண்டும்.
1) அமீர் தலைமை இருக்க வேண்டும்.அமீருக்கு கட்டுப்படவேண்டும்.
2)வலது புறம் இருந்து கருத்துகளை சொல்ல வேண்டும்.
3)யார் கருத்து சொன்னாலும் இடையூறு செய்யக்கூடாது.
4)மனதில் பட்டது,குட்டி மஷோரா வேண்டாம்.

5)ஒரு ஒரு நபராக அமீர் அனுமதியுடன் கருத்து சொல்ல வேண்டும்.
6)நல்ல எண்ணத்தை கொண்டு செல்ல வேண்டும்.
7)மஷோராவில் முடிவு செய்துவிட்டால் கூச்சலிடக்கூடாது.
8)வெளியே போய் ஆலோசனை செய்யக்கூடாது.
9)நான் சொன்னதை கேட்டால் நல்லது நடந்து இருக்கும்.என கூறக்கூடாது.
10)மஷோராவில் கலந்து கொண்டதற்கு அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த வேண்டும்.
11)சமுதாய பணியில் இருந்தால் அல்லாஹ் நம்மை கைவிடமாட்டான் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்.
12)யாரையும்,மரியாதை இல்லாமல் பேசுவது,சப்தத்தை உயர்த்தி பேசுவது,மேலும் அமீர் கூறியும் நிறுத்தாமல் பேசுபவர் அவையை விட்டு வெளியேற்றப்படுவார்.

13)கிண்டல் செய்வது ,அடுத்தவர் கூறிய கருத்துகளை ஏளனம் செய்வது சிரிப்பது கூடாது.
14)மஷோராவில் கலந்து கொண்டு நம்முடைய கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டால் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த வேண்டும்.,ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் மஷோராவிற்கு கட்டுப்படுதல் வேண்டும்.
15)குர்ஆன் ,ஹதிஸ் மேற்கோள்காட்டி நம்முடைய கருத்துகளை கூற வேண்டும்.அமீர் அந்த கருத்துகளை உள் வாங்க வேண்டும்.

A.S.Ibrahim


Sent from my iPhone