Tuesday 23 November 2010

மேல் சபை வாக்காளார் பட்டியல் சேர மீண்டும் ஒரு வாய்ப்பு- கடைசி தேதி நீட்டிப்பு- டிசம்பர் - 7

தமிழக அரசின் மேல் சபைக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதை மாநகாரட்சி மண்டல அலுவலகங்கள், வட்டாச்சியர் அலுவலகங்களில் சென்று சரிபார்த்துகொள்ளலாம். இதில் விடுபட்டவர்கள், மேலும் புதிதாக விண்ணப்பிக்க விரும்புவோர் டிசம்பர் 7 வரை விண்ணப்பிக்களாம். இறுதி வாக்காளர்பட்டியல் டிசம்பர் 29- ஆம் தேதி வெளியிடப்படும்.  எனவே இதுவரை விண்ணப்பிக்காத முஸ்லீம் பட்டதாரிகள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்கவும்.
மேல்சபை வாக்காளர்  பட்டியலில் சேர்வதற்க்கான விபரம்

தமிழக மேல் சபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதில் இரண்டு பிரிவில் உள்ளவர்களே வாக்களிக்க முடியும். ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள்.
ஓட்டுக்காக அரசியல் நடத்தும் இந்த ஆட்சியாளர்களிடம் இருந்து நாம் நம் உரிமைகளை பெற இந்த வாக்காளர் பட்டியலில்  சேர வேண்டும். வாக்காளர் பட்டியலில் கணிசமான அளவு முஸ்லீம்கள் இருந்தால்தான் ஆட்சியாளர்கள் நம்முடைய கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பார்கள். குறைந்த சதவீத்தில் இருந்தால் முஸ்லீம்கள் மீது ஆட்சியாளர்களின் அடக்குமுறை அதிகரித்துவிடும். நம் சமுதாயாத்தில் பட்டதாரிகளே குறைவு, அதிலும் சமூக அக்கரை உள்ள பட்டதாரிகள் மிக குறைவு, எனவே இந்த வாய்ப்பை விட்டுவிடாமல் சமுதாய நலன் கருதியாவது பட்டதாரி வாக்காளர் பட்டியலில் சேர வேண்டும்.
உங்களுக்கு தெரிந்த முஸ்லீம் பட்டதாரிகள், ஆசிரியர்கள் இருந்தால் இந்த தகவலை தெரியப்படுத்தலாம்.
யார் விண்ணப்பிக்கலாம்?
இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு பல்கலை கழகத்தில் 2007-ல் பட்ட படிப்பு முடித்தவர்கள் மற்றும் 2007-க்கு முன்பாக பட்ட படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பகுதி நேரம் (Part Time) மற்றும் தொலைதூர கல்வியில் பயின்றவர்களும் விண்ணப்பிக்கலாம்
எங்கு விண்ணப்பிப்பது?
மாநகராட்சி பகுதிகளில் : மாநகராட்சி மண்டல அலுவலகங்கள்
பிற ப்குதிகளில் : வட்டாட்சியர் அலுவலகங்கள்
எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பங்கள் விணியோகிப்படும் மையங்களில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இணையதளத்திலும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் (Download) செய்யலாம் http://www.elections.tn.gov.in/tnmlc.html இந்த இணையத்தில் உள்ள படிவத்தை Download செய்து சான்றிதழ்களுடன் தபால் மூலமும் விண்ணப்பிகளாம்.
உடன் சமர்பிக்க வேண்டிய சான்றிதழ்
கீழ்காணும் சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றை விண்ணப்ப படிவத்துடன் சமர்பிக்க வேண்டும்.
1.பட்ட சான்றிதழ் (Degree Certificate or provisional Certificate )
2. மதிப்பெண் சான்றிதழ்,
3. கல்லூரி முதல்வர் அல்லது துறை தலைவர் (Deen) கையொப்பமிட்ட சான்றிதழ்
3. அரசு துறையில் வேலைசெய்தால் அந்த துறையில் பெறப்பட்ட சான்றிதழ்.
மூல சான்றிதழை (ஒரிஜினல் சர்டிபிகேட்) சமர்பிக்க வேண்டாம். சான்றிதழை நகல் (Zerox copy) எடுத்து அரசுக் கல்லூரி முதல்வர், நகராட்சி கமிஷனர், யூனியன் பி.டி.ஓ., தாசில்தார்கள் இதில் ஒருவரிடம் கையொப்பம் வாங்கி சமர்பித்தால் போதும்.
மேலும் விபரங்கள் மாநகராட்சி / வட்டாட்சியர் அலுவலகங்களில் கிடைக்கும் அல்லது இந்த இணையத்திலும் http://www.elections.tn.gov.in/tnmlc.html தெரிந்துகொள்ளலாம்.
மேலும் விபரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிகும் போது ஏதேனும் பிரச்சனை இருந்தால் இந்த sithiqu.mtech@gmail.com மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்
Thanks  - (S.சித்தீக்.M.Tech)

Saturday 20 November 2010

Dubai Sonapur - Izithima தியாகம் செய்வோம் வாருங்கள் !!!

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

 தியாகம் செய்வோம் வாருங்கள் !!!

அல்லாஹ்வின் மாபெரும் அருளால் தமுமுக துபை மண்டலம் சோனாப்பூர் கிளையின் சார்பாக தியாகம் செய்வோம் வாருங்கள் என்ற தலைப்பில் பல்தியா கேம்பில் இஸ்லாமிய செய்பொழிவு நடைபெற்றது. அமர்வு சரியாக மாலை 4.00 மணிக்கு ஆரம்பமானது. முதல் அமர்விற்கு சகோ. கடையநல்லூர் அப்துல் ஹமீது தலைமை தாங்கினார்.நிகழ்ச்சின் ஆரம்பமாக சகோ.கொடுங்கையூர் முஹைதீன் அவர்கள் கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார்.முதல் அமர்வின் துவக்கத்தில் சகோ. A.S. இப்ராஹிம் அவர்கள் நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் வாழ்வு தரும் படிப்பிமை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.அவரது உரையில் நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் தனது தந்தை மற்றும் தனது சமூக மக்களிடத்தில் மார்க்கப்பிரச்சாரம் செய்த போது நடந்த சோதனைகளையும் இப்ராஹிம் (அலை) அவர்களின் குடும்பத்தார்கள் எல்லாவிதத்திலும் அல்லாஹ்வின் திருப்பொருத்திற்காக வேண்டி எந்த அளவிற்கு தியாகம் செய்ய முன்வந்தார்கள் என்பதையும் ஓரிறை கொள்கை விஷயத்தில் யாரிடத்திலும் எந்த சூழ்நிலையிலும் சமரசம் பேராமல் கொள்கை உறுதி கொண்டார்கள் என்பதையும் எடுத்துரைத்தார்கள்.
பிறகு சகோ.சென்னை முஹம்மது பிலால் அவர்கள் நபித்தோழர்களின் வாழ்வினிலே... என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அவரது உரையில் நபித்தோழர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை இந்த பூமியல் நிலைநாட்டுவதற்காக எப்படியெல்லாம் தன்னை அர்ப்பணித்து தியாகம் செய்தார்கள் என்பதையும் அதன்மூலம் அல்லாஹ்வின் திருப்பொருத்தைப்பெற்று சுவனம் செல்ல இருப்பதையும் அல்லாஹ் அவர்களைப் பற்றி குர்ஆனில் சிலாகித்து கூறியதை எடுத்துரைத்தார்கள்.உரையிலே குபைப் (ரலி) வாழ்க்கையில் நடந்த சம்பவத்தைப் பற்றி எடுத்துரைத்து அல்லாஹ்வின் தூதரை எந்த அளவிற்கு அவர் நேசித்தார் என்பதைப் பற்றியும் நினைவூட்டினார்கள்.
முதல் அமர்வின் இறுதியாக சகோ.நாஸர் அலி கான் அவர்கள் குர்பானியின் சட்டங்கள் என்ற தலைப்பில் உரையாற்றி சட்டங்களை எடுத்துரைத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் குர்பானி கொடுத்த விதத்தையும் நமது காலத்தில் பிற சகோதரர்கள் பெருமைக்காகவும் பகட்டுக்காகவும் குர்பானி கொடுப்பதையும் சுட்டிக்காட்டி சிந்திக்க வைத்தார்கள். அவரது உரை குர்பானியின் சட்டங்களை அறிந்திட மக்களுக்கு பயனுள்ள விதத்தில் இருந்தது. நாஸர் அலி கான் அவர்களின் உரைக்குப் பிறகு மஃக்ரிப் தொழுகைக்காக இடைவேளி விடப்பட்டது.மஃக்ரிப் தொழுகைக்குப் பின் சரியாக மாலை 6.00 மணியளவில்
இரண்டாம் அமர்வு நடைபெற்றது.இரண்டாம் அமர்வில் சகோ.ஜாஹிர் தலைமை தாங்கினார். தொடக்கமாக சகோ. அமீர் சுல்தான் அவர்கள் நேசமின்றி ஈமானில்லை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். தனது உரையில் நாம் யாருக்காக (அல்லாஹ்விற்காக) பிற சகோதரர்களை நேசிக்க வேண்டும் என்பதையும், நாம் சார்ந்து இருக்கின்ற ஜமாஅத்துகளுக்காக நாம் நேசம் கொள்ளக்கூடாது என்பதையும் எடுத்துரைத்தார்கள்.அல்லாஹ்விற்காக நேசிக்கக்கூடிய மக்களின் சிறப்புகளை குர்ஆனின் வசனங்களைக் கொண்டும் நபி(ஸல்) அவர்களின் பொன்மொழிகளைக் கொண்டும் எடுத்துரைத்து அனைவரையும் சிந்திக்க வைத்தார்கள்.அதன்
பிறகு சகோ.கொடுங்கையூர் முஹைதீன் அவர்கள் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் அவாழ்வினிலே... என்ற தலைப்பில் இறுதியாக உரையாற்றினாhக்ள். அல்லாஹ்வின் தூதராக முஹம்மது (ஸல்) அவர்கள் பணியாற்றிய போது அவர்கள் சந்தித்த சோதனைகளை எடுத்துரைத்தார். தனது குடும்பத்தை இஸ்லாமிய வாழ்வியல் நெறியை கடைபிடிக்கக் கூடிய குடும்பமாக அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் உருவாக்கியதையும், இன்று நமது நிலை எப்படி இருக்கிறது என்பதையும் எடுத்துரைத்தார்கள். கண்களங்கக்கூடிய விதத்தில் அவரது உரை இருந்தது.
நிகழ்ச்சியின் இறுதியாக கறம்பகுடி ஃபக்ருதீன் அவர்கள் நன்றியுரைக் கூறி நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
அல்லாஹ்வின் கிருபையால் சகோதரர்கள் செய்யதலி, முஹைத்தீன், நஸ்ருதீன், நிஜாமுத்தீன், அப்துல் ஹகீம் ஆகியோர் சிறந்த ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். சோனாப்பூர் மற்றும் துபையின் பல பகுதிகளில் இருந்தும் திரளான சகோதரர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.அல்லாஹ்வின் மார்க்கத்தை நிலைநாட்டுவதற்காக தங்களை எல்லாவிதத்திலும் அர்ப்பணிப்போம் என்ற ஈமானிய உணர்வோடு கலைந்து சென்றார்கள்.
(
அல்ஹம்துலில்லாஹ் - எல்லாப்புகழும் அல்லாஹ்விற்கே)




Tuesday 9 November 2010

அபுதாபியில் ரமலான் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி

மேலப்பாளையம் MMCC WINNER OF RAMADAN CUP ABUDHABI- 2010!



அபுதாபியில் இரண்டாவது முறையாக நடைபெற்ற RAMADAN CUP-2010 இறுதிப்போட்டியில் மிகவும்எதிர்பார்க்கப்பட்ட மேலப்பாளையம் MMCC அணியினர் இறுதிப் போட்டியில் ETA-Melco அணியை மிக எளிதாகவென்று கோப்பையை கைப்பற்றினர்.
அந்த அணியின் காஜா (கேப்டன்), பாசில், ஞானியார் மற்றும் அருண்குமார் மிகச் சிறப்பாக விளையாடி வெற்றிபெறுவதற்கு உறுதுணையாக இருந்தனர்.
கடந்த ஒருமாத காலமாக நடைபெற்ற இந்த தொடரில் மேலப்பாளையம் MMCC, ETA- Melco, Emco மற்றும் Prime Tech ஆகிய அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற மேலப்பாளையம் MMCC மற்றும் ETA- Melco,இரு அணிகளும் கடந்த 29-10-2010 வெள்ளிக்கிழைமையன்று மோதின.
டாசில் வெற்றிபெற்ற மேலப்பாளையம் MMCC அணி முதலில் களமிறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 16 ஓவரில்104 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சார்பாக ஞானியார் 27 ரன்களும் அருண்குமார் 18 ரன்களும் எடுத்தனர். ETA- Melco அணியின் பந்துவீச்சாளர்கள் ரிபாய் 3 விக்கட்களும், ஜலீல் 2 விக்கட்களும் கைப்பற்றினர்.
105 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கில் களமிறங்கிய ETA- Melco அணி நிர்ணயிக்கப்பட்ட 16ஓவரில் அனைத்து விக்கட்களையும் இழந்து வெறும் 84 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் சார்பாகரிபாய் 20 ரன்களும் ஷேக் 15 ரன்களும் எடுத்தனர். மேலப்பாளையம் MMCC அணியின் பந்துவீச்சாளர்கள் காஜா(கேப்டன்) 2 விக்கட்களும், பாசில் 2 விக்கட்களும் கைப்பற்றினர்.
இதன்மூலம் மேலப்பாளையம் MMCC அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் மிக எளிதாக ETA- Melco அணியைதோற்கடித்து RAMADAN CUP- 2010 கோப்பையை கைப்பற்றியது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு ஜனாப் செய்யத் ஹமீத் அவர்கள், General Manager, ETA-Melco மற்றும் ஜனாப் இம்தியாஸ் அஹமத் அவர்கள், Manager, ETA-Melco ஆகிய இருவரும் சிறப்பு பார்வையாளர்களாக கலந்துகொண்டு பரிசுகளை அளித்தனர். பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்ததற்க்காக நிகழ்ச்சியின்இறுதியில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Monday 8 November 2010

தியாகம் செய்வோம் வாருங்கள் - இஸ்லாமிய சொற்ப்பொழிவு

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்,
இன்ஷாஅல்லாஹ் வரும் வெள்ளிக் கிழமை
12 -11 -2010 , அன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் துபாய் மண்டலம் சோனப்பூர் கிளையின் சார்பாக மாலை 4 ;00 மணிமுதல் இஷா வரை பலுதிய கேம்பில் தியாகம் செய்வோம் வாருங்கள் என்ற அழைப்போடு இஸ்லாமிய சொற்ப்பொழிவு நடைப்பெற உள்ளது இந்நிகழ்வில் அனைவரும் கலந்துக் கொண்டு பயன் பெற அன்புடன் அழைக்கிறோம்,
வாருங்கள்   தியாகம் செய்வோம் !!!
jiyik
rNfh.filaey;Y}h; mg;Jy; `kPJ
ciufs;

rNfh.A.S.,g;uh`pk; : ,g;uh`pk; (miy) mth;fspd;tho;T jUk; gbg;gpid
rNfh.mkPh; Ry;j;jhd;: Nerk; ,d;wp <khd; ,y;iy
rNfh.kJf;$h; mg;Jy; fhjh;: egpj;Njhoh;fspd; tho;tpdpNy...
rNfh.eh]h; mypfhd; : Fh;ghdpapd; rl;lq;fs;
nksytp `]d; k];y`p : egp(]y;) mth;fspd; tho;tpdpNy

ed;wpAiu
rNfh./gf;UjPd;

Sunday 31 October 2010

குர்பானியின் சட்டங்கள்

ஏகஇறைவனின் திருப்பெயரால்...
குர்பானியின் சட்டங்கள்
இஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாக கொண்டவை. நோன்புப் பெருநாள் தினத்தில் சதகத்துல் பித்ர் என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பது போல் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் உழ்கிய்யா எனும் குர்பானி கடமையாக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவது தான் குர்பானி எனப்படுகிறது. இந்தக் குர்பானியின் சட்டங்களைப் பற்றி பார்ப்போம்.
குர்பானி கொடுக்கும் நாட்கள்
குர்பானி கொடுக்க கடமைப்பட்டவர்கள் பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுகை முடிந்த பிறகுதான் கொடுக்க வேண்டும். தொழுகைக்கு முன்னால் கொடுத்தால் அது குர்பானியாக ஆகாது என்று நபி (ஸல்) அர்கள் கால நிர்ணயம் செய்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையிலேயே யார் இத்தொழுகையை நிறைவேற்றி விட்டு குர்பானி கொடுக்கிறாரோ அவர் தான் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்னால் அறுக்கிறாரோ அவர் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆகமாட்டார் என குறிப்பிட்டார்கள்.
அறிவிவப்ப்வர் பரா (ரலி) நுல் புகாரி (955,5556)
இந்த ஹதீஸிலிருந்து குர்பானியின் ஆரம்ப நேரம் பெருநாள் தொழுகை நிறைவேற்றியதில் இருந்து தொடங்குகிறது. என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் மட்டுமின்றி ஹஜ்ஜுப் பெருநாளை தொடர்ந்து வரக்கூடிய 11,12,13 ஆகிய நாட்களும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும். (பார்க்க அஹ்மத்-16151)
பெருநாள் தினத்தில் கொக்காதவர்கள் அதைத் தொடர்ந்து வரும் 3 நாட்களிலும் இந்தக் குர்பானியை கொடுத்துக் கொள்ளலாம்.
அறுக்கும் முறை
குர்பானி பிராணியை அறுக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் எனக் கூறி அறுத்து இருக்கிறார்கள்.
கால்கள், வயிறு, முகம் ஆகியவை கறுப்பாக அமைந்து உள்ள கொம்புள்ள ஓர் ஆட்டை வாங்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளை இட்டார்கள். வாங்கி வரப்பட்டவுடன் ஆயிஷாவே கத்தியை எடுத்து வா என்றார்கள். பின்னர் அதைக் கல்லிலே தீட்டி கூர்மையாக்கு என்றார்கள். நான் அவ்வாறே செய்தேன். கத்தியை எடுத்துக் கொண்டு ஆட்டைப் பிடித்து அதைப் படுக்கையில் கிடத்தி அறுத்தார்கள். அப்போது பிஸ்மில்லாஹ் என்று கூறிவிட்டு இவை இதை முஹம்மதிடம் இருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடம் இருந்தும் முஹம்மதின் சமுதாயத்திடமிருந்தும் ஏற்றுக் கொள்வாயாக எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) நுல் முஸ்லிம் (3637)
முஸ்லிம் நுலில் மற்றொரு அறிவிப்பில் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹ்வும், தக்பீரும் கூறியதாக புகாரியில் இடம் பெற்றுள்ளது. எனவே அறுப்பவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பார் எனக் கூறி அறுக்க வேண்டும். அத்துடன் அறுக்கும் போது கத்தியைக் கூர்மையாக்கிக் கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது? என்று அபூஅய்யூப் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ஒருவர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். தாமும் சாப்பிட்டு மற்றவர்களுக்கும் சாப்பிடக் கொடுப்பார். இன்று மக்கள் பெருமையடிப்பதற்காக நீர் காணக் கூடிய நிலை ஏற்பட்டு விட்டது என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் அதா பின் யஸார், நுல் திர்மிதி 1425, இப்னுமாஜா (3137) முஅத்தா (921)
எனவே ஒருவர் தமக்காகவும் தமது குடும்பத்திற்காகவும் சேர்த்து ஒரு ஆட்டை குர்பானி கொடுத்தால் அவரது கடமை நீங்கிவிடும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். அதே சமயம் ஒன்றுக்கு மேல் கொடுக்கக்கூடாது என்பதற்கு தடையேதும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் நுறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் நுறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்தார்கள். அப்போது அவற்றின் இறைச்சிகைளைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான அவற்றைப் பங்கிட்டேன். பின்பு அவற்றின் சேனங்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் பங்கிட்டேன். பிறகு அவற்றின் தோல்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன்.
அறிவிப்பவர் அலீ (ரலி) நுல் புகாரி (1718)
ஒட்டகம், மாட்டுக்குரிய குர்பானி
மாட்டையோ ஒட்டகத்தையோ குர்பானி கொடுக்க விரும்பினால் 7பேர் சேர்ந்து ஒரு மாட்டையோ அல்லது ஓர் ஓட்டகத்தையோ குர்பானி கொடுக்கலாம். ஒரு மாடு அல்லது ஓர் ஓட்டகம் 7 ஆடுகளுக்குச் சமமாக இஸ்லாத்தில் கருதப்படுகிறது.
நபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டில் 7 பேர் சார்பாக ஓர் ஒட்டகத்தையும் 7 பேர் சார்பாக ஒரு மாட்டையும் குர்பானி கொடுக்கச் செய்தனர்.
அறிவிப்பவர் ஜாபிர் (ரலி) நுல் முஸ்லிம் (2323)
எனவே ஆட்டைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று கருதாமல் விரும்பினால் 7பேர் சேர்ந்து ஒரு மாட்டை குர்பானி கொடுக்கலாம். ஆட்டை குர்பானி கொடுத்தவர்களுக்குக் கிடைக்கும் நன்மையில் சிறிதும் இவர்களுக்குக் குறையாது என்பதை இந்த ஹதீஸில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்
விநியோகம் செய்தல்
குர்பானி கொடுக்கப்பட்ட இறைச்சியை 3நாட்களுக்கு மேல் சேமித்து வைக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் கட்டளையிட்டிருந்தார்கள். ஆரம்ப காலத்தில் முஸ்லிம்களிடம் நிலவிய வறுமை விலகி செழிப்பான நிலை ஏற்பட்ட பொழுது நீங்கள் உண்ணுங்கள் வேண்டுமென அளவு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார்கள். இது புகாரியில் இடம் பெற்றுள்ளது.
எனவே குர்பானி கொடுப்பவர்கள் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு தேவையான அளவுக்கு சேமித்து வைத்துக் கொள்ளலாம். பிற ஊர்களுக்கு எடுத்துச் செல்லலாம் என்பதை இந்த ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.
நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்த ஒட்டகத்தின் இறைச்சியைப் பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தர்கள், அதனுடைய இறைச்சி தோல் ஆகியவற்றை எல்லாம் விநியோகிக்குமாறு உத்தரவிட்டார்கள். ஆட்டை உரித்து அறுத்து பங்கிடக்கூடியவருக்குக் கூலியாக அந்த இறைச்சியையோ தோலையோ கொடுக்கக்கூடாது எனவும் கட்டளை இட்டார்கள்.
அறிவிப்பவர் அலீ நுல் புகாரி. (1717)
இந்த ஹதீஸில் இருந்து அறுப்பவர்களுக்கு உரிப்பவர்களுக்கு தனியாகத் தான் கூலி கொடுக்க வேண்டுமே தவிர குர்பானி எந்த ஒரு பகுதியையும் கூலி என்ற அடிப்படையில் கொடுக்கக் கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்.
குர்பானி கொடுக்கக் கூடியவர்கள் யாருக்கும் அதன் இறைச்சியை வழங்காமல் தாமே வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றனர். இது திருக்குர்ஆனின் க்டளைக்கு முரணானதாகும். அல்ஹஜ் 28வது வசனத்தில் அவற்றை நீங்களும் உண்ணுங்கள் வறிய ஏழைகளுக்கும் வழங்குகள் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
எவ்வளவு உண்ணலாம் எவ்வளவு வழங்கலாம் என்ற வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படாவிட்டாலும் இறைவனுக்கு பயந்து நியாயமான முறையில் நமக்கு தேவையான அளவு மட்டும் நாம் எடுத்துக் கொண்டு எஞ்சியவற்றை ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.
சில இடங்களில் குர்பானி இறைச்சியை பங்குகளாக வைத்து ஒரு பங்கு தங்களுக்கும் இன்னொரு பங்கு உறவினர்களுக்கும் மற்றொரு பங்கு ஏழைகளுக்கும் கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இதற்கு நபி வழயில் எந்த ஆதாரமும் இல்லை.
குர்பானிப் பிராணிகள்
ஆடு, மாடு ஒட்டகம் ஆகியவற்றை குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை முன்னரே நாம் குறிப்பிட்டுள்ளோம்.
குர்பானிப் பிராணிகளின் தன்மைகள்
நான்கு குறைகள் உள்ளவை குர்பானிக்கு ஏற்றவையவல்ல. வெளிப்படையாகத் தெரியக்கூடிய குருட்டுத் தன்மை. வெளிப்படையாகத் தெரியக்கூடிய நோய், வெளிப்படையாகத் தெரியக்கூடிய ஊனம். கொம்பு முறிந்தது ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வின் துதரே கொம்பில் ஒரு குறை பல்லில் ஒரு குறை இருப்பதால் அதைக் கொடுக்க நான் விரும்பவில்லை என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உனக்கு எது விருப்பமில்லையோ அதை விட்டுவிடு மற்றவருக்கு அதை ஹராமாக்கி விடாதே என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் பரா (ரலி) நுல் நஸயீ (4293)
இந்த ஹதீஸின் அடிப்படையில் வெளிப்படையாகத் தெரிக் கூடிய பெரிய குறைபாடுகள் இருந்தால் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அற்பமான குறைகள் இருந்தால் அதையும் தவிர்க்க விரும்புவோர் தவிர்க்கலாம். கட்டாயமாகத் தவிர்க்க வேண்டியதில்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
குர்பானிப் பிராணியின் வயது
ஆடு, மாடு ஒட்டகம் ஆகிய முன்று பிராணிகளைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை முன்னர் நாம் அறிந்தோம். குர்பானிக்காகத் தேர்வு செய்யப்படும் பிராணிகள் குறிப்பிட்ட வயதை அடைந்திருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்துள்ளனர்.
நீங்கள் முஸின்னத் (இரண்டு வயதுடையது) தவிர வேறெதனையும் (குர்பானிக்காக) அறுக்காதீர்கள். உங்களுக்குச் சிரமமாக இருந்தால் தவிர அவ்வாறு சிரமமாக இருந்தால் வெள்ளாட்டில் ஜத்அத் (பல்விழும் பருவத்தில் உள்ள) தை அறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பபவர் ஜாபிர் (ரலி) நுல் முஸ்லிம் (3631)
குர்பானி கொடுப்பவர் செய்யக்கூடாதவை ஒருவர் குர்பானி கொடுப்பதற்காக முடிவு செய்துவிட்டால் அவர் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை கண்டது முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம் வெட்டக் கூடாது. முடிகளை நீக்கக் கூடாதுஎன்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் உம்மு ஸலமா (ரலி) நுல் நஸயீ (4285)
நாமே அறுக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் குர்பானி கொடுத்த போதுதமது கையால் தாமே அறுத்து இருக்கிறார்கள் என்று புகாரி முஸ்லிம் உட்பட பல நுல்களிலும் இடம் பெற்று உள்ளது. எனவே அறுக்கும் முறை தெரிந்தவர்கள் மற்றவர்களை வைத்து அறுக்காமல் தாமே அறுத்துக் கொள்வதே சிறந்ததாகும்.

தொகுப்பு: மௌலவி எம்.எஸ் அப்பாஸ் எம்.ஐ.எஸ்.சி