Tuesday 9 November 2010

அபுதாபியில் ரமலான் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி

மேலப்பாளையம் MMCC WINNER OF RAMADAN CUP ABUDHABI- 2010!



அபுதாபியில் இரண்டாவது முறையாக நடைபெற்ற RAMADAN CUP-2010 இறுதிப்போட்டியில் மிகவும்எதிர்பார்க்கப்பட்ட மேலப்பாளையம் MMCC அணியினர் இறுதிப் போட்டியில் ETA-Melco அணியை மிக எளிதாகவென்று கோப்பையை கைப்பற்றினர்.
அந்த அணியின் காஜா (கேப்டன்), பாசில், ஞானியார் மற்றும் அருண்குமார் மிகச் சிறப்பாக விளையாடி வெற்றிபெறுவதற்கு உறுதுணையாக இருந்தனர்.
கடந்த ஒருமாத காலமாக நடைபெற்ற இந்த தொடரில் மேலப்பாளையம் MMCC, ETA- Melco, Emco மற்றும் Prime Tech ஆகிய அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற மேலப்பாளையம் MMCC மற்றும் ETA- Melco,இரு அணிகளும் கடந்த 29-10-2010 வெள்ளிக்கிழைமையன்று மோதின.
டாசில் வெற்றிபெற்ற மேலப்பாளையம் MMCC அணி முதலில் களமிறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 16 ஓவரில்104 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சார்பாக ஞானியார் 27 ரன்களும் அருண்குமார் 18 ரன்களும் எடுத்தனர். ETA- Melco அணியின் பந்துவீச்சாளர்கள் ரிபாய் 3 விக்கட்களும், ஜலீல் 2 விக்கட்களும் கைப்பற்றினர்.
105 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கில் களமிறங்கிய ETA- Melco அணி நிர்ணயிக்கப்பட்ட 16ஓவரில் அனைத்து விக்கட்களையும் இழந்து வெறும் 84 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் சார்பாகரிபாய் 20 ரன்களும் ஷேக் 15 ரன்களும் எடுத்தனர். மேலப்பாளையம் MMCC அணியின் பந்துவீச்சாளர்கள் காஜா(கேப்டன்) 2 விக்கட்களும், பாசில் 2 விக்கட்களும் கைப்பற்றினர்.
இதன்மூலம் மேலப்பாளையம் MMCC அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் மிக எளிதாக ETA- Melco அணியைதோற்கடித்து RAMADAN CUP- 2010 கோப்பையை கைப்பற்றியது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு ஜனாப் செய்யத் ஹமீத் அவர்கள், General Manager, ETA-Melco மற்றும் ஜனாப் இம்தியாஸ் அஹமத் அவர்கள், Manager, ETA-Melco ஆகிய இருவரும் சிறப்பு பார்வையாளர்களாக கலந்துகொண்டு பரிசுகளை அளித்தனர். பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்ததற்க்காக நிகழ்ச்சியின்இறுதியில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment