Saturday 25 July 2020

ஹாஜி. சம்சு அலியார் மரணம்

பரமக்குடி மேலப்பள்ளிவாசல்
நெசவு.சாந்துபட்டறைஜமாத்தலைவர்
ஹாஜி. சம்சு அலியார் மரணம்.
முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் இரங்கல்.

இராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் பொதுச் செயலாளர் ஏ.ஜெய்னுல் ஆலம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது.

பரமக்குடி மேலப்பள்ளிவாசல் நெசவு மற்றும் சாந்து பட்டரை ஜமாஅத் தலைவரும். பரமக்குடி தாலுகா முஸ்லிம் ஐக்கிய ஜமாத்தின் கௌவுரவ ஆலோசகருமான ஹாஜி. D.சம்சு அலியார் அவர்கள் 25.07.2020 இரவு 8.30. மணி அளவில் வபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

ஓய்வு பெற்ற ஆசிரியரான ஹாஜி. சம்சு அலியார் அவர்கள் நீண்ட நெடுங்காலமாக சமுதாய சேவையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். பரமக்குடி முஸ்லீம் நெசவு மற்றும் சாந்து பட்டரை ஜமாத்தின் தலைவராக பல ஆண்டுகள் பணி செய்து பரமக்குடி மேல பள்ளிவாசல் மற்றும் ஹைராத்துல் அலியா உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றின் வளர்ச்சிப் பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர். அன்னாரின் மறைவு முஸ்லிம் சமுதாயத்திற்கு பேரிழப்பாகும்.

பரமக்குடி சுற்றுவட்டார முஸ்லிம் சமுதாயத்தின் நலன்களில் அக்கறை கொண்டு செயல்பட்டு வந்தவர். அனைத்து சமுதாய மக்களிடமும் நன்மதிப்பைப் பெற்றவர். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எல்லாம் வல்ல இறைவன் அழகிய பொறுமையை தந்தருள வேண்டும் என்றும் அன்னாரின் மறுமை வாழ்விற்காக அனைவரும் இறைவனிடம் துவா செய்யுமாறு மாவட்ட ஐக்கிய ஜமாஅத் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment