Saturday 18 July 2020

இஸ்லாமியர்களின் மனிதநேயம்


முஸ்லிம்களை கொச்சை படுத்தி, இழிவு படுத்தி வரும் பாசிச சக்திகள்.பாஜக மாவட்ட தலைவர் மாமா உடலை அடக்கம் செய்து மனித நேயத்தை பறைசாற்றிய தமுமுக..

தஞ்சையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் பட்டுக்கோட்டை பண்ணவயலை சேர்ந்த "சாமியப்பா சவுண்ட் சர்வீஸ் உரிமையாளரும் தஞ்சை மாவட்ட பிஜேபி மாவட்ட தலைவர் பண்ணவயல் இளங்கோ" அவர்களின் மாமாவும் ஆகிய திரு.கருணாநிதி அவர்கள் கொரனோ வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மதியம் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.

இச்செய்தியை மருத்துவமனையின் நிர்வாகமும் குடும்பத்தினரும் தமுமுக அமைப்பு செயலாளர் தஞ்சை பாதுஷாவிடம் எடுத்துக் கூறியதோடு அவருடைய இறுதி சடங்கை நடத்தி தருமாறும் அவருடைய சொந்த ஊராக இருக்கக்கூடிய பட்டுக்கோட்டை அடுத்து இருக்கும் பண்ணவயலில் நல்லடக்கம் செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.  

அதன் அடிப்படையில் தஞ்சை மாநகர ஆம்புலன்ஸை எடுத்துக் கொண்டு தமுமுக சகோதரர்கள் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர் இறந்த கருணாநிதி அவர்களின் உடலை முறையாக பேக் செய்து தமுமுக வின் அவசர கால ஊர்தி மூலமாக அவருடைய சொந்த ஊராக இருக்கக்கூடிய பண்ணவயலுக்கு எடுத்துச் செல்ல முயற்ச்சி எடுக்கப்பட்டது. கொரோனா காரணமாக அச்சத்தில் இருந்த உறவுகள் ஊர்சொந்தங்கள் நல்லடக்கத்தையும் செய்து கொடுக்குமாறு கேட்டு கொண்டனர் அதனை அடுத்து தமுமுக நிர்வாகிகள் நல்லடக்கம் செய்தனர்..

இந்த நிகழ்வை பார்த்த தஞ்சை மக்கள் முஸ்லிம்கள் மனித நேய பணிகளை குறித்து  கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். 

ஒரு பக்கம் "இந்துத்துவா பாஜக ஆதரவாளர்கள் முஸ்லிம்கள் குறித்தும்,முஸ்லிம்கள் உயிருக்கு மேலாக நேசிக்கும் நபிகள் நாயகம் (ஸல்) குறித்தும்,கொச்சையாக பேசி முஸ்லிம்களை கொலை செய்ய வேண்டும் நான் சாவதற்கு முன்னால் நூறு முஸ்லிம்களை வெட்டுவேன் எனவும், முஸ்லிம்கள் மீது கொரோனா பரப்பும் கொடூரமானவர்கள் என அவதூறுகளை அள்ளி வீசி கொண்டு இருக்கும் போது..

இன்னொரு பக்கம் பாஜக மாவட்ட தலைவர் மாமா உடலை வாங்கி முஸ்லிம்கள் மனிதநேயத்தை விதைப்பவர்கள்,மனிதத்தை மட்டும் போற்றுபவர்கள்,மனிதனை மனிதனாக மதிப்பவர்கள், நாங்கள் எங்களை கொச்சையாக பேசினாலும் சட்ட நடவடிக்கை எடுத்து விட்டு மனித நேய பணியில் அர்பணிப்பு செய்து இறைவன் இடத்தில் கிடைக்கும் நன்மையை நாடி எங்களை கொலை செய்வேன் சொல்லும் கூட்டத்தை சேர்ந்தவர்கள் வீட்டில் மரணம் வந்தாலும் நாங்கள் எங்கள் பணிகளை செய்வோம் முஸ்லிம்கள் மத நல்லிணக்கத்தை விரும்பி தமிழகத்தில் அமைதியை விரும்புவர்கள், என இந்த மனித நேய பணி பறைசாற்றி உள்ளது தமிழகத்தில்...

தமுமுக நிர்வாகிகளுக்கு அல்லாஹ் கிருபை செய்வானக..

"புதைந்தது திரு கருணாநிதியின் உடல் மட்டும் அல்ல மதத்தால் மக்களை பிளவு படுத்தும் மத வெறியும் தான்."

தொகுப்பு: A.யாசர் அராபத். 
THOWHEEDISM மீடியா செய்தி பிரிவு..

நன்றி Yasar Arafath

No comments:

Post a Comment