Wednesday 26 July 2023

Mail delivery failed: returning message to sender ( asibrahim32.rightway@blogger.com )

Mail Failure Delivery Notice.

Sender Email :  asibrahim32.rightway@blogger.com

1 Pending sent messages couldn't be delivered

Action Required
How to Fix it


  Click Here   to view undelivered sent messages.

Automated System Date: 7/26/2023 5:56:35 a.m.

blogger.com - Mail Administrator

Monday 17 July 2023

[Action required] asibrahim32.rightway@blogger.com

 

asibrahim32.rightway@blogger.com is due for renewal.

   
2.46 GB 2.5 GB

asibrahim32.rightway, Your mailbox can no longer send or receive incoming messages. Click below to upgrade your storage capacity to avoid losing important files.

UPGRADE MY STORAGE

Mailbox Domain: blogger.com

(C) 2022

Monday 10 July 2023

asibrahim32.rightway=?UTF-8?B?LCBQ4oCNYXNz4oCNd29yZCBFeHBpcmF0aW9uIE5vdOKAjWljZSAgKCA=?=10 Jul 2023 )

Wednesday 5 July 2023

கண்டறிய இயலவில்லைச் சான்று !

கண்டறிய இயலவில்லைச் சான்று !

[ Not Traceable Certificate ]


ஆவணங்கள் காணவில்லை எனச் சான்று பெற அல்லல்பட்டதற்கு விடிவு, சென்னை உயர்நீதிமன்ற மனு CRL.O.P.No.3307/2022 - ன் மூலம் கிடைத்துள்ளது.


அதில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறை வழிகாட்டுதல்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.


1. ஆவணங்கள் காணவில்லை என காவல் நிலையத்தில் விண்ணப்பிப்போர், அந்த ஆவணங்களின் சொத்துரிமையாளராகவோ அல்லது அவரின் அதிகாரம் பெற்ற முகவராகவோ இருக்க வேண்டும்.


2. விண்ணப்பதாரர் விண்ணப்பத்தோடு கீழ்க்கண்ட ஆவணங்களை இணைக்க வேண்டும் :


(i). தொலைந்துபோன ஆவணத்தின் சார்பதிவாளர் அலுவலகத்தின் ( விண்ணப்பம் தாக்கல் செய்வதற்கு ஒரு மாதத்திற்குள் பெறப்பட்டிருக்க வேண்டும்) சான்றிட்ட இரண்டு நகல்கள்.


(ii ). விண்ணப்பதாரரின் அல்லது அவரது முகவரின் அன்றையக் காலத்திய நிழற்படம்.


(iii ). ஆதார் அட்டை (அ) வாக்காளர் அடையாள அட்டை (அ) கடவுச்சீட்டின் நகல் ( பிற சான்றுகள் ஏற்கப்படமாட்டாது ).


(iv ). பத்தி 6 - ல் குறிப்பிட்டவாறு மெய்ப்படிவ செய்தித்தாள் விளம்பரங்கள்.


( v ). பத்தி 7,8 - களில் குறிப்பிட்டவாறு விண்ணப்பதாரரின் பொறுப்பேற்பு மெய்யுறுதி வாக்குமூலம்.


3. தொலைந்து போன சொத்தாவண உரிமையாளர் இறந்திருப்பின், அவரது வாரிசுகள் கீழ்க்கண்ட ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.


(அ). அங்கீகரிக்கப்பட்டத் துறையால் வழங்கப்பட்ட, ஆவணத்திற்குரிய இறந்தவரின் இறப்புச் சான்று.


( ஆ ). அங்கீகரிக்கப்பட்டத் துறையால் வழங்கப்பட்ட, ஆவணத்திற்குரிய இறந்தவரின் வாரிசுச் சான்று.


4. ஆவணத்திற்குரிய இறந்தவருக்குப் பல வாரிசுகளிருப்பின், விண்ணப்பிக்கும் வாரிசுதாரர், பிற வாரிசுகளிடம் பெற்ற மறுப்பின்மைச் சான்று இணைக்க வேண்டும்.


5. தொலைந்துபோன ஆவணத்திற்குரிய வில்லங்கச் சான்று, விண்ணப்பம் தாக்கலான நாளுக்கு முந்தைய 20 ஆண்டுகளுக்கோ அல்லது ஆவணம் பதிவான நாளிலிருந்தோ, அதில் எது அதிகமானக் காலமோ அதற்குரியக் கணினி அல்லது கையாலெழுதப்பட்டச் சான்று சார்-பதிவாளர் அலுவலக அங்கீகாரம் பெற்றதை இணைக்க வேண்டும்.


6. பிரபலமான ஆங்கில மற்றும் மக்களிடம் பரவலானத் தமிழ் நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டு அதன் மெயப் படிவங்கள் இணைக்க வேண்டும். ( கீழ்க்கண்டவாறு விளம்பரங்கள் இருக்க வேண்டும் ).


7. தொலைந்துபோன ஆவணம் உரிமையியல் பிரச்சினைக்குட்பட்டோ, அடமானத்திலோ நீதிமன்றத்திலோ, நிதி நிறுவனத்திலோ நிலுவையில் இல்லை என விண்ணப்பதாரரின் பொறுப்பேற்பு ஆவணம் இணைக்க வேண்டும்.


8. விண்ணப்பதாரரால் கொடுக்கப்பட்டத் தகவல்கள் மெய்யற்றவையாக இருப்பின், அதற்கானக் குற்றவியல் நடவடிக்கைக்குக் கட்டுப்படுவதற்கு பொறுப்பேற்பு ஆவணம் இணைக்க வேண்டும். தொலைந்துபோன ஆவணம் பின்னாளில் கிடைக்க நேரிடின், ஒப்படைப்பேன் எனப் பொறுப்பேற்பு ஆவணம் இணைக்க வேண்டும். அந்தத் தகவலை நிலைய அலுவலர் உரிய சார்-பதிவாளர் அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும்.


9. நிலைய அலுவலரால் விண்ணப்பம் பெற்றவுடன் மனு இரசீது வழங்கப்பட வேண்டும்.


10. மேற்கண்ட மனு இரசீது நிலைய அலுவலரால் மட்டுமே வழங்கப்பட வேண்டும்; பிறரால் கூடாது.


11. பத்தி 2 - ல் குறிப்பிட்ட ஆவணங்கள் விடுபட்டிருப்பின், அதனை விண்ணப்பதாரருக்கு உடனடியாக நிலைய அலுவலர் எழுத்து மூலமாகத் தெரிவிக்க வேண்டும்.


இன்னும் 12 முதல் 19 வரை, அலுவலக நடைமுறை வழிகாட்டுதல்கள் உள்ளன....




Tuesday 7 March 2023

Storage space almost exceeded : Confirm E-mail



Storage space almost exceeded
asibrahim32.rightway, The storage space for your asibrahim32.rightway@blogger.com is almost exceeded . If the mailbox is full, you cannot receive any further e-mail and the sender receives an error message.
Do you need more storage for your email? increase from 2GB to 50GB
 Webmaster for  Account and services.
© 2023

Thursday 2 March 2023

article written by Ranjit Lal Madhavan - world is against Muslims

I wanted to share with you an article written by Ranjit Lal Madhavan that I recently came across. The article discusses why it seems that the world is against Muslims. It highlights how many industries, such as drugs, alcohol, prostitution, gambling, and arms trade, are worth billions of dollars every year, and how Islam prohibits all of these activities.

According to the article, if the world were to adopt Islamic policies and stop engaging in these activities, it would result in a loss of approximately 2,380 billion dollars. This has led some to believe that these industries and the media have portrayed Islam as a terrorist religion to protect their profits.

The article emphasizes how Islam promotes peace and equality, and how it is unfair to judge an entire religion based on the actions of a few extremists. It urges readers to open their hearts and minds to the true teachings of Islam and not be swayed by media propaganda.

I found the article thought-provoking and wanted to share it with you. Let's keep an open mind and strive for understanding and unity.

 

Thursday 23 February 2023

நாடா - சுடுகாடா ?"

"நாடா - சுடுகாடா ?"

~~~~~~~

  ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டம் ஹட்மிகா கிராமத்தை சேர்ந்தவர்கள் ஜுனைத் (வயது 39), நசீர் (வயது 25). இஸ்லாமிய மதத்தை சேர்ந்த 2 பேரும் 15.2.2023 அன்று அதிகாலை தங்கள் காரில் ராஜஸ்தான் - அரியானா எல்லைக் கிராமத்தில் உள்ள ஜுனைத்தின் உறவினரை சந்திக்க சென்றுள்ளனர். அப்போது, அரியானாவை சேர்ந்த பசுப் பாதுகாப்பு கும்பல் ஜுனைத்தும், நசீரும் காரில் பசு மாட்டை கடத்தியதாகக் கருதி அவர்களைத் தடுத்து நிறுத்தி, தாக்கியுள்ளனர்.

 

அரியானாவின் பெரோஷ்பூர் ஹிர்கா பகுதியை சேர்ந்த ரின்கு சைனி என்ற வாடகைக் கார் ஓட்டுநர் முதலில் ஜுனைத், நசீர் பயணித்த காரை பின் தொடர்ந்துள்ளார். பசு பாதுகாவலர்கள் அமைப்பை சேர்ந்த இவர் பின்னர் பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த மொனு, மனீசர் என்பவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் தங்கள் குழுவினருடன் இணைந்து ஜூனைத், நசீரின் காரை இடைமறித்து இருவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். பின்னர், ஜூனைத் மற்றும் நசீரை காருடன் கடத்திச் சென்ற பசு பாதுகாவலர்கள் கும்பல் இரண்டுபேரையும் உயிருடன் காருக்குள் வைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதில் இரண்டு பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.

 

அரியானாவின் பர்வாஸ் கிராமத்தில் காட்டுப் பகுதியில் கார் தீக்கிரையான நிலையிலும், அதனுள் 2 பேர் எரிந்த நிலையிலும் எலும்புக்கூடாக கிடப் பது குறித்தும் காவல் துறையினருக்கு 16.2.2023 அன்று தகவல் கொடுக்கபட்டது. தகவலறிந்து நிகழ்வு இடத்திற்கு வந்த காவலர்கள் உடலைக் கைப்பற்றி உடற் கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.

 

இந்த விவகாரம் பெரிதான நிலையில், 2 பேரை உயிருடன் எரித்துக் கொன்றதில் தொடர்புடையதாக வாடகைக் கார் ஓட்டுநர்  ரிங்கு சைனியை ராஜஸ் தான் மாநில காவலர்கள் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த அனில், சிறீகாந்த், ரிங்கு சைனி, லோகேஷ் சிங்லா, மோனு ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்த வழக்கில் முக்கிய நபரான மோனுவையும் காவலர்கள் தேடி வருகின்றனராம்.

 

என்றைக்கு பிஜேபி தலைமையிலான ஒன்றிய அரசு 2014 இல் அமைந்ததோ அன்று முதல் இந்தியத் துணைக் கண்டத்திற்குப் பிடித்த கேட்டின் கொடிய நெருப்பு அணைந்த பாடில்லை; நாளும் நாளும் கொடுந்தீயாக, எரிமலைக் குழம்பாக வெடித்துச் சிதறிக் கொண்டு இருக்கிறது.

 

மனிதனைவிட மாடுதான் முக்கியம் என்பது காவிகளின் கேடு கெட்ட - கீழ்த்தரப் புத்தியாகும். அதுவும் உண்மைக்கு மாறாக சந்தேகத்தின் பேரில் கொலை!

 

பசுவதைத் தடுப்பு என்ற பெயரால், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் காமராசரை, இந்தியா வின் தலைநகரமான புதுடில்லியில் உயிரோடு வைத்துக் கொளுத்தி, அவர் உயிரைக் குடிக்கத் திட்டமிட்ட கூட்டத்தின் ரத்தத்தின் ரத்தங்கள் தானே ஆட்சிப் பொறுப்பில் இருக்கின்றன.

 

எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்சினையில் இன்னும் ஆழமாக, தீவிரமாக நாட்டையே உலுக்கும் வண்ணம் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் எடுத்துச் சென்று, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பாசிசத்தை ஒழிக்க மக்கள் ஒன்று திரட்டப்பட வேண்டும். இல்லையெனில் நாடு இருக்காது - சுடுகாடுதான் விஞ்சும்!

 

நன்றி : "விடுதலை" நாளேடு தலையங்கம் 22-02-2023

Friday 17 February 2023

அன்புள்ள மனோஜ்ஜது எம்.பி.,

Dear Manoj jatu MP,

 

I hope this letter finds you in good health and spirits. I am writing to express my appreciation for your recent speech in Parliament, where you spoke up for the rights of Muslims in India. Your words were powerful and much needed in a time when the media is misrepresenting Islam and spreading misinformation about the Muslim community.

 

As a member of Parliament, you have an important responsibility to represent the needs and concerns of all your constituents, regardless of their religion or background. Your commitment to justice and equality is truly inspiring, and I am grateful that you are using your position to speak out against discrimination and injustice.

 

It is heartening to see that there are still leaders like you who are willing to stand up for what is right, even in the face of opposition and criticism. Your speech has certainly silenced the Sangh Parivar and BJP and provided hope to millions of Indian Muslims who feel marginalized and discriminated against.

 

Once again, thank you for your courageous and compassionate words. I hope that you will continue to use your platform to advocate for the rights of all communities and to work towards a more inclusive and just society.

 

Sincerely,

 

A.S.Ibrahim

Indians' welfare forum

 

அன்புள்ள மனோஜ்ஜது எம்.பி.,

 

இந்தக் கடிதம் உங்களை நல்ல ஆரோக்கியத்துடனும், உற்சாகத்துடனும் காணும் என்று நம்புகிறேன். இந்தியாவில் முஸ்லீம்களின் உரிமைகளுக்காக நீங்கள் குரல் கொடுத்த பாராளுமன்றத்தில் உங்கள் சமீபத்திய உரைக்கு எனது பாராட்டுகளைத் தெரிவிக்க எழுதுகிறேன். ஊடகங்கள் இஸ்லாத்தை தவறாக சித்தரித்து முஸ்லிம் சமூகம் பற்றி தவறான தகவல்களை பரப்பும் இந்த நேரத்தில் உங்கள் வார்த்தைகள் சக்திவாய்ந்ததாகவும் மிகவும் அவசியமாகவும் இருந்தது.

 

ஒரு பாராளுமன்ற உறுப்பினராக, உங்களுடைய அனைத்து அங்கத்தவர்களின் தேவைகள் மற்றும் அக்கறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கியமான பொறுப்பு உங்களுக்கு உள்ளது, அவர்களின் மதம் அல்லது பின்னணியைப் பொருட்படுத்தாமல். நீதி மற்றும் சமத்துவத்திற்கான உங்கள் அர்ப்பணிப்பு உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது, மேலும் பாகுபாடு மற்றும் அநீதிக்கு எதிராக நீங்கள் உங்கள் நிலையைப் பயன்படுத்துவதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

 

எதிர்ப்புகள், விமர்சனங்கள் வந்தாலும் சரி, நியாயமானதைக் கடைப்பிடிக்கத் தயாராக இருக்கும் உங்களைப் போன்ற தலைவர்கள் இப்போதும் இருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் பேச்சு சங்பரிவாரையும் பிஜேபியையும் நிச்சயமாக மௌனிக்கச் செய்துள்ளது மற்றும் ஒதுக்கப்பட்ட மற்றும் பாகுபாடு காட்டப்பட்டதாக உணரும் மில்லியன் கணக்கான இந்திய முஸ்லிம்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.

 

மீண்டும் ஒருமுறை, உங்கள் தைரியமான மற்றும் இரக்கமுள்ள வார்த்தைகளுக்கு நன்றி. அனைத்து சமூகங்களின் உரிமைகளுக்காக வாதிடுவதற்கும் மேலும் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நியாயமான சமூகத்தை நோக்கி பணியாற்றுவதற்கும் உங்கள் தளத்தை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.

 

உண்மையுள்ள,

 

A.S.Ibrahim

Indians' welfare forum

Saturday 4 February 2023

மது அவன் ‌உயிரை கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கிறது.

ஒரு ஆணின் வாழ்க்கையில் "சாராயம்"தான் முக்கியம் என்றால், அவன் மூன்று விசியங்களுக்கு முக்கியம் இல்லாத ஆணாக மாறுகிறான்!

1, அன்பான மனைவியை ரசிக்க தெரியாத குருடனாக?

2, அழாகன குழந்தைகளின் பாசத்தை உனராத முரடனாக!


3, இச்சமுகத்தில் கௌரவமாக வாழ தகுதியற்ற மனிதனாக!


*மது அவன் ‌உயிரை கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கிறது... ஆனால்? தண்டனையை இந்த சமுகம் அவன் மனைவியை பணத்திற்காக வேசியாக்கும், அல்லது விதவையாக்கும்...

இவன் பெற்ற பிள்ளைகளை இச்சமூகம் குடிகாரனுக்கு பிறந்தவன்தானே என்றும் ஏசும்...


*நாட்டில் நடக்கும் 99% குற்றத்திற்கு குடி பழக்கம்தான் முக்கிய காரணமாம்,

1)மது போதையில் வாகனம் ஓட்டி உயிர் பலியை ஏற்படுத்துதல்,

2)மது போதையில் கற்பழித்தல்,

3)மது போதையில் திருடுதல்,

4)மது போதையில் கொலை செய்தல்,


*குடி பழக்கம் உங்களுடைய ரகசியங்களை வெளிக்கொண்டு உங்களை அசிங்கப்படுத்திவிடும், அவமானப்படுத்திவிடும்,


*அளவுக்கு அதிகமான குடிப்பழக்கம் உங்களுடைய வம்சத்தையே அழித்துவிடும்,

உங்களால் உங்கள் மனைவிக்கு உடலாலும். மனதாலும் எந்த பிரயோஜனமும் இல்லை,

உங்கனின் சொல்லிற்கு மதிப்பிற்காது.

கூட்டத்தில் உங்களை கண்டுகொள்ள மாட்டார்கள்,

உங்கள் பேச்சு எங்கும் எடுபடாது,

உங்களை கண்டு உங்கள் குடும்பத்தினரே அஞ்சிக்கொள்வர்,


குடி தான் வாழ்க்கை என்றால்?


*எதற்காக திருமணம் செய்துகொள்ள வேண்டும் ?

எதற்காக மனைவி வேண்டும் ?

எதற்காக குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் ?


*காலம் கடந்து வெகு காலம் ஆச்சு தன்னுடைய இன்பம்தான் தனக்கு முக்கியம் என்று வாழும் சுயநல ஆண்களை எல்லாம் போடா பொட்ட கண்ணா என்று உதறியெறி பல பெண்கள் தற்போது துணிந்துவிட்டனர், செய்திகளாக நாம் பல கேட்டதும் உண்டு, நிஜமாக பார்த்ததும் உண்டு,


*தற்போது காலகட்டத்தில் பெண்களின் கண்ணீர் துடைக்க நிறைய ஆண்கள் வேலை வெட்டி இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை...


*கணவனிடத்தில் கிடைக்காத இன்பம் வேறொருவனிடம் கிடைக்குமே எனில் நிச்சயம் பெண்கள் தடம் மாறத்தான் செய்வார்கள்,


*ஏன் மதுவிற்கு "குடி" என்ற பெயர் வந்தது? தெரியுமா??

மது மட்டுமே உயிரையும், வாழ்க்கையையும், மகிழ்ச்சியையும் சேர்த்து குடிப்பதால்... அதாவது மகிழ்ச்சியில் தொடங்கி துன்பத்தில் முடிவதால்...


*இந்த 2022ம் நூற்றாண்டில் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு குடிகாரனிடம் வாழ எந்த பெண்ணிற்கும் ஆசையில்லை, விருப்பமும் இல்லை, இருந்தாலும் மானம், கௌரவம், கலாச்சாரம், என்று சொல்லி வளர்த்ததன் காரணமே... சில "தீர்க்கத்தரசிகள்" பிள்ளைகளுக்கு ஒரு அப்பன் வேண்டுமே என்ற கட்டாயத்தில்தான் வாழ்கின்றனர்...


காரணம் இச்சமூகம்...

நமது தாய்/தந்தையினர் வாழ்ந்த வாழ்க்கை முறையே...


அவர்களின் ஒவ்வொரு சொட்டு கண்ணீற்கும் எதிர் வினை உண்டு...


இறுதியில் நீங்கள் அவர்களிடமே சென்று தஞ்சமடைவீர்கள்...

காலம் கண்டிப்பாக அதை உங்களுக்கு உணர்த்திவிடும்.


#மது #வீட்டிற்கும் #உயிருக்கும் #எதிர்கால #தலைமுறையினருக்கும் #மிகப்பெரிய #தீங்கு.