Saturday 17 July 2021

மனை வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான 18 விஷயங்கள்*

*மனை வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான 18 விஷயங்கள்*

சொந்த வீட்டில் வாழ வேண்டும் என்கிற ஆசை இல்லாத மனிதனே இல்லை. அரை கிரவுண்டு இடமாவது வாங்கி ஒரு  வீட்டைக் கட்டிவிட வேண்டும் என்பதுதான் இன்றைய நடுத்தர வர்க்கத்தினரின் கனவாக இருக்கிறது. ஆனால், மனை வாங்கும்போது மிக மிகக் கவனமாகச் செயல்பட வேண்டும்.  மனை வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களை இங்கே 'செக்-லிஸ்ட்'-ஆகத் தந்திருக்கிறோம்.  

1. நீங்கள் வாங்கப்போகும் மனை, யாருடைய பெயருக்கு யாரிடமிருந்து பெறப்பட்டிருக்கிறது என்பதைக் கடந்த 30 வருடங்களுக்கு, அதற்கான மூலப் பத்திரங்களைக் கொண்டு சரிபார்க்க வேண்டும். 

2. சொத்தின் தற்போதைய உரிமையாளர் பெயரில் உள்ள ஒரிஜினல் பத்திரங்களைச் சரிபார்க்க வேண்டும்.   

3. சொத்தின் தற்போதைய உரிமையாளர் பெயரில் வழங்கப்பட்டுள்ள  சமீபத்திய பட்டா மற்றும் நில அளவை விவரங்கள் ஆகியவற்றைப் பார்ப்பதன் மூலம் வருவாய்த் துறைப் பதிவுகளில் அந்தச் சொத்து யார் யாரிடமிருந்து கைமாறியிருக்கிறது என்பதையும் சரிபார்க்கலாம்.

4. நீங்கள் வாங்கப்போகும் மனையின் தள வரைபட விவரங்களைச் சரிபார்க்கவும்.

5. நீங்கள் வாங்கும் மனையின் பயன்பாட்டுத்தன்மையைப் பார்க்க வேண்டும். அதாவது, மனையானது விவசாய நிலம் அல்லாத குடியிருப்புக்கான மனையாக மாற்றப்பட்டிருக்கிறதா என்பதைச் சரிபார்க்கவும்.

6. வாங்கவிருக்கும் மனையின் பயன்பாட்டுத்தன்மையைத் தெரிவிக்கும் வரைபடங்களைப் பார்க்கவும். உதாரணமாக, மனையின் பயன்பாடானது குடியிருப்புக்கானதாகக் குறிக்கப்பட்டிருந்தால், அதனை வேறெந்த வணிகச் செயல்பாட்டுக்காகவும் பயன்படுத்த முடியாது. 

7. வாங்கும் நிலமானது அனுமதி பெறப்பட்டதா, இல்லையா என்பதைப் பார்க்க வேண்டும்.  லேஅவுட் விவரங்கள் அடங்கிய லேஅவுட் பிளான் ஆவணத்தின் நகலைச் சரிபார்ப்பதன் மூலம், உரிய அரசு நிறுவனங்களிடமிருந்து அனுமதி  பெறப்பட்டிருக்கிறதா என்பதைப் பார்க்கலாம். ஆன்லைனில் பார்க்கும் வசதியிருந்தால் அதன் மூலமும் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா  என்பதைப் பார்க்கலாம். சி.எம்.டி.ஏ இணைய தளத்தில், 2000-ம் ஆண்டுக்குப்பிறகு அங்கீகரிக்கப் பட்ட லே அவுட்டுகளை உறுதி செய்யமுடியும். மேலும், அப்ரூவல் கொடுத்துள்ள அதிகாரி அதற்கான அதிகாரம் கொண்டவர்தானா என்பதையும் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் கிராமப் பஞ்சாயத்து தலைவருக்கு மனைக்கான லேஅவுட் பிளான் அப்ரூவல் வழங்கும் அதிகாரமில்லை. ஆனால், பல இடங்களில் பஞ்சாயத்து அனுமதி பெறப்பட்ட  நிலம் என்று விற்கப்பட்டிருக்கிறது. 

8. லேஅவுட் அப்ரூவல் வழங்கும் அதிகாரம் கொண்ட அதிகாரிகள், அப்ரூவல் வழங்கும்போது ஏதேனும் நிபந்தனைகள் விதித்திருந்தால் அதையும் கவனமாகச் சரிபார்க்க வேண்டும். சி.எம்.டி.ஏ, டி.டி.சி.பி அங்கீகாரம் பெற்ற லே அவுட்டுகளில், ஓ.எஸ்.ஆர் பயன்பாட்டுக்காக உள்ளூர் பஞ்சாயத்து சார்பாக சாலைகள் அரசுக்குத் தானமாகக் கொடுக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்பதைக் கவனிக்கவும்.

9. மனையானது அதன் நிர்ணயிக்கப்பட்ட நில உச்சவரம்புக்குள் இருக்கிறதா என்பதையும் சரிபார்க்கவும்.

10. வாங்கும் மனையின்மீது உயர் மின்னழுத்தக் கடத்திக் கம்பிகள் எதுவும் செல்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.

11. நீங்கள் வாங்கும் மனையானது நிர்ணயம் செய்யப்பட்ட அளவுகளைவிட அதிகமாக இருந்தால், அந்த இடம் ஏதேனும் பொதுப் பயன்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்ட இடமா என்பதையும் சரிபார்க்க வேண்டும். 

12. தற்போதைய நில உரிமையாளரின் நம்பகத்தன்மையை, நில வருவாய்த்துறைப் பதிவுகளை ஆன்லைனில் பார்க்கும் வசதி மூலம் சரிபார்க்கலாம்.

13. நில வரியானது தற்போதைய நில உரிமையாளரின் பெயரில் செலுத்த வேண்டிய துறைக்குச் சரியாகச் செலுத்தப்பட்டிருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். (சென்னையைப் பொறுத்தவரை, 4,800 சதுர அடிக்குக் குறைவான காலி நிலத்துக்கு நில வரி இல்லை)

14. ஒருவேளை தற்போதைய நில உரிமையாளர் நிலத்துக்குச் சொந்தமானவராக யாரையேனும் அறிவித்திருந்தால், அதற்கான ஆவணத்தைச் சரிபார்த்து அது இன்னும் செல்லத்தக்கதாக இருக்கிறதா என்பதைப் பார்க்கவும். மேலும், நிலத்தின் தற்போதைய உரிமையாளர், நிலத்தின் கிரயப்பத்திரப் பதிவுக்குமுன் உயிரோடு இருக்கிறாரா என்பதையும் உறுதிசெய்யவும்.

15. மனையின் ஆவணங்களைச் சரிபார்க்க,   மனை எந்தச் சார்பதிவாளர் அலுவலகத்தின் வரம்புக்குள் வருகிறதோ,  அந்த அலுவலகத்திலிருந்து மனை தொடர்பான சமீபத்திய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களைப் பெற்று, ஒரிஜினல் ஆவணங்களுடன் பொருத்தி சரிபார்க்கவும். 

16. மனையை நீங்களாகவே அளந்து ஆவணத்தில்/வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள  மனை அளவைகள் சரியாக இருக்கின்றனவா என்பதைப் பார்த்துக்கொள்ளவும்.

17. வாங்கவிருக்கும் மனையின் மதிப்பை, குறிப்பிட்ட மாநில அரசுத் துறையின் இணைய தளத்தில் பார்த்து, அந்த மதிப்புக்கேற்ப ஸ்டாம்ப்  பேப்பர் வாங்க வேண்டும்.

18.  கடந்த 30  வருடங்களுக்கான நில உரிமையைச் சரிபார்க்கவும். அடமானத்திலோ அல்லது நீதிமன்ற வழக்குகளிலோ இல்லை என்பதை உறுதி செய்யவும். வில்லங்கச் சான்றிதழ் வாங்கிப் பார்ப்பது அவசியம். வில்லங்கச் சான்றிதழின் விவரங்களை ஆன்லைனில் ஒருமுறை சரிபார்ப்பதும் அவசியம்.
--
Thanks & Regards

Tuesday 13 July 2021

Fwd: UAE's Juma Kuthba-Tamil (16th July-2021)

Assalaamu Alaikum,

With pleasure we forward you the Juma Kutba Tamil Translation of 16/07/2021 (Friday Sermon) which is published by AWQAF of the UAE Government.

தலைப்பு: அரபாவுடைய நாள்!!- UAE Juma 16th July-2021

இந்த ஜும்ஆ உரையை எழுத்து வடிவில் நேரடியாக பெற கீழ்காணும் எண்ணில் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.

Regards

Moulavi K Syed Abusalih Bilali B.Com

Mobile: +971 52 9919346

--
You received this message because you are subscribed to the Google Groups "Bilalia Ulamas' Association Dubai" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to bilalia-ulamasdubai+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web, visit https://groups.google.com/d/msgid/bilalia-ulamasdubai/CAN3jKYgZKg8%3DoEC7rf%3DQkZ3PA%2B7p5qa_79uc%2B5ARfJ_2xPFz3A%40mail.gmail.com.

Thursday 8 July 2021

Fwd: UAE's Juma Kuthba-Tamil (9th July-2021)


From: bilalia-ulamasdubai@googlegroups.com <bilalia-ulamasdubai@googlegroups.com> on behalf of Bilalia Ulamas' Association <buadubai@gmail.com>
Sent: Tuesday, July 6, 2021 8:18:32 PM
To: bilalia-ulamasdubai@googlegroups.com <bilalia-ulamasdubai@googlegroups.com>
Subject: UAE's Juma Kuthba-Tamil (9th July-2021)
 

Assalaamu Alaikum,

With pleasure we forward you the Juma Kutba Tamil Translation of 09/07/2021 (Friday Sermon) which is published by AWQAF of the UAE Government.

தலைப்பு: துல்ஹஜ் பிறையின் முதல் பத்து நாட்கள்!!- UAE Juma 9th July-2021

இந்த ஜும்ஆ உரையை எழுத்து வடிவில் நேரடியாக பெற கீழ்காணும் எண்ணில் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.

Regards

Moulavi K Syed Abusalih Bilali B.Com

Mobile: +971 52 9919346

--
You received this message because you are subscribed to the Google Groups "Bilalia Ulamas' Association Dubai" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to bilalia-ulamasdubai+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web, visit https://groups.google.com/d/msgid/bilalia-ulamasdubai/CAN3jKYiGuvy%2Bm%2BdEpY7E-1_79cWnXKeYKyj_kj1CQESDrDZBgQ%40mail.gmail.com.

Friday 28 May 2021

பரமக்குடி அன்னை ஆயிசா அறக்கட்டளை

அலஹம்துலில்லாஹ் 

நமது பரமக்குடி அன்னை ஆயிசா அறக்கட்டளை ஏற்கனவே தமிழ்நாடு அரசு பதிவு என் 18/2016 இயங்கிவருகிறது் 
இப்போது தமிழகஅரசின் NGO விலும் பதிவும் செய்துள்ளோம் பதிவு என் NAI-05020 

நமது அன்னை ஆயிசா அறக்கட்டளை இறைவன் அருளால்  சீரிய சிந்தனையுடனும் திறம்பட செயல்பட உங்களுடைய ஆதரவும் பிராத்தனையும் தரவேண்டும்.

S.அப்துல் கபூர் 
நிறுவனர் 
அன்னை ஆயிசா அறக்கட்டளை 
பரமக்குடி
--
Thanks & Regards

Saturday 22 May 2021

பார்ப்பனீயம்

#பிணங்கள் குவிந்து கொண்டிருக்கும் கொடுங்காலத்திலும் யாரேனும் எரிக்க  இடமில்லாமல் வேறு சாதி தகனமேடைக்கு வந்துவிட்டால்..?

என்கிற எச்சரிக்கை உணர்வோடு புதிதாக பெயின்ட் வாங்கி எழுதியுள்ள அந்த மனசு இருக்கே சார் அது தான் #பார்ப்பனீயம்

செங்கம் வே.சஞ்சய் விசிக

Wednesday 19 May 2021

இந்த விதிகள் அரசுப் பணியில் இருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் கட்டுப்படுத்தும்.

இந்த விதிகள் அரசுப் பணியில் இருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் கட்டுப்படுத்தும்.

தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதி 2(5) & (6) ன்படி கீழ்க்கண்ட உறுப்பினர்கள், அரசு ஊழியர் ஒருவரின் குடும்ப உறுப்பினர்களாக கருதப்படுவர்.

தந்தை / வளர்ப்புத் தந்தை
தாய் / வளர்ப்புத் தாய்
கணவன்
மனைவி
மகன் / வளர்ப்பு மகன்
மகள் / வளர்ப்பு மகள்
சகோதரன்
சகோதரி
மனைவியின் தாய், தந்தை
கணவரின் தாய், தந்தை
சகோதரியின் கணவர்
சகோதரரின் மனைவி
மகளின் கணவர்
மகனின் மனைவி

தொலைதூர கல்வி, மாலைநேரக் கல்லூரி மற்றும் தனியாக படிக்க அரசு அலுவலர், தன் துறை தலைவரிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி விண்ணப்பம் கிடைத்த 15 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும். மேலும் விவரங்கள் தேவைப்படின் அந்த விவரங்கள் கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும். 15 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படவில்லை என்றால் கல்வி பயில்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக அரசு ஊழியர் கருதிக் கொள்ளலாம். அரசாணை எண். M. s. No 200, P & A. R., DT - 19.04.1996. அரசுப் பணியை தவிர வேறு எந்தப் பணியையும் அரசு ஊழியர் ஏற்கக்கூடாது.

அரசு ஊழியர் எவரும் பகுதி நேர வேலை எதையும் செய்யக்கூடாது. G. O. Ms. No. 893, P & A. R. DT - 23.09.1983 Rule 8(1)(aa). ஆனால் provision 6 under Rule 8(1)(a) ல் கண்டுள்ள விலக்களிப்பின்படி அரசு ஊழியர் ஒருவர் கல்வி நிலையங்களில் விரிவுரையாற்றி அதற்கென மதிப்பூதியம் பெறலாம்.

எந்த ஆசிரியரும் தனியாக (Tuition) வகுப்பு நடத்தக்கூடாது. டியூஷன் நடத்தும் எண்ணத்துடன் மாணவரிடமோ, அவருடைய பெற்றோரிடமோ அல்லது பாதுகாவலரிடமோ எந்த உறவையும் ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது. இருப்பினும் பணம் ஏதும் பெறாமல் மாணவர்களுக்கு தனியாக கல்வி புகட்ட தடை ஏதுமில்லை. Rule 6(17)

அலுவலக வேலைக்கு பாதிப்பு ஏற்படாமல் ஒருவர் விஞ்ஞானம், அறிவியல், இலக்கியம், கலை போன்ற பணிகளில் பங்கேற்கலாம். ஆனால் அதுபோன்ற பணிகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அலுவலக துறைத் தலைவர் அறிவுறுத்தினால் அதுபோன்ற வேலைகளில் ஈடுபடக்கூடாது. Provision 1 rule 8(1)(a)

அரசு ஊழியரின் குடும்ப உறுப்பினர்கள் அவர்களின் சொந்த வருமானத்திலிருந்து ஒரு சொத்தை கையகப்படுத்துவதற்கோ அல்லது விற்பனை செய்வதற்கோ எவருடைய அனுமதியும் பெறத் தேவையில்லை. ஆனால் அரசு ஊழியரே குடும்ப உறுப்பினர்களின் பெயரில் ஒரு சொத்தை கிரையமாக பெற்றால் அதற்கு துறைத்தலைவரின் அனுமதி தேவை. G. O. Ms. No. 3158, Public (service - A) Dept, DT - 27.09.1974

அரசு பணிபுரிகின்ற கணவன், மனைவி இருவரும் சேர்ந்து ஒரு சொத்தை கிரையம் வாங்கினால் அதன் விவரத்தை துறைத்தலைவருக்கு இருவரும் தனித்தனியாக தெரிவிக்க வேண்டும். Govt. Letter. No. 29546/80 - 4, P & A. R. DT - 22.10.1980

மூதாதையர் சொத்து ஒன்று வாரிசுரிமையின்படி இறங்குரிமையின் மூலம் கிடைக்கும் தருவாயில் அதை துறைத்தலைவருக்கு தெரிவிக்க வேண்டாம். ஆனால் சொத்து அறிக்கையில் காட்ட வேண்டும். Rule 7(3)

அரசு ஊழியர் பணிபுரியும் மாவட்டத்தில் எந்தச் சொத்தையும் கையகப்படுத்தக்கூடாது. முன்னமே பணிபுரிந்த மாவட்டமாக இருப்பின், இடமாறுதல் பெற்று 2 ஆண்டுகள் கடந்த பின்னர்தான் சொத்து ஒன்றை கையகப்படுத்த வேண்டும். Rule 7(14)

இருப்பினும் வீடு அல்லது வீட்டுமனை ஒன்றினை பணிபுரியும் அல்லது பணிபுரிந்த மாவட்டத்தில் வாங்கவோ, விற்கவோ தடை ஏதுமில்லை. Rule 7(14)(a)

வருவாய்த்துறை அல்லது நிதித்துறையில் பணிபுரிபவர்கள் அத்துறையில் நடத்தப்படும் அசையும் அல்லது அசையா சொத்துக்களை பொது ஏலத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கையகப்படுத்தக்கூடாது. Rule 7(16)

Record sheet அல்லது personal file - ஐ பராமரித்து வரும் அதிகாரி, ஊழியர்களின் சொத்து விவரங்களை ஒரு பதிவேட்டில் பதிவு செய்து பராமரிக்க வேண்டும். Rule 7(9)

கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்கும் அதிகமாக சொத்து வாங்கினாலோ அல்லது விற்பனை செய்தாலோ துறைத்தலைவருக்கு தெரிவிக்க வேண்டும். இந்த Rule 7 (2) amended in G. O. Ms. No. 39, P & A. R. Dt - 9.03.2010

A Group Employees may Purchase upto Rs. 80000/-

B Group Employees may Purchase upto Rs. 60000/-

C Group Employees may Purchase upto Rs. 40000/-

D Group Employees may upto Rs. 20000/-

அரசு ஊழியர்கள் ஒவ்வொரு 5 ஆண்டிற்கு ஒருமுறை, 5 ஆம் ஆண்டு முடிவில் சொத்து அறிக்கை ஒன்றினை துறைத்தலைவருக்கு தாக்கல் செய்ய வேண்டும். Rule 7(3)

அரசு ஊழியர்கள் பொதுவாக அரசியல் செல்வாக்கு கொண்டு வருவதை அல்லது அமைச்சர்களிடம் முறையிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அரசு ஊழியர் எவரேனும் அரசியல் செல்வாக்கு கொண்டு வந்தால் அவரை துறைத்தலைவர் கண்டிக்க வேண்டும். அதனையும் பொருட்படுத்தாமல் இரண்டாவது முறையாக அரசியல் செல்வாக்கு கொண்டு வந்தால் எச்சரிக்கை செய்ய வேண்டும். அதன்பிறகும் தொடர்ந்து அரசியல் செல்வாக்கு கொண்டு வந்தால் அந்த ஊழியர் மீது துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். Govt. Letter. No. 9637/A/95 - 1, P & A. R (A) Dept, dt - 24.04.1995

அலுவலக பிரச்சினை தொடர்பாக அரசு ஊழியர் ஒருவர் அமைச்சரை நேரில் சந்தித்து முறையீடு செய்யலாம். பின்னர் அந்த முறையீடு விவரத்தை அலுவலகத் தலைவர் வழியாக துறைத்தலைவருக்கு தெரிவிக்க வேண்டும். G. O. Ms. No. 9, P & A. R. (A) Dept, dt - 2.10.1985

Monday 10 May 2021

10.05.2021 பரமக்குடி அன்னை ஆயிஷா அறக்கட்டளை - பித்ரா 2021

10.05.2021 பரமக்குடி அன்னை ஆயிஷா அறக்கட்டளை - பித்ரா 2021

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


அன்னை ஆயிஷா டிரஸ்ட் - பரமக்குடி. அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நற்பணிகள் பல செய்துகொண்டு இருக்கிறது.


மேலும் பரமக்குடி நகரில் அன்னை ஆயிஷா அறக்கட்டளை மூலமாக முஸ்லிம்களுக்கு பித்ரா கடந்த 17 வருடங்களாக விநியோகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. அதேபோல் இந்த வருடமும் ரமலான் 27 அன்று 10.05.2021 பித்ரா 200 க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு தமிழக அரசு விதித்த கெரானா சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு விநியோகிக்கபட்டது.


அல்லாஹ் எங்கள் பனிகளை ஏற்று கொன்டு இதற்க்காக உதவி செய்த மற்றும் உழைத்த சகோதர சகோதிரிகளுக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் வெற்றியை தருவானாக ! ஆமீன்


S.Abdul Gafoor

President

Annai ayeisha trust paramakudi

Ramnad district

Tamil Nadu India 🇮🇳



Tuesday 4 May 2021

ஸதக்கத்துல் ஃபித்ர் அறிவிப்பு: 2021

ஸதக்கத்துல் ஃபித்ர் அறிவிப்பு:  2021
××××××××××××××××××××××××××

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அன்னை ஆயிசா அறக்கட்டளை வழக்கம்போல் ஸதக்கத்துல் ஃபித்ர் விநியோகத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
 
200 குடும்பங்கள் பயன்பெற திட்டமிட்டுள்ளோம், இன்ஷா அல்லாஹ். 10.05.2021 காலை

எனவே, எங்களின் சேவையை அல்லாஹ் ஏற்று கொண்டு மென்மேலும் தொடர  இறைவனிடம் பிராத்தனை செய்யவும்.

நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன்பாளியை தூய்மைப் படுத்துவும், ஏழைகளுக்கு உணவாகவும் நபி  (ஸல்) அவர்கள் ஃபித்ராவை கடமையாக்கினார்கள்.
அறிவிப்பு: இப்னு அப்பாஸ்  (ரலி)
நூல்:அபூதாவுது

செய்தி/ தகவல்
அன்னை ஆயிசா அறக்கட்டளை
பரமக்குடி
இராமநாதபுரம் ஜில்லா

நிய்யத் எப்படி வைப்பது ? AAT

https://youtube.com/watch?v=JABlT-y1xF4&feature=share

நிய்யத் எப்படி வைப்பது ?
A.s.ibrahim

: தொழுகை எவ்வாறு இருக்க வேண்டும் ?

 தொழுகை எவ்வாறு இருக்க வேண்டும் 
--
Thanks & Regards