Tuesday 1 September 2015

நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் நுரையீரல் கடுமையாக பாதிப்படைகிறது!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நுரையீரலின் முக்கிய ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படும் pulmonary embolism என்ற நோய் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.நாளொன்றுக்கு 5 அல்லது அதற்கும் கூடுதலான மணி நேரங்கள் தொலைக்காட்சி பார்ப்பது நுரையீரலின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜப்பானின் ஒசாகா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சுமார் 86,000 பேரின் அன்றாட நடவடிக்கைகள், உடல்நிலை உள்ளிட்டவைகளை ஆய்வு செய்த போது நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காருவது, தொலைக்காட்சி பார்ப்பது ஆகியவற்றினால் நுரையீரலின் முக்கிய ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுகிறது, இது உயிருக்கு ஆபத்தான விவகாரம் போன்ற விவகாரங்கள் தெரியவந்தது.
இப்போதெல்லாம் இகானமி வகுப்பில் நீண்ட நேரம் விமானப் பயணம் மேற்கொள்வதும் நுரையீரல் முக்கிய ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட முக்கியக் காரணாகி வருகிறது.
நீண்ட நேரம் அசையாமல் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால் காலில் உள்ள ரத்த நாளத்தில் ரத்தக் கட்டு ஏற்பட வாய்ப்பு அதிகம். இந்த ரத்தக் கட்டு காலிலிருந்து நகர்ந்து நுரையீரலுக்கு இடம்பெயரும் தன்மை கொண்டது. இதற்கு venous thromboembolism என்று பெயர்.
இதனால் நெஞ்சு வலி, மூச்சு விடுதலில் கடும் சிரமம், இருதய துடிப்பு அதிகரித்தல், மூச்சிறைத்தல் ஆகியவை ஏற்படுகிறது. பல்மனரி எம்பாலிஸம் என்ற நிலை தீவிரமடைந்தால் ரத்த அழுத்தம் கடுமையாக குறையவும் வாய்ப்புள்ளது, மேலும் உடனடியான மரணமும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இந்த ஆய்வாளர்கள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பெட்டி முன்பு அமர்வோரை 2.5 மணிக்கு குறைவாக டிவி பார்ப்பவர்கள், 2.5 மணி முதல் 4.9 மணிநேரம் டிவி பார்ப்பவர்கள் மற்றும் 5 அல்லது அதற்கு மேலான மணி நேரங்கல் டிவி பார்ப்பவர்கள் என்று பிரித்து ஆய்வு மேற்கொண்டனர்.
நாளொன்றுக்கு சராசரியாக 5 மணி நேரங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரங்கள் டிவி பார்ப்பவர்களுக்கு மரண அபாயம் உள்ள நுரையீரல் அடைப்பு ஏற்படும் ரிஸ்க் இருமடங்கு இருப்பதாக இந்த ஆய்வில் தெரிய வந்தது. அதாவது நாளொன்று இரண்டரை மணி நேரங்கள் டிவி பார்ப்பவர்களுக்கு ஏற்படும் ஆபத்தை விட 5 மணி நேரம் டிவி பார்ப்பவர்களுக்கு ஆபத்து அதிகம்.
இந்த ஆய்வை நடத்திய குழுவை சேர்ந்த ஷிராகவா என்பவர் கூறும்போது, “நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தல் என்பது நுரையீரல் ரத்தக்குழாய் அடைப்பு என்ற ஆபத்து ஏற்பட்டு உயிருக்கும் கேடு விளைவிக்கும்.
எனவே நுரையீரல் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படாமல் தடுக்க, இடையிடையே எழுந்து, நடந்து, வேறு வேலைகளில் ஈடுபடுவதோடு, இடைவேளை விட்டு பார்ப்பது நல்லது. பொதுவாக நாம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஆர்வமாகப் பார்க்கும் போது தண்ணீர் கூட அருந்தாமல் இருப்போம், எனவே இடையிடையே எழுந்து சென்று தண்ணீர் அருந்துவதும் ஒரு தேவையான இடைவேளையை அளிக்கும்என்று ஆலோசனை வழங்குகிறார்.
அதே போல் கணினி விளையாட்டுகளில் நீண்ட நேரம் ஈடுபடுவதும் நுரையீரல் ரத்தக் குழாய் அடைப்பு ஏற்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது என்று கூறும் இந்த ஆய்வு, ஸ்மார்ட் போன்களால் இத்தகைய ஆபத்து இருப்பது பற்றி இன்னமும் தங்களுக்கு எதுவும் தெரியவரவில்லை என்று தெரிவித்தனர்.

இந்தக் கண்டுபிடிப்புகள், ஐரோப்பிய இருதயவியல் அமைப்பிடம் வழங்கப்பட்டுள்ளது.

கருத்துக் கணிப்பை வைத்து நாங்கள் அரசியல் நடத்துவதில்லை!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

சென்னை விமான நிலையத்தில் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ''பல கோடி மதிப்புள்ள நூற்றுக்கணக்கான அறிவிப்புகளை 110 விதியை பயன்படுத்தி தொடர்ந்து சட்டமன்றத்திலே முதல்வர் படித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இது குறித்து என்னென்ன பணிகளை நடத்தி முடித்திருக்கிறோம்.கருத்துக் கணிப்பு என்பது பல கட்சிகளுக்கு, ஏன் எங்களுக்கே பல நேரங்களில் பாதகமாக வந்திருக்கிறது. சாதகமாக வந்திருக்கிறது. எனவே அதை வைத்து நாங்கள் இன்றைக்கு அரசியல் நடத்துவதில்லை' என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.
என்னென்ன பணிகள் என்ன சூழ்நிலைகளில் இருக்கிறது என்பதையெல்லாம் விளக்கி வெள்ளை அறிக்கை ஒன்றை சட்டமன்றத்தில் வைக்க வேண்டுமென்று சொல்லி பல முறை திமுக மட்டுமல்ல பல்வேறு கட்சியினுடைய தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தியிருக்கிறார்கள்.
ஆனால், இதுவரைக்கும் எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை. ஆகவே மக்களை ஏமாற்றிட, மக்களை திசைதிருப்புகிற நிலையில் தான் முதல்வர் 110 அறிக்கையை வெளியிடப்படுகிறார்.
சமீபத்தில் வெளியான ஒரு கருத்து கணிப்பைப் பற்றி பலரும் கேட்கிறார்கள். அதாவது கருத்து கணிப்பு என்பது பல கட்சிகளுக்கு ஏன் எங்களுக்கே பல நேரங்களில் பாதகமாக வந்திருக்கிறது. சாதகமாக வந்திருக்கிறது. எனவே அதை வைத்து நாங்கள் இன்றைக்கு அரசியல் நடத்துவதில்லை. எனவே எங்களை பொறுத்தவரையில் கட்சிப் பணி, மக்களை சந்திக்கிற பணி தொடர்ந்து கொண்டே இருக்கிறோம். ஆகையால் உங்கள் மற்ற யூகத்துக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல இயலாது.

தற்போது சட்டமன்றம் என்பது ஜெயலலிதாவினுடைய புகழ் பாடுகிற, அர்ச்சனை செய்கிற மன்றமாக தான் நடந்து கொண்டிருக்கிறது'' என்று ஸ்டாலின் பேசினார்.

பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தமிழில் பதில் அளிக்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தமிழில் பதில் அளிக்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு

“தமிழ் நாட்டின் ஆட்சி மொழி தமிழ். ஆனால்முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு தமிழில் அனுப்பப்படும் கோரிக்கைகளுக்கும், புகார்களுக்கும் அதிகமான நேரங்களில் ஆங்கிலத்தில் பதில் வருகின்றது. பல்வேறு துறைகளும், மாவட்ட நிர்வாகமும் ஆங்கிலத்தை பயன்படுத்தியே பதில் தருகின்றனர். தேவைப்படும்போது ஆங்கிலத்தை பயன்படுத்துவதில் தவறில்லை. எப்போதும் என்றால் பாமர மக்கள் இதை எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்? ஆகவே,மான்புமிகு முதல்வர் அவர்கள் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற கொள்கை முழக்கத்திற்கேற்ப அனைத்து துறைகளிலும் இயன்றளவு தமிழை பயன்படுத்த உத்தரவிட வேண்டும்” என நான் தமிழக அரசுக்கு கோரிக்கை (கோரிக்கை எண்: 2015/834893QU, தேதி: 12/07/2015) விடுத்தேன்
நான் விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு “மனுதாரின் கோரிக்கை சம்மந்தமாக அனைத்து துறை அலுவலா்களுக்கும் வாராந்தோறும் திங்கள் கிழமை நடைபெறும் மாவட்ட ஆட்சியரின் பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தல் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தமிழில் பதில் அளிக்க நடவடிக்கை எடுக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இனிவரும் காலங்களில் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தமிழில் பதில் அளிக்கப்படும் எனவும் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது (ந.க.எண்.ஐ2-1000-15 நாள்.16.7.2015)” என பதில் அளித்துள்ளது.