Sunday 29 June 2014

குர்ஆனின் பெயர்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

குர்ஆனின் பெயர்கள் 
அல் கிதாப் (திருவேதம்) 2:2
அல் பயான் (தெளிவான விளக்கம்) 3:138
அல் புர்ஹான் (உறுதியான அத்தாட்சி) 4:174அல்ஃபுர்கான் 2:185
அத் திக்ரு (ஞானம் நிறைந்தது நினைவூட்டுவது) 3:58
அந் நூர் (பேரொளி) 4:174
அல் ஹக்கு (மெய்யானது) 2:91
அல் கரீம் (கண்ணியமானது) 56:77
அல் முபீன் (தெளிவானது) 5:17
10 
அல் ஹகீம் (ஞானம் மிக்கது) 36:2
11 
அல் அஜீஸ் (சங்கையானது வல்லமையுடையது) 41:41
12 
அல் ஹுதா (நேர் வழிகாட்டி) 3:138
13 
அர் ரஹ்மத் (அருள்) 6:157
14 
அஷ் ஷிஃபா (அருமருந்து) 10:57
15 
அல் மவ்இளத் (நற்போதனை) 3:138
16 
அல் ஹிக்மத் (ஞானம் நிறைந்தது) 2:151
17 
அல் முஹைமின் (பாதுகாப்பது) 5:48
18 
அல் கய்யிம் (உறுதியானது நிலைபெற்றது) 18:1-2
19 
அந் நிஃமத் (அருட்கொடை) 93:11
20 
அர் ரூஹ் (ஆன்மா) 42:52
21 
அத் தன்ஸீல் (இறக்கியருளப் பெற்றது) 20:4
22 
அல் ஹுக்மு (சட்ட திட்டங்கள்) 13:37
23 
அல் முபாரக் (நல்லாசிகள்) 6:92
24 
அல் முஸத்திக் (முன்னர் வந்த இறை வேதங்களைமெய்ப்பிப்பது) 6:92
25 
அல் பஷீர் (நன்மாராயங் கூறுவது) 41:4
26 
அந் நதீர் (அச்சமூட்டி எச்சரிப்பது) 41:4
27 
அல் முதஹ்ஹர் (பரிசுத்தமானது) 80:14
28 
அல் முகர்ராமா (சங்கையானது) 80:13
29 
அல் மஜீத் (கண்ணியம் மிக்கது) 50:1
30 
அல் அரபிய்யு (அரபி மொழியிலுள்ளது) 12:2
31 
அல் மர்ஃபூஆ (உயர்வானது) 80:14
32 
அல் அஜப் (ஆச்சரியமானது) 72:1
33 
அல் பஸாயிர் (அறிவொளி) 7:203
34 
அல் திக்ரா (நல்லுபபேதசம்) 7:2
35 
ஹப்லுல்லாஹ் (அல்லாஹ்வின் கயிறு) 3:103

Sunday 1 June 2014

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்க"மாம்".....!!! வாசித்து தெரிந்து கொள்ளவும்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,




பெண்களை அடிமைப் படுத்துவதாகவும், தீவிரவாதத்தை போதிப்பதாகவும் கடந்த 2 தசாப்தங்களாக விமர்சிக்கப்படும் ஒரு மதத்தை (இஸ்லாத்தை) இன்று உலகெங்கும் உள்ள பலரும் ஏற்றுக்கொள்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும். அது ஏன்??? என்ற கேள்விக்கு விடை தேடினால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்ற நோக்கில் இந்த கட்டுரை எழுதப்படுகிறது.
கட்டுரையை ஆரம்பிக்க முன்னர், இந்த போட்டோவில் இலக்கமிடப்பட்டுள்ள பெண்களை யார் என்று அறிந்துகொள்வோம். இன் ஷா அள்ளாஹ்.
01: யுவான் ரிட்லி எனும் செய்தியாளர். இவர் ஆப்கானை அமெரிக்கா ஆக்கிரமித்த போது, செய்தி சேகரிப்பதற்காக மிகத்தந்திரமாக ஆப்கானுக்குள் ஊடுரிவிய போது தலிபாஙளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர். தலிபாஙளின் ஒழுக்கத்தை நேரில் கண்ட இவர், தலிபாஙளை பற்றி மீடியா சொல்லும் பொய்களை அம்பலப்படுத்திவிட்டு, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்...
02: ஏறத்தாழ 10 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்களை கொலை செய்த அமெரிக்க முன்னாள் அதிபரின் மகள் "ஜென்னா புஷ் ஹாகர்"...
**
இக்கட்டுரையை பதிவு செய்ததன் பின்னர் இவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக யூடியூப் பொய்யான ஒரு வீடியோவை வெளியிட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்தும் வரை சகோ. இதுவிஷயத்தில் கவனமாக இருக்கவும்.
03: பிரிட்டனின் பிரபல மொடல் அழகியாக இருந்த "காமில்லா லேலன்ட்"...
04: இவரும் பிரிட்டனின் பிரபல மொடல் அழகியாக இருந்தவர். "கார்லீ வட்ஸ்"...
05: பிரான்ஸ் நாட்டு பிரபல பாடகி "டயம் மெலானீ"...
06: நேபாள முன்னணி நடிகை "பூஜா லாமா"...
07: ரஷ்யாவைச்சேர்ந்த மொடல் அழகி "மஷா அலலிகினா"...
08: முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி ப்ளயரின் மைத்துனி "லாரன் பூத்"...
09: இப்போது பரபரப்பாக பேசப்படும் இந்திய நடிகை மோனிகா எனும் "ரஹீமா"...
இப்போது கட்டுரைக்கு வருவோம்....
கடந்த பல வருடங்களாக இஸ்லாம் பற்றி விமர்சிக்காத ஊடகங்களே இல்லையென சொல்லமுடியும். அந்தளவுக்கு அவதூறுகளை சந்தித்தும், முன்னேறி வருகிறது.
பொதுவாக இஸ்லாம் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு என்னவெனில், அது பெண்கள் பற்றிய தலைப்பு தான். அதோடு சேர்ந்து தீவிரவாதம் என்ற சொல்லையும் சேர்த்துக்கொள்வதுண்டு.
முஹம்மது நபி(ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்னர்,
பெண் குழந்தைகள் பிறந்ததும் உயிரோடு புதைத்து கொலை செய்யும் இழிவான நிலையில் இருந்த அந்த மக்களை திருத்தியது "இந்த இஸ்லாம்" தான். அவ்வாறு கொலை செய்தால் தலையை வெட்டி மரண தண்டனை என்று சட்டமும் கொண்டு வந்தது.
அக்கணமே இக்கொலைகள் முழுமையாக நிறுத்தப்பட்டன. (ஆனால் இன்று இந்தியாவில் அது நடக்கிறது.)
எனவே இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறது என்ற பேச்சுக்கு இஸ்லாத்தின் ஆரம்ப சட்டமே மரண அடி கொடுத்துவிட்டது.
இன்றைய நாகரீகவாதிகள்! என்று தம்மை சொல்லிக்கொள்வோர் இஸ்லாத்தின் வளர்ச்சி மீதுள்ள பொறாமையை தாங்க முடியாமல், பெண்களை அடிமைப்படுத்துகிறது என்ற அதே தலைப்பை தான் எடுத்து வைக்கிறார்கள்.
முக்கியமாக முஸ்லிம் பெண்களின் ஆடைகளை விமர்சித்து, சுதந்திரம் பெற்றுத்தருவதாக கூப்பாடு போடுகிறார்கள். (முகத்தை மூடுமாறு இஸ்லாம் சொல்லவில்லை. அது அரேபிய கலாச்சாரம் மட்டுமே)
ஆனால் அவர்கள் சுதந்திரமாக கருதும் நாடுகளில் தானே உலகில் அதிகமாக பெண்கள் மீது வன்முறை நடக்கின்றன?
‪#‎ஆணும்‬ பெண்ணும் சமன் என்ற ஒரு கோட்பாட்டை சொல்கிறார்கள். ஆனால், அது முற்றிலும் தவறாகும். ஆணும் பெண்ணும் சமன் எனில்....
* உடலில் ஒரு கட்டை கால் சட்டையை மட்டும் அணிந்துகொண்டு ஒரு ஆணுக்கு வெளியில் வர முடியும். ஆனால், ஒரு பெண்ணுக்கு அப்படி அணிந்துகொண்டு வீட்டில் உள்ள குடும்பத்தவர்களின் முன்னால் கூட வரமுடியாது என்பதை உணர வேண்டும்.
(முடிந்தால் இதை சவாலாக ஏற்று செய்துகாட்டட்டும். எனவே ஆணும் பெண்ணும் சமன் அல்ல என்று தெளிவாக தெரிகிறது.)
இப்படி "ஆணும் பெண்ணும் சமன்" என்ற ஒரு கபடத்தனமான கருத்தை பரப்புவதன் மூலம், ஒழுக்கமாக வாழ்ந்த பெண் இனத்தை‪#‎அவிழ்த்துக்காட்டும்‬ நிலைக்கு கொண்டுவந்தவர்கள் யாரெனில் இந்த நவ நாகரீகவாதிகள்! தான்.
பெண்கள் ஒழுக்கமாக இருந்தால் தனது ‪#‎வியாபாரத்திற்கு‬ பாவிக்க முடியாது என்பதால், அவர்களை நாகரீக பெண்களாக உசுப்பேற்றிவிட்டு, அவிழ்த்துக்காட்ட வைத்து, சினிமா வியாபாரத்தில் விற்றார்கள். இன்னும் அனைத்து விளம்பரங்களிலும் பெண்களை காட்டி விற்கிறார்கள். ஒரு பொருளை விளம்பரப்படுத்த எதற்கு பெண்ணை காட்ட வேண்டும்???
இது தான் நவநாகரீகவாதிகள்! பெண்களுக்கு கொடுக்கும் கண்ணியமா???
(இஸ்லாத்தின் பார்வையில் இது கூட விபச்சாரமே...)
நடிகைகளை வைத்து வியாபாரம் செய்துவிட்டு, அவர்கள் வயதானதும் கைவிட்டு விடுவதும், அவர்கள் அலைந்து திரிவதும் அடிக்கடி காணும் செய்திகள். இதற்கும் ‪#‎விபச்சார‬ விடுதி நடத்துவோருக்கும் என்ன வித்தியாசம்??? இரண்டிலும் பெண்களின் இளமையை வைத்து தானே வியாபாரம் நடக்கிறது???
முடியுமெனில் ‪#‎கிழவிகளை‬ மட்டும் வைத்து விளம்பரமும் சினிமாவும் எடுத்து வென்று காட்டுங்கள். அப்போது ஆணும் பெண்ணும் சமன் என்று நாம் ஏற்றுக்கொள்கிறோம்.
இந்தளவுக்கு இஸ்லாம் மீது அவதூறு பரப்பி, போதாக்குறைக்கு‪#‎வாளால்‬ பரப்பியதாகவும் புரளி கிளப்பி விட்டு அதன் வளர்ச்சியை தடுக்க நினைப்பவர்களுக்கு உண்மையில் ‪#‎வெட்கம்‬ இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.
* இவ்வாறு அவதூற்றுக்கு உள்ளாகியும், இதே மதத்தை பெண்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால், ‪#‎கொஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞம்‬ நிதானமாக யோசிக்க வேண்டும்.
அவர்கள் யாரையும் கிறிஸ்தவ திருச்சபைகள் விலைக்கு வாங்குவது போல இஸ்லாம் வாங்கவில்லை.
அவர்கள் அனைவரும் நன்கு படித்தவர்கள், ஏராளம் புகழோடும் செல்வாக்கோடும், வசதியோடும் வாழ்பவர்கள். இப்படிப்பட்ட பெண்கள் இஸ்லாத்தை ஏற்கிறார்கள் எனில்.....
இஸ்லாத்தின் எதிரிகளால் வர்ணிக்கப்பட்டவாறு இஸ்லாம் பெண்களை அடிமைபடுத்தவில்லை என்று #10000000% உறுதியாகிறது.
தன் குடும்ப பெண்களுக்கான (தாய், மனைவி, மகள், சகோதரி) செலவுகளுக்கு ஆண்கள் தான் பொறுப்பாளிகள் என்று கூறி பெண்களை கண்ணியப்படுத்திய மதம் உலகில் ‪#‎இஸ்லாம்‬ மட்டுமே....
எதிரிகள் என்ன தான் சூழ்ச்சி செய்தாலும் அவர்களால் இறைவனை வெல்லவே முடியாது. தாயை விட அள்ளாஹ் 70 மடங்கு அன்பு கொண்டவன் என்பதால் தான், இஸ்லாத்தின் எதிரிகளை தண்டிக்காமல் அவர்கள் உண்மையை ஏற்று திருந்தும் வரை இன்னும் விட்டு வைத்துள்ளான்.
[அல் குர்'ஆன் 14:42]
‪#‎மேலும்‬ அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை) நாளுக்காகத்தான்.
எனவே இவர்கள் திருந்துவதற்கான அவகாசத்தை இறைவன் வழங்கியே இருக்கிறான்.
இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாம் மீது வேண்டுமென்றே குரோதம் கொண்டு இஸ்லாத்தை அழிக்க நினைக்கிறார்கள்.
உலகின் அனைத்து மதங்களும் தினமும் வீழ்ச்சியடைந்து கொண்டு இருப்பதாக ‪#‎புள்ளிவிவரங்கள்‬ தெரிவிக்கின்றன. அதேவேளை இஸ்லாம் வளர்ச்சியடைவதாக டீவீ செய்திகள் கூட சொல்கின்றன.
இலங்கையில் இஸ்லாம் மதத்திற்கு இந்துக்கள் பெருமளவில் மாறுவதாகவும், அதை சட்ட ரீதியாக தடை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்து இந்து அமைப்பொன்று அண்மையில் கொழும்பில் ஒரு ஆர்ப்பாட்டம் செய்தது. அதில் வேடிக்கையாக ‪#‎பொதுபலசேனா‬ எனும் பெளத்த அமைப்பும் இணைந்துகொண்டது.
********
இதன் மூலம் உலகம் உணரும் உண்மை என்னவெனில்,
தமது மதங்களில் உள்ள பிழையான கருதுகோள்களை சகிக்க முடியாமல் அதிலிருந்து வெளியேறி உண்மை மதமான இஸ்லாத்தை மக்கள் ஏற்றுக்கொள்கின்றனர் என்று தெளிவாக தெரிகிறது.
[அல் குர்'ஆன் 9:32]
‪#‎தம்‬ வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.
யா அள்ளாஹ்!
உலகெங்கும் இஸ்லாத்தை விரிவடைய செய்வாயாக! ஆமீன்.
என் கருத்துக்களில் தவறேதும் இருந்தால் சுட்டிக்காட்டவும்.
மாற்று மத நண்பர்களின் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.
ஜஸாக்கள்ளாஹ் க்ஹைர்.
வஸ்ஸலாம்.
.

Monday 26 May 2014

துபாய் மண்டலத்தின் சார்பாக மண்டல நிர்வாகிகளுக்கான நல் ஒழுக்க பயிற்சி முகாம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நிர்வாகிகளுக்கான தர்பியா முகாம்
தமுமுக துபாய் மண்டலத்தின் சார்பாக மண்டல நிர்வாகிகளுக்கான நல் ஒழுக்க பயிற்சி முகாம் 25:5:2014 ஞாயிற்று கிழமை மாலை 4:30 மணியளவில் தமுமுக தேரா மர்கசில் நடைப்பெற்றது,சகோதரர் அபூதர் அவர்களும்,  இப்ராஹீம் அவர்களும், சக நிர்வாகிகளுக்கு வகுப்பெடுத்தார்கள்,எல்லாப் புகழும் இறைவனுக்கே!
யு.எ.இ-யில் உங்கள் இடத்திலும் நடத்த வேண்டும் என விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும் 
என்றும்
சமுதாய பணியில் தமுமுக துபாய்
Like ·  · 

Sunday 25 May 2014

துபாயில் இலவச வாகன பரிசோதனை முகாம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

துபாய் : துபாயில் இலவச வாகன பரிசோதனை முகாம் 25.05.2014 முதல் 05.06.2014  வரை நடைபெற இருக்கிறது என அப்கிரேட் குரூப்பின் மேலாணமை இயக்குநர் எம்.எஸ். ஹமீது தெரிவித்துள்ளார்.

துபாயில் கோடைக்காலம் துவங்கி விட்டதையொட்டி வாகனம் மற்றும் வாகனம் ஓட்டுநர்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு இந்த பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது.

இப்பரிசோதனை முகாமில் டயர், ஏசி, பிரேக், பேட்டரி உள்ளிட்டவைகள் முக்கியமாக பரிசோதிக்கப்பட்டு தகுதி வாய்ந்த டெக்னீசியன்கள் உரிய ஆலோசனை வழங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன பரிசோதனை முகாமில் பங்கேற்க விரும்புவர்கள் 050 269 53 53 எனும் அலைபேசி எண்ணில் முன் பதிவு செய்து தங்களது வருகையினை தெரியப்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அமீரகத்தில் கோடைக்காலத்தில் நடைபெறும் வாகன விபத்துகள் அதிக அளவில் டயர்களின் முறையான பராமரிப்பின்மை காரணமாக நடைபெறுவதால் பிரத்யேக இம்முகாமிற்கு அப்கிரேட் குழுமம் ஏற்பாடு செய்துள்ளது.








டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்..!

வாகனங்களின் பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிப்பது டயர்கள் என்று கூறினால்மிகையாதுபாதுகாப்பு மட்டுமின்றி மைலேஜிலும் இவற்றின் பங்கு மகத்தானதுஎனவே,வாகனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவுடைய டயரை பொருத்துவதே சாலச் சிறந்தது.ஒவ்வொரு டயரிலும் இதற்கான விபரங்கள் குறியீடு மூலம் கொடுக்கப்பட்டிருக்கும்எனவே,டயர் வாங்கும்போது அந்த குறியீடுகளை பார்த்து தெரிந்து கொண்டு வாங்கினால்உங்கள்வாகனத்துக்கு சிறந்த டயரை எளிதாக தேர்வு செய்யலாம்.

டயர்களின் பக்கவாட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் குறியீடுகளும் அதன் விபரங்களையும்காணலாம்உதாரணமாக, (35PSI)MAX PRESS என்று ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டிருக்கும்குறியீட்டு எழுத்துக்கள் அந்த டயரின் அதிகபட்ச காற்றின் அழுத்த அளவை குறிக்கும்அதற்குமேல் காற்றின் அழுத்தம் இருக்கக் கூடாதுஅடுத்ததாக, 215/65R14 89H M+S என்றுகொடுக்கப்பட்டிருந்தால்அதில், 215 என்பது அந்த டயரின் அகல அளவு மில்லிமீட்டரில்குறிக்கப்படுகிறது.

அடுத்து 65 என்று குறிக்கப்பட்டிருக்கும் எண்கள் அந்த டயரின் பக்கவாட்டு உயரத்தை குறிக்கும். R என்ற ஆங்கில எழுத்து ரேடியல் டயர் என்பதை குறிக்கும்இதுதவிரசாதாரண டயர்கள் Aமற்றும் B ஆகிய ஆங்கில எழுத்துக்களில் குறிக்கப்பட்டிருக்கும். 14 என்ற எண்கள் டயரின் உள்விட்டம் அல்லது ரிம் அளவை குறிக்கிறதுஅடுத்து 89 என்று குறிக்கப்பட்டிருந்தால்அந்த டயர்அதிகபட்சம் 580 கிலோ எடையை சுமக்கும் திறன் கொண்டதுஅடுத்து இந்த வரிசையில்கடைசியில் குறிக்கப்பட்டிருக்கும் ஆங்கில எழுத்து அந்த டயர் அதிகபட்சமாக செல்லும்வேகத்தை குறிக்கும்.

உதாரணமாக, H என்ற ஆங்கில எழுத்து குறிக்கப்பட்டிருந்தால் அந்த டயர் அதிகபட்சம் மணிக்கு210கிமீ வேகத்தில் செல்வதற்கு லாயக்கானது என்று அர்த்தம்.(டயர் வேக அளவின் குறியீட்டுஎழுத்துக்கள் விபரம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறதுமேலும், M+S என்று குறிக்கப்பட்டிருந்தால்,சேறு மற்றும் பனி படர்ந்த சாலைகளில் செல்ல ஏதுவானது என்றும்அனைத்து காலநிலைகளுக்கும் ஏற்றது என்று பொருள் கொள்ளலாம்இதேபோன்றுஓல்டு ஸ்டாக் டயரைகண்டுபிடிப்பதற்கும் வழி இருக்கிறது.

டயரில் ஆங்கிலத்தில் DOT GHYT 1212 என்று குறிக்கப்பட்டிருந்தால் அதில்கடைசியில் வரும்முதல் 12 என்ற எண்கள் 12வது வாரத்தையும்இரண்டாவது 12 எண்கள் 2012ம் ஆண்டையும்குறிக்கும்அதாவதுமார்ச் மாதம் 2012ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட டயர் என்று அர்த்தம்மேலும்,இதில் GHYT என்ற எழுத்தில் முதல் இரண்டு ஆங்கில எழுத்துக்கள் தயாரிப்பு நிறுவனத்தின்குறியீடுஅடுத்த இரு எழுத்துக்கள் அந்த டயரின் தயாரிப்பு குறியீடுஎதிர்காலத்தில் டயரில்ஏதாவது பிரச்னை ஏற்பட்டால்குறிப்பிட்ட இந்த எழுத்துக்களை அடிப்படையாக கொண்டுதிரும்ப பெறப்படும்.

டயரின் ஆங்கில எழுத்து குறியீடும் அதன் அதிகபட்ச வேக திறன் விபரம்:

P-150 Kmph
Q-160 Kmph
R-170 Kmph
S-180 Kmph
T - 190 Kmph
H - 210 Kmph
V - 240 Kmph
W - 270 Kmph
Y - 300 Kmph
ZR - over 240 Kmph

பின் குறிப்பு)
டயரில் காற்று இருகின்றதா என்று பார்க்கவும்,,,,





Subject:
டயர்கள் பற்றிய தவறான எண்ணங்களும், அதன் உண்மைகளும்...!!



வாகனங்களின் மைலேஜ், நிலைத்தன்மை போன்றவற்றை அளிப்பதில் டயர்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால், டயர்களை பராமரிப்பதில் வாகன உரிமையாளர்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டியது அவசியம்.

இந்த நிலையில், டயர்களை பராமரிப்பதிலும், பாதுகாப்பு சோதனைகள் பற்றியும் பலர் தவறான சில எண்ணங்களை வைத்துள்ளனர். காலங்காலமாக இதனை நம்பியும் சில தவறுகளை செய்கின்றனர். அந்த தவறான எண்ணங்களையும், அதன் உண்மையான பயன்பாடு மற்றும் காரணத்தையும் இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

முதலில் தவறான எண்ணத்தையும், அதன் உண்மை அல்லது தீர்வை தொடர்ந்து கொடுத்துள்ளோம். இது நிச்சயம் பயனுள்ளதாக அமையும்.

காற்றின் அழுத்தம்
டயர்களின் பக்கவாட்டில் எழுதப்பட்டிருக்கும் பிஎஸ்ஐ எனப்படும் டயர்களுக்கான காற்றின் அளவையே சிலர் சரியானதாக கருதுகின்றனர். ஆனால், அது சரியானதா

சரி எது?

டயர்களின் பக்கவாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் பிஎஸ்ஐ அளவு டயரின் அதிகப்பட்ச காற்றின் அழுத்த்தை தாங்கும் திறனையே குறிக்கிறது. எனவே, உங்களது வாகனத்துககான பரிந்துரைக்கப்பட்ட அளவை தெரிந்து கொள்ள காரின் கதவின் உட்புறத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பரிந்துரைக்கப்பட்ட அளவை பின்பற்றி காற்று நிரப்புங்கள்.


வால்வு மூடி

ட்யூபிலிருந்து காற்று வெளியேறுவதை வால்வு மூடி தடுக்கும் என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது.


சரி எது?

ஆனால், வால்வு மூடி காற்று வெளியேறுவதை தடுக்காது. தூசி, தண்ணீர், சேறு உள்ளிட்டவை வால்வுக்குள் புகாதவாறு தடுப்பதற்காகவே மூடி கொடுக்கப்படுகிறது.


அதிக கிரிப்புக்கு...

சிலர் டயரில் காற்றழுத்தம் குறைவாக இருந்தால் அதிக கிரிப் கிடைக்கும் என்று கருதுகின்றனர்.


சரி எது?

காற்றழுத்தம் குறைவாக இருக்கும்போது டயரில் இருக்கும் பட்டன்கள் தேய்மானம் அதிகரிக்கும். மேலும், பட்டன்களுக்கு இடையிலான இடைவெளி குறையும் என்பதோடு, தண்ணீர் எளிதாக வெளியேறாது என்பதால், அதிகம் வழுக்கும் வாய்ப்பு உள்ளது. மைலேஜும் குறையும்.


கோடை காலத்தில்...

கோடை காலத்தில் டயரில் இருக்கும் காற்று விரிவடையும் என்பதால் சில பிஎஸ்ஐ வரை குறைவாக காற்றழுத்தம் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.


சரி எது?

டயரில் காற்றழுத்தம் குறைவாக இருக்கும்போது டயரில் அதிக உராய்வு காரணமாக வெப்பம் அதிகரிக்கும். இதனால், டயரின் சுவர்களில் பாதிப்பு ஏற்படும். கோடை காலங்களிலும் பரிந்துரைக்கப்பட்ட பிஎஸ்ஐ அளவிலேயே காற்று நிரப்புங்கள்.


குளிர்காலத்தில்...

மழை அல்லது குளிர் காலங்களில் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட டயர்களில் குறைவான காற்றழுத்தம் இருந்தால், சிறப்பான கையாளுமை கிடைக்கும் என்று கருத்து நிலவுகிறது


சரி எது?

மழை அல்லது குளிர் காலங்களில் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக காற்றழுத்தம் இருப்பது நல்லது. வெப்ப நிலை 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையும்போது 2 பிஎஸ்ஐ வரை காற்றழுத்தத்தை கூடுதலாக வைக்க வேண்டும். இல்லையெனில் டயரின் ஆயுட்காலத்தை பாதிக்கும் என்பதோடு, பாதுகாப்பு பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம்.


டிரெட் அமைப்பு

உலர்வான தரைகளில் சிறப்பான கையாளுமைக்கு டிரெட் அமைப்பு மிக முக்கியமானதாக பலர் கருதுகின்றனர்.


சரி எது?

டிரெட் அமைப்பை வைத்து காரின் கையாளுமையை நிர்ணயிப்பது கடினம். அதன் முக்கிய பயன்பாடு ஈரப்பதம் மிகுந்த சாலைகளில் செல்லும்போது, டிரெட்டுக்கு இடையிலான நீரை வெளியேற்றுவதற்காகவே கொடுக்கப்படுகிறது.


டயர் தரம்

கைகளை வைத்து அழுத்தி பார்த்தே டயர் கடினமான கட்டமைப்பு கொண்டதா அல்லது மென்மையான கட்டமைப்பு கொண்டதாக என்று தெரிந்துகொள்ளலாம் என்பது பலரின் எண்ணம்.


சரி எது?

டயரின் மேற்புறத்தை வைத்து கடிமானதா அல்லது மென்மையானதா என்று கூற முடியாது. ஏனெனில், டயருக்குள் பல்வேறு அடுக்குகள் கொண்டதாக வடிவமைக்கப்படுகிறது.


குளிர்கால டயர்கள்

பனிப்பொழிவு இல்லையெனில், பிரத்யேக அமைப்பு கொண்ட குளிர்கால டயர்கள் தேவையில்லை என்று பலர் கருதுகின்றனர்.


சரி எது?

பனிபடர்ந்த சாலைகள், பனிப்பொழிவு மிகுந்த நேரங்களில் மட்டுமே பயன்படும் என்பது மடமை. வெப்பநிலை 10 டிகிரிக்கும் குறைவாக இருக்கும்போது குளிர்கால டயர்களை பயன்படுத்துவதே நல்லது. அதன் டிரெட் அமைப்பும், விசேஷ ரப்பரும் சிறப்பான ரோடு கிரிப்பை தரும்.


ரேஸ் டயர்

ரேஸ் கார் மற்றும் பைக்குகளில் பயன்படுத்தப்படும் டயர்களில் டிரெட் இல்லாததால் அதிவேகத்தில் செல்ல முடியும் என்ற நினைப்பு இருக்கிறது.


சரி எது?

ஃபார்முலா- 1 மற்றும் மோட்டோஜீபி பந்தயங்களுக்கான கார் மற்றும் பைக்குகளில் டிரெட் இல்லாத டயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை உலர்ந்த தரையில் சிறப்பான கையாளுமையை கொடுக்கும் என்பதாலேயே பயன்படுத்தப்படுகின்றன.

 பராமரிப்பு

சர்வீஸ் விடும்போது காற்றின் அழுத்தத்தை பார்த்தால் போதுமானது என்று சிலர் நினைக்கின்றனர்.


சரி எது?

உருளும்போது டயர்களில் இருந்து சிறிய அளவிலான காற்று வெளியேறும். எனவே, வாரம் ஒரு முறை டயர்களில் காற்றின் அழுத்தத்தை சரிபார்ப்பது நல்லது.




 நன்றி : தட்ஸ் தமிழ்