Wednesday 13 March 2013

முஸ்லிம்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதன் காரணங்கள்?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

முஸ்லிம்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதன் காரணங்கள்?! நமது நாட்டின் அதிகார மையங்களில் உள்ள ஆதிக்க சக்திகளின் பட்டியல் :- 

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 3300 பேர். அதில் பிராமணர்கள் 2376 பேர்!

உச்சநீதிமன்ற நீதிபதிகள் 16 பேர். அதில் பிராமணர்கள் 9 பேர்!

உயர்நீதிமன்ற நீதிபதிகள் 330 பேர். அதில் பிராமணர்கள் 166 பேர்!

மாவட்ட நீதிபதிகள் 438 பேர். அதில் பிராமணர்கள் 250 பேர்!

பாராளுமன்ற உறுப்பினர்கள் 534 பேர். அதில் பிராமணர்கள் 190 பேர்!

ராஜ்யசபா உறுப்பினர்கள் 244 பேர். அதில் பிராமணர்கள் 89 பேர்!

ஆளுனர்கள் 30 பேர். அதில் பிராமணர்கள் 13 பேர்!
வெளிநாட்டு தூதர்கள் 140 பேர். அதில் பிராமணர்கள் 58 பேர்!

பல்கலைகழக துணைவேந்தர்கள் 98 பேர். அதில் பிராமணர்கள் 50 பேர்!

-குஷ்வந்த் சிங் (சண்டே 23-29 டிசம்பர் இதழ் -நூருல்லாஹ்)

எனவே தான் "ஜெயிலில் அடைப்பது முதல் தூக்கிலிடுவது வரை" இந்த நாட்டில் முஸ்லிம்கள் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர்

அப்சல் குருவின் கருணை மனுவை நிராகரித்த "ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் பிராமணர் தான்"

வேதனையான விஷயம் என்னவென்றால், பிரணாப் முகர்ஜி தேர்தலில் நின்று வெற்றிபெற்ற "முர்ஷிதாபாத்" தொகுதியில் 73% வாக்காளர்கள்,முஸ்லிம்கள். அப்சல் குருவை தூக்கிலேற்றிய பிரனாபின் மகன் தான், இப்போது முர்ஷிதாபாத் எம்பி.

மறுப்பு மீடியா செய்தி : http://www.facebook.com/maruppu.in

Saturday 2 March 2013

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

பரத நாட்டியம், கதகளி போன்ற கலைகளை இஸ்லாம் அனுமதிக்கிறதா?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,



கேள்வி : பெண்கள் பரத நாட்டியம், கதகளி, குச்சிப்புடி போன்ற பல வகையான கலைகளில் ஈடுபட இஸ்லாம் அனுமதிக்கிறதா? அனுமதிக்கவில்லை என்றால் நாட்டின் கலை கலாச்சாரம் எப்படி வளரும்? அதிகமான பேருக்கு வேலையில்லாமல் போய் விடுமே? விளக்கம் தரவும். -சுரேஷ், திருக்குறுங்குடி

பதில் : பெண்களைப் போகப் பொருளாக்கி ஆண்கள் ரசிக்கவே நீங்கள் குறிப்பிடும் நாட்டியங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன் பரிணாம வளர்ச்சியாக சினிமாவும், நீலப்படங்களும் உருவாகியுள்ளன. பெண்கள், கண்டவர்களும் ரசித்து, அனுபவிக்கும் போகப் பொருட்கள் என்பதை இஸ்லாம் அடியோடு மறுக்கிறது.

அங்க அசைவுகளையும், உடல் திரட்சியையும் மற்றவர்களுக்குக் காட்டுவது கலை என்றால் அந்தக் கலையில் இஸ்லாத்திற்கு உடன்பாடு கிடையாது.

வேலை வாய்ப்பு என்று வாதிடுவது என்றால் கள்ளச்சாராயம், சூதாட்டம், விபச்சாரம் அனைத்தையும் அனுமதிக்க வேண்டும். இதுவும் பலருக்கு வேலை வாய்ப்பாகத் தான் உள்ளது.



இறந்த மீன்களைச் சாப்பிடுவது ஏன்?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,



கேள்வி : இறந்த ஆடு, மாடு, கோழிகளை சாப்பிட மறுக்கும் நீங்கள் ஏன் இறந்த மீன்களை மட்டும் சாப்பிடு கிறீர்கள் என்று என் பக்கத்து வீட்டு அன்பர் கேட்கிறார்.-இராயப்பேட்டை அஸ்ரப் சென்னை.

பதில் : நீர் வாழ் உயிரினங்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

நீர் வாழ் உயிரினங்களுக்கு ஓடுகின்ற இரத்தம் கிடையாது. அதை உயிருடன் பிடித்து அறுத்தாலும் அதில் இரத்தம் சிறிதளவு கசியுமே தவிர இரத்தம் ஓடாது. வடிவது கூட இல்லை

இஸ்லாமிய நம்பிக்கையின் படி ஓட்டப்படும் இரத்தம் தடை செய்யப்பட்டுள்ளது. ஆடு, மாடு போன்ற உயிரினங்களை அறுக்கும் போது வெளியாகும் இரத்தத்தை உண்ணக் கூடாது.

ஆடு, மாடு போன்றவை உயிருடன் இருக்கும் போது அறுத்தால் மட்டுமே அதிருந்து இரத்தம் வெளிப்படும். செத்த பிறகு அறுத்தால் இரத்தம் வெளிப்படாது. எனவே அந்த இறைச்சியைச் சாப்பிடும் போது இரத்தத்தையும் சேர்த்து சாப்பிடும் நிலை ஏற்படுகிறது. இது மார்க்க ரீதியான காரணம்.

இரத்தத்தில் மனிதன் உட்கொள்ளக் கூடாத அணுக்களோ, கிருமிகளோ இருக்கலாம் என்பதற்காக இறைவன் இதைத் தடுத்திருக்கலாம். பிராணிகள் செத்தவுடன் இரத்தம் உறைய ஆரம்பித்து விடுகிறது. இரத்தத்தில் வாழ முடியாத கிருமிகள் மற்ற பகுதிகளுக்கும் பரவி விடுகிறது. இரத்தத்தைச் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் அனைத்தும் அந்த இறைச்சியைச் சாப்பிடும் போதும் ஏற்படும் என்பதை யாரும் மறுக்க முடியாது. மீன்களில் அந்த நிலைமை கிடையாது.

t-f] � f m �" pj s New Roman"'>தடை செய்யப்பட்ட பின் அக்காரியங்களை அவர்கள் செய்யவில்லை.

இது பக்தியின் அடிப்படையில் கற்பிக்கும் நியாயம் அல்ல. அறிவுப் பூர்வமாக ஏற்கத்தக்க காரணமே.

பான்பராக் விற்கக் கூடாது என்று ஒரு அரசு சட்டம் போடுகிறது. இந்தச் சட்டம் போடப்படுவதற்கு முன்னால் அதை விற்பனை செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. மாறாக, இச்சட்டம் அமுலுக்கு வந்த பிறகு விற்பனை செய்பவர்கள் தாம் குற்றம் சாட்டப்படுவார்கள்.

ஒரே ஒரு ஜோடி மட்டுமே உலகில் படைக்கப்பட்டிருந்த நிலையில் அண்ணன் தங்கைகளுக்கிடையே திருமணம் செய்து கொள்ள அல்லாஹ் அனுமதித்தான். மனிதகுலம் பல்கிப் பெருகிட இது தேவையாக இருந்தது. அவன் அனுமதித்த போது அவ்வாறு திருமணம் செய்தவர்கள் குற்றவாளிகளாக மாட்டார்கள்.

இன்று அவ்வாறு செய்வதைத் தடை செய்து விட்டான். அதை அனுமதிப்பதற்கு எந்த அவசியமும் இருக்கவில்லை. தடை செய்யப்பட்ட பிறகு அதைச் செய்தால் தான் அது குற்றமாகும்.

தடை செய்யப்படுவதற்கு முன் செய்யப்பட்ட காரியத்தை தடை செய்யப்பட்ட பின் முன் மாதிரியாகக் கொள்வதை அறிவுடைய யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

ஆதம், ஹவ்வா ஆகியோரின் புதல்வர்கள் தமது சகோதரிகளைத் திருமணம் செய்தது ஏன்?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,



கேள்வி: ஆதம், ஹவ்வா இருவர் மூலமே மனித குலம் பல்கிப் பெருகியதாக இஸ்லாம் கூறுகிறது. ஆதம், ஹவ்வா ஆகியோரின் நேரடிப் புதல்வர்கள் தமது சகோதரிகளைத் தானே திருமணம் செய்திருக்க முடியும்? சொந்தச் சகோதரியை மணப்பதை இஸ்லாம் அனுமதிக்கிறதா? என்று எனது மாற்று மத நண்பர் கேட்கிறார். விளக்கம் தரவும் - எம். தவ்ஃபீக் அஹ்மத், தமாம்.

பதில்: ஆதம், ஹவ்வா ஆகிய இருவர் வழியாகவே மனித குலம் தோன்றியது என்பது தான் இஸ்லாத்தின் கோட்பாடு. இந்த இருவரைத் தவிர வேறு ஜோடிகள் ஏதும் இறைவனால் நேரடியாகப் படைக்கப்படவில்லை என்பதால் அண்ணன் தங்கைகளுக்கிடையே தான் திருமண உறவு நடந்திருக்க முடியும்.
 
அண்ணன் தங்கைகளுக்கிடையே திருமணம் செய்யலாமா என்று இப்போது கேட்டால் கூடாது என்று தான் விடை கூறுவோம்.

எந்த ஒரு காரியமும் குற்றமாக எப்போது ஆகும்? இறைவன் தடுத்தால் அது குற்றமாகும். தடுக்காவிட்டால் அது குற்றமாக ஆகாது.

இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் மதுபானமும், வட்டியும் தடை செய்யப்பட்டிருக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் மதுபானம் அருந்தியவர்களாகவும், வட்டி வாங்கியவர் களாகவும் யாரேனும் மரணித்திருந்தால் அவர்கள் இறைவனிடம் குற்றவாளிகளாக ஆக மாட்டார்கள். ஏனெனில், தடை செய்யப்பட்ட பின் அக்காரியங்களை அவர்கள் செய்யவில்லை.

இது பக்தியின் அடிப்படையில் கற்பிக்கும் நியாயம் அல்ல. அறிவுப் பூர்வமாக ஏற்கத்தக்க காரணமே.

பான்பராக் விற்கக் கூடாது என்று ஒரு அரசு சட்டம் போடுகிறது. இந்தச் சட்டம் போடப்படுவதற்கு முன்னால் அதை விற்பனை செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. மாறாக, இச்சட்டம் அமுலுக்கு வந்த பிறகு விற்பனை செய்பவர்கள் தாம் குற்றம் சாட்டப்படுவார்கள்.

ஒரே ஒரு ஜோடி மட்டுமே உலகில் படைக்கப்பட்டிருந்த நிலையில் அண்ணன் தங்கைகளுக்கிடையே திருமணம் செய்து கொள்ள அல்லாஹ் அனுமதித்தான். மனிதகுலம் பல்கிப் பெருகிட இது தேவையாக இருந்தது. அவன் அனுமதித்த போது அவ்வாறு திருமணம் செய்தவர்கள் குற்றவாளிகளாக மாட்டார்கள்.

இன்று அவ்வாறு செய்வதைத் தடை செய்து விட்டான். அதை அனுமதிப்பதற்கு எந்த அவசியமும் இருக்கவில்லை. தடை செய்யப்பட்ட பிறகு அதைச் செய்தால் தான் அது குற்றமாகும்.

தடை செய்யப்படுவதற்கு முன் செய்யப்பட்ட காரியத்தை தடை செய்யப்பட்ட பின் முன் மாதிரியாகக் கொள்வதை அறிவுடைய யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,
ஏக இறைவனின் திருப்பெயரால்...


إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِن شَعَآئِرِ اللّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ أَن يَطَّوَّفَ بِهِمَا وَمَن تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ اللّهَ شَاكِرٌ عَلِيمٌ {158}

2:158. ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். இந்த ஆலயத்தில்33 ஹஜ்ஜோ, உம்ராவோ செய்பவர், அவ்விரண்டையும் சுற்றுவது குற்றமில்லை.400 நன்மைகளை மேலதிகமாகச் செய்பவருக்கு அல்லாஹ் நன்றி பாராட்டுபவன்6 அறிந்தவன்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

இப்ராஹீம்(அலை) அவர்கள் தங்களுடைய மனைவி, மகனை விட்டு சிறிது தூரம் சென்றதும் அல்லாஹ்விடம் அவர்கள் கேட்ட துஆவை அப்படியே வல்ல அல்லாஹ் நிறைவேற்றிக் கொடுத்த நிகழ்வு உலகம் முடியும் காலம் வரை இஸ்லாம் சத்திய வேதம் என்பதை சான்றுப் பகர்வதாக அமைந்துள்ளது.

14:37. எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில்,33 விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், இவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா! மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக! இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக!246

இப்ராஹீம்(அலை) அவர்கள் தங்களுடைய மனைவி, மகனை விட்டு பிரிந்ததும் அன்னை ஹாஜர் (அலை) அவர்களிடத்தில் இருந்த சிறிய அளவிலான தண்ணீரும், பேரீச்சம்பழமும், தீர்ந்து விட்டது அதைத் தொடரந்து குழந்தை தாகத்தால் தண்ணீருக்கு அழத் தொடங்கி விட்டது.  

ஸஃபாமர்வா மலைகள்.
நெஞ்சைப்  பதறச் செய்யும் குழந்தையின் அழு குரலை கேட்டுக் கொண்டு அக்குழந்தையினருகில் இருக்க முடியாதவர்களாய் அருகில் உள்ள ஓர் மலைக் குன்றின் மீதேறி நின்று உதவி கோருவதற்காக மனித நடமாட்டம் இருக்கிறதா ? என்றுப் பார்க்கிறார்கள்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனித நடமாட்டமே இல்லை ஏமாற்றத்துடன் மீண்டும் குழந்தையின் அருகே வருகின்றார்கள் குழந்தையின் அழுகுரைலை மீண்டும் கேட்க மனமில்லாமல் மறு புறம் உள்ள மற்றொரு சிறிய மலைக்குன்றின் மீதேறி நின்று உதவி கோருவதற்காக மனித நடமாட்டம் இருக்கிறதா ? என்றுப் பார்க்கிறார்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனித நடமாட்டம் தென்பட வில்லை இல்லை.

இனி மீண்டும் அந்த மலைகளில் ஏறி நின்றுப் பார்க்கத் தேவை இல்லை என்று குழந்தை அருகே அவர்களால் அமர முடியாத அளவுக்கு குழந்தை தாகத்தால் கதறுகிறது அதை சகிக்க முடியாமல் அந்த இரண்டு மலைக் குன்றுகளின் மீதேறி மீண்டும், மீண்டும் பார்த்து விட்டுத் திரும்புகிறார்கள் இவ்வாறு ஏழு முறை சென்றுத் திரும்புகிறார்கள். அந்த இரண்டு மலைகளுமே ஸஃபா- மர்வா என்றழைக்கப்படுகிறது என்பதை அறிந்து வைத்திருக்கிறோம்.

இப்பொழுது அந்த இரு மலைக் குன்றுகளுக்குமிடையில் மேலே காங்கிரீட் போடப்பட்டு இரு புறமும் குளிரூட்டும் குளிர் சாதனங்கள் பொருத்தப்பட்டு, அது போதாதென்று ராட்சஷ மின் விசிறிகளும் பொருத்தப்பட்டு தரையில் குளிரூட்டும் விலை உயர்ந்த மார்பல் பதிக்கப்பட்டு எட்டுக்கு ஒரு ஜம் ஜம் தண்ணீர் குழாய்கள் பொருத்தப்பட்டு சிரமமில்லாமல் ஸயீ செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை அறிந்து வைத்திருக்கிறோம்.

அப்படி இருந்தும் நம்மால் ஏழு சுற்று சுற்றி வருவதற்குள் எவ்வளவு தான் தண்ணீர் குடித்தாலும் தொடர்ந்து  நமக்கு ஏற்படுகின்ற தாகத்தையும், களைப்பையும், இடுப்புக் கடுப்பையும், மூட்டுக்கு மூட்டு ஏற்படுகின்ற வலியையும் சொல்லி மாளாது உச்சியிலிருந்து வியர்த்து முகத்தில் வழியும் வியர்வையை இஹ்ராம் துணியால் துடைத்து, துடைத்துக் கொள்கிறோம்.

அன்று அன்னை ஹாஜர்(அலை) அவர்கள் இரண்டு மலைக் குன்றுகளுக்கிடையில் ஏழு முறை தொடர்ச்சியாக உதவிக்காக மனிதர்களைத் தேடி ஓடிய பொழுது கொளுத்துகின்ற வெயிலிலும், கொதிக்கின்ற தரையிலும் கற்களும், முட்களும் நிறைந்த செப்பனிடப்படாத தரையில் அதுவும் வயதான நிலையில் பதட்டத்துடன் ஏழு முறை அங்குமிங்கம் ஓடியவர்கள் என்ன மாதிரியான உடல் சோர்வுக்கும், மன உலைச்சலுக்கும் ஆளாகி இருப்பார்கள் ?.

அந்த சூழ்நிலையை ஹஜ் செய்யச் செல்வோர் கண் முன்னே நிருத்தி நினைவு கூர்ந்தார்கள் என்றால் ஹஜ் செய்யச் செல்வது இஸ்லாத்திற்காக தியாகத்தை வெளிப்படுத்தும் நோக்கிலா ? பிறர் ஹாஜியார் என்று புகழப் பட வேண்டும் எனும் நோக்கிலா என்பதை தீர்க்கமாக முடிவு செய்து கொள்வர்.

மேலும் அவ்விரண்டு மலைகளையும் அல்லாஹ் தனது அத்தாட்சிகளில் ஒன்றாகும் என்று தன் திருமறையில் கூறுகிறான். 2:158. ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள்...  

உலக அதிசய நீரூற்று உதயம்.
உள்ளங்களைப் பார்க்கக்கூடிய உலக அதிபதி அல்லாஹ் அன்னை ஹாஜர்(அலை) அவர்ளுடைய உள்ளம் ஏகஇறைவனின் மீது நம்பிக்கைக் கொண்டு எங்களை பாதுகாக்க அல்லாஹ் போதுமானவன் என்று இப்ராஹீம்(அலை) அவர்களிடம் கூறி அதில் உறுதியாக இருந்ததை நினைத்து அன்னை அவர்களின் உள்ளம் குளிரும் விதத்திலும், தனது மனைவியையும், குழந்தையையும் விட்டுத் திரும்பியதும் இப்ராஹீம்(அலை) அவர்கள் கேட்ட துஆவை நிறைவேற்றிக் கொடுக்கும் வகையிலும் உலகம் முடியும் காலம் வரை தோன்றும் மக்களை அதிசயிக்கும் வகையிலும், அதைப் பற்றியேப் பேசும் வகையிலும் குழந்தை அழுது கொண்டு இருந்த இடத்தில் வல்லோன் அல்லாஹ் அதிசய நீரூற்றை பொங்கச் செய்தான்.

குழந்தை அழுது கொண்டு கிடந்த காலுக்கடியில் வானவரின் இறக்கையை அடிக்கச் செய்கிறான் இறைவன் அவ்விடத்தில் நீரூற்றுப் பொங்கிப் பாய்கிறது அதனைக் கண்ட அன்னை அவர்கள் ஓடோடி வந்து அதனருகில் அமர்ந்து உலக இரட்சகனாகிய அல்லாஹ்வை துதித்துக் கொண்டு தங்களது இரு கைகளாலும் மணல்களைக் குவித்து நீரூற்றுக்கு அணைக் கட்டுகிறார்கள். அது தான் ஸம் ஸம் நீரூற்று என்பதை அறிந்து வைத்திருக்கிறோம்.

அன்று அன்னை அவர்கள் அந்த நீரூற்றை தமது கரங்களால் அணை கட்டி தடுத்திருக்க வில்லை என்றால் அது பொங்கிப் பாய்ந்து மக்கா நகர் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கும் நதியாக மாறி இருக்கும் என்று அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(நபி) இஸ்மாயீலின் தாயாருக்கு (ஹாஜராவுக்கு) அல்லாஹ் கருணை புரிவானாக! 'ஸம்ஸம்' நீரை அவர், (பள்ளம் தோண்டி அணை கட்டாமல்)விட்டு விட்டிருந்தால் - (அல்லது நபியவர்கள் இப்படிச் சொன்னார்கள்:)- தண்¡ரைக் கையால் அள்ளிக் குடிக்காமல் இருந்திருந்தால்- அது (நிற்காமல்) ஓடுகிற நீரோடையாக இருந்திருக்கும்.  என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' ...புகாரி. 2368.

அது அள்ள அள்ள வற்றாத நீரூற்று என்பதால் தான் அண்ணல் அவர்கள் அவ்வாறு கூறினார்கள். 1400 வருடங்களுக்கு முன் அண்ணல் அவர்கள் கூறியதை மெய்ப்பிக்கும் நிகழ்வும் பல முறை அந்த கிணற்றில் ஆய்வை மேற்கொண்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.

அது அள்ள அள்ள வற்றாத நீரூற்று என்பதை நிரூபிக்கும் ஆய்வு.
ஹஜ் காலம் வரும்போதெல்லாம் அதிசய நீராகிய ஜம் ஜமின் அந்த நினைவுகள் எனது மனதிலே தோன்றும். ஆம் 1971 ஆம் ஆண்டில் எகிப்து நாட்டின் ஒரு டாக்டர் ஐரோப்பிய பிரசுரத்திற்கு 'ஜம்ஜம் நீர் குடிப்பதற்கு உகந்ததல்ல' என்ற அடிப்படையில் ஒரு செய்தியைக் கொடுத்தார். உடனே நான் முஸ்லிம்களுக்கு ஏற்படும் அநீதிகளில் இது ஒன்று என்று நினைத்தேன் - கஃபத்துல்லாஹ் தாழ்வு பகுதியான மக்காவின் நடு மையத்தில் உள்ளதால் மக்காவின் கழிவு நீர் ஒன்று சேர்ந்து கிணற்றில் விழுவதாக அவரது யூகம் இருந்தது.

அதிஸ்டவசமாக இந்தச் செய்தி உடனே மன்னர் ஃபைசல் அவர்களின் காதிற்கு எட்டியது. கோபம் அடைந்த மன்னர் அந்த எகிப்திய டாக்டரின் கூற்றை பொய் என நிருபிக்க முடிவெடுத்தார். உடனே 'நீர் மற்றும் விவசாய அமைச்சரவையிடம்', இதை விசாரிக்கவும் மற்றும் ஜம்ஜம் நீரை ஐரோப்பிய சோதனைச்சாலைக்கு (Lab) அனுப்பி இந்த நீர் குடிப்பதற்று உகந்ததா ? என்பதை ஆராயச் சொன்னார்.

அமைச்சரவை ஜித்தாவில் உள்ள 'மின் மற்றும் கடல் நீர் சுத்தரிப்பு நிலையத்திடம்'; இந்தப் பணியை ஒப்படைக்கப்பட்டது. இங்கே தான் நான் கடல் நீர் சுத்தரிப்பு பணிப் பொறியாளராக (Desal Engineer) (கெமிகல் இஞ்சினீர் போன்று) பணி புரிந்து வந்தேன். நான் இந்த ஆய்வுக்காகத் தேரந்தெடுக்கப்பட்டேன். இப்பவும் எனக்கு ஞாபகம் உள்ளது. அப்போது அந்த கிணற்றில் உள்ள நீர் எவ்வாறு இருக்கும் என்பதை தெரியாமலிருந்தேன்.

நான் மக்காவிற்றுச் சென்று கஃபத்துல்லாவின் அதிகாரிகளிடம் எனது ஆய்வு பற்றிக் குறிப்பிட்டேன். அவர்கள் உடனே ஒரு நபரை நியமித்து எனக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய ஏற்பாடு செய்தார்கள். நான் கிணற்றை அடைந்த போது என்னால் நம்ப முடியவில்லை..இத்தனை சிறிய நீர் குட்டை ஏறக்குறைய 18க்கு 14 அடி அளவுள்ள ஒரு கிணறு... கோடிக்கணக்கான கேலன் நீரை ஒவ்வொரு வருடமும் ஹாஜிகளுக்கு... இப்ராஹீம்  (அலை) காலத்திலிருந்து எத்தனை நூற்றாண்டுகளாக கொடுத்துள்ளது!

நான் எனது ஆய்வைத் தொடங்கினேன். முதலில் கிணற்றின் அளவுகளை எடுத்தேன்.அந்த உதவி ஆளை ஆழத்தை காண்பிக்கச் சொன்னேன். அவர் சுத்தமாக குளித்துவிட்டு கிணற்றுக்குள் சென்றார். பின் தன் உடலை நேராக நிமிர்த்தினார். என்ன ஆச்சரியம்! நீர் மட்டம் அவருடை தோள்களுக்கு சற்று மேலாக இருந்ததது. அவரது உயரம் ஏறக்குறைய 5 அடி 8 அங்குளம். பின் அவர் கிணற்றின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு (நிண்றபடியே சென்றார் - காரணம் அவர் தலையை நீரில் நனைக்க அனுமதக்கப் படவில்லை) எதாவது துவாரம் வழியாகவோ அல்லது குழாய் மூலமோ நீர் வருகின்றதா என்று தேடினார். ஆனால் அவரால் எந்த வழியையும் கண்டு பிடிக்க முடியவில்லை. உடனே எனக்கு ஒரு யோசனை!

மிக விரைவாக கிணற்று நீரை வெளியேற்றுவதன் மூலம்  கிணற்றின் நீரைக் குறைத்து நீர் வரும் வழியைக் காணலாமே என்று!  'ஜம்ஜம் நீர் சேமிக்கும் தொட்டிக்கான' பெரிய பம்ப் ஓட்டப்பட்டது. என்ன ஆச்சரியம் பம்ப் ஓடும் நேரத்திலும் ஒரு வித்தியாசமும் ஏற்படவில்லை. நீர் வரும் வழியைக் கண்டு பிடிக்க இது தான் ஒரே வழி என்று திரும்ப திரும்ப பம்பை ஓடச் செய்தேன். ஆனால் இந்த முறை யுக்தியை மாற்றினேன். அவரை ஒரே இடத்தில் நிற்கச் சொல்லி கிணற்றில் ஏதாவது வித்தியாசம் தோன்றுகிறதா என்று கேட்டேன். சில நேரம் கழித்து திடீரென அவர் தன் கைகளை உயர்த்தி கத்தினார் 'அல்ஹம்துலில்லாஹ்! நான் கண்டு பிடித்து விட்டேன். கிணற்றின் படுகையிலிருந்து நீர் கசிவதால் என் கால்களுக்கடியில் உள்ள மண் ஆடுகின்றது.' பம்ப் ஓடும் சமயத்தில் அவர் கிணற்றில் மற்ற பகுதிக்கு நகர்ந்தார். இதே நிலையை கிணற்றின் எல்லா பகுதியிலும் கண்டார். உண்மையில் கிணற்று படுகையின் எல்லா பகுதியிலிலும்; நீரின் வரத்து சமமாக இருப்பதால் நீரின் மட்டம் சீராக இருந்தது.

நான் எனது ஆய்வை முடித்து கஃபாவை விட்டு கிளம்பும் முன் ஐரோப்பிய சோதனைச் சாலையில் சோதனை செய்வதற்காக நீரின் மாதிரிகளை (Samples) எடுத்துச் சென்றேன். நான் அதிகாரிகளிடம் மக்காவைச் சுற்றியுள்ள மற்ற கிணறுகளின் நிலமையை விசாரித்தேன். அவைகள் பெரும்பகுதி காய்ந்த நிலையில் உள்ளதாகச் சொல்லப்பட்டது.

நான் ஜித்தாவில் உள்ள எனது அலுவலகத்தை அடைந்து ஆய்வுகளை  மேலதிகாரியிடம் தெரிவித்தேன். அவர் மிகவும் அக்கறையுடன் கவனித்தார். ஆனால் திடீரென அர்த்தமற்ற ஒரு கருத்ததைக் கூறினார். ஜம்ஜம் கிணற்றுக்கு செங்கடலிலிருந்து உட்புறமாக தொடர்பு இருக்கலாம் என்று. இது எவ்வாறு சாத்தியம்! மக்கா 75 கி.மீ. தொலைவில் உள்ளது, மற்றும் மக்காவைச் சுற்றி இதற்கு முன்பாக உள்ள கிணறுகளெல்லாம் பெரும்பகுதி காய்ந்த நிலையில் உள்ளன! ஐரோப்பிய மற்றும் எங்கள் சோதனைச் சாலையில் (Lab)  செய்த சோதனைகள் இரண்டும் ஏறக்குறைய ஒத்து இருந்தன.

ஜம்ஜம் நீருக்கும் மற்ற நீருக்கும் (முனிசிபல் தண்ணீர்) உள்ள வித்தியாசம் கால்சியம் மற்றும் மேக்னீசிய உப்பு அளவுகளில் தான். இந்த உப்புகளின் அளவு ஜம்ஜமில் சற்று அதிகம். அதனால் தானோ இந்த நீர் களைத்த ஹாஜிகளுக்கு ஒர் புத்துணர்ச்சியைக் கொடுக்கின்றது. அது தவிர முக்கியமாக இந்த நீரில் ஃபுளொரைடு உள்ளதால் நோய் கிருமிகளை அழிக்கும் தன்மையையும் கொண்டுள்ளது. இதற்கு மேலாக ஐரோப்பிய சோதனைச் சாலைகள் (Lab)  இந்த நீர் குடிப்பதற்று உகந்தது தான் என்ற சான்று அளித்தன. எனவே அந்த எகிப்து மருத்துவர் குறிப்பிட்டது பொய் என்று நிருபிக்கப் பட்டது. மன்னர் பைசல் அவர்களிடம் இந்த செய்தி சென்ற போது, அவர்கள் எகிப்து மருத்துவரின் கூற்றுக்கு மறுப்பாக இந்தச் செய்தியை ஐரோப்பிய பிரசுரத்திற்கு அனுப்பச் செய்தார்.

இது ஒரு வகையில் ஜம்ஜம்மின் தன்மைகளை அறிய வாய்ப்பாக அமைந்தது. உண்மையில் நீங்கள் ஜம்ஜமை ஆராய, ஆராய மேலும் பல அதிசய தன்மைகள் வெளிவந்து, நீங்களே அதில் பொதிந்து கிடக்கும் அதிசயங்களில் நம்பிக்கை கொள்வீர்கள். புனிதப் பயணத்திற்காக தூர தொலைவுகளிலிருந்து பாலைவனத்தை நோக்கி வரும் நம்பிக்கை கொண்டோருக்கு இது அல்லாஹ்வினால் அருளப்பட்ட ஒரு அன்பளிப்பாகும்.

சுருக்கமாக ஜம்ஜமின் விசேசங்களைக் கூறுகிறேன்.
 
  • இந்த கிணறு என்றும் வறன்டதில்லை. மாறாக தேவையை என்றும் பூர்த்தி செய்துள்ளது.
  • என்றும் அதனுடைய உப்புகளின் அளவும் சுவையும் ஒரே மாதிரியாக, அது உருவான காலத்திலிருந்து உள்ளது.
  • அதன் 'குடிக்கத்தக்க தன்மை' ஒவ்வொரு ஆண்டும் உம்ரா, ஹஜ் யாத்திரைக்காக வரும் அனைவராலும் என்றுமே உலக அளவில் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருந்தது. ஆனால் அதைப் பற்றி குறைகள் எப்போதும் வந்ததில்லை; - மாறாக அவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கின்றது என்று மகிழ்ந்துள்ளனர். நீரின் சுவை இடத்திற்கு ஏற்ப மாறும். ஆனால் ஜம்ஜம் நீரின் சுவை ஒரே மாதிரி (niஎநசளயட).
  • பொதுவாக நகரசபை தண்ணீரை கெமிகல் மூலமோ க்ளோரின் மூலமோ சுத்தம் செய்வது போல் இந்த நீர் என்றும் செய்யப்பட்டது இல்லை. பாசி போன்ற நுண்ணுயிர்கள் பெரும்பகுதியான கிணறுகளில் இருப்பதால் சுவையும், மணமும் மாறி குடிக்கும் தன்மையை பாதிக்கும். ஆனால் ஜம்ஜம் கிணற்றில் இந்த வகையான நுண்ணுயிரகளின் வளர்ச்சிக்கு அடையாளமே இல்லை.
            
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஹாஜர் (அலை) அவர்கள் தன் பச்சிளங்குழந்தை இஸ்மாயில்(அலை) அவர்களின் தாகம் தணிக்க, நீருக்காக சஃபா, மர்வா குன்றுகளுக்கிடையே ஏக்கத்துடன் தேடினார்கள். அவர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திருக்கு ஓட குழந்தை காலை பூமியில் உதைத்துக் கொண்டிருக்க நீர் வீழ்ச்சியாய் இறையருளால் வந்தது தான் இந்த ஜம்ஜம் கிணறு. ஆராய்ச்சி: தாரிக் ஹுஸைன் ; மொழியாக்ம்: காஜா முயீனுத்தீன்.

தங்களது கரங்களால் மணல்களைக் குவித்து கட்டிய மணல் அணைக்கட்டுக்குள் அத்தண்ணீர் தேங்கி நின்று கொள்கிறது குழந்தையுடைய தாகம் தணிகிறது அன்னை அவர்களுடைய தாகமும் தணிகிறது.

வல்ல இறைவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றான அந்த ஜம் ஜம் நீரூற்று இனறளவும் அவனுடைய வல்லமையை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும்35 உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார்.34 அந்த ஆலயத்தில்33 அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவைகளற்றவன் திருக்குர்ஆன் 3:97.

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன்: 3:104.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்