Tuesday 6 March 2012

சஞ்சீவ் பட்: அரிதாய் ஒரு அறச்சீற்றம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

Source: புதிய கலாச்சாரம்


விசாரணையே தேவையில்லாமல் சுட்டுக் கொல்லப்படத்தக்க ஒரு கிரிமினலைக் காட்டச்சொன்னால் தயக்கமின்றி நரேந்திர மோடியை நோக்கி நாம் விரலை நீட்டலாம். ஆனால் அவர் குஜராத்தைக் கூறு போட்டுத் தங்களுக்கு வழங்கியிருப்பதால், முஸ்லிம்களைக் கூறு போட்ட மோடியின் குற்றத்தை நாடு மறந்துவிடவேண்டும் என்று இந்திய ஆளும் வர்க்கம் விரும்புகிறது. ஆளும் வர்க்க ஊடகங்களும் 2002 இனப்படுகொலையை, கவனக்குறைவால் நேர்ந்து விட்ட ஒரு தவறுபோலத்தான்  காட்டுகின்றன. சி.பி.ஐ இன் சிறப்புப் புலனாய்வுக் குழுவும், நீதித்துறையும், வழக்குகளை மோடிக்கு நோகாமல் மூடுவதுதெப்படி என்றே சிந்திக்கின்றன. காங்கிரசு கட்சி, தன் மீது வீசப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளைத் தடுப்பதற்கான கேடயமாக மட்டுமே மோடியைப் பயன்படுத்திக் கொள்கிறது. தனது பார்ப்பனப் பாசிசத்திமிரைப் பிரகடனப் படுத்தும் விதத்தில் ஜெயலலிதா மோடியை முன்வரிசையில் அமரவைத்து கவுரப்படுத்த, கவுரவமே இல்லாத வலது இடது போலிகள் மோடியின் அருகமர்ந்து பல்லிளிக்கிறார்கள்.

வஞ்சகமும் துரோகமும் பிழைப்புவாதமும் கோலோச்சுகின்ற இந்தச் சூழலில்தான் சஞ்சீவ் பட், என்றொரு குஜராத் போலீசு அதிகாரி மோடியை எதிர்த்து நிற்கிறார். அந்தக் குற்றத்துக்காக சிறை வைக்கப்பட்டிருக்கிறார். 2002 இல் கோத்ரா ரயில் பெட்டி எரிக்கப்பட்டவுடன், நடந்த உயர் போலீசு அதிகாரிகள் கூட்டத்தில், "இந்துக்கள் தங்களது கோபத்தை வெளியிடுவதைத் தடுக்காதீர்களென்று வெளிப்படையாகவே மோடி உத்தரவிட்டார்' என சி.பி.ஐ புலனாய்வுக் குழுவிடம் கூறினார் சஞ்சய் பட். அவரது சாட்சியத்தை சி.பி.ஐ அலட்சியப்படுத்தவேஇதனை உச்சநீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலமாகவும் தாக்கல் செய்தார். அந்த அதிகாரிகள் கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்து கொண்டதை உறுதிப்படுத்திய அவரது வாகன ஓட்டுனர் கே.டி.பந்த் என்பவரை மிரட்டி, " பொய் சாட்சி சொல்லுமாறு சஞ்சீவ் பட் தன்னை மிரட்டியதாக' மோடி அரசு புகார் எழுதி வாங்கியிருக்கிறது. அதன் அடிப்படையில் பொய் வழக்கு போட்டு, பட்டை தற்காலிகப் பணிநீக்கமும் செய்திருக்கிறது.

காங்கிரசு எம்.பி இஷான் ஜாப்ரி கொலை செய்யப்பட்ட குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கிலும் மோடியின் நேரடித் தொடர்பை நிறுவியிருக்கிறார் சஞ்சய் பட். அப்போது உளவுத்துறை துணை ஆணையராக இருந்த சஞ்சீவ் பட், "குல்பர்க் சொசைட்டி குடியிருப்பை கொலைக்கும்பல் சுற்றி வளைத்திருப்பது பற்றி மோடிக்கு நான் நேரடியாகத் தகவல் கொடுத்தும் மோடி நடவடிக்கை எடுக்கவில்லை' என்று சாட்சியமளித்திருக்கிறார். 2002  இனப்படுகொலையில் மோடியின் பாத்திரம் குறித்து சாட்சியம் அளித்த அமைச்சர் ஹிரேன் பாண்டியா 2003 இல் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் தொடர்புள்ள அரசியல்வாதிகள், போலீசு அதிகாரிகள் பற்றிய ஆவணப் பூர்வமான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் குஜராத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார் சஞ்சீவ் பட்.

இந்த மனுவைத் தாக்கல் செய்த மூன்றாவது நாள் சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டு விட்டார். அவர் வீடு சோதனையிடப்பட்டது. அவரது வங்கி லாக்கரைத் திறந்து சாட்சியங்களைத் திருட போலீசு துடித்தது. சோதனைக்கு சம்மதித்தால், உடனே பிணையில் விடுவதாக சஞ்சீவ் பட்டிடம் பேரம் பேசினார் நீதிபதி. "இது கொள்கைக்கான போராட்டம். நீதிமன்றத் தரகர்களுடன் எனக்கு சமரசம் தேவையில்லை. அரசின் நடவடிக்கை எதுவானாலும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்' என்று காறி உமிழ்ந்த சஞ்சீவ் பட், 18 நாட்கள் சிறைக்குப் பின் பிணையில் வந்திருக்கிறார். "மோடி இன்று முதல்வராக இருக்கலாம். 2002 படுகொலையைப் பொருத்தவரை மோடி ஒரு கிரிமினல். ஒரு கிரிமினலாகத்தான் மோடியை நடத்தவேண்டும்' என்று தொலைக்காட்சிக்குப் பேட்டியும் அளித்திருக்கிறார். மோடியின் குற்றத்தை மறுக்கின்ற அல்லது மறக்கின்ற பேடிகளை எப்படி நடத்துவது? இது குறித்த நம் அணுகுமுறைதான் சஞ்சீவ் பட் போன்றோருக்கு நாம் அளிக்கும் உண்மையான மரியாதையாக இருக்கும்.



Sunday 4 March 2012

மாணவிகளிடம் சில்மிஷன் ஆசிரியர் கைது !!!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மாணவிகளிடம் சில்மிஷன் ஆசிரியர் கைது !!!


சமீப காலமாக செய்தித் தாள்களைப் புரட்டினால் துவக்கப்பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பாடம் பயிலும் சிறுமிகளின் மீதும் பருவ வயது மாணவிகளின் மீதும் சில ஆசிரியர்கள், பேராசிரியர்கள், முதல்வர்கள் வரம்பு மீறும் பாலியல் வல்லுறவுகள் மனதை பாதிப்பதாக அமைந்துள்ளது.

இதைப் படிக்கும் நமக்கே மனதை வெகுவாக பாதிக்கிறதென்றால் அந்தப் பிள்ளைகளைப் பெற்று நெற்றி முகர்ந்து வளர்த்து எதிர்காலத்தில் கல்விமான்களாகி சிறந்து விளங்க வேண்டும் என்று ஆசைப் பட்டு பணத்தையும் மூட்டை, மூட்டையாக கட்டி கல்விப் பயிலப் பள்ளிக்கு அனுப்பிய தாய், தந்தையரின் மனநிலை எப்படி பாதித்திருக்கும் ?

காதல் வலை விரிக்கும் ஆசை வார்த்தைகளும், பணிய வைக்கும் மிரட்டல்களும்.
  • வயது முதிர்ந்த வாத்தியாராக இருந்தால் என்னுடைய விருப்பத்திற்கு இணங்க வில்லை என்றால் ஃபைலாக்கி விடுவேன்- இது பணிய வைக்கும் மிரட்டல்.
  • இளைய வயது வாத்தியாராக இருந்தால் நானும் சிறு வயதுக் காரண் தான் இன்னும் எனக்கு திருமனம் ஆகவில்லை நீ ரொம்ப அழகாக இருக்கிறாய் உன்னையே எனது துனைவியாக்கிக்கொள்ள விரும்புகிறேன்- இது ஆசை வார்த்தை.
மேற்காணும் விதம் பேசி பாலியல் தொடர்பான எதையுமே அறியாத சிறுமிகளை, பருவ வயது பெண்களை ஒழுக்கத்தைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் முதல் டியூசன் எடுக்கும் ஆசிரியர்கள், கணினி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் சந்தர்ப்பத்தை சாதகமாக்கிக்கொண்டு பிஞ்சு மலர்களை கிள்ளி  கசக்கி எறிந்து விடுகின்றனர். 
 
எதோ ஒரு மாணவியை மட்டும் இந்த ஈனச்செயலில் ஈடுபடுத்தி விட்டு நிருத்திக்கொண்டார்களா என்றால் ? அதுவும் இல்லை ! இந்த வரம்பு மீறும் நிகழ்வுகள் இவர்களால் பல மாணவிகளுடன் தொடர்ந்து கொண்டே தான் செல்கின்றன. 

தன்னிடம் கல்வியையும், ஒழுக்கத்தையும் பயில வந்த சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி அவர்களின் எதிர்கால வாழ்வை சிதைத்து சின்னாப்பின்னப்படுத்துகின்ற ஆசிரியப் பெருந்தகை(?)களுக்கு இந்திய குற்றவியல் தண்டனையில் உடலில் வருத்தத்தை ஏற்படுத்தும் அளவுக்கோ, உள்ளத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கோ தண்டனைகள் இல்லை என்பதால் சிறுமிகளையும், பருவ வயதுப் பெண்களையும் வாழைக் குருத்துகளை அடியோடு வெட்டி சாய்ப்பதைப் போல சாய்த்து விடுகின்றனர். 

35 க்கும் மேற்பட்ட மாணவிகளுடன்...
கடந்த 2009ல் கன்யாகுமரி மாவட்டம் விளவங்கொடு தாலுக்கா, இடைக்கோடு கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்னகுமார் என்ற 28 வயதையுடைய கணினி ஆசிரியர் தன்னுடைய லேப்டாப்பை பழுது நீக்க ஒரு கம்ப்யூட்டர் டெக்னீஷியனிடம் கொடுததிருந்தார். பழுது நீக்கப்பட்டதும் லேப்டாப் கேலரியை கம்ப்யூட்டர் டெக்னீஷியன் யதார்த்தமாக ஓப்பன் செய்ய திகைத்துப் போய் விட்டார். 

அதில் 35 க்கும் மேற்பட்ட கணினி பயிலும் மாணவிகளுடன் கிருஷ்ணகுமார் உல்லாசமாக இருக்கும் வீடியோ க்ளிப்களைக் கண்டு கொதித்துப்போனவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்து போலீஸாரின் ஆலோசனைப் பிரகாரம் கிருஷ்னகுமாருக்கு போன் செய்து லேப்டாப்பைக் கொடுத்ததும் மறைந்திருந்த போலீசார் அவரை கைது செய்தனர். 

இக்கயவர்கள் இது போன்ற சில்மிஷன்களில் சிக்குவது மிகக்குறைவு சிக்கிக் கொண்டாலும் சிறிது காலம் சுகாதாரமான சிறை வாழ்க்கை, அதன் பிறகு ஜாமீனில் வெளியில் மீண்டும் உல்லாச வாழ்க்கை பழைய படியேத் தொடரும், தொடர்ந்தும் இருக்கிறது. 

சினிமா நடிகைகளைப் போல ஆடு...
மத்தியப் பிரதேச மாநிலம் பேதல் மாவட்டத்தில் மகேஷ் மாலவ்யா எனும் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் நீண்ட காலமாக தன்னிடம் பாடம் பயிலும் சிறுமிகளை ஏமாற்றி வல்லுறவில் ஈடுபடுத்துவது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.

30-11-2012 அன்று வகுப்பு நடக்கும் பொழுது ஒரு மாணவனை அழைத்து பணம் கொடுத்து சாராயம் வாங்கி வரச்சொல்லி அதை குடித்து விட்டு போதை தலைக்கேறியதும் மாணவிகளை பெஞ்ச் மேல் ஏறி ஆடச்சொல்லி இருக்கிறார் பயந்து கொண்டு ஆடிய மாணவிகளை பிரம்பால் அடித்து சினிமா நடிகைகளைப் போல் வளைந்து நெளிந்து ஆடச்சொல்லி இருக்கிறார் பிரம்படித் தாங்க இயலாமல் சில மாணவிகள் ஜன்னல் வழியாக ஏறிக் குதித்து ஓடிச்சென்று தனது பெற்றோரிடம் கூற பெற்றோர்களும், பொதுமக்களும் பேதல் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் பொர்கரிடம் புகாரளிக்க பள்ளி நிர்வாகத்திலிருந்து அவரை சஸ்பென்ட் மட்டும் செய்யச்சொல்லி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

இவர் ஏற்கனவே 2008ல் இதே பள்ளியில் சிறுமிகளிடம் பலாத்காரத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு வழக்கு பதியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மீது பலாத்கார வழக்கு நிலுவையில் இருக்கும் போதே இவரை பள்ளியில் தொடர்ந்து நீடிக்கச் செய்த பள்ளி நிர்வாகிகள் மீது நடிவடிக்கை எடுக்கக்கோரி மத்தியப் பிரதேச சட்டமன்றத்தில் எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். 

வரம்பு மீறலுக்கு வயது வரம்பு உண்டோ ?
பிப் 28,2012 அன்று ஊட்டி கீழ்கோத்தகிரி சந்தைப் பகுதியின் முக்கிய சாலையில் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் புடை சூழ சுமார் 8 மணி நேரம் போக்கு வரத்தை ஸ்தம்பிக்கச் செய்யும் அளவிற்கான ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்தது. இவ்வளவு நேரம் நீடித்த இந்த ஆர்பாட்டம் மின்வெட்டைக் கண்டித்தோ, விலைவாசி உயர்வைக் கண்டித்தோ அல்ல கஷ்டப்பட்டுப் பெற்று பாசத்தை ஊட்டி வளர்த்தப் பிள்ளைகளின் எதிர்காலத்தை ஞானசூன்யமாக்கி வரும் சார்லஸ் என்ற 45 வயதையுடைய வணிகவியல் பாடம் நடத்தும் காம வாத்தியாரை கைது செய்யக்கோரி நடத்திய ஆர்ப்பாட்டமாகும்.

விரும்பிய மாணவிகளை விரும்பிய நேரத்தில் வல்லுறவில் ஈடுபடுத்துவது இவரது வாடிக்கையாம்(?) பாதிக்கப்பட்ட ஒரு மாணவி சக மாணவியிடம் தனக்கு நேர்ந்த அவலத்தைக் கூற இதைக் கேட்ட மாணவி அதிர்ச்சி மேலீட்டால் அந்தப் பாவி என்னையும் தான் என்றுக் கூற இச்செய்தி கசிந்து கொண்டே செல்ல இச்செய்தி காதுக்கு எட்டிய மாணவிகளில் பலர் என்னையும் தான், என்னையும் தான் என்றுக் கூற இறுதியாக இதற்கு முடிவு கட்ட நாண்கு மாணவிகள் களமிறங்கினர் அவர்கள் தங்கள் பெற்றோரிடம் சம்பவத்தைக் கூற அதனடிப்படையில் நடத்தப்பட்டது தான் மேல்படி உயிரோட்டமுள்ளப் போராட்டம். 

தகவலறிந்த ஆர்.டி.ஓ காந்திமதி அவர்கள் ஒருப் பெண் என்பதால் சம்பவத்தைக் கேட்டுக் கொதித்துப் போனவர் தாசில்தார் ஜோகி, நீலகிரி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் துரை, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோரை சம்பவ இடத்திற்கு வரவழைத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 

மேல்படி நான்கு மானவிகளையும் தனித் தனியாக விசாரனை நடத்தி சம்பவத்தை உறுதி படுத்திக் கொண்ட இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் அதி விரைவுப் படை வரவழைத்து பால்ராஜ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவர முடியாத அளவு பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.கைது செய்து அழைத்துச் சென்ற பொழுது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் வாத்தியாருக்கு செருப்பு மாலை அணிவித்தனர்.

பட்டப் பகலிலும் கூட...
கைதுகள் தொடர்ந்தாலும் தண்டனைகள் கடுமையானதாக இல்லாதக் காரணத்தால் அவர்களின் வரம்பு மீறல்கள் நின்ற பாடில்லை கடந்த காலங்களில் இலைமறை காய்மறையாக சில காமுக ஆசிரியப் பெருந்தகை(?)களால் நடத்தப்பட்ட வல்லுறவுகள் இன்று பட்டப் பகலிலேயே அதுவும் பெண்களின் தலைவி அம்மா(?) அவர்களின் ஆட்சியில் பகிரங்கமாக நடக்கத்தொடங்கி விட்டது.

தூத்துக்குடி மாவட்டம் உதயநேரி கருங்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தேவசாமித்தியம் என்ற காமுக ஆசரியர் வகுப்பு நடக்கும் பகல் வேலையில் தனக்கு விருப்பப்பட்ட மாணவியை அழைத்து சத்தணவு கூடத்தில் வைத்து வல்லுறவுக்கு உட்படுத்தி விட்டு வெளியில் சொன்னால் ஃபைலாக்கி விடுவேன் என்று மிரட்டி அனுப்புவாராம். இதில் பாதிக்கபட்டு மனசாட்சி உறுத்திய ஜெயமாலா என்ற மாணவி தனது பெற்றொரிடம் சொல்லி அழுததும் செங்கநுல்லூர் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் செய்து தேவசாமித்தியம் கைது செய்யப்பட்டு விசாரித்து வருவதாக தகவல் கிடைத்து உள்ளது.

மூன்றாந்தர நாலாந்தர ரவுடிகளை விட மோசமாக...
மேல்படி வரம்பு மீறலில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் பருவ வயது பெண்கள் இந்த அசிங்கத்தை பேற்றோரிடமும், உற்றாரிடமும் சொல்ல முடியாமல் விசையில் சிக்கிய எலிகளைப்போல் காமவெறிப் பிடித்த சில வாத்தியார்களிடம் மாட்டிக்கொண்டு அவர்களின் வாழ்க்கையை நீண்ட காலமாகத் தொலைத்து அல்லல் படும் மாணவிகள் ஏராளம்.

இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் அருண் என்ற 38 வயதையுடைய பேராசிரியரின் கோரப் பிடியில் சிக்கி மீளமுடியாமல் தவித்த ஒரு மாணவியின் துயர சம்பவத்தைப் படிக்கும் எவருடைய கண்களும் கசியாமல் இருக்காது. ஆனால் அந்த கல் நெஞ்சனுக்கு கசிய வில்லை.

அருணிடம் அந்த மாணவி அவருடைய வீட்டிற்கு சென்று டியூசன் படித்து வந்தார் சிறிது நாட்கள் கழிந்ததும் அந்த மாணவியின் மீது காதல் வலையை மெல்ல விரித்து கல்யாணம் செய்து கொள்வதாக வாக்களித்தார் அதை நம்பிய அந்த மாணவி அவருடன் நெருக்கமானார் ஒரு நாள் மயக்க மருந்தை குளிர் பாணத்தில் கலந்து கொடுத்து சீரழித்தார் அதை ரகசியமாக வீடியோவும் எடுத்துக்கொண்டு வீடியோ க்ளிப்பை அப்பெண்ணிடம் காட்டி காதல் வலையை கட் பண்ணி காமவலையில் கவிழ்த்து ஆயுள் அக்ரீமென்ட் செய்து விட்டார்.

இது இடைவிடாமல் தொடர்ந்ததால் என்னை விட்டு விடுங்கள் சார் என்று அப்பெண் அழுது கெஞ்சிக் கேட்டும் விடுவதாகத் தெரியவில்லை இந்நிலையில் அருணுக்கு வேறுப் பெண்ணுடன் திருமனமும் நடந்தது இத்துடன் தப்பித்தோம் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார் அந்த மாணவி.

ஆனால் அந்த நிம்மதிப் பெருமூச்சு நீடிக்கவில்லை 1-3-2012 அன்று அந்த மாணவிக்கு அருண் போன் செய்து தனது மனைவி வீட்டில் இல்லை உடனடியாக நீ வர வேண்டும் என்று வரவழைத்து அருணும், அவனது நன்பன் ராம்குமாரும் அப்பெண்ணை சீரழித்து அதையும் வீடியோவில் பதிந்து இன்னும் எப்பொழுது அழைத்தாலும் தாமதமின்றி வரவேண்டும் மீறினால் விடியோ க்ளிப்பை இணையத்தில் விட்டு விடுவேன் என்றுக் கூறி மிரட்டி அனுப்பி உள்ளார். 

இனியும் இதை சகிக்க முடியாது என்று முடிவுக்கு வந்த அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறிக் கதறி அழுதுள்ளார். அவரது பெற்றோர் கோவில்பட்டி மேற்கு காவல்நிலையத்தில் புகாரளித்து அருணையும், ராம்குமாரையும் கைது செய்து அவரது லேப்டாப்பை சோதித்த போது அந்த மாணவியை பலரிடம் ஈடுபடுத்திய காட்சிகள் அடங்கிய வீடியோ க்ளிப்கள் இருந்துள்ளன. இச்சம்வம் மார்ச் 1-3-2012 அன்று செய்தித் தாள்களில் வந்து தமிழ்நாட்டில் பரபப்பை எற்படுத்திய சம்பவமாகும்.

இது போன்ற சம்பவங்களில் மாட்டிக்கொள்ளும் சிறுமிகள் பலர் பயந்துகொண்டு வெளியில் சொல்வதில்லை, பருவ வயதுப் பெண்கள் தங்களுடைய வாழ்க்கை நாசமாகி விடும் எவனும் வாழ வைப்பதற்கு முன் வர மாட்டான் என்றுக்கருதி மறைத்து விடுகின்றனர்.

ஒழுக்க விழுமங்களின் உயர்விடமாக கல்லூரிகள் கருதப்படுவதால் கல்லூரியிலிருந்து வீடு திரும்பும் தன் பிள்ளைகளின் ஒழுக்கம் சார்ந்த விஷயங்களை பற்றி அவ்வளவாக பெற்றோர்கள் விசாரிப்பதில்லை. இது தான் இவர்களை வரம்பு மீறச் செய்தது. 

துணிந்து ஒண்றிரன்டு மாணவிகள் புகார் செய்தாலும் சில்மிஷன் வாத்தியார்களுக்கு கிடைப்பது வெறும் சிறிது கால சிறை வாழ்க்கை மட்டும் தான்.

துணிந்து புகார் செய்த இவர்களுக்கோ சொந்த ஊரில் மாப்பிள்ளை கிடைக்காது பக்கத்து ஊரிலும் மாப்பிள்ளை எடுக்க முடியாத அளவுக்கு ஊடகங்களில் செய்தி வெளியாகி விடுகின்றன பெயர் மாற்றப்பட்டுள்ளது என்று எழுதினாலும் அவர்கள் இன்னார் தான் என்பது அந்த மாவட்டம் முழுமைக்கும் தெரிந்து விடும்.

  • தொடர்ந்து நடந்து வந்த குழந்தை கடத்தலை கோவை மோகன் ராஜூக்கு கொடுக்கப்பட்ட என்கவுண்டருடன் கடந்த அரசு குழந்தை கடத்தலை ஓரளவு முடிவுக்கு கொண்டு வந்தது.

  • தொடர்ந்து நடந்து வந்த வங்கி கொள்ளையை அதில் ஈடுபட்ட ஐந்து கொள்ளையர்களுக்கு கொடுக்கப்பட்ட என்கவுண்டருடன் வங்கிக் கொள்ளையை இந்த அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது.

  • தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்கிளிலும் பரவலாக ஆசிரியர்களால் நடத்தப்படும் மாணவிகள் மீதான கற்பழிப்புகளை எந்த கவுன்டர் மூலம் அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வர இருக்கிறது ?

எந்த கவுன்டர் கொடுத்தாலும் பொதுமக்கள் முன்னிலையில் கொடுக்க ஏற்பாடு செய்யட்டும் அவ்வாறு செய்தால் மட்டுமே இதுபோன்ற சிறுமிகளின் உயிரையும், மானத்தையும் கழுவிலேற்றும் கொடிய குற்றவாளிகளை முடிவுக்குக் கொண்டு வரமுடியும்.

தண்டனைகள் கடுமையாக்கப்படாத வரை குற்றங்கள் குறையவே குறையாது இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகள் மனிதாபிமானமற்றது என்று விமர்சித்தோர் தொடர்ந்து விமர்சித்து வருவோர் அதை சற்று மாற்றி இன்று நடைமுறைப்படுத்தி வருவதைப் பார்த்து வருகிறோம்.

பெற்றோர்களே உஷார் !!
இனிவரும் காலங்களில் பெற்றோர்கள் தங்கள் மகள்களை கண்காணிக்க வேண்டும் முடிந்தால் பாடம் பியற்றுவிக்கும் ஆசிரியர்களின் குணநலன்களை வெளிப்படையாக கேட்டறிந்து கொள்ள வேண்டும். 

இதை விடவும் முக்கியமாக பெண் பிள்ளைகளை படிக்க வைக்கும் கல்லூரியின் முதல்வர்கள், பேராசிரியர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று நன்றாக விசாரித்துக் கொண்டு அட்மிஷன் போட வேண்டும். 

இவர்களை கடுமையாக தண்டித்து அதன் பிறகு மீண்டும் இக்குற்றங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு போதுமான தண்டனைச் சட்டங்கள் இந்திய குற்றவியல் சட்டத்தில் இல்லை என்பதால் தான் வங்கி கொள்ளையர்கள் மற்றும் கோவை மோகன் ராஜ் எதிர்த்தார்கள் அதனால் சுட்டோம் என்று போலீசார் பொய் புளுகும் நிலை ஏற்பட்டது. 



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன்-3:104.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

Wednesday 29 February 2012

இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன். The islamification of Britain

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இது, கடந்த சில மாதங்களுக்கு முன் (4th January 2011) பிரிட்டனின் புகழ் பெற்ற நாளிதழான "தி இண்டிபெண்டன்ட்" தனது கட்டுரை ஒன்றிற்கு வைத்த தலைப்பு.   

ரிச்சர்ட் டாகின்ஸ் தளம் தொடங்கி பல்வேறு தளங்களில் பரபரப்பை/விவாதத்தை உண்டாக்கியிருக்கின்றது இந்த கட்டுரை.
கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்கும் பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக குறிப்பிடும் அந்த கட்டுரை கீழ்க்காணும் தகவல்களை தெரிவிக்கின்றது.

----------------------
"பிரிட்டனில் எத்தனை மக்கள் இஸ்லாமை தழுவி இருக்கின்றார்கள் என்பது குறித்து நடத்தப்பட்ட மிக விரிவான மதிப்பீடு முயற்சி, கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை ஏற்பவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக கூறுகின்றது.
இஸ்லாம் குறித்த எதிர்மறையான சித்தரிப்புகள் அதிகமிருந்தாலும், ஆயிரக்கணக்கான பிரிட்டன் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமை தழுவுகின்றார்கள்.
பழைய மதிப்பீடுகள், இஸ்லாத்தை தழுவிய பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை சுமார் 14,000 திலிருந்து 25,000 வரை இருக்கலாமென சொல்லுகின்றன. 
ஆனால், Faith Matters அமைப்பின் புதிய ஆய்வு, இந்த எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் வரை இருக்கலாமென தெரிவிக்கின்றது. (அது மட்டுமல்லாமல்) ஒவ்வொரு வருடமும் சுமார் 5000 பிரிட்டன் மக்கள் இஸ்லாமை தழுவதாகவும் தெரிய வருகின்றது.  
ஸ்காட்டிஷ் 2001 மக்கள் தொகை கணக்குப்படி, 2001 ஆம் ஆண்டு வாக்கில், இஸ்லாத்தை தழுவிய பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை 60,699 என ஆய்வாளர்கள் மதிப்பிட்டிருக்கின்றனர். அடுத்த ஆண்டு வரை புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு எதுவும் திட்டமிடப்படவில்லை. 

ஒவ்வொரு வருடமும் எத்தனை மக்கள் இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக தேர்ந்தெடுக்கின்றனர் என்பதை அறிய விரும்பிய ஆய்வாளர்கள், லண்டனில் உள்ள பள்ளிவாசல்களில் கணக்கெடுப்பு நடத்தினர்.  

அப்படி நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் என்ன சொல்கின்றன என்றால், கடந்த பனிரெண்டு மாதங்களில் பிரிட்டனின் தலைநகரில் மட்டும் சுமார் 1,400 பேர் இஸ்லாத்தை தழுவியிருக்கின்றனர். இந்த தொகையை நாடு முழுவதும் கணக்கிட்டு பார்த்தால் சுமார் 5,200 பேர் ஒவ்வொரு வருடமும் தங்களை இஸ்லாமிற்குள் ஐக்கியப்படுத்தி கொள்கின்றனர். இதனை ஜெர்மனி மற்றும் பிரான்சில் நடத்தப்பட்ட ஆய்வுகளோடு ஒப்பிட்டோமானால், அங்கே சுமார் 4000 மக்கள் ஒவ்வொரு வருடமும் இஸ்லாத்தை தழுவுகின்றனர். 

இஸ்லாமை தழுவியவர்களின் நம்பத்தகுந்த எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிடுவது கடினம் என்பதை ஒப்புக்கொண்டுள்ள Faith Matters அமைப்பின் இயக்குனர் பியாஸ் முகல்"மக்கள் தொகை கணக்கெடுப்பு, உள்ளூர் வல்லுனர்களின் தகவல்கள், மசூதிகளில் நடத்தப்பட்ட ஓட்டெடுப்பு போன்றவற்றை அடிப்படையாக வைத்து திரட்டப்பட்ட சிறந்த அறிவார்ந்த யூகம் இந்த அறிக்கை"என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், " எப்படி இருப்பினும், கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை ஏற்றவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்திருப்பதை மிகச் சிலரே சந்தேகம் கொள்வார்கள்".

ஏன் அதிக அளவில் மக்கள் இஸ்லாமை தழுவுகின்றனர் என்று கேட்டதற்கு அவர்,"பொதுவாழ்வில் இஸ்லாமின் முக்கியத்துவத்திற்கும், அதிகரித்து வரும் தழுவல்களுக்கும் தொடர்பு இருப்பதாக நான் நினைக்கின்றேன். இஸ்லாம் எதைப்பற்றியது என்பதை அறிய ஆர்வம் காட்டுகினறனர் மக்கள். அவர்கள் அப்படி செய்யும் போது பல்வேறு திசைகளில் சென்று விடுகின்றனர். பலரும் தங்களுடைய சகஜ வாழ்க்கைக்கு திரும்பி விடுகின்றனர். ஆனால் சிலரோ, எது குறித்து அவர்கள் ஆராய ஆரம்பித்தனரோ அதில் தாங்கள் கண்டுபிடித்தவற்றை விரும்ப ஆரம்பித்து அதையே தழுவி விடுகின்றனர்"

இது குறித்து கருத்து தெரிவிக்கும் Muslims4uk தளத்தின் நிறுவனர் இனாயத் பங்லவாலா"இந்த முடிவுகள் என்ன தெரிவிக்கின்றன என்றால், 600 பிரிட்டன் மக்களில் ஒருவர் இஸ்லாத்தை தழுவுபவராக இருக்கின்றார். இஸ்லாம் ஒரு மிஷனரி மார்க்கம். நிறைய இஸ்லாமிய அமைப்புகள், குறிப்பாக பல்கலைகழக மாணவர் இஸ்லாமிய அமைப்புகள், இஸ்லாம் குறித்த தவறான கருத்துக்களை களைய தீவிரமாக செயல்பட்டு வருகின்றன" என்று குறிப்பிடுகின்றார். 
இஸ்லாமை தழுவுவதென்பது எளிதான ஒன்று. டெக்னிகலாக, முஸ்லிமாவதற்கு ஒருவர் செய்ய வேண்டியதெல்லாம் ஷஹாதா கூறுவது மட்டும்தான். அதாவது"இறைவன் ஒருவனே, முஹம்மது (ஸல்) அவர்கள் அவனின் தூதர்" என்று மனப்பூர்வமாக சொல்லுவது மட்டும் முஸ்லிமாவதற்கு போதுமானது. ஆனால் பெரும்பாலானவர்கள் இதனை இரண்டு சாட்சிகளுக்கு மத்தியில் சொல்லுவதையே விரும்புகின்றனர்."
----------------------------
நீங்கள் மேலே பார்த்த தகவல்கள் மட்டுமல்லாமல், இஸ்லாமை தழுவிய சில சகோதர/சகோதரிகளின் (கதிஜா ரீபக், ஸ்டுவர்ட் மீ, பால் மார்டின், தாவுத் மீலே, டெனீஸ் ஹோர்ஸ்லி, ஹானா தஜிமா) கருத்துக்களையும் வெளியிட்டிருக்கின்றது தி இண்டிபெண்டன்ட்.

அழைப்பு பணியில் தீவிரமாக செயல்படும் அப்துர் ரஹீம் கிரீன், யூசுப் சேம்பர்ஸ், ஹம்சா அன்ட்ரியஸ் மற்றும் ஆடம் தீன் போன்றவர்களின் நாடான பிரிட்டன் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளை தன்னகத்தே கொண்ட நாடு. தி இண்டிபெண்டன்ட் கூறியிருக்கும் இந்த தகவல்களுக்கு பின்னால், இஸ்லாத்தை பற்றிய தவறான கண்ணோட்டங்களை களைய பாடுபடும் அந்த இயக்கங்களுக்கு நிச்சயம் பங்கிருக்கவேண்டும்.
குறிப்பாக ஒரு அமைப்பை பற்றி சொல்லியாக வேண்டும். IERA (Islamic Education and Research Academy) என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு மகத்தான இஸ்லாமிய அழைப்பு பணியை செய்து வருகின்றது. இவர்களுடைய செயல் திட்டம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. அவை,
·                     Mission Dawah - அழைப்பு பணியில் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ ஈடுபடும் முஸ்லிம்களை கொண்ட ஒரு மாபெரும் இயக்கத்தை உருவாக்குவது தான் இந்த பிரிவின் குறிக்கோள். 
·                     Muslim Now - புதிதாய் இஸ்லாமை தழுவியவர்களுக்கு இஸ்லாமிய கல்வி மற்றும் இதர உதவிகளை செய்யும் பிரிவு. 
·                     One Reason  - முஸ்லிமல்லாதவர்களுக்கான இஸ்லா ம் குறித்த தகவல்களை தயாரிக்கும் பிரிவு. 
·                     The Big Debates - முஸ்லிமல்லாத மக்களிடம் ஆரோக்கியமான முறையில் உரையாடுவதே இந்த பிரிவின் குறிக்கோள். இதுவரை பல விவாதங்களை சந்தித்துள்ளது இந்த பிரிவு. இதில் பிரபல நாத்திகர்களும் அடக்கம். 

மேலே காணும் பிரிவுகளை உற்று நோக்கினால் IERAவின் செயல் திட்டம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருப்பதை காணலாம்.
அழைப்பு பணியில் IERA போன்ற அமைப்புகள் எந்த அளவு தீவிரமாக செயல்படுகின்றனவோ அது போலவே பிரிட்டனின் இஸ்லாமிய இளைஞர் அமைப்புகளும் செயல்படுகின்றன. 

இஸ்லாமிற்கு எதிரான பிரச்சாரங்கள் சிலரால் வரலாறு முழுக்க தீவிரமாக கையாளப்பட்டிருந்தாலும்/கையாளப் பட்டாலும், அந்த பிரச்சாரங்கள் இது வரை வெற்றி பெற்றதில்லை. அதற்கு எதிர்மறையாக, தொடர்ந்து அதிக அளவில் மக்கள் இஸ்லாத்தை தழுவி தான் வருகின்றார்கள். இது வரலாறு நமக்கு சொல்லும் செய்தி. இறைவன் நாடினாலன்றி இனி மேலும் அந்த சிலர் வெற்றி பெற போவதில்லை.

இஸ்லாம் தொடர்ந்து முஸ்லிமல்லாத சகோதர/சகோதரிகளின் உள்ளங்களை ஈர்க்கும். சகோதரர் காலித் யாசின் ஒருமுறை குறிப்பிட்டது போல, நாம் தாவாஹ் என்னும் உள்ளங்களை துளைக்கும் குண்டை என்றும் நம்முடன் வைத்திருப்போம். அது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல ஒவ்வொரு முஸ்லிமின் கடமையும் கூட.

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர் --- குரான் 3:104 

இறைவன் நம் சமூகத்திற்கு தூய இஸ்லாத்தை எடுத்துரைக்கும் இயக்கங்களையும், அறிஞர்களையும் தொடர்ந்து தந்தருள்வானாக...ஆமீன்.

இஸ்லாமிய இளைஞர்கள் தொடர்ந்து முனைப்புடன் செயல்பட வல்ல இறைவன் உதவி புரிவானாக...ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

Please Note: 
மேலே கொடுக்கப்பட்டுள்ள மொழிபெயர்ப்பு முழுமையானது அல்ல. முழுமையாக படிக்க கீழே கொடுக்கப்படுள்ள சுட்டியை சுட்டவும்.

My sincere thanks to:
1. "The Independent" daily.

References:
1. The Islamification of Britain: record numbers embrace Muslim faith - Jerome Taylor and Sarah Morrison, The Independent, dated 4th January 2011. link
2. Islamic Education and Research Academy. link  
3. Federation of Student Islamic Societies. link


Sulthan